recent posts...

Wednesday, June 23, 2010

Premibhai Patel - an inspiration

அருமையான விஷயங்களை குஜராத்தில் செய்து வரும் பிரேமிபாய் பட்டேலைப் பற்றி அறிந்து கொள்ள இங்கே க்ளிக்கவும்.



கண்ணை கட்டிக்கிட்டு ஓடர குதிரை மாதிரி, வருங்கால தண்ணீர் ப்ரச்சனையின் தீவிரம் புரியாமல், சென்னை வாசிகள் இருப்பது வேதனை.
ஏதாச்சும் செய்யணும். மினிமம், மரங்களை வைக்கணும்.

Friday, June 18, 2010

ராவணன்


பாக்கலாமா வேணாமான்னு ஒரு சஞ்சலம் இருந்தது;
இந்தியில் பாக்கலாமா, டமிலில் பாக்கலாமான்னு அடுத்த சஞ்சலம்;
முதல் நாள் பாக்கலாமா, ரெண்டு நாள் கேப் விட்டு பாக்கலாமான்னும் ஒரு தயக்கம்;
சரி, எவ்வளவோ பாத்துட்டோம் இதை பாக்கரதுக்கா தயக்கம்னு கோதால குதிச்சுட்டேன்.
ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் ஆரம்ப நாட்களில் நாராசமாய் காதில் இறங்கி, கேட்க கேட்க, இனிமை அதிகமாய், ரெண்டு மூணு வாரத்துல, வசியம் பண்ணிடும். ஆனா, ராவணன் பாடல்கள் எதுவும், ருசிகரமாய் என் காதுக்கு கேட்கவில்லை. 'உசிரே போகுது' சுமார் ரகம்.
மணிரத்தினத்தை நம்பி கண்டிப்பா போகலாம்னு தோணிச்சு. குருவும், கைவிடலை.

ஆனா பாருங்க, சினிமா பகவான் சோதனை பண்ணிட்டாரு.

சந்தோஷ்சிவன்/மணிகண்டனின் கைவண்னம், ஒவ்வொரு காட்சியிலும் பளீரெனத் தெரிந்தாலும்; படம் ரொம்பவே வறுத்தெடுத்துடுச்சு;

ராவணன் கதைதான் எல்லாருக்கும் தெரியும். பாலிஷ்டா கதை சொல்லத் தெரிந்த மணிரத்தினம், என்ன நெனச்சாரோன்னு தெரியல, இது ராமாயணம்தான்னு ஆணித்தரமா சொல்லவோ என்னவோ, அனுமாராய் வரும் கார்த்திக், மரத்துக்கு மரம் தாவரதும், ஐஸை பாத்துட்டு, ராமன்கிட்ட (ப்ரித்விராஜ்) சொல்லும்போது, "பாத்துட்டேன் ராகினியை'ன்னு டயலாக் விடரது சகிக்கலை.

முதல் காட்சியிலேயே, ராவணன் விக்ரம் (வழக்கமான ஊர் தலீவரு; காட்டுமிராண்டி கணக்கா; கிராமத்து மக்களுக்கு கடவுள், போலீசுக்கும் பணக்காரனுக்கும் விரோதி, etc.. etc..) ஆட்கள், போலீசார் சிலரை உயிருடன் கொளுத்துவதும், கைகால் வெட்டுவதும் என வன்முறையாக ஆரம்பித்தது. எதுக்காக இப்படி பண்றாங்கங்கர பேக்ரவுண்ட் நமக்கு ஊகிக்க முடிந்தாலும் (எவ்ளோ படம் பாக்கறோம்?), திரையில் அதை முதலில் காட்டாமல் இப்படி தடாலடியாய் ஆரம்பித்ததால், விக்ரமின் பக்கம் நம்மால் சாயமுடியாமல், படத்தின் முதல் பகுதி செம இழுவையாய் நகர்ந்தது. காட்சிகள் மட்டும் கண் விரித்து ஆன்னு பாக்க வைக்குது.

போலீஸ் SP (ராமர்/ப்ரிதிவிராஜ்) மனைவியான ஐஸை கடத்தி வச்சுக்கராரு விக்ரம்; பழிவாங்க;

போலீஸ்காரங்க இவரு தங்கையை (ப்ரியாமணி/சூர்ப்பனகை) தூக்கிக் கொண்டு போய் பலாத்கார் பண்ணிடறாங்க. அதற்கான பழிவாங்கும் படலம்;
கடைசியில், ஐஸை ஃப்ரீயா விட்டுடறார்; திரும்பி வந்த ஐஸ் மேல் கணவனுக்கு சந்தேகம் வந்து, எக்குத்தப்பாய் கேள்விகள் கேட்க, ஐஸ் விக்ரமிடமே திரும்பி வந்து விடுகிறார், அப்பாலிக்கா என்ன என்பதை வெள்ளித்திரையில் காண்க.

