recent posts...

Thursday, July 31, 2008

Mixture - சூப்பர் பல்ட்டி, PiT, தனம் ராஜா,சென்னை, குசேலன்...

அ.


கலக்கறாங்கோ இல்ல? 08/08/08க்காக வெயிட்டிங்.
இந்த முறையும் ஒண்ணும் தேராதுன்னு பட்சி சொல்லுதாம்.

ஆ.
PiTன், ஓராண்டு நிறைவை ஒட்டி மெகா போட்டி நடக்குது.

அம்மாடியோவ், நாட்கள் ஓடரதே தெரீல.

வயசாவுது! :(

வருஷம்ஸ் may come
and வருஷம்ஸ் may go
வீ நெவர் change!

இ.
ராஜா மெய்யாலுமே காணாமதான் போயிக்கிட்டிருக்காரு. பலரும் ஊர்ஜீதமும் பண்ணிட்டாங்க.
'தனம்'னு ஒரு படம் வந்திருக்கு. ராஜா மூஜிக்.
ஹ்ம். என்னத்த சொல்ல. ஒண்ணு ரெண்டு, ஓ.கே.
ஆஸ்தான பாடகி, பவதாரணி பாடியிருக்காங்க. ஹ்ம்.
சித்ரா, ஜானகி, spb, யேசுதாஸ், உண்ணி, இவிகயெல்லாம் பாட வரமாட்றாங்களா?

"கட்டிலுக்கு மட்டும்தானா பொம்பள" என்று ஒரு இஸப் பாட்டும் உண்டு.

ஈ.
ஒடம்ப கட்டுமஸ்தா வச்சுக்கலாம்னு, இப்பெல்லாம், ஓவரா வெளையாட ஆரம்பிச்சாச்சு.
வாலிபாள், டென்னிஸ் எல்லாம் கூட நடக்குது.
என்ன, பாதி நேரம் பந்துக்கு பின்னாடி ஓடரதுக்கே சரியா இருக்கு.

இங்க ரெண்டு மூணு தெருவுக்கு ஒரு பெரிய பார்க், பல வெளையாட்டுக்கள் வெளையாட இலவச வசதி, ராத்திரி கூட லைட் போட்டு வெளையாட ஏற்பாடுன்னு சொகுசு பண்ணி வச்சிருக்கானுவ. எங்க ஊர்ல இருக்கர பார்க்கெல்லாம் பாக்க இங்க சொடுக்குங்க.

நம்ம சொந்த ஊர்ல (சென்னை) மைதானம் எங்க இருக்குன்னு யோசிச்சு பாத்தேன். ஸ்கூல் படிக்கர காலத்துல ஃப்ளட் லைட் மேச்செல்லாம் வெளையாடின பெரிய மைதானமெல்லாம் ஃப்ளாட் கட்டி மூடிட்டான்.
இப்பெல்லாம் பசங்க எங்கப் போய் வெளையாடரங்க?

ஒரு ஏக்கருக்கு, ஒரு பார்க்கு கட்ட இடம் விடணும்னு சட்டமெல்லாம் இருக்காமே? அது எல்லாம் புஸ்ஸா?

BSNL ஆளுகளே, லஞ்சம் கேக்கறாங்கன்னு ஒரு பதிவர் போட்டிருந்தது ஞாபகத்துல வந்து தொலைக்குது. தலைவர் புதுப் படம் பாத்து கருத்ஸ் சொல்லரதலையே பிஜியா இருக்காரு. MP எல்லாம் 25 கோடி பொட்டீல வாங்கரானாமேன்னு ஒலகம் பூரா, போஸ்ட்டர் அடிச்சு ஒட்டிட்டானுவ.
தண்ணிப் பிரச்சனை வராம இந்த வருஷம் சென்னை தப்பிச்சிடலாம்னு சில பேர் சொல்லராங்க. எங்க வீட்ட சுத்தி சில பேர் வீட்டுக் கெணத்துல தண்ணி லேது. 150 அடி போர் போட்டெல்லாம் தண்ணி கெடைக்கலையாம்.
ஆனா, 2004ஐ விட, 2007ல் பூமியில் தரைநீரின் மட்டம் உயர்ந்திருக்காம்.

நல்லது நடந்தா சரிதான்.

உ.
குசேலன்? அட, என்னத்தங்க சொல்றது?
இதோட மூலப் படம் மலையாளத்துல மம்முட்டி நடிச்சத போன மாசம் பாத்தேன்.
ஆர்ப்பாட்டம் இல்லாம அவரும் ஒரு பதினஞ்சு நிமிஷம் வந்துட்டுப் போவாரு. படமும், ஆர்ப்பாட்டம் இல்லாம, எதமா இருக்கும்.
குசேலன்ல தலைவரு ஒரு மணி நேரம் வராராம். ரெண்டு பாட்டெல்லாம் பாடராராம். பேட்டியெல்லாம் குடுக்கறாராம்.
வியாபார தந்திரமோ என்னமோ, படத்தின் 'ஹீரோ' பேரும் படமும் எங்கையும் காணும்.
படம் எப்படி இருக்கும்னு அனுமானிக்க முடியுது.
கண்டிப்பா தியேட்டர்ல போய் பாக்கரதா இல்ல.
DVD எப்படியும் ஒரு மாசத்துல வந்துடும். அப்பாலிக்கா பாத்துக்கலாம்னு விட்டாச்சு.
தியேட்டர்ல $20.50க்கு விக்கரானுவ. Dark Knightக்கு $9 தான்.
என்ன கொடுமைங்க இது?

சிவாஜி, தசாவதாராமெல்லாம், நெறைய செலவு பண்ணி, ஒலகத்தரத்துக்கு எடுத்துட்டாங்க, அவங்கள ஊக்குவிக்கலாம்னு, எல்லாரும் $15 கொடுத்து பாத்திருப்போம்.

குசேலனுக்கு இன்னாத்துக்கு $20.50 கேக்கறாங்க?

அமெரிக்க வாழ் மக்களே, $20.50 கொடுத்து பாத்துட்டு, திருப்தியா இருந்ததான்னு ஒரு வரீல சொல்லுங்கய்யா. கீழையோ, வலது பக்க பொட்டிலயோ வாக்குங்க.

எந்த மாதிரி படமெடுத்தாலும், எம்புட்டு கேட்டாலும் கொடுத்து பாக்கர, உங்கள மாதிரி தைரியசாலிகளால்தான் இதெல்லாம் தொடர்கதையா நடக்குது ;)

latest additions:
லக்கியாரின் குசேலன் = குப்பை
VSKன் படமா சார் இது?

ஹாப்பி ப்ரைடே!



பி.கு: 6-packs நானுன்னு யாரும் வயிறு எரிஞ்சு பொக விட வேணாம். நானுல்ல அது.

Monday, July 28, 2008

Cuil, the GOOGLE challenger, fails my test

Cuil என்ற ஒரு புதிய search engine உருவாகிக் கொண்டிருக்கிறது. Googleன் முன்னாள் ஊழியர்கள் இணைந்து உருவாக்கி வரும் தளம் இது.

கூகிளின் ஆரம்ப காலத்தில், ஆர்பாட்டமில்லாமல், அதன் தரத்தின் ஒரே காரணத்தால் மட்டுமே பயனர்களின் கூட்டம் அதிகரித்து இன்று உயர்ந்த நிலையை அடைந்துள்ளது.

ஆனா, Cuil ஆரம்ப அடி எடுத்து வைக்கும்போதே, இரைச்சல் அதிகமாய் உள்ளது.
'worlds biggest search engine' என்ற அளப்பரை.
121,617,892,992 பக்கங்களை அலசி வைத்துள்ளோம் என்ற பரைசாற்றல் வேறு.

நிரை குடம் தளும்பாது என்ற நம்மூர் பழமொழியை மெய்விப்பது போல், இவங்க ரொம்பவே தளும்பராங்க.

சரி, இவ்ளோ தளும்பராங்களே என்னதான் செஞ்சு வச்சிருக்காங்கன்னு போய் எட்டிப் பாத்தேன்.

Surveysan என்ற உலகப் பிரசித்தி பெற்ற எனது ப்ளாகர் புனைப்பெயரைத் தேடினேன் (நிரை குடம் தளும்பக் கூடாதோ? :) ).

Cuilல் முதல் பக்கத்தில் வந்த 10 பதிவுகளில், ஒரே ஒரு பதிவுதான் சரியாய் இருந்தது, மத்ததெல்லாம் என்னன்னே தெரியல. -- நீங்களே பாருங்க.
ஆங்கில surveysanக்கே இந்த கொடுமைன்னா, தமிழ்ல தேடினா என்னாகும்னு பாத்தேன். சர்வேசன்னு அடிச்சா, 'please check your spelling'னு வருது.

என்ன கொடுமைங்க இது?

சரி, நம்ம கூகிளார் என்ன பண்றாருன்னு பாத்தேன்.
surveysan அடிச்சா, 6550 பக்கங்கள் வந்து நிக்குது. எப்படியும், இதில் சில பல ஆயிரம், 'நச்'னு நம்மள பத்தின பக்கங்கள் தான்.
சரின்னு, 'சர்வேசன்' அடிச்சு பாத்தேன், 8500 பக்கங்கள், 'நச்'னு காட்டுது.

ஸோ, இப்போதைக்கு, Googleதான் முன்னணியில்.

Cuil has a long way to go.

Cuil'ers, மொதல்ல செய்ய வேண்டியத, ஒழுங்கா செஞ்சு முடிஞ்சுட்டு, அப்பரமா, தளும்பரதை பத்தி யோசிங்க! அதுதான் வெற்றிக்கு வழி!

நீங்களும் டெஸ்ட் பண்ண உதவுங்க. எதையாச்சும் ரெண்டு தளங்களிலும் தேடி, என்ன கெடைச்சுதுன்னு பின்னூட்டுங்க! "கண்டதையும்" தேடி போடப்டாது.

;)

பி.கு: ஆங்கிலப் பதிவு இங்கே!

Sunday, July 27, 2008

இளையராஜாவை காணவில்லையா?

பெயர்: இளையராஜா

இயற்பெயர்: Daniel ராசையா

வயது: 65

வேலை: இசை அமைப்பாளர். எழுபதுகளில் சலீல் சவுத்ரி, ஜி.கே.வெங்கடேஷ் போன்ற ஜாம்பவான்களிடம் கிட்டார் வாசிப்பவராகவும், இணை-இசை அமைப்பாளராகவும் பணி புரிந்து, அன்னக்கிளி என்ற திரைப்படம் மூலம் 1976ல் மக்களுக்கு அறிமுகமானார்.
80களில் இவர் வசியம் செய்யாத தமிழனே இருந்திருக்க முடியாது. இவர் இசை அமைத்த ஒரே காரணத்துக்காக, சகலத்தையும் சகித்துக் கொண்டு, பல திராபைப் படங்களை, இவரின் ரசிகர்கள் நூறு நாட்கள் ஓட வைத்துள்ளனர் என்பது இவரது இசைத் திறமைக்கு எடுத்துக்காட்டு. திரை இசை தந்த வெற்றியின் காரணமோ என்னமோ, திரை இசையைத் தவிர்த்து மற்ற இசை உருவாக்கங்களை இவர் பெரிதாக வெளிக் கொணரவில்லை.
இவர் காண்பதர்க்கு எளிமையாக ஞானி போல் காட்சி அளித்தாலும், மக்கள்-தொடர்பு விஷயத்தில் பெரிதாகக் கோட்டை விட்டவர்.
மிகவும் தன்னடக்கம் உள்ளவர் போன்று தோன்றினாலும், இவர் பல சமயம் 'தான்' என்ற மமதையை பேட்டிகளில் வெளிக்காட்டியவர்.
பல, சக படைப்பாளிகளுடன் சில பல காரணங்களால் அனுசரித்துப் போக முடியா சூழலை உருவாக்கி வைத்துள்ளவர். இந்த உட்பூசல்களால், பல நல்ல படைப்புகள் ரசிகனுக்குக் கிடைக்காமல் போகும் நிலைக்கு வித்திட்டவர்.
90களிலும் இவரின் ஆளுமை தொடர்ந்தது. ஆனால், அதற்குப் பிறகு வெகு சில படங்களில் மட்டுமே இவரின் பழைய ஆளூமை தெரிந்தது.

காணாமல் போன நாள்: ஜூலை 1, 2005. (திருவாசகம் ரிலீஸ் ஆன நாள்)

அடையாளங்கள்: காணாமல் போன அன்று இவர் வழக்கமாகப் போடும் வெள்ளை வேட்டி வெள்ளை ஜிப்பாவுடன் காணப்பட்டார்.

மேலும் விவரங்கள்: பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரின் பழைய முத்திரையை மீண்டும் பதித்த திருவாசகம் ரிலீஸ் ஆனது. இவரின் ஆட்டம் முடிந்தது என்று நினைத்து மற்ற இசை அமைப்பாளர்களுக்குத் தாவிய ரசிகர்களெல்லாம், மீண்டும் ராஜா பக்கம் தாவியிருந்த நாள் அன்று. இனி தொடர்ந்து கலக்குவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, ராஜா காணாமல் போனது பெரும் வருத்தத்தைத் தந்தது.
நிழல்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே, நினைவெல்லாம் நித்யா, மூன்றாம் பிறை, நாயகன், சலங்கை ஒலி, சிந்து பைரவி போன்ற பெரும் படைப்புகள் இனி வராவிட்டாலும், அதில் 50% தாக்கத்தையாவது ராஜா திரும்பக் கிடைத்ததும் தருவார் என்ற ஏக்கத்தில் அவரின் ரசிகர்கள் இருப்பதாகத் தெரிகிறது.

சக படைப்பாளிகளிடம், விரோதம் பாராட்டாமல், சகஜ நிலைக்குத் திரும்புவார் என்றும் இந்த ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்களாம்.

ராஜா திரும்பக் கிடைப்பாரா? விவரம் அறிந்தவர்கள் உடனே தெரியப் படுத்தவும்.

மீண்டும் கிடைப்பார் என்ற நம்பிக்கையுடன்,

-ரசிகன்

பி.கு1: கானா பிரபாவின் குணா பதிவு பார்த்ததும் வந்த ஆற்றாமையால் வந்த பதிவு இது :)
பி.கு2: நான் தீவிர ராசா ரசிகன். :(
பி.கு3: ராஜா சவுக்கியமா இருக்காருங்க. காணாமலெல்லாம் போகலை. தலைப்பை மட்டும் படித்து விட்டு, கடைசி வரி படிக்கும் வாசகர்களுக்கு, இந்த பி.கு :)

ராஜா, மீண்டும் அடித்து ஆடுவார் என்ற நாளை ஆவலுடன் எதிர்பார்த்து

-சர்வேசன் :)

Monday, July 21, 2008

உ.தமிழனின் புனிதப் போரினால் விளைந்த நன்மைகளும், அடுத்த படமும்

இதோ போடறேன், இதோ போடறேன்னு சொல்லி இழுத்து, ஒரு வழியா தனது குறும் படத்தை வலை ஏத்திட்டாரு நமது சக பதிவர் உண்மைத் தமிழன் அவர்கள்.

புனிதப் போர் என்ற தலைப்பில் மிக நீநீநீநீண்ண்ண்ண்ட ஒரு குறும் படம்.
ஆமாங்க, கிட்டத்தட்ட 12 நிமிஷம் ஓடுது.

உ.தமிழனின் பதிவுகள் படிச்சிருந்தீங்கன்னா, அவரைப் பற்றி ஓரளவுக்கு ஒரு புரிதல் கிட்டும்.
எல்லாத்தையும், பெரூரூரூசா அனுபவிச்சு ஆராஞ்சு சொல்லும் வல்லமை கொண்டவரு.

இவரது அஞ்சாதே விமர்சனம் படித்தவர்களுக்கு இது புரிந்திருக்கும். அஞ்சாதே பதிவு எழுதி முடித்து, பப்ளிஷ் செய்யும்போது, "insufficient disk space" error வந்ததாக ப்ளாகர் அலுவலகத்தில் பரவலாக ஒரு பேச்சு உண்டு.

அப்படிப்பட்ட உ.தமிழன், குறும் படத்தையும் பெறும் படமாக எடுத்தது கொஞ்சம் இம்சை.

குறும்படத்தின் சிறப்பே, ஐந்தாறு நிமிடத்தில், விறு விறு என்று காட்டி, சுவாரஸ்யமாக முடிப்பது;
பு.போரில், ஆரம்ப 5 செக்கண்டுகள், சுவாரஸ்யமா, முழு முகம் தெரியா ஒரு 'வில்லனின்' பேச்சோடு தொடங்கியது;
ஆனா தொடர்ந்து, ஒரு ஏழெட்டு வில்லன்ஸ், வரிசையா பேசினது டார்ச்சர் ஆயிடுச்சு. ( ஏழெட்டா, இல்ல பத்து பன்னெண்டான்னு தெரியல, நடுவுல, ஓட்டிட்டேன் :) )

கடைசியில் முடியும் 'திருப்புமுனையும்' மொக்கைதான்.
இந்த மொக்கைத் தனம், நம்மை போன்ற கும்மிகளின் மத்தியில் சில காலமாய் புழங்குவதால் இருக்கலாமென்று ஏஜென்ஸி செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனாலும், இது இவரின் முதல் முயற்சி என்று நினைக்கிறேன்.
முதல் முயற்சியே, மக்கள் தொலைக்காட்சியில் தேர்வு செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டது அவருக்கும் பெருமை, அவரால் நமக்கும் பெருமை. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் உண்மைத் தமிழன்!

பு.போரினால் விளைந்த இன்னொரு பெருமை, தமிழ் திரை உலகிற்கு (அட்லீஸ்ட் குறு உலகிர்க்கு), உ.தமிழனால், ஏழெட்டு (பத்து, பன்னெண்டா?) புதிய வில்லன்கள் கிடைத்துள்ளனர்.

பெருமாள் பிச்சையையும், காதல் அப்பாவையும், ஆதிஷ் வித்யார்தி, பிரகாஷ் ராஜ் எல்லாம் பாத்து அலுத்துடுச்சு, பு.போரில் இருந்து, வில்லனுங்களை எடுத்துக் கொள்ளுமாறு, திரை உலகை, பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

பதிவுலகில் இருந்து ஏதாவது ஒரு பதிவருக்கு, அந்த கடைசியில் பேசும் ஹீரோவாக, சான்ஸ் கொடுக்காததர்க்கு என் கண்டனங்களைப் பதிகிறேன்.

உண்மைத் தமிழன், அடிச்சு ஆடுங்க!
அடுத்த படத்துக்கு அட்வான்ஸ் சீக்கிரம் கொடுத்து விடுகிறேன்.

ஒரே கண்டிஷன்:
நம்ம KRS ஹீரோவாகவும், கோவி கண்ணன் வில்லனாகவும், தருமி ஹீரோக்கு அப்பாவாகவும், நடிகை ஜெயப்ரதா ஹீரோவின் அம்மாவாகவும், லக்கி காமெடியனாகவும், வெட்டிப்பயல் கதையும், ஜ்யோவ்ராம் சுந்தர் வசனமும், CVR போட்டோகிராபியும் வச்சு எடுக்கணும். உங்க பேர டைரக்ட்டரா போட்டுக்கங்க, ஆனா, வேற யாரையாவது வச்சு தான் படம் எடுக்கணும். சொல்லிப்புட்டேன் ;)

பி.கு: சும்மா டமாஸுக்கு. மெய்யாலுமே, வாழ்த்துக்கள் உ.தமிழன். எல்லாம் ஒரு வெளம்பரந்தேன்!

Wednesday, July 16, 2008

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருனு சுத்துது! டார்ச்சர் தாங்கல!

'அனாலஜி' வச்சு இலை மறைவு காயா இந்த விஷயத்தைப் பத்தி எழுதலாம்னு நெனைச்சேன். ஆனா, இருக்கர கொழப்பமே போதும், நான் வேர என்னத்துக்கு கொழப்பணும்னு, மனசுல பட்டதை, உள்ளதை உள்ளது படி, அப்படியே தட்டறேன், படிச்சுக்கோங்க.

சமீபத்திய பதிவுகள் சில படிச்சா தலை உண்மையிலேயே சுத்துது.

1) தமிழ்மணம் சென்ஸார் செய்வது பற்றி:
இது தனியார் குழுமத்தால் லாப நோக்கமில்லாமல் (தற்போதைக்கு) தன்னார்வத்துடன் நடத்தப்படும் திரட்டி. சகல விதமான பயணரும் வந்து போகும் இடமாக, இவர்கள் இதை உருவாக்க நினைப்பதில் தவறொன்றும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
'கெட்ட' வார்த்தைகள் சிலவற்றை முகப்பில் வராமல் தடுப்பது எந்த விதத்திலும் தவறாகாது. வரவேற்கத் தக்கதும் கூட.

(நானே கூட ஒரு புகைப்படக் குழுமத்தில் இருக்கிறேன். சமர்கிப்படும் புகைப்படத்தில் 'கேள்விக்குறியான' விஷயங்கள் இருந்தால், கண்டிப்பா, நாங்களும் சென்ஸார் செய்வோம். இதுல என்ன பெரிய ப்ரச்சனை இருக்கமுடியும்?)

தமிழ்மண சென்ஸார் இல்லாத காலத்தில் எனக்கே ரெண்டு மூணு தடவை தர்மசங்கடம் ஆயிருக்கு.
அலுவலக நண்பர்கள் சிலரிடம், தமிழ் பதிவுகள் பற்றி எடுத்துக் கூறி, திரட்டிகளை காட்டலாம்னு தமிழ்மணம் பக்கம் வந்தா, ஜூடான இடுகைகள் முழுக்க முழுக்க, 'பலான' மேட்டரே நிரம்பி வழிந்த நாட்களுண்டு.
இதைதான் கிழிக்கறீங்களா என்பது போல், அவங்க ஏளனமா பாக்கரதும், நாம டக்குனு ப்ரௌஸர மூடரதும் சில தடவை நடந்திருக்கு.

குறிப்பா, பெண் பதிவர்கள் நிலையை நெனச்சுப் பாருங்க? புருஷன் கிட்டையோ, வீட்லயோ, தானொரு ப்ளாகர் என்று கூறிக் கொள்ள முடியுமா? தமிழ்மண உரலை, தைரியமா ஈ.மடலில் அனுப்பி, வாசகர்களைச் சேர்க்க முடியுமா?

என்னை மாதிரி, நிஜப் பெயர் வெளியிடாமல் இருப்பவர்களுக்கும், கும்மி மட்டுமே அடிக்கும் தனிக்கட்டைகளுக்கும், இந்த 'கெட்ட' வார்த்தை பெரிய விஷயமா இருக்காது. ஏக்சுவலி, இது நமக்கு ஒரு பெரிய entertainmentம் கூட. ஆனா, பெரும்பான்மையான 'சாதா' ப்ரஜைக்கு, இதெல்லாம் அருவருப்பு.
ஓரக்கண்ணால், சைட் அடிப்பதர்க்கும், ஊரே பார்க்கும்போது, ஈஈஈ என்று பல்லிளித்து ஜொள் விடுவதர்க்கும் உள்ள வித்யாசம்.

'வெட்கம்' இல்லாதவங்க தான், ஈஈஈஈன்னு பல்லிளித்து ஊரே பார்க்கும் போது ஜொள்ளுவார்கள்.
சபை மரியாதை அறிந்தவர்கள் கொஞ்சம் டீஸண்டாதான் இருப்பாங்க.

2) தமிழ்மணத்தில் இணைந்து விட்ட ஒரே காரணத்துக்காக, மனதில் நினைத்ததைப் பற்றி எழுதாமல் இருக்கணுமா?
கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான் இது. இணையம் தரும் அபரிதமான கட்டற்ற சுதந்திரம் லேசா இடிக்குது.
ஆனா, தமிழ்மணத்தின் கருவிப்பட்டையை உபயோகித்து, அவங்க திரட்டியில திரட்டப்பட்டு, அவங்க மூலமா வாசகர்கள் கிடைக்கணும்னா, அவங்க சொல்ற சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுத்தான் ஆகணும். அதிலென்னங்க குழப்பம்?

எனக்கென்னமோ, அவங்க சட்டதிட்டங்கள் ஓரளவுக்கு ஞாயமானதாதான் தெரியுது. ரொம்பப் பெரிய சென்ஸார்ஷிப் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆனா, சில சமயங்களில், எப்பவாச்சும், கொஞ்சம் 'ஏ' கலந்து பதிவுகள் போடும் பதிவர்களுக்கு இது நெருடலான விஷயம்தான்.
இந்த மாதிரி நேரங்களில், பதிவர்கள், நினைப்பதை எழுதுவது அவங்க சுதந்திரம்.
தமிழ்மணத்துக்கு, ஏதாவது பிடிக்கலண்ணா, (preferably, சிறு விளக்கம் தந்து), அதை * செய்து மறைப்பது, அவங்க சுதந்திரம்.

better yet, தமிழ்மணம், பதிவர்களுக்கு சில வசதிகள் செய்து கொடுக்கலாம்.
உ.ம். NotForThamizmanam னு லேபிள் வச்சு பதிவு போட்டா, இதை திரட்டாமல் இருக்கலாம்.
எப்பயாச்சும், 'ஏ' பதிவு போட விரும்பும் பதிவர்கள், இந்த லேபிளைப் போட்டு, இதை பொதுப் பக்கத்தில் தெரியாதவாறு பார்த்துக் கொள்ளலாம்.

3) படைப்பாளிகளின் சுதந்திரம்?
தமிழ்மணத்தில் இணைந்துதான் வாசகர்கள் பெறணுங்கர கட்டாயம் இருந்ததுன்னா, யாரும் பெரிய படைப்பாளி இல்லீங்க.
எனக்குத் தெரிஞ்சு, நாம இங்க அடிக்கரதெல்லாம், சும்மா வெட்டிப் பேச்சும், கும்மியும்தான்.

நான் எழுத (ஹிஹி, எல்லாம் நேரம்) ஆரம்பிச்சு ரெண்டு வருஷம் ஆகப் போவுது. என் கண்ணுல பட்டதெல்லாம், நல்ல பொழுதுபோக்குப் பதிவுகளும் (லக்கி, வெட்டி, கொத்ஸ், பெனாத்ஸ்,பாலா,கானா,... இந்த மாதிரி), ஓரளவுக்கு சுமார் கவிதைகளும் (ஷைலஜா, நிலவு நண்பன்,...), ஒரு சில 'விஷயமுள்ள' பதிவுகள் (விக்கிபசங்க, VSK, அனுராதா, தருமி, KRS, ...), பலப்பல கும்மி பதிவுகளும் (கோவி, ஆசிப், குசும்பன்,...), மிகச் சில சுவாரஸ்யமான குழுப்பதிவுகள் மட்டும்தான்.

பெரீரீரீரீய படைப்பாளிகங்கர பட்டம் தாங்கி, யாரும் தமிழ்மணத்துல திரியரதா தெரியல. யாரையாச்சும் மிஸ் பண்ணிட்டா சொல்லுங்க, படிச்சு பாக்கறேன்.

4) மொத்தத்தில் எரிச்சல் தரும் விஷயம்?
தமிழ்மணம் systematicஆக சில விஷயங்களை செய்யாதது. குழுமத்தில் இருப்பவர்களின் Ego அவ்வப்போது வெளியில் எட்டிப் பார்த்து, 'சார்பற்ற' அவர்களது செயல்பாட்டை கேள்விக் குறியாக்குவது போன்ற செயல்பாடுகள்.
You have devised rules -> just enforce the damn thing and not make a big fuss about it when you implement it. எல்லா செயலபாட்டுக்கும் பத்து பக்க வெளக்கம் கொடுக்கப் போகும்போதுதான், ப்ரச்சனைகள் ஊதப்படுகிறது.
one-liner explanation would do. என்னக் கேட்டா, * போடுமி இடத்திலேயே ஒரு விளக்கத்தை அடைப்புக் குறீல போட்டுட்டா, வேலை முடிஞ்சது. உ.ம் (blocked).

இன்னும் நல்லா செய்யணும்னா, இதை systematicஆ செய்யலாம். தமிழ்மணப் பதிவர்கள் யாராவது 50 பேர், அந்த மஞ்சள் பொத்தானை ஒரு பதிவுக்கு அழுத்தினால், அதை முகப்பிலும்/சூடிலும்/பின்னூட்டப் பகுதியிலும் திரட்டாமல் விட்டுவிடலாம்.

யோசிங்க. எவ்வளவோ பண்ணிட்டோம், இதை சேக்க என்ன பெரிய கஷ்டம் இருக்கப் போவுது?

சூடான இடுகைகள் -> இத தூக்கணும்னு சொல்ல ஆசைதான். இந்த கட்டத்தில் இடம் பிடிக்கதான், ரூம் போட்டு யோசிச்சு எல்லாரும் தலைப்பு வைக்கறோம். ஆனா, personally, இது இல்ல்ன்னா, முகப்பே ஒரு 'விரக்தியா' இருக்கு. வெறும், பொழுது போக்குக்காக வாசிக்க வரும் பதிவர்களுக்கு, இது இல்லன்னா, ஒரு பெரிய இழப்புதான்.
இருந்துட்டுப் போவட்டும் - ஆனா, மேலே சொன்ன, systematic ரிமூவல் இருந்தா நல்லது. மஞ்ச ஐக்கானை கருவிப்பட்டையில் வைத்தல் கூடுதல் நலம். பதிவ படிச்சுட்டு க்ளிக்க வசதியா இருக்கும்.


ஸ்ஸ்ஸ்ஸ். இன்னும் நெறைய சொல்லிட்டே போகலாம்.
இப்போதைக்கு இது போதும்.

மொத்தத்தில்,
Everyone, Please Please, Grow Up!

எனக்கு, personalஆ எரிச்சல் தரும் ஒரு விஷயம், ரோம் நகரம் எரியும்போது ஃபிடில் வாசிச்ச கதையா, நம்ம பதிவர்கள் பெரும்பாலானோர், இந்த மாதிரி விவகாரப் பதிவுகளில், தங்களின் உண்மையான கருத்தை பதியாதது. எல்லாரும், எல்லாத்தையும் படிக்கராங்க (அதனாலதான ஜூடாவுது?), ஆனால், கருத்ஸ் சொல்லாம எஸ்கேப் ஆயிடராங்க. உங்க கருத்த, அங்கங்க அப்பப்ப போட்டு ஒடச்சாலே, பல விஷயங்கள் உடனடியாக 'நேராக' வழி பிறக்கும்.
இது, இந்தப் ப்ரச்சனைக்கு மட்டுமல்ல, எல்லா 'வெவகாரப்' பதிவுகளுக்கும் பொறுந்தும்.

ஸோ, பின்னூட்டத் தயங்காதீங்க. அங்கங்க, அப்பப்ப உங்க கருத்தைச் சொல்லத் தயங்காதீங்க! ஊருக்குள்ளதான், ஒண்ணும் கேக்காம, நடப்பவை நன்மைக்கேங்கரமாதிரி, வாழப் பழகிட்டோம், இங்கையாவது, கேள்விகள் கேளுங்க, எதையும் ஊதவிடாதீங்க.

so, அங்கங்க, அப்பப்ப, சொல்ல வேண்டியதைச் சொல்லுங்க!! என் வழி தனி வழின்னு போகாதீங்க. Come out of your shell! :)

ஓஹோ, எல்லாரும், இப்படிதான் நெனைக்கறாங்களா, அப்ப நாம இப்படி இதை இனி செய்யமுடியாதுன்னு, தெரிய வேண்டியவங்களக்குத் தெரிஞ்சாலே, பாதி விஷயங்கள் காத்திறங்கிப் போகும் ;)

வர்டா,

நன்றி!

பி.கு: இதுக்கு ஒரு சர்வே போடலாம்னு நெனைச்சேன். ஆனா, நான் கிறுக்கனதையெல்லாம் படிச்சுட்டு, இதுவா அதுவான்னு கேட்டா சரிவராது. இன்னொரு நாள் பாக்கலாம் ;)

Monday, July 14, 2008

புடவை கட்டுவது எப்படி? குமுதத்துக்கு என் கன்னா பின்னா கண்டனங்கள்!

என்ன கொடுமைங்க இது? நாட்டு நடப்பை தெரிஞ்சுக்கலாம்னு எப்பயாச்சும் குமுதம் இணையதளப் பக்கம் போரது உண்டு.

("யோவ், நாட்டு நடப்புக்கு ஏன்யா குமுதம்?"னு நீங்க கேக்கரது எனக்கு கேக்கல)

யூ.ட்யூப் ஹிட்டானாலும் ஆச்சு, இப்ப ஆளாளுக்கு வீடியோ போட ஆரம்பிச்சிட்டாங்க்ய.

குமுதத்துக்குள் நுழைந்ததும் முதலில் கண்ணில் பட்ட வீடியோ, "புடவை கட்டுவது எப்படி?"

அடப்பாவிகளா, விட்டா *** **** எப்படி? *** **** எப்படி ன்னெல்லாம், நமது பதிவுலகில் தடை செய்யப்பட்ட வார்த்தைகளை வச்சு வீடியோ போட்டுடுவாங்க போலயிருக்கே.

ஹ்ம். குமுதத்துக்கே இந்த நெலமைன்னா, நாம ****, *** ன்னெல்லாம் கதை எழுதி ஆள் புடிக்கரதுல தப்பில்லைன்னு தோணுது.

இருந்தாலும், இந்த மாதிரி விஷமத்தனமெல்லாம் கொஞ்சம் ஓவரு குமுதத்துக்கு. அதனால, என் கடுமையான கண்டனங்களை பதிகிறேன் ;)

வர்டா.

பி.கு: உரல் எல்லாம் கேக்காதீங்க. நோவாம நோம்பு கும்பிடமுடியுமா?

;)

Sunday, July 13, 2008

குட்டிப் புகைப் படங்கள் சில

PiTல் சென்ற வாரத்தில் Macro படங்கள் 'சீப்பா' எடுப்பது எப்படின்னு எழுதியிருந்தேன். அந்தப் பதிவு எழுதிய பிறகு, எனது Canon Rebelக்கு 'reversal ring' என்ற கருவியை வாங்கினேன் ($8 from ebay).

இந்த reversal ring இருந்தா, லென்ஸை திருப்பி வைத்து எடுக்கும்போது, லென்ஸ் கீழே விழுந்து விடுமென்ற பயமில்லாமல் க்ளிக்கலாம்.

ஆனா, ஒரு படம் எடுக்கரதுக்குள்ள பெண்டு கழளுது.
மிக அருகாமையில் உள்ள படத்தை ஃபோக்கஸ் செய்யும்போது, சிறு சிறு அசைவும், படத்தை கெடுத்து விடுகிறது.
Tripod கண்டிப்பா தேவைப்படுது.

மொத்தத்தில், இந்த 'சீப்' டெக்னிக்ல மேக்ரோ படங்கள் எடுப்பது, ஒரு எரிச்சலூட்டம் விளையாட்டுதான். ஆனா, இதன்மூலம் கிடைக்கும் அழகான படங்களைப் பார்க்கும்போது, எரிச்சல் போய், திருப்தி வரலாம்.

நான் இன்னும் அழகான படங்கள் எடுக்க முயற்சிக்கலை. அதுக்கு, tripod, reversal ring, camera எல்லாத்தையும் தூக்கிக்கிட்டு ஏதாவது பூந்தோட்டத்துக்குத்தான் போவணும்.

இப்போதைக்கு, வூட்டுக்குள்ளயே க்ளிக்கின மேக்ரோ படங்கள் உங்கள் பார்வைக்கு.
கருத்ஸ் சொல்லுங்க. நன்றி!

1) கிட்டார் கம்பி


2) அரிசி


3) நகம் நறுப்பான்


4) ஜீரகம்


5) ஒப்பனை சாதனம்


6) மீசை & கிருதா திருத்துவான்


என் சமீபத்திய படங்களை Flickrல் காண இங்கே சொடுக்கவும்.

Friday, July 11, 2008

ஒரு பெரிய சோகம்!

சென்ற ஜூலையில் உயிரைக் காப்பாற்ற உதவுங்கள் என்ற பதிவில் பாஸ்டனைச் சேர்ந்த Vinay என்பவரைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.

Leukemia என்ற கொடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட Vinayக்கு எலும்பு மஜ்ஜை ( bone-marrow) தேவைப்பட்டிருந்தது.
இந்த bone marrow தேவைப்படுபவர்களுக்கு, இரத்த தானம் போன்று சுலபமாக, மாற்று மஜ்ஜையைப் பெற முடியாது.
ஒரு south-Asianக்கு இது தேவைப்பட்டால், அதே 'இன' மனிதர்கள் வெகு சிலரின் bone-marrow மட்டும் தான் பொருந்துமாம்.
இந்தியா போன்ற developing நாட்டில் உள்ளவர்களுக்கு, இந்த மாதிரி விஷயங்கள் தானமாய்க் கிட்டுவது மேலும் கடினம்.
மஜ்ஜை தானம் செய்ய பெயர் பதிவு செய்துள்ளவர்களின் தொகை மிக மிகக் குறைவாக உள்ளதே இதற்க்குக் காரணம்.

சில ஆயிரம் பேரில், ஏதாவது ஒருவரது மஜ்ஜையே தன் உயிர் பிழைக்க உதவும் என்ற கொடுமை நிலை இந்த leukemia நோயால் பாதிக்கப்படும் மனிதர்களுக்கு.

நண்பர் VSK இந்த bone marrowவைப் பற்றி விளக்கமாக ஒரு பதிவும் இட்டிருந்தார்.

இப்படி ஒரு கொடுமையிலும், Vinayயின் பெற்றோரும், மனைவியும், நண்பர்களும், இணையமும் சேர்ந்து, பல இடத்தில் இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தி, சென்ற ஆண்டின் இறுதியில் இவருக்கான bone-marrowவை தேடிப்பிடித்திருந்தது.

அருவை சிகிச்சை முடிந்த Vinay மூன்று மாதங்கள் இயல்பாக வாழ்ந்ததாகத் தெரிகிறது.

எல்லாம் சரி ஆகிவிட்டது என்று சந்தோஷப் பட்ட தருணத்தில், மீண்டும் leukemia வந்து தொல்லை கொடுத்தது. மேலும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு இந்த may மாதம் வீட்டிற்கு திரும்பியிருந்தார் Vinay. தினமும் மூன்று மணி நேரம், உடற்பயிற்சி பெற்று, பழைய நிலைக்கு திரும்புவேன் என்று அன்றைய தினம் தனது ப்ளாகில் குறிப்பிட்டிருந்தார்.
....I am doing well so far and will be transferring to a physical rehab center here in Boston to get my overall strength back. I hope to be home for good in 2-3 weeks! The rehab facility will provide 3 hours of physical therapy seven days a week, quite intense but should be better for me in the long run.....

ஆனால், விதி வலியது என்பது போல், சென்ற மாதம் ஜூன் 25ஆம் தேதி, Vinay காலமாகிவிட்டார்.

அவரைப் பிரிந்து வாடும் அவரது துணைவியார் Rashmi, பெற்றோர், மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களும் ப்ரார்த்தனைகளும்.

சின்ன ஜலதோஷம், ஜொரம் வந்தாலே, மூணு நாளு பொரட்டிப் போட்ட மாதிரி ஆயிடும் எனக்கெல்லாம்.
இந்த சின்ன வயசுல, இவ்ளோ பெரிய கொடுமையெல்லாம் தாங்கிக்கொண்டு எதிர் நீச்சல் போட்ட Vinay வியப்பைத் தருகிறார்.

அதுமட்டுமல்லாமல், Sameer என்ற இன்னொரு leukemiaவால் அவதிப்பட்ட நண்பருக்கும் பெரிய moral support ஆக இருந்துள்ளார்.

Sameerம் March மாதம் காலமாகிவிட்டார்.

தலைவலியும், வயிற்று வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்னு சொல்லுவாங்க.

தனக்கு வர எல்லாம் காத்திருக்காமல், நம்மில் இருக்கும் ஏதாவது, மற்றவரின் உயிரைக் காக்க உதவும் என்றால், அதை இன்றே தானமாக கொடுங்கள்.

  • இரத்தம், வருஷத்துக்கு ரெண்டு தடவையாவது கொடுக்கலாம் (அதிகபட்சம் 6 தடவை கொடுக்கலாமாம்).

  • Bone marrowவை தானமாகக் கொடுக்க உங்கள் பெயரை பதிந்து வைக்கலாம். யாருக்காவது தேவைப்பட்டு, உங்கள் மஜ்ஜை சேருமானால், அன்று, வலியில்லாமல், உங்களிடம் இருந்து கொஞ்சம் மஜ்ஜையை எடுத்துக் கொள்வார்கள். மேலும் விவரங்களுக்கு VSK பதிவைப் பாருங்கள்.

  • உடல் உறுப்புக்கள் சில, உங்கள் மரணத்திர்க்குப் பிறகு, மற்றவர்களுக்காக தானம் கொடுக்கலாம். அதை இப்பவே, உங்கள் விருப்பமாக உங்கள் உற்றார் உறவினரிடம் சொல்லிவைத்து வேறு என்ன சட்ட ரீதியாக செய்யவேண்டுமோ அதை செய்து வைக்கலாம்.

  • பணம் பத்தும் செய்யும். அது இல்லாதவங்களுக்கு, கொஞ்சமாவது, உங்களால் முடிந்ததைக் கொடுத்து உதவுங்கள்.

    Hindu நாளிதழில் மே மாதம் இவரைப் பற்றி வந்திருந்த செய்தி இங்கே.

    Vinay இடம்பெற்ற PBS Cancer/Leukemia பற்றிய documentary இங்கே

    ஹ்ம்! :(
  • Thursday, July 10, 2008

    நல்ல‌ படம் பிடிச்சா பணம் பண்ணலாம்!

    நம்மாளுங்க பல பேரு, நல்லாவே படம் புடிக்கராங்க.

    PITன் குழுமத்தில் உள்ள நண்பர்களின் படங்களை பாத்தீங்கன்னா நான் சொல்றது புரியும்.

    மேலும் மேலும் மெருகேத்தி மேலப் போயிக்கிட்டே இருக்காங்க.

    வெறும் பொழுது போக்குக்காக படம் புடிச்சு Flickrல போடரவங்களுக்கு ஒரு நல்ல சேதி வந்திருக்கு.

    இணையத்தில் படங்களை விநியோகம் செய்யும் மிகப் பெரிய ஸ்தாபனம், Getty Images. இப்ப, இவங்க Flickr படங்களில் சிறந்த படங்களை, வெளீல வித்து, அதில் வரும் பணத்தில் ஒரு விகிதத்தை படம் புடிச்சவங்களுக்கு தராங்களாம்.
    சராசரியா, $250 வரை ஒரு நல்ல படத்தின் விலை இருக்குமாம். 20% தந்தாகூட $50 ஆச்சு.

    நல்ல விஷயம்தான?

    இனி, சும்மா, க்ளிக்காம, யோசிச்சு, பளிச்னு க்ளிக்கி Flickrல ஏத்தி வுடுங்க.

    ஒரு க்ளிக்குக்கு $50 கெடச்சா கசக்குமா?

    மண்டபத்துல குடுத்த படத்தை எல்லாம், துட்டுக்கு ஆசப்பட்டு வலையேத்திப்புடாதீங்க. உள்ள தள்ளிருவாங்க்ய! ;)

    ஜமாய்ங்க!

    பி.கு: Flickr பக்கத்தில் என் சமீபத்திய சிற்றுலா படங்களைக் காண இங்கே க்ளிக்கவும் இங்கே.

    Wednesday, July 09, 2008

    செந்தழலின் 100000ம், லக்கியின் குழப்பமும், ரிஷானின் புலம்பலும், etc...

    செந்தழலின் 100000ம் பரிசுத்தொகை விவரங்கள் இங்கே:
    http://classroom2007.blogspot.com/2008/07/blog-post_08.html

    லக்கியின் குழப்பம் இங்கே: (*adults only* - குழப்பத்தை யாராச்சும் தீத்து வைங்க, பலருக்கு ப்ரயோசனமா இருக்கும்)
    http://jyovramsundar.blogspot.com/2008/07/45-12.html

    ரிஷானின் புலம்பல் இங்கே: (பல பேரு இந்த காப்பி/பேஸ்ட் செய்யராங்க. திருந்தணும்!)
    http://rishanshareef.blogspot.com/2008/07/blog-post.html

    நெல்லை வாசிகளின் சாதனை இங்கே: (Pullarikkudhu saamigalaa!)
    http://vidupu.blogspot.com/2008/07/blog-post_10.html

    கார்த்திக்ராம்ஸி டெ(ரெ?)ன்ஷன் இங்கே:
    http://karthikramas.blogspot.com/2008/07/blog-post.html

    இவ்ளோ மேட்டர் நடக்கும்போதும், கூலா முட்டகோஸு பொரியல் போடும் துளசியின் பொரியல் இங்கே:
    http://thulasidhalam.blogspot.com/2008/07/blog-post.html

    யப்பாடி, வாரம் ஒரு பதிவு போட வேண்டிய வரலாற்றுக் கடமை இந்த வாரம் பூர்த்தியான திருப்தியுடன், தூங்கப் போறேன்!

    ஏதாவது விட்டுப்போச்சான்னு பாத்து சொல்லுங்க!

    latest addition:

    தருமியின் ஜெயப்ரதா ஜொள் இங்கே:
    http://dharumi.blogspot.com/2008/07/262.html
    ;)

    Sunday, July 06, 2008

    உயர்ந்த ஆற்றல்மிகு தொடர் (உ.ஆ.தொ) படங்கள்

    அதென்ன உயர்ந்த ஆற்றல்மிகு தொடர்னா கேக்கறீங்க? வேறொண்ணுமில்லை.
    ஆங்கிலத்தில் High-Dynamic-Rangeன் தமிழாக்கம் (நன்றி தமிழ் விக்சனரி) தான் இது. சுருக்கமா HDRனு சொல்லுவாங்க. அதாவது, உ.ஆ.தொ.

    PiTல் HDR படங்கள்னா என்னா, அதை எப்படி எடுப்பதுன்னு ஒரு சிறு பாடம் நடத்தியிருந்தோம்.

    அந்த HDR நுட்பத்தை பயன்படுத்தி, என் சமீபத்திய சுற்றுலாவின் போது, கலிபோர்னியாவில் க்ளிக்கிய படங்களை கீழே டப்பா கட்டி காட்டியுள்ளேன்.

    HDRக்கு ரெண்டு விதமான ரசிகர்கள் இருக்காங்க. ஒரு கும்பல், ஆஹான்னு ரசிச்சு பாப்பாங்க. இன்னொரு கும்பல், இது ரொம்ப செயற்கைத்தனமா இருக்குன்னு ஓரங்கட்டிடுவாங்க.

    நீங்க எப்படி? கருத்ஸ் சொல்லுங்க!

    ஒரிஜினல் படங்களை என் Flickr பக்கத்துலயும் பாத்து கருத்ஸ் சொல்லாம். சொல்லுங்க. நன்றி!

    படத்தை க்ளிக்கினால் பெரிதாய் பார்க்கலாம். பாருங்க. :)

    1) Yosemite National Park, California


    2) Yosemite Falls


    3) Grizzly Falls, Kings Canyon Park, California


    4) Half Dome from Glacier Point, Yosemite


    5) Half Dome and Yosemite Valley from Glacier Point


    6) Mirror Lake, Yosemite


    7) Mirror Lake, Yosemite


    8) Mirror Lake, Yosemite - கொஞ்சம் சிரமப்பட்டு எடுத்த படம் இதுதான். சில்லென்ற தண்ணீருக்குள் இறங்கி நீர் மட்டத்தில் எடுத்த படம். ஜாலியான அனுபவம். கண்ணாடி மாதிரி தண்ணீரும் இந்த சூழலும், லேசுல மறக்காது :)


    இவை அனைத்தும் PhotoMatix கொண்டு உ.ஆ.தொ ஆக்கப்பட்டவை.