recent posts...

Thursday, November 26, 2009

நச் கதை போட்டி - சர்வே ஆரம்பம்

நச் போட்டிக்கு 70 கதைகள் வந்து, எழுபதில், சென்ஷி துணையுடன், டாப்20ஐ தேர்வும் செய்தாயிற்று.
எழுபது கதைகளின் குட்டி விமர்சனங்களையும் பாத்திருப்பீங்க.
கே.ரவிஷங்கரும், கதைகளுக்கான விமர்சனம் எழுதியிருக்காரு.

இனி, டாப்20லிருந்து, முதல் பரிசு (US$20), மற்றும் இரண்டாம் பரிசுக்கான (US$10) கதையை தேர்ந்தெடுக்கும் பணி ஆரம்பம். பரிசு பணமாகவோ, வேறு மார்கமாகவோ, வென்றவர் விருப்பத்தின் படி பட்டுவாடா செய்யப்படும்.
ஏற்கனவே அறிவித்தபடி, பரிசுத் தொகையைத் தவிர, US$70, முதல் பரிசு வென்றவர் பெயரில், உதவும் கரங்களுக்கு அனுப்பப்படும்.

(டாலர் வீக்காகிக் கொண்டு வருவதைப் பார்த்தால், பரிசுத் தொகைய வச்சுக்கிட்டு ஒரு குச்சி முட்டாய் தான் வாங்க முடியும் போலருக்கே :) )

கீழே, வாக்குப் பெட்டியில் இருபது கதைகள் கட்டம் கட்டப்பட்டுள்ளன.
உங்களுக்கு மிகவும் பிடித்த நச் கதைக்கு உங்கள் வாக்கை போடுங்கள்.
ஒன்றுக்கும் மேற்பட்ட நச் கதைகள் சம அளவில் பிடித்திருந்தால், அனைத்துக்கும் உங்கள் வாக்கை போடும் வசதி உண்டு.
கதையை யார் எழுதியது என்பதை மனதில் கொள்ளாமல், கதையின் சிறப்பை மட்டுமே கவனத்தில் கொண்டு, உங்கள் வாக்கைப் போடவும்.

வெற்றிக் கதை, உங்கள் வாக்குகளையும், சென்ஷி, வெட்டிப்பயல், மற்றும் CVRன் மதிப்பெண்களையும் கலந்தடித்து, தேர்வு செய்யப்படும்.

சர்வே பொட்டி December 13ஆம் தேதி மூடப்படும்.

தயவு செய்து கள்ள ஓட்டுகள் போடுவதை தவிர்க்கவும். சிறந்த கதை வெல்லட்டும்.



வாக்குப்பெட்டி தெரியாதவர்கள் இங்கே க்ளிக்கவும்.

போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றீஸ்!
போட்டிக்கான கதையை வாசித்து போட்டியை சிறப்பித்த அனைவருக்கும் பஹூத் பஹூத் நன்றீஸ்!

நண்பர்கள் அனைவருக்கும் ஈத் முபாரக்.
பிரியாணிக்காக வெயிட்டிங்!


பி.கு: இன்னோர் கதைப் போட்டி இங்க நடக்குது. - http://simpleblabla.blogspot.com/2009/11/blog-post_22.html

Tuesday, November 24, 2009

நச் கதைகள் - டாப்20, விமர்சனம்

இதை எப்படி அணுகுவது என்ற குழப்பத்தை தீர்த்துக்கொள்ளவே எனக்கு சில நேரம் பிடித்தது.
கதைகளில் 'நச்' பலவகையில் கையாளப்பட்டிருக்கும், அட்லீஸ்ட் இரண்டு வகையாகவாவது இருக்கும்.

அ) கதையின் போக்கிலேயோ கதாபாத்திரத்துக்கோ ஒரு திடீர் திருப்பம் ஏற்படுவது. அந்த தடால் முடிவு வாசகருக்குத் தரும் ஒரு மினி (இன்ப/துன்ப/திடுக்) அதிர்ச்சி. 'அட'ன்னு சொல்லவைக்கும்.
ஆ) கதை எல்லாக் கதைகளையும் போல் பயணித்து, கடைசியில், வாசகரை ஏமாற்றும் விதமாய் அமைவது. அதாவது, நாம ஹீரோ ஒரு காலேஜ் பையன்னு நெனச்சுக்கிட்டு படிப்போம், கடைசீல பாத்தா, ஹீரோ ஒரு தெருவோர 'நாய்'னு முடிச்சிருப்பாங்க. கதையின் முடிவில், புன்முறுவலையும் ஒரு அசடு வழிதலையும் வாசகருக்கு ஏற்படுத்தும்.

இதில் 'O Henry' வகை கையாடல், 'அ' வகையைச் சேர்ந்தது.

கதை, அ. வகையா, ஆ. வகையான்னு பாத்தெல்லாம் மார்க் போடப் போறதில்லை. எந்த வகையாயிருந்தாலும், 'நச்' திருப்பம், ஒரு 'பன்ச்' தருதான்னு பாத்தேன்.

சரி, நாம மட்டும் இப்படி மார்க் போட்டு டாப்20ஐ தேர்ந்தெடுத்தா, நம்மள வூடு கட்டி அடிப்பாங்கன்னு தெரிஞ்சுது. அதனால, இன்னொரு தியாகி தேவப்பட்டாரு. வலைவீசி தேடி, 'சென்ஷி'யை பிடிச்சாச்சு.
அவரும் எல்லா கதைகளையும் பொருமையா படிச்சு, அவரின் டாப்20ஐ கட்டம் கட்டி அனுப்பினாரு.

எங்கள் இருவரின் டாப்20ல், காமனா வந்த கதைகள், ஆட்டோமேடிக்காக தேர்ச்சி பெற்றது. மற்றவைகளை, மீண்டும் அலசி, ஃபைனல் லிஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

சில கதைகள், எனக்குப் பிடிக்காமல் போனது, சென்ஷிக்கு பிடித்திருந்தது.
அவருக்கு பிடித்தது, எனக்கு பிடிக்காமலும் போயிருந்தது.
எங்க ரெண்டு பேருக்கும் பிடிக்காதது, பின்னூட்ட வாசகர்களுக்கு பிடித்திருந்தது.
ஸோ, இதிலேருந்து இன்னா தெரியுதுன்னா, எல்லாம் சப்ஜெக்ட்டிவ் டு த ரீடர்ஸ் டேஸ்ட்.
ஆனா, ஏதாவது ஒரு ஃபார்முலா வைத்துதானே ஆகணும். அதனால, நம்ம ஃபார்முலா

டாப்20க்கு - சென்ஷி + சர்வேசன் மதிப்பெண்கள்
டாப்2க்கு - வாசகர்கள் வாக்குகள் + சென்ஷி + இன்னும் 2 நடுவர்கள் (அவங்க பேரு அப்பாலிக்கா சொல்றேன்).

இனி, எல்லா கதைகளுக்கும், எங்களாலான விமர்சனத்தைப் பாருங்கள்.
பச்சைகலரில் சாயம் பூசப்பட்ட கதைகள் டாப்20ல் தேர்ச்சி பெற்ற கதைகள்.
இவற்றில் வெற்றிக் கதையை தேர்ந்தெடுக்க, கூடிய விரைவில் தேர்தலும், இன்னும் நடுவர்களின் கருத்தும் கலந்தடித்து, தீர்ப்பு கூறப்படும்.

இப்போதைக்கு, விமர்சனங்களைப் படியுங்கள்.
டாப்20ஐ, மீண்டும் ஒரு முறை படியுங்கள். தேர்தல் கூடிய விரைவில் நடத்தும்போது, உங்கள் வாக்கை போட, மனதளவில் ரெடி ஆகிக்கோங்க.

பங்கு பெற்ற அனைத்துக் கதாசரியர்களுக்கும் என் கோடானு கோடி நன்றிகள்.
கலக்கிபுட்டீங்க!

1. நெல்லி மரம் - சதங்கா (Sathanga)
ச: கோயிலில் சந்தித்த பெண் பின் அண்ணனுக்கு மனைவியாகியதை 'நச்'சென சொன்ன விதம் அருமை. போட்டி கான்ஸெப்ட்டுக்கு உறம் போட்ட விதம் தொடக்கக் கதை. நன்று.

செ: நிச்சயம் எதிர்பார்த்திராத ஒரு நச்தான். ஆண்பால் கதை சொல்லி இல்லைன்னு நம்ப வைக்கற இடம் கதையை மகிழ்வா உணர வைக்குது. ஆனாலும் இது மாத்திரம் போதுமா நச் கதை வெற்றிக்கு...


2. அசைன்மென்ட் - கிஷோர்
ச: கதாப்பாத்திரத்துக்கு ஏற்படும் நெருக்கடியும், நமக்கு கிஷோர் கொடுக்கும் 'நச்' திருப்பமும் ரசிக்கம் படி இருக்குது. ஆனா, நச் அறிந்தபின், இந்த பாத்திரம் எப்படி இப்ப்படியெல்லாம் யோசிக்கமுடியும் என்று லாஜிக் யோசிக்கும்போது, இடிக்கிறது.

3. கடைசி இரவு - ராம்குமார் அமுதன்
ச: கல்யாணத்துக்கு காத்திருக்கும் பெண். மாப்பிள்ளையை காணவில்லை. இளைஞன் தற்கொலை செய்து கொள்கிறான்னு, விரு விருன்னு பயணிக்கும் கதையில், 'நச்' பாதியிலேயே ஊகிக்க முடிவதால், கெத்து கொறஞ்சுடுது. ஆ வகைக் கதை.

செ: சுஜாதாவின் பழையகதை வாசனையில் இன்னொரு புதுக்கதை.

4. புவனேஷ்வரி மாமி - சர்வேசன் (போட்டிக்கல்ல, சும்மா லுலுவாய்க்கு)
ச: அடேங்கப்பா. இந்த மாதிரியெல்லாம் கூட ஒரு கதாசரியரால் கற்பனை செய்யப்பட்டு கதை புனையப்படுவது உலக வரலாற்றிலேயே இது முதல் முறை. இந்த வருட சாகித்ய அகாடமி விருது இந்த கதைக்கு நிச்சயம் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. இது திரைக்காவியமாய் வரர்போகும் நாள் நீண்ட தொலைவில் இல்லை. (ஹிஹி)

5. உயிரின் உயிரே - R. Gopi
ச: வாசகரை கடைசியில் ஏமாற்றும் வகைக் 'நச்'. கதையில் கருத்ஸெல்லாம் சொல்றது ப்ளஸ் பாயிண்ட்டு. ஆனா, இது ஒரு ஃபோர்ஸ்ட் 'நச்', இயற்கையா அமையாத மாதிரி ஒரு தோணல்.

