recent posts...

Thursday, April 23, 2009

பழைய செய்திகள் தரும் கிக்கு

'காந்திய சுட்டுட்டாங்களாமே?'ன்னு ஒரு பெருசு, ஏதோ கவுண்டமணி படத்துல பழைய பேப்பர படிச்சுக்கிட்டு வாயப் பொளப்பாரு. அதுக்கு கவுண்டரும், டேய்ய்ய்ய்ய்னு நீட்டி முழக்கி சூப்பரா லடாய் பண்ணுவாரு.

சமீபத்தில் யூட்யூபில் மாட்டிய, ஒரு காமெடி வீடியோவிலும், அது போல் ஒரு விஷயம் இருக்கும். வீட்டுக்கு வந்த மாமனார், பொழுது போகாமல், பழைய பேப்பரை படித்துக் கொண்டிருக்க, மாப்பிள்ளையின் கண்ணில் ஹெட்லைன்ஸ் படும், "என்னாது நியூயார்க்ல 3000 பேர் செத்துட்டாங்களா? இது எப்படி நடந்தது?"ன்னு அங்கலாய்ப்பாரு. இத்தனைக்கும் அவங்க குடும்பம் அமெரிக்க வாழ் குடும்பம்.

பழைய செய்திகள் ஒருபுறம் இப்படி காமெடி அளித்துக் கொண்டிருக்க, இன்னொரு புறம், என் கண்ணில் படும் பழைய செய்திகள் எரிச்சலைத் தருகிறது.

இலங்கையில் போர் தொடங்கி சில பல மாதங்கள் ஆயிடுச்சு. இதோ புடிச்சுடுவோம், அதோ மடக்கிடுவோம்னு, நாளொரு வண்ணம் பொழுதொரு சேதி விட்டுக் கொண்டிருந்த இலங்கை சேனை, இன்னும் அதச் சொல்லிக்கிட்டேதான் இருக்காங்க.
சரி, அவங்களாவது பரவால்ல, வேர வழியில்லை எதையாவது சொல்லித்தான் ஆகணும்.

ஆனா, உள்ளூரில் இருந்து கொண்டு லந்து பண்ணும், யோக்கியர்களை நினைத்தால்தான், காமெடி தலைக்கு கிர்ர்ர்ர்ர்னு ஏறுது.

சில மாதங்களுக்கு முன் நடந்த உண்ணாவிரதங்களும், அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு கட்சித் தலைவர்கள் விட்ட வெட்டி வீரப் பேச்சுகளும், திகட்டா இன்பம் தருது, இப்ப படிச்சா.

கேக்கரவன் கேணையனா இருந்தா, எலி ஏரோப்ளேன் ஓட்டுமாம் (வடிவேலு?).

ஹ்ம்!!!

மானங்கெட்ட மனுஷனுங்கப்பா நம்மெல்லாம்.
நம்ம வயித்துப் பொழப்பு மட்டுமே நமக்கு பெருசாப் போச்சு.

நம்ம அரசியல்வியாதிகளெல்லாம், மேடைப் பேச்சு பேசவும், கவிதை எழுதவும், சந்தனம் அரைக்கவும், அதை நம் மண்டையில் பூசவும் மட்டுமே லாயக்கு.

திருவாளர்.வை.கோ சொன்ன பழைய செய்தி -- இலங்கையில் போர் நிறுத்தாவிட்டால், தமிழகத்தில் ரத்த ஆறு ஓடுமாமாம்!

ஓடும், ஓடும்.

நேத்திக்கு பந்த்தாமே?
போராளிகள் எல்லாம் வெகுண்டு எழுந்து, உங்க கோவத்தை படு பயங்கரமா காட்னீங்களாமே?
உலகமே ஸ்தம்பிச்சு போச்சாமே?

ஊரே சிரிக்குதுய்யா! கேவலம்! படு கேவலம்!

ஒரு சொறி நாயின் மீது கல் எறிந்தால் கூட, சுற்றி நிற்கும் மற்ற நாய்களெல்லாம் கல் எறிந்தவனைப் பார்த்துக் குரைக்கும்!