வழக்கமான படங்கள், முதல் பாதி விறு விறுன்னு போயி, அப்பரம் தொய்வடைந்து, மீதிப் பாதி இழுவையாகி போரடிக்கும்;
வெற்றிப் படங்கள் யாவும், முதல் காட்சி முதல் முடிவு வரை விறு விறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் இருக்கும்.
நல்ல படங்கள், உள்ளிருந்து சிரிப்பையோ, துக்கத்தையோ, கோபத்தையோ, சோகத்தையோ, எதையோ வரவைக்கும்.

இந்த படம் கொஞ்சம் வித்யாசமாய், கடைசி சில நிமிடங்கள் அருமையாகவும், அதுக்கு முன் கொஞ்சம் இழுவையாவும், அதுக்கும் முன் மேலும் இழுவையாகவும், அதுக்கும் முன் ரொம்பவே இழுவையாகவும்.. well, you get my point.

ரெண்டு மணி நேரம், எந்த வித உணர்ச்சியும் பொங்காமல், ஒரு படத்தை பாப்பது ரொம்ப துரதிர்ஷ்டமான நிலை.

படத்தின் ப்ளஸ்,
1) விஷுவல்ஸ். என்னமா இருக்கு ஒவ்வொரு காட்சியும். அடேங்கப்பா. என்ன மாதிரி படம் புடிச்சுருக்காங்க. அதுக்காகவே கண்டிப்பா பாக்கலாம்.
2) விக்ரம் விக்ரம் விக்ரம். மிரட்டியிருக்காரு மிரட்டி. கியாரண்டீடாய்ச் சொல்லலாம். இந்தியில் இந்த பாத்திரம் அபிஷேக்குக்கு எடுபட்டிருக்காது. விக்ரம், பின்னி பெடலெடுத்திருக்கிறார். ஆனா, எல்லாமே எதுக்கோ இழைத நீர் மாதிரி, வீணாய் வழியுது.
3) ஐஸ் வழக்கம் போல் சூப்பர். வயசாயிடுத்து அம்மணிக்கு. ஆனாலும், அழகு. 14 நாள் காட்டுக்குள் இருக்கரவங்க மேக்கப்படுடன் பளிச்சுனே இருப்பது க்வொஸ்ட்டினபிள்!

குறைகள்:
1) திரைக்கதை? கொஞ்சம் மாத்தி கீத்தி காட்சி அமைச்சிருந்தா, மனசுக்குள் ஒரு உணர்ச்சி கிளர்ச்சியாய், படத்துடன் ஒன்றியிருந்திருக்கலாம்; அது இல்லாம, வெத்தாப் போச்சு ரெண்டு மணி நேரங்கள்
2) வசனம். குட்டி வசனம் மணி படத்துக்கு அழகு. ஆனால், இதில் பல இடங்களில் செயற்கையாய் டயலாக். பல இடங்களில் ஒன்னியும் புரியவும் இல்லை
3) விஷுவல்ஸ். வெரைட்டி இல்லாமல், காட்டுக்குளையே படம் முழுக்க பயணிக்குது. டூ மச்சாயிடுத்தோ?

என்னமோ போங்க.

வெயிட்டீஸ் ஃபார் த டிவிடி.

மற்ற விமர்சனங்கள்:
Surveysan in engilibeesh
அதிஷா
கருந்தேள் கண்ணாயிரம்
மோடுமுட்டி
தமிழ் பிரியன்
சுரேஷ் கண்ணன்
யுவகிருஷ்ணா
The Hindu (சொம்பு தூக்கல்)
kaviri maindhan
Cable Sankar
will add more..

Monday, June 14, 2010

நைஜீரியக் கேப்மாரிகள்...

