recent posts...

Sunday, August 31, 2008

FLASH NEWS: சர்வேசனின் மறுபக்கம்

இடப்பக்க உதட்டின் கீழிருக்கும் மச்சம் திருஷ்டிப்பொட்டு மாதிரி இருக்கோ?

சீக்கிரம் ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணனும்.



;)

அன்புமணி ராமதாஸ் - seems genuine

பலருக்கும் பலவிதமான அபிப்ராயங்கள் டாக்டர் அன்புமணி பற்றி இருந்தாலும், இந்த வீடியோ பாக்கும்போது ஒரு "genuinity" தெரியுது அவருகிட்ட.

ஸ்டாலினிம் இருக்கும் அதே ஃபீல் இருக்கு இவர்கிட்டையும்.

ஏதாவது, வித்யாசமா, நல்லதா நாட்டுக்குப் பண்ணனும்னு ஒரு ஆர்வம் இருப்பதா படுது.

உங்களுக்குப் படுதா? :)



You can watch other videos here

Thursday, August 28, 2008

$1,008 ~ மகேஷ்வரிக் கடவுளைக் காண ஆகும் செலவு

hinduப் பத்திரிகை படிக்கும்போது, கூகிள் விளம்பரங்கள் பல இடம்,வலம்,மேல், கீழ் என நாலாப் பக்கங்களிலும் மின்னும்.
ஊர்ல பேப்பர்ல கிடைக்கும் hindu தரமா இருக்கும். (செய்திகள சொல்லலை, பேப்பரின் தரம்).
ஆனா, ஆன்லைனில், இவர்களின் பத்திரிக்கை, கேவலமான, layoutம், குப்பை கிராஃபிக்ஸும் கொண்டு காட்சி தருகிறது.

ஆனாலும், நாளுக்கு ஒரு தரம், எட்டிப் பாத்து, பதிவு எழுத எதாவது மேட்டர் மாட்டுதான்னு பாக்கரது வழக்கம் ;)

இன்னிக்கு எட்டிப் பாக்கும்போது, ஒரு அரிய அரிய அரிய கூகிள் விளம்பரம் கண்ணில் பட்டது.

யாரோ, ஸ்ரீ காலேஷ்வராம்,
இங்க அமெரிக்காக்கு வராராம்.
யாரோ, (கடவுள்) டிவைன் மதர் மகேஷ்வரியாம்,
கடவுளை நேரில் காண, சில வித்தைகள் இவர் கற்றுணர்ந்தவராம்,
அத்த எல்லாருக்கும் சொல்லித் தர வராராம்,
இரு நாள் பயிற்சியாம்,
$1,008 ஆகுமாம். (அதில் $855 tax deductible)



காலேஷ்வர் சார், நீங்க கடவுள காட்டுங்க, இல்ல தசாவதாரம் போட்டுக் காட்டுங்க, எனக்கு ஒரு கவலையும் இல்லை.
இஷ்டம் இருக்கரவங்க, துட்டு இருக்கரவங்க, உங்களுக்கு 1008 குடுத்துட்டு, மோட்சம் பாக்கட்டும்.

ஆனா, இதுக்கு எதுக்கு இந்த பாழாப் போன அரசாங்கம், tax சலுகை எல்லாம் தருதுன்னுதான் புரியல்ல.

எங்க ஊர்லயாவது, டமிலைக் காக்க, சினிமாக்கும் டமில் பேர் வெக்கச் சொல்லி, tax deductions எல்லாம் செய்யரோம்.

$1,008 குடுத்து ரெண்டு நாள் கிளாஸுக்கு வரவங்களுக்கு இன்னாத்துக்கு tax deduction?

ஸ்ஸ்ஸ்ஸ். மகேஷ்வரிதான் காப்பாத்தணும்.

யாராச்சும், கிளாஸ் அட்டெண்ட் பண்ணி பாஸாயி, டிவைன் மதர் பாத்தவங்க இருக்கீங்களா?

இல்லியா? God பாக்கணுமா? மேலே உள்ள படத்தை க்ளிக்கி கிளாஸ் விவரங்களைக் கண்டறிந்து சேருங்க.


(காலேஷ்வர் சார், 1008 * 10% = $100.8 )

நன்றி!

Contract - கியான் ஸே ஜாதா காம் ~ திரைப் பார்வை

ராம் கோபால் வர்மான்னு ஒரு டைரக்டர் இருக்கார்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்.
ரங்கீலான்னு ஒரு படம் எடுத்து, ஏ.ஆர்.ரஹ்மான் கிட்டயிருந்து அமக்களமான பாட்டு எல்லாம் கறந்து கொடுத்தாரு.
படம் சுமார்னாலும், அதில் வரும் பாட்டும், அதன் பீட்டும், ரெக்கார்டிங்கும், இன்னிக்கு கேட்டாலும் கிர்ர்ர்னு இருக்கும்.

இவருக்கு யாரு காசு கொடுக்கராங்கன்னு தெரியல. வருஷத்துக்கு ஒரு 28 படமாவது எடுத்துடுவாரு போல இருக்கு. எப்ப வீடியோ கடைக்குப் போனாலும், ஏதாவது புது படம் இவரு பேர் போட்டு ஷெல்ஃப்ல இருக்கும்.

ரங்கீலாக்கப்பரம், Daud, Company, Satya, Bhootனு ஓரளவுக்கு நல்லாவே படம் எடுத்திருக்காரு.
இவரின் வெற்றியே, நம்மாளுங்க மாதிரி கும்பலோட கோயிந்தா போடாம, ஒரு தனி ஸ்டைல்ல, வித்யாசமான கதையை எடுத்துக் கொடுக்கரதுதான்.

சமீபத்தில் வந்த Sarkarம், Sarkar Rajம் இவரின் ரசிகனாக பலரை மாற்றியிருக்கும்.
நல்லா எடுக்கராரு.
பெரிய செலவு, ஆர்ப்பாட்டம் எல்லாம் பண்றது இல்லை, ஆனா, படம் நேர்த்தியா இருக்கு.

இந்த மாதிரிதான் நிறைய பேர் வேணும்.

இந்த வரிசையில் இந்த வருஷம், Contractனு ஒரு படம் வந்திருக்கு.

யார் நடிச்சிருக்காங்கன்னு கேட்டீங்கன்னா, எனக்கு பேரெல்லாம் தெரியாது.
99% எல்லாம் புது முகம்.

ஒரு தீவிரவாத கும்பலின் குண்டு வெடிப்பால், மிலிட்டரி ஹீரோ, தன் அழகான குழந்தையையும், மனைவியையும் பறிகொடுக்கராரு.
கும்பலை பழிவாங்க, RAWல் இணைந்து, அவர்களின் உதவி மூலம், தீவிரவாத கும்பலுக்குள் புகுந்து, கடைசியில் வில்லனை கண்டுபிடிச்சு போட்டுத்தள்ளும் கதை.

படம் போரடிக்காம விரு விருன்னு போகுது.