Monday, April 20, 2009

சென்னை விசிட் - Say No to மாமன் மகள் & அத்தை மகன்

மலையாளத் திரையில் என்னை கன்னாபின்னாவென்று கவர்ந்த படம் தனியாவர்தனம். சிபி மலையில் என்ற உன்னத இயக்குனரின் படைப்பு இது. ஸ்கூல் படித்த காலத்தில் பார்த்திருந்தாலும், இன்னும் அழுத்தமாய் நினைவில் இருக்கும் படம். படத்தை பற்றி ஒரு பெரிய பதிவு அப்பாலிக்கா போடணும். இப்போதைக்கு, படத்தின் கரு மட்டும் சொல்றேன்.
மம்முட்டி ஒரு ஸ்கூல் வாத்தியார். அழகான மனைவி சரிதா. ஒரு மகளும், குட்டி மகனும்.
ஒரு குடும்ப சாபம் காரணமாக, குடும்பத்தின் மூத்த மகனுக்கு பைத்தியம் பிடித்துவிடும் என்ற நம்பிக்கை இவர்களுக்கு.

மம்முட்டியின் மாமனுக்கு பைத்தியம் பிடித்ததும், அவரை வீட்டில் ஒரு ரூமில் சங்கிளியால் கட்டி வைத்திருப்பார்கள். மாமன் இறந்ததும், எல்லோரும், சாபத்தின் அடுத்த தாக்கு மம்முட்டி மீதுதான் இருக்கும்னு சொல்லி சொல்லி, அவருக்கும் பைத்தியம் பிடிக்க வச்சு, சங்கிலியால் கட்டி வச்சிருவாங்க. ரொம்ப தத்ரூபமா, நம்மூரில் ஊறிக் கிடக்கும் மூட நம்பிக்கைகளை எடுத்து சொல்லிருப்பாங்க. கலங்கிரும்!

இம்முறை சென்னைக்கு சென்றிருந்தபோது ( பார்ட்1, பார்ட்2 ) ஒரு பழைய நண்பனை சந்தித்தேன். ராஜன்.
ஸ்கூலுக்கு ஒண்ணா போகலன்னாலும், ஒண்ணா டயர் ஓட்டி, ஒண்ணா சைக்கிள் கத்துக்கிட்டு, ஒண்ணா காத்தாடி வுட்டதெல்லாம் இவனோடதான். அவங்க வீட்ல அவனை விட என்னை ரொம்ப பிடிக்கும். இதுக்கு ஒரு பெரிய காரணம் இருக்கு.
இந்தப் பயலின் அம்மா, கல்யாணம் பண்ணிக்கிட்டது, அவங்க சொந்த மாமனை.
ராஜனுக்கு ஒரு அக்கா, ஒரு அண்ணன்.
சோகம் என்னன்னா, அக்காவும் அண்ணனும், வாய் பேச முடியாதவர்கள்.

மூன்றாவதாய் ராஜன் பிறந்ததும், மூன்று வருஷமாய் வாய் திறக்காமல் தான் இருந்திருக்கிறான். ராஜின் பெற்றோர் கதிகலங்கி போயிருந்தார்களாம்.
அப்பொழுதுதான் எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் குடியேறினார்களாம். நான் ராஜுடன் விளையாடத் தொடங்கியதும் தான், அவன் என்னைப் பார்த்து பேசப் பழகிக் கொண்டானாம்.

இரத்த பந்தத்தில் திருமணம் செய்யக் கூடாது, அப்படி செஞ்சுகிட்டா வாரிசுகளுக்கு நல்லதுல்லங்கரதெல்லாம் தெரியாம ராஜின் தாய் தன் சொந்த மாமனைத் திருமணம் செஞ்சுகிட்டிருப்பாங்க. இந்த பழக்கம் இன்னும் கூட சில இடங்களில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. மருத்துவ ரீதியாய், செய்ய வேண்டாம் என்று சொல்வதை, செய்யாமல் இருத்தல் நலம். ( Dr.Bruno or Dr.VSK, pls elaboarate on this, when time permits )

இதைப் படிக்கரவங்க யாராவது, அப்படியொரு திருமணம் செய்தவராயின் தயவு செய்து பதறாதீர்கள். எல்லாருக்கும் இப்படி ஆகரதெல்லாம் இல்லை. எனக்குத் தெரிந்து சில பல குடும்பங்கள் சுபிட்சமாவே இருக்காங்க.

ஆனா, அப்படி சுபிட்சமா இருக்கர குடும்பங்களிலும் கூட சில நேரம், "தனியாவர்தன"த்தில் வரும் மூடநம்பிக்கைகள் போன்று, ஆட்டி வைக்கின்றன.

எனக்கு பல காலம் பழக்கமான நண்பர் ஒருவர், இப்படித்தான் அக்கா மகளை திருமணம் புரிந்தவர். இவருக்கு முத்தான இரண்டு பிள்ளைகள். இரண்டும் செம சூட்டி.

ஆனால், இம்முறை அவரைக் கண்டபோது ரொம்பவே புலம்பினார்.
"ரெண்டு பேருக்கும் படிப்புல அக்கரையே இல்லைங்க. சொந்தத்துலையே கல்யாணம் பண்ணதால இப்படி ஆயிடுச்சு. பையனுக்கு படிப்பு ஏரல, பேசாம மூத்தவனை கடைய பாத்துக்கு சொல்லிடலாம்னு இருக்கேன்"னு சொன்னாரு.

"என்ன கொடுமைங்க இது? பையன் சரியா படிக்கலன்னா, ஸ்கூல்ல டீச்சர் கிட்ட சொல்லுங்க, ட்யூஷன் வைங்க, இல்லன்னா அன்பா பேசி படிக்க சொல்லுங்க. அதுவும் இல்லன்னா முதுகுல ரெண்டு போட்டு படிக்க சொல்லுங்க. அத்த விட்டுட்டு எதை எதையோ காரணமா சொல்லி பையன் ஃப்யூச்சரை கெடுத்துடாதீங்க" இது நானு.

ஒழுங்கா இருக்கர குடும்பங்களிலும் கூட, சுத்தி இருப்பவர்களின், மூட நம்பிக்கைகள் சார்ந்த அலப்பரையால், பல குடும்பங்கள் அமைதி இழந்து சுத்திக்கிட்டு இருக்காங்க.

மெத்தப் படித்தவராய் இருந்தாலும், இந்த மாதிரி விஷயங்களில், அக்கம் பக்க வாசிகளின் தொடர்ந்த நச்சரிப்பால், குழம்பித்தான் போகிறார்கள்.

அடுத்த வருஷ விசிட்டில், மூத்தவன், "வாங்க்ணா, இன்னா வேணும்?"னு கல்லாவுக்கு பின்னால் அமர்ந்து கொண்டு கேட்காமல் இருக்க, எல்லாம் வல்ல ம.நெ.நாதன் அருள் புரியட்டும்!

Sunday, April 12, 2009

அன்பான வாக்காளப் பெருமக்களே, ஒரு வாக்குக்கு ஒரு ஐ-ஃபோன் இனாம்

வருஷங்கள் ஓடுது. கண்ணு மூடி தொறக்கரதுக்குள்ள ஒரு வருஷம் முடிஞ்சுடுது.
ஊரு விட்டு ஊரு வந்து சில பல வருஷங்கள் பறந்தே போச்சு.

வாழ்க்கையில் சாதிச்சது என்னன்னு இது வரை புலப்படலை.
இனி என்ன இருக்குங்கரதும், தெளிவா இல்லை.

உங்களில் பலரைப் போலவே, எனக்கும் ஓரளவுக்கு சமூக சிந்தனை உண்டு.
ஆனா, உங்களில் பலரைப் போலவே, வெறும் சிந்தனையோட நின்னு போயிடர விஷயமா இருக்கு இது. களமிறங்கி ஒண்ணும் கழட்ட முடியாது போலருக்கு.

சில வருஷம் ஆணி புடுங்கி முடிச்சதும், சேத்த துட்டை பானைல கொட்டி, ஷமூக ஷேவா செய்யணும்னு ஒரு அரிப்பு இருந்துக்கிட்டே இருந்தது.
ஆனா, நாட்டை திருத்தர அளவுக்கு அறிவு கிடையாது;
ஸ்டேட்டை திருத்தர அளவுக்கு வெவரம் பத்தாது;
சிட்டியை திருத்தர அளவுக்கு தெறம கெடையாது;

அட்லீஸ்ட் தெருவையாவது திருத்தலாம்னு ஐடியா இருந்துச்சு. அதுக்கு ஒரு கவுன்ஸிலரா ஆயிடணும்னு நெனச்சுட்டு இருந்தேன். ஆனா, அதுலையும் மண்ணு.
இந்த வருஷ விடுமுறைக்கு சென்னை போயிருந்தபோது, ரெண்டு நாளு கொழால தண்ணி வரல.
வெயில் வேர சுள்ளுனு அடிச்சுதா, அதான் என்ன ஏதுன்னு வெளீல போயி விசாரிக்க முடியல்ல. நான் பாட்டுக்கினு, ஸ்ப்ளிட் ஏசியை ஆன் பண்ணிட்டு, தேமேன்னு மானாட மயிலாட ரீ-டெலிகாஸ்ட் பாத்துக்கிட்டு சுகமா இருந்தேன்.
திடீர்னு வெளீல பயங்கர சத்தம்.
டிங் டிங் டிங்னு மணி சத்தம். "சர்வேசன் வெளீல வாய்யா"ன்னு ஒரு பரிச்சயமான குரல்.

வெளீல வந்து பாத்தா, எங்க ஊரு கவுன்சிலரு, லுங்கிய மடிச்சு கட்டிக்கிட்டு, ஒரு பெரிய மணியை கையில வச்சுக்கிட்டு ஒவ்வொரு வீட்டு வாசலுக்கும் போய், வேகாத வெயில்ல, "தண்ணி லாரி வருது, வந்து தண்ணி புடிச்சுக்கங்கன்னு" காட்டு கத்து கத்துக்கிட்டு இருந்தாரு. லாரி வந்து எல்லாரும் தண்ணி புடிச்சதும், லாரி பின்னாடியே ஓடிக்கிட்டு அடுத்த தெருவ கவனிக்கப் போயிட்டாரு.

இத்தப் பாத்ததும், என்னோட கவுன்சிலர் கனவு தவிடு பொடியாயிடுச்சு. நான் எங்கேருந்து, இந்த வெயில்ல, தண்ணி லாரி பின்னாடி ஓடரது? சுத்தி யாராவது அடி பொடிகள் இருந்தாங்கன்னா அவங்கள ஏவி வேலைய வாங்கிக்கர மாதிரி இருக்கும்னு நெனச்ச அரசியல் கனவு புஸ்னு எறங்கிடுச்சு. :)

கவுன்சிலர் வேலையே செய்ய முடியாது, நாம எங்க பொது வாழ்க்கைல டங்குவார கிழிக்கரது?

இதுலேருந்து இன்னா தெரியுது?

யாரும், இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்யமே!

நாம நம்ம வேலையப் பாப்போம்.

பொது வாழ்க்கைக்குன்னு வாழ்க்கையை அற்பணம் பண்ணிக்கரவங்க, அந்த வேலையப் பாக்கட்டும்.

அப்ப, நாம என்ன தான் செய்யரது இந்த ஷமூகத்துக்குங்கர யோசன வருதா?
வரும். வரணும்.

சும்மா, அது சரியில்ல, இது சரியல்லன்னு, நொட்ட சொல்ரதுக்கும், ஒரு தகுதி வேணும்.

அது என்ன தகுதி?

ஊர்ல இருக்கர நொட்டை நொடிசலை சரி செய்யரேன்னு தெருத் தெருவா கூவிக்கிட்டு, தேர்தல்ல நிக்கர வருங்காலத் தலைவரை தேர்ந்தெடுக்கும் பெரிய பொறுப்பு நமக்கு இருக்கு. அந்த வேலையை சரியாச் செஞ்சாலே, பாதி கிணறு தாண்டிய மாதிரி.
நீங்க வோட்டு போட்டுட்டு, உங்க கடமைய முடிச்சுட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டவங்க கடமை தவறும்போது நீங்க குட்டலாம்.

நீங்க வோட்டும் போட மாட்டீங்க, லாரி பின்னாடி ஓடவும் மாட்டீங்க, மானாட மயிலாட மட்டும் தொடர்ந்து பாத்துக்கிட்டு இந்த அவதாரத்தை முடிச்சுக்கப் போறீங்கன்னு முடிவு பண்ணியிருந்தா, அடுத்த அஞ்சு வருஷத்துக்கு ஒரு நொட்டையும் சொல்லாம வாய மூடிக்கிட்டு சைலண்டா இருங்க.

நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில், வோட்டு போட்டு, நல்ல ப்ரஜையின் கடமையை நிறைவேத்தினீங்கன்னா, தினம் ஒரு 'நொட்டை' சொல்லும் பதிவு போட்டு எனக்கு மடல் அனுப்பினா, தவறாமல் வந்து ஒரு பின்னூட்டத்தை அளிப்பேன் என்று, வாக்குறுதி அளித்து உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன். நன்றி! வணக்கம்! டமில் வாழ்க! அவர் நாமம் வாழ்க! இவர் பட்டை வாழ்க! ஜெய் ஹிந்த்!



பி.கு1: ஐ-ஃபோன் இனாம் தரும் கட்சி ஏதாச்சும் இருந்தா ஈமடலில் தொடர்பு கொள்ளவும். வாக்கிடுவோம்ல ;)

பி.கு2: சந்தோஷின் 'ஓட்டு போடுங்க ப்ளீஸ்' அழைப்புக்காக போட்ட பதிவு இது.

பி.கு3: தென் சென்னை வாக்காளர்கள் இவருக்கு வாக்களிக்கலாமோ?

Thursday, April 02, 2009

TWITTERனா இன்னா? அதை ஏன் Google வாங்கப் போகுதாம்?

TWITTER ஒரு புரியாத புதிர் எனக்கு.
எனக்கு ஒரு அக்கவுண்ட் இருக்கு, அதை சரிவர உபயோகிக்கத் தெரியல்ல எனக்கு.

எனக்கு புரிஞ்ச வரை, டிவிட்டரில் நீங்கள் இணையணும். இணைஞ்சதும், உங்கள் நண்பர்கள்/தெரிஞ்சவர்கள்/நல்லவர்கள்/வல்லவர்களைத் தேடிப் பிடிச்சு, அவங்களை follow பண்ணறேன்னு உங்க கணக்குல சேத்துக்கணும்.
நீங்க நல்லவர்/வல்லவர்/தெரிஞ்சவர்/நண்பர்னு மத்தவங்க யாராவது நெனச்சா உங்களை அவங்க follow பண்ண ஆரம்பிப்பாங்க.

இப்படி ஒரு வளையம் உருவாகும்.

அப்பாலிக்கா, ட்விட்டரில் போய், அந்த நேரத்துக்கு என்ன தோணுதோ, குறுஞ்செய்தி அனுப்பலாம், உங்களை ஃபாலோ பண்றவங்க அனைவருக்கும், உடனே அது போய் சேறும்.
டிவிட்டரில் தங்கள் செல் பேசியை இணைத்தவர்களுக்கு, அது, உடனே தெரியும், மத்தவங்க, டிவிட்டர் பக்கத்துக்கு வரும்போது தெரிஞ்சுப்பாங்க.

இன்னாடா, இவ்ளோ மொக்கையான மேட்டரா இருக்கே, இதை ஏன் கூகிள் வாங்கப்போறான்னு யோசிச்சேன்.

நான் ட்விட்டரை உபயோகிப்பது, வெறும் வெளம்பரத்துக்கு மட்டுமே. ஏதாவது புதிய பதிவெழுதும்போது, ஒரு உள்ளேன் ஐயா சொல்லிடுவேன் ட்விட்டரில்.

ட்விட்டரிலேயே அலுவலக நேரத்தில் பாதியை கழிக்கும், கானா பிரபா, பா.பாலா, கொத்ஸ் வகையராக்களை நம் பதிவுகளுக்கு ஈர்க்க, இந்த வழி உதவுகிறது.

ஆனால், ட்விட்டரை, செம்மையாய் உபயோகிப்பவர்கள், ஒரு நாளைக்கு எப்படியும் பத்திலிருந்து, நூறு குறுஞ்செய்தியை பரப்புகிறார்கள்.

சரி, இந்த குறுஞ்செய்திகளால், ட்விட்டருக்கு என்ன லாபம்? அதை வாங்கப் போகும் கூகுளுக்கு என்ன லாபம்?

யோசிச்சு பாத்தா நெறைய இருக்கு.

குறுஞ்செய்திகள், சுடச் சுட வருபவை. பல கோடி மக்கள், உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளும் விஷயங்களில், சுவாரஸ்யமான content இருக்கும். இதை அறுவடை செய்வதன் மூலம், சில்லரை பார்க்கப் பார்க்கிறார்கள்.

யோசிச்சுப் பாருங்க. குப்புசாமியும், மாடசாமியும் ட்விட்டர் கணக்கு வச்சிருக்காங்க.

குப்புசாமி செங்கல்பட்டு வாசி;
மாடசாமி பெங்களூரு வாசி;

குப்புசாமி வில்லு படம் பாக்கப் போறாரு;
மாடசாமியும் வில்லு பாக்கப் போறாரு;

குப்புசாமிக்கும், மாடசாமிக்கும் உலகில் பல மூலையிலும் ட்விட்டர் ஃபாலோயர்ஸ் இருக்காங்க.

செங்கல்பட்டில் வில்லு படம் பார்த்து நொந்து போய் வெளியில் வந்த குப்புசாமி, உடனே தன் செல்பேசியை எடுத்து குறுஞ்செய்தி தட்டறாரு, "மாடசாமி, பெரிய தப்பு பண்ணிட்டேண்டா. வில்லுக்கு குருவியே தேவலாம்"

மாடசாமி, டிவிட்டரின் மூலம், தன் செல்பேசிக்கு வரும் குறுஞ்செய்தி பார்த்ததும், "டேய், ஆமாண்டா குப்பு. வில்லு செம டேமேஜ் டா" என்று மறு புலம்பலால் புலம்புகிறார்.

இந்த இருவரின் குறுஞ்செய்தியை ட்விட்டர் வழி பெற்ற மற்ற ஃபாலோயர்கள் அனைவரும், "குப்பு & மாடு, நாங்களும் வில்லு பாத்தோம், உங்க சோகத்தில் நாங்களும் கலந்துக்கறோம்"னு அனுப்பறாங்க.

இதுல இருந்து என்ன தெரியுது? படம் ரிலீஸான பத்து நிமிஷத்துக்குப்பரம், ட்விட்டரில் "வில்லு" தேடினால், உலக மக்கள் அனைவராலும் எப்படி வரவேற்கப்பட்டது என்பதை துரிதமாய் தெரிந்து கொள்ளலாம்.

ஸோ, வில்லு படம் பாக்கலாமா வேணாமான்னு நெனைக்கறவங்க, ரெண்டு நாள் வெயிட் பண்ணி, இணையத்தில் என்னை மாதிரி ஆளுங்க எழுதும் வெமர்சனம் படிச்சுட்டு படம் பாக்கப் போலாம். ஆனா, சுடச் சுட அந்த நிமிஷம் ட்விட்டரில் அலலபாயர குறுஞ்செய்திகளை search.twitter.comல் தேடினால், கொடுமையிலிருந்து துரிதமாய் தப்பிக்கலாம்.

பெரிய பெரிய நிறுவனங்கள், டிவிட்டர் புலம்பல்கள் மூலம், தங்கள் நிறுவனத்தின் மீது மக்களுக்கு இருக்கும் விருப்பு வெறுப்புகளை உடன்க்குடன் தெரிந்து கொண்டு, திருத்திக் கொள்ள பெரிய வாய்ப்பு உள்ளது. டிவிட்டருக்கு வருங்காலத்தில் இது துட்டு தேத்த பெரிய வழி.
உதாரண ட்விட்டுகள்:
"மச்சி, american airlines செம தண்டம். எப்பவும் லேட்டு. ஏர்ஹோஸ்டஸும் சரியில்லை"
"ங்ணா, வில்லு பாத்தீங்களாண்ணா, சூப்பர் படங்கணா"
"Live.com செம ஸ்லோடா, இவ்ளோ வருஷம் என்னதான் குப்ப கொட்றாங்களோ?"
"ஃப்ரீயா iphone கொடுக்கர கட்சிக்குதான் மச்சி என் வோட்டு"

Bloggerஐ துவங்கி, கூகுளுக்கு வித்து டப்பு பார்த்த, அதே கும்பல்தான், இப்ப ட்விட்டரை ஆரம்பிச்சு, அதையும் வித்து டப்பு தேத்தறாங்க.
எப்படிதான் யோசிக்கறாங்களோ, இப்படி வித விதமா? அதெல்லாம் தானா வரதுல்ல?

Twitterஐ பற்றி தெரியாதென்ற பரிசலாரும்;
வில்லை பதம் பார்த்த வெட்டியாரும் இந்தப் பதிவின் கான்செப்ட்டுக்கு அவர்களை அறியாமல் வித்திட்டவர்கள் ;)

ட்விட்டரை பற்றி வேறு விஷயங்கள் அறிந்தவர்கள், சொல்லிட்டுப் போங்க.

ஹாப்பி வெள்ளி!

பி.கு1: வில்லு, கண்டிப்பா குருவியை விட சிறந்த படம். பாட்டெல்லாம் அருமையா வந்திருக்கு. டாக்டர் படத்துக்கு, மொக்கையைத் தவிர வேறு எதையோ எதிர்பார்த்துச் செல்லும் உங்களின் மீதுதான் தவறுள்ளது என்பதை தெரிவித்துக் கொல்கிறேன் ;)

பி.கு2: disclaimer: Google buying twitter is just a rumour at this point.