இணையத்தில் கேப்மாரிகளுக்கு பஞ்சமில்லை என்பது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம். ஈஸியா யார் கிட்டையும் மாட்டிக்காம தப்பு செய்ய வாய்ப்பிருந்தா, நம்மில் பலரும் தப்பு செய்ய சற்றும் தயங்காதவர்கள் என்பது அவரவர் மனசாட்சிக்குத் தெரியும்.
என்ன, ஒருத்தருக்கு ஒருத்தர், அந்த 'தப்பின்' கனத்தில் வேறுபாடிருக்கும்.
சிலர், மாமா இல்லாத சாலையில், ரெட் லைட்டுக்கு நிக்காம போவோம், சிலர் ஒரு டிக்கெட் மட்டும் வாங்கிட்டு மல்ட்டிப்ளக்ஸில் ரெண்டு மூணு படம் பாத்துடுவோம், சிலர் வித்-அவுட்ல போவோம், சிலர் முழுசா வரி கட்டாமல் ஏய்ப்போம், சிலர் புச்சா பொருட்களை வாங்கி அனுபவித்துவிட்டு கடையில் பொருள் பிடிக்கலைன்னு ரிட்டர்ன் பண்ணுவோம், இப்படி அடுக்கலாம்..

இணையத்தில் கேக்கணுமா? ரூம் போட்டு யோசிச்சு தினமும் பலப் பல ஆயிரம் பேர்களை ஏமாத்திக்கிட்டு இருக்கானுவ.
அதுவும், இந்த நைஜீரியாக்காரனுங்க தொல்லை ரொம்பவே அதிகம். அவங்க ஊருக்கும், மற்ற நாடுகளுக்கும், போலீஸ் கனெக்ஷன் இல்ல போலருக்கு. தப்பு செய்யரவன் எல்லாரும், அங்க கடைய போட்டுக்கிட்டு, ஈஸியா நாமம் போடறான்.

craigslist.org எல்லாருக்கும் பரிச்சயமிருக்கும். உபயோகித்த பொருட்களை வாங்கவும் விற்கவும், இலவசமான, சுலபமான ஒரு தளம். பல மில்லியன் டாலர்கள் சம்பாதிக்க வழி இருந்தும், அதன் முதலாளில், இன்னும், அந்த தளத்தை, ஆரம்பிச்ச போது இருந்த, அதே 'சிம்பிள்' லே-அவுட்டுடன், கிட்டத்தட்ட ஒரு சேவைத் தளமா நடத்திக்கிட்டு வராரு. (எங்க ஊர் காரராச்சே:) )

சமீபத்தில் என் canon rebelஐ விற்க ஒரு விளம்பரம் கொடுத்தேன். புது விளம்பரம் கொடுத்ததும், நைஜீரியாகாரன், மூணு நாலு பேராவது, டபால்னு பதில் போட்டுடரது வழக்கம். இப்பெல்லாம், தொகை பெருசா இருந்தாதான் வரானுவ; கேமரா பெரிய தொகைங்கரதால, வரிசை கட்டிக்கிட்டு நான் வாங்கிக்கறேன் நான் வாங்கிக்கறேன்னு, மூணு பேரு வந்தானுவ.

இதில் கொடுமை என்னன்னா, இவன் கேப்மாரிங்கரது, ஆணி புடுங்கர நம்மள மாதிரி ஆளுகளுக்கு ஈஸியா புரிஞ்சுடும், ஆனா, அதிக பரிச்சயம் இல்லாதவங்கள் ரொம்ப அநியாயத்துக்கு ஏமாந்துட வாய்ப்பிருக்கு. உங்களுக்காகத்தான் இந்தப் பதிவு.

ஏதாவது, விக்கும்போது, இவனுங்க வந்து, பதில் போடுவாங்க; என்ன சொல்லுவாங்கன்னா, "எனக்கு ரொம்ப புடிச்சுப் போச்சு. என் பொண்ணு, நைஜீரியால, அமெரிக்கன் கவுன்ஸிலேட்ல குப்பை கொட்டரா. அவ பொறந்த நாளு இன்னும் மூணு நாளுல வருது. அவளுக்கு இந்த காமெரா பரிசா அனுப்பலாம்னு இருக்கேன். நீ கேக்கரது 700$. நான் உனக்கு $800 தாரேன், கொஞ்சம் பெரிய மனசு பண்ணி, அவளுக்கு அதை கூரியர்ல உடனே அனுப்பிடுபா"ன்னு பெருசா, ஈ.மடல் அனுப்பிடுவான். கண்டிப்பா, கீழ "Dr." "Reverend" "Professor" இந்த மாதிரி அவன் பேர் இருக்கும். பெரிய ஆளாமாம்.

