recent posts...

Sunday, October 06, 2013

மிஷ்கினின் கோபம்




ஒநாயும் ஆட்டுக்குட்டியும், ஒரு உன்னதமான படம் என்பதில் ஐயம் இல்லை. முதல் நாள் முதல் ஷோவில், ஐம்பது பேர் மட்டுமே கொண்ட தியேட்டரில் ஜம்மென்று அமர்ந்து, அமைதியாய் அனுபவித்து பார்த்தது இன்னும் நினைவில் பளிச்சென்று இருக்கிறது.

வித்யாசமான முயற்சியாக, விரு விரு திரைக்கதையில், தேவையில்லா மசாலாக்கள் புகுத்தாமல், ஒரு 'கொரிய' மொழியின் வீரியம் படம் முழுவதும் நிரம்பி இருந்தது.

அசத்தலான படைப்பு. அதைத் தந்த மிஷ்கின், போற்றப்படவேண்டிய கலைஞன். அதிலும், தன் சொந்தப் பணத்தில் இப்படிப்பட்ட காம்ப்ரமைஸ் இல்லாத படைப்பை தந்ததர்க்கு அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

ஆனால், இந்த மாதிரி படங்கள், டிஸ்ட்ரிப்யூட்டர்களை வெகுவாய் கவராமல், தியேட்டர்கள் கிட்டாமல், போட்ட பணத்தை எடுக்கவே பிரம்மப் பிரயத்தனம் பண்ண வேண்டிய நிலையில் இருப்பது நம் துரதிர்ஷ்டமே.

ஒரு பக்கம், 'மாஸ்' படங்களும், சீப் காமெடி படங்களும், தடபுடலாய் ஓடிக்கொண்டிருக்க, கொண்டாடப் பட வேண்டிய படங்கள், புரம் தள்ளப்படுவது பெரிய சோகம் தான்.

மிஷ்கினுக்கு பாராட்டு விழாவாக, இன்று சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. எழுத்துலகிலிருந்தும், 'ப்ளாகர்களும், திரைப்படத் துறையை சார்ந்தவர்களும், படத்தை அலசி ஆராய்ந்து அருமையாய் பேசினார்கள்.

மிஷ்கின் கொஞ்சம் அதிகப்படியான கோபத்துடன் பேசினார். "படத்துல லாஜிக் இல்ல, மேஜிக் இல்லன்னெல்லாம் விமர்சனம் பண்ணாதீங்கய்யா. இவ்ளோ மாசம் கஷ்டப்பட்டு யோசிச்சு யோசிச்சு படம் எடுக்கறோம், உங்களுக்கு (விமர்சகர்களுக்கு) தோணர லாஜிக் ஓட்டையெல்லாம் யோசிக்கமாயா எடுப்போம். நீங்க மட்டும்தான் அறிவாளியா எங்களுக்கு அறிவில்லையா" என்ற ரீதியில் போனது பேச்சு.
அவரின் வேதனை, படத்தை பார்ப்வர்கள், நெகடிவ் பப்ளிசிட்டி கொடுத்து ஓரளவுக்கு வரும் ரசிகர்களையும் வராமல் செய்துவிடும் விபரீதம் பற்றியது.


ஆனா, மிஷ்கின் சார், 150 ரூபாய் கொடுத்து சரக்கை வாங்கரவன், அவன் கருத்தை (நல்ல கருத்தோ, முட்டாள் தனமான கருத்தோ), சொல்றதுக்கு அவனுக்கு முழு உரிமை இருக்கு.  அவனப் போயி நீங்க, லாஜிக் கேக்காத, மசாலா கேக்காதன்னு சொன்னா எப்படி?

ஒரு இராம நாராயணன் படத்துக்கு போறவன், பாம்பு டைப் அடிக்கரதையும், முயலு முக்காப்லா பாடரதையும் பாத்துட்டு, லாஜிக் எங்கன்னு கேக்க மாட்டான். ஏன்னா, இராம நாராயணனுக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு, அதற்குண்டான எதிர்பார்ப்புடன் போரவன், எதிர் கேள்வி கேக்க மாட்டான். அவனுக்கு தேவையானது கொடுத்துட்டா, கொடுத்த காசுக்கு திருப்தி பட்டுட்டு போயிருவான்.

உங்க படத்துக்கு வரவங்க லாஜிக் ஓட்டை இருந்தாலோ, படத்தில் காட்சிகள் புரியலன்னாலோ சொல்லத்தான் சொல்லுவான்.

உங்க கதையின் கரு, "14 பேரை ஈஸியா சுட்டுக் கொன்னவனுக்கு,  3 பேரை காப்பாத்த முடியாம போயிருச்சே"ன்னு இன்னிக்கு அழகா சொன்னீங்க.

கரு அப்படி இருக்கும்போது, முதல் பத்து நிமிஷம், நீங்க அம்மணமாயி, ஒடம்புல பாதியை கத்தியால் கிழிச்சு தொறந்து, பார்ட் எல்லாம் வெளியில எடுத்து, திரும்ப நூல் போட்டு தச்சு முடிச்சதும், நீங்க பெரிய ஏர் பில்லோ வச்சுக்கிட்டு, ஓடர ரயிலில் இருந்து குதிக்கரதை எப்படி சார் லாஜிக்கல்லா ஏத்துக்கச் சொல்றீங்க?
குண்டடி பட்டா, சின்ன ப்ளேடால கீரிட்டு, ப்ராண்டியை மேல ஊத்தி ஒரு பேண்ட்-எய்ட் போட்டுக்கிட்டு தப்பிச்சு ஓடியிருந்தீங்கன்னா, எவன் உங்கள கேள்வி கேட்டிருப்பான்?

தேவையில்லாத அம்மண காட்சியும், வயிறு கிழிக்கும் காட்சியும் கொடுத்துட்டு, அடுத்த காட்சியிலேயே ஓடத் துவங்குவதால், கொஞ்ச நேரத்துக்கு பேந்த பேந்த முழிச்சுக்கிட்டு, படத்துடன் ஒட்ட முடியாமல் தவித்த தவிப்பு எங்களுக்குத்தான் தெரியும்.

இருந்தும், சுதாரித்துக்கொண்டு, மிஷ்கின் செஞ்சா சரியாத்தான் இருக்கும், கடைசியில் ஏதாவது செஞ்சா இதுக்கொரு விளக்கம் கொடுப்பாருன்னு சமாதானப் படுத்திக்கிட்டு மீதிப் படத்தை பார்த்தேன். இந்த ஒரு விஷயத்தைத் தவிர மற்றபடி எனக்கு எதுவும் குறையாத் தெரியவில்லை. அத்தனையும் நிறையே.

இன்றைய நிகழ்ச்சியில் இயக்குநன் ராம், அருமையாய் ஒரு விளக்கம் சொன்னார். ஓநாய் ஏன் ஆட்டுக்குட்டியை திரும்ப தன்னை பார்க்க வருமாறு சொல்கிறது என்பதை படத்தில் விளக்கவேயில்லை என்று ஒரு குற்றச்சாட்டாம். அதற்கு அவர், எல்லாத்தையும் ஏன் வெளக்கணும்னு எதிர்பாக்கறீங்க? நீங்களே அதற்கான ஒரு காரணத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். படம் என்பது, இயக்குநர் பாதி, பார்வையாளன் மீதி, என்று அழகாய்ச் சொன்னாரு.