RAWவில் இருக்கும் ஒரு ஆஃபீஸருக்குத் தான் ஹீரோவின் இந்த 'ஊடுரவலை' பற்றித் தெரியும். கிட்டத்தட்ட, கமலின் குருதிப்புணல் டைப் காட்சிகள் (குருதிப்புனல், ஹிந்தியின் துரோகல் என்ற படத்தின் தமிழாக்கம்).

கடைசியில், அந்த RAW ஆபீஸர் வில்லன் கிட்ட மாட்டிக்கிட்டு அடி வாங்குவாரு. வில்லன், ஆபீஸர் கிட்ட, "யார் அந்த கறுப்பு ஆடு"ன்னு சித்திர வதை பண்ணி கேப்பான்.
ஆனா, நம்ம ஆபீஸரு, போட்டுக் கொடுக்காம, சிரிச்சுக்கிட்டே "கியான் ஸே ஜாதா காம்"னு சொல்லிக்கிட்டே இருப்பாரு.
நல்ல வேளை சப்-டைட்டிலு இருந்துச்சு. அதாவது, "Duty is much important than LIFE"னு சொல்றாராம்.
ஹீரோவ போட்டுக்கொடுக்காததால, வில்லன் ஆபீஸர போட்டுத் தள்ளிடுவான்.

கடைசியில, ஹீரோ, வில்லன போட்டுத்தள்ளிடுவாரு.

பாடல்களும் அமக்களமா இருந்தது. குறிப்பா, ஆகு ஆகு சே தில்பர்ரு ஜாவேன்னு, ஒரு பாட்டு, தாளம் போடும் வ்கை. இந்தியுலகில் பெரிய ஹிட்டாகியிருக்கும்னு தோணுது.

குருதிப்புனலா?, Contractஆ?ன்னு கேட்டா, நிச்சயம், மசாலா-தடவப்படாத குருதிப்புணல் தான்.

( ஒலகத்தரம்னா என்னான்னு காட்டின கமல், அதுக்கப்பரம், அந்த ஃபார்முலாவை எங்கையோ போட்டுத் தொலச்சிட்டாரு. தேடி எடுத்து அடுத்த படம் எடுத்தா நல்லாருக்கும். )

ஆனா, Contract பார்க்ககூடிய படம். டிவிடி கிடைத்தால் ஒரு முறை பார்க்கவும்.

ராம் கோபால் வர்மா சார், தமிழ்ல ஒரு படம், எங்காளுங்கள போட்டு 'நச்'னு எடுத்து, எங்க ஆளுங்க ட்ரெண்டை மாத்துங்க சார்.

:( ரொம்ப நொந்துபோயிருக்கோம் சார். :(

ப்ளீஸ், பாத்து செய்யுங்க சார்.

~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~

பி.கு: ஐம்பத்தைந்து வயதைத் தாண்டியவர்களே பதிவில், டிராஃபிக் ராமசாமியை அறியத் தந்த வடுவூர் குமார், சிறந்த பின்னூட்டக்காரராகிறார்.

பி.கு2: யாருமே கண்டுக்கொள்ளாத Architecture படங்கள் பதிவில் தைரியமாய் வந்து பின்னூட்டிய பரிசல்காரனின் ஒரே மன தைரியத்தை பாராட்டி, அவர் சிறந்த பின்னூட்டக்காரர் அவார்டைப் பெறுகிறார்.

Wednesday, August 27, 2008

Architecture / கட்டமைப்புப் படங்கள் சில

சில கட்டமைப்புப் படங்கள், உங்கள் பார்வைக்கு.

ஒரு கட்டமைப்பை எப்படி ஃபிலிமுக்குள்ள கொண்டு வரணும்னு ஜீவ்ஸ் அழகா சொல்லிக்க் கொடுத்திருக்காரு. படிக்காதவங்க படிச்சு தெரிஞ்சுக்கங்க.

Click pic to goto my Flickr Page.
All 3 pics taken on Canon S410.

Livermore Temple, California


Ceasars Palace, Las Vegas


Bellagio, Las Vegas


பி.கு: ஐம்பத்தைந்து வயதை தாண்டியவரா நீங்கள்? உங்களுக்காக இந்தப் பதிவு. படிக்காதவங்க படிச்சிடுங்க ;)

Tuesday, August 26, 2008

ஐம்பத்தைந்து வயதைத் தாண்டியவர்களே...

வணக்கம் மாம்ஸ், மாமீஸ்.

சௌக்யமா?

அம்பத்தஞ்சு வயசாயிடுச்சே, வேலைக்குப் போறீங்களா இன்னும்?
ரிட்டையர்டா?
கடமைகள் எல்லாம் முடிஞ்சிருச்சா?
ஷுகர், பி.பி எல்லாம் கட்டுக்குள்ள இருக்கா?

வருங்காலத்துக்கு வேண்டியதெல்லாம் சேத்து வச்சாச்சா?

சொத்து பத்தெல்லாம் பட்டியல் போட்டு பிரிச்சு வச்சிட்டீங்களா?

பொழுது போக்க என்ன பண்றீங்க?

டி.வியா? பக்கத்துவீட்டு மாம்ஸ்/மாமீஸோட்ட வெட்டிப் பேச்சா?
கோயில் கொளமா?

எங்கத் தெருவுல நெறைய பெரியவங்க, உங்க வயசை ஒத்தவங்க இருக்காங்க.
டோட்டல் வெத்துப் பேச்சு வீரர்கள்.
தொடர்ச்சியா அஞ்சு மணி நேரம் கவருமெண்ட்ட கொர சொல்லியே செலவழிப்பாங்க.

அவங்க வீட்டுக் குப்பையெல்லாம் பெருக்கி எடுத்து, காம்ப்பவுண்டு சொவத்துக்கு வெளியில போடுவாங்க.

குப்பை அள்றவன் வறானா, தெரு வெளக்கு எரியுதா, முனிசிப்பாலிட்டி காரன் வேலை செய்யறானா, இப்படி எந்தக் கவலையும் கிடையாது இவங்களுக்கு.

தெரியாமத்தான் கேக்கறேன், அம்பத்தஞ்சு வயசாச்சு, இன்னும் இருக்கர காலத்துல, கொஞ்ச நாளாவது, ஊருக்காக வாழலாமே?
பசங்கள படிக்க வச்சீங்க, வளத்து விட்டீங்க, உங்க ஃப்யூச்சருக்கும் எல்லாம் சேத்து வச்சிட்டீங்க.

இன்னும் எவ்வளவு நாளா, 'சுயத்துக்கே' வாழப் போறீங்க?

கொஞ்சம் மெனக்கெடுங்க.
கூட்டை விட்டு வெளீல வாங்க.
வெயில்ல அலைங்க.

'பொது'வுக்காக முயற்சி எடுத்து எதையாச்சும் செய்ய முடியுதான்னு பாருங்க.

அட்லீஸ்ட், கவருமெண்ட் அலுவலங்கங்களுக்கு பொடி நடையா போய், கேள்வி கேளுங்க.

