recent posts...

Sunday, May 26, 2013

RTI filed - trying to understand why Roads get higher and higher



APPLICATION UNDER THE RIGHT TO INFORMATION ACT 2005


18473
To,
The Public Information Officer
Pallavapuram municipality
Chrompet
Chennai 44

Subject: Information required under the Right to Information Act 2005

Hello,
Kindly provide me with the following information requested under the purview of the Right to Information Act, 2005.
Regarding: Relaying roads without scraping off old road causing neighborhoods to sink underground 

Particulars of information required: As per list mentioned below
1) When was the last time new road was laid at xxx nagar, xxx, Chennai 64.
2) Was all contractual terms followed by the contractor when the road was laid?
3) How much additional height did the road gain after the new road was laid?
4) Was the road suppose to gain height as per the contractual term or should it have maintained the same height?
5) Whose responsibility is it to ensure the old road is scraped off before laying new roads?
6) When is xxx nagar, xxx (main road and cross streets) scheduled for the next relaying of the road?
7) Who has the authority to ensure and include in contract terms that the old road must be scraped off before laying new road to ensure the neighborhood houses do not submerge under road level causing huge pain during rainy seasons to the common people?
8) Will the next road make the street higher than what it is today? if yes, by how many inches?
9) Does municipality understand that it is a big design mistake they are doing by increasing the road height few inches everytime road is laid?
10) Is there any plan being discussed by the officers and leaders, to maintain road level at the same height during new road implementations?

Period pertaining to information: 2013
Find the application fee for the request attached with this application (Indian Postal Order No. ___________dated __________ is enclosed). If you feel that above requested information does not pertain to your department then please follow the provisions of Section 6(3) of the RTI Act, 2005/Also as per the provisions of the RTI Act, 2005 please provide the details (Name and Designation) of the first appellate authority w.r.t  your department with the reply to the above request., where I may if required file my first appeal.

Kindly provide me with the information at the address/email id mentioned with the application. I request you to ensure that the information is provided before the expiry of the 30 day period after you have received the application.

I sincerely thank your department for making efforts to relay roads and attempting to provide comfortable living for our residents. But, height of roads increasing every time is a big concern and will make our neighborhood inhabitable in a few years.

Regards,


Sunday, May 19, 2013

Point Returnல் ஒரு நாள்

GoodNewsIndia.comன், DV ஶ்ரீதரன், துவங்கிய முயற்சி PointReturn. மதுராந்தகத்திலிருந்து பத்து கிலோமீட்டரில், 17 ஏக்கர்,  நிலப்பரப்பை,  பசுமைப் படுத்தும் முயற்சி இது.
எதுவும் விளையாமல் வீணாய் விடப்பட்ட வரண்ட நிலத்தில், மரங்களும்,  செடிகளும், கொடிகளும் வளர்த்து, நீர்வளத்தையும் உருவாக்கி, ஒரு self-sustainable environmentஐ உருவாக்கும் ஆராய்ச்சி. 

இவரின் இந்த முயற்சியில், மேலும் சில தன்னார்வலர்கள் சேர்ந்து தங்களது உழைப்பைச் செலுத்தி வருகிறார்கள்.
இதில் முக்கியமானவர்களைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.

பல வருடங்களாய் GoodNewsIndia.com வாசித்ததில், DV ஶ்ரீதரன் இந்த இடம் வாங்கியதிலிருந்து, வேலி கட்டியது, குளம் வெட்டியது, தண்ணீருக்காக காற்றாலை அமைத்தது, தங்குவதர்க்காக குடிசை அமைத்தது, பயோ டீசலுக்காக பூங்கை நட்டது, 'நவீன' டாய்லெட் கட்டியது,  சாலைக்காக நிலம் வாங்கியது, கற்பகம், ஶ்ரீராம், சித்தார்த்தின் வரவு, அவர்கள் கட்டிய சின்ன குடிசை, வளர்க்கும் பூனை, நாய், நெல் அருவடை, பூசனி வளர்த்தது, என அனைத்து விஷயங்களும் அவ்வப்போது படித்து தெரிந்து கொண்டு வந்துள்ளேன்.

ஒவ்வொரு விடுமுறையின் போதும், PointReturnஐ சென்று நேரில் பார்க்கவேண்டும் என்று தோன்றும். ஆனால், அதற்கு நேரம் அமையாமல் இருந்து வந்தது. சென்ற வாரத்தில்தான் நேரம் கிட்டியது. 

அடிக்கும் சுளீர் வெயிலில், நகர சுகத்தை புறம் தள்ளி, இயற்கைக்கு தங்களால் ஆனதைச் செய்யும், இந்த தன்னார்வலர்களை எண்ணி வியப்பு தான் வருகிறது. நினைத்தால், சில பல லட்சங்கள் சுலபமாய் மாத சம்பளமும், சுகபோக வாழ்க்கையும் நகரத்தில் கிட்டும் இவர்களுக்கு. படித்த படிப்பு அப்படி. அதை புறம்தள்ளி, இந்த பொட்டல் வெளியில், குடிசை அமைத்து, விவசாயிகளாய் மாறியதை எண்ணி பெரும் வியப்பு வருகிறது.
அவர்களைப் பொறுத்தவரை, இதை ஒரு service என்றெல்லாம் எண்ணாமல், தங்களுக்கு பிடித்த வாழ்க்கைமுறையை பிடித்தபடி சிம்ப்பிளாய் வாழ்கிறோம், அதைத் தவிர இதில் பெரிதாய் ஒன்றுமில்லை என்கிறார்கள்.

வாழ்க்கைக்கு எது தேவை, எது தேவை இல்லை, எது சந்தோஷம், எது மன நிறைவு,  எது ஆசை, எது பேராசை, என்றெல்லாம் தெளிவாய் புரியாமல், எதையோ தேடி வரும்  நமக்கு, இவர்களின், மன ஓட்டமும் வாழ்க்கையின் அணுகுமுறையும் புரியாத புதிர்தான்.

நம் சுகபோகங்களை கெட்டியாய் பிடித்துக் கொண்டாலும், நம்மால் இயன்ற சின்ன சின்ன விஷயங்களை, சுயநலம் இல்லாமல் செய்தல் நலம் பயக்கும்.

நீர் தட்டுப்பாடு, மின்சாரம் தட்டுப்பாடு, என பல தட்டுப்பாடுகள் நிலவும் ஊரில், இயற்கை வளத்தை சீரழிக்காமல் காப்பதே ஒரு பெரிய சேவைதான்.
உங்கள் தெருக்களில், மரங்களை அழிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். மரம் இல்லாத தெருக்களில் மரங்கள் வையுங்கள்.
உணவு, நீர், வீணடிக்காதீர்கள்.

மரம், செடி, கொடிகள் மெத்தப் பிடித்தவர்கள் சிலர் கூட்டாய் சேர்ந்து, சில பல ஏக்கர்களை வாங்கி, பசுமைப் படுத்தும் முயற்சியில் ஈடுபடுங்கள்.

PointReturnலிருந்து சில பல படங்கள், உங்கள் பார்வைக்கு.


பொட்டல் காட்டில், பசுமை தெரியத் துவங்கியுள்ளது.


இல்லம்.

அப்பு.


வெயில், அதீத வெயில்

விருந்தினர் விடுதி

சோலார் தகடு


மதிய உணவு (அரிசி, காய்கறிகள் அங்கேயே விளைந்தது)



காற்றாலை, நீர் இரைக்க. ஆரோவில் தயாரிப்பு.

கற்பகம், ஶ்ரீராம்

குடிலின் மேற்புரம்

இன்றைய மகசூல்.





 நண்பர் ஓசை செல்லா, இதே மாதிரி ஒரு முயற்சியை வரகம்பாடியில் செய்து வருகிறார்.

பல கோடி பேர், நில வளத்தையும் நீர் வளத்தையும் சீரழித்தாலும், சில ஆயிரம் பேர் இந்த மாதிரி பசுமை முயற்சிகள் செய்து, பேலன்ஸை காக்கிறார்கள்.
இவர்களைப் போன்றோரின் முயற்சி வாழ்க வளர்க. இவர்களைப் பார்த்து, மற்றவர்களுக்கும் தத்துனூண்டாவது, ஆர்வம் பீரிடட்டும். :)

DV ஶ்ரீதரன் ஒரு கட்டுரையில், தான் கடந்து செல்லும் பாதையில் ஒரு மரத்தை பார்த்தால், ஒரு சில நொடிகள் நின்று அதன் இருப்பை உள்வாங்கி, அதன் பிரமாண்டத்தை ரசித்துவிட்டுத்தான் நகர்வேன் என்று சொன்னது என் உள்மனதில் பதிந்து விட்டது. அதனால் தானோ என்னவோ, எனக்கும் மரங்களின் மேல் ஒரு 'இது' வந்து விட்டது.

எங்கள் தெருவில் வைத்த ஒரு 'Copper Pod''ன் படம் இங்கே. மரம் நடுங்கள். அருமையான அனுபவம் அது. உங்களுக்குப் பின்னும், உங்களின் இருப்பை நிலை நிறுத்தும், பலப் பல வருடங்களுக்கு.



நன்றீஸ்.



Saturday, May 04, 2013

சூது கவ்வும் - திரைப் பார்வை


விஜய் சேதுபதி கலக்கறார். ஐம்பது ப‌டங்களுக்கு மேல் நடித்த மாதிரி ஒரு அசால்ட்டு நடிப்பு. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும், பிட்சான்னு அருமையான வாய்ப்புகள் அவருக்கு. இப்ப சூது கவ்வும். கேரக்டருக்கு ஏத்த மாதிரி அமக்களமா மாறிடராரு.
கொஞ்சம் 'மெண்ட்டலான' கதாபாத்திரம். அட்டகாசமாய் பொறுந்துகிறது இவருக்கு.
'க்ளோஸ்' என்று முடிக்கும் பாங்கும், மற்ற உடைந்த ஆங்கில டயலாக்குகளும், கிட்நாப்புக்கு 5 கமாண்ட்மெண்ட்ஸ் எழுதி வைத்து, அதை விளக்கும் காட்சிகளும் ஹில்லேரியஸ். கடத்தப்பட்டவனின் தந்தையிடம், "நாளைக்கு சண்டே லீவு, நாங்க வேலை செய்ய மாட்டோம். திங்கள் கிழமை வாங்க" என்று சீரியஸாய் அடித்து தூள் கிளப்பும் இடங்களெல்லாம் ஹாஸ்யம்.

விஜய் சேதுபதி, தன் கற்பனைக் காதலியுடனும், மேலும் மூன்று சென்னை இளைஞர்களுடனும் சேர்ந்து, மற்றவர்களை கிட்நாப் செய்வதே கரு. மூவரில் ஒருவர் நயன் தாரவுக்கு கோயில் கட்டியவர், மற்றவர் வேலையில்லா வெட்டி, இன்னொருவர் ஐ.டி ஆசாமி. கற்பனைக் காதலி, விஜய் கண்ணுக்கு மட்டுமே தெரிவதால், சுவாரஸ்யத்துக்கு குறைவேயில்லாமல் காட்சிகள் பல.

விஜ‌ய் சேதுப‌திக்கு அடுத்த‌ப‌டியாய் க‌ல‌க்குவ‌து, விஜய் டிவி புகழ் "அல்
கேட்ஸ்". காலை அலார‌ம் வைத்து எழுந்து, விபூதியெல்லாம் பூசி, ப‌வ்ய‌மாய் சிப்ஸ் ச‌ர‌க்கு பாட்டில்க‌ளை எடுத்து வைத்துக் கொண்டு, ஏன் தான் வேலைக்கு செல்வ‌தில்லை என்று வியாக்கான‌ம் செய்யும் பாத்திர‌த்தில் ப‌ட‌ம் முழுக்க‌ ரவுண்டு க‌ட்டி அடிக்கிறார். போலீஸிடம் இருட்ட‌டி வாங்கும் காட்சி சிரிப்பு வெடி.

இவ‌ர்க‌ள் இருவ‌ருக்கும் அடுத்த‌தாக‌ ப‌ட‌த்தில் வியாபித்திருப்ப‌து பின்ன‌ணி இசை. அம‌க்க‌ள‌ப் ப‌டுத்தியிருக்கிறார் இசை அமைப்பாள‌ர் ச‌ந்தோஷ் நாராயண‌ன்.
வித்யாச‌மான‌ இசைக் கோர்வை. டாராண்ட்டினோ ப‌ட‌ங்க‌ளில் வ‌ருவ‌தைப் போல் ஒரு புதுமை. ஹாட்ஸ் ஆஃப்! பாட‌ல்க‌ள் பெரிதாய் இல்லை. கானா பாட‌ல் தாள‌ம் போட‌ வைத்த‌து.

இவ‌ர்க‌ள் அனைவ‌ரையும் விட‌ மேலே நிற்ப‌வ‌ர் திரைக்கதை, இயக்கம் செய்த‌ ந‌ள‌ன் குமார‌ஸ்வாமிதான். சும்மா ந‌ம்ம‌ளும் ப‌ட‌ம் எடுத்தோம்னு இல்லாம‌, ரொம்ப‌வே வித்யாச‌மான‌ ஒரு அனுப‌வ‌த்தை ப‌ட‌ய‌லாக்கியிருக்கிறார். குறிப்பாய் வ‌ச‌ன‌ங்க‌ள். நெக்குலான‌ ட‌ய‌லாக்குக‌ள் ப‌ட‌ம் முழுக்க‌, ந‌ம்மை சிரிக்க‌ வைத்துக் கொண்டே இருக்கிற‌து.
விஜ‌ய்க்கு ம‌ட்டுமே தெரியும் ஹீரோயின் கான்செப்ட் சூப்ப‌ர். விஜ‌ய் சேதுப‌தியை 'மாமா' என்று அழைத்துக் கொண்டு 'ஓவ‌ர்' மேக்க‌ப்புட‌ன் ஹீரோயின் உட‌னிருப்ப‌து நெருடிய‌போது, அவ‌ர் விஜ‌ய்யின் க‌ற்ப‌னை என்று தெரிந்த‌போது, 'வாவ்' என்று தோன்றிய‌து. ப்ரில்லிய‌ண்ட் கான்செப்ட். அதுவும் அவ‌ர்க‌ள் இருவ‌ருக்கும் ந‌ட‌க்கும் ச‌ம்பாஷ‌னைக‌ள் அட்ட‌காச‌ம்.
லைட்டிங்க் கேம‌ரா ப‌ட‌த்துக்கு த‌குந்த‌ மூட் கொடுத்திருந்த‌து.

எந்த‌ இட‌த்திலும் சோடை போகாம‌ல், நொடிக்கு நொடி சிரிக்க‌ வைத்து, விர்ர்ரென‌ ஒரு ப‌ர‌வ‌ச‌ அனுப‌வ‌த்தை கொடுத்த‌து சூது க‌வ்வும். முதல் கட்ட கடத்தல்கள் அட்டகாசம். "you want to talk to my folks?" என சொல்லும் வெள்ளையரை, "இவன எறக்கி விடு" என்று விட்டுச் செல்லும் இடங்களெல்லாம் லாஃபிங் ரயட்.
இர‌ண்டாம் பாக‌த்தில் ச‌ற்று இழுத்த‌ மாதிரி இருந்தாலும்,பின்னால் சுட்டுக் கொள்ளும் சீரியஸ் போலீசும், அர‌சிய‌ல் வாதியும், அவ‌ரின் ம‌க‌னும், ர‌வுடி டாக்ட‌ரும், ஏனைய‌ ப‌ல‌ காரெக்ட‌ர்க‌ளும் செம‌யாய் கை கொடுத்து, ந‌ம்மை குதூக‌ல‌ப் ப‌டுத்துகிறார்க‌ள்.

ஜாலியாய் இர‌ண்டு ம‌ணி நேர‌ம் செல‌வு செய்ய‌, இன்றே பார்க்க‌லாம், சூது க‌வ்வும்.
குட் மேக்கிங்!

சூது வெல்லும்!