எல்லாத்துக்கும் வெளக்கம் சொல்றது, டிஸ்கவரி சானல் டாக்குமெண்ட்ரியா படங்கள்?

படத்தில் இருக்கும் குறியீடுகள் பற்றி சிலர் பேசினர். எப்படித்தான் இப்படி யோசிச்சு சில காட்சிகளுக்கு இப்படி அர்த்தங்கள் கண்டுபிடிக்கறாங்களோ. சூப்பர்.

ஆட்டுக்குட்டி ஓநாயை முதுகில் சுமப்பது, சிலுவையை சுமப்பது போல் உருவகப் படுத்தப்பட்ட காட்சியாம். மிஷ்கின் சொன்னது.

கார்த்தி என்ற குட்டிப் (கண் தெரியாத) பெண், பாரதியிடம் (திருநங்கை), ஒரு  கதை சொல்லும்படி கேட்பார். கதை சொல்வதற்க்குள், குண்டடிபட்டு இறந்து போனார். இதன் குறியீடாக ஒரு எழுத்தாளர் சொன்னது, திருநங்கைகளின் சோகக்கதை யாருக்கும் தெரியாது. இதிலும், கதை சொல்வதர்க்குள், அவரின் உயிர் போய்விடுகிறது என்று சொன்னார். ஜூப்பர் அனாலஸிஸ்.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பாக்காதவங்க, தீயேட்டரில் சென்று பார்த்து ரசியுங்கள். மிஷ்கினுக்காக இல்லாவிட்டாலும், இளையராஜாவுக்காகவும், ஒரு புதிய முயற்சிக்காகவும், நல்ல படைப்புக்காகவும், நன்றாய் பார்க்கலாம்.
பாத்துட்டு, லாஜிக்குல ஓட்டை ஒட்டடை எல்லாம் சொல்லுங்க. ஆனா, நல்ல விஷயங்களை எல்லாம் சொல்லிட்டு, ஓட்டையை சொல்லுங்க.

நன்றீஸ்.

இந்த நிகழ்வு பற்றி, நோட்டீஸ் ஒட்டிய லக்கிக்கு நன்றி. க்ளாட் டு மீட் யூ லக்கி, & இயக்குநர் ராம். ஹாப்பி.

140 charactersல், பல மனிதர்களின் உழைப்பில் மண்ணை அள்ளிப் போடாதீர்கள். Constructive Criticism is most welcome. OR better yet, write your heart out,  a month after the release. அவங்க போட்ட பணத்தையாவது எடுக்கட்டும்.

ஆனா, அது சரியா தப்பா? தான் பட்ட துன்பம் மத்தவங்க படக்கூடாதுன்னும், தான் பட்ட இன்பம் மத்தவங்களுக்கும் கிட்டணும் என்ற உன்னத குணம் அல்லவா நம்மளது? அது நியாயமானதும் கூடத் தானே?

பல மில்லியன் டாலர் ஆராய்ச்சியில் உருவாக்கப்படும் படைப்புகளையே, ஒரு குட்டி FaceBook Twitter Statusல், ஏத்தி எறக்கறவாங்களாச்சே நாம? அதைச் செய்யாதீங்கன்னா எப்படி?

எனிவே, மிஷ்கின், Thanks for a great movie watching experience, once again.

-சர்வேசன்







Sunday, May 26, 2013

RTI filed - trying to understand why Roads get higher and higher



APPLICATION UNDER THE RIGHT TO INFORMATION ACT 2005


18473
To,
The Public Information Officer
Pallavapuram municipality
Chrompet
Chennai 44

Subject: Information required under the Right to Information Act 2005

Hello,
Kindly provide me with the following information requested under the purview of the Right to Information Act, 2005.
Regarding: Relaying roads without scraping off old road causing neighborhoods to sink underground 

Particulars of information required: As per list mentioned below
1) When was the last time new road was laid at xxx nagar, xxx, Chennai 64.
2) Was all contractual terms followed by the contractor when the road was laid?
3) How much additional height did the road gain after the new road was laid?
4) Was the road suppose to gain height as per the contractual term or should it have maintained the same height?
5) Whose responsibility is it to ensure the old road is scraped off before laying new roads?
6) When is xxx nagar, xxx (main road and cross streets) scheduled for the next relaying of the road?
7) Who has the authority to ensure and include in contract terms that the old road must be scraped off before laying new road to ensure the neighborhood houses do not submerge under road level causing huge pain during rainy seasons to the common people?
8) Will the next road make the street higher than what it is today? if yes, by how many inches?
9) Does municipality understand that it is a big design mistake they are doing by increasing the road height few inches everytime road is laid?
10) Is there any plan being discussed by the officers and leaders, to maintain road level at the same height during new road implementations?

Period pertaining to information: 2013
Find the application fee for the request attached with this application (Indian Postal Order No. ___________dated __________ is enclosed). If you feel that above requested information does not pertain to your department then please follow the provisions of Section 6(3) of the RTI Act, 2005/Also as per the provisions of the RTI Act, 2005 please provide the details (Name and Designation) of the first appellate authority w.r.t  your department with the reply to the above request., where I may if required file my first appeal.

Kindly provide me with the information at the address/email id mentioned with the application. I request you to ensure that the information is provided before the expiry of the 30 day period after you have received the application.

I sincerely thank your department for making efforts to relay roads and attempting to provide comfortable living for our residents. But, height of roads increasing every time is a big concern and will make our neighborhood inhabitable in a few years.

Regards,


Sunday, May 19, 2013

Point Returnல் ஒரு நாள்

GoodNewsIndia.comன், DV ஶ்ரீதரன், துவங்கிய முயற்சி PointReturn. மதுராந்தகத்திலிருந்து பத்து கிலோமீட்டரில், 17 ஏக்கர்,  நிலப்பரப்பை,  பசுமைப் படுத்தும் முயற்சி இது.
எதுவும் விளையாமல் வீணாய் விடப்பட்ட வரண்ட நிலத்தில், மரங்களும்,  செடிகளும், கொடிகளும் வளர்த்து, நீர்வளத்தையும் உருவாக்கி, ஒரு self-sustainable environmentஐ உருவாக்கும் ஆராய்ச்சி. 

இவரின் இந்த முயற்சியில், மேலும் சில தன்னார்வலர்கள் சேர்ந்து தங்களது உழைப்பைச் செலுத்தி வருகிறார்கள்.
இதில் முக்கியமானவர்களைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.

பல வருடங்களாய் GoodNewsIndia.com வாசித்ததில், DV ஶ்ரீதரன் இந்த இடம் வாங்கியதிலிருந்து, வேலி கட்டியது, குளம் வெட்டியது, தண்ணீருக்காக காற்றாலை அமைத்தது, தங்குவதர்க்காக குடிசை அமைத்தது, பயோ டீசலுக்காக பூங்கை நட்டது, 'நவீன' டாய்லெட் கட்டியது,  சாலைக்காக நிலம் வாங்கியது, கற்பகம், ஶ்ரீராம், சித்தார்த்தின் வரவு, அவர்கள் கட்டிய சின்ன குடிசை, வளர்க்கும் பூனை, நாய், நெல் அருவடை, பூசனி வளர்த்தது, என அனைத்து விஷயங்களும் அவ்வப்போது படித்து தெரிந்து கொண்டு வந்துள்ளேன்.

