recent posts...

Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Tuesday, August 26, 2008

ஐம்பத்தைந்து வயதைத் தாண்டியவர்களே...

வணக்கம் மாம்ஸ், மாமீஸ்.

சௌக்யமா?

அம்பத்தஞ்சு வயசாயிடுச்சே, வேலைக்குப் போறீங்களா இன்னும்?
ரிட்டையர்டா?
கடமைகள் எல்லாம் முடிஞ்சிருச்சா?
ஷுகர், பி.பி எல்லாம் கட்டுக்குள்ள இருக்கா?

வருங்காலத்துக்கு வேண்டியதெல்லாம் சேத்து வச்சாச்சா?

சொத்து பத்தெல்லாம் பட்டியல் போட்டு பிரிச்சு வச்சிட்டீங்களா?

பொழுது போக்க என்ன பண்றீங்க?

டி.வியா? பக்கத்துவீட்டு மாம்ஸ்/மாமீஸோட்ட வெட்டிப் பேச்சா?
கோயில் கொளமா?

எங்கத் தெருவுல நெறைய பெரியவங்க, உங்க வயசை ஒத்தவங்க இருக்காங்க.
டோட்டல் வெத்துப் பேச்சு வீரர்கள்.
தொடர்ச்சியா அஞ்சு மணி நேரம் கவருமெண்ட்ட கொர சொல்லியே செலவழிப்பாங்க.

அவங்க வீட்டுக் குப்பையெல்லாம் பெருக்கி எடுத்து, காம்ப்பவுண்டு சொவத்துக்கு வெளியில போடுவாங்க.

குப்பை அள்றவன் வறானா, தெரு வெளக்கு எரியுதா, முனிசிப்பாலிட்டி காரன் வேலை செய்யறானா, இப்படி எந்தக் கவலையும் கிடையாது இவங்களுக்கு.

தெரியாமத்தான் கேக்கறேன், அம்பத்தஞ்சு வயசாச்சு, இன்னும் இருக்கர காலத்துல, கொஞ்ச நாளாவது, ஊருக்காக வாழலாமே?
பசங்கள படிக்க வச்சீங்க, வளத்து விட்டீங்க, உங்க ஃப்யூச்சருக்கும் எல்லாம் சேத்து வச்சிட்டீங்க.

இன்னும் எவ்வளவு நாளா, 'சுயத்துக்கே' வாழப் போறீங்க?

கொஞ்சம் மெனக்கெடுங்க.
கூட்டை விட்டு வெளீல வாங்க.
வெயில்ல அலைங்க.

'பொது'வுக்காக முயற்சி எடுத்து எதையாச்சும் செய்ய முடியுதான்னு பாருங்க.

அட்லீஸ்ட், கவருமெண்ட் அலுவலங்கங்களுக்கு பொடி நடையா போய், கேள்வி கேளுங்க.

ஏன் ரோடு போடலை? ஏன் தண்ணி வரலை? ஏன் தெரு வெளக்கு எரியலை? ஏன் ஆட்டோக்காரன் மீட்டர் போட மாட்றான்? ஏன் இவன் லஞ்சம் கேக்கறான்? ஏன் இவனுக்கு எழுதப் படிக்கத் தெரியல? ஏன் இவனுக்கு சோறு தண்ணி இல்ல?

இப்படி எவ்வளவோ கேள்விகள் கேக்கலாம் நம்ம ஊர்ல.
கேள்விகள் கேளுங்க. முடிஞ்சத செய்யுங்க.

வெத்தா மிச்ச வாழ்க்கைய வாழ்ந்துட்டு போவாதீங்க.

பி.கு: எங்க தெரு, டோட்டல் டேமேஜா இருக்கு. ரோடு இல்லை. நோண்டிப் போட்டு மூணு வருஷம் ஆச்சு.
எல்லாத்துக்கும் சிகரம் வச்ச மாதிரி, இந்த ஆகஸ்ட்-15க்கு, தெருவில் இருக்கும் கொடி மரத்தில், பெருசுங்க எல்லாம் சேந்து கொடி கூட ஏத்தலியாம். கேட்டா, internal-politics. இந்த மாம்ஸ்/மாமீஸ்க்கும், அந்த மாம்ஸ்/மாமீஸ்க்கும் ஒத்து வரலையாம்.
வருஷத்துல, எல்லாரும் கூடி செய்யர, ஒரே சமூகப் பணி, இந்த கொடி ஏத்தரது. அதையும் செய்யலண்ணா, என்ன வாழ்ந்து என்ன புண்ணியம்?

வெளங்கிடும்! :(



அமெரிக்கப் பெருசுகள் சிலர் செய்யும் நல்ல விஷயங்களை இங்கே க்ளிக்கி தெரிந்துகொள்ளுங்கள். மனதிருந்தால் மார்கமுண்டு!

~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~

பி.கு: என் முந்தைய ..பூ-தாங்கி.. பதிவில் ராமலக்ஷ்மி'யின் பின்னூட்டம் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படுகிறது.
( இது என்னன்னு புரியாதவங்க Mixture பதிவை படிங்க :) )

Thursday, December 06, 2007

லஞ்சப் பெருச்சாளிகள் - முடிவுரை!

தஞ்சம் பொழைக்க ஊரு விட்டு ஊரு வந்து பல வருஷம் ஆச்சு.
ஆனாலும், ஒவ்வொரு வருஷமும், விடுமுறையை சென்னையில் கழிப்பது வாடிக்கை. ஒரு வருஷமும் 'மிஸ்' பண்ணதில்லை.

வெளிநாடுகளில் இருக்கும் வசதி வாய்ப்புகள், 'ஈஸி' லைஃப் ஸ்டைல் எல்லாம் பழகப் பழக, நம்மூரில் இருக்கும் பல ப்ரச்சனைகள், பூதாகரமாகத் தோன்றும்.
விடுமுறையில் வரும்போது, நம்மால வீட்ல இருக்கரவங்களுக்கும் 'ஸெம' டார்ச்சர் இருக்கும்.
'இதுல ஏன் இவ்ளோ தூசியா இருக்கு'
'ஏன் குப்பைய வெளீல போடறீங்க'
'எல்லாத்தையும் அடுக்கி நீட்டா வைங்க'
'ஏன் இவ்ளோ எண்ணை சேக்கறீங்க சமையல்ல'
'ட்ரைவர், laneல ஓட்டுங்க சார். ஏன் அலைபாயறீங்க'
'ரெட்ல நில்லுங்க. மத்தவங்க நிக்கலன்னா பரவால்ல. நீங்க நில்லுங்க'
இப்படி கசா முசான்னு எல்லாத்துக்கும் கேள்வி கேட்டு, நம்ம அடைந்த நன்மை, வையகம் பெறட்டும்னு, எல்லாருக்கும், சகட்டு மேனிக்கு, அட்வைஸு அள்ளித் தெளிப்பேன்.
இதனால், எரிச்சல் அடஞ்சவங்க பல பேரு. (தொர வந்துட்டார்யா வந்துட்டார்யா).

ஆனா, இம்முறை வந்த போது, சென்னை ரொம்பவே பிடிச்சு போச்சு.
முக்கிய காரணம், வெயிலே இல்லாத குளு-குளு நாட்கள் அதிகமானதால் இருக்கலாம்.

இதைத்தவிர, ஏகப்பட்ட மாற்றங்கள் ஒரே வருடத்தில்.
சகட்டு மேனிக்கு கட்டப்பட்டுள்ள ஐ.டி.பார்க் என்ன, தெருக்கு தெரு இருக்கும் ஸ்பென்ஸர்ஸ், சுபிக்ஷா, ரிலையன்ஸ் கடைகள் என்ன, வீட்டுக்கு 10 ஸெல் ஃபோன்ஸ் என்ன, 10 நிமிஷத்துக்கு ஒருமுறை வரும் ஃப்ளை-ஓவர்ஸ் என்ன, சிட்டி செண்டர் மாதிரி ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் என்ன, அடேங்கப்பா.

எல்லா பயலும் பி.ஸியா இருக்கான். என்னமா செலவு பண்றாங்க்ய.

$க்கு 39ரூ மாத்திட்டு அலையர நமக்கே முழி பிதுங்குது. ஆனா, லோக்கல் ஆசாமிகள், 100ரூ கொடுத்து, அஸால்ட்டா 'அழு(not ழ)கிய தமிழ் மகன்' பாக்கறான். வாழ்க வளர்க! :)

சரி, இனி 'தலைப்பு' விஷயத்துக்கு வருவோம்.

இந்த முறை சென்னையில் சப்-ரெஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் ஒரு வேலை ஆகவேண்டியிருந்தது. அதை பற்றிய முந்தைய கிருக்கல் இங்கே.

முந்தைய பதிவில் சொன்னதைப் போல, அந்த 'வேலையை' செய்து முடிக்க, லீகலா, ரூ100 fees கட்டி, form பூர்த்தி செய்து கொடுத்தால், 1 மணி நேரத்தில் நமது கைக்குக் கிட்ட வேண்டும்.

ஆனா, எல்லாருக்கும் தெரிஞ்ச மாதிரி, நம்மூரு சப்-ரெஜிஸ்ட்ரார் அலுவலகங்கள் பல, லஞ்சப் பெருச்சாளிகளின் கூடாரம்.
கைநாட்டு வாங்கும் ப்யூன் முதல், சப்-ரெஜிஸ்ட்ரார் வரை, 'மாமூல்' வாங்காமல் மூச்சு கூட விடமாட்டார்கள்.

அப்பப்ப, எவனாவது, விஜிலன்ஸ்ல போட்டுக் கொடுப்பான். விஜிலென்ஸும் திடீர் விசிட் அடிச்சு, ஒருத்தர அரெஸ்ட் பண்ணிட்டுப் போகும், அவரும் அடுத்த நாளே பெயிலில் வந்துடுவாரு. வாடிக்கையா நடக்கரது இந்த கூத்தெல்லாம்.

இப்ப இருக்கர, ரியல் எஸ்டேட் சூட்டில், எல்லாரின் வருமானமும் கொழிக்கிறது.
ஒவ்வொரு வேலைக்கும் ஒரு 'நிர்ணயிக்கப்பட்ட' amountஐ, மொய்ப் பணமாக தானாகவே தந்து விடுகிறார்கள் அனைவரும்.
இதனால், 'கேட்க்கும்' வேலையும் மிச்சம் நம்ம பெருச்சாளிகளுக்கு.

லஞ்சம் வாங்குபவர்களை விட, லஞ்சம் கொடுப்பவர்கள் பெரிய குற்றவாளிகள் என்பது என் எண்ணம். வேல ஈஸியா முடியணும்னு, நம்மளும் கொடுத்து கொடுத்து பழக்கப்படுத்திட்டோம்.
அப்பப்போ, ஏதோ ஒரு நல்லவரு, விஜிலென்ஸு போய், ஒரு ஃப்ரிக்ஷன் கொடுக்கறாரு.
எல்லாரும் விஜிலன்ஸுக்கு போனா, இந்த லஞ்சப் ப்ரச்சனை எப்பவோ முடிந்திருக்கும்.

என் தேவைக்காக நான் சப்-ரெஜிஸ்ட்ரார் அலுவலகம் போகும்போது, தீர்மானமாக, லஞ்சம் கொடுப்பதில்லை என்று முடிவு செய்துவிட்டேன்.

கட்ட வேண்டிய fees மட்டும் கட்டி ஃபார்ம் கொடுத்தா, நெனச்ச மாதிரியே போட்டு அலக்கழிச்சாங்க.
"நாளைக்கு வாங்க ரெடி ஆயிடும்"
"நாளன்னைக்கு வாங்க. ப்ரிண்டர்ல இங்க் இல்ல"
"ப்ரிண்டர் மெக்கானிக் வரல. ரெண்டு நாளு ஆகும்"
"ரெஜிஸ்ட்ரார் ஹெட்.ஆபீஸ் போயிட்டாரு. 4 மணிக்கா வாங்க"
"லா எல்லாம் பேசாதீங்க சார். ப்ரிண்டர் சரியானா கொடுத்துடப் போறோம். போய்ட்டு நாளைக்கு வாங்க"

மூணு நாளு, வீட்டுக்கும் ரெஜிஸ்ட்ரார் ஆபீஸுக்கும், வண்டிக்கு பெட்ரோல் ஊத்தி லோல் பட்டதுக்கு, 'லஞ்சமே' கொடுத்திருக்கலாம்னு, தோணும் அளவுக்கு ஒரு எரிச்சல் உண்டாக்கினாங்க.

விஜிலன்ஸு போற அளவுக்கெல்லாம், மன தைரியமும் இல்ல, நேரமும் இல்ல. விரக்தியின் உச்சத்துக்கே போயிட்டேன். நாலாவது நாள், வழக்கமான பெருச்சாளிகள் சீட்டில் இல்லாத நேரம்.

அலுவலகத்தில் தட்டச்சு செய்யும் இருவரிடம் பேச்சுக் கொடுத்து விஷயத்தைச் சொன்னேன்.
"அடப்பாவமே, இதுக்கா இப்படி இழுத்தடிக்கறாங்க" என்று உண்மையான வருத்தத்துடன் பேசினார்கள்.
"நீ பேசாம அந்த ஃபார்ம் மாதிரியே வெளீல ப்ரிண்ட் பண்ணிட்டு வந்துடு சார்" என்று ஐடியா கொடுத்தார்கள்.
ஆனால், வெளியில் இருந்த ஹெட்-க்ளார்க், அதை உடனே மறுத்துவிட்டார், "அதெல்லாம் செல்லாது, அப்படி பண்ணா" என்றார். (அவரும், மொய்ப்பணம் வராத கடுப்பில் இருப்பது, அவரின் பார்வையிலேயே தெரிந்தது).

மற்ற கீழ்-நிலை அலுவலர்கள், எல்லோரும் விஷயம் அறிந்து, ஆளுக்கொரு அட்வைஸ் கொடுக்க ஆரம்பித்தார்கள்.
"இதே பொழப்பு சார் இவங்களுக்கு. எதையும் சுலுவா முடிக்க வுடமாட்டாங்க. கெட்டு போன ப்ரிண்டர சரி பண்ணாம 10 நாளாச்சு. மெக்கானிக்க கூப்டாதான வருவான். அவசரமா தேவங்கறவங்க, அவங்களே ப்ரிண்டர கொண்டாந்து எடுத்துனு போறாங்க. பேசாம, நீயும் ஒரு ப்ரிண்டர கொண்டாந்துரு " என்ற ரீதியில் ஐடியாக்களும் அங்கலாய்ப்புகளும்.

நானும், மேலே கீழே அலைந்ததில், ப்ரிண்டர் எல்லாம் ஒண்ணும் தேத்த முடியல.

ஒரு வயதான 'தட்டச்சும்' பெண்மணி ஒருவர் வந்து ஒரு பழைய ஃபார்ம் கொடுத்தார். "சார், இதுல இருக்கர மத்த விஷயத்த white-ink போட்டு அழிச்சு, ஒரு xerox எடுத்துட்டு வாங்க. நான் உங்க வெவரத்தை டைப் பண்ணித் தரேன். அத எடுத்துக்கிட்டு போய் கையெழுத்து வாங்கிடலாம். ப்ரிண்டர் வேல செய்யலன்னா, இந்த மாதிரி பண்ணிக் குடுக்கலாம் தப்பில்லல" என்று நம்பிக்கை ஊட்டினார்.

'Customer Service'ன் எல்லைக்கே இட்டுச் சென்றார் அந்தப் பெண்மணி. அவர் அந்த சப்-ரெஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் இருந்து கொண்டு, மொய்ப் பணம் இல்லாமல், இப்படி உதவியது தான் வியப்பிலும் வியப்பு.

நானும், சடுதியில் அவரின் ஐடியாப் படி, white-ink அடித்து, xerox செய்து,அவரிடம் கொண்டு வந்து கொடுக்க, அவரும் ஒரு 30 நிமிடம் மெனக்கட்டு, என் விவரங்களை தட்டச்சிக் கொடுத்தார்.

முடிந்ததும், அதை ரெஜிஸ்ட்ராரிடம் கொடுத்து, கையெழுத்துக் கேட்டேன் "என்ன சார், இப்படி எல்லாம் கொடுக்கக் கூடாது சார். Laserல தான் அடிக்கணும். ப்ரிண்டர் சரியானதும் வாங்க. ரெடி பண்ணிடலாம் வாங்க, என்றார்".

ஜிவ்வ்வ்வ்னு ஏறிச்சு எனக்கு. அடக்கிக் கொண்டு, "அதெல்லாம் பரவால்ல சார். இந்த அளவுக்கு இருந்தா போதும், நான் மெனேஜ் பண்ணிக்கறேன், கையெழுத்துப் போடுங்க" என்றேன்.

வேண்டா வெறுப்பாக, கையெழுத்துப் போட, "லஞ்சப் பணம் கொடுக்காமல்" வேலை முடிந்த சந்தோஷத்தில், எஸ்கேப் ஆனேன்.

லஞ்சப் பெருச்சாளிகள் நிறைந்திருக்கும் இடத்திலும், சில பேர் இன்னும் நேர்மையாகத் தான் இருக்கிறார்கள். ஊர் இன்னும், டோட்டல்-டேமேஜ் ஆகாததுக்கு இந்த மாதிரி நல்லவர்கள் தான் காரணம்.

அதிகப் படியா நேரம் இருந்து, இந்த மாதிரி இன்னொரு காரியம் நடக்கணும்னா, அடுத்த முறை, கண்டிப்பா விஜிலென்ஸு துணையை நாடுவேண்டும் என்று தீர்மானமாக முடிவு செய்திருக்கிறேன். நம்மால் முடிந்த எரிச்சலை நாமும் அவர்களுக்குத் தருவோம்.

எல்லாரும் சேந்து குட்டோ குட்டுனு குட்டுவோம். என்னிக்காவது திருந்துவானுங்க கெரகம் புடிச்சவனுங்க!

உதவிய, அந்த 'வயதான அம்மணிக்கு' என் மனமார்ந்த நன்றிகள்.
திருந்தாத பெருச்சாளிகள், திருந்த, என் கடவுளர்கள் உதவட்டும்.

லஞ்சம் வாங்கும் ஒவ்வொரு கையும், ஏதாவது ஒரு நாள் விளங்காமல் போகட்டும்!
லஞ்சம் கொடுக்கும் ஒவ்வொரு கையும், ஏதாவது ஒரு நாள் நன்றாக வலிக்கட்டும் (ஹி ஹி) :)

விஷயம் தெரிஞ்சவங்க யாராச்சும் (விக்கிபசங்க? மக்கள் சட்டம்??), விஜிலென்ஸு பத்தியும், அங்கு புகார் கொடுக்கும் முறை பற்றியும் விலாவரியா எழுதினா ரொம்ப உபயோகமா இருக்கும். செய்வீங்களா?

நன்றி!

பி.கு: நச்சுனு ஒரு கதைஸ் படிச்சீங்களா படிச்சீங்களா? 19 பேர், இதுவரை கோதாவில். அப்ப நீங்க?

:)

Tuesday, July 24, 2007

என்ன பாவம் செய்தனை... Feelings பா.

சில வருடங்கள் வெளியூர்களில் வேலை செய்துவிட்டு, தாய் வீடு திரும்பிய மாதிரி சிலிக்கான் வேலி என்றழைக்கப்படும் வ.கலிபோர்னியாவுக்கே திரும்ப வந்தாச்சு.
அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இருந்தத விட இப்ப நம்ம மக்களின் ஜனத் தொகை இரு மடங்காகியிருக்கு (பாத்தா, பத்து மடங்கான மாதிரி தெரியுது :) ).

காலைல அலுவலகம் செல்லும்போது, வழி நெடுகிலும், எல்லா பேருந்து நிலையங்களிலும், நம்ம ஊர் பசங்களும் பொண்ணுங்களும் வரிசை கட்டி நிக்கும் காட்சி வியப்பைத் தருது.
சாதாரணமாகவே, மற்ற நகரங்களைக் காட்டிலும், இங்கு இந்திய உணவகங்களும், காய்கரிக் கடைகளும் எக்கச்சக்கமா இருக்கும்.
கடந்த சில வருடங்களில், இந்தக் கடைகளின் எண்ணிக்கை கன்னா பின்னான்னு ஏறிடுச்சு. சரவணா பவன் முதல், முனியாண்டி விலாஸ் வரை 10 நிமிட சுற்றளவில் எல்லாமே இருக்கு.

வந்தவுடன் முனியாண்டி விலாஸ் போய் ஒரு கட்டு கட்டணும்னு மெனுவ பாத்தா, உவ்வே. முயல்கறி மொதல் ஐட்டம். பாத்தவுடன், மீ த எஸ்கேப்! :)

என் அலுவலகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் இந்திய முகம். தெலுங்கரும், தமிழரும், 'இந்தி'யர்களும் இல்லாத ஒரு டீமும் இல்லை.
கணினித் துறையில் நம் ஆளுமை அடேங்கப்பா ரகம். நாமின்றி அணுவும் அசையாது. (அப்படின்னு நெனச்சுக்கிட்டிருக்கோம்... மத்தவங்க சுதாரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. குறிப்பா, ரஷ்யா, சைனா,...)

வார இறுதியில் ஊர் சுற்றச் செல்வது வழக்கம். வெள்ளிக்கிழமையே 'weekend' மேனியா ஆரம்பமாயிடும்.
இயற்கை வளங்கள் கொழிக்கும் ஊர் இது.

அது தவிர, இவர்களே நிறுவியுள்ள பூங்காக்களும் விளையாட்டு மைதானங்களும், நீச்சல் குளங்களும், குளம், குட்டைகளும் ஏராளம் ஏராளம்.
வீட்டுக்குப் பக்கத்தில் (10 நிமிட தூரத்தில்) 25 ஏக்கர் பரப்பளவில் அழகான புல்தரையுடன் ஒரு பூங்கா.

அதுனுள்ளே, 4 டென்னிஸ் கோர்ட், 2 கூடைப் பந்துக் களம், பேஸ் பாள் க்ரவுண்டு (கிரிக்கெட்டு இங்கதான் ஆடராங்க நம்ம பயலுவ). குழந்தைகளுக்கு என்று ஸ்லைடு, ஊஞ்சல் மாதிரி ஐட்டங்களும் இங்கயே இருக்கும். எல்லாமே இலவச உபயோகத்திர்க்கு.

இந்த மாதிரி பூங்காக்கள் கிட்டத்தட்ட 10 மைலுக்கு ஒன்று எல்லா மூலை முடுக்கிலும் இருக்கும்.
இதைத் தவிர, நீச்சல் குளங்கள், indoor விளையாட்டு வசதிகள், லைப்ரரி என்று பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் நடந்தெத்தும் தூரத்தில்.

இவற்றின் பராமரிப்பும் மிக மிக அருமையா செய்யறாங்க.


இது பத்தலன்னா, சுற்றிப் பார்க்க இயற்க்கை வளங்களும் ஏராளம். Lakes, மலைகள், கடற்கரை என்று சகலமும் உண்டு. சில வாரங்களுக்கு முன் அருகில் இருக்கும் ஒரு Lakeக்கு போயிட்டு வந்தோம். கண்ணாடி மாதிரி தண்ணி, ஏக்கர் கணக்குல அதைச் சுற்றி, பச்சைப் பசேல் புல்வெளி, வாடகைப் படகு, Lakeல் குளிக்க வசதி, குளிப்பவர்களை பாதுகாக்க நாலஞ்சு baywatch காவலாளிகள்.

சூப்பர் குளியல் போட்டு, சிக்கன், மீன் வகையராக்களை Barbeque செய்து, உண்டு விழுங்கி, காத்தாடியெல்லாம் விட்டு, கொஞ்சம் கிரிக்கெட்டும் விளையாடி, நண்பர்களுடன் அளவளாவி மகிழ்ந்து வீட்டுக்குத் திரும்ப இரவானது.

இங்கிருக்கும் சாலை வசதிகளும், மற்ற infrastructure வசதிகளும், சொல்லி மாளாது.
சுலப வாழ்க்கை சுலப வாழ்க்கை!

எல்லாம் முடித்துவிட்டு அன்றைய இரவு உறங்கும்போது பல கேள்விகள் மனதில் எழுதன.

நம்ம ஊர் (குறிப்பா சென்னை) நெலம என்ன?

'தார்' பார்த்து 10 வருடங்களுக்கும் மேலான எங்கள் தெருச் சாலை. பாலைவனம் போல் காட்சி அளிக்கும் மரங்களற்றச் சூழல் (மரம் வைக்க முயற்சி பண்ணேன். அது தோல்வி அடஞ்சது தனிக் கதை).
ஒரு நல்ல ரோடு போட்டு, மண்ணு பறக்காம இருக்க, ரோட்டின் இரு பக்கமும் புல்லும், மரங்களும் வைத்து பராமரிக்கக் கூடவா தெரியாது நமக்கு?

எவனோ பணம் பண்ண, drainage கட்டப் போறோம்னு, அங்கங்க நோண்டி வச்சு, மூன்று வருடங்களாக வாய் பிளந்திருக்கும் சாலை.

drainage வர வரைக்கும் இது இருக்கட்டும்னு, திறந்த வெளி சாக்கடை கால்வாய் கட்டிவிட்டு, அதை பராமரிக்காமல் கப்படிக்க விட்டிருக்கும், லோக்கல் முனிசிபாலிடி பாடிகள். இதைக் கட்ட அவங்க கொள்ளையடிச்சது தனி கதை.

தினம் தினம் பல்லவனிலும், எலெக்ட்ரிக் ரயிலிலும் முட்டி மோதி புளி மூட்டையாய் பிதுங்கி வரும் வயதானவர்களும், பெண்களும், சிறுவர் சிறுமிகளும்.

விளையாட்டு மைதானமெல்லாம், இனி புத்தகத்திலும், டி.வியிலும் மட்டுமே பார்க்க முடியும் என்பது கூடத் தெரியாமல், விட்டுக்குள்ளே 'புக் கிரிக்கெட்' ஆடும் நண்பர்களின் பிள்ளைகள்.

சென்னையைச் சுற்றி பச்சைப் பசேல்னு நெல்லு வெளஞ்ச எடமெல்லாம் இன்னிக்கு பில்டிங்கா மாறியிருக்கு. சரியான திட்டமிட்டுதான் இதை எல்லாம் செய்யரானுவளா? இல்ல, வரும் காசை அள்ளிப் போட்டுக்கிட்டு எவன் எப்படிப் போனா என்ன, தன் வயிறு நெரஞ்சா போதும்னு சில அல்லக்கைகளின் வழக்கமான நோண்டல் தானா?

ஒழுங்கான ரோடே இல்ல, அப்பரம் எங்க லைப்ரரி, நீச்சல் குளம், பூங்கா, barbeque, ஊஞ்சல், சருக்கு மரம் இதெல்லாம் எதிர்பாக்கரது?

வீட்டுக்கு பக்கத்துல ஒரு பெரிய கொளம் இருக்கு (lake). அதையும் ஓரத்துல எவனோ 'ஆக்ரமிக்க' ஆரம்பிச்சிருக்கான். இன்னும் ரெண்டு மூணு வருஷத்துல, அங்கயும் flat வந்தா ஆச்சரியப் பட ஓண்ணுமில்ல.

Spencersக்குள்ள போனா, நல்லாதான் இருக்கு, ஆனா, அந்த மெயின் ரோடுக்கு, லெப்டும் ரைட்டும் உள்ள போனா, கலீஜாதான் இருக்கு, இன்னிக்கும்.
என்னிக்கும் இப்படிதான் இருக்கும் என்கிர ரீதியில, நாளுக்கு நாள் மோசமாகிட்டேதான் இருக்கு.

அரசாங்க அலுவலகங்களில், எந்த ஒரு சின்ன வேலை முடிக்கவும் (கரெண்டு கனெக்ஷன், தொலைபேசி, passport verifications, etc...) லஞ்சம் கொடுத்தே பழக்கப் பட்டுப்போன வீட்டுப் பெருசுகள்.

என் கண்ணுக்கு மட்டும்தான் அப்படித் தெரியுதா? உங்க கண்ணுக்கு சிங்காரச் சென்னை தெரியுதா? தெரிஞ்சா சொல்லுங்க, அந்த எடத்துல ஒரு லேண்ட் வாங்கிப் போடறேன்.

இப்படி நாஸ்தியாகுதே நம்ம ஊரு?

எங்கங்க கோட்ட விட்டோம்?

என்ன பாவம் செஞ்சோம்?

பாவங்க நம்ம வருங்காலச் சந்ததி :(

இதையெல்லாம் யோசிக்க யோசிக்க விரக்தியும், இயலாமையும், கையாலாகாத் தனமும் பீரிட்டு வருது.
ஆனா, root cause இதுக்கெல்லாம் நாம தானோ?

கொஞ்சூண்டு பொறுப்பா இருந்திருந்தா கூட, இந்தளவுக்கு மோசமாயிருக்காது.

சரி பண்ண முடியாத அளவுக்கு லேட் ஆயிடுச்சோ? தேவையில்லாத கவலையோ?

உங்க பீலிங்க்ஸையும் பதிவா போடுங்க! பதில் தெரிஞ்சா சொல்லுங்க!

பீலிங்க்ஸ் தொடரும்...