அடக் கடங்காரா, $100 சும்மா தர தயாரா இருக்கரவன், ஏண்டா பழசு வாங்க வரணும்னு, நமக்குத் தோணும், ஆனா, நம்ம அப்பாவிகள் பலருக்கு அது தோணாது.

ஆகா, இளிச்சவாயன் மாட்டினான்னு, அடுத்த கட்டத்துக்கு நகருவாங்க.

வழக்கமாய், இந்த மாதிரி ஈ.மடல்களை படிச்சுட்டு, டெலீட் பண்ணிட்டு அடுத்த வேலை பாப்பேன். இம்முறை, கொஞ்சம் ஆடித்தான் பாப்பமே, எம்புட்டு தூரம் போறான்னு, அவனுக்கு திரும்ப மடல் தட்டினேன்.

"Dr. உங்களுக்கு கேமரா புடிச்சதுல ரொம்ப சந்தோஷம். எங்க மீட் பண்ணலாம், துட்டு எப்ப தருவீங்க"ன்னு, கேட்டேன்.

அதுக்கு தொரை சொல்றாரு, "நான் இப்ப லண்டன்ல ஒரு கான்ஃபெரன்ஸ்ல கீறேன், பயங்கர பிஜி. உனக்கு செக் அனுப்ப டைம் இல்லை. பொண்ணுக்கு மூணு நாள்ள பொறந்த நாளு வேர வருது. உன் paypal id குடு, உடனே உனக்கு $800 அனுப்பிடறேன். கெடைச்சதும், நீ என் பொண்ணுக்கு கூரியர் அனுப்பிட்டு, அதோட ட்ராக்கிங் ஐடி எனக்கு அனுப்பிடு"ன்னான்.

நம்ம அப்பாவி ஜனமா இருந்தா, "அட, எவ்ளோ நல்ல டாக்டரு, நாம பொருள் அனுப்பரதுக்கு முன்னாடியே, நம்மள நம்பி $800 தராரே"ன்னு அவருக்கு மானசீகமா கற்பூரம் ஏத்தி கொளுத்திட்டு பணத்துக்காக வெயிட் பண்ணும்.

நான் திரும்ப ஒரு மடல் போட்டு, அப்பாவித்தனமா, "dr. என் கிட்ட paypal இல்லியே, பேசாம, நீங்க ஒரு செக்கை எனக்கு கூரியர் அனுப்பிடுங்களேன். செக் வந்ததும், பொருளை கப்பலேத்திடறேன்"னேன்.

அதுக்கு டாக்டரு, "இல்லப்பா, நான் ரொம்ப பிஜி, மூச்சு வுடக் கூட நேரமில்லை. paypal ரொம்ப சிம்பிளா கிரியேட் பண்ணிடலாம். பண்ணிட்டு அனுப்பு, நான் உடனே காசு அனுப்பிடறேன்"னான்.

சரி, இன்னாதான் பண்ணப் போறான் பாக்கலாம்னு, "இந்தா புடி என் paypal. துட்டை அனுப்பு"ன்னேன்.

அடுத்த அஞ்சு நிமிஷத்துல, எனக்கு paypal கிட்டயிருந்து ஒரு மடல், "உங்க கணக்கில் $800 வரவு வைக்கப்பட்டுள்ளது. Dr.கேப்மாரி அனுப்பியுள்ளார். நீங்க உடனே, உங்க பொருளை கப்பலேத்தி அனுப்பிவைங்க"ன்னு.

மேலோட்டமா இந்த மடலை படிக்கும் எந்த அப்பாவியும், ஏமாற பெரிய அளவில் வாய்ப்பிருக்கு. அச்சு அசலா, paypal கிட்டயிருந்து வரமாதிரியே ஃபார்மேட் இருக்கும். இந்த இடத்தில், நம்ம அப்பாவி, ஏமாற இரண்டு வாய்ப்பிருக்கு.
  • 1) வரும் ஈமடலில், உள்ள உரலை(url) க்ளிக்கி, தங்கள் கணக்கில் வரவு வந்துடுச்சான்னு பாக்க, id, கடவுச்சொல் எல்லாம் கொடுத்து பாப்பான்.
  • 2) ஈமடல் பாத்ததும், கேமராவை பார்சல் கட்டி அனுப்பப் பாப்பான்.
    ரெண்டுல எது செஞ்சாலும், Dr. குஷியாயிடுவாரு.

    இந்த ஈமடலில், 'From அல்லது Sender'ஐ கவனிச்சு பாத்தீங்கன்னா, இது paypal.com லிருந்து வந்திருக்காது, ஏதாவது ஒரு டுபாங்கூர் ஐடி, yahoo.comலிருந்தோ, hotmail.comலிருந்தோ வந்திருக்கும்.


    ஈமடலில் வரும் உரலை க்ளிக்கி, id கடவுச்சொல் எல்லாம் அடிச்சீங்கன்னா, அடுத்த அஞ்சாவது நிமிஷம், நம்ம கேப்மாரி, உங்க அக்கவுண்ட்டுக்குள்ள பூந்து, மொத்தமா வாரி எடுத்துட்டு கம்பிய நீட்டிடுவான்.
    நீங்க பொருளை பார்சல் அனுப்பினாலும், குஷியாயிடுவான். $800 பொருளாச்சே, அனாமத்தா கெடச்சா கசக்குமா அவனுக்கு?

    நான், அந்த ஈமடல் வந்ததும், இன்னும் கொஞ்சம் வெளையாடிப் பாப்போம், என்னதான் பண்றான்னு, அவனுக்கு, "Dr. துட்டு வந்துடுச்சு, உங்க address அனுப்புங்க, இன்னிக்கே கப்பலேத்திடறேன்"னேன்.

    அடுத்த அஞ்சாவது நிமிஷம், ஒரு நைஜீரிய முகவரியை அனுப்பினான். கூகிள்ள ஊரை பாத்தா, நல்லாதான் இருக்கு. ரோடெல்லாம் தெரியுது. இந்த கேப்மாரிகளுக்கு அங்க எப்படி புகலிடம் கிடைக்குதுன்னுதான் புரியல்ல. அரசாங்கம் சரியில்ல போலருக்கு.

    முகவரி கெடச்சதும், சாயங்காலம் அனுப்பிடறேன்னு ஒரு மடல் போட்டேன்.

    சாயங்காலம் ஆனதும் "அனுப்பிட்டியா. ட்ராக்கிங்க் ஐடி குடேன், என் பொண்ணு வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பா"ன்னான்.

    நான் சொன்னேன், "Dr. அனுப்பலாம்னுதான் போனேன், போறதுக்கு முன்னாடி, என் paypal அக்கவுண்ட்டிலிருந்து காசை வங்கிக்கு மாத்திக்கலாம்னு பாத்தேன், இன்னும் காசு வந்து சேரலைன்னு சொல்லுதேன்"ன்னேன்.

    அதுக்கு நம்ம dr. "அதெல்லாம் அப்படித்தாம்பா 24 மணி நேரம் ஆகும். நீ சீக்கிரம் பொருளை அனுப்பு"ன்னாரு.

    "இல்ல டாக்டர், 24 மணி நேரம் ஆகட்டும், காசு வந்ததுக்கப்பால அனுப்பறேனே"ன்னேன்.

    அடுத்த அஞ்சாவது நிமிஷம், paypal கிட்டேயிருந்து இன்னொரு மடல், "சர்வேஸ், உங்க துட்டு வந்துடுச்சு, உங்க கணக்குல அது தெரிய இன்னும் 24 மணி நேரம் ஆகும், நீங்க பொருளை அனுப்பிட்டு, எங்களுக்கு மடல் போட்டீங்கன்னா, உங்க கணக்குல காசு தெரிய ஆரம்பிச்சுடும், நாங்க holdஐ எடுத்துடுவோம்"ன்னு. இன்னாமா யோசிக்கரானுவன்னு நெனச்சுக்கிட்டேன்.

    "அனுப்பிட்டியா?"ன்னு அடுத்த மடலு. கான்ஃபெரன்ஸ்ல பிஜியா இருக்கர டாக்டரு சதா சர்வ காலமும், ஹாட்மெயிலையே பாத்துக்கிட்டு இருக்காரு போலருக்கு.
    "நாளைக்கு கண்டிப்பா அனுப்பிடறேன், எனக்கு பேபால் கிட்டயிருந்து இன்னொரு கன்ஃபர்மேஷன் வந்துருச்சு"ன்னேன்.

    மறுநாள் திரும்ப ஒரு மடல், "அனுப்பிட்டியா"ன்னு.

    வுடமாட்டான் போலருக்கேன்னு புது கதை சொன்னேன், "பொருளை எடுத்துக்கினு கூரியர் ஆஃபீஸ் போனேன், அட்ரெஸ் நைஜீரியான்னதும், கூரியர் காரன், காசு வரதுக்கு முன்னாடி அனுப்பாதே"ன்னு சொல்லி என்னை திரும்ப அனுப்பிட்டான்னேன்.

    dr.க்கு கடுப்பு ஏறிருக்கும், "அவனுங்களுக்கு internet டீலீங்க்ஸெல்லாம் தெரியாது. ப்ளடி கூரியர் பாய்ஸ். நீ போய் உடனே அனுப்பு, அதுதான் பேபாலே அனுப்ப சொல்லிட்ட்டாங்களே"ன்னான். அடுத்த அஞ்சாவது நிமிஷம் 'பேபால்'கிட்டயிருந்து இன்னொரு மடல், "சர்வேஸ், Dr. காசு குடுத்து ரெண்டு நாளாவது, நீ ஏன் இன்னும் பொருளை அனுப்பல, உடனே அனுப்பி, ட்ராக்கிங்க் ஐடி டாக்டர் கிட்ட குடு, அப்பதான், $800 உன் கணக்குல தெரியும்".

    "சரி டாக்டர், நாளிக்கு கண்டிப்பா அனுப்பிடறேன்"னு நிக்குது இப்போதைக்கு..

    நாளைக்கு என்ன செய்ய?
    அ. நைஜீரியாக்கு ஒரு அழகான கார்ட்டூன் வரஞ்சு அனுப்பவா?
    ஆ. ஒரு விபூதி பொட்டலம் வச்சு அனுப்பவா?
    இ. திருடாதே பாப்பா திருடாதேன்னு தலைவரு பாட்டு CD அனுப்பவா?
    ஈ. sam anderson கிளைமாக்ஸ் சீன் முப்பது தபா ரிப்பீட் பண்ணி டிவிடி பண்ணி அனுப்பவா?
    உ. சுறால தலீவரு, சுறா மாதிரி எம்பி எம்பி வர சீனை அனுப்பவா?
    ஊ. ஏய் டண்டனக்கா ஏன் டனக்கு டக்கான்னு எங்க அண்ணன் டி.ஆர் டான்ஸை அனுப்பவா?
    எ. ??

    எதை அனுப்பினா பித்தம் தெளியும் இவனுகளுக்கு? ;)

  • Sunday, June 13, 2010

    Beauty, Beast, Beach, Sunset @ Pacifica - படங்கள்

    Pacifica என்ற அழகான கடற்கரை ஓர நகரத்துக்கு ஒரு ட்ரைவ் சென்றிருந்தோம்.

    அங்கே சுட்ட சில படங்கள்.

    1) நாய்க்கு சிங்கம் மாதிரி வேஷம் கட்டி வச்சிருக்காங்க. முகத்தில் மட்டும் முடி. உடம்பு முழுசும் மழிச்சு விட்டுட்டானுவ. இந்த குட்டிப் பொண்ணு (நைனா, ஸாரி), அதனுடன் பந்து விளையாடியபோது...



    2) ரெடியா?



    3) ஜூட்...


    4) சக்ஸஸ்...


    5) இவரு வேடிக்கை பாக்கரத பாத்துட்டு...



    6) இதை பாத்துட்டு...



    7) இதையும் பாத்துட்டு எஸ்கேப்பிட்டோம்...



    8) இது கொசுறு (© தங்க்ஸ்)

    Saturday, June 12, 2010

    Indian Tablet Adam

    இந்த மாதிரி க்ளோபல் முயற்சிகள் நம் நாட்டிலிருந்து, அதிகமாய் வருவதில்லை. இது ஜெயிக்கும் என்று நம்புவோம்...

    Sunday, June 06, 2010

    Family படங்கள்

    Uvas Canyon என்று ஒரு இடம் இங்கே அருகாமையில் இருக்கு; இவ்ளோ வருஷமா இங்க இருந்தும், இப்பத்தான் இப்படி ஒரு இடம் இருப்பது தெரிய வந்தது. அருமையான காடு; நீர் வீழ்ச்சி; hike trail; camping; ரம்யமான இடம்;

    அங்கே கண்ணில் பட்ட ஒரு ஃபேமிலியை பின்தொடந்து, க்ளிக்கியது;
    (வழக்கம்போல், யாரும் மாட்டி வுட்ராதீங்கப்பூ ;))






    Friday, June 04, 2010

    என்ன கொடுமைங்க இது?

    நம்ம ஆடம்பர தேவைகள் அதிகரிக்க அதிகரிக்க, மற்ற உயிரினங்களுக்கு நம் மத்தியில் இடமில்லாம போயிடுது. பாவம்!

    இன்னும் போக போக, சக மனிதர்களிலே, வல்லமை குறைந்தவர்களுக்கும் இதே நிலை வரலாம்.

    எதையும் சட்டை செய்யாமல், நலிந்தவர்கள் மேல் கெட்ட எண்ணை வாரி இரைத்து, அவர்களை முக்கிக் கொன்று முன்னேறுவோம். வாழ்க மனித குலம்!

    pic source: the hindu


    pic source: the hindu

    Thursday, June 03, 2010

    கஞ்சப்பிசினாரி

    கஞ்சத்துக்கும் சிக்கனத்துக்கும் தத்துனூண்டுதான் வித்யாசம்.
    சில சமயங்களில், இக்கரையிலிருந்து அக்கரைக்கு நம்மையே அறியாமல் தாண்டித் தொலைத்து விடும் தருணங்கள் ரொம்பக் கேவலமானவை.
    நான் கஞ்சம் கிடையாது; பெருசா சிக்கனம் பண்றவனும் இல்லைன்னே தோணுது;

    செலவு பண்ண பெருசா யோசிச்சதெல்லாம் கிடையாது. ஊர் சுத்தரதலேருந்து, புது எலெக்ட்ரானிக்ஸ் வாங்கரது, அடிக்கடி கேளிக்கை வகையராக்களுக்கு செல்வது, இப்படி, எதிலும் குறை வைத்ததில்லை. அதாவது, எச்சைக் கையால் காக்கா ஓட்டாத கேட்டகரியில்லைன்னு சொல்ல வாரேன்.

    ஆனா, சில தேவையில்லாச் செலவு ஐட்டங்களெல்லாம் யோசிச்சு ஒதுக்குவதுண்டு. உதாரணத்துக்கு, புது சொக்காவெல்லாம் காஸ்ட்லியா வாங்கரதிலெல்லாம் ஈர்ப்பு கிடையாது. சாதா கடைக்கு போயி, சாதா சட்டைதான் வாங்கிப் பழக்கம்.

    என் வழி தனி வழி; நான் பாட்டுக்கு என் 'சிக்கன' வாழ்க்கை வாழ்வதில் யாருக்கும் ப்ரச்சனை இருக்கப் போவதில்லைன்னே இது நாள் வரை வண்டி ஓடிக்கிட்டிருந்தது. (தங்க்ஸுக்கு நம்ம வழி பழகிப் போச்சு, சொல்லிப் பிரயோஜனம் இல்லைன்னு)

    ஆனா பாருங்க, சமீபத்தில் நடந்த சில நிகழ்வுகள், ரொம்பவே டேமேஜாயி, என் பேரும் கெத்தும், டங்குவாரா கிழிஞ்சு தொங்குது.

    அதாகப்பட்டது, கொஞ்ச நாளுக்கு முன்னாடி, வூட்டுக்கு தங்க்ஸின் சொந்தக்காரப் பொண்ணும், அவளின் நண்பர்களும் வந்தாங்க. ரெண்டு மூணு நாளு தங்கி, ஊர் சுத்திப் பாத்துட்டுப் போகலாம்னு ப்ளான்.
    என் வீட்டில், தேவையான விஷயங்கள் எல்லாம் கீது; இந்த மாதிரி ஆத்திர அவசரத்துக்கு, air-bed ஒண்ணு இருக்கு. எப்பயாச்சும் வர விருந்தாளிக்குன்னு ஒரு பெரிய படுக்கை எல்லாம் வாங்கி வச்சு இடத்தை அடைக்க வேணாம்னு, இந்த ஏற்பாடு.
    நண்பர்கள் குழாமுக்காக air-bedல் காத்தடிச்சு, குட் நைட் சொன்னா, மறு நாள் காத்தாலைக்குள்ள காத்தெறிங்கிப் போச்சு சர்வேஸ்னு, கேவலமான ஒரு லுக்கோட குட் மார்னிங் சொன்னாங்க;

    இம்புட்டு வருஷமா டாலரை அள்ளிக்கினு இருக்கர, ஒரு extra bed கூட வாங்கி வைக்க முடியலையான்னு கேவலமான ஒரு லுக்கு.
    air bedக்கு 'பஞ்சர்' ஒட்டி, மாரியாத்தாவை வேண்டி அடுத்த நாள் காத்தடிச்சதுல, கெட்டியா நிக்குது. அப்பாடா!
    இது சிக்கனமா? கஞ்சத்தனமா?

    குட் மார்னிங் சொல்லி குளிக்கக் கெளம்பினாங்க. எங்க வீடு பாருங்க, 30 வருஷப் பழசு. ப்ளம்பிங் எல்லாம் அந்தக் காலத்து டைப்பு. எங்க வூட்ல ஷவரில் சுடுதண்ணி தொறந்து விடும்போது, பக்கத்துவீட்ல பச்சைத் தண்ணி பைப்பை தொறந்து விட்டா, இங்க தண்ணி தீப்பிழம்பு மாதிரி திடீர்னு சூடா கொட்டும். உஷாரா இல்லன்னா, சுட்டுடும். அவங்களுக்கு, இதை எல்லாம் விவரிச்சுச் சொல்லி, குளிக்க அனுப்புணா, திரும்ப அதே கேவலமான லுக்கு.

    workaround இருக்கர ப்ரச்சனை? இதை ஏன் பெருசுபண்ணி, புது வீடெல்லாம் தேடணும்? திரும்ப மூவிங் செலவு, அது இது, இதெல்லாம் எதுக்கு?
    இது சிக்கனமா? கஞ்சத்தனமா?

    மேலும் இமேஜ் டேமேஜ் ஆகி, ஸ்ஸ்ஸ்னு நகந்தப்பரம்தான் ஞாபகம் வந்துது, ஷாம்பூ காலியாகி மூணு நாள் ஆயிடுச்சுன்னு. கடைக்குப் போனா இது மறந்து போயிடும், அடுத்த முறை வாங்கணும்னு நெனைச்சிருந்தேன். அதுவரை, காலியான ஷாம்பூ பாட்டிலில், தண்ணிய ஊத்தி, என் தேவையை பூர்த்தி செய்து கொண்டிருந்தேன். உள்ளப் போனவங்க, குளிச்சுட்டு வந்ததும், மீண்டும் ஒரு கேவல லுக்கு.
    இதுல என் தப்பு நெசமா இல்லீங்க. ஆனாலும், இதை சிக்கனமா எடுத்துப்பாங்களா? கஞ்சத்தனமாவா?

    அப்பாலிக்கா எல்லாரும் கெளம்பி ஊர் சுத்தப் போனோம். சமீபத்தில் stick shift கத்துக்கலாம்னு, ஒரு பழைய காரை வாங்கி வச்சிருக்கேன். ஜனவரியில் இந்த காரை வாங்கும்போது, செம குளிர். ஏசியெல்லாம் வேலை செய்யுதான்னு சரியா கவனிக்க முடியலை. இப்ப அடிக்கர வெயிலுக்கு, ஏசியில்லாம நெம்ப நெம்ப கஷ்டம்.
    ஏசி சரியா வேலை செய்யாதுங்கரது மறந்து போயி, இந்த கும்பலை, 'நல்ல' காரில் கூட்டிச் செல்லாமல் இதில் ஏற்ற்க் கெள்ம்பினோம். கொதியோ கொதின்னு கொதிக்குது. நானும் ஏசியை போடறேன், ஃபுல்லா வெக்கரென், சூடாதான் காத்து வருது அதுல. பின்னாடி ஒக்காந்த கும்பல் "ஸ்ஸ்ஸ்ஸ் டூ ஹாட் யா"ன்னு அலப்பரை பண்ண, இந்த முறை தங்க்ஸ் என்னை பாத்து ஒரு கேவலமான லுக்கு விட்டா.
    இது எந்த வகையை சேரும்?

    மொத்தத்தில் இமேஜ் டோட்டல் டேமேஜ் ஆகிடுச்சு. ஊர் பூரா விஷயம் பரவிடும். வீழ்ந்த இமேஜை சரிசெய்ய சுலப வழியும் இல்லை. ஹ்ம்!

    சுட சுட காரில் போயி, 'வேலு'ம், 'தத்தை'யும் பாத்து, அங்க பல்பு வாங்கின கதையை ஏற்கனவேதான் பொலம்பியாச்சே :(

    "கெளம்புங்க, காத்து வரட்டும்" இது வூட்டுக்கு வந்த பொண்ணு அடிக்கடி சொன்ன டயலாக். ஒட்றாங்களாம் நம்மள.

    கெளம்புங்க, காத்து வரட்டும் :)

    கார்ட்டூன் புரியாதவங்க, பின்னூட்டவும் ;)


    கார்ட்டூன் பாத்து கண்ணு கெட்டவங்களுக்கு, குளிர்ச்சியா ஒரு படம்: