recent posts...

Tuesday, September 28, 2010

ஹிந்தி நஹீ மாலூம் ஹேய்...

பள்ளிக் காலங்களில், ஆங்கில வழிக் கல்வி கற்பித்த மெட்ரிக்குலேஷன் பள்ளியில் தான் அடியேனின் அறிவு தாகத்தை த்ணித்துக் கொள்ளும் பெரும்பணி நடந்தது.

ஐந்தாம் வகுப்பு வரை ஒரு 'சாதா' பள்ளியில் பயின்று வந்தேன். சுத்தி இருக்கும் பத்து என்ற பத்மநாபன், அண்ட்டு என்ற அனந்தசயனன், டில்லி என்ற டில்லிபாபு, குட்டி என்ற (அவன் நெஜப்பேரே மறந்து போச்சு) நண்பர் படையுடன், டயர் ஓட்டி, கில்லி கோலி ஆடி டரியல் பண்ணிய காலம் அது. மழைக்காலங்களில், தூண்டிலில் மண்புழு சொருகி, ஏரியில் வீசி கெண்டையும், குறவையும், கெலுத்தியும் பிடித்த காலம் அது.
எல்லாத்தையும் பொறுத்துக் கொண்ட நைனா, மீன் பிடிக்கும் படலம் ஆரம்பித்ததும், அப்துல் கலாம் ஆகவேண்டிய அருமைப் புத்திரன், இந்த அஜாடி கும்பலுடன் சேந்து வீணாப் போயிடுவானோன்னு பயந்துட்டாரு.
(அஜாடி கும்பலை அஜாடி வேலைக்கு இஸ்துக்கினு போறதே நாந்தான்னு அவருக்கு அப்பத் தெரியாத காலம் அது.)

நான் உருப்படணும்னா, மெட்ரிகுலேஷன் சேந்து மெத்தப் படிக்கும் மாணாக்கர்களுடன் சேந்தாதான் முடியும்னு முடிவு பண்ணி, 'நல்ல' ஸ்கூல்ல சேத்துவிட்டாரு.

அங்க படிச்சு, பெரிய லெவல்ல அறிவை வளத்துக்கிட்டு உலகமே மெச்சும்படி உயர்ந்ததெல்லாம் ஹிஸ்ட்டரி. இங்க வேணாம் அந்த டீட்டெயிலெல்லாம்.

ஆறாம் வகுப்பு முதல் நாளன்று, வகுப்பு ஆசிரியை வந்து, "children, you have the option to choose your second language. you can choose tamil or hindi. how many of you know hindi?"ன்னு கேட்டாங்க. என் பக்கத்து சீட்டு விஜய் ஆனந்த் (பெயர் மாற்றவில்லை. மச்சி, உன் பேரை நாரடிக்கறேன்னு அன்னிக்கு சொன்னதை இன்னிக்கு நிறைவேத்தறேன்) அதைக் கேட்டதும். "I No miss"னு கையத் தூக்கிட்டான்.
பாவம் பய, அவனும் நம்மள மாதிரி 'சாதா' ஸ்கூல்ல படிச்சு மீனெல்லாம் புடிச்சுட்டு, அவங்க அப்பா புண்ணியத்தில், 'நல்ல' ஸ்கூலுக்கு மாறிய கேட்டகிரி தான்.

இந்தி தெரியாதுங்கரத, 'I no miss, I no miss'னு கூப்பாடு போட்டதில் இருக்கும் சோகம் புரியாமல், ஆசிரியையும், 'I know'ன்னு கைதூக்கிய இதர ஸேட்டு பிள்ளைகளுடன், விஜய் ஆனந்தையும், "come children"ன்னு கடா வெட்ட கூட்டிக்கிட்டு போற மாதிரி, இந்தி வகுப்புக்கு கூட்டிக்கிட்டு போயி விட்டாங்க.
அதுவரை, Doordarshanல் 1:30 மணி செய்தியில் மட்டுமே இந்தி பரவலாய் பார்த்த விஜய் ஆனந்தும், முட்டி மோதி ஒரு வழியா இந்தி படிச்சு பாஸ் மார்க் வாங்கிட்டான். ஆனா, அவனுக்கு, இன்னி வரைக்கும், தன்னை மட்டும் ஏன் ஸேட்டு பசங்களோட விட்டுட்டு, மத்தவங்களையெல்லாம் டமில் படிக்க விட்டுட்டாங்கன்னு தெரியாமையே அப்பாவியா வளந்துட்டான்.

நானும் முட்டி மோதி, டமில் படிச்சு, திருக்குறள் கஷ்டப்பட்டு மக் அடிச்சு, குறுந்தொகை பெருந்தொகை, அகநானூறு, புறநானூறெல்லாம் பிட் அடிச்சு, டமிலை கரைச்சு குடிச்சு கரையேறிட்டேன்.
எனக்குத் தெரிஞ்ச இந்தியெல்லாம், சூப்பர் ஹிட் முக்காப்லா பாத்து வந்ததுதான். விஜய் ஆனந்த், "ஏக் தோ தீன்"னு கத்தி மனப்பாடம் செய்யும்போதும் அரசல் புரசலாய் என் காதில் விழும்.
அதைத் தவிர, கேய்ஸி ஹேய், அச்சா ஹேய், கியா ஹுவா, நஹி, பஹுத், நாம் கியாஹே, இந்த மாதிரி தோடா தோடாதான் தெரியும்.

அந்த தோடா தோடா வச்சுக்கிட்டே, பம்பாயில் ஒரு மாசமும், டில்லியில் ஒரு மாசமும், சமாளிச்சு மூச்சுத் திணறியதெல்லாம் நடந்தது.

அப்பேர்பட்ட எனக்கு, அமெரிக்கா வந்ததும், இந்தித் தொல்லை அதிகமாகியது. அப்பெல்லாம், பொட்டிய தூக்கிக்கிட்டு வாராவாரம் ஊரு விட்டு ஊரு போகும் வேலை. அலுவலகங்களும், பணத்தை தண்ணியா வாரி இறைச்ச காலம் (2001ன் ஆரம்பம்). NewYorkலும் மற்ற அநேகம் நகரங்களிலும், டாக்ஸி ஓட்டரது முக்கால்வாசி சர்தார் சிங்க்கும், பாக்கிஸ்தான் காரனுமாத்தான் இருப்பான். ஏர்போர்ட்டிலிருந்து வெளியில் வந்ததும், வரிசையில் நிற்கும் taxiல் ஏறி அமர்ந்ததும், "क्या बाथा हे साब. केसी हो? सामान निक्कालो?"னு சர சர சரன்னு இந்தியில் எதையாவது வாய்ல வந்ததை பேச ஆரம்பிச்சுடுவான். நான் அரை தூக்கத்துல, "ஹம் ஹிந்தி நஹீ மாலூம்"னு சொன்னதும், கொசுவைப் பாக்கர மாதிரி பாத்துக்கிட்டு, "தும் மத்ராஸி?"ன்னு கேட்டுட்டு ஒரு கேவல லுக் விட்டுட்டு, கப் சிப்னு ஆயிடுவான்.
99.99% taxi பிடிக்கும்போது, இந்த கொசுப்படலம் தொடரும்.

இந்தி தெரியலன்னா தெய்வகுத்தம் செஞ்ச மாதிரி பாக்கராங்க. எனக்கே, இப்பெல்லாம், அடடா இந்தி படிச்சிருக்கலாமேன்னு தோணும், பழைய இந்தி பாடல்களை கேட்கும்போதெல்லாம். என்னமா வரிகள் எழுதியிருக்கானுவ? அற்புதம்.

taxi காரனாவது, 'ஹிந்தி நஹி மாலூமை' மதிச்சு, பேச்சைக் கொறைச்சிடறான். ஆனா, இந்த அலுவலகத்தில் இருக்கும் சில வடநாட்டு சகாக்களின் கொடுமைதான் தாங்க முடியல்ல.
எப்பப் பாத்தாலும், இந்தியில், "सरियाना कड़ी इल्ला इन्ध मीटिंग? इन्तहा कम्पनी उरुप्पदाधू"ன்னு ஆரம்பிச்சிடுவானுவ. நானும், "ஹிஹி. i can understand a bit of hindi, but not very well"னு ஆயிரம் தபா சொல்லிட்டேன். வுடாம, இந்தியிலேயே வாட்டி எடுக்கறாங்க.
இப்பெல்லாம் "இந்தி நஹீ மாலூம்" சொல்றதை விட்டுட்டேன். அவங்க பேசும் தொனியை வச்சுக்கிட்டு, சீரியஸ் மேட்டர் சொல்றாங்களா, சிரிப்பு மேட்டரான்னு கிரஹிச்சு, அதுக்கேத்த மாதிரி, "Ya Ya"ன்னு தலைய ஆட்டி வெக்கறேன்.

இந்த இந்திக்காரனுவ தொல்லை ஒருபக்கம் இப்படி இருக்கும்போது, புதுசா, ஒரு தெலுங்குகாரன் வந்திருக்கான். அவனும் எப்பப்பாத்தாலும், காதோரம் வந்து, "ఎందోరు మగాను బావులు అన్తేరిక్కి వంథానము"ன்னு நச்சறான்.

நேக்கு, ஹிந்தி நஹி மாலூம் & தெலுகு தெல்லேதுராஆஆஆஆஆ கொலுட்டி டொங்கணக் கொடுக்கா!

Tuesday, September 21, 2010

பீதியை கிளப்பும் இந்த வெள்ளிக் கிழமை...


இந்த வெள்ளிக் கிழமைய (September 24) நெனச்சாலே வயத்துல லேசா புளியக் கரைக்கர மாதிரி இருக்கே.

எங்க பாத்தாலும், அயோத்தி தீர்ப்பை பத்தியே பீதியா பேசிக்கிட்டு அலையரானுவ.

எல்லா பெருந்தகைகளும் சேந்து, அடுத்த கட்ட, கொடூரத்தை துகிலுரிக்க திட்டம் போடர மாதிரி தெரியுது.

திரைக்கு வர இருந்த பல படங்கள் ஸைலண்ட்டா ஒரு வாரம் தள்ளி வச்சிருக்காங்க, லாபத்தில் சொட்டை விழுந்துருங்கரதுக்காக.

என்ன என்ன அட்டூழியங்கள் நடக்கப் போவுதோ.

Lucknowல் போலீசாரும், மிலிட்டரியும் குவிக்கப்படுதாம்.

எல்லாரும் லீவு போட்டுட்டு, "Working" from home செய்வது சாலச் சிறந்தது.

அதை விடச் சிறந்தது, எக்கேடுகெட்ட தீர்ப்பு வழங்கப்பட்டாலும், இரு தரப்பும், ஒன்னியுமே நடக்காத மாதிரி, நார்மல் வாழ்க்கையை நடத்தி, அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் குள்ள நரிகளின் முகத்தில் கரியை பூசுதல்.

எல்லாம் நன்மைக்கே!

Thursday, September 16, 2010

சித்தார்த் இம்முறை

"Well, young people today have the potential for bringing about change”.
“You see they begin in highly paid jobs and lead highly stressed lives. When quite young most of them brown out and look for something less stressful to do. They put away enough money and gain freedom from ‘jobbing’. I believe they will make the corrections for India.”
says, GoodNewsIndia Sridhar

மேட்டரை இங்க போயி படிச்சுக்கோங்க.

ஹாப்பி வெள்ளி!

Tuesday, September 14, 2010

கற்பகம்,ஸ்ரீராம் - reminder

இங்க போய் பதிவைப் படிங்க. கேள்விகளைக் கேளுங்க.

நன்றீஸ்.


அனானி ஆப்ஷன் தொறந்து விட்டிருக்கேன். அதனால, மாடரேஷனும்.

Monday, September 13, 2010

ஏமாற்றிய ரஹ்மான்

ரஹ்மான் வராரு ரஹ்மான் வராருன்னு, தண்டோரா போட ஆரம்பிச்சு கிட்டத்தட்ட ஆறு மாசமாச்சு. அதுவும், ஆஸ்கார் வாங்கினப்பரம் நடத்தும், 'world' tour இது.
நிகழ்ச்சி, அருகாமையில் இருக்கும் Oakland Oracle Arenaவில்னு சொல்லியிருந்தாங்க.
டிக்கெட் விலை $50லிருந்து, $300 வரை இருந்தது.

ஏற்கனவே $50 சொச்சத்துக்கு Eaglesஐ பாக்கப் போய், Eagles எல்லாம் கொசுமாதிரி தெரிந்த சம்பவம் நினைவுக்கு வந்ததால், இம்முறை பெரிய தொகை கொடுத்து, ரஹ்மானை கிட்டப் பாக்கணும்னு முடிவு பண்ணியிருந்தேன். $125 கொடுத்து, ஸ்டேடியத்தின் நல்ல பகுதியில், நேரெதிரே அமர்ந்து பார்க்கும்படி ஒரு ஆசனமும் புக் பண்ணியாச்சு.

இதோ வராரு, அதோ வராருன்னு, ஜூன் மாதமும் வந்தது. சிகாகோவில் நடந்த ஒத்திகையின் போது, ஏதோ லைட்டெல்லாம் கீழ விழுந்து ஒடஞ்சிடுச்சுன்னு, மத்த நகரங்களின் நிகழ்ச்சியெல்லாம் தள்ளி வச்சு, எங்க ஊரு நிகழ்ச்சி ஜூனிலிருந்து, செப்டம்பருக்கு தள்ளப்பட்டது. வாங்கியதும் வாங்கியாச்சு, பொறுமையா இருந்து, நிகழ்ச்சிய பாத்துத் தொலச்சிடலாம்னு காக்க ஆரம்பிச்சேன்.

சென்ற ஞாயிறன்று, அந்த சுபயோக சுபதினமும் வந்தது. நிகழ்ச்சிக்கு பயங்கர பில்ட்-அப்பும் இருந்தது, 'Jai Ho' வித்தகர், சர்க்கஸ் வகையராக்கள், புதுவிதமான அரங்க அமைப்பு, அது இதுன்னு. ஆனா, நிகழ்ச்சியன்றும் கூட, ரேடியோவில், டிக்கெட் வாங்கிக்கங்க வாங்கிக்கங்கன்னு கூவி கூவி வித்துக்கிட்டு இருந்தாங்க.
'ரஹ்மான்' ஈர்ப்புத் திறன் அம்புட்டுதான் போலருக்குன்னு நெனைச்சேன். இந்தி, தமிழ், தெலுகு, மூன்று மொழியிலும் பாடல்கள் இருக்குமே, எல்லா கும்பலையும் சேத்தாகூட, ஸ்டேடியத்தை ரொப்பியிருக்கலாமேன்னு தோணிச்சு. ஆனா, ஆளுங்க, விலை அதிகம்னு வராம இருந்திருப்பாங்கன்னு நெனைச்சேன்.

ஏழு மணிக்கு நிகழ்ச்சின்னு போட்டிருந்தது. நான், கும்பலை பாக்கலாம், ஜாலியா இருக்கும் ஆட்டமும் பாட்டமுமாய்னு நெனச்சுக்கிட்டு, ஆறு மணிக்கே போயிட்டேன்.
முதல் பல்பாக, வாசலிலே இருந்த ஜெக்கூரிட்டி, ஹலோ ப்ரதர், இம்மாம் பெரிய பை எல்லாம் உள்ள கொண்டு போவக் கூடாது, கேமரா ஸ்ட்ரிக்ட்லீ நோ நோன்னு சொல்லி, பையை வெளியிலியே வைக்கச் சொல்லிட்டாரு.
பேண்ட்டு போடாம கூட அவசரத்துல வெளீல போயிடுவேன், ஆனா, கேமரா இல்லாம எந்த எடத்துக்கும் போறதில்லை நான். இப்படி, வலுக்கட்டாயமா கேமெராவை புடுங்கி வச்சதும், கண் பார்வை போன மாதிரி, மங்கலாயிட்டேன். மெதுவா போயி $125 இருக்கையில் அமர்ந்தேன்.

நம்மூர் நிகழ்ச்சி, சொன்ன நேரத்துக்கு என்னிக்கு நடந்திருக்கு? அதை முன்னமே உணர்ந்த மக்கள்ஸ், யாரும் ஏழு மணி வரை வரவே இல்லை. ஆறு மணிக்கு 10% ஆளுங்க வந்திருப்போம். ஏழு மணிக்கு, 30% அரங்கம் ரொம்பியிருந்தது. இதோ ஆரம்பிப்பாங்க, அதோ ஆரம்பிப்பாங்கன்னு பாத்தா, பாங்க்ரா கும்பல் ஒண்ணு ஸ்டேஜில் ரஹ்மான் பாட்டை சிடியில் போட்டுவிட்டு ஆடிக்கிட்டிருந்தது. ஏழே முக்காலுக்கு, 60% அரங்க ரொம்பியதும், மெதுவா பாட்டை ஆரம்பிச்சாங்க.

Slumdogலிருந்து ஒரு பாட்டு, Swades பாட்டு, அது இதுன்னு நேரம் நகர்ந்தது.
ஆனா, ஒரு 'பன்ச்' மிஸ்ஸிங் எல்லாத்திலையும்.
இம்புட்டு காசு கொடுத்து ஒரு மைக்கேல் ஜாக்ஸன் ஷோவோ, ஷக்கீரா ஷோவோ போயிருந்தா, முதல் ரெண்டு மூணு பாட்டுலையே, மெய் சிலிர்த்து, 'ஐக்கியம்' ஆகியிருப்போம். ஆனா, இங்க, வாத்தியக்காரர்கள் எல்லாம் 'outsourced' வகையராக்கள்.
மிகவும் எதிர்பார்த்த ட்ரம்ஸ் சிவமணி மிஸ்ஸிங். பெரிய ட்ரம்ஸ் சவுண்ட் வந்தது, முக்கால் வாசி, 'சிடியிலிருந்து' ட்ராக் ஓட விட்ட மாதிரி.
மத்த வாத்தியங்களும் பெருசா இல்லை. நம்ம ஊரு கல்யாணத்துல வாசிக்கரவங்களே, இதை விட, நிறைய வாத்தியங்களை கொண்டு வருவாங்க.
'சிடி'யில் DJ போட்டு மிக்ஸ் பண்ணி கேக்கவா, இம்புட்டு கொடுத்து எல்லாரும் நிகழ்ச்சிக்கு வரோம்?

பாடகர்களும் மிஸ்ஸிங். ஹரிஹரன், விஜய் ப்ரகாஷ், ப்ளேசி, பென்னி தயால் இருந்தாங்க.
அவங்களும் நிறைய பாடலை. முக்கால் வாசி, ரஹ்மானே பாடினார்.
சில பாடல்கள், 'சிடியில்' போட்டு வாயசைக்கவும் செய்தார். (Jai ho was certainly a lip sync). ஹரிஹரன், ரெண்டோ மூணோ பாட்டு பாடினார் அம்புடுதேன்.

எந்திரன் பாட்டு ரெண்டு பாடினாங்க. நல்லா இருந்தது.

எல்லா பாடலையும், முழுசா பாடித் தொலைக்காம, மணிரத்னம் எடிட் செய்ர மாதிரி, வெட்டி வெட்டி பாடினாங்க. விண்ணைத் தாண்டி வருவாயா, தெலுங்கு பாட்டுக்கு பெரிய ஆரவாரம், அதை அடுத்த ஆரவாரம், எந்திரன் பாட்டுக்கு. இந்திப் பாட்டுக்கு பெரிய வரவேற்பெல்லாம் இல்லை. இதிலிருந்தே, வந்தவர்களின் கூட்டம் மனவாடும், டமிலர்களும்னு புரிஞ்சுக்கிட்டு, அதுக்கேத்த மாதிரி பாடல்களை பாடியிருந்திருக்கலாம். இதுவரை கேள்வியே படாத சில இந்திப் பாடல்கள் பாடினாரு. அப்படி இப்படின்னு ரெண்டு மணி நேரம் ஆனதும், நிகழ்ச்சியை வணக்கம் சொல்லி முடிச்சுட்டாரு.

சாதாரணமா, இந்த மாதிரி நிகழ்ச்சிக்கெல்லாம் போனா, குறைந்த்து மூன்றிலிருந்து நாலு மணி நேரம் வரைக்கும் நடக்கும். இடையில் ஒரு இடைவேளையெல்லாம் கூட விடுவாங்க. நிகழ்ச்சியெல்லாம் முடிச்சுட்டு வெளீல வரும்போது, லேசா ஒரு கிறக்கத்தோட வருவோம். இங்க என்னடான்னா, உள்ள போனதும் தெரீல, வெளீல வந்ததும் தெரீல. அப்படி ஒரு 'சப்'னு முடிஞ்சிருச்சு.

நேரடி நிகழ்ச்சிக்கு ரசிகன் எதுக்கு வரான்? தன் அபிமான ஸ்டாரை கிட்டத்தில் பார்க்கவும், 'சிடி'யில் பாட்டுக் கேட்டால் கிட்டாத ஒரு பரிமாணத்தை அனுபவிக்கவும். அது தெரியாதா இந்த ஆளுகளுக்கு? நிகழ்ச்சியை நடத்திச் செல்ல ஒரு Anchor இல்லை. ஒரு பாட்டு முடிஞ்சதும், அடுத்த பாட்டு ஆரம்பிக்குது, ஒளியும் ஒலியும் கணக்கா.
யாராவது, பேசி, எதையாவது பகிரிந்துக்கிட்டாதானே, ஒரு நேரடி நிகழ்ச்சி, மனசுல பதியும்?

நிகழ்ச்சி houseful ஆகாததால், cost cuttingஆ? இல்லை, தன்னை michael jackson போல் வளர்த்துக் கொள்ளும் நினைப்பில், இந்த மாதிரி ஒரு 'சுய' முயற்சியா? ஒன்னியும் புரியல்ல. குறைந்த பட்சம் ஒரு ஷ்ரெயா கோஷல், ட்ரம்ஸ் சிவமணி, கார்த்திக், சித்ரா, உதித் நாராயண்/சுக்வீந்தர் இல்லாம இனி கிளம்பி வராதிங்கப்பூ.

பிடிச்ச விஷயங்கள்னு பாத்தா:
அரங்கத்திற்குள் அடிக்கப்பட்ட ப்ரொஜெக்ஷன் லைட்டு. கலர் கலரா அழகா இருந்தது.
ஒரு பாட்டுக்கு லதா மங்கேஷ்கரின் வீடியோவை பெருசா ப்ரொஜெக்ட் பண்ணி அதுகூட டூயட் பாடினாரு.
ஏதோ ஒரு அல்லா பாட்டு, ஹார்மோனியத்துடன் பாடினாரு. ரம்யமா இருந்தது.
இரும்பிலே ஒரு இதயம் துடித்ததோ எந்திரன் பாட்டு, கலக்கலா இருந்தது, மக்களின் ஆரவாரம்.
ஸ்வர்ணலதாவுக்காக ஒரு குட்டி பியானோ பிட்டு வாசித்தது.

பிடிக்காத விஷயங்கள்:
Vintage classics பாடறேன்னு, துளிகூட ஒத்திகை பாக்காமல், எத்தையோ ஆரம்பிச்சு, 'காதல் அணுக்கள்' அது இதுன்னு பாடி திராபையாக்கியது.
இசை நிகழ்ச்சியில் சர்க்கஸ் வகையராக்கள் இன்னாத்துக்கு?
வாத்தியக்காரர்களின் வரட்சி.
lip sync/ட்ராக் போட்டு ரசிகனை ஏமாற்றும் ஜாலம்.
இரண்டு மணி நேரம் மட்டுமே நடந்த நிகழ்ச்சியின் அளவு.
கொஞ்சம் கூட ரசிகனோடு சம்பாஷனைகள் செய்யாமல், பாட்டை மட்டுமே பாடும், 'சப்பெ'ன்ற நிகழ்ச்சி வடிவம்.
அடுக்கிக்கிட்டே போவலாம்.
'இந்திய' வாசம் கொஞ்சம் கூடம் இல்லாமல், ரொம்பவே Western மயமாக்கி இயங்கும் ரஹ்மானின் ஸ்டைலு.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ். ($125 x 2 ) + $40 + $15 + 5 மணி நேரம் ஸ்வாஹா :|

ஜூலை 2007ல், SPB, யேசுதாஸ், சித்ரா $50க்கு சொர்கம் காட்டியது இன்றும் நினைவில் நிக்குது.

ரஹ்மான், புல்லரிக்க வைக்கணும் ஐயா. டீம் சேத்து நல்லா யோசிச்சு அடுத்த வாட்டியாவது கலக்குங்க. 'இசையில்' இந்தியம் வேணும் ஐயா. 'வந்தே மாதரம்' பாடினா மட்டும் போதாது. ப்ளீஸ், நம்ம நேட்டிவிட்டி பாடலிலும், நிகழ்ச்சியிலும் விட்டுத் தொலையாதீர்கள்.

ஜெய்ஹோ!

ஆறு மணிக்கு:


ஏழு மணிக்கு:


எட்டு மணிக்கு:


Thursday, September 09, 2010

சில முகங்கள்

சமீபத்தில் New York சென்ற போது, அங்கு விமான நிலையத்தில், வெட்டியாய் வெயிட்டிக் கொண்டிருந்த நேரத்தில், ஜூம் லென்ஸுக்கு கொடுத்த காசை முதலாக்க, ஜூமி எடுத்த சில படங்கள்.
பொது இடங்களில், இப்படி ஆட்களை எடுப்பது தவறா என்பது இன்னும், தெளிவாத் தெரியல்ல. பொடிப் ப்சங்களை படம் எடுத்துப் போட்டு, Sri காச்சி எடுத்துடறாரு. அதான், பெருசுகளை எடுத்துப் போடறேன் இம்முறை. ;)

யாரும் போட்டு வுட்டுடாதீங்கப்பு. கம்பி எண்ண வச்சுடுவானுவ. கலை ஆர்வத்தால், இப்படி க்ளிக்கித் தொலைக்க வேண்டியிருக்கு. சில அம்மிணிகளை, க்ளிக்கியது, கலைஆர்வத்தால் தான் என்பதை மவுஸ் மேல் அடித்து சத்தியம் செஞ்சுக்கறேன். அம்புடுதேன்.

Few random pics, i clicked during my trip to New York.











இது கொசுறு. கொலம்பியா யுனிவர்ஸிட்டி.

(Columbia University)


பி.கு: மூன்றில் ஒரு இந்தியர் ஊழல் பேர்வழியாம். வெட்கக்கேடு! மீதி ரெண்டு பேர் பொழைக்கத் தெரியாதவங்களா இருக்காங்களே?

Thursday, September 02, 2010

கற்பகம், ஸ்ரீராம், ஸ்ரீதருக்கான கேள்விகள்

வணக்கம் மக்கள்ஸ்.
கற்பகம் ஸ்ரீராம் GoodNewsIndiaவின், PointReturnல் இணைந்ததை பத்தி சொல்லியிருந்தேன்.

சுருக்கச் சொல்லணும்னா, ஸ்ரீதரன் என்பவர், இந்தியாவின் பலப் பல மூலைகளுக்குச் சென்று, பிரபல ஊடகங்கள் முன் நிறுத்தாத, 'வெற்றியாளர்கள்' பலரை goodnewsindia.com தளத்தின் வழியாக நமக்கு அறிமுகப்ப்டுத்தினார். வெறும் அறிமுகத்தோடு மட்டுமல்லாமல், அந்த வெற்றியாளர்களின், குட்டிச் சுயசரிதையையும், அவர்கள் செய்த நல்ல விஷயங்களையும் முழு விவரங்களுடன் அழகாக பதிந்து வந்தார். தளத்தை படிச்சுப் பாருங்க, உங்களுக்கே மேட்டர் புரியும்.

சில வருஷங்களுக்கு முன், ஒரு புதிய முயற்சியை (PointReturn.Org) தொடங்கியிருந்தார் ஸ்ரீதரன். ஜமீன் எண்டதூர் என்ற கிராமத்துக்கு அருகில் உள்ள 17 ஏக்கர் வரண்ட பூமியை வாங்கி, அதில், காடு வளர்க்க முற்பட்டுள்ளார். அதாவது, அந்த நிலத்தில் குளம் அமைத்து, மரம் நட்டு, பராமரித்து, வரண்ட ப்ரதேசத்தை பச்சை மயமாக்கி, இயற்கைக்கே திருப்பித் தரும் ஒரு உன்னதப் பணியை துவங்கினார்.


தனி மனுஷனா சொந்தக் காசை போட்டு 17 ஏக்கரில், குளம் வெட்டி, மரம் நட்டு, தங்க வசதிகள் செய்து, windmillல் தண்ணீர் இரைத்து, புதுப் புது விஷயங்களை பரீட்சை செய்து, செக்க போடு போட்டுக்கிட்டு இருந்தாரு ஸ்ரீதர். தன் பணிக்கு உறுதுணையாய் இருக்க முழு நேர தன்னார்வலர்கள் தேடிக்கிட்டிருந்தாரு.
சொந்த வேலையை விட்டுட்டு, இவரு கூட காஞ்ச காட்டுல வேலை செய்ய யாரு வரப்போறான்னு நெனச்சிருந்தேன்.
பாத்தா, ஸ்ரீராம், கற்பகம்னு ரெண்டு பேரு, நாங்க வரோம்னு ஸ்ரீதரனின் டீமில் சேர்ந்து, இவங்களும், கட்டாந்தறையை, பசுமைத் தளமா மாத்த ரெடி ஆகிட்டாங்க.
இதில் வியக்க வைக்கும் பெரிய விஷயம், இவங்க ரெண்டு பேரும், மெத்தப் படிச்சு நல்ல வேலையில் இருந்தவர்கள். இப்படி சின்ன வயசுலையே அம்புட்டையும் வுட்டுட்டு, இப்படி பொது நலத்துக்காக, வசதி வாழ்க்கையை விட்டுட்டு, வெயில்ல காய எப்படி மனசு வருது இவங்களுக்கெல்லாம்?

எனக்கும் பொதுநலத்தின் மேல் பெரிய அக்கரை உண்டு. அப்பப்ப, மத்தவங்ககிட்ட பொலம்பிட்டு, சைலண்ட்டா, அடுத்த டாலரை சம்பாதிப்பதிலே முனைப்பை காட்டி, என் வாழ்க்கைச் சக்கரத்தை சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு சூப்பரா சுத்திக்கிட்டு இருக்கேன்.
எனக்கும், என்னைப் போல் பலப் பல சுயநலவாதிகளுக்கும், உள்ளூர குட்டி ஆசை இருக்கு. என்னிக்காவது ஒரு நாள், இப்படி சில பல தியாகங்களை பண்ணிட்டு, உருப்படியா பொதுநலத்துக்காக ஏதாவது சின்ன விஷயமாவது செய்ய முடியாதான்னு?
ஆனா, எங்க ஆரம்பிக்கரது? சும்மா வர சம்பாத்யத்தை வேணாம்னு விடும் மன திடம் எப்படி உருவாக்கரது?
போதும் என்ற மனம் எப்படி தயார் பண்ணுவது?
இப்படி பலக் குழப்பங்கள் இருக்கு மனசுல.
ஃபுல் டைம் பொதுநலவாதி ஆகலன்னாலும், வாரத்துக்கு ரெண்டு மூணு மணி நேரமாவது, சமுதாய/மக்கள் மேம்பாட்டுக்குச் செலவிட வேண்டாமா?
படிச்சு என்ன புண்ணியம்? வசதியாய் நம்மை வாழவைக்கும் சமுதாயத்துக்கு கைமாறு என்ன செய்யப் போறோம்? எப்ப செய்யப் போறோம்?

இப்படிப் பலப் பல கேள்விகள் அடிக்கடி முளைக்குது. சிம்பிளா, அதன் மேல் தண்ணி ஊத்திட்டு, அடுத்த வேலையை பாக்க போயிடறோம்.


இன்னும் நீட்டி முழக்காமல், கற்பகம், ஸ்ரீராம் எப்படி இந்த மாதிரி, ஒரு தடாலடி முடிவில் இறங்கினார்கள். போதும் என்ற மனப் பக்குவம் எப்படி வந்தது, எதிர்காலத் திட்டம், etc.. etc.. மாதிரி கேள்விகளை கேட்டுப் பாக்கலாம்னு இந்தப் பதிவு.

எனக்கு மனதில் பட்ட கேள்விகள் கீழே. நீங்களும் ஏதாவது கேக்கணும்னா பின்னூட்டங்கள். எல்லாத்தையும் தொகுத்து அவிகளுக்கு அனுப்பி வச்சு பதில் கேக்கறேன். ஏடா கூடமா ஏதாவது கேட்டு, அறைவிட்டாங்கன்னா, பாதி அடி உங்களிடமும் பகிருகிறேன்.
யோசிச்சுக் கேளுங்க.



என் மனதில் பட்டவை.

1)ஸ்ரீதருக்கு:
பிரதிபலன் எதுவும் பெருசா எதிர்பாக்காம சொந்தச் செலவுல GoodNewsIndia வழியாக சேவைகள், இப்ப PointReturn.orgனு பண்ணிக்கிட்டு இருக்கீங்க.
GoodNewsIndia தளம் இப்போது இயங்காத நிலையில் உள்ளது. இயங்கிய நாட்களில், மகத்தான சேவை செய்து வந்தது. ஒரு நல்ல முயற்சியை முடங்க விட்டதில் சங்கடங்கள் இல்லையா? அதை மீண்டும் இயக்க, தன்னார்வலர்கள் மூலமாக முயன்று பார்க்க ஏதேனும் எண்னம் உண்டா?

2) கற்பகம், ஸ்ரீராமுக்கு:
நல்லா டீப்பா திங்க் பண்ணிதான், வசதி வாழ்வை ஓரம் கட்டிட்டு, இப்படி பொட்டல் காட்டுல சில பல வருஷங்களை கழிக்கலாம்னு முடிவு பண்ணிருப்பீங்க. "தேவையான" சொத்து சேத்துட்டோம்னு வந்த தைரியத்தில் ஏற்பட்ட முடிவா இது?

3) கற்பகம், ஸ்ரீராம், ஸ்ரீதருக்கு:
அஞ்சு ஆறு தன்னார்வலர்கள் சேந்து, உங்க சொந்த வாழ்வில் சில வருஷங்களை தியாகம் செய்து, 17 ஏக்கரில் மரம் வச்சு, குளம் வெட்டி, விவசாயம் பண்ணிச் சாப்பிட்டா, சமுதாயத்துக்கு என்ன பெரிய தாக்கம் வரும்னு எதிர்பாக்கறீங்க? அதை விட பெரிய தாக்கம், உங்க நேரத்தை, under privileged பசங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தோ, மத்த சேவைகள் செஞ்சோ ஏற்படுத்த முடியாதா?

4) ஸ்ரீராமுக்கு:
ஒரு பதிவில், நம் நாட்டின் முக்கியத் தேவை, பலப் பல புதியவர்கள் விவசாயிகளாக மாறணும்னு சொலியிருந்தீங்க. வெறும் மாடு வச்சு உழுது organic முறை விவசாயம் எல்லாம் பண்ணினா மட்டும், நம்ம உணவுத் தேவைகள் பூர்த்தியாகுமா? இயற்கை உறம் புரியுது. ஆனா, இயந்திரங்கள் இல்லாமல் விவசாயம் பண்ணா, நம்ம உற்பத்தித் திறன் எப்படிப் பெருகும்?

5) கற்பகம், ஸ்ரீராம், ஸ்ரீதருக்கு:
பொதுநலவாதியாக என்ன பண்னனும்? "எவ்வளவு சம்பாதிச்சா நமக்கும் நம் சுற்றத்துக்கும் போதும்?" :)

6) ஸ்ரீதருக்கு:
PointReturnக்குப் பிறகு, ஏதாவது திட்டம் மனதளவில் இருக்கா? எதையாவது செய்யணும்னு நெனச்சு, நேரப் பற்றாக்குறையால், பண்ண முடியாம போச்சேன்னு நெனச்சதுண்டா?

7) கற்பகம், ஸ்ரீராமுக்கு:
எனக்கெல்லாம் job satisfaction 365நாள் வேலைக்குப் போனா, அஞ்சு பத்து நாள், எப்பவாவது வரும். போங்கடா நீங்களும் உங்க வேலையும்னு தூக்கிப் போட்டுட்டு போயிடலாம்னு நிறைய நாள் தோணிருக்கு.
நீங்க வேலை செய்த நாட்களில் எப்படி? அங்க ஏற்பட்ட விரக்தியால், இப்படி வந்துட்டீங்களா? வேறு காரணங்கள்? :)

8) கற்பகத்துக்கு:
ராமர் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தின்னு, ஸ்ரீராம் பின்னாடி, வேற வழியில்லாம, பல்லக் கடிச்சுக்கிட்டு வந்தீங்களா? In a scale of 1-to-100%, how committed are you for this cause? PointReturnக்கு அப்பால் வேறு என்ன செய்ய எண்ணம் உள்ளது? :)

9) கற்பகம்,ஸ்ரீராம்,ஸ்ரீதருக்கு:
நம்ம ஊர் (தமிழ்நாடு, சென்னை,..) சமீப வருஷங்களில் நல்லா வளந்துக்கிட்டு இருக்கு. ஆனா, தனி மனுஷ ஒழுக்கம் சுத்தமா முன்னேறலை. தெருக்களில் குப்பை; சாலை விதி மீறல்; போராட்ட மனநிலை இல்லா சோதா வாழ்க்கை வாழ்தல் etc.. எங்க தட்டினா மாற்றம் வரும்? மனுஷங்க மத்தியில் மாற்றம் வர ஏதாவது செய்யும் திட்டமிருக்கா?

10) ஸ்ரீராமுக்கு:
உங்க கல்லூரி சீனியர் சித்தார்த்தும், கோதால எறங்கியிருக்கரதா சொன்னீங்க. மேலே உள்ள கேள்விகளுக்கு அவரையும் பதில் சொல்லச் சொல்லலாம்னு ஒரு சாய்ஸை கொடுத்திடுங்க.

11) கற்பகம்,ஸ்ரீராம்,ஸ்ரீதருக்கு:
மரம், செடி, கொடி, இணையம், புத்தகங்கள், இதை விட்டா வேறென்ன பொழுதுபோக்கு விஷயங்கள் பிடிக்கும்?

ஈ.மடலில் வந்த மூன்று கேள்விகள்

12) Was there a moment where they regretted / or questioned their decision after joining PointReturn?

13) What was the incident or event which made them took this decision? Many of us have these thoughts but there must be some strong driving reason for it.

14) Is there anything that they learned which can benefit a poor farmer. If so, are there any plans to educate them.

15) ???

..
...
.....

பி.கு: செல்லாவும், சமீப காலமாய், பார்ட் டைம் விவசாயம் செய்வதாக அவரின் முகநூலில் படித்து வருகிறேன். interesting.

மக்கள்ஸ், கேள்வியை நீங்களும் அவுத்து விடுங்க. டீப்பா திங்க் பண்ண வைங்க, மிக முக்கியமா.