ஏன் ரோடு போடலை? ஏன் தண்ணி வரலை? ஏன் தெரு வெளக்கு எரியலை? ஏன் ஆட்டோக்காரன் மீட்டர் போட மாட்றான்? ஏன் இவன் லஞ்சம் கேக்கறான்? ஏன் இவனுக்கு எழுதப் படிக்கத் தெரியல? ஏன் இவனுக்கு சோறு தண்ணி இல்ல?

இப்படி எவ்வளவோ கேள்விகள் கேக்கலாம் நம்ம ஊர்ல.
கேள்விகள் கேளுங்க. முடிஞ்சத செய்யுங்க.

வெத்தா மிச்ச வாழ்க்கைய வாழ்ந்துட்டு போவாதீங்க.

பி.கு: எங்க தெரு, டோட்டல் டேமேஜா இருக்கு. ரோடு இல்லை. நோண்டிப் போட்டு மூணு வருஷம் ஆச்சு.
எல்லாத்துக்கும் சிகரம் வச்ச மாதிரி, இந்த ஆகஸ்ட்-15க்கு, தெருவில் இருக்கும் கொடி மரத்தில், பெருசுங்க எல்லாம் சேந்து கொடி கூட ஏத்தலியாம். கேட்டா, internal-politics. இந்த மாம்ஸ்/மாமீஸ்க்கும், அந்த மாம்ஸ்/மாமீஸ்க்கும் ஒத்து வரலையாம்.
வருஷத்துல, எல்லாரும் கூடி செய்யர, ஒரே சமூகப் பணி, இந்த கொடி ஏத்தரது. அதையும் செய்யலண்ணா, என்ன வாழ்ந்து என்ன புண்ணியம்?

வெளங்கிடும்! :(



அமெரிக்கப் பெருசுகள் சிலர் செய்யும் நல்ல விஷயங்களை இங்கே க்ளிக்கி தெரிந்துகொள்ளுங்கள். மனதிருந்தால் மார்கமுண்டு!

~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~

பி.கு: என் முந்தைய ..பூ-தாங்கி.. பதிவில் ராமலக்ஷ்மி'யின் பின்னூட்டம் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படுகிறது.
( இது என்னன்னு புரியாதவங்க Mixture பதிவை படிங்க :) )

Sunday, August 24, 2008

ஒவ்வொரு பூவுக்குப் பின்னாலும்...

வித விதமா கலர் கலரா பல பூக்களை எடுத்தாச்சு.

இந்தப் பூக்களை தாங்கி நிக்கர, பூ-தாங்கிகளை எடுக்கவேணாமா?

இந்த லென்ஸ் திருப்பிப் போட்டு மேக்ரோ க்ளோஸ்-அப் எடுக்கரதுக்கு பொறுமையின் சிகரமா இருக்கணும் போலருக்கு.
லேசா காத்தடிச்சாலும், செம டார்ச்சர்.

நாதஸ் எப்படி, இப்படி க்ளோஸ்-அப்பராருன்னு, தொழில் ரகசியம் சொல்லமாட்றாரு ;)

இனி, பூ-தாங்கிகளைப் பாப்பமா?





~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~

பி.கு: என் முந்தைய ..இன்னா அழகு, இன்னா பேச்சு.. பதிவில் திவா'வின் பின்னூட்டம் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படுகிறது. ;) ( இது என்னன்னு புரியாதவங்க Mixture பதிவை படிங்க :) )

Tuesday, August 19, 2008

Kaitlyn Maher - இன்னா அழகு, இன்னா பேச்சு, இன்னா கொரலு, கலக்கராபா!

"America got talent"னு ஒரு ப்ரோக்ராம இங்க போடராங்க. இந்த வருஷம், இந்த போட்டியில் பங்கு பெறும் Kaitlyn செம கலக்கல்.

பாட ஆரம்பிக்கரதுக்கு முன்னாடி,
"Are you from Newyork?"னு கேட்டதுக்கு

"I am from America"ன்னு அந்தப் பொண்ணு சொல்லுது கேளுங்க.

தொடர்ந்து வரும் பாடலும், ஜூப்பர்.



~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~

பி.கு: என் முந்தைய ரூம் போட்டு யோசிக்கராங்க பதிவில் திவா'வின் பின்னூட்டம் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படுகிறது. ;) ( இது என்னன்னு புரியாதவங்க Mixture பதிவை படிங்க :) )

ரூம் போட்டு யோசிக்கராங்கப்பா...

Mariam Abdullahவிடம் இருந்து வந்த சுவாரஸ்யமான கடுதாசி. யாரு பெத்த புள்ளையோ? பாவம். ஒதவிடலாமா? எனக்கும் நெறைய $$$ தேறுமாமே? :))

~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~
With Due respect I humbly write to solicit for your partnership and assistance in the transfer and investment of my inheritance fund USD$17.5M from my late father who died mysteriously last Dec.

It was very evident that he was poisoned to death. In my culture, when a man dies, if he does not have a male child, the brothers shares his property leaving both the wife and the daughters empty handed including the house they live in. This is the exact case with me as I am the only daughter of my father. I lost my mother when I was barely a year old and my father refused to re-marry another wife because he felt solely responsible for my mother's death.

This is so because he concentrated much on his businesses that he rarely pays attention to domestic affairs. He was always travelling taking care of his businesses that he did not notice when my mother took ill. He thought it was a minor illness and was ignorant of this. My mother on her own resorted to self-medication.It was not until the illness degenerated that my father took my mother to hospital where she was diagnosed to find out that hypatitis had eaten deep into her blood stream. She didn't last long before she died.This happened when I was barely a year old. Based on this, my father could not forgive himself easily because of it and said he was responsible for her death as he could have saved her if only he had paid attention to the things at home rather than concentrating much on his businesses.

Despite all entreaties by friends and relatives, he refused to remarry but ensured that I had everything that I wanted. It was as a result of this that he made me the next of kin to his fund deposit with the bank and stated that in the event of any eventuality, I should have a direct access to the fund only when I am 24 years of age otherwise, I should have a guardian/partner intercede on my behalf for the release of the funds to me. Unfortunately, he died late last year and I am 21 years of age currently. This is why I have contacted you to serve as a guardian to me and as my foreign partner for the transfer and investment of the fund overseas My uncles does not know about the fund because they had already taken my father's houses and other properties because I am a girl and they said I do not have rights for any property. They have requested to have my father's bank papers but I simply told them that I do not know where he kept them. The younger brother took the house in the village while the houses in the town were sold out they shared the proceed they got from the sale. Right now, I am with a friend of mine and do sincerely want to travel out of my country. This can only happen when I have secured the release and transfer of the funds in the bank.

This why it is important that we have a plan on the type of lucrative business that we can invest the funds on. I had at various times had discussions with the director of international remittance unit of the bank where my father deposited the funds and I was assured that once, I have someone who would be willing to receive the funds on my behalf, they shall commence all proceedings to effect the release and transfer of the funds into the person's designated account.Now, that you have signified your interest to partner with me, it would only be very necessary if you contact the bank and request for the release and transfer of my inheritance fund into your nominated account for the purpose of investment and to further have me come over to your
country to continue with my studies.

I shall be giving you the bank's contact details as soon as I hear back from you so that you will go ahead and contact the bank.

Your urgent response will be appreciated,Talk to you the more.
Sincerely,
Mariam Abdullah
~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~

பி.கு: என் முந்தைய Phelps பதிவில் ராமலக்ஷ்மி'யின் பின்னூட்டம் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படுகிறது. ;) ( இது என்னன்னு புரியாதவங்க Mixture பதிவை படிங்க :) )

Sunday, August 17, 2008

Phelps - ஒரு புகைப்படக்காரரின் புலம்பல்

Michael Phelps (aka பறக்கும் மீன்) யாருன்னு இந்நேரத்துக்கு பட்டி தொட்டியெல்லாம் தெரிஞ்சிருக்கும். தெரியாதவங்க, இங்க சொடுக்கி தெரிஞ்சுக்கங்க.

சுருக்கமா சொல்லணும்னா,
2008 பீஜிங் ஒலிம்ப்பிக்ஸில், 8 தங்கம் வென்றவர்;
7 உலகச் சாதனைக்குச் சொந்தக்காரர்;
16 ஒலிம்ப்பிக் பதக்கங்கள் வென்றவர்;
இப்படி அடுக்கிக்கிட்டே போலாம்.

குறிப்பா, பீஜிங்க் ஒலிம்ப்பிக்கில் இவர் காட்டிய அசாத்திய திறமை அபாரம். ஒரு போட்டிய முடிக்கறாரு, தங்கம் வாங்கராரு, அடுத்த கணத்தில் அடுத்த போட்டிக்கு தயாராகறாரு, அங்கயும் தங்கம் வாங்கறாரு.
(மீனாப் பொறக்கவேண்டியவன், மனுஷனா பொறந்துட்டான் :) )

இதுவரை 7 தங்கம் வென்ற Mark Spitzன் சாதனையை முறியடித்த போது, Michael Phelpsன் சந்தோஷத்தை புகைப்படமெடுத்த புகைப்படக்காரர், அதே Phelps 8ஆவது தங்கம் வாங்கியவுடன் தனது கேமராவுக்கு நிறைய தீனி கிடைக்கும் என்று காத்திருந்தாராம்.

ஆனா, 4X100 ரிலே நீச்சலில் 8ஆவது தங்கம் வாங்கியதும், Phelpsம், அவரது கூட்டாளிகளும், எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் செய்யாமல், புஸ்ஸ்ஸ்ஸ் என்று ஆக்கிவிட்டார்களாம்.

பாவம் கேமராக்காரரு, நிகழ்ச்சி தொடங்கரதுக்கு பல மணிநேரம் முன்னமே சென்று, இடம் புடிச்சு, ஆங்கிள் எல்லாம் யோசிச்சு, ரெடியா இருந்தா, இந்த Phelps இப்படி ஏமாத்திட்டாரே?

சாதாரண சாதனையா இது? சைலண்டா போவதர்க்கு? Phelpsன் கூட்டணியில் இருந்த மற்ற மூவர் மேல் குற்றம் உள்ளது. Phelps ஆர்ப்பாட்டம் பண்ணலன்னாலும், மத்த மூணு பேரு எதையாச்சும் பண்ணி ஒரு டிராமா உருவாக்கியிருக்கணும்.

வரலாற்று நிகழ்வு, புஸ்ஸென்று போகவிட்ட அந்த மூவருக்கு என் கண்டனங்கள்! (தமிழ் கத்துக்கிட்டு இந்தப் பதிவ படிச்சு, என் கண்டனத்தை தெரிஞ்சுக்கிட்டு, வருத்தப்படுங்க, மூவர்ஸ்!)

7ஆவது தங்கம் வென்றதும் எடுத்த படம். படத்தை கிளிக்கினால், அந்தப் புகைப்படக்காரரின் பக்கத்தில் முழுக் கதையைப் படிக்கலாம்.


8ஆவது தங்கம் வென்றதும் எடுத்த படம். ( புஸ்ஸ்ஸ்ஸ் )


Michael Phelps, you rock!
But, your team mates failed to jubiliently project the historical achievement in front of the world! Shame on them!

பி.கு: என் முந்தைய Mixture பதிவில் பரிசல்காரனின் பின்னூட்டம் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படுகிறது. ;) ( இது என்னன்னு புரியாதவங்க Mixture பதிவை படிங்க :) )

Thursday, August 14, 2008

Mixture - பெட்டிஷன், இனி பின்னூட்டங்கள் கவனிக்கப்படட்டும், Phelps, ரஜினி வாழ்க, பதிவர் போட்டி

 

1) வணக்கம்! முன்னமே சொன்னதுதான், நல்ல விஷயம் என்று பட்டதால், மறுக்கா சொல்றேன் (ரிப்பீட்டறேன்).
அதாகப்பட்டது, உயர்ந்து கொண்டே இருக்கும் சென்னனயைப் பற்றி ஆதங்கப்பட்டு எழுதிய பதிவு, அதைத் தொடர்ந்து அனுப்பிய பெட்டிஷன், அதுக்கப்பரம் உங்களுக்கு விடுத்த வேண்டுகோள் எல்லாத்துக்கும் பதில் கிடைத்துள்ளது . முழு விவரத்தையும் படிக்காதவர்கள் படித்துத் தெரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கரேன். படிப்பதோடு மட்டுமல்லாமல் சென்னையில் உங்கள் இருப்பிடத்தைச் சுற்றி புதுச் சாலை போடும்போது, இந்த சுரண்டலை கடைபிடிக்காவிட்டால், இந்தப் பதிவில் உள்ள Superintending Engineerன் முகவரிக்கு உடனே தெரியப் படுத்த வேண்டியது உங்கள் கடமையும், என் வேண்டுகோளும்! நன்னி!

2) பதிவுகள் எழுதறோம் சரி. அந்தப் பதிவை படிச்சு பின்னூட்டம் இடுபவர்களைப் பலர் கண்டுக்கரதில்லை. பின்னூட்டங்களைக் கவனிக்கணும். ப்ளாகுகளின் பெரிய சக்தியே அதுதானே? அடுத்தவரின் கருத்தை அறிதலும், அவர்களோடு கருத்து மோதல்களில் ஈடுபடவும் ப்ளாகரின் அழகான வசதியை சில பேர் நல்லாவே பயன்படுத்தராங்க. ஆனா, எல்லாரும் அப்படிச் செய்வதில்லை.
ரூம் போட்டு யோசிச்சு, இதுக்கு ஒரு தீர்வு காண என்னா பண்ணனும்னு ஆஃபீஸ் நேரத்துல யோசிச்சேன்.
என்ன பண்ணலாம்னா, ஒரு பதிவு எழுதி அடுத்த பதிவு எழுதப் போகும் முன், முந்தைய பதிவில் உள்ள 'சிறந்த பின்னூட்டத்தை' மக்களுக்கு தெரியப்படுத்தி உங்கள் முந்தைய பதிவை நிறைவு செய்யவேண்டும்.
படிக்கரவங்களுக்கும் யோசிச்சு பின்னூட்டம் போட இது ஒரு முன்னோடியா இருக்கும்.
தொடர்ந்து சிறந்த பின்னூட்டக்காரரா வரும் அன்பருக்கு, வருஷக் கடைசியில் பரிசு தருவதெல்லாம் உங்க விருப்பம். மட்டமான பின்னூட்டத்தை எடுத்துச் சொல்றதும் உங்க விருப்பம் ;)
2அ) என் IPKF, LTTE பதிவில், சுந்தரவடிவேல் சிறந்த பின்னூட்டக்காரராகிறார்.
2ஆ) புதிய சூப்பர் ஸ்டார் பதிவில், அதிஷா சிறந்த பின்னூட்டக்காரராகிறார்.