ஒவ்வொரு விடுமுறையின் போதும், PointReturnஐ சென்று நேரில் பார்க்கவேண்டும் என்று தோன்றும். ஆனால், அதற்கு நேரம் அமையாமல் இருந்து வந்தது. சென்ற வாரத்தில்தான் நேரம் கிட்டியது. 

அடிக்கும் சுளீர் வெயிலில், நகர சுகத்தை புறம் தள்ளி, இயற்கைக்கு தங்களால் ஆனதைச் செய்யும், இந்த தன்னார்வலர்களை எண்ணி வியப்பு தான் வருகிறது. நினைத்தால், சில பல லட்சங்கள் சுலபமாய் மாத சம்பளமும், சுகபோக வாழ்க்கையும் நகரத்தில் கிட்டும் இவர்களுக்கு. படித்த படிப்பு அப்படி. அதை புறம்தள்ளி, இந்த பொட்டல் வெளியில், குடிசை அமைத்து, விவசாயிகளாய் மாறியதை எண்ணி பெரும் வியப்பு வருகிறது.
அவர்களைப் பொறுத்தவரை, இதை ஒரு service என்றெல்லாம் எண்ணாமல், தங்களுக்கு பிடித்த வாழ்க்கைமுறையை பிடித்தபடி சிம்ப்பிளாய் வாழ்கிறோம், அதைத் தவிர இதில் பெரிதாய் ஒன்றுமில்லை என்கிறார்கள்.

வாழ்க்கைக்கு எது தேவை, எது தேவை இல்லை, எது சந்தோஷம், எது மன நிறைவு,  எது ஆசை, எது பேராசை, என்றெல்லாம் தெளிவாய் புரியாமல், எதையோ தேடி வரும்  நமக்கு, இவர்களின், மன ஓட்டமும் வாழ்க்கையின் அணுகுமுறையும் புரியாத புதிர்தான்.

நம் சுகபோகங்களை கெட்டியாய் பிடித்துக் கொண்டாலும், நம்மால் இயன்ற சின்ன சின்ன விஷயங்களை, சுயநலம் இல்லாமல் செய்தல் நலம் பயக்கும்.

நீர் தட்டுப்பாடு, மின்சாரம் தட்டுப்பாடு, என பல தட்டுப்பாடுகள் நிலவும் ஊரில், இயற்கை வளத்தை சீரழிக்காமல் காப்பதே ஒரு பெரிய சேவைதான்.
உங்கள் தெருக்களில், மரங்களை அழிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். மரம் இல்லாத தெருக்களில் மரங்கள் வையுங்கள்.
உணவு, நீர், வீணடிக்காதீர்கள்.

மரம், செடி, கொடிகள் மெத்தப் பிடித்தவர்கள் சிலர் கூட்டாய் சேர்ந்து, சில பல ஏக்கர்களை வாங்கி, பசுமைப் படுத்தும் முயற்சியில் ஈடுபடுங்கள்.

PointReturnலிருந்து சில பல படங்கள், உங்கள் பார்வைக்கு.


பொட்டல் காட்டில், பசுமை தெரியத் துவங்கியுள்ளது.


இல்லம்.

அப்பு.


வெயில், அதீத வெயில்

விருந்தினர் விடுதி

சோலார் தகடு


மதிய உணவு (அரிசி, காய்கறிகள் அங்கேயே விளைந்தது)



காற்றாலை, நீர் இரைக்க. ஆரோவில் தயாரிப்பு.

கற்பகம், ஶ்ரீராம்

குடிலின் மேற்புரம்

இன்றைய மகசூல்.





 நண்பர் ஓசை செல்லா, இதே மாதிரி ஒரு முயற்சியை வரகம்பாடியில் செய்து வருகிறார்.

பல கோடி பேர், நில வளத்தையும் நீர் வளத்தையும் சீரழித்தாலும், சில ஆயிரம் பேர் இந்த மாதிரி பசுமை முயற்சிகள் செய்து, பேலன்ஸை காக்கிறார்கள்.
இவர்களைப் போன்றோரின் முயற்சி வாழ்க வளர்க. இவர்களைப் பார்த்து, மற்றவர்களுக்கும் தத்துனூண்டாவது, ஆர்வம் பீரிடட்டும். :)

DV ஶ்ரீதரன் ஒரு கட்டுரையில், தான் கடந்து செல்லும் பாதையில் ஒரு மரத்தை பார்த்தால், ஒரு சில நொடிகள் நின்று அதன் இருப்பை உள்வாங்கி, அதன் பிரமாண்டத்தை ரசித்துவிட்டுத்தான் நகர்வேன் என்று சொன்னது என் உள்மனதில் பதிந்து விட்டது. அதனால் தானோ என்னவோ, எனக்கும் மரங்களின் மேல் ஒரு 'இது' வந்து விட்டது.

எங்கள் தெருவில் வைத்த ஒரு 'Copper Pod''ன் படம் இங்கே. மரம் நடுங்கள். அருமையான அனுபவம் அது. உங்களுக்குப் பின்னும், உங்களின் இருப்பை நிலை நிறுத்தும், பலப் பல வருடங்களுக்கு.



நன்றீஸ்.



Saturday, May 04, 2013

சூது கவ்வும் - திரைப் பார்வை


விஜய் சேதுபதி கலக்கறார். ஐம்பது ப‌டங்களுக்கு மேல் நடித்த மாதிரி ஒரு அசால்ட்டு நடிப்பு. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும், பிட்சான்னு அருமையான வாய்ப்புகள் அவருக்கு. இப்ப சூது கவ்வும். கேரக்டருக்கு ஏத்த மாதிரி அமக்களமா மாறிடராரு.
கொஞ்சம் 'மெண்ட்டலான' கதாபாத்திரம். அட்டகாசமாய் பொறுந்துகிறது இவருக்கு.
'க்ளோஸ்' என்று முடிக்கும் பாங்கும், மற்ற உடைந்த ஆங்கில டயலாக்குகளும், கிட்நாப்புக்கு 5 கமாண்ட்மெண்ட்ஸ் எழுதி வைத்து, அதை விளக்கும் காட்சிகளும் ஹில்லேரியஸ். கடத்தப்பட்டவனின் தந்தையிடம், "நாளைக்கு சண்டே லீவு, நாங்க வேலை செய்ய மாட்டோம். திங்கள் கிழமை வாங்க" என்று சீரியஸாய் அடித்து தூள் கிளப்பும் இடங்களெல்லாம் ஹாஸ்யம்.

விஜய் சேதுபதி, தன் கற்பனைக் காதலியுடனும், மேலும் மூன்று சென்னை இளைஞர்களுடனும் சேர்ந்து, மற்றவர்களை கிட்நாப் செய்வதே கரு. மூவரில் ஒருவர் நயன் தாரவுக்கு கோயில் கட்டியவர், மற்றவர் வேலையில்லா வெட்டி, இன்னொருவர் ஐ.டி ஆசாமி. கற்பனைக் காதலி, விஜய் கண்ணுக்கு மட்டுமே தெரிவதால், சுவாரஸ்யத்துக்கு குறைவேயில்லாமல் காட்சிகள் பல.

விஜ‌ய் சேதுப‌திக்கு அடுத்த‌ப‌டியாய் க‌ல‌க்குவ‌து, விஜய் டிவி புகழ் "அல்
கேட்ஸ்". காலை அலார‌ம் வைத்து எழுந்து, விபூதியெல்லாம் பூசி, ப‌வ்ய‌மாய் சிப்ஸ் ச‌ர‌க்கு பாட்டில்க‌ளை எடுத்து வைத்துக் கொண்டு, ஏன் தான் வேலைக்கு செல்வ‌தில்லை என்று வியாக்கான‌ம் செய்யும் பாத்திர‌த்தில் ப‌ட‌ம் முழுக்க‌ ரவுண்டு க‌ட்டி அடிக்கிறார். போலீஸிடம் இருட்ட‌டி வாங்கும் காட்சி சிரிப்பு வெடி.

இவ‌ர்க‌ள் இருவ‌ருக்கும் அடுத்த‌தாக‌ ப‌ட‌த்தில் வியாபித்திருப்ப‌து பின்ன‌ணி இசை. அம‌க்க‌ள‌ப் ப‌டுத்தியிருக்கிறார் இசை அமைப்பாள‌ர் ச‌ந்தோஷ் நாராயண‌ன்.
வித்யாச‌மான‌ இசைக் கோர்வை. டாராண்ட்டினோ ப‌ட‌ங்க‌ளில் வ‌ருவ‌தைப் போல் ஒரு புதுமை. ஹாட்ஸ் ஆஃப்! பாட‌ல்க‌ள் பெரிதாய் இல்லை. கானா பாட‌ல் தாள‌ம் போட‌ வைத்த‌து.

இவ‌ர்க‌ள் அனைவ‌ரையும் விட‌ மேலே நிற்ப‌வ‌ர் திரைக்கதை, இயக்கம் செய்த‌ ந‌ள‌ன் குமார‌ஸ்வாமிதான். சும்மா ந‌ம்ம‌ளும் ப‌ட‌ம் எடுத்தோம்னு இல்லாம‌, ரொம்ப‌வே வித்யாச‌மான‌ ஒரு அனுப‌வ‌த்தை ப‌ட‌ய‌லாக்கியிருக்கிறார். குறிப்பாய் வ‌ச‌ன‌ங்க‌ள். நெக்குலான‌ ட‌ய‌லாக்குக‌ள் ப‌ட‌ம் முழுக்க‌, ந‌ம்மை சிரிக்க‌ வைத்துக் கொண்டே இருக்கிற‌து.
விஜ‌ய்க்கு ம‌ட்டுமே தெரியும் ஹீரோயின் கான்செப்ட் சூப்ப‌ர். விஜ‌ய் சேதுப‌தியை 'மாமா' என்று அழைத்துக் கொண்டு 'ஓவ‌ர்' மேக்க‌ப்புட‌ன் ஹீரோயின் உட‌னிருப்ப‌து நெருடிய‌போது, அவ‌ர் விஜ‌ய்யின் க‌ற்ப‌னை என்று தெரிந்த‌போது, 'வாவ்' என்று தோன்றிய‌து. ப்ரில்லிய‌ண்ட் கான்செப்ட். அதுவும் அவ‌ர்க‌ள் இருவ‌ருக்கும் ந‌ட‌க்கும் ச‌ம்பாஷ‌னைக‌ள் அட்ட‌காச‌ம்.
லைட்டிங்க் கேம‌ரா ப‌ட‌த்துக்கு த‌குந்த‌ மூட் கொடுத்திருந்த‌து.

எந்த‌ இட‌த்திலும் சோடை போகாம‌ல், நொடிக்கு நொடி சிரிக்க‌ வைத்து, விர்ர்ரென‌ ஒரு ப‌ர‌வ‌ச‌ அனுப‌வ‌த்தை கொடுத்த‌து சூது க‌வ்வும். முதல் கட்ட கடத்தல்கள் அட்டகாசம். "you want to talk to my folks?" என சொல்லும் வெள்ளையரை, "இவன எறக்கி விடு" என்று விட்டுச் செல்லும் இடங்களெல்லாம் லாஃபிங் ரயட்.
இர‌ண்டாம் பாக‌த்தில் ச‌ற்று இழுத்த‌ மாதிரி இருந்தாலும்,பின்னால் சுட்டுக் கொள்ளும் சீரியஸ் போலீசும், அர‌சிய‌ல் வாதியும், அவ‌ரின் ம‌க‌னும், ர‌வுடி டாக்ட‌ரும், ஏனைய‌ ப‌ல‌ காரெக்ட‌ர்க‌ளும் செம‌யாய் கை கொடுத்து, ந‌ம்மை குதூக‌ல‌ப் ப‌டுத்துகிறார்க‌ள்.

ஜாலியாய் இர‌ண்டு ம‌ணி நேர‌ம் செல‌வு செய்ய‌, இன்றே பார்க்க‌லாம், சூது க‌வ்வும்.
குட் மேக்கிங்!

சூது வெல்லும்!





 

Saturday, March 23, 2013

பரதேசி


அப்படியும் சொல்ல முடியாமல், இப்படியும் சொல்ல முடியாமல், நன்றாய் முடிக்கப்பட்ட படம்.

பிதாமககனுக்குப் பிறகு, நம் பொறுமையை மெல்லமாய் சோதிக்க ஆரம்பித்திருந்தார் பாலா.
பரதேசியின் போஸ்டர், ட்ரெயிலர் எல்லாம் பார்த்ததும், விஷுவலாய் கண்டிப்பாய் நன்றாயிருக்கும், என்ற தோன்றலால், தியேட்டருக்கு படையெடுத்திருந்தேன்.

பரதேசிகளாகிய நம்மின் பாட்டன் முப்பாட்டனின் கதை. ஏழை பாழைகளை, கங்காணிகள், வேலை வாங்கித் தாரேன்னு அசலூருக்கு கூட்டிக் கொண்டு போய், கொத்தடிமைகளாக்கிய கதை. தேயிலை தோட்டங்களில், ஆங்கிலத் தொரைகளின் அடிமைகளாக வேலை செய்ய, கூட்டம் கூட்டமாய், கிராமத்து மக்கள், கொத்து கொத்தாய் தங்கள் வாழ்க்கையை இழந்த சோகம்.
அதிலொருவன், நம் ஹீரோ. ஒட்டுப் பொறுக்கி.  அதர்வா (முரளியின் மகன்). நல்ல உழைப்பை கொட்டி, பிசிராமல் நடித்திருக்கிறார்.
தண்டோரா போடுவது தொழில். அதைத் தவிர உப தொழில் கவுரவப் பிச்சை. கிண்டலும் கேலியுமாய் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று எகத்தாளத்துடன், 'இன்னுமா உலை வெக்கல'ன்னு கேட்டுக்கிட்டே, ஒவ்வொரு வீட்டிலும் கிட்டும் கைப்பிடி அரிசியை வாங்கிச் செல்லும் இடம் அழகாய் இருந்தது.
கிட்டத்தட்ட ப்ளாக்&வயிட் டோனில், மொத்த படமும்.


அழுக்குச் சட்டையும், குடிசைகளும், கருத்த தோலும், பாட்டிகளின் ரசனையான பேச்சும், நம்மை அந்த காலத்துக்கு மெல்ல இட்டுச் செல்வது போன்ற படமாக்கம்.
காதலி இல்லாமல் எப்படி? பயல் என்னதான் அப்பாவியானாலும், வழக்கமான டூயட் எல்லாம் பாடி, திருமணத்துக்கு முன் கசமுசா செய்து, சந்தோஷமாய் பொழுதைக் கழிக்கிறார்கள் கிராமத்தில்.
காதலியாய் நடித்தவர், கொஞ்சம் ஓவர்-டோஸ் ஆக்டிங்க் செய்தது போல் சில இடங்களில் தோன்றினாலும், அதர்வாவின் நடிப்பு, பேலன்ஸ் செய்து விடுகிறது.

அனைவரும் சந்தோஷமாய், பணியாரமும், வயிரு முட்ட சோறும், மூன்று நாலு பெண்டாட்டிகளும் வைத்து சுகவாழ்க்கை வாழும் கிராமத்து மக்கள், பஞ்சம் பொழைக்க, 46 நாட்கள் நடந்து ஏதோ ஒரு தேயிலை  தோட்டத்துக்கு வேலைக்குப் போக வேண்டிய நிர்பந்தம் தான் புலப்படலை.
அதற்கான காட்சிகள் மனதில் பதிக்காததால், "செந்நீர் தானா.." பாடல் பெரிதாய் ஒரு பாதிப்பையும் நம்மில் ஏற்படுத்தலை.

முதல் பாதி, பெரிதாய் வசீகரக்கவும் இல்லாமல், சங்கடப் படவும் வைக்காமல், இனிதே நடந்து முடிகிறது.

இடைவேளை போடும் காட்சியில், கீழே செத்து வீழ்ந்தவனின் கை திரையில் பெரிதாய் காட்டப்படும். பிரமிப்பூட்டிய  நொடிகள் அவை. ஆனால், அதற்கு முந்தைய காட்சிகளில் வலு இல்லாததால், இந்தக் காட்சி ஏற்படுத்த வேண்டிய வீரியம், மனதில் பாயாமல் சொத்தையாய் வீணாய்ப் போனது மிகப் பெரிய சோகம்.

இரண்டாம் பாகம், கொத்தடிமைகளாய், தேயிலைத் தோட்டத்தில் தேய்ந்து போகும் காட்சிகள், முழுக்கக் கொண்டது. ஒவ்வொரு வருடமும், கணக்கு சரிபார்த்து, உழைப்புக்குக் கொடுக்க வேண்டிய  கூலியை விட, அவர்களுக்கான மருந்து செலவும், வீட்டுச் செலவும்,அதிகமாய் இருப்பதால், இன்னும் மூணு வருஷம் வேலை செய்ய வேண்டும் என்று, அடிமைத் தளை அகற்றப்படாமல் தொடர்கதையாய் போகிறது.
சங்கு ஊதியதும், அடிமைகள் எழுந்து தேயிலைத் தோட்டத்துக்கு வருவதும், வேலை செய்வதும், அடி வாங்குவதும், இரவு வருவதும், மூன்று நான்கு முறை காட்டியதால், பிற்பாதியில் வெரைட்டி ரொம்பவே குறைவாய் இருந்தது.

அடிமைகள் வேதனைப் படுகிறார்கள் என்பதை பதிக்க, பெரியதாய் காட்சிகள் இல்லை. காலில் அட்டைப் பூச்சி கடிப்பதும், மரத்தை கோடாளி கொண்டு வெட்டுவதும், நம்மை பெரிதாய் பாதிக்கவில்லை.
இலைகளைப் பறித்து பறித்து, விரல்களில் வலி ஏற்படும், கையில் நடுக்கம் வரும், அப்படி இப்படின்னு நடுங்கும் விரல்களை க்ளோஸ்-அப்பியிருந்தால்,  நமக்கும் வலித்திருக்கும்.


ஏற்றத்தாழ்வு பெரிதாய் இல்லாத நேரத்தில், ஒரு பாதிரியார்/வைத்தியர் வந்து, சூப்பர் குத்துப் பாட்டில், "how மதமாற்றம் works?" என்பதை நசிக்கும்படியாய் ருசிகரமாய் செய்து காண்பிக்கிறார்.

இரண்டாம் ஹீரோயின் அழகு. மகளை இடுப்பில் கட்டிக் கொண்டு, தேயிலை பறிக்கும் காட்சிகளாகட்டும், விட்டுப் போன கணவனை நினத்து கோபப்படும் காட்சிகளாகட்டும், அதர்வாவை அதட்டும் காட்சிகளாகட்டும், அமக்களமாய் நடித்திருக்கிறார்.

வெள்ளைக்காரத் தொரைகள் பெரிய சொதப்பல். ஓவர் ஆக்டிங் செய்திருப்பது போல் இருந்தது. குறிப்பாய், ஆபீஸரின் மனைவிகள்.

கங்காணியாய் நடித்திருப்பவர், அவ்வப்போது, தொரையிடம் அடிவாங்குவதால், இவரின் மேல் பயமோ வெறுப்போ நமக்கு வரவில்லை.

பாடல்களும், பின்னணியும் நன்றாய் இருந்தது. எந்தப் பாடலும் காட்சிக்கு ஒட்டலை, 'ஓர் மிருகம்' பாடலைத் தவிர.

எதை எதிர்பார்த்து, திரையரங்கத்துக்குப் போனேனோ, அது ஏமாற்றவில்லை. ஒளிப்பதிவு அமக்களம். டாப் ஏங்கிளில் தேயிலைத் தோட்டத்தை காட்டும் காட்சி ஆஹா. பச்சைமலை பச்சையாய் இல்லாமல், கொஞ்சம் டல்லா ப்ளாக்&வயிட் மாதிரி தெரிந்தது சங்கடமே. ஆனால், படத்துக்கு அப்படிப்பட்ட டோன் தேவயாய்த் தான் இருந்தது.

பாலா, டைரக்டராய் எங்கும் மிளிர்ந்ததாய் தெரியவில்லை. சற்றே அலுப்பூட்டக் கூடிய காட்சி நகர்வுகள் அதிகமாய்.
ஆனால், அவரின் உழைப்பும், மொத்த டீமின் உழைப்பும்  நன்றாய் தெரிந்தது.
'நச்' என்ற கிளைமாக்ஸில், பாலா நிமிர்ந்து நிற்கிறார்.

மொத்தத்தில், பரதேசி, பாக்கணும்னா பாக்கலாம், பாக்க வேணாம்னா வேணாம்.
அப்படியும் சொல்ல முடியாமல், இப்படியும் சொல்ல முடியாமல், நன்றாய் முடிக்கப்பட்ட படம்.


Saturday, February 09, 2013

கமலின் விஷ்வரூபம் - Kamals Vishwaroopam


விஷ்வரூபம் - இதுவரை எந்த இந்தியப்  படத்திலும் கண்டிராத ஒரு தரம். கமல் என்ற உன்னத கலைஞனின் உழைப்பும், அறிவும், ரசனையும்,திறமையும் ஒவ்வொரு ஃப்ரேமிலும் பளீர் பளீர் என்று தெரிகிறது.

இதை வெளிக்கொணர கமல் பட்ட பாடு சொல்லி மாளாது. இவ்வளவு கடின உழைப்பையும், பணச்செலவையும் செய்துவிட்டு, அந்த படைப்பை வெளியிட முடியாததன் சோகம் பெரியதாய்த் தான் இருந்திருக்கும்.

எல்லா பொது ஜனம் போலவும், எனக்கும், விஷ்வரூபத்தை பார்க்கும் முன்னும்,பார்க்கும் போதும், பார்த்த பின்னும், இந்த படத்துக்கு இவ்வளவு தடங்கல்கள் செய்தது நியாயமா என்ற கேள்விக்கான விடை அறிவது அவசியமாய் இருந்தது.

சினிமா என்ற பொழுதுபோக்கு அம்சமாய் மட்டும் பார்த்தால், எதுவும் தவறாய் தெரியவில்லை. இதைவிட பல படங்கள் இஸ்லாமியர்களை நெகடிவ் வெளிச்சத்தில் காட்டி இருக்கின்றன.
ஆனால், ஏற்கனவே ஒரு தவறான கண்ணோட்டத்தில் பலராலும் பார்க்கப்படும் இஸ்லாமியரை, மேலும் மேலும், தவறாக காட்சிப் பொருளாகி, வெளிச்சத்தில் காட்டுவது, ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் நல்லதல்ல என்பது என் கருத்து.

ஒரு சில பேர் தீவிரவாதி ஆகிட்டான் என்பதால், தாடியும் குல்லாவும் வச்ச எல்லா பயலும் அப்படித்தான் என்ற பொது புத்தியில் இயங்குவதுதான் நம் சமூகம். விரிசல் விட்டிருக்கும் நம்மிடையே இணக்கம் ஏற்பட வைக்கும் படங்கள் எடுக்கலன்னாலும், இந்த மாதிரி நெகடிவிஸம் காட்டி எடுப்பதை வருங்காலங்களில் இயன்றவரை தவிர்க்கலாம்.

அமெரிக்காவில், கருப்பர் இனத்தவர்களையும், மற்ற மைனாரிட்டிகளையும், சதா சர்வ காலமும், படங்களிலும், செய்திகளிலும், கெட்டவர்களாகவே காட்டுவது பல வருடமாய் நடந்து வருகிறது. அமெரிக்க தெருக்களில் தனியாய் நடக்கும்போது, எதிரே ஒரு கருப்பர் வந்தால், கொஞ்சம் கிலியாகத்தான் இருக்கும்.
நம்மை அப்படி மூளைச் சலவை செய்துவிடுகிறது இம்மாதிரி பொறுப்பற்ற ஊடகச் செயல்கள்.

இருக்கரதத்தான  சொல்றோம் என்ற சப்பைக்கட்டு சரியல்ல. இருப்பதை எடுக்க எவ்வளவோ விஷயம் இருக்கே. அரசியல் கேப்மாரித்தனங்களை படமாக எடுக்கும்போது, 'கல்மாடி' என்றோ, 'ராஜா' என்றோ பெயர் போட்டு கதாபாத்திரங்களை உருவாக்க எந்த கலைஞனுக்காவது தைரியம் இருக்கிறதா?

anyway, கமல்,ஒரு கலைஞனாய் செய்ததும் சரி; இஸ்லாமிய அமைப்புகள், தங்கள் சமுதாயத்துக்காக படத்தை எதிர்த்ததும் சரி; அரசு இடைத் தரகு செய்ததும் சரி; நாம் freedom of speechக்காக குரல் கொடுத்ததும் சரி; நாராயண நாராயண!

இனி படத்துக்கு வருவோம்.

பெயர் போடுவதில் இருந்து துவங்குகிறது கமலின் ஆளுமை. அமைதியான புறாக்கள் சடசடக்க, ஆர்பாட்டம் இல்லாமல் பெயர்கள் வந்து போகின்றன.
தியேட்டருக்கு லேட்டாக வந்த கஸ்மாலங்கள் சலசலத்து அவரவர் இருக்கைகளில் அமரவும் பெயர் முடியவும் சரியாய் இருந்தது.
இடையிடையே செல்ஃபோனில் பேசி எரிச்சல் ஊட்டிய கழிசடைகளை விஷ்வரூபம் எடுத்து நசுக்கி போட மனம் ஆசைப்பட்டாலும், பல்லைக் கடித்து படம் பார்க்க வேண்டிய சூழலில், படம் நகர்ந்தது.

கமலின் மனைவியாய் வரும் பூஜா, மிக அருமையான தேர்வு. அழகாக இருக்கிறார். அருமையாய் நடிக்கிறார். அவருக்கு குரல் கொடுத்திருப்பது விருமாண்டி அபிராமி. பொறுத்தம்.

கமல், கதக் கற்றுத் தரும் மாஸ்டராக அறிமுகமாகும் பாடலில், அவர் வெளிக்கொணரும் முக பாவங்கள் க்ளாஸ். பாடல் படமாக்கிய விதமும் மிக ரம்யமாக இருந்தது.  பெண்மை கலந்த குணாதிசியங்களை கமல் வெளிப்படுத்தும் காட்சிகள், அவரின் டயலாக் டெலிவரியெல்லாம் பார்க்கும் போதே, யப்பாடி குடுத்த காசு வசூல் என்று உள்மனம் சொல்லியது.
ஹாஸ்யம் பரவலாய் தெளித்திருப்பதும் அருமை. சில வசனங்கள் வாய் விட்டு சிரிக்க வைத்தது.
குறிப்பாய், "எங்காத்து அழுக்கு டேப்பை வெட்ட உங்காத்து கத்திய கேட்டா தருவியோ நீ?";
"கெட்ட குடியே கெடும்பா"

படம் பார்க்காதவர்கள், இயன்றவரை, கதைக் கருவை தெரிந்துகொள்ளாமல் செல்வது சாலச் சிறந்தது. திரைப்பட அனுபவம் இன்னும் அருமையாய் இருக்கும், எதுவும் தெரியாமல் அப்பாவியாய் சென்று பார்த்தால்.

அப்படி ஆசை இருப்பவர்கள், ப்ளீஸ் க்ளோஸ் த ப்ரவுஸர் :)

கமல் ஒரு இஸ்லாமிய RAW agentஆம். ஆப்கானிஸ்தானில் இயங்கும் ஜிஹாதிக் கூட்டத்தில் கலந்து அவர்களின் ரகசியங்களை அறியச் செல்வாராம்." விஸாம் காஷ்மீரி" என்ற பெயர் கொண்ட அவர் ஒமார் என்னும் ஜிஹாதியை ஆப்கானிஸ்தானில் ஊடுருவி அவர்களை பற்றிய விவரங்களை அமெரிக்க படைகளுக்கு தெரிவித்து அவர்களில் பலர் அழிய காரணமாய் இருப்பவர்.  தப்பிப்பிழைத்த ஒமார் நியூநியார்க் நகரில் நிகழ்த்தப் போகும் அணு ஆயுத தாக்குதலை தடுக்க, விஸாம், 'விஷ்வா'வாக மாறி கதக் பயிலுவிக்கும் மாஸ்டராய் மாறுவேஷத்தில் உலாவுகிறாராம்.
பூஜாவை மணமுடித்து, ஷேகர் கபூர், ஆண்ட்ரியா கோஷ்டியுடன்  சேர்ந்து, துப்புத் துலக்குகிறார்.

ஆப்கானிஸ்தானில் நடக்கும் காட்சிகள் சிரத்தையுடன் எடுக்கப்பட்டுள்ளது.
ஒமாராக நடித்திருக்கும் ராஹுல் போஸ் கச்சிதமாய் இருக்கிறார். ராஹுலின் குட்டிப் பையன் டாக்டராய் ஆக ஆசைப்படுவதும், ராஹுல், நீயும் ஜிஹாதியாக வேண்டும் என்று சொல்வதும்.அதை கண்டு ராஹுலின் மனைவி கலங்குவதும், ஜிஹாதிகளின் குடும்பங்கள் படும் சோகத்தை நயமாய் காட்டுகிறது.

இன்னொரு சிறுவன் ஜிஹாதியாக்கப்படுவதும், மனித வெடிகுண்டாய் செல்ல வேண்டியதற்கு முன், ஒரு ஊஞ்சலில் அமர்ந்து, அங்கிள் தள்ளுங்க என்று ஊஞ்சலை தள்ளச் சொல்வதும் சோகம். அப்பாவியான முக அம்சம் கொண்ட சிறுவர்களை தேர்வு செய்தது சாலப் பொறுத்தம்.

ஆப்கானில் நடக்கும் காட்சிகள், ஜிஹாதிகளின் பயிற்சி, அவர்களின் வாழ்க்கை என்று கொஞ்சம் 'இழுவையாக' நகரும் காட்சிகள் என்றாலும், இடையிடையே சுவாரஸ்யத்தை கூட்டி, ஒரு எதிர்பார்ப்புடனேயே நம்மை இருக்க வைத்ததில் கமல் இயக்குனராய் வெற்றி பெற்றுவிடுகிரார்.

மொத்த படத்தில் ஒரே திருஷ்ட்டி, ஒசாமாவை காட்டும் காட்சி. அதிபயங்கர பின்னணி இசை, தியேட்டரே இடிந்து விடும் அளவுக்கு ஒலிப்பதிவு, தடதடதட வென அதிர, ஒரு பள்ளத்தில் இருந்து, திடீரென பெரிய தாடியுடன் ஒசாமா எழுகிறார். ஏதோ ஏசு கிருஸ்த அவதரித்த மாதிரி லைட்டிங்கில் அவரைக் காட்டியது, 'சப்'பென்று இருந்தது.

தங்கள் கூட்டத்தில் ஒருவர் தவறு செய்துவிட்டதாய் எண்ணி, ஒரு 'நல்லவரை' ஜிஹாதிகள், காலாலேயே மிதி மிதி என்று மிதிப்பதும், அதைத் தொடர்ந்து அவரை தூக்கிலிட ஒரு பெரிய க்ரேனிலிருந்து தூக்குக் கயிறில் தொங்க விடுவதும். அவர், தான் நிரபராதி நிரபராதி என்று அழ, அதைக் கண்ட அவரின் தாயும் அழ, ஓரத்தில் சோகமாய் அமர்ந்திருக்கும் அவரின் தந்தை அழ, மொத்த ஜிஹாதிகளும் ஆர்ப்பரித்து, மிஷின்கண்ணை வானத்தை நோக்கி சுட, அவன் முகத்தில் கறுப்புத் துணியை மூடி, க்ரேனை மேலே இழுப்பதும், உடல் துடிதுடித்து இறப்பதும், இறந்துவிட்டானா என்பதை காலில் நாடி பிடித்து ஊர்ஜீதம் செய்வதும், கமல் வேதனையில் அந்த கூட்டத்தை விட்டு மெல்ல வெளியே நடப்பது, ப்ப்ப்ப்பாஆஆஆ. செம சினிமாட்டிக் எக்ஸ்பீரியன்ஸ் அது.
லாங் ஷாட்டிலும், க்ளோஸ்-அப்பிலும், டக் டக் டக் என மாற்றி காட்டுவதில், சினிமாட்டோ கிராஃபரும், எடிட்டரும், இயக்குனரும் மிளிர்கிறார்கள்.

படம் முழுக்க வரும் ஷங்கர் இஹ்சான் லாயின் இசை, படத்தை இன்னோர் பரிமாணத்துக்கு இட்டுச் செல்கிறது.

படத்தின் மையப் புள்ளி, பெண்மை கலந்த நளினமான விஷ்வா என்ற கதக் ஆசிரியர், தன் சுயரூபத்தை காட்ட விஷ்வரூபம் எடுக்கும் காட்சி.
இந்த காட்சியை பார்த்து,  மயிர்கூச்செரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது.
வில்லர்களிடம் மாட்டிய விஷ்வா, தனக்கு ஒன்றுமே தெரியாது என்று அப்பாவியாய் அழுவதும். அவரை அடி அடி என்று நையப் புடைப்பதும் நடக்கும். விஷ்வரூபம் எடுக்கும் முன் அவர் அராபிக்கில் பிரார்த்தனை செய்துகொண்டே பின்னாலிருப்பவனை எட்டி உதைத்து, கண்ணிமைக்கும் நேரத்தில் சுற்றி இருக்கு பலரை காலி செய்வது. ஹாலிவுட்டுக்கு சவால் விடும் தரம்.

இதற்கு முன் மயிர்கூச்செரிய வைத்த காட்சி, பாட்ஷாவில், 'எனக்கு இன்னோர் பேரும் இருக்கு' என்று தலைவர் சொல்லிய காட்சி.
விஷ்வரூபக் காட்சி, அதைவிட ஒரு படி மேல் சென்று விட்டது.  தூள்.

கண்ணை உறுத்தாத எடிட்டிங்கை குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். அவ்வளவு ஏக்‌ஷனையும், அருமையாய் கோர்த்து, நம்முன் படையலாக்கியிருக்கிறார்கள்.
இந்த ஒரு காட்சிக்காகவே, சத்யம் போன்ற திரையரங்கில், ஆரோ 3D எஃபெக்ட்டுடன், இரண்டாம் முறை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.

அமெரிக்காவிலும், ஆப்கானிஸ்தானிலும் மாறி மாறி பயணித்த முதல் பகுதி, கமலின் மூன்று பரிமாணத்தை மாற்றி மாற்றி காட்டி வெகு சிறப்பாய் பயணித்தது.
பிற்பகுதி, ந்யூயார்க்கில் நடக்கவிருக்கும் தீவிரவாதத்தை ஒடுக்க கமல், ஆண்ட்ரியா,பூஜா, ஷேகர் கபூர், அமெரிக்க FBIயுடன் அங்கும் இங்கும் ஓடுவதாய் அமைகிறது. இதிலும் கூட, இறுதி என்னவென்று ஊகிக்க முடிவதால், சற்று அயற்சி ஏற்படுகிறது. தடால் தடால் என்று இடைச் சொறுகும் காட்சிகள் மூலம், அயற்சி தெரியாமல் செல்கிறது.

அவ்ளோ பெரிய பாம், குட்டி ரூமின் நடுவில் இல்லாமல், பெரிய கூட்டத்தின் நடுவில் வைத்து அதை செயலிழக்க சென்றிருந்தால் நமக்கும் கொஞ்சம் பதட்டம் கூடியிருக்கும். அது இன்னாத்தான் நியூக்ளியர் பாமாக இருந்தாலும், ஸ்லோமோஷன் பள்ளிச் சிறார்கள், அம்மாக்கள், தாத்தாக்கள் என்ற சாமான்யர்கள் அதனால் பாதிக்கப்படுவார்கள் என்பதை மனதில் பதிக்க ஒரு காட்சியும் இல்லாதது ஒரு மைனஸ்.

ஆக மொத்தத்தில், கமலின் விஷ்வரூபம்,
கமல் என்ற இயக்குனரின் கலைத் திறமையின் விஷ்வரூபம்;
கமல் என்ற தயாரிப்பாளருக்கு (மொத்த சொத்தையும் போடுமளவுக்கு) தன் திறமை மேல் இருந்த தைரியத்தின் விஷ்வரூபம்;

A great Cinematic Experience. A job well done, Kamal ji.

-Surveysan
-சர்வேசன்


Friday, February 01, 2013

கடல் - திரைப்பார்வை


மணிரத்தினம் கடைசியாய் எடுத்த நல்ல படம் அலைபாயுதே என்று நினைவு. அப்பாலிக்கா வந்த கன்னத்தில் முத்தமிட்டால் நன்றாய் இருந்த மாதிரி தெரிந்தாலும், ஒரு குறிப்பிட்ட அறிவுஜீவித்தனத்தின் ஓவர் டோஸ், சற்றே சலிப்பை தந்திருந்தது.
நமத்துத் தெரிந்த மணிரத்தினம், தமிழ்நாட்டுக்காக படம் எடுப்பதை விட்டுவிட்டு இந்தியாவுக்காக எடுக்க ஆரம்பித்ததிலிருந்து, பிசுபிசுக்க ஆரம்பித்து விட்டார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் கடல் பாடல்கள், தினமும் FMல் கேட்டு கேட்டு ஒரு கிரக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. "அடியேஏஏஏஏ" பாடல், ஆரம்பத்தில் நாராசமாய் காதில் விழுந்தது. ஆனால், கேட்க கேட்க, ஒரு தேசிய கீதம் கணக்கா "அடியேஏஏஏ..."ன்னு இழுக்க வைத்தது. 

பாடல்களை பெரிய திரையில், நல்ல டெசிபலில் கேட்டால் ரம்யமாய் இருக்கும் என்ற எண்ணத்தில் கடல் படத்தை தியேட்டரில் பார்க்கலாம் என்று முடிவு செய்திருந்தேன். இந்தியாவை விட்டு தமிழகத்துக்கு வந்திருக்கும் மணிரத்தினத்தின் பழைய சாயலைத் தரும் படமாக இருக்க வாய்ப்பிருப்பதைப் போன்ற தலைப்பும், நடிகர்கள் தேர்வும் இருந்ததால், தியேட்டர் ஆசை ஆழமாய் எழுந்தது. 

விஸ்வரூபம், அட்டூழியத்துக்கும் அராஜகத்துக்கும் நடுவில் மாட்டி சின்னாபின்னப் படுவதால், கடல் தியேட்டர்ல பார்ப்போம் என்று, சடால் என்று முடிவு செய்து, தீயேட்டருக்குச் சென்றோம்.

சென்னையில் மணிரத்தினத்தின் படம் கடைசியாய் பார்த்தது தளபதி என்று நினைவு. திருவிழாக் கோலம் பூண்டிருந்த தியேட்டரும், ரசிகர்களின் ஆட்டமும் பாட்டமும் இன்னும் பசுமையாய் நினைவில் இருக்கிறது. 
கடல், ஆர்பரிக்காமல், அமைதியாய் திரையில் அரங்கேறியது. 

அரவிந்த்சாமி இன்னொரு ரவுண்டு வருவார் என்று ஊர்ஜீதம் செய்தது. அர்ஜூனும் நன்றாய் நடித்திருந்தார். 
புதுமுக கவுதமும் தனக்கு எதிர்காலம் உண்டென்று காட்டுகிறார்.
ராதாவின் மகள், கொஞ்சம் 'வித்யாசமாய்' ப்ளாஸ்டிக் கணக்காக இருக்கிறார். ஒரு sophisticated லுக்குடன். பாத்திரத்துக்கு ஏற்ற ஒரு அப்பாவி நடிப்பு. நன்றாய் செய்திருக்கிறார்.

படத்தில் சொதப்பியவர்கள் ஜெயமோகனும், மணிரத்னமும் மட்டுமே. 
சொத்தலாய் ஒரு கதை. 
அரவிந்த்சாமிக்கும் அர்ஜூனுக்கும் சின்ன வயசு லடாயாம்; 
அர்ஜூன் பின்னாளில் அரவிந்த்சாமியை பழி வாங்குவாராம்;
அதற்கிடையில் கவுதமும் ராதா ஜூனியரும்.

படம் ஆரம்பித்த பத்து நிமிடம் நடக்கும் அர்விந்த்சாமி அர்ஜூன் காட்சிகள், அமெச்சூர்தனம். நாயகன் எடுத்த மணிரத்னமா இப்படியெல்லாம் சப்பையாக காட்சிகளை அடுக்குகிறார் என்று ஒரு அங்கலாய்ப்பு. 
அயர்ச்சியில் ஸ்ஸ்ஸ்ஸ் என்று பெருமூச் வரும்போதெல்லாம், ரஹ்மானின் தாளமும் பாடலும், சற்றே நிமிர வைக்கிறது.

வழக்கமான மணிரத்தினம் படத்தில் பாடல் காட்சிகள் அருமையாய் படமாக்கப்படும். இதில் அதுவும் பெரிய ஈர்ப்பை எடுத்தவில்லை. நடன அமைப்புகளெல்லாம் மனதில் பதியவில்லை.

ரஹ்மானை அடுத்து, ராஜீவ் மேனன் மின்னுகிறார். நல்ல கலர் டோனில், நல்ல கேமரா ஆங்கிளில், ஆரம்ப காட்சிகள் நன்றாய் இருந்தன. கடைசி கடல் காட்சியும் அருமையாய் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால், கதை பிசு பிசு பிசு என்றிருந்ததால், எந்தக் காட்சியும், எம்புட்டு நேர்த்தியாக எடுக்கப்பட்டு, எவ்வளவு ஆத்மார்த்தமாக நடித்திருந்தாலும், மனதில் ஒட்டவே இல்லை.

ஒரே ஒட்டுதல், ஆரம்ப காட்சியில் கவுதமின் தாயின் மரணமும், அதை ஒட்டிய காட்சிகளில், அந்தக் குட்டிச் சிறுவனின் நடிப்பும் அழுகையும் காட்சி அமைப்பும். 

கடல் - சுனாமியாய் வராமல், வற்றிய குட்டையாய் போனது.