recent posts...

Tuesday, July 31, 2007

புஷ் செய்த (ஒரே?) நல்ல காரியம் - ஒஸாமா!

பெர்ஷியன் மொழிப் படங்கள் பல மிகவும் சுவாரஸ்யமானவை. இரானிய இயக்குநர்கள் சிலர் நம்மூர் சத்யஜித்ரேயைப் போல் மிகத் திறமையானவர்கள்.

படத்தில் ரிச்னஸ் அவ்வளவு காணக்கிடைக்காத லோ-பட்ஜெட் படங்களானாலும், பார்ப்பவரை 2 மணி நேரமும் கட்டிப் போடும் ரகத்தைச் சேர்ந்தன இந்தப் படங்கள்.

மஜீத் மஜீதி என்னும் இயக்குநரின் Children of Heaven, இதுவரை பார்க்காதவர்கள், உடனே தேடிப் பிடித்து பார்த்துவிடுங்கள்.

என்னடா இது, எப்பப் பாத்தாலும், துப்பாக்கி, குண்டு, அடிதடின்னு மீடியாக்கள் சித்தரிக்கும் மத்தியக் கிழக்கு நாட்டில் இருந்து இந்த மாதிரி ஒரு கதையா? அதை இவ்வளவு அழகாகவும் எடுத்திருக்கிறார்களா என்று உங்களை வியப்பில் ஆழ்த்தும்.

Baran, The Color of Paradise போன்ற இவரது படங்களும் அருமை ரகம். கண்டிப்பா பார்க்க வேண்டிய படம். (மேலும் பல அருமையான படங்களின் லிஸ்ட் காண இங்கே க்ளிக்கலாம்).

Siddiq Barmak என்ற இயக்குநரின் Osama திரைப்படம் இன்று தான் பார்த்தேன்.
பெர்ஷியன் மொழியில் அமைந்திருந்த இந்தத் திரைப்படம் மஜீதியின் படங்களைப் போலவே, மெல்லிய ஸ்பரிசத்துடன் நகர்ந்து சென்றது.

தலீபான் அரசின் கீழ், ஆப்கானிய மக்கள் பட்ட அவஸ்தையை எடுத்துக் காட்டியிருந்தது படம்.
கணவனை இழந்த பெண்கள், வெளியே சென்று வேலை செய்ய முடியாமல், பசியால் வாடும் அவலம்.

கண்மூடித்தனமான சில மதக் கோட்பாடுகளின் உச்ச கட்ட தீவிரவாதம் காணும்போது, அடி மனதில் பயம் கவ்வியது.

அப்பாடி, எப்படித்தான் இருந்தாங்களோ அந்த ஊர்ல. ஐயோ பாவம். என்ன பாவம் செய்தனை என்ற நம்ம புலம்பல் எல்லாம் கால் தூசுக்கு சமானம், அந்த ஊர் பெண்களின் கஷ்டத்தைப் பார்க்கும்போது.

காபூலில் நடந்த ரஷ்ய எதிர்ப்புப் போரில் கணவனை இழந்த பெண் மருத்துவர், அவருடைய இள வயது பெண், வயதான தாயார், இவர்கள் ஒரு சின்ன ரொட்டிக்காக படும் அவஸ்தையைச் சித்தரித்துத் துவங்குகிறது படம்.

தாலீபான் தீவிரவாதிகளின் மதக் கோட்பாடுகளாய் படத்தில் காட்டுவது,
பெண் ஆண் துணை இல்லாமல் வெளியே செல்லக் கூடாது;
பெண் வேலைக்குச் செல்லக் கூடாது;
கணவன் அருகில் இருக்கும்போது பெண் வாய் திறந்து மற்றவரிடம் பேசக் கூடாது;
கால் விரல்கள் கூட வெளியே தெரியாதவாறு உடை இருக்க வேண்டும்;
etc...

இதைத் தவிர, அவர்களின் காட்டுமிராண்டித்தனமான தண்டனை முறைகள் சிலவும், மேலோட்டமாக எடுத்துக் காட்டப்பட்டது,
தவறு செய்யும் பெண்ணை கல்லால் அடித்துக் கொல்வது;
ரிப்போர்ட்டரை, துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது;
etc...
இவ்வளவும், பொது மக்கள் முன்னிலையில் அரங்கேறும் கொடுமை வேறு.

கணவனை இழந்த அந்த பெண் மருத்துவர், ஒரு வேளை உணவுக்கு பல வகையில் கஷ்டப் பட்டு, கடைசியில், தன் பெண்ணை, ஆணாக வேடம் பூணச் செய்து, ஒரு கடையில் வேலைக்கு அமர்த்துவாள்.
சிறுவனின் பெயர்தான் 'ஒஸாமா'.

ரொம்ப நாள் அதுவும் நீடிக்காது.
தாலிபான், அந்தச் 'சிறுவனை', இழுத்துச் சென்று, தீவிரவாதி ஆக்க ட்ரெயினிங் கொடுப்பார்கள்.
பாதியில் இது சிறுவன் அல்ல, சிறுமி என்று தெரிந்ததும், சிறுமிக்கு தண்டனையாக ஒரு கிழட்டு தாலிபான் தாத்தாவுடன் மனைவியாக அனுப்பி வைத்துவிடுவார்கள்.
தாத்தாவுக்கு ஏற்கனவே நாலைந்து மனைவிமார் இருப்பர்.
'ஒஸாமா' இந்தச் சூழலில் மாட்டி அவதியுறும் காட்ச்சியுடன் படத்தை முடித்துவிடுகிறார்கள்.

என்னடா இது இப்படி எல்லாம் கூட கஷ்டப் படராங்களே இந்த காலத்துல என்று தோன்றியது, படம் முடிந்தவுடன்.

அடிப்படை வசதிகள் இல்லை, புழுதி பறக்கும் சாலைகள், இடிந்து விழக் காத்திருக்கும் வீடுகள், உணவுக்கு காஞ்சு போன ஒரு ரொட்டி, வெளிச்சத்துக்கு ஒரே ஒரு இராந்தல் விளக்கு. மயக்கமே வந்துவிட்டது இதைப் பார்த்து.
இவர்களை விடவும் கஷ்டப்படும் பல ஊர்கள் உலகில் உண்டு என்பதும் நினைவுக்கு வந்தது.

சில கிருக்கர்களால், ஒட்டு மொத்த சமுதாயமும் படும் வேதனை சொல்லி மாளாது.

ஒஸாமா பின் லேடன் செய்த கேடுகெட்ட 911 சம்பவத்தினால் விளைந்த ஒரே நல்ல காரியம், புஷ்ஷின் கையால், தாலிபான் தகர்க்கப்பட்டதுதான்.

1999ல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், கடத்தப்பட்டு, Rupin Katyal என்ற இள வயது பயணி கொல்லப் பட்டதும், இதே தாலிபானின் துணண கொண்டுதான்.

ஈவு இறக்கமற்ற இந்த கும்பல் ஒழிந்தது 911 என்ற தீமையில் விளைந்த நண்மை!

'ஒஸாமா' கெடச்சா பாருங்க!

தீயர்கள் திருந்தட்டும்!

அல்லாஹு அக்பர்!

பி.கு1: ஜன கன மன பாடுங்க. பரிசை வெல்லுங்க.
பி.கு2: தமிழ்நாட்டில் பார்க்க வேண்டிய இடங்கள் இவை

Sunday, July 29, 2007

இவர் தான் சர்வேசன்!

சென்ற வாரம் 'மொ'வாரம்.

மடலில் வந்த 'அனானி' அன்புடன் என்னையும் ஜோதியில் ஐக்கியமாகச் சொன்னார்.
சரி, இவ்ளோ அன்பா கேட்டும் ஒண்ணு போடலன்னா தெய்வ குத்தமாயிடும்ன்னுட்டு, இப்போ சர்வேசனோட போர்ட்ரெய்ட்ட போட்டுட்டு ஒரு பதிவாக்கிட்டேன்.

இத்துடன் 'மொ'க்கை வாரம், officially முடிவுக்கு வந்தது. இனி மக்கள் அனைவரும், நல்ல 'ஆக்கங்களை' தொடரவும். :)

சர்வேசனின் போர்ட்ரெய்ட்:


நன்றி! :)

couple of things:
1) PiT'ன் ஆகஸ்டு மாத போட்டியில் பெயர் கொடுக்காதவங்க கொடுத்துடுங்க.
2) ஜன கன மன போட்டிக்கு பெயர் கொடுக்காதவர்கள் கொடுத்துடுங்க. பரிசு பணம் அதிகரிச்சாச்சு தெரியுமா?
3) தமிழ்நாட்டில் பார்க்கவேண்டி டாப் இடங்கள் சர்வே - வாக்குங்க.
4) பதிவர் பட்டறை 2007 பத்தி தெரியுமா? தெரிஞ்சுக்குங்க.

வர்டா!

பி.கு: சாரி பார் த பேட் கிராபிக்ஸ் :). (தலையில் இருப்பது நண்பன் அப்துலின் குல்லா, பேக்ரவுண்டில் ப்ளூ mosque).

யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல.

ஒன்றே தெய்வம் என்று போற்றுவோம்!

Saturday, July 28, 2007

ஜன கன மன போட்டி ~ பரிசுப் பணம் அதிகரிப்பு

கோதால இதுவரை 9 பேர் தான் இருக்காங்க. 60 பேராவது ஆகஸ்ட் 15 க்குள்ள வந்தாகணும்.
வந்தாதான் போட்டி, சர்வே, பரிசு எல்லாம் கொடுப்பேன்.

வெற்றி பெரும் குடிமகனுக்கு, 1,00,000 நயா பைசா ( ரூ.1000, $25 ) பரிசு தரேன்னு சொல்லியிருந்தேன்.

இப்ப பரிசு பணத்தில் 100 நயா பைசா கூட்டி, 1,00,100 ஆக அதிகரித்துள்ளேன்.

சோ, ரூ.1001 பரிசு. :)

இதுவரை பெயர் பதிந்துள்ள குடிமக்கள்,

1) 'Appavi' family Kid
2) Surveysan - Click to listen
3) Sumanga, Singapore
4) அமுதசுரபி
5) செந்தழல் ரவி
6) சேதுக்கரசி
7) மோகன்தாஸ்
8) அப்பாவி
9) TBCD
10) CVR
11) கண்ணபிரான் ரவிசங்க(KRS)

..
60)

விடமாட்டோம்ல, :)

ஜெய்ஹிந்த்!

Friday, July 27, 2007

சிம்ரன்



கணினி ஓவியப் போட்டிக்கல்ல :)

போட்டிக்கான படம் இங்கே - சொர்கவாசல்

மத்தவங்க படமெல்லாம் பாத்தா, நமக்கு லாஸ்ட்லேருந்துதான் பஸ்டு ப்ரைசு கெடைக்கும் போல இருக்கு :)

Thursday, July 26, 2007

தமிழ்நாட்டில் பார்க்கவேண்டிய டாப் இடங்கள் ~ சர்வே

சாகரதுக்கு முன்னாடி எந்த எந்த எடத்த பாக்கணும்னு கேட்டதுல, எல்லாரும் ஐடியாஸ் அள்ளி வீசினீங்க. எல்லாத்தையும் கோத்து கீழ சர்வே போட்டாச்சு.
கபால்னு, உங்களுக்குத் தெரிஞ்சு பாத்தே தீர வேண்டிய ஒரு எடத்த செலக்ட் பண்ணி குத்துங்க.

டாப் ஆர்டரை பொறுத்து, ஒவ்வொண்ணா வரிசையா பாக்க ஆரம்பிக்கணும், சாகரதுக்கு முன்னாடி :)

ஹலோ, இந்த மேட்டர் படிச்சீங்களா? படத்து மேல க்ளிக்கிப் பொறுமையா படிங்க. உங்க உதவி தேவை.




ஜன கன மன பாடலியா?


:)

Wednesday, July 25, 2007

பில்லாவும் ஷமூக ஷேவாவும்

வாங்க வாங்க வாங்க!

நில்லுங்க. சௌக்யமா?

முக்கியமான ரெண்டு விஷயம் சொல்லப் போறேன் (ரெண்டாவது அதி முக்கியம்). காது கொடுத்து கேளுங்க.

மொத மேட்டரு. தலைப்பின் முதல் வார்த்தையப் பத்தி ~ அதாவது, பாட்ஷா காரு பத்தி :)
பாட்ஷா பெருசா, சிவாஜி பெருசான்னு வச்ச சர்வேல, பாட்ஷா காரு பிச்சு ஒதரிட்டாரு.
நீங்களே கீழ பாருங்க. வாக்காதவங்க, வலது பக்கத்துல இருக்கர பொட்டியில வாக்குங்க.
ஷங்கருக்கு இந்த சர்வே ரிஜல்ட்ட அனுப்பலாம்னு இருக்கேன் :)
ஷங்கரின் முகவரி தெரிஞ்சவங்க பின்னூட்டுங்க. நன்னி :)


ரெண்டாவது, ரொம்ப முக்கியமான மேட்டரு.

நேத்துதான் 'என்ன பாவம் செய்தனை ~ Feelings பா'ன்னு ஒரு பதிவ ரொம்ப பீலிங்க்ஸோட போட்டேன். படிக்காதவங்க படிச்சுடுங்க.
என்னடா நம்ம ஊரு இப்படி இருக்கே, இப்படியே பூடுமான்னு ஒரே கவல.
சும்மா பொலம்பி ஒண்ணும் ஆகப் போரதில்லன்னு ஒருத்தர் பின்னூட்டினாரு.
இன்னொருத்தர், பொலம்பி, 'அரிப்பை' சொரிஞ்சு விட்டுக்கலாம், ஆனா, திரும்ப அவனவன் அவனவன் வேலையப் பாக்கப் போயிருவான்னு பின்னூட்டினாரு.
இன்னொரு அனானி, ஒரு நல்ல ஐடியாவ சொன்னாரு. பொலம்பரதோட நிக்காம, இணையம் தந்த வசதியில் ஏதாவது பண்ணலாமேன்னு.

வளத்துவிட்ட சமூகத்துக்கு என்ன பண்ண முடியும்? வரிஞ்சு கட்டிகிட்டு களத்துல எறங்கி பொரட்சி எல்லாம் என்னால பண்ண முடியாது. வருஷத்துக் ஒரு தரம் உண்டியல்லயும், சில dot orgக்கும் கொடுக்கர காசுல ஒண்ணுமே ஆகப் போரதுல்ல.

அதனால, ஒரு முடிவு பண்ணிட்டேன்.

கூடிய விரைவில் ஒரு இணைய தளம் தொடங்கலாம்னு முடிவு. நம்ம அறிவ ஒழுங்கா யூஸ் பண்ணி, சுலபமா செய்யக் கூடியது இது ஒண்ணு தான்.

இணைய தளத்தில், நம் ஊரில் இருக்கும் ப்ரச்சனைகளை (civic problems) மாநிலம், நகரம், ஊராட்சி, பேரூராட்சி, MLA தொகுதி, MP தொகுதி, வட்டம் வாரியா அரங்கேற்றலாம்.

ஒவ்வொரு ப்ரச்சனைக்கும், ப்ரச்சனை சார்ந்த புகைப்படங்கள், வீடியோ போன்ற வகையராக்களை சேர்த்து, நல்ல அடித்தளம் நாட்டலாம்.

மாநில, நகர, தொகுதி, வட்டம் வாரியாக report தயாரித்து, எங்கு ப்ரச்சனைகள் அதிகமாக உள்ளது என்ற சார்ட் எல்லாம் கொடுத்து, ஒரு உபயோகமான தளமாக மாற்றலாம்.

இன்னும் படிப்படியா நறைய பண்ணலாம், ஆனா மொதல்ல ஆரம்பிக்கணும் :)

தனியாளா இதப் பண்ண முடியாது. PhaseI நான் பண்ணி முடிச்சப்பரம், உங்கள்ள சிலர உதவிக்கு அழைக்கிறேன். :)

இப்ப உங்க உதவி தேவை. தளத்துக்கு என்ன பெயர் வைப்பது?
.ORG ஆ இருக்கணும். பெயர் availableஆ இருக்கணும் :)
(availability இங்க பாத்தா தெரியும் http://smallbusiness.yahoo.com/domains/ )

பெயர் catchyயா இருக்கணும், நம் எண்ணத்தை ப்ரதிபலிக்கணும்.
நம்ம ஊரின் ப்ரதிப்லிப்பும் பெயரில் இருக்கணும் - (உ.ம் samachar.com)

janaganamana.org பாத்தேன் - ஆனா, already taken.
myindia.org பாத்தேன் - ஆனா, அதுவும் taken.
fixmyindia.org - எப்படி இருக்கு?

நல்ல பேரா யோசிச்சு சொல்லுங்க.

அப்படியே, சிம்பிளா ஒரு லோகோ வரஞ்சு அனுப்புங்க பாக்கலாம் (உ.ம் இந்திய வரை படத்து மேல, ஒரு band-aid ஒட்டர மாதிரி :) ).
இது எப்படி இருக்கு?


நம்மால முடிஞ்ச ஏதாவது ஒரு மாற்றம் செய்வோம்.

உதவிக்கு நன்றி!
ஐ ஆம் சீரியஸ் - இந்த தீவாளிக்கு ரிலீஸ் :)

பி.கு: உங்க பதிவுல இதப் பத்தி எழுதி, உங்க பெயர் suggestion அங்கயும் சொல்லலாம். எனக்கும் வெளம்பரம் கெடச்ச மாதிரி இருக்கும். நன்னி! :)

Tuesday, July 24, 2007

என்ன பாவம் செய்தனை... Feelings பா.

சில வருடங்கள் வெளியூர்களில் வேலை செய்துவிட்டு, தாய் வீடு திரும்பிய மாதிரி சிலிக்கான் வேலி என்றழைக்கப்படும் வ.கலிபோர்னியாவுக்கே திரும்ப வந்தாச்சு.
அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இருந்தத விட இப்ப நம்ம மக்களின் ஜனத் தொகை இரு மடங்காகியிருக்கு (பாத்தா, பத்து மடங்கான மாதிரி தெரியுது :) ).

காலைல அலுவலகம் செல்லும்போது, வழி நெடுகிலும், எல்லா பேருந்து நிலையங்களிலும், நம்ம ஊர் பசங்களும் பொண்ணுங்களும் வரிசை கட்டி நிக்கும் காட்சி வியப்பைத் தருது.
சாதாரணமாகவே, மற்ற நகரங்களைக் காட்டிலும், இங்கு இந்திய உணவகங்களும், காய்கரிக் கடைகளும் எக்கச்சக்கமா இருக்கும்.
கடந்த சில வருடங்களில், இந்தக் கடைகளின் எண்ணிக்கை கன்னா பின்னான்னு ஏறிடுச்சு. சரவணா பவன் முதல், முனியாண்டி விலாஸ் வரை 10 நிமிட சுற்றளவில் எல்லாமே இருக்கு.

வந்தவுடன் முனியாண்டி விலாஸ் போய் ஒரு கட்டு கட்டணும்னு மெனுவ பாத்தா, உவ்வே. முயல்கறி மொதல் ஐட்டம். பாத்தவுடன், மீ த எஸ்கேப்! :)

என் அலுவலகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் இந்திய முகம். தெலுங்கரும், தமிழரும், 'இந்தி'யர்களும் இல்லாத ஒரு டீமும் இல்லை.
கணினித் துறையில் நம் ஆளுமை அடேங்கப்பா ரகம். நாமின்றி அணுவும் அசையாது. (அப்படின்னு நெனச்சுக்கிட்டிருக்கோம்... மத்தவங்க சுதாரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. குறிப்பா, ரஷ்யா, சைனா,...)

வார இறுதியில் ஊர் சுற்றச் செல்வது வழக்கம். வெள்ளிக்கிழமையே 'weekend' மேனியா ஆரம்பமாயிடும்.
இயற்கை வளங்கள் கொழிக்கும் ஊர் இது.

அது தவிர, இவர்களே நிறுவியுள்ள பூங்காக்களும் விளையாட்டு மைதானங்களும், நீச்சல் குளங்களும், குளம், குட்டைகளும் ஏராளம் ஏராளம்.
வீட்டுக்குப் பக்கத்தில் (10 நிமிட தூரத்தில்) 25 ஏக்கர் பரப்பளவில் அழகான புல்தரையுடன் ஒரு பூங்கா.

அதுனுள்ளே, 4 டென்னிஸ் கோர்ட், 2 கூடைப் பந்துக் களம், பேஸ் பாள் க்ரவுண்டு (கிரிக்கெட்டு இங்கதான் ஆடராங்க நம்ம பயலுவ). குழந்தைகளுக்கு என்று ஸ்லைடு, ஊஞ்சல் மாதிரி ஐட்டங்களும் இங்கயே இருக்கும். எல்லாமே இலவச உபயோகத்திர்க்கு.

இந்த மாதிரி பூங்காக்கள் கிட்டத்தட்ட 10 மைலுக்கு ஒன்று எல்லா மூலை முடுக்கிலும் இருக்கும்.
இதைத் தவிர, நீச்சல் குளங்கள், indoor விளையாட்டு வசதிகள், லைப்ரரி என்று பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் நடந்தெத்தும் தூரத்தில்.

இவற்றின் பராமரிப்பும் மிக மிக அருமையா செய்யறாங்க.


இது பத்தலன்னா, சுற்றிப் பார்க்க இயற்க்கை வளங்களும் ஏராளம். Lakes, மலைகள், கடற்கரை என்று சகலமும் உண்டு. சில வாரங்களுக்கு முன் அருகில் இருக்கும் ஒரு Lakeக்கு போயிட்டு வந்தோம். கண்ணாடி மாதிரி தண்ணி, ஏக்கர் கணக்குல அதைச் சுற்றி, பச்சைப் பசேல் புல்வெளி, வாடகைப் படகு, Lakeல் குளிக்க வசதி, குளிப்பவர்களை பாதுகாக்க நாலஞ்சு baywatch காவலாளிகள்.

சூப்பர் குளியல் போட்டு, சிக்கன், மீன் வகையராக்களை Barbeque செய்து, உண்டு விழுங்கி, காத்தாடியெல்லாம் விட்டு, கொஞ்சம் கிரிக்கெட்டும் விளையாடி, நண்பர்களுடன் அளவளாவி மகிழ்ந்து வீட்டுக்குத் திரும்ப இரவானது.

இங்கிருக்கும் சாலை வசதிகளும், மற்ற infrastructure வசதிகளும், சொல்லி மாளாது.
சுலப வாழ்க்கை சுலப வாழ்க்கை!

எல்லாம் முடித்துவிட்டு அன்றைய இரவு உறங்கும்போது பல கேள்விகள் மனதில் எழுதன.

நம்ம ஊர் (குறிப்பா சென்னை) நெலம என்ன?

'தார்' பார்த்து 10 வருடங்களுக்கும் மேலான எங்கள் தெருச் சாலை. பாலைவனம் போல் காட்சி அளிக்கும் மரங்களற்றச் சூழல் (மரம் வைக்க முயற்சி பண்ணேன். அது தோல்வி அடஞ்சது தனிக் கதை).
ஒரு நல்ல ரோடு போட்டு, மண்ணு பறக்காம இருக்க, ரோட்டின் இரு பக்கமும் புல்லும், மரங்களும் வைத்து பராமரிக்கக் கூடவா தெரியாது நமக்கு?

எவனோ பணம் பண்ண, drainage கட்டப் போறோம்னு, அங்கங்க நோண்டி வச்சு, மூன்று வருடங்களாக வாய் பிளந்திருக்கும் சாலை.

drainage வர வரைக்கும் இது இருக்கட்டும்னு, திறந்த வெளி சாக்கடை கால்வாய் கட்டிவிட்டு, அதை பராமரிக்காமல் கப்படிக்க விட்டிருக்கும், லோக்கல் முனிசிபாலிடி பாடிகள். இதைக் கட்ட அவங்க கொள்ளையடிச்சது தனி கதை.

தினம் தினம் பல்லவனிலும், எலெக்ட்ரிக் ரயிலிலும் முட்டி மோதி புளி மூட்டையாய் பிதுங்கி வரும் வயதானவர்களும், பெண்களும், சிறுவர் சிறுமிகளும்.

விளையாட்டு மைதானமெல்லாம், இனி புத்தகத்திலும், டி.வியிலும் மட்டுமே பார்க்க முடியும் என்பது கூடத் தெரியாமல், விட்டுக்குள்ளே 'புக் கிரிக்கெட்' ஆடும் நண்பர்களின் பிள்ளைகள்.

சென்னையைச் சுற்றி பச்சைப் பசேல்னு நெல்லு வெளஞ்ச எடமெல்லாம் இன்னிக்கு பில்டிங்கா மாறியிருக்கு. சரியான திட்டமிட்டுதான் இதை எல்லாம் செய்யரானுவளா? இல்ல, வரும் காசை அள்ளிப் போட்டுக்கிட்டு எவன் எப்படிப் போனா என்ன, தன் வயிறு நெரஞ்சா போதும்னு சில அல்லக்கைகளின் வழக்கமான நோண்டல் தானா?

ஒழுங்கான ரோடே இல்ல, அப்பரம் எங்க லைப்ரரி, நீச்சல் குளம், பூங்கா, barbeque, ஊஞ்சல், சருக்கு மரம் இதெல்லாம் எதிர்பாக்கரது?

வீட்டுக்கு பக்கத்துல ஒரு பெரிய கொளம் இருக்கு (lake). அதையும் ஓரத்துல எவனோ 'ஆக்ரமிக்க' ஆரம்பிச்சிருக்கான். இன்னும் ரெண்டு மூணு வருஷத்துல, அங்கயும் flat வந்தா ஆச்சரியப் பட ஓண்ணுமில்ல.

Spencersக்குள்ள போனா, நல்லாதான் இருக்கு, ஆனா, அந்த மெயின் ரோடுக்கு, லெப்டும் ரைட்டும் உள்ள போனா, கலீஜாதான் இருக்கு, இன்னிக்கும்.
என்னிக்கும் இப்படிதான் இருக்கும் என்கிர ரீதியில, நாளுக்கு நாள் மோசமாகிட்டேதான் இருக்கு.

அரசாங்க அலுவலகங்களில், எந்த ஒரு சின்ன வேலை முடிக்கவும் (கரெண்டு கனெக்ஷன், தொலைபேசி, passport verifications, etc...) லஞ்சம் கொடுத்தே பழக்கப் பட்டுப்போன வீட்டுப் பெருசுகள்.

என் கண்ணுக்கு மட்டும்தான் அப்படித் தெரியுதா? உங்க கண்ணுக்கு சிங்காரச் சென்னை தெரியுதா? தெரிஞ்சா சொல்லுங்க, அந்த எடத்துல ஒரு லேண்ட் வாங்கிப் போடறேன்.

இப்படி நாஸ்தியாகுதே நம்ம ஊரு?

எங்கங்க கோட்ட விட்டோம்?

என்ன பாவம் செஞ்சோம்?

பாவங்க நம்ம வருங்காலச் சந்ததி :(

இதையெல்லாம் யோசிக்க யோசிக்க விரக்தியும், இயலாமையும், கையாலாகாத் தனமும் பீரிட்டு வருது.
ஆனா, root cause இதுக்கெல்லாம் நாம தானோ?

கொஞ்சூண்டு பொறுப்பா இருந்திருந்தா கூட, இந்தளவுக்கு மோசமாயிருக்காது.

சரி பண்ண முடியாத அளவுக்கு லேட் ஆயிடுச்சோ? தேவையில்லாத கவலையோ?

உங்க பீலிங்க்ஸையும் பதிவா போடுங்க! பதில் தெரிஞ்சா சொல்லுங்க!

பீலிங்க்ஸ் தொடரும்...

Saturday, July 21, 2007

ப்ரத்தீபா பாட்டீல் ~ ரைட்டா ராங்கா?

"ப்ரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவராக வந்தது உங்களுக்கு ஓ.கே வா?" என்பதே இன்றைய கேள்வி.

என் பார்வையில், அவங்களுக்கு ஒரு 'கரிஸ்மா' இருக்கர மாதிரி தெரியல.

ஆனா, நாட்டை வழி நடத்த கரிஸ்மா தேவையில்லை.
நேர்மை,நாணயம்,தன்நம்பிக்கை,புத்திசாலித்தனம்,ஆளும் திறன் இதெல்லாம் இருந்தாலே போதும்.

ப்ரதீபா பாட்டீல் பத்தி, பலவாறான அவதூறுகள் ஊடகங்களில் காணக் கிடைக்கிறது.
அவங்க பேக்ரவுண்ட் அவ்ளோ ப்ரைட்டா இல்லியாமே?
வங்கிக் கடன் மோசடி, அது இதுன்னு நிறையவே கரும்புள்ளி இருக்கே?

எது சரி, எது கப்ஸான்னு யாருக்கு தெரியும்?

கலாம் பர்ஸனலா நல்லவரோ, கெட்டவரோ, ஆனா அவருக்கு ஒரு நல்ல மதிப்பு இருந்தது அனைவர் மனதிலும். Having him as our president gave a positive attitude in our mindset.

Does Prathiba give the same chime? குடியரசுத் தல ஒண்ணும் பெருசா செய்ய முடியாதுன்னாலும், இது ஒரு அலங்காரப் பதிவியாச்சே, அலங்காரப் பொருள் நல்லா இருப்பதுதானே, நமக்கு நல்லது?

ஒரு பெண் குடியரசுத் தலயாகி இருப்பது, பெருமையான விஷயம் தான், பட்...

உங்க கருத்து என்ன?


பி.கு1: 1,00,000 பைஸா வெல்லுங்கள். தேச பக்தியைக் காட்டுங்கள் :)

பி.கு2: பாட்டுக்கு பாட்டு எ,எ,ய,யா ல நிக்குது. மைக்க புடிக்கரீயளா?.

Thursday, July 19, 2007

தமிழனின் தேசத் துரோகமும், 1,00,000 நயாப் பைசாக்களும்!

என்னங்க இது 1,00,000 நயா பைசா பரிசா தரேன்னு சொல்லிருக்கேன். அப்படியும், யாரையும் காணோமே!

60 வருஷமாச்சு சொதந்திரம் கெடச்சு.
நம்ம தேசிய கீதத்தை படிச்சுக் கத்துக்கிட்டு பாடி அனுப்பங்கன்னு சொன்னா யாரும் வர மாட்றீங்களே?

60 பேர் வேணும். 7 பேர்தான் சேந்துருக்காங்க கோதால.
கீழே, 'Appavi family kid' பாடரத கேளுங்க, தானா மூட் வந்துடும் உங்களுக்கும்.

உடனே பெயரைப் பதியுங்கள்.உங்கள் நண்பர்களுக்கும் தெரியப் படுத்துங்கள்!
குரலை மெருகேற்றுங்கள்!
ஜன கன மன பாடி அனுப்புங்கள்!

தேச பக்தியைக் காட்டுங்கள் (in other words, தேசத் துரோகியா இருக்காதீங்க, :) )

1) 'Appavi' family Kid
2) Surveysan
3) Sumangal, Singapore
4) அமுதசுரபி
5) செந்தழல் ரவி
6) சேதுக்கரசி
7) மோகன்தாஸ்
..
60) ????

பி.கு: Photography-in-tamil நடத்தும் ஜூலை மாதப் புகைப்படப் போட்டிக்கு வந்துள்ள படங்களின் அணிவகுப்பைப் பாருங்கள்!

நம்ம இயற்கை படங்கள் (போட்டீல கலந்துக்க முடியாமப் பண்ணிட்டாங்க்ய...), அதனால இங்கயே நம்ம படம் காட்டரேன்.:)




Sunday, July 15, 2007

JANA GANA MANA - Sing & Win 1000 rupees


As announced earlier a 'National Anthem' singing competition is being conducted by the Survey committee :)

Please register your name (by commenting on this post or sending a email to surveysan2005 at yahoo.com).

All entries must be received in mp3 format by August 10th 2007.
Voting will take place for 5 days and the best rendition will be selected by the readers and announced on August 15th 2007.

You are welcome to sing "Vande Matharam" (original tune) and "Sare Jahan Se" as well. Those entries will be posted in a separate post and depending on number of entries will get a separate voting ballet :)

I just sang it myself and the experience was interesting :)
It is a beautiful song, indeed! :)
Salutes to Tagore!

Click here to listen to my rendition :)

---------
Jana-Gana-Mana-Adhinayaka, Jaya He
Bharata-Bhagya-Vidhata
Punjab-Sindhu-Gujarata-Maratha-
Dravida-Utkala-Banga
Vindhya-Himachala-Yamuna-Ganga
Ucchhala-Jaladhi Taranga
Tava Subha Name Jage
Tava Subha Ashisha Mage
Gahe Tava Jaya Gatha.
Jana-Gana-Mangala Dayaka, Jaya He
Bharata-Bhagya-Vidhata,
Jaya He, Jaya He, Jaya He,
Jaya Jaya Jaya, Jaya He
---------

P.S1: If anyone has Vani Jayaram's Vande Mataram, please send it to me. The internet is polluted with Rahman's Vande Mataram. I couldnt find the 'original tune' song :)

Thursday, July 12, 2007

ஜன கன மன அர்த்தமும், வடிவேலுவின் ஸேம் bloodம்!

60ஆம் சுதந்திர தினத்தை ஒட்டி, அனைவரையும் ஜன கன மன பாட வெச்சு கலக்கலாம்னு ஒரு பதிவப் போட்டேன் (பதிவுல ஒரு குட்டீஸோட கலக்கல் ஜன கன மன கேட்டுடுங்க :) ).

தாகூரின் "ஜன கன மன" பத்தி ஒரு conspiracy theory (or history?) இருக்கு.

அதாகப் பட்டது, ஜார்ஜ் அரசனை வரவேற்ப்பதர்க்காக தாகூரிடம் ஒரு கவிதையை எழுதச் சொல்லிக் கேட்டாராம் நேரு.
தாகூரும், 'ஜனோ கனோ மனோ அதி நாயக..." என்ற நமது தேசிய கீதத்தை எழுதிக் கொடுத்தாராம்.

பாடலின் பொருள், ஏறத்தாழ இதுதான் - "மக்களின் மனதில் குடி கொண்டிருக்கும் நாயகனே, நீ தான் எம் மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தலைவர், etc... etc..."

தாகூருக்கு, இப்படி கி.ஜார்ஜை பாராட்டி எழுதச் சொன்னது பிடிக்கவில்லையாம். அதனால், பாடலில், 'நாயகனே' என்று இறைவனைக் குறிப்பிட்டுத் தான் எழுதிக் கொடுத்தாராம்.

ஜார்ஜை பாராட்ட வேண்டும் என்று எழுதி வாங்கிய பாடலை, தேசிய கீதமாக மாற்றியது அன்றைய காங்கிரஸ் செய்த தவறோ?

தாகூரை பழிப்பது சரியா? என்ன இருந்தாலும், ஜாலியன் வாலாபாக் கொடுமையின் போது, அவருக்கு கொடுத்த 'சர்' பட்டத்தை தூக்கி எறிந்தவராச்சே, அவரின் தேசப் பற்றின் மேல் தேவையில்லாமல் சந்தேகப் படுதல் சரியா?

இவ்ளோ நாள் கி.ஜார்ஜ பாராட்டியா வாய் கிழிய மெய் சிலிர்க்க பாடிட்டு இருக்கோம்னு நெனச்சா கொஞ்சம் கசப்பாதான் இருக்கு.

"ஜன கன மன"வின் முழு அர்த்தம் தெரிஞ்சுக்கிட்டது என்னமோ, போன வாரம், இந்த நேயர்விருப்பப் பதிவ எழுதும் போதுதான். (ஐயய்ய, shame shame on me! :) ).
நண்பர்கள் சிலர தொலைபேசி கேட்டப்போ, அவங்களுக்கும் அர்த்தம் தெரியலன்னு சொன்னாங்க.
அப்பாடா, ஸேம் ப்ளட்!!! :) ( ஸேம் ப்ளட்னா தெரியாதவங்க, மனதை திருடி விட்டாய் படத்தில் வடிவேலுவின் காமெடி பாருங்கள். பெஸ்ட் காமெடி எவர்! :) )

என்னமோ போங்க, இந்த குழப்பத்தால், நேயர் விருப்பத்தில் சிறு மாற்றம்.
60ஆம் சுதந்திர தினத்தை ஒட்டி, ஜன கன மன பாடி அனுப்பணும்.
இதைத் தவிர, மற்ற தேச பக்தி பாடல்கள் எதை வேணும்னாலும் பாடி அனுப்பலாம்,
நான் 'வந்தே மாதரம்' ட்ரை பண்ணப் போறேன்.
நீராரும் கடலடுத்த;
தாயின் மணிக்கொடி பாரீர்;
இந்த மாதிரி எத வேணும்னா பாடி அனுப்புங்க.

சிறந்த தேச பக்தி பாடலுக்கு ரூ.1000 பரிசு கொடுக்கப் போறோம் (ஸ்பான்ஸர்ஸ் வெல்கம்).
ஒரே நிபந்தனை, 60 பாடல்கள் கோதாவில் இருக்கணும். :)

இன்றைய மிகப் பெரிய இரண்டு கேள்விகள் கீழ கொடுத்திருக்கேன்.
ரெண்டு பெட்டில தனித் தனியா வாக்குங்க.
வாக்கிட்டு கீழ வீடியோ இருக்கு பாருங்க.
புல்லரிக்குது, உண்மையிலேயே! :)







ஜெய் ஹிந்த்!

:)

Tuesday, July 10, 2007

ONE MAN BAND ~ PIXAR குறும்படம்

கார்ஸ் படம் தியேட்டர்ல பாக்கும்போது One Man Bandனு ஒரு குறும்படம் போட்டாங்க.

நாலே நிமிஷத்துல நச்சுனு ஒரு குட்டிக் கதைய, அனிமேஷன்ல கலக்கி இருப்பாங்க.

பிக்ஸார், பிக்ஸார் தான்.

Finding Nemo, Cars எல்லாம் என்னமா எடுத்திருக்காங்க.

நம்ம ஊர்ல, நம்ம 'சிவாஜி ராவ்'வோட பொண்ணும் ஒரு அனிமேஷன் நிறுவனம் வெற்றிகரமா நடத்திட்டு இருக்காங்க. கூடிய விரைவில், நம்ம ஊர்லயும் நச்சுனு அனிமேஷன் படங்கள் வந்தா ரொம்ப நல்லா இருக்கும்.

பொதுவாவே, சினிமா வெறியன் நானு. குறிப்பா அனிமேஷன் படங்கள்னா விரும்பி கண்கொட்டாம பாப்பேன்.
மிக்கி மவுஸ்லேருந்து, இன்றைய இன்க்ரெடிபிள்ஸ் வரைக்கும் பிடிக்கும்.
இந்த வாரம் Ratatouille பாக்கணும்.

மெத்தப் பிடிச்சது, அன்றிலிருந்து இன்று வரை அலாதீனில் வரும் ஜீனி. அதிலும், குறிப்பா, அலாதீன் திரப்படத்தில், Robin Williamsன் குரல் வண்ணத்தில் வரும் ஜீனி was mind blowingly creative!
கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்.
Robin Williams, Jim Carrey இவங்கள மாதிரி சேஷ்டைகள் செய்ய இனி யாராவது பொறந்து வந்தாதான் உண்டு. வயிறு புண்ணாக்குவதில் மன்னர்கள்.

சரி, இனி "ஒன் மேன் பாண்டு" பாருங்க. உங்களுக்கு புடிச்ச கார்ட்டூன் கேரக்டர் எதுங்கோ?



பி.கு: ஜன கன மன படிங்க. ஆகஸ்ட் 15 நெருங்குதுங்கோ! பாடி அனுப்புங்கோ இந்தியப் ப்ரஜைகளே!

பி.கு: தமிழ்நாடு டாப் 10 - சாவரதுக்கு முன்னாடி பாத்துடு - உங்களுக்கு பிடிச்ச எடத்த பதியுங்கள்.
நன்னி!

Sunday, July 08, 2007

தமிழ்நாடு டாப் 10 - "சாவரதுக்கு முன்னாடி பாத்துடு"

உலகின் ஏழு புதிய அதிசயங்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுத்து அறிவுப்பு வெளி வந்தாச்சு.
முழு விவரங்கள் இங்க படிச்சிருப்பீங்க -- விலாவாரியா நம்ம சந்தோஷ், வெளக்கிருக்காரு பாருங்க - உலகின் புதிய அதிசயங்கள்.

இப்போ மேட்டர் இன்னான்னா, இதே போல், தமிழ் நாட்டில், பார்த்தே ஆக வேண்டிய டாப் 10 இடங்கள் என்னன்னு கண்டுபிடிக்கும் பொறுப்பை அதிகாரபூர்வமா என்னிடம் ஒப்படச்சுருக்காங்க.
(inspired by Discoveries Top 1000 places to see before you die ).

முதல் கட்டமா, இந்த டாப் 10 சர்வேயில் கலந்து கொள்ளத் தகுயுடைய இடங்களைப் பின்னூடுங்கள்.
( சந்தோஷ், உங்க தாத்தாவோட பழைய வீடெல்லாம் சேக்கப்படாது :) )

அப்பறமா, இணையத்தின் மூலம் சர்வே, தொலை பேசி, SMS போன்ற வகையராக்கள் மூலம் வாக்குகள் சேகரிச்சு (நான் பணக்காரனானதும்) ரிஸல்ட்ஸ் அறிவிக்கப்படும்.

பரிந்துரைகள் தொடங்கட்டும். மீஜிக் ஸ்டார்ட்ஸ்!

Jokes apart, மெய்யாலுமே, ஒரு விடுமுறைக்கு வந்தா, என்ன என்ன எடம் பாக்கலாம்னு ஒரு லிஸ்ட் சொல்லுங்க நண்பர்காள் :) தீவாளிக்கு வரோம்ல!

:)

Saturday, July 07, 2007

O Dank, Chokrane, Kiitos, Najis Tuke, Waita

ஹி ஹி! என்ன சொல்லவரேன்னு புரிஞ்சிருக்குமே!

வேற ஒண்ணும் இல்ல, Hello சொல்லி 'நட்சத்திர வாரத்த' ஆரம்பிச்சேன், இப்ப நன்றி சொல்லி முடிச்சுக்கரேன். எல்லா பாஷைலயும் நன்றி எப்டீ சொல்றாங்கன்னு இங்க பாத்து தெரிஞ்சுக்கோங்க.



அன்றிலிருந்து இன்றுவரை, நான் கிருக்கரதையும் படிச்சு ஆதரவு அளித்த ரசிகப் பெருங்குடி மக்களுக்கு நன்றீஸ் நன்றீஸ் நன்றீஸ்!!! :)

எல்லாரும் ஒரு மீள் பதிவு போட்டுடறாங்க. நாம போடலேன்னா எப்படி?

அதுக்காக, இதோ! பொறுமையா படிங்க.

என் எழுத்துலக வாழ்க்கையில் சொல்லிக்கர மாதிரி ரெண்டோ மூணோ பதிவுகள்தான் இருக்கு!
அதுல சில கீழே. ஹி ஹி! :))))))

1) சீனு - mini கதை

2) Brahminical Arrogance

3) Surveysan Photo Album

4) பாட்டுக்குப் பாட்டு

5) ரொம்ப முக்கியமானது இது உயிரைக் காப்பாற்ற உதவுங்கள்

6) இத மறந்துடாதீங்க. ஜன கன மன

7) இதுவரைக்கும் எடுத்த சர்வேஸ்

8) 07 - 07 - 07 ~ பூமிக்காக எல்லாரும் இதுல குதிங்க!



உங்கள் வாழ்நாளில், அடிமட்டத்தில் இருப்பவர் ஒருவரேனுக்கும் ஏதாவது வகையில் உதவுங்கள் என்று கேட்டுக் கொண்டு விடை பெறுகிறேன்.
வாய்ப்பளித்த தமிழ்மணத்துக்கு நன்றி!

எவ்ளோ பேர் இதப் பாத்தீங்கன்னு தெரியல. தமிழ்மணத்துல இருக்கும் "என்னைப் பற்றி":
~~~~~ ~~~~~ ~~~~~ ~~~~~ ~~~~~
பெயர்: சர்வேசன்
தொழில்: ஆக்கல், அழித்தல், கடித்தல், அப்பப்ப அளத்தல்
படித்ததில் பிடித்தது: பாரதியார் கவிதைகள்
சாதனைகள் இதுவரை: documented here :)
உணவுக்கு: சிக்கன்
தொட்டுக்க: பிஷ் ப்ரை
லீவுக்கு: சினிமா, டிவி
பெரிய லீவுக்கு: சென்னை
தெய்வ நம்பிக்கை: தேவையான அளவு இருக்கு
உற்ற நண்பன்: லேப்-டாப்
திருப்புமுனைகள்: சில நண்பர்கள் அமைந்தது
ஹாபி: வலைத்தளம் மேய்வது, படம் புடிப்பது
மெத்தப் பிடித்தது: இயற்க்கையை ரசிப்பது
எழுத்துப்பணி: 7 மாதமாய் பின்னும் தங்கிலீஷ் வலைப்பதிவுகள்
பெருமை: இந்தியனாய் பிறந்தது
சிறுமை: 'சில' இந்திய குணங்களுடன் வாழ்வது
பிடித்த தல: காந்தி, சிங்கை லீ-க்வான்-யூ,
பிடிக்காத தல: ஊர உருப்பட விடாம கெடுக்கர எல்லா தலையும்.
சிங்காரச் சென்னை: No Way! not possible!
இந்தியா 2020: absolutely, Not possible!
பிடித்த ஹீரோ: 'கர்ணன்' சிவாஜி, 'பாட்ஷா' ரஜினி, 'மஹாநதி' கமல், 'நெஞ்சில் ஓர் ஆலயம்' முத்துராமன், 'தனியாவர்தனம்' மம்மூட்டி, 'His Highness Abdullah' மோகன்லால், 'Black' Amitab, 'Dilwale-Dulhaniya' Shahruk, 'Qayamat Se Qayamat Tak', Amir Khan, 'God Father' Al Pacino, 'Saving Private Ryan' Tom Hanks, Robert-De-Niro,
பிடித்த ஹீரோயின்: சாவித்ரி, 'நெஞ்சில் ஓர் ஆலயம்' தேவிகா, 'ப்ரம்மா' குஷ்பு, 'நேருக்கு நேர்' சிம்ரன், 'மூன்றாம் பிறை' சில்க், படாபட், ஷோபா, ஷோபனா, ரேவதி, த்ரிஷா, மீரா ஜாஸ்மின்.
பிடித்த இசைஅமைப்பாளர்: ராஜா, ராஜா, ராஜா
பாடகர்கள்: ஜானகி, SPB, ஏசுதாஸ், சித்ரா, முகேஷ், ரஃபி, ஜாக்ஸன், பீட்டில்ஸ், அப்பா, மொஸார்ட்,
~~~~~ ~~~~~ ~~~~~ ~~~~~ ~~~~~

வேற எதாச்சும் தெரியணும்னா கேளுங்க :)

Danki!

:)

07 - 07 - 07 ~ பூமிக்காக



நம்ம Al Gore அண்ணாச்சி, 7/7/7 அன்று, உலக அளவில் 'Live Earth' என்ற கச்சேரி ஏற்பாடு பண்ணி, Global Warming ( உலகளாவிய வெப்பம்? :) ) விழிப்புணர்வு கொடுத்திட்டிருக்காரு.

உலகம் முழுவதிலும் 2 பில்லியன் ஆளுங்க இந்த கச்சேரியப் பாத்து, Global Warming பத்தித் தெரிஞ்சுக்கிட்டு, ஓரளவுக்கேனும், தங்களால் முடிந்த சின்ன சின்ன விஷயங்கள செஞ்சு, பூமிக்கு நேரவிருக்கும் மாசுக் கேடுகளைக் குறைக்கப் பாடுபடுவார்கள் என்று நம்பிக்கை!

LIVE EARTH பற்றிய விளக்கங்கள் இங்கே - Live Earth.

நான் ஏற்கனவே இங்க சொன்ன மாதிரி, இந்த Global Warmingஅ கண்டுக்காம விட்டா, முப்பது வருஷத்துல, அது தன் வேலைய பெருசா காட்ட ஆரம்பிக்குமாம்.
அப்ப பொலம்பி பிரயோஜனம் இல்லை.

இப்பவே, உங்களுக்குத் தெரிஞ்சத, முடிஞ்சத, வெட்கப்படாம செஞ்சு, Carbon Emissions, Recycling, Avoiding Plastics, Wastage reduction, Spread Global Warming Awareness மாதிரி ஐட்டங்களில் மேலும் கவனம் செலுத்தவும்.

உங்க சோம்பேரித்தனத்தாலும், அக்கரையின்மையாலும், உங்க குழந்தைகள் நாளைக்குக் கஷ்டப்படக்கூடாது என்பதில் கவனம் வையுங்கள்! :)

National Geographyல ஒரு போலார் கரடியோட கதைய காமிச்சாங்க. நம்ம பண்ற கூத்துல, முதல் கஷ்டம் அதுங்களுக்குத்தான். அதுங்க வாழும் இடங்களில் பனி எல்லாம் சீக்கிரமே உருகிவிடுகிறதாம். கடலில் பனிக்கட்டிகள் இல்லன்னா, கரடியால ரொம்ப தூரம் நீந்தி இறை தேட முடியாதாம். கொஞ்ச தூரம் நீந்திய பிறகு இளைப்பாற அவை பனிப் பாரையைத் தான் பயன் படுத்தும். இப்படி ஒரு கரடி இறையைத் தேடித் தேடி, ஒண்ணும் கிடைக்காம களைப்பில் இறந்த போவதைக் காட்டினார்கள். அடக் கொடுமையே!
நம்ம செய்யும் விஷயங்கள் நம்மை மட்டும் அல்லாமல், நம்மைச் சுற்றி உள்ளதையும் பாதிக்குது.

என்னமோங்க, என்னால பொலம்பதான் முடியும்.
என்னால் முடிந்தது, ப்ளாஸ்டிக் உபயோகிப்பதைக் குறைக்கலாம். தேவையில்லாம, கார் உபயோகித்தலைக் குறைக்கலாம். தேவைக்கதிகமா எதையும் வாங்காம இருக்கலாம். மரங்கள் சில வைக்கலாம்.

இன்னும் சில வருஷங்களில், இந்தியாதான் அதிக மக்கள் தொகை கொண்ட ஊராகப் போகுது.
உருப்படியா, ஒவ்வொருத்தரும், 'விழிக்கலன்னா' கஷ்டம்தேன்.

மாற்றத்தின் முதல் படி நீயா இருன்னு காந்தி சொல்லி இருக்காராம். இருக்கீங்களா?

தொடர் வெளையாட்டெல்லாம் வெளையாடி களைப்பாயிருப்பீங்க.
நம்ம பூமிக்காக ஒண்ண யோசிச்சு இந்த தலைப்புல எழுத முடிஞ்சங்க "07 - 07 - 07 ~ பூமிக்காக".
நீங்க என்ன பண்ணப் போறீங்க, மத்தவங்கள என்ன பண்ணச் சொல்றீங்க, உங்க கவலைகள் என்னா, இந்த உலகளாவிய வெப்பத்தைப் பற்றி உங்க கருத்து என்னா? etc...

இங்க பாருங்க - நல்லா எழுதினீங்கன்னா சற்றுமுன் ஆளுங்க பரிசு கொடுத்தாலும் கொடுப்பாங்க. :)

இதுவரை எழுதியவர்கள்:
1) குப்பய எங்கே போட்டீங்க - by முத்துலெட்சுமி

2) சூட்டு யுகப் பிரளயம்! உருகி மறையும் கிலிமாஞ்சாரோ பனிச்சிகரங்கள் - by சி.ஜெயபாரதன் B.E. (Hons), P.Eng. [Nuclear] Canada

3) ?

4) ?

5) ?

6) ?

7) ?

பி.கு1: ஜன கன மன - சேந்து கலக்குவோம் பதிவப் படிச்சு பெயர் பதிந்து விடுங்கள். உங்க 'தேச பக்திய'க் காட்டுங்க. நன்றி! பாட முடியாதவங்க, வாசிக்கலாம் தப்பில்ல. :))

பி.கு2: சிவாஜியாவா பாட்ஷாவான்னு கேட்டதுல, பாட்ஷா பாய், 76% வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். சந்தோஷம் பொங்குதே பொங்குதே! அழுகாச்சி அழுகாச்சியா வருது (ஆனந்தக் கண்ணீர்). யாராவது, இந்த ரிஸல்ட, ரஜினிக்கும், ஷங்கருக்கும் காட்டுங்க :)

Thursday, July 05, 2007

இன்னும் முப்பது வருஷம்தானாமே?

என்னடா இது, எங்கப்பாத்தாலும், GLOBAL WARMING பத்தியே பேச்சா இருக்கே, நம்ம எதயாச்சும் பண்ணலாமேன்னு ஒரு வருஷமா ஒரே அரிப்பு.

"An Inconvenient Truth" என்ற Al Goreன் டாக்குமெண்டரி பாத்தீங்களா?
புள்ளி விவரங்கள் புட்டு புட்டு வெக்கராரு மனுஷன்.

இந்த வெளம்பரம் பாத்திருப்பீங்க்க. சும்மா, இதை விட நெத்தியில அடிச்ச மாதிரி, வேற எப்படி சொல்ல முடியும்?


சில பேரு, இதெல்லாம் சும்மா. கத வுடராங்கன்னு சுத்திக்கிட்டு திரியராங்க.
ஆனா, நம்மள சுத்தி அப்பட்டமா, பல விஷயம் நடக்குது. வழக்கத்து மாறா சுட்டெரிக்கும் வெயிலும், திடீர் மழையும், சூராவளியும் பாத்தாலே, something is not rightனு புரியும்.

நம்ம பங்க செஞ்சே ஆகணும்னு ஒரு கட்டாயம் இருக்கு.

இன்னிக்கு கூட Al Gore ஒரு பேட்டீல "ஏன்யா, மாசுக் கட்டுப்படுத்து கட்டுப் படுத்துனு ஊர் ஊரா சுத்தி சவுண்டு விடரியே. ஆனா, நீயும், private Jetல சுத்தர, தேவைக்கு அதிகமான சைஸ்ல்ல பங்களா கட்டி எல்லாம் வீணடிக்கர. ஊருக்கு தான் உபதேசமா"ன்னு கேட்டாங்க.

அதுக்கு அவரும் பொறுமையா "இல்லைங்க, நான் முடிந்தவரை பொது விமானத்தில் தான் பயணிப்பேன். என் பங்களாவில் முக்கால்வாசி சூரிய ஒளியின் உதவியால், செயல் படும் விதம் Solar Cell எல்லாம் போட்டு தான் வச்சிருக்கேன். Hybrid கார் தான் ஓட்டரேன்" அது இதுன்னு வெளக்கம் கொடுத்தாரு.

ஒவ்வொரு தனி மனுஷனும், தன்னால் முடிந்த சில விஷயங்களைச் செஞ்சா போதும், 30 வருஷத்துல வர இருக்கும் கஷ்டத்த, 300 வருஷம் தள்ளிப் போடலாம்.

நெனச்சு பாருங்க, உங்க பசங்க 30 வருஷத்துல, கஷ்டப் படரதுக்கு நீங்களும் காரணமா இருக்கணுமா?

அதுவும் சாதாரண கஷ்டம் இல்லை. சமாளிக்க முடியாத இயற்க்கைச் சீற்றம் வருமாம்.
அமெரிக்கா காரன், எதயாச்சும் பண்ணி சமாளிச்சுடுவான்.
நம்ம ஊர் நெலமைய நெனச்சு பாருங்க? எவன் காப்பாத்துவான்?

ஊரு ரணகளம் ஆகும் அபாயம் இருக்கு.

யோசிச்சு எதயாச்சும் பண்ணுங்கா.

இங்க சில ஐடியாஸ் கொடுக்கராங்க்க பாருங்க.

உங்களுக்குத் தெரிஞ்சதும் சொல்லுங்க.

எனக்குத் தெரிஞ்சது.
0) பதிவர் சந்திப்பின் போது, எதயாவது ஒரு தெருவ தேர்ந்தெடுத்து அங்க இருக்கரவங்கள, மெரட்டி உருட்டி ஒழுங்கா இருக்கச் சொல்லலாம் (I mean awareness தரலாம்)
1) முடிந்தவரை பஸ், ட்ரெயின் உபயோகியுங்கள்
2) சாலையோரம் மரங்கள் நடுங்கள்
3) உங்க பக்கத்து தெரு ஆளுங்கள எல்லாம் கூட்டா சேத்து, உங்க neighbourhood நல்லா பசுமையா வச்சுக்கப் பாருங்க. எவ்வளவுக்கு எவ்வளவு மரம் வெக்கரமோ, அந்தளவுக்கு, நன்மை பயக்கும்..
4) உங்களுக்குத் தெரிஞ்ச குளம், குட்டைய, ஆள் சேத்து சுத்தப் படுத்தி, தண்ணி சேமிக்க வழி செய்யுங்க.
5) குளம் குட்டைகளை, 'ஆக்ரமித்து' பட்டா போடும், வில்லன்ஸ, சிவாஜி மாதிரி அடிச்சு வெரட்டுங்க.
6) ??? வேற யாராச்சும் பின்னூட்டிச் சொல்லுங்க.

எனக்கு கல்லூரி நாட்களிலேயே, இந்த 'சமூக' அரிப்பு கொஞ்சம் அதிகமா இருக்கும்.
அதுவும், வேலை கெடச்சு, NRI ஆகி, சிங்கப்பூர், அமெரிக்கான்னு சுத்த ஆரம்பிச்சதும், 'அரிப்பு' கொஞ்சம் அதிகமாவே ஆயிடுச்சு.
ஒவ்வொரு வருஷமும், ஊருக்குப் போகும்போதும், சொறிஞ்சு விடலன்னா, கன்னா பின்னானு, அரிக்க ஆரம்பிச்சுடும் :)

பெருசா ஒண்ணும், இது வரைக்கும் கழட்டல. சின்ன சின்னதா, உதவும் கரங்கள் மாதிரி நிறுவனத்துக்கு அஞ்சோ பத்தோ கொடுப்பதோடு சரி.

வேற எதயாச்சும் நல்லது பண்ணனும்னா, சிவாஜிக்கு வந்த அதெ நெலம, நம்மில் பலருக்கும் வருது. உருப்பட விடாம இருக்கரதுக்கு ஒரு கும்பல் இருக்கு ஊர்ல.

இப்படித்தான், போன வருஷம், எங்க தெருவில வரிசையா மரம் வச்சு ஊர முன்னேத்தலாமேன்னு முடிவு பண்ணேன்.
தெருவுல இருந்த ஒரே வேப்ப மரத்தையும், குப்ப சேருதுன்னு, நம்ம நெய்பர் வெட்டி கடாசியிருந்த்தாரு. (%^#$$^&&#@@#!!$!$&*(%^#%@$$).

தெருவில் இருக்கும் 100 வீடுகளிலும், நிழல் தரும் மரங்கள் யாரும் வச்சுக்கல.
"எதுக்குப்பா,சும்மா வேஸ்டு, குப்பதான் சேரும்"னு சொல்லி, வெறும் தென்னமரம் மட்டும் கொஞ்ச வீட்ல இருக்கும்.

இத்தனைக்கும், எல்லாம், படிச்சு பெரிய பதவிகளில் இருக்கும் மக்கள் நிறைந்த தெரு எங்களது.

சரி, நாம தான் NRI, நம்ம கண்ணுலதான், தப்பெல்லாம் பளிச்சுனு தெரியுமே.

எங்க வீட்டுக்கு முன்னாடி, மூணு நிழல் தரும் மரங்கள் வெக்கலாம்னு, மூணு 7 அடி உயரமுள்ள மரக்கண்ணு வாங்கி, அதுக்கு பாதுகாப்பு வலையும் வாங்கியாச்சு. ஒரு மரத்துக்கு 300 ரூபாயாச்சு.
எல்லாத்தையும் வண்டில கொண்டு வந்து, ஒரு ஆள் வச்சு ஆழமா நட, எல்லாமா சேத்து 1200 ரூபா கிட்ட ஆச்சு.

மரத்த நட குழி வெட்டும் போதே, எதித்த வீடு, பக்கத்து வீடு ஆளெல்லாம் குசலம் விசாரிக்க வந்துட்டாங்க.
"இதை எல்லாம் பர்மிஷன் இல்லாம ஏன் பண்றீங்க. The municipality people should do this."
"மரம் வெச்சா வீட்டுக்கு நல்லதுல்ல. வேர் உள்ள வந்து சுவர ஒடச்சிடும்"
"குப்ப சேரும். யார் கூட்டுவா?"

இப்படி சப்பைக் கட்டுக்கள் நிறைய வந்துது.

எல்லாத்தையும் சமாளிச்சு, மரத்த வச்சு தண்ணிய ஊத்தி, அக்கடான்னு படுத்தா, அழகான கனவுல எங்க தெருவின் எதிர்கால லுக்கு இப்படி தெரியுது. ஆனா?


விட்டாங்களா பாவிகள்.

ராவோட ராவா, நான் வச்ச மூணு மரக்கண்ணையும் ஒடிச்சு போட்டுட்டானுவ.
எதிர்வீடா? பக்கத்து வீடா? வில்லன் யார்னு தெரியல. ரெண்டுல ஏதோ ஓண்ணுதான் :(
தெரு அசிங்கமா இருக்கு. போதாகொறைக்கு, எவனோ துட்டு சொரண்ட, 'ஓப்பன்' சாக்கடைக் கால்வாய் வெட்டி விட்டிருக்கான்.
எவனும் கேள்வி கேக்கலன்னா, குல்லா போட்டுடராங்க.

திருந்துமா இதெல்லாம்? கப கபன்னு எரியுது. அடுத்த தடவ போகும் போது, இருட்டடி கொடுத்தாதான் புத்தி வரும்.

ஊருக்கு, ஏதாவது பண்ணுங்க மக்கா!

:)

பி.கு1: 7/7/7 அன்னிக்கு பல global warming விழிப்புணர்வு விஷயம் நடக்கப் போகுது. நம் மத்தியிலும், எல்லாரும் "7/7/7" - என்ற தலைப்பில் உங்களுக்குத் தெரிஞ்சத சொல்லுங்கோ.

பி.கு2: Global Warming Facts

:)

உயிரைக் காப்பாற்ற உதவுங்கள்!

என் 'நட்சத்திர வாரத்தில்' இந்தப் ப்ரச்சனை கண்ணில் பட்டது ஒரு விதத்தில் நல்லதா போச்சு. பப்ளிஸிட்டி நல்லா கெடைக்குது.
Bone Marrow donorஆக பெயர் கொடுக்கச் சென்ற இடத்தில், நிறைய பேர் வரிசையில் இருந்தார்கள். எவ்வளவு பேர், refered-by சர்வேசன்னு தெரியல. :)

நம்ம VSK, Bone Marrow donation செய்வது பற்றி அருமையான விளக்கங்கள் கொடுத்திருக்கார்.
அதை, இங்கே படித்து, தெளிவு பெருங்கள்!

படித்துத் தெளிந்தவுடன், ஒரு உயிர் உதவ, உங்கள் பெயரையும், Bone Marrow தானம் தர பதிந்து விடுங்கள்.

தாமதிக்க வேண்டாம்! Save Vinay's life and thousands of others who have similar conditions.
முழு விவரங்கள் இங்கே.

நன்றி!

பி.கு: Bone Marrow registryல் எவ்வளவுக்கு எவ்வளவு ஆட்களை சேர்க்கிரோமோ, பாதிக்கப் பட்டவர்களுக்கு, தங்களுக்குத் தேவையான, BoneMarrow வகை கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.
நாளை நம் சுற்றத்திலே கூட, இம்மாதிரி BoneMarrow தேவைப்பட்டால், நம் இன்றைய முயற்ச்சி, நாளை அதர்க்கான பலனை உடனே தரும்.

Wednesday, July 04, 2007

பாட்ஷா vs சிவாஜி

60 கோடி போட்டு எடுத்த சிவாஜி படத்துல எனக்கு புடிச்சது பாடல்கள் எடுத்த விதம் மட்டுமே. பல்லேலக்கா விதிவிலக்கு, அந்த தொப்பை டான்ஸ் சகிக்கல.
நயன் தாரா, பாட்டு முழுக்க, ஒரே மாதிரி சிரிச்சுக்கிட்டே, குலுங்கிக் கொண்டே இருந்தாங்க. நல்லால்ல!

தோட்டாதரணி தான் படத்தோட ஹீரோ!

எல்லோரும் சொல்ர மாதிரி கே.வி ஆனந்தின் கேமரா எனக்கென்னமோ அவ்ளோ பெருசா தெரியல. சில இடங்களில் ஓவரா ஷேக்காகி தலைவலி தான் வந்தது எனக்கு.

ரஜினியை பார்ப்பது ஒரு சந்தோஷம் தான்.

குறிப்பா, அந்த மொட்ட ரஜினி, ஸ்டைலா கண்ணாடிய மண்டைக்கு பின்னாடி போடும் சீன், ரியலி சூப்பர்ப்! :)

250 கோடி போட்டு சீரியஸா கல்லூரி, ஆஸ்பித்திரி என்று ஒரு பக்கம் கட்டிக் கொண்டிருப்பவர், அடுத்தடுத்த சீன்களில், ஷ்ரெயா பின்னாடி பழகச் செல்லும் காட்சிகள், சிரிக்கும் படி இருந்தாலும், லாஜிக்க லாரில ஏத்தி நசுக்கும் விதம் இருந்தது.
ரஜினி படத்துல, லாஜிக்கெல்லாம் ஒரு மேட்டரே இல்லன்னாலும், லேசான நெருடல் இருந்தது படம் பாக்கும்போது.

சுமன், சுத்தமா ஒத்து வரல -- சத்யராஜ் அந்த ரோல்ல இருந்திருந்தா, படம் இன்னொரு பரிமாணத்தை எட்டியிருக்கும். :)

இரண்டாம் பாதி, நல்லா ஜாலியா விரு விருன்னு போச்சு. ஆனாலும், தூள் மாதிரி படத்தில், வில்லனை பழிவாங்கும் intelligence, இங்க காணும்.

மொத்தத்தில், ரஜினி என்ற மெகா மெகா ஸ்டாரை, ஷங்கர் என்ற மெகா மெகா டைரக்டர், சரியா பயன் படுத்திக்கலன்னே எனக்கு தோணுது.

இன்னும் அருமையா, ஊருக்கு உபயோகப் படும்படியும், சரித்திரத்தில் இடம் பிடிக்கும் படியும் ஒரு படமா எடுத்திருக்கலாம்.

பாட்ஷா பாக்கும்போது அதிர்ந்தது (குறிப்பா, 'எனக்கு இன்னோர் பேரும் இருக்கு' என்ற வசனம், அடேங்கப்பா, சிம்ப்ளி சூப்பர்ப்), சிவாஜி பாக்கும்போது, எனக்கு அதிரல!

பாட்ஷா படக் கதையை இந்த்த மாதிரி நல்லா செலவு பண்ணி எடுத்திருந்தா, நாயகன் மாதிரி, times top listல வந்திருக்கும். ஹ்ம். மிஸ் பண்ணிட்டாங்க :)

ஆயிரம் இருந்தாலும், ரஜினி ரஜினி தான். அந்த மேஜிக் இன்னும் இருக்கு!

சிவாஜி பாத்திட்டீங்களா? பாட்ஷா பாத்திருப்பீங்க. எதுங்க டாப்பு?


பி.கு1: HelpVinay.ORG மறக்காதீங்க ப்ளீஸ்.இன்னும் 4 நாள்தான் இருக்காம். :(

பி.கு2: கீழே உள்ள படம் Nikon D80யில் போன வாரம் எடுத்தது.
நல்ல படங்கள் எடுக்க டிப்ஸ் தேவையா? இங்க போய் அடிக்கடி பாருங்க.


இது பழையது. Canon S410 + Adobe


பி.கு3: சிவாஜி பாத்தாச்சு. ஆனா வழக்கமான $10 கொடுத்துதான் பாத்தேன். :)

நன்றி!

Tuesday, July 03, 2007

PSYCHO Analysis - சர்வே

நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு மிருகம் ஒளிந்திருக்கும்.
வளர்ந்த முறை, படித்த படிப்பு, பழகிய நண்பர்கள் இவர்களைப் பொறுத்து, மிருகத்தின் % கூடக் கொறச்சு இருக்கும்.

ஒரு மனுஷன் எப்படி வேணா இருக்கலாம். சைகோ, நார்மல், அப்-நார்மல், ஜாலிப் பேர்வழி, ஜொள்ளர், திருடன், நல்லவன், ரொம்ப நல்லவன், புத்திசாலி, etc.. அடுத்தவனுக்கு தொல்லை தராத வகையில் இருக்கும்போது, எப்படி வேணா இருக்கலாம்.

ஆனா, பொது வாழ்க்கைன்னு வந்து, நாம் சொல்வதும், செய்வதும் மற்றவர்களின் வாழ்க்கையில் உரசும் போது, கொஞ்சம் யோசிச்சு தான் ஒவ்வொரு விஷயமும் சொல்லணும், செய்யணும்.
அப்படி செய்யலன்னா, நமக்கும், சிலதுகளுக்கும் வித்யாசம் தெரியாம போயிடும்.

இன்றைய அவசர யுகத்தில் நம் எல்லாருக்குள்ளும் அந்த 'மிருகம்' கொஞ்சம் ஓவராவே தெரியுது. குறுக்கு வழி உபயோகிப்பதிலும் சரி, கண்ணியம் குறைந்து நடப்பதிலும் சரி, இப்பெல்லாம் ஒரு 'பய பக்தி' இல்லாம போயிடுச்சு.

ஊர்ல லஞ்சம் கொடுப்பதில் தொடங்கி, அடுத்தவன் உழைப்பை சுரண்டி உண்பது வரைக்கும், கொஞ்சம் கூட கூச்சப்படாம அஸால்டா பல மேட்டரு செய்யறோம்.
திருட்டு சி.டி வாங்கரது, கள்ளச் சந்தையில் பொருள் வாங்குவது, வரி கட்டாமல் நிலம் வாங்குவது, அலுவலக நேரத்தில் வெட்டியாய் பொழுதைக் கழிப்பது, பொய் பித்தலாட்டம், எட்டு போடாமல் லைஸன்ஸ் வாங்குவது, இப்படி பல விஷயம் கூச்சமே இல்லாம, செய்ய ஆரம்பிச்சுட்டோம்.

சரி சரி சரி. மேட்டருக்கு வரேன்.

கெட்ட குணங்களில் மிகவும் மோசமானது, அடுத்தவன் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப் படுவது. இந்த express யுகத்தில், பள்ளி கல்லூரி நாட்களிலும் சரி, இன்றைய அலுவலகங்களிலும் சரி peer-pressure ரொம்ப ஜாஸ்தி.
நம்மை ஒத்தவர்கள், நம்மை விட பெரிய வளர்ச்சி அடையும்போது, ஒரு விதமான கலக்கமும், பயமும், விரக்தியும், பொறாமையும் கலந்த ஒரு தினுசான மன ஓட்டம் இருக்கும்.

தள்ளு வண்டி விக்கரவங்க ரெண்டு பேர்ல, ஒருத்தன் உணவு விடுதி தொடங்கினாலும்,
உணவு விடுதி வச்சிருக்கரவங்க ரெண்டு பேர்ல, ஒருத்தர் 3 ஸ்டார் ஓட்டல் தொடங்கினாலும்,
10,000 சம்பளம் வாங்கரன்வங்க ரெண்டு பேர்ல, ஒருத்தன் 30,000 வாங்கத் துடங்கும்போதும்,
கூடவே ஆணி புடிங்கிட்டி இருந்தவன், டகால்னு விமானம் ஏறி on-site செல்லும்போதும்,

கீழே விடப்பட்ட மற்றவருக்கு ஒரு மன சஞ்சலம் ஏற்படும்.

எனக்குத் தெரிஞ்சு, நம்மை விட வயசுல சின்னவங்க, நமக்கு மேல உயரும்போது இந்த 'சஞ்சலம்' அதிகமா இருக்கும்.
என்னடா இது, வாழ்க்கைய வேஸ்ட் பண்ணிட்டோமோன்ற ரேஞ்சுல தோணும்.

என் "எட்டு மெகா சாதனைகள்" படிச்சிருப்பீங்க (ஹி ஹி). படிக்காதவங்க இப்ப படிச்சுடுங்க.
அந்த பதிவுல, என் எட்டு சாதனைகள் படித்ததும் (டிஸ்கியும் பின்னூட்டமும் படிப்பதர்க்கு முன்னால்), உங்கள் மன ஓட்டம் எப்படி இருந்தது.
நல்லா யோசிச்சு, கீழே உள்ள பொட்டில வாக்கு போடுங்க.

பொய் சொல்லப் படாது :)

பதிவர்களில் யாராவது, அனுபவஸ்தர்கள் இருந்தா, என் சிந்தனைகளுக்கு மறுப்போ, ஆதரவோ தெரிவித்து, மேல் விஷயங்கள் தெரியப் படுத்துங்கள்.
உங்க சொந்த வாழ்க்கையில் நடந்த உதாரணங்கள் சொன்னாலும் ஓ.கே :)



அமெரிக்க நண்பர்களுக்கு, Happy July 4th! சிக்கன் ஊரிக்கிட்டிருக்கா? :).

நன்றி!

பி.கு: 'டாப் எட்டர்' சர்வே போடணும். உங்களுக்குப் பிடித்த 'எட்டரின்' URL பின்னூடுங்க. ஒரு சர்வே போட்டுடலாம் :)

Monday, July 02, 2007

மனதை மயக்கிய 4 மணி நேரம்! அடி பொளி!

ஜூலை 1, 2007 ஒரு மறக்க முடியாத நாளாக நெஞ்சில் பதிந்த நாள்.
கலிபோர்னியாவில் உள்ள Hayward நகரத்துக்கு வருகை தந்த SPB, ஜேசுதாஸ், சித்ரா, சுசித்ரா, ஷ்யாம் குழுவினரின் இசைப் ப்ரவாகம் தான் அதற்குக் காரணம்.

நாலு மணிக்கு துவங்க வேண்டிய கச்சேரி, வழக்கம் போல் ஒரு மணி நேரத் தாமதத்துடன் துவங்கியது. அதற்க்கு முந்தின இரவு Torontoவில் கச்சேரி இருந்ததாம். சரியான தூக்கம் கூட இல்லாம, அடித்து பிடித்து அடுத்த நாளே, Haywardல் கச்சேரி.

இந்த வயதிலும் இவர்கள் துள்ளித் திரிந்து, ஊர் ஊராக ரசிகர்களைத் தேடிச் சென்று, ஓடி ஆடி நம்மை மகிழ்விப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

நீங்க எப்படின்னு தெரியல, நான் SPB, ஜேசுதாஸின் மிகத் தீவிர ரசிகன்.
இவங்க எல்லாம் தமிழ் பாட்டு பாட வராம இருந்திருந்தா என்ன ஆகியிருக்கும்?
நெனைக்கவே பயமா இருக்கு. இவங்க பாடிக் கலக்கிய ஆயிரமாயிரம் பாடல்கள் நம் வாழ்வில் ஒவ்வொரு தருணத்திலும் கன்னாபின்னான்னு சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது.

அமெரிக்காவில், முதல் முறையாக இந்த மூன்று இமையங்களும் இணைந்து வருவதால், நல்ல வரவேற்ப்பு இருந்தது. 1300 பேர் அமரக்கூடிய அதி நவீன ஆடிட்டோரியம், நிறம்பி வழிந்தது.
மேடை அலங்காரம், மிக நேர்த்தியாக இருந்தது. ஒலி அமைப்பும் A+.

உள்ளே நுழையும்போதே, வெள்ளக்கார தொர ஒருத்தரு, உள்ள படம் எடுக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாரு. அப்பவும் விடாம, flash இல்லாம க்ளிக்கினே இருந்தேன். ஆனா, உருப்படியா ஒண்ணுமே வரல. ரொம்பவே நொந்து போயிட்டேன்.

திரை விலகியதும், முதல் பாடல் பாட, ஜேசுதாஸ் வந்தாரு.
வெள்ளை வெளேர் பளீர் ஜுப்பாவில் கலக்கலா இருந்தாரு தலைவரு.
மைக் புடிச்சு, "மஹா கணபதிம்னு" தன் கணீர் குரலில் தொடங்கி வச்சாரு. யப்பா, liveஆ அவர் கொரல் கேக்கறதே ஒரு த்ரில்லான அனுபவம்.
முதல் பாட்டு முடிந்ததும், டிக்கெட் காசு $50 திரும்பக் கெடச்ச மாதிரி சந்தோஷம் :)

தொடர்ந்து "அம்மா என்றழைக்காத உயிரில்லையே" என்று கலக்கினார்.
சென்னையைச் சேர்ந்த ஷ்யாம் குழுவினரின் பின்னணி இசை, அமர்க்களமா இருந்தது.

அடுத்ததா, ஆஜானுபாகுவா வந்து நின்னாரு நம்ம SPB. சிலரை பார்த்தவுடன் ஒரு சந்தோஷம் வரும். SPB அந்த ரகம். Black&Black suit போட்டுக்கிட்டு டக்கரா வந்தாரு.

விசிலும், கைதட்டலும் அடங்கவே சற்று நேரமானது. சத்தம் அடங்கியதும் "சங்கீத ஜாதி முல்லை, காணவில்லை" என்று பாடத் துடங்கினார். மீண்டும், விசில் கைதட்டல்.
இந்த, புல்லரிக்கும் என்பார்களே - அந்த அனுபவம் எனக்கு.
என்னா மாதிரி பாட்டு, அது, அத, தலைவரு 20 அடி முன்னால் நின்னுக்கிட்டு, ரசிச்சு பாடராரு. இதவிட வேறென்னங்க வேணும் வாழ்க்கைல? அடேங்கப்பா, ஆனந்தம் ஆனந்தம் :)

நம்ம மக்கா, பாடலின் நுணுக்கங்கள் பாடும்போது, கைதட்டி, விசில் அடித்து திக்கு முக்காடிட்டாங்க.
SPBம், இப்பெல்லாம், இந்த மாதிரி நல்ல பாட்டு யாரும் கம்போஸ் பண்றதில்லை என்று வருத்தப்பட்டார்.
தொடர்ந்து "வண்ணம் கொண்ட வெண்ணிலவே" பாடி மயக்கினார். ரசிகர் ஒருவர் "இந்த மாதிரி இன்னொரு பாட்டு கம்போஸ் பண்ணு தல" என்று கேட்டபோது, "கண்டிப்பா" என்று பதிலளித்தார்.

நான் ஆவலுடன் எதிர்பார்த்த சித்ராவின் பாடல் அடுத்தது. ஜானகிக்கு அடுத்து, சித்ரா நம்ம லிஸ்ட்ல டாப்பு. முதல் முறை அவரின் நிகழ்ச்சி நேரில் பார்ப்பதும் அன்றே.
என்ன ஒரு அடக்கம் அவங்க கிட்ட. அடேங்கப்பா.
மெதுவா பேசிக்கிட்டு, மைக்க புடிச்சு "ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே"ன்னு பாடி அசத்திட்டாங்க.
அப்படியே, சி.டி ல கேக்கர மாதிரியே பிழையில்லாம அட்சரம்பெசகாம பாடினாங்க.

SPBயும், ஜேசுதாசும் சேர்ந்து "இரண்டு கைகள் நான்கானால்" பாடினாங்க. ஜேசுதாஸ் அதிகம் பேசமாட்டாருன்னு நெனச்சா, அவரும் அப்பப்ப காமெடி எல்லாம் அடிச்சு கலக்கினாரு.
SPB ஜேசுதாஸை அண்ணா அண்ணா என்று உண்மையான பாசத்துடன் மூச்சுக்கொருமுறை அழைத்துக் கொண்டிருந்தார்.

ராஜாவின், பெருமை கூறாமல் SPB இருக்கமாட்டாரு. "சின்ன மணிக்குயிலே" பாடலைப் பற்றிக் கூறும்போது "best composition" என்று புகழாரம் தூவினார்.
அந்த பாட்டுக்கு, தபேலா வாசிச்சவரு கலக்கிப்புட்டாரு. ஜெயா டி.வில அவர பாத்த மாதிரி ஞாபகம்.

சுசித்ரா என்ற வளர்ந்து வரும் பாடகி "எண்ணத்தில் ஏதோ ஜில்லென்றது" என்ற பாடலை அருமையாக பாடினார். இந்த பாட்டெல்லாம் பாடுவாங்கன்னு நெனைக்கவே இல்ல நானு. ஒரு இன்ப அதிர்ச்சி (கானா பிரபா கிட்ட, நேயர் விருப்பமா இந்த பாட்ட கேக்கணும்:) ).

ஜேசுதாஸ், தன் நண்பனான ரவீந்தரன் இசை அமைத்த, 'His Highness Abdullah" (malayalam) படத்திலிருந்து, "ப்ரமதவனம் வீண்டும்" என்ற கர்நாடிக் ஸ்டைல் பாடலை பாடினார். சென்னை Saphire தியேட்டரில் இந்த படம் வந்த போது, நண்பனுடன் பார்த்திருக்கிறேன்.
படத்தில், இந்தப் பாடலை மோகன்லால் பாடுவார். ஜேசுதாஸின் குரலின் தாக்கம், காதை விட்டகல சில மாதங்களாச்சு. இந்த படம் கெடச்சா பாருங்க. ஒவ்வொரு பாடலும் சூப்பர்.

தொடர்ந்து, "விழியே கதை எழுது" என்று ஜேசுதாஸும், சித்ராவும் கலக்கினாங்க.
SUPER STARனு எல்லாரும் கூப்பாடு போட, SPB, சித்ரா இனைந்து "ஆலப் போல் வேலப்போல்" பாடினாங்க.

எனக்கு தெரிஞ்ச ஒரே தெலுங்கு பாட்டு, 'ஷங்கரா நாதஸரீராபரா". SPB full formல அத பாடினாரு. ட்ரம்ஸ் காரர் பின்னிப் பெடலெடுத்தாரு.

சில சூப்பர்-ஹிட் பாடல்கள் , சூப்பர் சொதப்பல் படத்தில் அமைந்துவிடும். அந்த மாதிரி ஒரு பாடல் தான் "பூவே செம்பூவே உன் வாசம் வரும்". "செந்தாழம்பூவே" என்று ரசிகர் ஒருவர் குரல் கொடுக்க, "பூ தான வேணும்? செம்பூவே பாடறேன்"ன்னு ஜோக்கிக்கிட்டே, ஜேசுதாஸ் அந்த பாட்ட பாடினாரு.
பாடல் முடிவதர்க்கு சற்றுமுன் "யாரும் விசில் அடிக்காதீங்க. பாட்டு முடியும்போது, ஒரு அருமையான flute வரும். அமைதியா கேளுங்க" என்று flute காரரின் திறமையை காட்ட வாய்ப்பு கொடுத்தார். அவரும் மயக்கிட்டாரு. (கானா பிரபா, request#2 :) )

Chennai 600028ல் இருந்து 'யாரோ' பாடலை SPB, சித்ரா பாடினாங்க.
தொடர்ந்து வந்த பாடல்கள்
அதிசய ராகம் - ஜேசுதாஸ்
நீ பாதி நான் பாதி - ஜேசுதாஸ், சித்ரா
கண்ணா வருவாயா - சித்ரா (யப்பா, வாட் எ சாங்!!!! )

திரும்ப, SUPER STARனு ஓலமிட, "காதலின் தீபம் ஒன்று" பாடினாங்க.
அந்த நேரத்தில் HelpVinay.Org (முந்தைய பதிவை பாருங்கள்) பற்றி SPB கூறி, தன் வழியில் இறைவனை வணங்குவதாகச் சொல்லி, "தேவுடா தேவுடா" பாடினார்.

சிவாஜி இல்லாமலா, ரசிகர்களின் தொல்லை தாங்காம, "பல்லேலக்கா" எடுத்து விட்டாரு பாருங்க. அதிருந்துடுச்சு ஆடிட்டோரியமே. குட்டீஸ் எல்லாம் மேடைக்கு ஓடி, ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் :)

ஜேசுதாஸ், "தென்றல் வந்து என்னைத் தொடும்" பாடி, அதைத் தொடர்ந்து மலையாளத்தில் "கடலினக்கர போணோரே காணாப்பொன்னினி போணோரே" என்று அதிரடி கிளப்பினார்.
அந்த பாடல் தொடங்குவதர்க்கு முன்னர் "அடி பொளி" என்ற மலையாள வாக்கியத்துக்கு அர்த்தம் சொன்னார். அதாவது "ப்ரமாதம் தூள்" என்பதுதான் அடி பொளியாம் :)

அப்பறம் பாடினார் பாருங்க, "கண்ணே கலைமானே" பாட்ட, அடேங்கப்பாஆஆஆஆஆஆஆ.
அதைக் கேட்டு, எல்லாரும் அமைதி ஆயிட்டாங்க.
"உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே" -- என்ன வரிகள். படத்துல, கமல் கண்ணுல தண்ணி வரும் இந்த வரிகளின் போது. என்றும் மறவாது, அந்த வாக்கியமும், கமலின் நடிப்பும், இந்தப் படமும், ஜேசுதாஸின் குரலும், இளையராஜாவின் இசைக் கலவையும். We are so blessed my friends to enjoy the great output of these wonderful wonderful artists!

SPB, சித்ரா, தன் பங்குக்கு "குருவாயூரப்பா" பாடலை பாடி, பழைய நினைவுகளை தட்டி எழுப்பினாங்க. "அஞ்சலி அஞ்சலி" அதையும் பாடினாங்க. சூப்பரோ சூப்பர்.

சித்ரா - சும்மா சொல்லக் கூடாதுங்க. கலை அரசிங்க இவங்க. என்ன ஒரு பவ்யம். தொழில் பக்தி. பாத்தாலே, சும்மா அதிருதில்ல கைதட்டல்.
"சுந்தரி கண்ணால் ஒரு சேதி" பாட வந்த சித்ரா கிட்ட, SPB, இந்த பாடலின் இரண்டாவது சரணத்தை சுசித்ரா பாடட்டுமே என்றார் (சுசித்ரா, வளர்ந்து வரும் பாடகி. so, அவங்களுக்கு வாய்ப்பு கொடுப்போம்னு சொல்லியிருப்பாரு). சித்ரா, அழகா வழி விட்டதுமில்லாம, சுசித்ராக்கு கோரஸ் வேற பாடினாங்க. ஹ்ம். தலைக்கனம்னா என்ன வெலைன்னு கேப்பாங்க :)

மலையாள நண்பர்கள் "சேச்சி, அது பாடூ, இது பாடூ"ன்னு கொரல் விட்டுக்கிட்டே இருந்தாங்க.
அவங்கள திருப்திப் படுத்த, பிட் பிட்டா, நச்சுன்னு கொஞ்சம் பாட்ட எடுத்து விட்டாங்க. அருமை!

அப்படி இப்படின்னு, 4 மணி நேரங்கள் போனதே தெரியல.

கடைசியா, "காட்டுக்குயிலு மனசுக்குள்ள" பாடலை பாடி முடிவு பண்ணாங்க.

மீண்டும் அடுத்த வருடம் வருவதா வாக்கு கொடுத்திருக்காங்க.

மொத்தத்தில், அடி பொளி! can't wait to see them all again!!!

:)


பி.கு: HelpVinay.Org மறந்திடாதீங்க. இன்னும் 6 நாட்களே உள்ளன.

குட்டீஸ் போட்டி முடிவுகளும் பரிசுகளும்

குட்டீஸுக்கான பாட்டுப் போட்டி நல்ல வழியா நடந்து முடிந்தது.

as of now, 88 வாக்குகள் வந்துள்ளது. இதில்,
46% வாக்குகளைப் பெற்ற மாதினி முதலாம் பரிசு பெறுகிறார்.
27% வாக்குகள் பெற்று மணிமலர் இரண்டாம் பரிசு பெறுகிறார்.
26% வாக்குகள் பெற்று அமுதசுரபி மூன்றாம் பரிசு பெறுகிறார்.

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

முதல் பரிசாக $25 மாதினிக்கும்;

இரண்டாம் பரிசாக $15 மணிமலருக்கும்;

மூன்றாம் பரிசாக $10 அமுதச்சுரபிக்கும்

சர்வே கமிட்டி (ஹி ஹி நான்தான்) மூலமாக அனுப்பி வைக்கப்படும்.
(ஊரிலிருக்கும் கருப்புப் பணத்தை டாலராக்க விருப்பப் படுபவர்கள் தெரிவிக்கவும். இங்கே என்னிடம் டாலர் வாங்கி, ஊரில் இருக்கும் குட்டீஸுக்கு, ரூபாயை பரிசாகக் கொடுக்கலாம். சிவாஜி பாத்த எபெக்டு :) )
well, jokes aside, winners, if you have preferences on how you want to receive the prize money, let me know. cheque, online gift certificate, etc... :) )

வெற்றி பெற்றவர்கள், தங்கள் முகவரியை surveysan2005 at yahoo.com என்ற மின்னஞ்சலுக்கு உடனே அனுப்பி வைக்கவும். நன்றி.

குட்டீஸை ஊக்கப்படுத்தி பாடலை பதிவு செய்த விதத்தை தனிப் பதிவா போடுங்க. படிக்க நல்லா இருக்கும் :)



கூடிய விரைவில் இன்னும் ஒருமுறை கலக்கலாம்.

கலந்து கொண்டவர்களுக்கும், கடைசி நிமிட பிரச்சனைகளால் கலந்து கொள்ளாமல் போனவர்களுக்கும், கலந்து கொள்ளாவதர்களுக்கும், பாட்டைக் கேட்டு வாக்கியவர்களுக்கும், கேட்காமலே வாக்கியவர்களுக்கும், கோடானு கோடி நன்றிகள்.

:)

Sunday, July 01, 2007

மிக முக்கிய அறிவிப்பு!

இப்பதான் SPB, Yesudoss, Chitra, Suchitra, Shyam குழுவினரின் மிக ரம்யமான 4 மணி நேர இசைப் ப்ரவாகத்தை அனுபவித்துவிட்டு வருகிறேன்.
ஒவ்வொரு மணித்துளியும், காதுக்கு தேனா இருந்தது.
இதப்பத்தி விலாவாரியா தனிப்பதிவு போடறேன். (இப்ப தூக்கம் வருது).

நிகழ்ச்சியில், SPB சொன்ன ஒரு முக்கியமான விஷயத்தை பகிரவே இந்தப் பதிவு.

HELPVinay.Org உடனே பாருங்க. (site is slow, please be patient and read).

Vinay என்ற 29 வயது மருத்துவருக்கு, Leukemia இருக்காம்.
இன்னும் 7 நாட்களில், அவருக்கு Bone-Marrow transplant பண்ணணுமாம்.

அதுக்காக, Donors தேடி வருகிறார்கள்.

முடிந்தவர்கள், உதவுங்கள். உடனே!

இதைப் பற்றி, (about Vinays condition, BoneMarrow information, etc...) தெளிவான விளக்கங்கள் நம் VSK வழங்கியுள்ளார். இங்கே பார்க்கவும்.

Please spread the news!

a few words from Vinay (from the website).
[ The fear that Rashmi and I feel. . . IT IS UNBEARABLE. It exists in every second, every minute, every hour. It is a constant presence. I’m glad that its me going through this fear because I wouldn’t want anyone else to experience this. Not Rashmi, not my family, not anyone I know, and not anyone I don’t know. I was just an ordinary guy 9 months ago. Just like you. Now nothing is how I want it to be. I just want to say one thing to those out there scared to donate . . . I understand what fear is. I understand wanting to run away from it all. But there’s a difference, I can’t. Running away is not an option for me. For those of you who fear, I want you to know: I wish I could take that fear instead of mine, I would snatch it in a second if it meant not going through this. ]

SAMEER என்ற இன்னொரு நபருக்கும் Leukemia உள்ளது. அவருக்கும் உதவுங்கள். விவரங்கள் இங்கே.

நன்றி!.

பி.கு: அமெரிக்காவில் வசிப்பவர்கள், தங்கள் வசிப்பிடத்தின் அருகில் நடக்க இருக்கும் Donor registering பற்றிய விவரங்களை இங்கே காணலாம். முடிந்தால் உதவவும்.

பி.கு2: நான் எனது பெயரை பதிந்து விட்டேன். தாமதிக்காமல், நீங்களும் அவ்வாரே செய்ய வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்! God Bless You All!

Bona Die! Demat! Bondi! Azul! Talofa! Dobar Dan!

என் அன்பார்ந்த பதிவுலக மக்களே,

எங்கோ சுற்றித் திரிந்து வெட்டியாய் பொழுதை கழித்துக் கொண்டிருந்த இந்த சர்வேசன்,
இன்று தட்டுத் தடுமாறி,
ஈ.கலப்பை கொண்டு தங்கிலீஷில் தட்டச்சி,
ஓரளவுக்கு உப்புமா கிண்டப் பழகி,
பெரும்பான்மையில் ஒருவனாய்,
கல(க்)ங்கிக் கொண்டிருக்கிறேன்.

அளக்கிறேன் என்ற பெயரில் நான் செய்யும் பிடுங்கல்களை பொறுத்துக் கொண்டு, நல்ல ஓட்டுகளையும், கள்ள ஓட்டுகளையும், வாக்கெடுப்புப் புறக்கணிப்புகளையும் மாறி மாறி அள்ளி வீசும் அன்பு நெஞ்சங்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.

தமிழ்மணமே, உன் சேவை போற்றுதர்க்குரியது.
நான் உப்புமா கிண்ட பாத்திரமாய் இருந்து,
என் சுரண்டல்களைப் பொறுத்துக் கொண்டு
இதுநாள் வரை ஆதரவு தந்ததோடல்லாமல்,
என்னை நட்சத்திரமாகவும் தோளில் தூக்கிப் பிடிக்கிறாயேஏஏஏஏஏஏஏஏஏ.. டச்சிங்!
நன்றீஸ் பலப் பல உரித்தாகுக!

மறுபடியும் வணக்கமுங்கோ.

இந்த வாரம் 'official' சர்வே வாரம்! சர்வே போட ஐடியாஸ் அள்ளி வீசுங்கோ!

வர்டா!

பி.கு1: என் எட்டு மேட்டர் படிச்சுடுங்க, அப்பதான் நமக்குள்ள ஒரு understanding வரும், இந்த வாரமும் சுமுகமா போகும் :)

பி.கு2: Brahminical Arrogance - பதிவர்களின் தீர்ப்பூஸ்.

பி.கு3: படம் புடிக்க சொல்லித் தரோமுங்கோ. வந்து பாருங்கோ. (இதப் பத்தி விலா வரியா தனிப் பதிவு போடறேன். விஷயம் தெரிஞ்சவங்க, டீம்ல சேருங்க. பட்டைய கெளப்பலாம். சீரியஸ்லி!)

பி.கு4: நீங்க எந்த ஊருக்குப் போனாலும் அங்க எப்படி கும்புடுவாங்கன்னு, கீழ பாத்து கத்துக்கோங்கோ. (சுட்ட இடம்)

LANGUAGE

TRANSLATION

AFRIKAANSgoeiedag
ALBANIANmirë dita
ALSATIANguàtertag
AMHARICdana esteline
ARABICsalam / sabah el kheir / marhaba
ARMENIANbarev
AZERIsalam
BAMBARAani sogomen (morning) / ani tlé (afternoon) / ani oulà (evening)
BASQUEegunon (morning) / arratsaldeon (afternoon) / gauon (evening)
BELARUSIANvitaju / dobraj ranicy (morning) / dzien dobry (afternoon) / viečar dobry (evening)
Прывiтанне (pryvitannie)
BENGALIsunchhen
BERBERidh-iyessbhène
BOBOka tiana (morning) / ka sion (afternoon) / ka lima (evening)
BOSNIANhalo
BRETONdemat
BULGARIANдобър ден (dóbar den) / zdrave
BURMESEmingalar pa
CATALANbon dia / hola
CHINESEnǐ hăo
CORNISHde(th) da (good day) / myttyn da (good morning) / gorthewer da (good evening) / nos da (good night)
CORSICANbonghjornu / salutu
CROATIANbok / dobar dan
CZECHdobrý den
DANISHgoddag (formal) / hej (coll.)
DUTCHgoede morgen / goede middag / goede avond
(morning / afternoon / evening)
ESPERANTObonan tagon / saluton
ESTONIANtere / tere hommikust
good evening : tere õhtust
FANGmbolo (1 pers.) / mboloani (X pers.)
FAROESEhey
FINNISHhyvää päivää (formal) / päivää (semi formal)
moi / hei / terve
FLEMISHgoede morgen / goede middag / goede avond
(morning / afternoon / evening)
FRENCHbonjour (morning) / bonsoir (evening) / salut (colloquial)
FRISIANha / goeie / hoi
FRIULANbondi
GALICIANola
GEORGIANgamarjoba (anytime) / dila mshvidobisa (good morning)
GERMANhallo / guten Tag (more polite)
GREEKgia / kalimera (good morning)
GUARANÍmba'éichapa
HAITIAN CREOLEbonjou / bon swa / la rezone / alo
HEBREWshalom
HINDInamaste / namaskaar
HUNGARIANjó napot kívánok / szia
ICELANDIChalló
IGBOndeewo / i boola chi / ututu oma
INDONESIANmorning: selamat pagi
noon: selamat siang
afternoon: selamat soré
evening: selamat malam
IRISH GAELICDia duit
ITALIANciao / buongiorno (good morning)
JAPANESEkonnichi wa
ohayô (gozaimasu) (more polite with "gozaimasu")
KABYLIANazul
KHMERtcheripsou
KOREANannyǒng hashimnikka / annyong haseyo
KURDISHsilav
LAOsabai di
LATINsalve, ave (addressing 1 pers.) / salvete, avete (X pers.)
LATVIANlabdien
LINGALAmbote
LITHUANIANlaba diena
labas rytas (morning) / labas vakaras (evening)
LOW SAXONhallo / houje
LUXEMBOURGEOISmoien / gudde moien
MACEDONIANdobarden
MALAGASYmanao ahoana / manahoana
MALAYselamat pagi (morning) / selamat tengahari (afternoon)
selamat petang (evening) / selamat malam (after sunset)
MALAYALAMnamaskaram
MALTESEmerħba / oj
MAORIkia ora
MONGOLIANsain baina uu (Сайн байна уу)
MORÉne y yibeoogo
NORWEGIANgod dag / hei / morgn
OCCITANbon jorn / adieu
PERSIANsalâm
POLISHdzień dobry / dobry wieczór (le soir)
PORTUGUESEbom dia (morning) / boa tarde (after 12.00) / boa noite (evening)
oi / olá
ROMANIlatcho divès
ROMANIANbună ziua
RUSSIANДобрый день (dobrii den) / Здравствуйте (zdravstvuite)
SAMOANtalofa
SARDINIANbona die
SCOTTISH GAELIChallo
SERBIANdobar dan / zdravo
SHIMAOREjéjé
SHONAmhoro (plural: mhoroi)
SINDHIacho saiin
SLOVAKdobré ráno (morning)
dobrý deň (during the day)
dobrý večer (evening)
SLOVENIANpozdravljen (to a man) / pozdravljena (to 2 men) / pozdravljeni (to 3 men or more)
pozdravljena (to a woman) / pozdravljeni (to 2 women) / pozdravljene (to 3 women or more)
pozdravljeni (mixed group)
dobro jutro (good morning) / dober dan (good day) / dober večer (good evening)
lahko noč (good night - taking leave)
živijo (colloquial)
SOBOTAdobar dan
SPANISHbuenos días / hola
SWAHILIjambo[dj] / [hu]jambo, habari za mchana?
SWEDISHgod dag / hej
SWISS-GERMANguete tog
TAGALOGkumusta (po) / magandang araw
TAHITIANia orana
TAMILvanakam / kallaï vannakam (morning only)
TELUGUnamaskaram
THAIสวัสดีคะ (sawatdii kha) - woman speaking
สวัสดครับี (sawatdii khrap) - man speaking
TURKISHmerhaba
UDMURTdzéchbur (common form for one person)
dzéchbureś (polite form for one person or common form for two or more people)
UKRAINIANpryvit (hi) / dobryi ranok (good morning)
dobryi den (good afternoon) / dobryi vechir (good evening)
URDUas salaamo alaikum
UZBEKassalomu alaykum
VIETNAMESEchào (ông, bà, cô : Mr, Mrs, Miss)
WALOON (orthographe à betchfessîs)bondjoû / ay! / Diè wåde
WELSHhylo / sut mae
WEST INDIAN CREOLEbonjou
YORUBAe karo