 


3) Michael Phelps, Biejingல் பட்டையைக் கிளப்புவது உங்களனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனா, அவரு வரிசையா தங்கம் வாங்குவதர்க்கு முக்கிய காரணம், அவர் அணிந்திருக்கும் NASAவின் Speedo உடை என்று சில தரப்பு கலவரப்படுகிறது.
உடை கண்டிப்பா வேகமாக நீந்த உதவும் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஆனால், அவர் தங்கப் பதக்கம் வாங்குவதற்கு அது உதவுகிறது என்று சொல்லமுடியாது.
ஏன்னா, எல்லாரும்தான் அதே ட்ரெஸ் போட்டிருக்கானுவ.
இவரு, வரிசையா world record ஒவ்வொரு போட்டியிலும் உடைப்பதற்கு உடை காரணமாயிருக்கலாம்.
எது எப்படியிருந்தாலும், he has an amazing talent!
Morgan Freeman குரலில் VISAவின் Phelps விளம்பரம் அருமை.

4) ஆயிரமிருந்தாலும், படம் ஊத்திக்கிச்சுன்னு தெரிஞ்சதும், பத்து கோடிய திருப்பிக் குடுத்தாராமே, விநியோகஸ்தர்களுக்கு? ரஜினி வாழ்க! ;)

5) அடுத்த பதிவர் போட்டி? ஒரு ஜூப்பர் ஐடியா இருக்கு. PiT போட்டி, சிறில் போட்டி, ஒலிம்பிக் போட்டி எல்லாம் முடியட்டும், அப்பாலிக்கா சொல்றேன். அடிச்சு ஆடுவோம்! வெறும் படம், பாட்டு, கதைன்னெல்லாம் இல்லாம, இம்முறை ஒரு படையலே வைக்க போட்டி நடத்தலாம் என்று ஐடியா! எல்லாம் அவன் செயல்!

 


ஹாப்பி சுதந்திரதின வாழ்த்துக்கள்!

சுதந்திரத்தின் அருமை சுதந்திரம் இல்லாதவர்களுக்குத் தான் தெரியும்! ஸோ, அனுபவிங்க!

லாலுவின் இந்தக் காமெடியை ரசித்துவிட்டு சுதந்திரதினத்தைக் கொண்டாடுங்கள்! :)

இதயும் பாருங்க, கீதா சாம்பசிவத்தின் எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்.

எங்கள் புகாருக்கு அரசிடம் இருந்து(?) வந்த பதில்

இங்கே சென்று படித்து உங்கள் கருத்துக்களைப் பகிரவும்.

இது வெற்றியா? தோல்வியா? இல்லை டைம்-பாஸா?

:)

============
CHENNAI: Here is good news for pedestrians. The Chennai Corporation is all set to scrape road surfaces on select routes before re-laying them. This is to ensure the height of the road remains the same and does not cause flooding along the sides. The process is known as milling.

"In the initial phase, a cold milling machine will be used to remove the asphalt layer on 38 roads for a distance of 16 km. The local body has issued a short tender notice to execute the work soon," an official told The Times of India.

The city has 305 km of bus route roads. According to official sources, the cold milling machine will remove the surface layer to a depth of 40 mm to avoid any damage to the foundation.

The original plan was that select locations in each of the ten zones would be milled and re-laid.

"We are happy with the results of the pilot process. The same technology can be adopted on the remaining bus route roads as well. Usually, blacktopping increases the height of roads, leaving the buildings on both sides prone to water logging during rains. The milling process is the best solution,” the official said.

In the current fiscal, BRR department has planned to take up 60 arterial roads for re-laying and tenders were floated in April and May. However, after finding cold milling successful, the local body has planned to include atleast 50 of them in the list of roads to be milled before re-laying.

The short tender notice for milling of 38 roads included Thiruvottiyur High Road from Tollgate to Ponnusamy Street, Prakasam Salai, Anna Nagar First Avenue (from New Avadi Road to Anna Nagar Sixth Avenue), Anna Nagar Sixth Avenue (from Anna Nagar Third Avenue to Second Main Road), Millers Road (from Dr Alagappa Road to Purasawakkam High Road), Dr Alagappa Road (from Raja Annamalai Road to Millers Road). Patullos Road, Woods Road, East Ramanathan Road, West Cott Road, Mayor Sunder Rao Road, Ashok Nagar Tenth Avenue, West Sivan Koil Street, Eldams Road, Pasumpon Muthu Ramalingam Salai, Ponniamman Koil Street and Ellaiamman Koil Street, part of Five Furlong Road, Race Course Road and Velachery Main Road.

Dr Muthulakshmi Salai, Kalki Krishnamurthy Salai, Gandhi Salai (from Velachery Main Road to Ambika Salai), part of Mandaveli Street, Karaneeswarar Pagoda Street, Sardar Patel Road, Durgabai Deshmukh Road, Greenways Road and Brick Kiln Road.
=============

Tuesday, August 12, 2008

Abhinav Bindras BLOG

தங்கம் வென்ற அபினவ் பிந்த்ராவின் ப்ளாகர் பக்கம்.

இப்போதான், சில நாட்களுக்கு முன்னாடி ஆரம்பிச்சிருக்காரு.

பதக்கம் பெற்ற பின் எழுதிய பதிவு, தன்னடக்கத்தின் ப்ரதிபலிப்பா இருக்கு.

குறிப்பா, அடுத்த தலைமுறையை இந்த வழியில் கொண்டு செல்லவேண்டும், அதற்கு தன்னால் இயன்றதை செய்யவேண்டும் என்ற எண்ணம் பாராட்டப்பட வேண்டியது.

வாழ்த்துக்களை தெரிவிக்கத் தவறவேண்டாம், அவர் தளத்தில்.

Monday, August 11, 2008

IPKF, LTTE, சிங்களர்கள், ராஜீவ் - எது உண்மை?

எங்க ஊர்ல, $20க்கு கரிகாய் வாங்கினா, ஒரு டி.வி.டி இனாம். ஒவ்வொரு தடவையும் எந்த டிவிடி எடுப்பதுன்னு மண்ட காயும். தமிழ்ல வந்த எல்லா படமும் பாத்தாச்சு, சுப்ரமணியபுரம் வரை. புதிதாய் வந்துள்ள Mission 90 days என்ற மலையாளப் படம் கண்ணில் பட்டது. மம்முட்டி இந்த வயதிலும் ஜம்முன்னு ஒரு கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு அட்டையில் இருந்தாரு.