6. தொழில் - ராமலக்ஷ்மி
ச: பல நாள் திருடன் ஒரு நாள் எப்படியும் ஆப்டுக்குவான். என்னதான் தில்லாலங்கடித்தனம் பண்ணாலும், யாராவது எங்கையாவது எப்படியாவது கண்டுக்குவாங்க. 'நச்' இருந்தாலும், ஒரு யதார்த்த நச்சுத்தன்மை இல்லை. அவசரத்தில் உருவாக்கபட்ட நச்சோ?

7. recession ஐயா recession - ramachandranusha(உஷா)
ச: நாங்களும் காஸ்ட் கட்டிங் பண்றோமுன்னு, 'பந்தா' பண்ண வேண்டிய அவசியத்தில் இருக்கும் MNCக்களில் நடக்கும் கூத்தில், சாமான்யன் பாதிக்கப்படும் சோகத்தை, சுட்டியிருக்கிறார். கருத்ஸ் சொல்ல நினைத்து கதை எழுதியதாலோ என்னமோ, 'நச்'சின் வீச்சு கம்மி.

8. வைதேகி காத்திருப்பாள் - T.V.Radhakrishnan
ச: கால்செண்டரில் வேலை செய்யும் ஐயங்காராத்துப் பெண் கதையின் நாயகி. சாதியை தூக்கி ஆடும் சிலர் இருப்பதைச் சொல்லும் கதை. அழகா நகர்ந்த கதையில், நச் எப்படி இருக்கும்னு ரொம்ப ஏங்கிப் போய் கடைசி வரியை படிச்சா, ஏமாற்றமாய்தான் இருந்தது. இன்னும் கொஞ்சம் வேற மாதிரி ஏதாவது சொல்லிருக்கலாம்ம்.

9. நெஞ்சு பொறுக்குதில்லையே - ஷைலஜா
ச: நாட்டாமை கதை, நல்லாத்தேன் இருக்குது படிக்க. கதர் சட்டை போட்ட நாட்டாமை, புள்ளையை சரியா வளக்காம, வரவங்அ போரவங்களுக்கெல்லா லட்ச ரூவா கொடுத்து சரி பண்றது, ஒட்டலை.

10. திருப்பம் - சின்ன அம்மிணி
ச: எதிர்பாரா திருப்பம் இறுதியில். ஆனா, அந்த திருப்பத்தை வந்தடைய வேண்டிய மற்ற உபகரணங்கள் முந்தைய பத்திகளில் இல்லாதது, கதைக்கு வலு சேர்க்காமல் போனமாதிரி இருக்குது.

செ: நிச்சயம் யாருமே எதிர்பாராத நச் முடிவு..!

11. கண்ணால் காண்பதும் - பெயர் சொல்ல விருப்பமில்லை
ச: ஏழை காதலன், பணக்கார காதலி, வில்லன் அப்பா கொண்ட கதைக் களம். ஊரை விட்டு ஓடும் காதலனும், ஓடாமல் நின்று விட்ட காதலியும் நல்லாத்தான் இருந்தது. ஊகிக்க முடிந்த நச்தான் என்றாலும், இது கதாசிரியரின் குற்றமல்ல. நச்சு இருக்கும் என்ற எதிர்பார்ப்பினால் வந்த வாசகனின் பிழை இது.

12. அப்பா சொன்ன நரிக்கதை - நிலா ரசிகன்
ச: இலைமறைவு காயா அருமையாச் சொல்லியிருக்காரு, ரெண்டாவது அப்பா செய்யும் கொடுமையை. அங்கங்க வச்ச 'லீட்' அருமை. இரண்டாம் முறை வாசிக்க வைத்தது. இதுவே 'நச்'சின் சத்தை காட்டுது

செ: தனிமையில் தவிக்கும் மனதிற்கு ஆறுதலாய் கை கொடுக்கும் அத்தனை உள்ளங்களும் நல்லதாய் மாத்திரம் இருப்பதில்லை. முடிவு சிறிய வலி.

13. ஆவணி பௌர்ணமி - நானானி
ச: வாலிப இளங்காளைகள், தவிர்த்து வெறுத்து ஒதுக்கும் தினத்தை மையமாக கொண்ட கதைக் கரு. ப்ராக்டிக்காலிட்டி கம்மியான அப்ரோச். முழு சினிமா எடுக்க முடியாது, ஆனா, காமெடி ட்ராக் ஓட்டலாங்கர கதைக் கரு. நச் இருக்கு. ஆனா, பச்னு ஒட்டலை.

14. நொடிப் பொழுதில் - Pappu
ச: இவரு ரொம்ப நல்லவராமாம். கடலை போடறான் என்று எண்ணிய பெண்ணிடம், திடுதிப்பென்று பழமாய்ப் போன விடலையின் கதை. 'சிறு'கதையில் 'பெரு' கதையின் வர்ணனையுடன் ஒரு ஸாஃப்ட் நச்.

15. ஆல்ப்ஸ் கொ(ம)லைக் காற்று வந்து - முகிலன்
ச: சீட்டின் நுனிக்கே இஸ்துக்கினு வரும் வர்ணனை. ஆனா பாருங்க, நச் இப்படி இருக்கும்னு உள்ளூர ஒரு 'இது' உருவாயிடுது. நச்சில் பி.எச்.டி வாங்கிய எனக்கு மட்டும்தான் இப்படி இருக்கும்போல. 'வழக்கம் போல்' நச்சாக்காமல், வேறு மாதிரி முடித்திருந்தால், ஸ்பார்க் ஏறியிருக்கும். உ.ம். சங்கர் பட சூட்டிங்கில் இது நடக்குது. தூர நின்னு படம் புடிச்சா, சங்கரின் அடியாட்கள் தேடி வந்து காமிராவ புடிங்கிப்பாங்க்யன்னு...

16. ஜாக்கிரதை மழை பெய்கிறது - Vidhoosh
ச: நல்ல விறு விறு. எதிர்பார்த்தது போல் நச்சும் இருந்தது. பாகவுந்தி. ஆ வகை நச்தான் ஒரு மைனஸ்

17. சதிராடும் மேகங்கள் - அரவிந்தன்
ச: நல்ல வாசிப்பு அனுபவம். காட்சிகள் கண் முன் நடப்பது போல். சமுதாயம் ஒதுக்கிய ஒருவரின் ஆட்டோ பயோகிராஃபி. ஆனா, நச் எண்டிங்?

18. ஆதவன் - நான் ஆதவன்
ச: குசும்பான நச். நச் என்ன என்பதை பின்னூட்டம் வழியே சொல்லித் தெரியப் படுத்த வேண்டிய அவல நிலைக்கு உந்தித் தள்ளப்பட்டுள்ளார் ஆசிரியர். ரூம் போட்டு யோசிக்கராங்கப்பா...

19. இக்கணம் இக்கதை - Nundhaa
ச: வித்யாசமான கதை. என் அறிவுக்கு, இதன் 'நச்' என்னன்னு புரியல்ல. இவருதான் அவரைக் கொன்னாரா? இல்ல, வேர ஏதாவது உள்குத்து நச் இருக்கா. சபைல தெரியாதுன்னு சொன்னா, மதிப்பு கொறஞ்சுடும். அதனால, நல்ல கதைன்னு சொல்லி எஸ்ஸுகிறேன் ;)

செ: கதையின் முடிவு ஆரம்பத்திலிருந்து தொடர்கிறது. சிறப்பான உத்தி. கதைப்புத்தகங்களின் வழியே கதையை நகர்த்தி கதையோடு கதையை முடித்தது அருமை.

20. யாரோ ஒருத்தி - குகன்
ச: மசாலா தடவப் படவாத, சிம்பிளான நச் கதை. சைட் அடிப்பவரின் அசடு வழிதலும், கடைசியில் அவரின் உண்மை முகம் வெளிப்படுதலு நல்ல கதை அம்சம்.

21. செவப்புத் தோல் - ஈ.ரா
ச: முடிவு ஓரளவுக்கு ஊகிக்கக் கூடிய கதைகளில் இதுவும் ஒண்ணு. ஆனா, விறு விறுன்னு எழுத்து நடை. குட்.

22. படுக்கை - பினாத்தல் சுரேஷ்
ச: ஷார்ப்பான நச். எமக்கு சப்ஜெக்ட் மாட்டர் தெரியலன்னாலும், ரெண்டு மூணு தபா படிக்க வைக்கும் நச். ஜூப்பர்

23. அன்னா மரியா குமாரசாமி - செந்தழல் ரவி
ச: தலைப்பையே நச்செனப் பெற்ற கதை. சிம்பிளான நரேஷன். போரடிக்காத நடை. சைட் அடித்தல் என்னும் மகாத்மியம் விறு விறுப்புக்கு பஞ்சம் வைக்கவில்லை. நச், பன்ச் கம்மின்னாலும், மரியாவை மனதளவில் சைட் அடிக்கத் தொடங்கியதால் ஒரு கிறக்கம் வரத்தான் செய்தது.

24. ரெட் லைன் - வண்டிக்காரன்
ச: வேக நடை. கண்முன் காட்சி விரிகிறது. ஆயிரம் இருந்தும், வசதிகளும் இருந்தும், 'நார்மலான' நச் பாதையை தேர்ந்தெடுத்து, வாட்டி விட்டார் கதாசரியர். ரூம் போட்டு யோசிச்சு, வித்யாசமான முடிவை சொல்லியிருந்திருக்கலாம் (அடுத்த வருட போட்டிக்கு, இந்த 'முடிவு' வரக்கூடாதுன்னு ஒரு ரூல் போடணும் :))

25. பச்சை நிற பக்கெட் - Thirumalai Kandasami
ச: உண்மையின் தழுவல்னு சொல்லிட்டாரு. வாழ்க்கைல அடிபட்டிருக்காரு போல. நல்ல நகைச்சுவை. வடிவேலு ரேஞ்சுக்கு டயலாக். ஆனா, பன்ச் தேடிப் பாத்தேன் கிடைக்கல்ல.

26. கடைசியில் ஒரு திருப்பம் - மணிகண்டன்
ச: ஹ்ம். என்னத்தச் சொல்ல. ஆனா, எது இருக்கோ இல்லியோ, ஷார்ப்பா ஒரு திருப்பம் வச்சுட்டாரு. அந்தளவுக்கு சந்தோஷம்தேன்.

27. விடை கொடு எங்கள் நாடே - சங்கர்
ச: நன்று. நச்-சும் உள்ளது. நம்பும்படியான ஒரு ஸைன்ஸ் ஃபிக்ஷன்.

28. மில்லியன் காலத்துப் பயிர் - சத்யராஜ்குமார்
ச: நல்ல கற்பனை. புத்திசாலித்தனமான குட்டிக் கதை, வித் எ மெசேஜ். ஆனா, கல்யாண நாளுன்னெல்லாம் வருதே? எப்படி?

செ: எதிர்பாராத நச்!

29. டிஸ்லெக்சியா - Vinitha
ச: மெசேஜ் இருக்கு. ஆனா, ஒரு கதைக்கான மேட்டர் இல்லை. இன்னும் கொஞ்சம் விரிவு படுத்தியிருக்கலாம்.

30. அவரு..அவரு..ஒரு - வருண்
ச: ஐ லைக்ட் இட். சிரிப்பூட்டிய முடிவு. பின்னூட்டத்தில் சொல்லியிருந்ததைப் போல், இன்னும் எடிட் பண்ணியிருந்தா, நச் கூடியிடுக்கும்

31. வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் - கெக்கேபிக்குணி
ச: கொஞ்சம் திகிலான நச். ரங்கமணிகள் சாக்கிரதை.

32. ஜனனி - படுக்காளி
ச: நல்ல கதை. நல்ல நடை. ஆனா, நச்-தான் புரியல்ல எனக்கு. காட்சியெல்லாம் அருமையா விவரிச்சிருக்காரு. மாதவன் ஆக்ஸிடண்டீல் செத்தான். இடிச்சவனும் சாராயம் குடிக்கறான். ஆனா, நச் புரியல்ல.

33. எக்ஸ்பிரஸ் இளமதி - SUREஷ் (பழனியிலிருந்து)
ச: ஏதோ உள்குத்து வச்சு கதை. ஆனா, எனக்கு புரியல்ல. திருமணம் செய்து கொள்ளவிருக்கும் மகப்பேறு மருத்துவரைப் பாத்து, உங்க பசங்களும் டாக்டருக்குத்தான் படிக்கறங்களான்னு கேக்கறாங்க. ஹ்ம். முப்பதுகளில் இருப்பவரைப் பாத்து ஏன் அப்படி கேக்கறாங்க்ய?

செ: இயல்பான வேக ஓட்ட நடை

34. ஒரு கிராமத்தின் காலைப் பொழுது - சயந்தன்
ச: ஈழத்துச் சோகம். காலை நேரத்து காட்சிகளை படிக்கும்போது, கண்முன் விரிகிறது, பச்சைப் பசேல் என்ற ஊர். இறுதியில் சோகமே பிரதானம். நச் இல்லை.

செ: சரியான ஓட்டம் உள்ளது. நச் கொஞ்சம் கம்மி.

35. புகை - kalyanaraman raghavan
ச: நச் ஓவர் டோஸா தெரியல்ல. நச்சின் வீச்சு பெருசா இல்லைன்னா, நச் இல்லைனே சொல்லத் தோணுது. குடிகாரத் தந்தையின் மனமாற்றம், சந்தோஷத்தைத் தந்தாலும், ஈர்ப்பைத் தரலை. பொண்டாட்டியை முடியை பிடிச்சு அடிக்கர குடிகாரன், மகளின் வார்த்தைக்கு டக்குனு மனமிறங்குவான் என்பது இடிக்குது.

36. வசவும் திட்டும் சாம்பலும் - கே.ரவிஷங்கர்
ச: யதார்த்தமான நடை. யதார்த்தமான விஷயங்கள். யதார்த்தமாவே முடிவு. ட்விஸ்ட் மிஸ்ஸிங்?

செ: இயல்பான கதை சொல்லல். பட் நோ நச்!

37. 72877629 - கே.பி.ஜனார்த்தனன்
ச: ஆபீஸரின் தில்லாலங்கடித்தனத்தை மேலாளர் போட்டுடைக்கும் கதை. கொட்டப்பாக்கு, எலுமிச்சம்பழம், எல்லாம் நல்ல வாசிப்பனுபவம். நச்சும் இருக்கு, ஆனா டூ-மச்சா இல்லை.

38. ஜாதி கேடயம் - இரும்பித்திரை அரவிந்த்
ச: புவனேஷ்வரி புரீது. ஆனா, நச் எங்கே?

39. காமம் கொல் - Cable Sankar
ச: வில்லங்கமான ஆசாமியாரின் கதை. விறு விறுப்பு குறைவு. இளைஞனைப் புடிச்சது நச் திருப்பம்தேன், ஆனா, மைல்டா இருக்கு.

செ: செல்வன் இதை மாதிரி நிறைய ”டச்”களை முன்னாடியே உபயோகிச்சுருக்காரு. ஆனாலும் ஆதினம்ன்னு சொல்ல ஒரு தில்லு வேணும் :)

40. அந்த இரண்டு ரூபாய் - வி.நா.வெங்கட்ராமன்
ச: பணக்கார அல்ப்பைகள் பத்தி ரொம்பவே குட்டியா சொல்லியிருக்காரு. ரொம்பவே குட்டி. கதையளவு இல்லாமல், துணுக்கு மாதிரி இருக்கு.

41. டிஷ்யூங் - கார்த்திகைப் பாண்டியன்
ச: யாரோ துப்பாக்கியால் சுடுவாங்கன்னு தலைப்பு சொல்லிடுது. அதாலயோ என்னவோ, சப்புனு போயிடுது முடிவு.

42. சாப்ட்வேர் - ப்ரசன்ன குமார்
ச: ரூம் போட்டு யோசிக்கறாங்க்யப்பா... ஆ வகை. ஆனா, தலைப்புக்கும் கதைக்கும் உள்ள கனெக்ஷ்ன்?

43. போகமாட்டேன் - புதுவை சந்திரஹரி
ச: ஒரு குட்டி துணுக்கு அளவுக்கே சங்கதி உள்ளது. சிறு கதைக்கு, இன்னும் ஒரு சில வரிகளும், இன்னும் கொஞ்சம் கூட சத்தும் தேவை. முடிவு குட்.

44. நறுமண தேவதை - எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன்
ச: நல்ல சுவாரஸ்யமான கதை. முடிவு வேர எதிர்பார்த்தேன். இதுவும் நல்லாவே இருந்தது. ஆனா, ஐந்து நாள் முடிஞ்சு ஆறாவது நாள்தான் ப்ரியாவை அமுக்கப் போறான்னு கதைல இல்லியே?

செ: புதிய களம். நல்ல விறுவிறுப்பான துவக்கம். முடிவை இன்னும் கொஞ்சம் யோசித்திருந்தால் நிச்சயம் இதுதான் முதல் பரிசுக்கு வந்திருக்கும்

45. கறுப்பு ஞாபகம் - ஆதிமூலகிருஷ்ணன்
ச: ஜாலியான கதை. திருப்பமும் இருக்கு. அனுபவபூர்வமா ரசிச்சு எழுதின மாதிரி இருக்கு.

46. சன்யாசம் கூறாமல் கொள் - சாம்ராஜ்ய ப்ரியன்
ச: நல்ல நடை. ஆனா, இஞ்சினில் அடைப்பு ஏற்பட்ட மாதிரி, அப்பப்ப திக்கி ஓடுது. கடைசியில் கிராஷ் ஆயிடுது.

47. காமம் வழிந்தோடும் உடல் - graham
ச: நல்ல வித்யாசமான முயற்சி இது. அக்கீரோ குரோசோவோ ரஷ்மோன் விருமாண்டி ஸ்டைலில். சின்ன குழுப்பம், வசந்தை மூணு வருஷம் காதலிச்சு அப்பாலிக்கா போட்டுத் தள்ளறாங்களா? அரவிந்த் அடுத்த இலக்கா?

48. லாரி விபத்து - MSV Muthu
ச: பெரீரீய்ய்ய கதை. நல்ல நச் மூடிவு. பெருசா இருக்கரதால 1/2 தாண்டியதும், ஸ்ஸ்ஸ்னு ஒரு அலுப்பு வந்துடுது. ஆனா, கதையில் ஒரு விறுவிறுப்பு இருப்பதால், மீதிப் பாதியையும் படிக்க வைத்தது. குட்.

49. மாத்தி யோசி - நாஞ்சில் பிரதாப்
ச: டேக் இட் ஈஸி பாலிஸி கதை. பஸ் ஸைட்டு அல்வாவாகிப் போனதும் பாலிஸி வித்து வந்தவரை லாபம் சொல்லும் ஃப்ரெண்டு சூப்பர். நச் கம்மி.

50. பாராட்டு - ஸ்வர்ணரேக்கா
ச: சிம்பிளான கதை. நல்ல நரேஷன். முடிவும் ஜாலியான நச்.

51. நானே நானா - சுப.தமிழினியன்
ச: விரக்தியின் உச்சகட்டம். தனிமை விரும்பியின் வாழ்க்கைக் குறிப்பு. படிக்கவே பயமா சோகமாயிடுது. நச் மிஸ்ஸிங்?

52. அடுத்த வீட்டுப் பெண் - Mohan Kumar
ச: பெண்ணடிமைத்தனம் இன்னும் நடக்கத்தான் செய்யுது. முடிவு சோகம். எனக்கு நச் கம்மியா தெரிஞ்சது, ஆனா, வாசகர்கள் பலரையும் கவர்ந்திருக்கு. ஓவ்வொருத்தருக்கு ஒரு புரிதலை தரும் போலருக்கு. குட்டிக் கதை. நல்ல கதை.

செ:கொடுமை செய்யும் கணவன் வாய்த்தாலும் அவனுக்கு வார்த்தைகளில் மதிப்பை கொடுத்து செத்துப்போகும் பெண்ணின் கதை. முடிவில் அந்தப் பெண்ணில் இயலாத்தன்மையை கொடுத்து விட்ட சமூகம் மீது கோபம் வருகிறது

53. சட்டை - முரளிகண்ணன்
ச: ப்யூட்டிஃபுல் ரீட். என்ன்னமா யோக்கராய்ங்கப்பா. கட்டமும் இல்லாம கோடும் இல்லாம ஒரு சட்டை. அதைத் தேடிக்கிட்டு ஒரு ஹீரோ. முடிவு நச்!

செ: மனித ஆசையின் அளவீடுகளுக்கு உள்ள இடைப்பட்ட மதிப்பீட்டை உணர்த்தும் கதை. நகைச்சுவை பிரதானப்படுத்தப்படாமல் மனங்களின் தூண்டுதல்கள் நிராகரிக்கும் பேராசைப்படும் உணர்வுகளை இயல்பாக எடுத்துச் சொல்கிறது

54. ஐ லவ் யூ - சுவாசிகா
ச: சூப்பரா பயணித்த கதை, ரிவர்ஸ் கீயரில் ஓட ஆரம்பிச்சுடுச்சு. குசும்புத்தனமான நச். எனக்கு ஒட்டலை.

55. வெள்ளை உருவத்தில் வில்லன் - பின்னோக்கி
ச: வெகுவாய் ரசித்தேன். வயதானாலும் மேனி எழில் மாறா கமலா சூப்பர். வில்லன் வெரி டேஞ்சரஸ் ஃபெலோ.

செ: யாருக்கு யார் வில்லனாக மாறுகிறார்கள் என்பதைக் குறித்த நச் முடிவு..

56. அபரஞ்சிதா - அடலேறு
ச: அடேயப்பா. என்னா வர்ணனை, இன்னாமா எழுத்து. அபரஞ்சிதாவை உடனே பார்க்கும் ஆவலை தூண்டியது. நச் பெருமூச் விடவைத்தது.

செ: கதையின் முடிவிற்காக எழுதப்பட்ட கதையெனத் தோன்றுகிறது. பேசாமல் ரிவர்சபிள் போல கதையின் முடிவிலிருந்து ஆரம்பம் வரை படிக்க ஆரம்பித்தால் அருமையான புனைவு...

57. முதல் காதல் - chelladhurai
ச: முதல் காதலின் தீவிரத்தை காட்டறாரு. பிரிந்தவர் மீண்டும் சேர்ந்துவிட்டால்... நல்லாத்தான் இருக்கு. ஆனா, 'நச்' மிஸ்ஸிங்.

58. நெப்போலியன் மேல சத்தியம் - நசரேயன்
ச: நண்பர்கள் ஏப்ரல் ஃபூலாக்கும் கதைக் கரு. நீளமா இருப்பதாலோ, கதாபாத்திரங்களின் பெயர் விசித்திரமாஅ இருப்பதாலோ என்னவோ, கதையோடு ஒன்ற முடியல்ல.

59. இயந்திரம் - காவேரிக்கரையோன் MJV
ச: ஃபேமிலி ஸ்டோரி. அழுத்தமான அப்பாவுக்குள் இருக்கும் ஸாஃப்ட் ஸ்பாட் பற்றிய நச். தெளிந்த நீரோடை மாதிரி பயணிக்குது கதை.

செ: இன்னொரு எதிர்பார்த்திராத நச் முடிவு.. ஆனால் முடிவை செதுக்குவதில் அதிகம் அவசரப்பட்டிருக்கிறார். இன்னும் கொஞ்சம் யோசித்திருந்தால் தந்தைகளுக்கான ஒரு சிறப்பான கதையை கொடுத்திருக்கலாம்.

60. இந்தியா எப்படி உருப்படும்??? தொழில் - அன்புடன் அருணா
ச: பந்தா பண்றதுக்காக டொனேஷன் கொடுக்கும் பார்ட்டீஸின் கதை. குட்டிக் கதை. ஓ.கே.

61. நடிகையின் கதை - சாணக்கியன்
ச: பெரீய்ய்ய கதை. ஆனா, சுவாரஸ்யமான உரையாடல். நச்சும் குட். நடிகையின் ப்ராக்டிகல் அப்ரோச் பிடிச்சிருக்கு

62. Blackhole - இரா.வசந்த குமார்
ச: நல்ல ஃபிக்ஷன். முடிவு எப்படி நச் ஆகுதுன்னுதான் புரியலை. ஓரளவுக்கு திருப்பம் இருந்ததலும், நச் ஆக்கர அளவுக்கு பன்ச் இல்லியே?

செ: அறிவியல் புனைகதை. எதிர்பார்த்திராத முடிவு. ஆனால் எதிர்பார்த்த நச் இல்லை..

63. பள்ளிக்குப் போக மாட்டேன் - ஷக்திப்பிரபா
ச: வாத்தியின் சுய சரிதை. நல்ல நடை. முடிவும். ஓ.கே. டயலாக்கெல்லாம் பளிச்னு போட்டு, விஷுவலா படிக்க ஈஸியா இருக்கு.

செ: சுவாரஸ்யமான கதை சொல்லலில் வெற்றிப் பெற்று விட்டிருக்கிறார். இது இல்லாவிட்டால் அது என்று எதிர்பார்த்த திருப்பமாகத்தான் முடிவு இருக்கிறது.

64. ஒரு கிளி உருகுது.. உரிமையில் பழகுது.. - தமிழ்ப்பறவை
ச: அமக்களம். செம ரொமாண்ட்டிக். குட் நச்.

65. திருடன் - Parameswerey Namebley
ச: ஏதோ இண்ட்ரஸ்டிங்கா வரப் போவுதுன்னு கடைசி பேராவை படிச்சா, சப்புனு பறந்து போயிடுச்சு.

66. நசிந்தப் பூக்கள் - நீச்சல்காரன்
ச: சைல்ட் லேபரை சாடிய எழுத்தாளரின் புத்தகத்தை அச்சடிக்கும் அச்சகத்திலும் சைல்ட் லேபரர்ஸாம். நல்ல மேட்டர்.

67. திடீர் பாசம் - உண்மைத் தமிழன்
ச: நல்ல நரேஷன். பயபுள்ளையின் பயம் நம் கண் முன்னே. ஆனா, நச் தான் சப்பையாய், உப்பு சப்பில்லாமல்.

68. ஹோம் வொர்க் - ஸ்ரீதேவி
ச: ஹோம் வொர்க் எழுதா விச்சு, எப்படி எஸ்கேப் ஆகரான்னு அழகா சொல்லியிருக்காரு. ஆனா, லாஜிக்ல ஓட்டைன்னு பின்னூட்டன் நக்கீரர்கள் பாயிண்ட்டை புடிச்சுட்டாங்க.

செ: தினப்படி விசயத்தை அசாதாரணமாக சொல்லியதை விட கடைசியாக அம்மாவிற்கு நன்றி சொன்ன விதத்திற்காகவே சட்டென்று மனதைத் தொடுகின்றது. அருமையான கதையில் ஒன்று.

69. நிபுணன் - யோசிப்பவர்
ச: மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கரளவுக்கு ஜாலியான ஃபிக்ஷன். ஆரம்ப வரிகளே புன்முறுவல், சுவாரஸ்யம் குறையாமல் போச்சு

70. நிமித்தகாரன் (அ) கனவுகளின் காதலி - Sridhar Narayanan
ச: ரூம் போட்டு யோசிப்பவர்களில் இவரும் ஒருவர். என்னமா சுத்தி விட்டிருக்காரு. இடை இடையே வரும் ஹீரோவின் நையாண்டி டயலாக் சூப்பர். தந்தத்தில் சீப்பு சிரிப்பை வரவழைத்தது. முடிவு நச்!

செ: அசத்தலான பரிச்சுக்குரிய கதைகளில் ஒன்று. எது கனவு எது நினைவு என்று பிரித்துப் பார்த்தலை வாசகரிடம் ஒப்படைக்கும் அரிய வகையில் நேர்த்தியான ஒன்று.



டாப்20 கதைகள்:
1. நெல்லி மரம் - சதங்கா (Sathanga)
3. கடைசி இரவு - ராம்குமார் அமுதன்
10. திருப்பம் - சின்ன அம்மிணி
12. அப்பா சொன்ன நரிக்கதை - நிலா ரசிகன்
19. இக்கணம் இக்கதை - Nundhaa
30. அவரு..அவரு..ஒரு - வருண்
34. ஒரு கிராமத்தின் காலைப் பொழுது - சயந்தன்
39. காமம் கொல் - Cable Sankar
44. நறுமண தேவதை - எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன்
45. கறுப்பு ஞாபகம் - ஆதிமூலகிருஷ்ணன்
52. அடுத்த வீட்டுப் பெண் - Mohan Kumar
53. சட்டை - முரளிகண்ணன்
55. வெள்ளை உருவத்தில் வில்லன் - பின்னோக்கி
56. அபரஞ்சிதா - அடலேறு
59. இயந்திரம் - காவேரிக்கரையோன் MJV
63. பள்ளிக்குப் போக மாட்டேன் - ஷக்திப்பிரபா
64. ஒரு கிளி உருகுது.. உரிமையில் பழகுது.. - தமிழ்ப்பறவை
68. ஹோம் வொர்க் - ஸ்ரீதேவி
69. நிபுணன் - யோசிப்பவர்
70. நிமித்தகாரன் (அ) கனவுகளின் காதலி - Sridhar Narayanan

70 கதைகளைப் படிச்சு, இப்படி அலசி ஆராய்வது, லேசு பட்ட வேலையில்லை என்பதை, நானே செய்து அனுபவித்ததால், நல்லாவே தெரியுது.
ஆர்வத்துடன், இந்த வேலையை செய்து, முதல் சுற்றுக்கு கதைகளை நகர்த்திய சென்ஷிக்கு நன்றிகள் பல.
இனி வாக்களிக்கப் போகும் வாசகர்களுக்கும், புதிய நடுவர்களுக்கும் அட்வான்ஸ் நன்றீஸ்.
இந்த போட்டி பற்றிய விவரத்தை விளம்பரம் செய்த அன்பர்களுக்கும் நன்றீஸ் பலப் பல.


பி.கு: நிறை குறைகளை தெரியப்படுத்துங்கள். சரி செய்ய முடிந்ததை சரி செஞ்சுடலாம்.
தேர்தல், வரும் வெள்ளி அன்று ஆரம்பம்.

தெரு ஓர மரங்கள் வைக்க...

தெரு ஓரங்களில் மரம் வைத்து, அதை சுத்தி பாதுகாப்பா ஒரு கூண்டும் வைக்க, என்ன பண்ணனும்? யாரை அணுகணும்?

சொந்த செலவுல பண்றது எப்படீன்னு புரீது. ஒரு மரத்துக்கு 100ரூவாயிலிருந்து, 300ரூவரை ஆவுது. கூண்டுக்கு 300ரூவாயாம்.
நூறு மரம் வைக்கணும்னா, செலவு ஜாஸ்தியாவுமே.

இதுக்கெல்லாம், அரசாங்கம்/லோக்கல் NGO யாரும் உதவுவதில்லையா?

குரோம்பேட்டையில் இருக்கும் ஒரு தெருவில் துவங்க அவா.

விவரம் அறிந்தவர்கள் சொல்லவும்.

என்ன பண்ணனும், யாரை அணுகணும்?

கூகிளில் தேடும்போது, Greenways என்ற இயக்கத்தின் விவரம் கண்ணில் பட்டது. மாதவன் சுப்ரமணியன் என்ற இருவர் மந்தவெளியில், தன்னந்ததனியாக பல ஆயிரம் மரங்களை நட்டு கலக்கியிருக்காங்க. அவர்களை தொடர்பு கொண்டு பார்த்தேன். அவங்களுக்கு இப்ப ரொம்பவே வயசாயிடுச்சு. மரக்கன்று வேணும்னா வளத்து தரோங்கறாரு.

வேறு மார்கம் உண்டா?

ஹெல்ப் ப்ளீஸ்!

குரோம்பேட்டை பதிவர்கள்/வாசகர்கள் யாராவது இப்படி ஏதாச்சும் செஞ்சிருக்கீங்களா? ஹெல்ப்!

பிற்சேற்க்கை:
  • Dr.மாதவன் மற்றும் திரு.சுப்ரமணியம் என்ற இருவர், மந்தைவெளி அருகே, இருபது வருடங்களுக்கு மேலாக மரக்கன்றுகள் நட்டு வருகின்றனராம். இதுவரை 15000க்கும் மேற்பட்ட மரங்களை நட்டுள்ளனர். Project Greenways என்று பெயரிட்டு இவர்கள் இதை செய்து வருகின்றார்கள்.

  • Chennai Social Service என்று ஒரு தொண்டு நிறுவனம். மிக்காறும் Orkut இணைய தளத்தின் மூலம், ஆட்கள் சேர்ந்து உருவான இளைஞர்களாலான தொண்டு நிறுவனம். இவர்களுக்கு, மரக்கன்றுகள் தேவை என்று SMS செய்தால், மேல் விவரங்கள் பெற்று, நம் இருப்பிடத்துக்கே, தன்னார்வலர்கள் குழு வந்து, மரங்களை நட்டுத் தருவார்களாம்.

  • நிழல் என்றொரு தொண்டு நிறுவனமும், இதே போல் நோக்கத்துடன் செயல் பட்டு வருகிறார்கள்.


  • * Project Greenways சுப்ரமணியன்/மாதவன் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது, ஒரு பெண்மணிதான் பேசினார். இந்த இருவரும் 70வயதைக் கடந்து விட்டதால், முன்னர் செய்தது போல், 'ஏக்டிவ்வாக' இருக்க முடிவதில்லையாம். நமக்கு எவ்வளவு மரக்கன்றுகள் வேண்டும் என்று சொன்னால், அதை தயார் செய்து தருவார்களாம். வண்டியில் எடுத்துச் சென்று நட்டுக் கொள்ள வேண்டியுது நம் வேலை.

    * chennai social serviceக்கும், நிழலுக்கும், மின்னஞ்சல்/SMS அனுப்பி வைத்திருக்கிறேன். மேல் விவரங்கள் இல்லை.


    Monday, November 23, 2009

    பழசி ராஜா - குட்டி அலசல்...

    எதிர்பார்ப்பே இல்லாமல் ஒரு படம் பாக்கப் போனா, ஓரளவுக்கு திருப்திகரமா படம் முடிஞ்சு வெளீல வரலாம்.
    இந்தப் படத்துக்கும், ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம தான் போனேன் -- ஹ்ம், இல்ல இல்ல, இளையராஜாவின் இசையை பற்றிய ஒரு குட்டி எதிர்பார்ப்பு இருந்தது. அதே போல், ரெசூல் பூக்குட்டியின் ஒலி அமைப்பு பத்தியும் ஒரு குட்டி எதிர்பார்ப்பு இருந்தது.
    மத்தபடி, மம்முட்டி என்ன பண்ணுவாரு, சரத் என்ன பண்னுவாரு, கேரளா காட்டுக்குள்ள எடுக்கப்பட்ட படம் எப்படி விஷுவலா இருக்கும்னெல்லாம் ஒரு முன் முடிவு இருந்தது.

    ஆனா, படத்தை பார்த்துட்டு வெளீல வரும்போது ஒரு திருப்திகரமான பீலிங் கிடைக்கல்ல.

    * ஒரு சீனுக்கு அடுத்த சீன் ஒரு கோர்வையில்லாமல், துண்டு துண்டா ஓடின மாதிரி இருந்தது. உப்புக்கு கூட அடுத்த சீனைப் பற்றிய எதிர்பார்ப்பே இல்லாத மாதிரி ஒரு ஸ்க்ரீன் ப்ளே. பக்கத்து சீட்டு மாம்ஸ் பாதி படத்துல தூங்கி வழிஞ்சாரு.

    * பழசிராஜா, திப்புசுல்தான் காலகட்டத்தில், கேரளாவிலிருந்து, ஆங்கிலேயனுக்கு டார்ச்சர் கொடுத்த சுதந்திரப் போராட்ட வீரராம். முடிவு சுலபமாய் யூகிக்க முடிந்த கதை என்பதால், கூடுதல் வரட்சி.

    * ரெசூல் பூக்குட்டி - ஸ்லம்டாக் மில்லியனரின் ஆஸ்கார் வின்னர். பழசியில், ஒவ்வொரு காட்சியிலும், ஒலி ஈட்டி மாதிரி பாஞ்சு காதுல ஏறுது. மழை சீன்ல, உங்க தலை மேலயே இடி இடிக்கர மாதிரி விழுது. குதிரை ஓடினா, நம்ம கால் மேல ஓடர மாதிரி ஃபீல் வருது. ஆனா, எல்லாமே கொஞ்சம் ஓவர்டோஸா தெரீது. பூனை ஒண்ணூ சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக் கடைல போய் எல்லாத்தையும் உருட்டி விட்ட மாதிரி ஒரே சத்தம். கத்தி ஃபைட்டெல்லாம் வந்தா, காதுல பஞ்சு வெச்சுக்கத் தோணுது. குடுத்த காசுக்கு வேலை செஞ்சுட்டாருபோல.

    * படத்துக்கு செலவே இல்ல. காட்டுக்குள்ளையே எல்லா காட்சிகளையும் முடிச்சுட்டாங்க. ஹீரோ, ஹீரொயினுக்கெல்லாம் வேட்டியாலேயே ட்ரெஸ்ஸு. ஆங்கிலேயர்கள், கிலொக்கு ரெண்டு ரூவான்னு எங்கேருந்தோ புடிச்சுக்கிட்டு வந்துட்டாங்க போல. யாருக்கும் நடிப்பு வரல. அதிலும், டங்கன் பிரபு, காமெராவ பாத்து நடிக்கறாரு.

    * இளையராஜா - ராஜா இஸ் out-dated. சலிப்புதான் வருது இவரின் 'சிம்ப்ஃபொனி' பேக்ரவுண்ட் கேட்க. 'குரு' படத்தில், வித்யாசமா இருந்தது. தொடர்ந்து எல்லா படத்துலையும் ஒரே தீம் வச்சு போட்டா எரிச்சலே மிச்சம். அதுவும், சில டயலாக் பேசும்போது, அடக்கி வாசிக்கணும். அங்கையும், வயலினையோ, எத்தையோ போட்டு இழைக்கிறாரு. நம்ம கவனம் செதருது. பாடல்கள் ஒண்ணும் ஒட்டலை. அல்லா பாட்டு தாளம் போட வைத்தது. ராஜா சார், think outside the box, please. உங்களை எந்தளவுக்கு பிடிக்குமோ, அதே அளவுக்கு பிடிக்காம போயிடும் போலருக்கே. (ஜோதா அக்பரில், ரஹ்மான் போட்ட தீம்-மூஜிக் ரொம்ப பிரபலம், அந்த மாதிரி ஏதாச்சும் பண்ணியிருக்கலாம். நா.ண.. நா.ண..)

    * சரத்குமார் - அமக்களப் படுத்தியிருக்காரு. எனக்குத் தெரிஞ்சு, இவருதான் ஹீரோ. உண்மையான, எதார்த்தமான நடிப்பு. எல்லா காட்சியிலும் மிளிர்கிறார். கத்தி எடுத்து சொழட்டினா, அந்த வீச்சின் கனம் நமக்கே தெரியுது. அபாரமான, அலட்டலில்லா நடிப்பு.

    * மம்முட்டி - இவருக்கு, இந்த மாதிரி ரோலெல்லாம், அல்வா சாப்பிடர மாதிரி. அதனாலேயோ என்னவோ, எனக்கு ஒண்ணும் பெருசா தெரீல. இவரு செய்யவேண்டிய வேலையெல்லாம் சரத்தே செஞ்சு முடிச்சடறாரு. ஸோ, இவரு அங்கங்க டம்மி ஆயிடறாரு. ஒரே ஒரு காட்சியில் மட்டும், ஒரு பெல்ட்டு வாளை, சட்னு உருவி, படார்னு பத்து பேரை சாய்ப்பாரு, அபாரம். மத்தபடி, நடை , உடை, பாவனை எல்லாம் அம்சம். இவரு, இதுக்கு மேலையே இன்னும் பல படங்களில் பண்ணியிருக்காரு.

    * ஹீரோயின்ஸ் - ஓ.கே. குறிப்பிட்டுச் சொல்லும்படியா ஒன்னியும் தோணலை.

    * வில்லன்ஸ் - சுமன் ஒரு வில்லன். அவர் வேலைய செஞ்சிருக்காரு. மத்த ப்ரிட்டிஷ் வில்லர்கள் எல்லாம், ரொம்பவே அமெச்சூர் தனம். அதிலும், தேவையில்லா காட்சிகள் நெறைய வருது, இவங்கள வச்சு. படத்தின் நீளத்தை நீட்டிய கொடுமை இவர்களையே சேரும்.

    * மத்தது எதுவும் குறிப்பிட்டுச் சொல்லும்படியா தோணலை. சண்டைப் பயிற்சி சிறப்பா வந்திருக்கு. மேற்கூறிய சரவணா ஸ்டோர்ஸ் தொல்லையால், மனதுக்குள் பெருசா ஒட்டாமல் போனது. சரத்தும் சுமனும் போடும் சண்டை அம்சம். ஒளிப்பதுவும் அழகா பண்ணியிருக்காரு.

    Brave Heart லெவலக்கு வந்திருக்கவேண்டிய படம். அதிலிருந்த ஈர்ப்பு ஏன் இதிலில்லாமல் போனதுன்னு புரியல்ல. இன்னொருமுறை B.H பாத்துட்டு ஒரு அலசல் பதிவு போடறேன். பாத்தவங்க சொல்லுங்க.

    பி.கு: நச் போட்டிக் கதைகளின் விமர்சனங்களும், நடுவர்களின் டாப்20 பட்டியலும் நாளை வெளியாகும்.

    Thursday, November 19, 2009

    பல்லாவரம் ஸீனரியும் ஒரு பெருமூச்சும்...

    பல்லாவரத்திலிருந்து வேளச்சேரிக்கு செல்ல ஒரு 200அடிப் பாதை உருவாகிவருகிறது.
    GSTயிலிருந்து, இந்த பாதைக்கு இணப்புத் தரவேண்டிய மேம்பால வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. கொஞ்சம் ஸ்லோதான், ஆனா வேலை நடக்குது.

    சாலையின் இருபுறமும் பச்சைப் பசேல்னு இருக்கும். மழை பெஞ்சா, தண்ணி நெரஞ்சு, பல்லாவர மலையின் பிம்பம் தெரிந்து, பாக்கவே ரம்யமா இருக்கும்.

    சமீபத்தில் க்ளிக்கிய படம் இங்கே:


    புதுக் கொடுமை என்னன்னா, சாலையின் அடுத்த பக்கம், இதே போல் ரம்யமாக இருந்து வந்த இடம், இப்போ குப்பைக் கொட்டும் இடமாக மாறிவிட்டிருப்பது.

    கொக்கும் நாரைகளும் காகைகளும் கூடிக் குலாவிய இடம், இப்போ, ப்ளாஸ்டிக் குப்பைகளின் இருப்பிடமாகிப் போனது.

    டூ-வீலரில் போனா, 'ஹோ என்னுயிரே, ஓஹோஹோ என்னுயிரே'ன்னு மாதவன் கணக்கா ஓட்டிக்கினு போன காலம் போயி, இப்ப, ஒரு கையில் மூக்கை பிடித்துக் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஹ்ம்!



    இந்த மாதிரி தாழ்வான பகுதிகள், மழை நீரை தக்க வைத்துக் கொள்ளும் இடமாக பராமரிக்காமல், இப்படி குப்பை போட்டு நாசம் செய்யப் படுவது, மிக வேதனையாக உள்ளது.
    தொலைநோக்குப் பார்வை கொண்ட அதிகாரிகள் யாராவது, இதை கரெக்ட் செய்ய வேண்டும்

    சுதாரிப்பார்களா அதிகாரிகள், இல்லை பல்லாவரத்தை நாரடித்துத்தான் அடங்குவார்களா?

    பொறுத்திருந்து பார்ப்போம்.

    Monday, November 16, 2009

    போட்டியிடும் எழுபது நச்கள்

    வணக்கம் நண்பர்களே.

    இந்த வருட 'நச்' போட்டியில் எழுபது கதைகள் களமிறங்கியுள்ளன.

    எல்லாரும், கதைகளை படிச்சு மனதளவில் மார்க் போட்டு வச்சுக்கங்க.

    யார் எழுதினாங்கங்கரது முக்கியமில்லை. கதை எப்படிப்பட்டது என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

    போட்டியை எப்படி நடத்தலாம் என்பதை கொம்பேனி இன்னும் முடிவு செய்யவில்லை.
    யோசனைகள் வரவேற்க்கப்படுகின்றன.

    வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்கும் சட்டதிட்டங்களுடன், வில் மீட் யூ ஸூன்!

    1. நெல்லி மரம் - சதங்கா (Sathanga)
    2. அசைன்மென்ட் - கிஷோர்
    3. கடைசி இரவு - ராம்குமார் அமுதன்
    4. உதவி - ஷைலஜா
    5. உயிரின் உயிரே - R. Gopi
    6. தொழில் - ராமலக்ஷ்மி
    7. recession ஐயா recession - ramachandranusha(உஷா)
    8. வைதேகி காத்திருப்பாள் - T.V.Radhakrishnan
    9. நெஞ்சு பொறுக்குதில்லையே - ஷைலஜா
    10. திருப்பம் - சின்ன அம்மிணி
    11. கண்ணால் காண்பதும் - பெயர் சொல்ல விருப்பமில்லை
    12. அப்பா சொன்ன நரிக்கதை - நிலா ரசிகன்
    13. ஆவணி பௌர்ணமி - நானானி
    14. நொடிப் பொழுதில் - Pappu
    15. ஆல்ப்ஸ் கொ(ம)லைக் காற்று வந்து - முகிலன்
    16. ஜாக்கிரதை மழை பெய்கிறது - Vidhoosh
    17. சதிராடும் மேகங்கள் - அரவிந்தன்
    18. ஆதவன் - நான் ஆதவன்
    19. இக்கணம் இக்கதை - Nundhaa
    20. யாரோ ஒருத்தி - குகன்
    21. செவப்புத் தோல் - ஈ.ரா
    22. படுக்கை - பினாத்தல் சுரேஷ்
    23. அன்னா மரியா குமாரசாமி - செந்தழல் ரவி
    24. ரெட் லைன் - வண்டிக்காரன்
    25. பச்சை நிற பக்கெட் - Thirumalai Kandasami
    26. கடைசியில் ஒரு திருப்பம் - மணிகண்டன்
    27. விடை கொடு எங்கள் நாடே - சங்கர்
    28. மில்லியன் காலத்துப் பயிர் - சத்யராஜ்குமார்
    29. டிஸ்லெக்சியா - Vinitha
    30. அவரு..அவரு..ஒரு - வருண்
    31. வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் - கெக்கேபிக்குணி
    32. ஜனனி - படுக்காளி
    33. எக்ஸ்பிரஸ் இளமதி - SUREஷ் (பழனியிலிருந்து)
    34. ஒரு கிராமத்தின் காலைப் பொழுது - சயந்தன்
    35. புகை - kalyanaraman raghavan
    36. வசவும் திட்டும் சாம்பலும் - கே.ரவிஷங்கர்
    37. 72877629 - கே.பி.ஜனார்த்தனன்
    38. ஜாதி கேடயம் - இரும்பித்திரை அரவிந்த்
    39. காமம் கொல் - Cable Sankar
    40. அந்த இரண்டு ரூபாய் - வி.நா.வெங்கட்ராமன்
    41. டிஷ்யூங் - கார்த்திகைப் பாண்டியன்
    42. சாப்ட்வேர் - ப்ரசன்ன குமார்
    43. போகமாட்டேன் - புதுவை சந்திரஹரி
    44. நறுமண தேவதை - எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன்
    45. கறுப்பு ஞாபகம் - ஆதிமூலகிருஷ்ணன்
    46. சன்யாசம் கூறாமல் கொள் - சாம்ராஜ்ய ப்ரியன்
    47. காமம் வழிந்தோடும் உடல் - graham
    48. லாரி விபத்து - MSV Muthu
    49. மாத்தி யோசி - நாஞ்சில் பிரதாப்
    50. பாராட்டு - ஸ்வர்ணரேக்கா
    51. நானே நானா - சுப.தமிழினியன்
    52. அடுத்த வீட்டுப் பெண் - Mohan Kumar
    53. சட்டை - முரளிகண்ணன்
    54. ஐ லவ் யூ - சுவாசிகா
    55. வெள்ளை உருவத்தில் வில்லன் - பின்னோக்கி
    56. அபரஞ்சிதா - அடலேறு
    57. முதல் காதல் - chelladhurai
    58. நெப்போலியன் மேல சத்தியம் - நசரேயன்
    59. இயந்திரம் - காவேரிக்கரையோன் MJV
    60. இந்தியா எப்படி உருப்படும்??? தொழில் - அன்புடன் அருணா
    61. நடிகையின் கதை - சாணக்கியன்
    62. Blackhole - இரா.வசந்த குமார்
    63. பள்ளிக்குப் போக மாட்டேன் - ஷக்திப்பிரபா
    64. ஒரு கிளி உருகுது.. உரிமையில் பழகுது.. - தமிழ்ப்பறவை
    65. திருடன் - Parameswerey Namebley
    66. நசிந்தப் பூக்கள் - நீச்சல்காரன்
    67. திடீர் பாசம் - உண்மைத் தமிழன்
    68. ஹோம் வொர்க் - ஸ்ரீதேவி
    69. நிபுணன் - யோசிப்பவர்
    70. நிமித்தகாரன் (அ) கனவுகளின் காதலி - Sridhar Narayanan

    கொசுறு. இது என்னுது - புவனேஷ்வரி மாமி - (போட்டிக்கல்ல)


    போட்டியில் பங்கு பெறாத பதிவர்கள் யாரேனும், கதைகளுக்கு நச் விமர்சனம் எழுதினால், எமக்கும், உமக்கும், அவர்க்கும், இவர்க்கும், மெத்த மகிழ்ச்சி உண்டாகும்.

    போட்டியில் பங்குபெற்று சிறப்பித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றீஸ்!
    கலக்கிட்டீங்க. ஒவ்வொண்ணா படிச்சு, உங்க பதிவிலையே கருத்ஸ் சொல்றேன். விரைவில் வாரேன் ;)

    Friday, November 13, 2009

    புதிய மணமகனுக்கு ஃப்ரீ அட்வைஸு...

    நம் பதிவர் ஒருவர் வாழ்க்கையின் அடுத்த அத்யாயத்திற்க்கு தயாராகிறார்.
    திருமணம் எனும் இன்றியமையாத வாழ்வியல் தளத்தில் காலெடுத்து வைக்க இருக்கிறார்.

    ஏற்கனவே காலெடுத்து வச்சு, கால் வலிக்க நடக்கும் பெருந்தகைகள் பலபேரு இருப்பீங்க. எல்லாரும் ஆளுக்கொரு ஃப்ரீ அட்வைஸு எடுத்து வுட்டீங்கன்னா, கபால்னு பிடிச்சு நம் பதிவரும், தன் அடுத்த கட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவாரு.

    [ அவர் யாருங்கர விஷயம், நான் சொல்லலாமான்னு தெரியல்ல.
    யார் யாரையெல்லாம் கல்யாணத்துக்கு கூப்பிட்டிருக்காருங்கர விஷயம் தெரியாததால், அடக்கி வாசிக்கறேன். யாராவது, பின்னூட்டத்தில் லீக் பண்ணா, கொம்பேனி பொறுப்பில்லை :)
    ]

    ஃப்ரீ அட்வைஸை நானே ஆரம்பிச்சு வைக்கறேன்.

    எனக்கும் இப்படி ஒரு விஷயம் சில பல வருஷங்களுக்கு முன் நடந்தேறிய போது, அந்த பொன்னான நாளிலே, என் நண்பன் எனக்கு ஒரு அருள் வாக்கு சொன்னான்.
    பெரிய தில்லாலங்கடி அவன். பிஸினஸு மாக்னெட்டு, சர்ச்சு ஃபாதர், குடும்பஸ்தன், எக்ஸட்ரா, எக்ஸட்ரா...

    அவன் சொன்னான், "மச்சி, நல்லா சொல்றேன் கேட்டுக்கோ.
    கல்யாணம் ஆனதும், மொதல் ஆறு மாசம், பொண்டாட்டி சொல்றதை அப்படியே கேட்டு, அவளை ராணி மாதிரி வச்சுக்கோ. அப்படி செஞ்சீன்னியாக்கா, அடுத்த அறுவது வருஷம், உன்ன ராஜா மாதிரி பாத்துப்பா.
    மொத ஆறு மாசத்துல, எத்தையாவது சொதப்புனா, அடுத்த அறுவது வருஷம், சிரமம்தேனப்பு.
    " அப்டீன்னான்.

    நான் சொன்னேன், "டேய், போடா சும்மா அளக்காத. வாழ்க்கைன்னா அப்டீ இப்டீ இருக்கணும்டா, அதுதான் லைவா இருக்கும்னு".
    அவனும், 'பிதாசுதன் பரிசுத்த ஆவி கூட ஒன்ன இனி காப்பாத்த முடியாது'ன்னு தண்ணி தெளிச்சுட்டு போயிட்டான்.
    அப்படியே, அவன் சொன்ன ஆறு மாச டெக்னிக்கை, லூசுல விட்டுட்டேன்.

    அதுக்கு இன்னும் அனுபவிச்சுக்கினு இருக்கேன்.. ( ஹிஹி.. சும்மா டமாசு தங்க்ஸ், கைல கெடைக்கறதெல்லாம் தூக்கி என் மேல போடாதப்பா. என் ஒடம்பு தாங்குமா?..ஓ ப்ளீஸ்...யம்மா... )

    திருமண நாள் காணவிருக்கும், இணைய இளவலே, இதனால் நான் கொடுக்கும் அட்வைஸு என்னவென்றால், ஆறு மாசமோ, ஒரு வருஷமோ, ஒம்போது வருஷமோ, ராணியார் திருப்திப் படும் வரை, 'ராணி' மாதிரி பாத்துக்கப்பூ. அப்ப மீச்சம் மீதியிருக்கர, அறுபது வருஷமோ, எழுபது வருஷமோ, நீ ராஜா மாதிரி இல்லன்னாலும், அட்லீஸ்ட் ஒரு கணக்குப்பிள்ளை ரேஞ்சுக்காவது மருவாதையுடன் வாழலாம் ;)

    ராஜாமார்களும், ராணிமார்களும், கணக்குப்பிள்ளைகளும், கைப்பிள்ளைகளும், எடுத்து விடுங்க, ஃப்ரீ அட்வைஸு. டாங்க்ஸு!

    ஹாப்பி வெள்ளி!

    Monday, November 09, 2009

    பாப்புலர் ப்ளாகர் வில்லங்கம்...

    எமது நா.ண நா.ண சீரீஸின் அடுத்த வெளியீடு இது.

    பதிவர்களின் பாப்புலாரிட்டியை கணக்கிட பல வழிகள் இருக்கிறது.
    எவ்ளோ ஃபாலோயர்ஸ் இருக்காக?
    எவ்ளோ பின்னூட்டங்கள் வாங்கராக?
    எவ்ளோ பேர் பதிவை ரீடரில் வாசிக்கராக?
    எவ்ளோ பேரு பதிவுக்கு லிங்க் குடுக்கராக... இப்படி அடுக்கிக்கினே போலாம்...

    ஆனா, பிரதானமா எல்லாருக்கும் கண்ணுக்கு தெரியர விஷயம், எவ்ளோ பேரு, இவங்க பதிவுகளை வாசிக்கராக/வாசிச்சிருக்காக என்பதை கட்டம் போட்டு காட்டும் 'ஹிட் கவுண்ட்டர்' அது.

    நம்ம நெஜ கவுண்டரை போலவே, இந்த ஹிட் கவுண்ட்டர் கொஞ்சம் வில்லங்கமான விஷயம்.

    ஃபாலோயர்ஸ் கணக்கு, திடமா இருக்கும். ஆடாம அசங்காம.
    'என் பதிவை இவ்ளோ பேரு, கண்டிப்பா ஃபாலோ பண்றாக. இஸ்கர மாதிரி தலைப்பு வச்சா, கண்டிப்பா வாசிப்பாக'ன்னு அடிச்சு சொல்ற மேட்டரு இது.

    நம்ம சுப்பையா வாத்தி, அஸ்ட்ராலஜி சொல்லித் தாரேன்னு, க்ளாஸ் ரூமை ஹவுஸ் ஃபுல்லா வச்சிருக்காரு. 967 ஃபாலோயர்ஸ் இவருக்கு. என் பதிவுக்கு வந்தீங்கன்னா நல்ல காலம் பொறக்கும்னு சொல்லிட்டாரு போல. பயபுள்ளைங்க அத்தன பேரும், அங்க உள்ளேன் ஐயா சொல்லி வச்சிருக்காக. நான் உட்பட :)
    இந்த சுபயோக சுபதினத்தில், இந்தப் பதிவை படிக்கும் நீங்களும், வாத்தியாரை ஃபாலோ பண்ணி அவரை 1000 ஃபாலோயர்ஸ் பெற்ற அபூர்வ வாத்தியாக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். அதை நடத்தி வைத்த பெருமை எமக்கே சேரட்டும். ஆயிரமாவது ஃபாலோயருக்கு வைகுண்டா ப்ராப்தி காரண்டியாம், சபைல சொல்லிக்க்கராங்க :)
    (இட்லிவடை கூட 766 ஃபாலோயர்ஸ் பெற்றுள்ளது)

    ஆனா, சுவாரஸ்யமா எழுதர எல்லாருக்கும், ஆயிரம் ஃபாலோயர்ஸ் இருக்கணும்னு அவசியம் இல்லை.
    சில பேரு பதிவுகளை, ரீடரிலோ, ஃபாலோயரிலோ, ஃபேவரைட்டிலோ சேர்த்து வ்ச்சாதான் படிப்பாங்கன்னு இல்லை.
    கூகிளோ, இந்துவோ, குமுதமோ, விகடனோ படிக்கர மாதிரி, ஒரு நாளைக்கு ஒரு தபாவாவது, தன்னிச்சையாக போய் எட்டிப் பார்க்க வைக்கும் பதிவுகள் பல உண்டு, நம் மத்தியில்.

    ஒரு காலத்தில், செல்லா என்ற பதிவர் இருந்தார். PiTன் ஆரம்ப கால சகா.
    லாங் லாங் அகோ, ஸோ லாங் அகோ, அவரு, "ஆ" "ஊ" "ஏ" ன்னு என்ன தலைப்பு வச்சு எழுதினாலும், கட முடான்னு ஆளுங்க போட்டி போட்டுக்கினு அவரு பதிவை சூடாக்குவாங்க.
    அது ஒரு தனி நடை. சுவாரஸ்யமா யாரையாவது வம்புக்கு இஸ்துக்கினு, நல்ல பொழுது போக்கு பதிவுகள் எழுதிக்கினு இருப்பாரு. இப்ப ஸைலண்டா ஆயிட்டாரு.

    sorry, i digress.

    மேட்டருக்கு வாரேன்.

    இந்த 'ஹிட் கவுண்ட்டர்' சில சமயங்களில் வேலை செய்வதில்லை. ஓ.சியில் கெடைக்குதேன்னு எதையோ ஒண்ண போட்டு வச்சுடறோம்.
    சில சமயங்களில், இவை சரியாக ஓடுவதில்லை.
    அதே சமயம், வேறு சில கவுண்டர்கள், சூடு வச்ச மீட்டர் மாதிரி ஓடுது.

    histats.comன் ஹிட் கவுண்ட்டர். ஆமை ரகம். (or reality? )
    jstracker.comன் ஹிட் கவுண்ட்டர். முயல் வேகம் (or சூடு மீட்டர்?)

    சமீபத்தில் ஒரு பதிவு போட்ட போது, எமது இரண்டு ஹிட் கவுண்ட்டர்கள் இப்படி காட்டியது.



    23 எங்க இருக்கு, 9 எங்க இருக்கு? கொடுமையாச்சே இது?

    histats சொல்லும் 188,708க்கு பதிலா, ஆறு லட்சம் ஹிட்டுன்னு மனசுல வச்சுக்கிட்ட்டு, நாங்களும் ரவுடிதான்னு, ஆறுதல் பட்டுக்க வேண்டியதுதான்.

    jstracker.com வாழ்க. histats.com ஒழிக!

    உங்க நெலம என்ன? நீங்களும் ரவுடியா?

    Thursday, November 05, 2009

    சர்வே முடிவுகள் - தமிழ்மணமா? டமிலிஷ்ஷா?...

    நமோஷ்கார்! பதிவர்கள் வாசகர்களிடையே பெரிய அளவில் பயன்படுத்தப்படும் தளம் இன்னான்ன்னு கண்டுபிடிக்க ஒரு சர்வே இடப்பட்டது நினைவில் இருக்கும்.

    எனது வாசக அன்பர்களின், வாக்களிப்பின்படி, கீழிருக்கும் தீர்ப்பை வெளியிடுவதில் பேருவகை அடைகிறேன்.

    பங்கு பெற்று சிறப்பித்த அனைவருக்கும் நன்னி.

    இந்த சர்வே போடுவதர்க்கு பெரிய காரணம், இதை உபயோகித்து, வர இருக்கும் 'நச்' போட்டிக்கான தேர்தலை நடத்தமுடியுமா என்பதை கண்டறியவே.
    யாராச்சும், பூத் கேப்சரிங் பண்ணீங்களா?
    யாருக்காவது, வாக்கு இல்லன்னு சொல்லிட்டாங்களா?
    யாருக்காவது, ரீ-கவுண்ட் வைக்கணும்னு தோணுதா?

    இத்யாதீ இத்யாதீ சொல்லுங்க.

    நச் போட்டியில் பங்கு பெறாதவர்கள் பங்கு பெறுங்க.
    பங்கு பெற்றவங்க, மத்தவங்க கதைய படிங்க.
    பங்கு பெறப் போகாதவங்க, எல்லார் கதையும் படிங்க.

    என் 'நச்' கதை புவனேஷ்வரி மாமி உட்பட, எல்லா நச் கதைகளும், இங்கே காணக் கிட்டும்.

    என்சாய்!

    இதில் எந்த உள்குத்தும் இல்லை, ஆனா 111 வாக்குகள் பதிவாயிருக்கு.

    Wednesday, November 04, 2009

    புவனேஷ்வரி மாமி ( நச் போட்டிக்கல்லாத கதை )

    "டாக்டர், எல்லாம் நார்மலா இருக்குல்ல?" என்று ராமச்சந்திரன் டாக்டர் சகுந்தலாவை கேட்டுக் கொண்டிருந்தார். அருகில், அவர் மகள் சுந்தரி நிறை மாத கர்பத்துடன் நின்று கொண்டிருந்தாள்.

    "எல்லாம் சரியாயிருக்கு. டோண்ட் வொரி மாமா", இது டாக்டர்.

    "திரும்ப திரும்ப கேக்கறேன்னு தப்பா எடுத்துக்காதேள். இப்பெல்லாம் எந்த ஹாஸ்பிட்டல்லையும் நார்மல் டெலிவரியே பண்றதில்லையாமே? காசுக்காக ஸிஸேரியன் பண்ணிடறாளாமே. அப்படியெல்லாம் இங்க ஆயிடக்கூடாதுன்னு தெனமும் கடந்து அடிச்சுக்குது", ராமச்சந்திரனின் குரலில் பெரிய கவலை தெரிந்தது.

    "மாமா, கவலையே படாதேள். எந்த டாக்டரும் அப்படி வேணும்னு பண்ண மாட்டா. வேற வழியே இல்லன்னாதான், ஸிஸேரியன் ஆப்பரேஷன் எல்லாம் பண்ணுவா. சுந்தரிக்கு எல்லாம் நன்னாருக்கு, நார்மல் டெலிவரிக்கு நான் கியாரண்டி" சகுந்தல்லா டாக்டர் அமைதியாக ராமச்சந்திரனுக்கு ஆறுதல் கூறினார்.

    "ஏன்னா, டாக்டர்தான் நார்மல் நார்மல்னு சொல்றாளே, ஏன் திரும்ப திரும்ப நச்சரிச்சுண்டே இருக்கேள்? எல்லாம் அம்பாள் அனுக்கிரஹத்துல நன்னா நடக்கும்", சுந்தரியின் அருகில் இருந்த புவனேஷ்வரி மாமி ராமச்சந்திரனை அதட்டும் குரலில் கூறினார்.

    முப்பது வருட தாம்பத்யத்தில் அடங்கிப் போயே பழக்கப்பட்ட ராமச்சந்திரன், அதற்கு மேல் வாய் திறக்க முடியாமல் அமைதியானார்.

    *** *** **** **** ****

    மே பதினைந்தாம் தேதிக்கு அருகாமையில் டெலிவரி ஆகலாம் என்று டாக்டர் சொல்லியிருந்தார். நாள் நெருங்க நெருங்க அனைவருக்கும் பதட்டம் அதிகமாகியிருந்தது.
    வருவோர் போவோரெல்லாம், "கண்டிப்பா ஸிஸேரியன் தான் பண்ணுவா. நார்மல்னா பத்தாயிரம். ஸிஸேரியன்னா ஒரு லட்சம் வரை கறக்கலாமே. விட்ருவாளா லேசுல?" என்று திகிலுக்கு திகிலூட்டுக் கொண்டிருந்தார்கள்.

    சுந்தரியின் கணவன், சுகுமாரன். ஒரு பெரிய அலுவலகத்தில் நல்ல பொறுப்பில் இருப்பவன். வேலை விஷயமாக சிங்கப்பூரில் ஒரு மாதம் தங்க வேண்டியிருந்ததால், சுந்தரியின் அருகில் இல்லாமல் போவது பெரிய கவலை அவனுக்கு. தினம் தினம், ராமச்சந்திரனை போனில் அழைத்து, "மாமா, எல்லாம் நார்மல்தானே? என் ஃப்ரெண்ட்ஸெல்லாம் ஆஸ்பத்திரிகாரன் ஸிஸேரியன் பண்ணி வச்சுடுவான்னு சொல்லிண்டுருக்கா. நீங்க டாக்டர் கிட்ட தீர்மானமா சொல்லிடுங்கோ. பணம் வேணும்னாலும் அதிகமா கொடுத்திடலாம், ஆனா நார்மல் டெலிவரிதான் பண்ணனும்னு. வேணும்னா எங்கப்பாவ கூட கூட்டிண்டு போங்கோ. அவர் அதட்டினா டாக்டர் கேப்பா" என்று தினம் தினம் ராமச்சந்திரனை தொய்த்தெடுத்தான்.

    *** *** **** **** ****

    "மாப்ள, சுந்தரிக்கு குழந்தை பொறந்துடுத்து. செக்கச் செவேல்னு உங்கள மாதிரியே கொழு கொழுன்னு அழகா இருக்கான். சுந்தரியும் சௌக்யமா இருக்கா. நீங்க எப்ப வரேள்?" என்று புவனேஷ்வரி, சுகுமாரனுக்கு தகவல் சொல்லிக் கொண்டிருந்தாள். அருகில் ராமச்சந்திரன், மகிழ்ச்சியும், கலக்கமும் கலந்த சவரம் செய்யாத முகத்துடன் நின்று கொண்டு புவனேஷ்வரியையே பார்த்துக் கொண்டிருந்தார்.

    "ரொம்ப சந்தோஷமா இருக்கு அத்தை. நார்மல் டெலிவரிதானே? நான் இன்னும் ரெண்டு மாசமாகும் வர" என்று மகிழ்ச்சி கலந்த குரலில் சுகுமாரன் கேட்டான்.

    "இல்ல மாப்ள, ஸிஸேரியந்தான் பண்ணா. குழந்தை பொஸிஷன் சரியில்லையாம். லேட் பண்ணா காம்ப்ளிகேட் ஆயிடும்னு, சகுந்தலா அப்படி பண்ணிட்டா. அது பரவால்ல மாப்ள, குழந்தையும் சுந்தரியும் நன்னாருக்கா. நீங்க கவல்ப்படாதேள்." என்று புவனேஷ்வரி எடுத்துக் கூறினாள்.

    "என்னது? ஸிஸேரியனா? நேத்து கூட எல்லாம் நார்மல்னு சொல்லிட்டிருந்தேளே? ஏன் ஸிஸேரியனுக்கு சம்மதிச்சேள்? நான் வந்து அவா மேல கேஸ் போட்டு என்ன பண்றேன் பாருங்கோ?" என்று அலர ஆரம்பித்தான் சுகுமாரன்.

    "அதெல்லாம் எதுக்கு மாப்ள? நன்னாதாயிருந்தா. இன்னும் அஞ்சு நாள் இருக்கு டெலிவரிக்குன்னு நேத்து சொன்னா. ஆனா, இன்னிக்கு செக்கப்புக்கு வந்தா இப்படி ஆயிடுத்து. ஆண்டவன் புண்ணியத்துல சௌக்யாமா இருக்காளே மாப்ள. அதப் பாருங்கோ" என்று புவனேஷ்வரி ஆறுதல் கூறினாள்.

    "அதெல்லாம் அப்படி விட முடியாது அத்தை. நான் வந்து என்ன பண்றேன் பாருங்கோ" என்று கோபக்கார சுகுமாரன் அலறிக் கொண்டே இருந்தான்.
    *** *** **** **** ****

    "பா..ட்..டி" சொல்லுடா தங்கம் என்று புவனேஷ்வரி இரண்டு மாத பேரக் குழந்தையை மடியில் போட்டு சொல்லிக் கொண்டிருந்தார்.

    "சுந்தரி, என்னமா சிரிக்கிறான் பாருடி. அரசாளப் போறான் பாரு. அன்னிக்கு மட்டும் நான் சகுந்தலாகிட்ட அப்படி சொல்லன்னா, உன் பையன் ஃப்யூச்சரே நாசமா போயிருக்கும்டி" என்று நமுட்டுச் சிரிப்பு சிரித்தபடியே புவனேஷ்வரி சொல்லிக் கொண்டிருந்தார்.

    "நாலு நாள் கழிச்சு நார்மல் டெலிவரி ஆயிடும்னு, சகுந்தலா சொன்னபோது எனக்கு தூக்கி வாரிப் போட்டுதுடி. ஸ்வாதி நட்சத்தரத்துல பொறந்துதான், நம்ம எதுத்தாத்து ரகு உருப்படாம போயிட்டான். விட்ருவேனா? சகுந்தலாவ தனியா கூட்டிண்டு போயி, இன்னிக்கே ஸிஸேரியன் பண்ணி எடுத்துடும்மா. நல்ல நாளும் கெழமையும் நட்சத்திரம் நெரஞ்ச நாள் இதுன்னு, அவள கன்வின்ஸ் பண்றதுக்குள்ள என்னமா பாடுபட்டுட்டேன். உங்கப்பாவ கூட சமாளிச்சுட்டேன், மாப்ளைக்கு தெரியாம பாத்துக்கணும்டீ" என்று நீட்டி முழக்கி பெரிய சாதனை செய்த தொனியில் புவனேஷ்வரி மாமி சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தாள்.

    இதையெல்லாம் கேட்டுக் கொண்டே உள்ளே வந்த சுகுமாரன், வாயடைத்து வாசலிலேயே நின்று கொண்டிருந்தான்.

    *** *** **** **** ****

    பி.கு: நாள், நட்சத்திரம், கெழமை, சாச்திரம், சம்பிரதாயம் எல்லாம் 'ஓவரா' யூஸ் பண்ணாதேள்.
    அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு! :)

    இது போட்டிக்கல்ல, சும்மா ஸாம்பிள் 'நச்'சுக்கு.

    இனியும் வரலாம் ;)

    Sunday, November 01, 2009

    தமிழ்மணமா? டமிலிஷ்ஷா? ரீடரா? டைரக்டா?

    வாங்க மக்கள்ஸ்.
    நம்ம ஆஸ்தான சர்வே கொம்பேனி இஸ்து மூடினதிலிருந்து, சர்வே போடாம வெம்பி வெதும்பி போயிருக்கேன்.
    அதுவுமில்லாம , நச் போட்டி ஜூடா போயிக்கினு இருக்கு. அதில், சிறந்த கதையை தேர்ந்தெடுக்க, கட்டம் கட்டலாமா, நடுவரை தேடலாமான்னு இன்னும் முடிவு பண்ணலை.
    பரீட்சாதார முறையில், புதிய ஒரு சர்வே கொம்பேனியை முயன்று பார்க்கலாம்னு, கோதால எறங்கிட்டேன்.

    எறங்கறது எறங்கறோம், பெருசா எறங்கலாமேன்னு, வில்லங்கமா ஒரு டைட்டிலோட எறங்கியாச்சு.

    கீழ பொட்டியில் யோசிச்சு வாக்கி, 'அனுப்புங்கோ'வை, க்ளிக்குங்க.

    கள்ள வாக்கெல்லாம் போட ட்ரை பண்ணி, வெவரத்த சொல்லுங்க. இந்த தேர்தல் அதிகாரி எம்புட்டு 'கெட்டியா' இருக்காருன்னு பாத்துடுவோம்.

    * நீங்க பதிவராயிருந்தா - உங்க பதிவுக்கு அதிக வாசகர்களை அனுப்பி வைக்கும் தளம் எது?

    * நீங்க வாசகராயிருந்தா - எந்தத் தளத்தை அதிகம் பயன்படுத்தறீங்கோ?



    ஸ்டார்ட் மீஜிக்!

    நா.ண நா.ண :)