டிவிடி பின்னாடி திருப்பிப் பாத்தா, ராஜீவ் கொலை வழக்கை துப்பறிவது பற்றிய கதைன்னு போட்டிருந்தது.

ஏற்கனவே, தமிழ்ல குப்பின்னு ஒரு படம் பாத்திருக்கேன். நல்லா எடுத்திருந்தாங்க.

ஆனா, ஒரு மெஸேஜும் தெளிவா சொல்லாம, கொலையாளிகளைப் பிடிப்பது மட்டுமே மையக் கருத்தா இருந்தது அந்த படத்துல. எதுக்காக சாகடிச்சாங்க, தப்பா ரைட்டா என்ற அலசல் எல்ல்லாம் இல்லை (இருந்ததா? நான் மறந்துட்டேனா?) அந்த படத்தில்.

சரி, பக்கத்து ஊரு காரனுங்க எப்படி எடுத்திருந்தாங்கன்னு பாக்கலாமேன்னு முடிவு பண்ணி படத்தை வாங்கிப் பாத்தேன்.

படம், ஓஹோன்னு ஒண்ணும் இல்லை. ஒரு தடவை பாக்கலாம், அம்புடுதேன். மேஜர் ரவின்னு ஒருத்தர் தான் இயக்குனர், அதனால, அமெச்சூரா நெறைய விஷயம் கண்ணில் பட்டது.

ஆனா, படத்தில் பெரிய மெஸேஜ் இருந்தது. அதுதான் இந்தப் பதிவை எழுதத் தூண்டியது.

ராஜீவைக் கொல்ல LTTEக்கு என்ன காரணம் இருந்தது?

எனக்குத் தெரிந்து, ராஜீவ் அனுப்பிய IPKF அங்கு சென்று பல mis-adventures செய்ததாலும், அதற்கு பழி தீர்க்கும் படலமாக, ராஜீவைக் கொன்றதாகவும் ஊடகங்களில் பார்த்ததாக ஞாபகம்.

ஆனால் இந்த படத்தில் சொல்லப்படும் மெஸேஜ்:

1) ராஜீவ் இந்தியாவின் ஒரு உன்னதத் தலைவராக வர இருந்தவர். அவர் இழப்பு, நமது நாட்டின் எதிர்காலத்திற்கு மிகக் பெரிய இழப்பு.

2) ராஜீவ் IPKFஐ அனுப்பியது, இலங்கைத் தமிழர்களின் நலனை மனதில் கொண்டு மட்டுமே.

3) IPKFஐ அங்கு அனுப்பாதிருந்திருந்தால், பாக்கிஸ்தான் தனது ராணுவத்தை அனுப்பி, அமெரிக்காவும் அங்கு ஒரு தளத்தை உருவாக்கி இருக்கும். இது இந்தியாவுக்கு நல்லதல்ல.

4) IPKF சில mis-adventures செய்தது உண்மையாக இருந்தாலும், சிங்கள ராணுவமும் அரசியல்வியாதிகளும் அதை ஊதிப் பெரிதாக்கி, LTTEக்கும், IPKFக்கும் இடையே மோதல் ஏற்பட வழி செய்தார்கள்.

5) சிவராசன் + கூட்டாளிள் வசித்திருந்த இடத்தை நமது ராணுவ கமேண்டோக்கள், ராவோடு ராவாக சுற்றி வளைத்ததாகவும், ஏதோ ஒரு உயர் அதிகாரி, தனது தனிப்பட்ட (புகழ்) லாபத்துக்காக, தான் நேரில் வரும் வரை யாரும் ஒன்றும் செய்யக் கூடாது என்று கூறி, கமேண்டோக்களை 12 மணி நேரம் தேவுடு காக்க வைத்தாராம். அந்த இடைப்பட்ட நேரத்தில் தான் சிவராசன் + கூட்டாளிகள் தற்கொலை செய்து கொண்டனராம். அந்த அதிகாரி, உரிய நேரத்தில், 'கோ' சொல்லியிருந்தால், சிவராசனை உயிருடன் பிடித்திருக்க முடியுமாம்.

படத்துல மம்மூட்டி வேகமா ஒரு டயலாக் நல்லா பேசுவாரு.
ஆனா, ராஜீவ் கொலை செய்யப்படும் முன், ஸ்ரீபெரும்புதூரில், ஒரு சிறுமி அவரைப் புகழ்ந்து பாடுவது போன்ற படக் காட்சி கொஞ்சம் ஓவர். கீழே வீடியோல அந்த பாட்டுத்தான்.


கருத்ஸ்?

Sunday, August 10, 2008

நமது புதிய சூப்பர் ஸ்டார்! தங்கம் வென்ற சிங்கம்!



யாரு இவரா?

தெரியலையா?

இவருதான் நமது புதிய சூப்பர் ஸ்டார்.

பீஜிங்கில் துப்பாக்கி சுடலில், தங்கம் வென்ற சிங்கம்!

Abhinav Bindra!

கலக்கிட்ட அபினவ்!

வாழ்க நீ!

Vow! What a scene! Watch the ceremony and listen to our anthem ;)




மெத்த மகிழ்ச்சியைத் தந்த செய்தி! (thanks: athisha)

NDTV - more info
Singh, Patil congratulates Abhinav



Abhinav Bindra வூட்டு அட்ரெஸ் என்னாங்க? தமிழ் பதிவர்கள் சார்பா ஒரு வாழ்த்துக் கடுதாசி அனுப்பலாம்.

:) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :)

ரஜினிக்கு குட்டும் பூச்செண்டும் - ‍‍‍ஞாநியின் நெத்தியிடி!



"அன்புள்ள சிவாஜிராவ் கெய்க்வாட் என்கிற ரஜினிகாந்த் அவர்களுக்கு, வணக்கம்" என்று தொடங்கி, இவ்வார குமுதத்தில், ஞாநி, சூப்பர் ஸ்டாருக்கு ஒரு மடல் எழுதியுள்ளார்.
நம்மில் பலர் ரஜினியிடம் சொல்ல விரும்பும் கருத்துக்களை, பணால் என்று போட்டு உடைத்துள்ளார்.

ஸேம்பிளுக்கு சில:

  • முதன்முதலில் நீங்கள் ஒரு பொதுப் பிரச்சினையில் தெளிவாகப் பேசியது என்பது ஒகேனக்கல் குடிநீர்த் திட்டப் பிரச்சினையில்தான்

  • ஒகேனக்கல் பிரச்னைப் பேச்சும், குசேலன் பட வர்த்தகத்துக்காக தெரிவித்த வருத்தமும் உங்கள் சூப்பர் ஸ்டார் பிம்பங்களை உடைத்து நொறுக்கிவிட்டன

  • அரசியல் உங்களுக்குரியது அல்ல.அரசியலில் செயல்பட, தெளிவான கருத்து, கொள்கை, உறுதி, தன் கருத்தை பிறரை ஏற்கச் செய்வதற்கான திறமை எல்லாம் வேண்டும்

  • சூப்பர் ஸ்டார் இமேஜ் ஒகேனக்கல் வெள்ளத்தில் அடித்துப் போய்விட்டது

  • அமிதாப்பச்சன் என்ற ரோல் மாடல் உங்களுக்கு இருக்கிறார். பொது இடங்களில் வழுக்கைத் தலையுடன் வலம் வரத் தயங்காத நீங்கள், வெள்ளித் திரையில் மட்டும் தயங்குவதில் அர்த்தம் இல்லை.

  • இதெல்லாம் நீங்களே ஏற்படுத்திக் கொண்ட சிக்கல்தான்

    etc.. etc...

    எதுக்கு குட்டு எதுக்கு பூச்செண்டா? குமுதத்தில் பாத்து தெரிஞ்சுக்கங்க!

    முழுசும் படிக்க இந்த வாரக் குமுதம் படியுங்கள், இங்கே க்ளிக்கி!

    படிப்பாரா Super ஸ்டார்?

    well written Gnani!
  • Thursday, August 07, 2008

    Butterfly Effect ~ திரைப் பார்வை

    Butterfly Effect என்று ஒரு ஆங்கிலப் படம். 2004ல் Ashton Kutcherம் (அதாங்க 42 வயது demi mooreஐ திருமணம் புரிந்த 27 வயது Ashton தான்) சகாக்களும் நடித்த படம்.
    ரொம்ப நாளா எங்க ஊரு லைப்ரரில கண்ணுல பட்ட படம் தான். இவ்வளவு நாளா பாக்கணும்னு தோணல. சென்ற வாரம் மீண்டும் கண்ணில் பட்ட போது, டகால்னு அள்ளிட்டேன்.

    Butterfly effectனா தான் உங்களுக்கு தெரியுமே (நன்றி: கமல்). அதாகப் பட்டது, உலகில் நடக்கும் ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயமும், பிற்காலத்தில் எங்காவது எப்படியாவது ஒரு மாறுதலுக்கு காரணமாய் இருக்கும்.
    ஒரு பட்டாம் பூச்சி சிறகடிப்பதால் வரும் காற்றின் இடமாற்றம், பிற்காலத்தில் ஒரு பெரிய சூராவளியின் வீச்சையே மாற்ற வாய்ப்புண்டாம்.

    தசாவதாரத்தில், விஷ்ணு சிலையாகிய பெரிய பாராங்கல், கடலுக்குள் விழுந்ததால், கடலடியில் உள்ள பூமித் தட்டு (டெக்டானிக்ஸ் ப்ளேட்டு) அதிர்வுக்குள்ளானது. அந்த அதிர்வு வளர்ந்து வளர்ந்து 2006ன் சுனாமிக்கு வழி வகுத்தது. (நம்பி பாத்திரத்துக்கும் படத்துக்கு கனெக்ஷன் என்னன்னு புரியாதவங்க திரும்ப படிச்சுக்கோங்க ;) )

    நீங்களே யோசிச்சுப் பாத்தா, நம்ம வாழ்க்கையில் கூட, நாம செய்யும் ஒவ்வொரு செய்கையும், நம்மைச் சுற்றியிருப்பவர்களின் வாழ்க்கையிலும், நமது வாழ்க்கையிலும் எதிர்காலத்தில் மாற்றங்கள் கொண்டுவரும்.
    இன்னிக்கு வீட்ல சாப்பிடலாமா வெளீல சாப்பீடலாமா?
    வெளீல போய் சாப்பிட்டா, விபத்து ஏற்பட்டு எடக்கு முடக்கா, வாழ்க்கை திசை மாறலாம்!
    வீட்ல சாப்பிட்டா அந்த நேரம் பாத்து, பூமி அதிர்வு வந்து வீட்டுக்குள்ளையே சமாதியும் ஆகலாம்!
    வெளீல போய் சாப்பிட்டா, ஹோட்டல் வெளீல இருக்கர பொட்டிக் கடையில லாட்டரி சீட்டு வாங்கி, நீங்க திடீர் கோடீஸ்வரனும் ஆகலாம்!
    ஸோ, ஒவ்வொரு செய்கையும் உங்கள் எதிர்காலத்தை மாற்றி அமைக்கும் திறன் பெற்றது.
    இத, ஒத்துப்பீங்கன்னு நெனைக்கறேன்.

    இப்ப படத்துக்கு வருவோம்.
    Butterfly Effect - இது வந்த புதுசுல, Sixth Sense படத்தை விட புத்திசாலித்தனமான திரைக்கதை அமைப்புன்னு பில்ட் அப்பெல்லாம் இருந்தது.

    கதை என்னன்னா, ஒரு சின்னப் பையன், ஸ்கூல் படிக்கறான்.
    அவனுக்கு ஒரு சின்ன வியாதி. பையனுக்கு மறதி ஜாஸ்தி. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நடந்ததெல்லாம் கூட மறந்துடுவான்.
    அவங்க அப்பாவுக்கும் அதே வியாதி இருக்கும். அவர ஒரு மனநோய் மருத்துவமனைல வச்சிருப்பாங்க.
    பையனுக்கும், மருந்தெல்லாம் கிடையாது, பேசாம பையனை ஒரு டைரி வச்சுக்க சொல்லி, அவன் தெனமும் செய்யரதெல்லாம் எழுதிக்கிட்டே வரச் சொல்லுங்க.
    அப்பப்ப, அந்த டைரிய பொரட்டிப் பாத்துக்கிட்டே வந்தா, நாளடைவில ஏதாவது மாற்றம் நடக்கலாம்னு சொல்லிடுவாங்க.

    பையனும் டைரி எழுத ஆரம்பிப்பான், கதையும் நல்லா வளரும். பையனை சுத்தி மூன்று நண்பர்கள். ஒரு குண்டு பையன், ஒரு அண்னனும் அவனின் தங்கையும். ஹீரோக்கு சின்ன வயசுலேருந்தே அந்த பொண்ணு மேல ஒரு இது.
    ஒரு நாள் வெளையாட்டுத்தனமா அருகில் உள்ள ஒரு வீட்டின் தபால் பெட்டியில் வெடியை வைத்துவிட, அந்த நேரம் பார்த்து அங்கு வந்த அந்த வீட்டில் உள்ள குழந்தை ஒன்று இறந்து விடும். அதன் தொடர்சியாய் சில விஷயங்கள் நடந்து நண்பர்களுக்குள் பிரிவு வந்துவிடும். அதைத் தவிர, அந்த பெண்ணுக்கும் வீட்டுப் ப்ரச்சனைகள் சில நடந்து வாழ்க்கை திசை மாறிவிடும்.

    ஹீரோவும், அம்மாவுடன் ஊரு விட்டு ஊரு போய் காலேஜ் படிக்க ஆரம்பிச்சிடுவாரு.
    ஹீரோவின் மறதி தொடர்ந்து கொண்டே இருக்கும். டைரி எழுதும் பழக்கமும் தொடரும்.

    ஒரு நாள், எதேச்சையாக, டைரி படிக்கும் போது, பழைய கால நிகழ்வுகள், நண்பர்கள் எல்லோரும் ஞாபகத்துக்கு வருவார்கள்.
    திடீர் என்று, டைரியின் எழுத்துக்கள், காற்றில் ஆட, ஹீரோ, பழைய நாட்களுக்கு சர்ர்னு திரும்ப போயிடுவாரு (time machine எஃபெக்டுடன்).

    அப்பதான், அவருக்கு புரியும், இந்த டைரி படிப்பதால், தன்னால், பின்னோக்கி பயணிக்க முடியும் என்றும், அந்நாளில் தான் செய்த சில விஷயங்களை மாற்றி செய்தால், தனது எதிர்காலம் மாறிவிடும் என்றும். பிரிந்த கேர்ள்-ஃப்ரெண்டு, கஷ்டப் படும் நண்பன், கேன்ஸர் வந்த தன் அம்மா எல்லாரையும் சரி செய்ய முடியுமே என்று தோன்றும்.

    முதல் முயற்சியாய் பின்னோக்கிச் சென்று சில விஷயங்களை வேறு மாதிரி செய்து பார்ப்பான். இதன் விளைவாக, சில விஷயங்கள் வேறு மாதிரி பின்னாளில் நடந்திருக்கும். கேர்ள்-ஃப்ரெண்டு திரும்பக் கிடைப்பாள், நண்பன் உடனிருப்பான். ஆனா, கேர்ள்-ஃப்ரெண்டின் அண்ணன், சைக்கோவாகியிருப்பான். ஹீரோவை, கொல்ல வருவான். ஹீரோ அவனை கொன்று விடுவான். ஜெயிலுக்குப் போவான். அடப்பாவே இப்படியாச்சே என்று, மீண்டும், டைரி படித்து, பின்னோக்கி பயணித்து, வேறு ஒரு மாற்றம் செய்வான்.

    இம்முறை, கேர்ள்-ஃப்ரெண்டு தற்கொலை செய்திருப்பாள், நண்பன் மனநோயாளி ஆகியிருப்பான். அடக்கொடுமையே, திரும்ப மாத்தலாம்னு போவான்.

    இம்முறை, ஹீரோக்கு ரெண்டு கை போயிருக்கும், கேர்ள்-ஃப்ரெண்டு, தன் நண்பனுடன் ஜோடி சேர்ந்திருப்பாள், அம்மாவுக்கு கேன்ஸர் வந்திருக்கும்.

    I think, you got the point ;)

    இப்படியே, சுவாரஸ்யமான பல திருப்பங்களுடன் அந்நாள் இந்நாள் என பயணிக்கும் படம், விறு விறு என்று காட்சிக்கு காட்சி மாறுபட்டு, அழகாய் முடியும்.

    ஸோ, பாக்க வேண்டிய படம். முதல் 15 நிமிஷம் ஒண்ணும் புரியர மாதிரி இருக்காது. அதுக்கப்பரம் ஸ்பீடு பிடிக்கும். இரண்டாம் முறை பார்க்கும்போது, ரொம்பவே பிடித்துப் போகும்.

    பாத்துட்டு சொல்லுங்க! பார்த்திருந்தாலும் சொல்லுங்க!

    ;)

    ஹாப்பி ஃப்ரைடே!

    ஒலிம்ப்பிக்ஸ் பாக்க மறந்துடாதீங்க!

    பி.கு: இத தமிழ்ல எடுத்தா ஓடுமா? யாரு நடிச்சா சரியா வரும்?

    Tuesday, August 05, 2008

    ஞாநியை நம்புவதா பதிவர்களை நம்புவதா?

    ஒரே கொழப்பமா இருக்கு.

    நம்ம ஆளுங்க என்னன்னா, டப்பா, குப்பை, படமா இது?, மொக்கை, திராபை அது இதுன்னு குசேலன போட்டு வாட்டி வதக்கிட்டாங்க.

    நானும், அப்பாடா, என் $40 தப்பிச்சுதுன்னு சந்தோஷமா ஒக்காந்துட்டேன்.

    இப்ப என்னடான்னா, விமர்சனப் "பெருந்தகைகள்" சிலர், குசேலனுக்கு 51 மார்க் தரேன், 60 மார்க் தரேன்னு களத்துல குதிச்சிருக்காங்க.

    அவங்க சொல்றது என்னான்னா, "கதை அம்சம்" கொண்ட ஒரு கதையை ரஜினி ஏற்று நடித்தாரே, அதுக்கே மார்க் போடலாமாம்.

    அடாடா, அவரும் இவ்ளோ வருஷம் ஆடி ஓடி நடிச்சுட்டாரு, ஆனா, அவருக்கு இப்படி ஒரு "ஷொட்டா?". அப்ப, இது வரைக்கும், அவர் நடிச்ச படத்துல எல்லாம் கதையே இல்லங்கராங்களா?

    ஏதோ, இந்த அண்ணாமலை மாதிரி படங்கள், கையை விசுக் விசுக்னு அசச்சதால ஹிட் ஆச்சுன்னு ஒரு மாயை உருவானதால,அவரும் மாஞ்சு மாஞ்சு, துண்ட சுத்தி, வெரல வெட்டி, தலைய சிலுப்பி ஒரு தினுசான படங்களா குடுக்க ஆரம்பிச்சிட்டாரு.

    அதுக்குன்னு ஒரே அடியா, "கதை அம்சம்" கொண்ட படத்தில் நடிக்க ஒத்துக்கிட்டதுக்காக அவருக்கு அதிக மார்க் போடறேன்னு நெக்குல் பண்றதெல்லாம் நல்லால்ல.

    ஆனா, இந்தப் பெருந்தகைகள், படம் டோட்டலா திராபைன்னு ஒதிக்கிட முடியாது, ஓரளவுக்கு நல்லாவே வந்திருக்கும்னும் வேர சொல்றாங்க.

    நம்ம பதிவர் வட்டத்தில், ரஜினியின் 'மன்னிப்பால்' வந்த எரிச்சலால், இப்படி படத்தை கொத்து பரோட்டா போட்டுட்டாங்களோ?

    திறந்த மனத்தோடு படத்தை பார்த்து, உண்மையை மட்டுமே சொல்லுங்க ராசாக்களா.

    ஒரு சிறந்த கதை அம்சம் பொறுந்திய நல்ல படத்தை ஓடவிடாமல் கெடுத்த பாவம் நமக்கெதுக்கு?

    படத்தை பாத்தவங்க, வாக்க மறந்துடாதீங்க - நேர்மை முக்கியம்!

    ஒரு தடவ இழுத்து மூச்சு விட்டுட்டு, ஒரு சார்பும் இன்றி, வலப் பக்கம் உள்ள பொட்டியில் வாக்குங்கள்!

    பி.கு: இன்று பசுபதியை இருட்டடிப்பு செய்தார்கள். அன்று எம்மை! அன்புள்ள ரஜினிகாந்த்ல 'நடிச்சோம்ல' ;)

    இதுவரை வந்த வாக்குகள்: