recent posts...

Sunday, December 30, 2007

சிறந்த 'நச்' கதை - Finalists + தகவல்கள்

வணக்கம் நண்பர்களே.

57 'நச்' கதாசிரியர்கள் பங்கு பெற்ற 'நச்னு ஒரு கதைப் போட்டி'யின் முதல் கட்ட வாக்கெடுப்பு நடந்து முடிந்துள்ளது.

மூன்று கட்டமாக நடந்த வாக்கெடுப்பில், அதிக வாக்குகள் பெற்ற டாப்-2 'நச்' கதைகள் இவைதாம்.
கூரு 1:
மொத்த வாக்குகள்: 143, செல்லாதவை 28 (unapproved)
9. அரசியல்வாதி (21) (16.94%)
12. தப்பா நினைக்க மாட்டயே? (23) (18.55%)

கூரு 2:
மொத்த வாக்குகள்: 107, செல்லாதவை 14 (unapproved)
29. ஜன்னல் வெச்ச ஜாக்கெட்காரி (15) (15.96%)
23. சங்கு சுட்டாலும் வெண்மை தரும்!! (14) (14.89%)
28. என்னால் அவள் இரண்டு மாதம் (14) (14.89%)

கூரு 3:
மொத்த வாக்குகள்: 99, செல்லாதவை 21 (unapproved)
44. சென்னைக் காதலும், திருச்சிக் காதலும் (18) (23.08%)
47. எதுனா வேல இருந்தா குடு சார் (18) (23.08%)

(மேலே உள்ள முடிவுகள் 10.15pm PSTக்கு எடுக்கப் பட்டது. நீங்கள் உரலை சொடுக்கினால், வாக்குகளின் எண்ணிக்கை சற்று வித்யாசப் பட்டு இருக்கலாம். some unapproved votes may still be coming, but the above is the official result.)

57 கதாசிரியர்களுக்கும், முதல் சுற்றில் வாக்களித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!

இனி இறுதிக் கட்ட வாக்கெடுப்ப பத்தி பாக்கலாமா?

வாக்கெடுப்பில் ஈ.மெயில் கொண்டு approve செய்யும், புதிய முயற்சி கொண்டுவந்ததால், சில பேர் வாக்களிக்காமலே இருந்திருப்பார்கள் என்று பரவலாக ஒரு கருத்து இருந்தது.
ஆனால், மேலே உள்ள எண்ணிக்கை, திருப்திகரமாகத் தான் இருக்கிறது.
நிறைய பேர் வாக்களித்து, ஈ.மெயில் படித்து, அப்ரூவ் செய்யாமல் விட்டு விட்டிருக்கலாம். அது ஓரளவுக்கு எதிர்பார்த்ததுதான்.

கடந்த வருடம் 'சிறந்த பதிவர்' வாக்கெடுப்பின் போது, முதல் சுற்றில் 300+ வாக்குகள் வந்தன. இறுதிச் சுற்றில் 120+ வாக்குகள் வந்திருந்தது.
அதை வைத்து பார்க்கும் போது, முதல் சுற்று நல்ல விதமாக முடிந்ததாகத் தான் தெரிகிறது.

இந்தப் போட்டி ஆரம்பித்ததே இரண்டு காரணங்களுக்காகத்தான்.
1) நம் பதிவர்களை ஊக்குவித்து, நல்ல சூழலை உருவாக்கத்தான். அறிவிப்பு வந்ததில் இருந்து 100 'நச்' கதைகளாவது அரங்கேறியிருக்கும். இதுவே நம் அனைவருக்கும் கிடைத்த வெற்றி :)
2) ஒரு தொண்டு நிறுவனத்துக்கு நம்மாலான ஒரு சிறு உதவி. வருடக் கடைசியில் இப்படி ஒன்று செய்துவிட்டால், வருடம் முழுதும் போட்ட மொக்கைக்கு ப்ராயச்சித்தம் செய்வதாய் கணக்கில் வரும் என்று நம்பிக்கை :)

57 கதைகளில் 7 கதைகளை இறுதிச் சுற்றுக்கு எடுத்துச் செல்ல இருந்த வேளையில் ஒரு சிறு யோசனை.
எல்லாரும், மிக்க ஆர்வமுடன் கலந்து கொண்ட போட்டி இது.
50 கதைகளை, அப்படியே விட்டு விட மனசு கேக்கல.

இறுதிச் சுற்றுக்கு, வெறும் வாக்கெடுப்பு மட்டும் இல்லாமல் (கொலைவெறிப்படைஸ், நோட் த பாயிண்ட்), நடுவர் குழுவின் கருத்தையும் சேர்த்துக் கொள்ளலாமேன்னு சிலர் ஐடியா கொடுத்தாங்க.

நல்ல ஐடியாதான்னு, நானும் நம் சக பதிவர்கள்/நண்பர்களை கருத்துக் கேட்டேன்.
அவங்களும் உடனே ஓ.கே சொல்லிட்டாங்க.

அப்பரம் என்ன? இறுதிக் கட்ட வாக்கெடுப்புக்கு ரெடி ஆகிட்டோம், almost :)

1) இறுதிக் கட்ட வாக்கெடுப்பும், ஈ.மெயில் approval அடிப்படையில் இயங்கும்.
2) மேலே உள்ள டாப்-7 இறுதிக் கட்ட வாக்கெடுப்பில் இருக்கும்
3) நடுவர்கள் ஐந்து பேர், முதல் கட்டத்தில் விடுபட்டுப் போன 50 கதைகளில், ஏதாவது ஒன்றை இறுதிச் சுற்றுக்கு எடுத்துக் கொள்ளலாம்னு ஆளுக்கொரு wild-card (நன்றி: விஜய் டி.வி ஜோடி#1) கதையை ரெக்கமண்ட் பண்ணுவாங்க.
4) ஒரு கதையை ஒன்றுக்கு மேற்பட்ட நடுவர் ரெக்கமண்ட் பண்ணினால், அந்தக் கதை ஆட்டோமேட்டிக்கா, இறுதிச் சுற்றுக்கு, டாப்-7னுடன் சேர்த்துக் கொள்ளப்படும்.
5) மேலே உள்ள #4 ரூல் படி ஒன்றும் தேறவில்லை என்றால், ஐந்து கதைகளில், அதிக வாக்குகள் பெற்ற முதல் மூன்று கதைகளை ஆட்டையில் சேர்த்து டாப்-10 லிஸ்ட் உருவாக்கப் படும்.
6) இறுதிச் சுற்றின் வாக்கெடுப்பு, ஜனவர் 2 2008 11.00 AM IST (கிட்டத்தட்ட) ஆரம்பிக்கப்படும்.
7) நடுவர்கள், வாக்கெடுப்பில் இடம் பெறும் எல்லா கதைகளுக்கும் மதிப்பெண்கள் போட்டு எனக்கு அனுப்புவார்கள்
8) நடுவர்கள் மதிப்பெண்ணின் averageம், வாக்கெடுப்பு %ம், 50:50 கலந்து, ஜனவரி 4 9.00 AM IST (கிட்டத்தட்ட) அன்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

நடுவர்கள் யார் என்பது, முடிவுகள் அறிவிக்கப்படும் அன்று தெரிவிக்கப்படும்.

ஓ.கே வா?

உங்கள் அனைவருக்கும், மீண்டும் மீண்டும் நன்றி!

இதுவரை அளித்த ஒத்துழைப்புக்கும், இனி வரப்போகும் ஒத்துழைப்புக்கும் மனமார்ந்த நன்றிகள்!

57 கதாசிரியர்களும், மற்ற கதைகளுக்கு, நச்னு ஒரு விமர்சனம் எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன். (atleast, உங்களை விட அதிக வாக்குகள் வாங்கிய கதைக்காவது எழுதுவீங்கன்னு நம்பறேன் ;) )

சிறந்த 'நச்' கதை - முதல் கட்ட வாக்கெடுப்பு முடிந்தது!

சிறந்த நச் கதைப் போட்டியில் இடம்பெற்ற 57 கதைகளை மூன்று கூராகப் பிரித்து நடத்திய முதல் கட்ட வாக்கெடுப்பு இனிதே முடிவடைந்தது.

இறுதி கட்ட வாக்கெடுப்பு பற்றிய அறிவிப்பு, கூடிய விரைவில்.

(கெஸ்ட் வராங்க, அவங்களோட அளவளாவிட்டு அனுப்பி வச்சுட்டு, அப்பாலீக்கா முழு விவரம் பதிவா போடறேன்)

Please stand by, will announce in 5 or 6 hours :)

இதுவரை ஒத்துழைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!

Benazir Bhuto ~ ஒரு புகைப்படக்காரரின் பார்வையில்

Benazir Bhutto தனக்குப் பிறகு தனது கணவரை PPPன்(Pakistan Peoples Party) அதிபராக நியமிக்க வேண்டும் என்று (உயிலில்) விருப்பம் தெரிவித்திருந்தாராம்.
அவரது கணவர், தனக்கு பதவி வேண்டாம் என்று சொல்லி 19 வயது மகனை அந்தப் பதவியில் நியமித்துவிட்டாராம்.

பெனாஸிரை கொன்றது அல்-கொய்தா இல்லை என்று கூறப்பட்டு வருகிறது.

வெறிகளிலேயே தலையாய வெறி இந்த பதவி வெறிதான் போல இருக்கு.

அடேங்க்கப்பா, எவ்ளோ கொலைகள், எவ்ளோ இழப்புக்கள். தாங்க முடியலடா சாமி.

ஒரு பக்கம், பெனாசிரின் துணிச்சல் பாராட்டப்பட வேண்டியது.
இவ்ளோ மிரட்டல்கள் இருந்தும், தைரியமா வந்திருக்காங்களே.

இன்னைக்கு இணையத்தில் கண்ட ஒரு slide-show உங்கள் பார்வைக்கு. John Moore என்ற புகைப்படக்காரர் பெனாஸிரின் கடைசி நாள் புகைப்படங்களை வெளியிட்டு, கமென்ட்டரியும் சொல்றாரு.

Slide-Showல் நாலாவது படம் என்னை வெகுவாக கவர்ந்தது.

பெனாஸிரைக் கண்டதும் பாக்கிஸ்தானிய பெண் ஒருவரின் முகத்தில் தெரியும் உண்மையான மகிழ்ச்சி அழகாக படம் பிடிக்கப் பட்டிருந்தது. எவ்ளோ நம்பிக்கையா இருந்திருக்காங்க அந்தப் பெண்மணி. ஐயோ பாவம்.

தெகிரியமானவங்க மட்டும் படத்த பாருங்க.
சில படங்களில் இரத்தம் இருக்கு.

Click here to view a slide show and hear commentary of John Moore from Getty Images

பெனாஸிரின் ஆத்மா சாந்தி அடைய அல்லாஹ் அருள் புரியட்டும்.
அந்த பிரதேசத்தில் அமைதி வரவும் அருள் புரியட்டும்.
கேடு நினைப்பவர்கள் கெடட்டும்!

:(

Saturday, December 29, 2007

மிருகம் - திரைப்படம் பற்றிய கருத்துக்கள்

வித்யாசமான படம் வித்யாசமான படம்னு எல்லாரும் தம்பட்டம் அடிச்சதால இந்தப் படத்த பாக்கணும்னு ஒரு ஆசை இருந்தது.
அதுவும் இல்லாம, ஷூட்டிங் ஸ்பாட்ல பத்மப்ரியாவ படத்தின் டைரக்டர் சாமி கன்னத்துல அறஞ்சுட்டாராம் (அதப் பத்தி கடைசில பாக்கலாம்).

படத்தோட கதை?
முரட்டுப் பயலா இருக்கரவனின் திமிரான வாழ்க்கை. கெட்ட வழக்கங்களினால் அவன் எப்படி சீரழிஞ்சு, தன்ன சுத்தி இருக்கரவங்களுக்கும் தொல்லையா இருக்கான்னு, ஒரு நல்ல மெஸேஜ் சொல்ற மாதிரியான கதை.

படம் எதிர்பார்த்த அளவுக்கு நல்லா இருந்ததா?
இல்ல.

சரி, படம் நல்லா இருந்ததா?
இல்ல.

சரி, படம் பயங்கர மோசமா?
இல்ல. ஆனா, படம் பாருங்கன்னும் சொல்ல முடியாத அளவுக்கு இருக்கு.

சரி, படத்தோட ஹீரோ எப்படி?
நல்ல கண்டுபிடிப்பு. தலைப்புக்கேத்த தெரிவு.

குடும்பத்தோட பாக்கலாமா?
மூச்!

யதார்த்தமான படமா?
அப்படி எடுக்கணும்னு நெனச்சு, ரொம்ப டார்ச்சர் பல எடங்கள்ள.

பாட்டெல்லாம் எப்படி?
ஒண்ணும் நெனவுல இல்ல.

மத்த விஷயங்கள்?
படம் முழுக்க Sepia effectல் வரட்சி. ஆனா, கேமரா கோணங்கள் நல்லாவே இருந்துது. ஸெட் போட்டவர் நல்லா போட்டிருந்தாரு. காமெடி சரியில்லை. முகம் சுளிக்க வைக்கும் பல காட்சிகள்.
படத்தில் சொல்லப்படும் மெஸேஜ் ஓ.கே. ஆனா, ஒரு நாலு வருஷத்துக்கு முன்னாடி வந்து சொல்லியிருக்கலாம்.

பத்மப்பிரியா?
நல்ல யதார்த்த நடிப்பு. ஆனா, கிராமீய சூழல்ல எடுத்த படத்துக்கு, புருவத்த ட்ரிம் பண்ணிக்கிட்டு, அழகா தலை சீவிக்கிட்டு பொட்டு வச்சுக்கிட்டா நடிப்பாங்க? கொஞ்சம் கூட ஒட்டல அந்த கதாபாத்திரத்துக்கு. (பருத்தி வீரன்,ப்ரியாமணிய நெனச்சேன். பெருமூச் வருது).

பத்மப்பிரியாவ அறஞ்சது?
எதுக்காக அறஞ்சாருன்னு தெரியல. பப்ளிஸிட்டி ஸ்டண்ட்?
மேக்கப் போடாதீங்கன்னு சொல்லியும் மேக்கப் போட்டுட்டு வந்ததாலன்னா, ஞாயமான அறைதான் (ஆ'ணீயம்' எல்லாம் இல்லீங்க, ஒரு படைப்பாளியின் கோணத்தில் நின்னு பாத்து, மனசுல பட்டத சொன்னேன் :) )

கூட்டிக் கழிச்சு பாத்தா?
யதார்த்தமா எடுக்கறேன்னு, ப.வீரன பாத்து சூடு போட்டுக்கிட்ட மாதிரி தெரியுது.
முகம் சுளிய வைக்கும் பல 'யதார்த்த' காட்சிகளை விலக்கிவிட்டும், பத்மப்பிரியா முகத்தில் கொஞ்சம் அழுக்கு பூசியும், இசைக்கு ராஜாவ கொண்டாந்தும் இருந்திருந்தா, ஓரளவுக்கு நல்ல படமா வந்திருக்கலாம்.

நீங்க பாத்தாச்சா?

பி.கு: கடவுள் இருக்கான்டா கடவுள் இருக்கான்டான்னு ஒரு சாமி (பிராமண்?) அங்கங்க வந்து சொல்லிட்டே போவாரு. எதுக்கு அப்படி சொல்றாரு, அவரு ஏன், ஒரு பிராமணா இருக்காருன்னு எனக்கு புரியல்ல. அதிலுள்ள நுண்ணரசியல விளக்க நம்ம ஜமாலன்,TBCDய கேட்டுக்கறேன். ;)

Friday, December 28, 2007

இப்படியிருந்த நாமா அப்பரம் எப்படி எப்படியோ..?

வேற என்ன மொக்கதான்? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஷ்ரெயாவையும், சிங்கத்தையும் பாத்தீங்க.

இப்ப பாருங்க ஒரு அசத்தல் வீடியோ.

நெஜமாவே ஆச்சரியமா இருக்கு. இவ்ளோ அப்பாவியா இருந்த நாமளா, அப்பரம் வளந்து, படிச்சு, கிழிச்சு, எப்படியெல்லாமோ கெட்டுப் போறோம்?



ஓ.கே. மொக்க பாத்தாச்சுல்லா?

இனி முக்கிய மேட்டர்ஸ் கீழே :)

நச்சுன்னு ஒரு கதை போட்டியில் இடம்பெற்ற கதைகளில் சிறந்ததை தேர்ந்தெடுக்க, மூன்று கட்டமாக வாக்கெடுப்பு நடக்குது.
கூரு A, கூரு B, கூரு C ஆகிய மூன்று கூருகளிலும் வாக்கு போடாதவங்க போடுங்க.
வாக்கு போட்டுட்டு ஈ.மடல் பாத்து அப்ரூவ் பண்ணாதவங்க மறக்காம அப்ரூவ் பண்ணுங்க.
அப்பதான் உங்க வாக்கு செல்லும். மறக்காம Junk/Spam folderலயும் பாருங்க. முக்காவாசி மெயில் அங்கதான் வருதாம்.

வாக்குகளின் விவரங்கள் இதுவரை:

கூரு A - 115 வாக்குகள் பதிவாயிருக்கு. 20 unapproved.
கூரு B - 71 வாக்குகள் பதிவாயிருக்கு. 8 unapproved.
கூரு C - 66 வாக்குகள் பதிவாயிருக்கு. 12 unapproved.

வாக்களிக்க கடைசி நாள் டிசம்பர் 30.

அனைவருக்கும் நன்றீஸ்!

ஞாயிறு அன்று சந்திப்போம்.
சனிக்கிழமை ஒரு சூப்பர் டூர் ஏற்பாடாயிருக்கு. வந்துட்டு எப்படியிருந்துன்னு சொல்றேன் :)

வர்டா,

புரிந்துணர்வுடன் கூடிய உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி! :)

டப்பாவில் ஷ்ரெயாவா?

(நன்னன் ஸ்டைலில் படிக்கவும்) இதுக்கு முன்னாடி சிங்கம் எப்படி டப்பால வந்துதுன்னு பாத்தோம் இல்லியா.
இன்னிக்கு ஷ்ரெயா எப்படி டப்பால வந்தாங்கன்னு பாப்போம்.
இப்படியே கீழ நேரா பாத்தீங்கன்னா ஷ்ரெயா தெரிவாங்க.
ஷ்ரெயா எப்படி இருப்பாங்க? அ-ழ-கா இருப்பாங்க இல்லியா?
சரி, இன்னிக்கு எல்லாரும் ஷ்ரெயாவ பாத்துட்டு சமத்தா இருங்க.

கூரு A, கூரு B, கூரு C ல இருக்கர 'நச்' கதைகளுக்கு வாக்கு போடலன்னா, மறக்காம போடுங்க. சரியா? வாக்கு போட்டுட்டு ஈ.மடல் பாத்து அப்ரூவ் பண்ணாதவங்க மறக்காம பண்ணனும். (அப்ரூவ்க்கு தமிழ்ல என்ன ஐயா?). அப்ரூவ்க்கா? அதெல்லாம் நீ கேக்கக் கூடாது. சரியா? அப்ரூவ் பண்ணுங்க. அப்பதான் உங்க வாக்கு செல்லும். சரியா? மறக்காம Junk/Spam folderலயும் பாருங்க. முக்காவாசி மெயில் அங்கதான் வருதாம்.(Junk/Spam/Folderக்கு தமிழ்ல என்னா சார்?) ஹ்ம். அடங்கு அடங்கு. வேற யாருக்காவது தெரியுமா? ரவிசங்கர்? :)

கூரு A - 105 வாக்குகள் பதிவாயிருக்கு. 20 unapproved.
கூரு B - 50 வாக்குகள் பதிவாயிருக்கு. 9 unapproved.
கூரு C - 42 வாக்குகள் பதிவாயிருக்கு. 13 unapproved.

வாக்களிக்க கடைசி நாள் டிசம்பர் 30.

அனைவருக்கும் நன்றீஸ்!

இப்ப ஷ்ரெயாவ பாக்கலாம் :)
ஷ்ரெயாதான அது? இல்லியா? அப்ப, ஐ ஆம் த ஸாரி!

Thursday, December 27, 2007

சிங்கம் டப்பாலயும் வரும்

சிங்கம் சிங்கிலாவும் வரும், டப்பாலயும் வரும்.
டப்பாக்குள் வரும் சிங்கம் கீழே :)




வேற ஒண்ணுமில்ல, புது perfume, ஸேல்ல வாங்கினது.
வாங்கிப் பாருங்க, ஜூப்பரா இருக்கும் :)

நச் கதை வாக்கெடுப்பு ஜூடா போயிக்கிட்டு இருக்கு.


இதுவரை வாக்காதவங்க, ஒரு நடை போயி ஒவ்வொரு 'கூரிலும்'

உங்களுக்குப் பிடித்த கதைக்கு வாக்குங்க! நன்றி! சக பதிவர்களை

ஊக்குவியுங்கள், உங்களின் வாக்குகள் மூலம்.




கூரு C கதைகளுக்கு வாக்களிக்க இங்கே சொடுக்குங்கள்

கூரு B கதைகளுக்கு வாக்களிக்க இங்கே சொடுக்குங்கள்

கூரு A கதைகளுக்கு வாக்களிக்க இங்கே சொடுக்குங்கள்

யார் எழுதிய கதை என்பதை பார்க்காமல், கதை நச்னு இருக்கா என்பதை மட்டும் கவனித்தில் கொண்டு வாக்களிக்கவும்.
எல்லா கதையும் படிச்சு பொறுமையா வாக்களிப்பது சிரமம்தேன். ஆனாலும், கொஞ்சம் மெனக்கட்டு தவறாது வாக்களிக்குமாறு சர்வே கமிட்டியின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

டிசம்பர் 30 வரை வாக்குச் சாவடி திறந்திருக்கும்.

மக்களே, வாக்குச் சாவடிக்கு வந்து மக்கள் வாக்களிக்க, அங்கங்க போஸ்டர் அடிச்சு, வெளம்பரம் செய்யுங்கள். நன்றி! :)

நன்றி!

சிறந்த 'நச்' கதை - வாக்கெடுப்பு - Group C

57 'நச்' கதைகளை, மூன்று கூராக பிரித்து, முதல், மற்றும் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நடந்து வருவது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

38 முதல் 57 வரையிலான, கடைசி கூரில் இடம்பெறும் 19 கதைகள் கீழே உள்ளன.
தயவு செய்து, எல்லா கதைகளையும் படித்துவிட்டு, உங்களுக்குப் பிடித்த கதைக்கு வாக்களியுங்கள்.
யார் எழுதியது என்பதை விட, கதையில் 'நச்' எப்படி இருக்குன்னு பாத்துட்டு வாக்களியுங்கள்.

ஏற்கனவே சொன்னது போல், இந்தக் கூரில், அதிக அளவில் வாக்கு பெறும் இரண்டு கதைகள் இறுதிச் சுற்றில் இடம்பெறும்.

39) சென்ஷி - கதை இங்கே
40) விட்டுது சிகப்பு - கதை இங்கே
41) ஓகை - கதை இங்கே
42) சதங்கா (Sathanga) - கதை இங்கே
43) செல்வம் - கதை இங்கே
44) அருட்பெருங்கோ - கதை இங்கே
45) drtv - கதை இங்கே
46) Sathiya - கதை இங்கே
47) நந்து f/o நிலா - கதை இங்கே
48) சிந்தாநதி - கதை இங்கே
49) .:: மை ஃபிரண்ட் ::. - கதை இங்கே
50) சரவணா - கதை இங்கே
51) indirasenthilraj - கதை இங்கே
52) தம்பி - கதை இங்கே
53) வவ்வால் - கதை இங்கே
54) சுரேகா - கதை இங்கே
55) My days(Gops) - கதை இங்கே
56) ambi - கதை இங்கே
57) Radha Sriram - கதை இங்கே

வாக்களிக்கும்போது, உங்கள் ஈமெயில் முகவரியை வாக்குப் பெட்டியில் கொடுக்கவேண்டும்.

வாக்களித்ததும், உங்கள் ஈ.மெயில் பொட்டியில், survey@newsndeals.com என்ற முகவரியிலிருந்து ஒரு ஈமெயில் வரும். (JUNK/SPAM foldersல் மறவாமல் பார்க்கவும். 1 நிமிடத்திலிருந்து, 1 மணி நேரம்வரை ஈ.மெயில் வர நேரம் எடுக்கலாம்).
அந்த மடலை வாசித்து, அதில் உள்ள, 'APPROVE' லிங்க்கை நீங்கள் குத்த வேண்டும். குத்தினால்தான், உங்கள் வாக்கு கணக்கில் சேர்க்கப்படும்.

APPROVE செய்து முடிக்கும் வரை, உங்கள் வாக்கு "Total unapproved votes:" என்று தனியே காட்டப்படுகிறது.
ஈ.மெயில் படித்து APPROVE செய்ய மறக்காதீர்கள்.


உங்கள் ஈ.மெயில் முகவரி, உங்கள் வாக்கை ஊர்ஜீதம் செய்ய மட்டுமே பயன்படுத்தப்படும்.
எந்த ஈ.மெயிலில் இருந்து எந்த வாக்கு வந்தது என்பதெல்லாம் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

*drtvஇன் கதை 'விபத்து'. ஏற்கனவே இருந்த மாதிரி 'தெளிவு' இல்லை. தவறுக்கு சாரி. results page will show 'தெளிவு'. அத மாத்த முடியாது. சரியான கதை மேல் லிங்க்ல இருக்கு. நன்றி.

****வாக்கெடுப்பு முடிவடைந்தது! ****

தவறுகளிருந்தால் சுட்டிக்காட்டவும்.
கேள்விகள் இருந்தால் கேட்க்கவும்.
கதைகள் பிடித்திருந்தால், அந்தந்த பதிவருக்கு பின்னூட்டமிட்டு ஊக்கப் படுத்தவும்.

இந்தக் கூரில் உங்களுக்குப் பிடித்த கதையை தேர்வு செய்ய மறவாதீர்.

கதை எழுதியவர்கள், தங்கள் கதைக்கு வாக்களிக்குமாறு விளம்பரம் செய்வதை, இன்று முதல் தவிர்க்கவும். இது ரூல் இல்லை. என் அபிப்ராயம் மட்டுமே. எல்லாரும் எல்லா கதையும் படித்து வாக்களிக்க வேண்டி, இந்த வேண்டுகோள். வாக்கெடுப்புக்கு 'பொதுவான' விளம்பரம் தரலாம். ;)

அடுத்த 'கூரி'ன் வாக்கெடுப்பு கூடிய விரைவில்.

அனைவருக்கும் நன்றி!

Group C நாளை வெளிவரும்.
Group A, B, C க்கான வாக்கெடுப்பு டிசம்பர் 30, ஞாயிறு 6.00 PM PST வரை நடைபெறும்.
அதற்கு பின், முடிவுகள் அலசி ஆராய்ந்து, இறுதிக் கட்ட வாக்கெடுப்பு ஆரம்பமாகும்.


0-------0 0---------0 0----------0
கேள்வி1: எனக்கு பிடித்த நான்கு கதைகளுக்கு வாக்களிக்க நான்கு ஈமெயில் ஐடி(யா?:)) வேண்டுமா ? ஒரே ஈமெயில் ஐடி பயன்படுத்தி வாக்களிக்க முடியுமா ?
பதில்1: :) ஒருவருக்கு ஒரு வாக்குதான்.
'சிறந்த' ஒரு கதை கண்டுபிடிக்கத்தான் போட்டி. 2,3, 4 பரிசெல்லாம் கிடையாதே ;)

கேள்வி2: வாக்களிப்பதற்கு ஏதெனும் காலக் கெடு உண்டா ?
பதில்2: டிசம்பர் 31 finals வாக்கெடுப்பு நடத்த முடிவு. அதற்குள் மூன்று கூரின் வாக்கெடுப்புகளும் முடிக்கப்படும்.

கேள்வி3: சாதாரண வாக்கெடுப்புன்னா செய்யத் தோன்றும்...நீங்க 2-3 டாஸ்க் எல்லாம் அதுவும் 3 + 1 நாலு முறை செய்யச் சொல்லுறீங்க...வேலை களுதயில்லெ... இப்படியெல்லாம் பண்ண வேண்டுமென்ற அவசியம் என்ன?
பதில்3: யோசிக்க வச்சுட்டீங்க. 57 கதைகள் இருக்கரதால, ஒரே கட்டம் கட்டினா எல்லாரும் எல்லாக் கதையும் படிச்சுட்டு போட மாட்டாங்கன்னு ஒரு தோணல். அதனால, இந்த கூரு போடல். கொஞ்சம் சிரமம்தான், ஆனாலும், கொஞ்சம் முயற்சி பண்ணி வாக்களியுங்கள். சிறந்த 'நச்' வெல்லட்டும். புரிந்துணர்வுடன் கூடிய உங்கள் பேராதரவுக்கு நன்றி! :)

கேள்வி4: Group Aல் வாக்களித்த ஈ.மெயில் முகவரி கொண்டு, Group B, Group Cல் வாக்களிக்க முடியுமா?
பதில்4: முடியும். கூர் கூராக பிரித்ததே அதுக்குத்தானே :)

கேள்வி5: என் ஈ.மெயில் ஐடி.யை உபயோகித்து வேற யாராவது ஓட்டு போட்டா என்ன பண்றது?
பதில்5: ஆஹா. அற்புதமான கேள்வி. உங்களுக்கு எப்படியும் ஈ.மெயில் வரும். ஈ.மெயில் படிச்சு, உங்களுக்கு பிடிக்காத வாக்கு போட்டிருந்தா, REJECT செய்யலாம். Reject செய்தபின், உங்கள் ஐடி உபயோகித்து, உங்களுக்கு பிடிச்ச மாதிரி வாக்கு போட்டுக்கலாம்

பி.கு. வலது பக்க 'Quick Survey'ல் ஒரு வாக்கப் போட்டுடுங்க. உங்க கருத்ஸ் ரொம்ப முக்கியம் ;)
0-------0 0---------0 0----------0

பி.கு: வலது மூலையில் இருக்கும் MSV படத்தை க்ளிக்கி, பெட்டிஷனில் கையெழுத்து போடவும். நன்றி!

Wednesday, December 26, 2007

சிறந்த 'நச்' கதை - வாக்கெடுப்பு - Group B

57 'நச்' கதைகளை, மூன்று கூராக பிரித்து, முதல் கட்ட வாக்கெடுப்பு நடந்து வருவது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
முதல் 19 கதைகளில் இடம் பெறும் கதைகளில், உங்களுக்குப் பிடித்த கதையை தெரிவு செய்ய இங்கே செல்லுங்கள்.

20 முதல் 38 வரையிலான, இரண்டாம் கூரில் இடம்பெறும் 19 கதைகள் கீழே உள்ளன.
தயவு செய்து, எல்லா கதைகளையும் படித்துவிட்டு, உங்களுக்குப் பிடித்த கதைக்கு வாக்களியுங்கள்.
யார் எழுதியது என்பதை விட, கதையில் 'நச்' எப்படி இருக்குன்னு பாத்துட்டு வாக்களியுங்கள்.

ஏற்கனவே சொன்னது போல், இந்தக் கூரில், அதிக அளவில் வாக்கு பெறும் இரண்டு கதைகள் இறுதிச் சுற்றில் இடம்பெறும்.

20) VSK - கதை இங்கே
21) Rathnesh - கதை இங்கே
22) குட்டீஸ் கார்னர் - கதை இங்கே
23) நாடோடி இலக்கியன் - கதை இங்கே
24) Rama - கதை இங்கே
25) மங்களூர் சிவா - கதை இங்கே
26) கிருத்திகா - கதை இங்கே
27) இலவசக்கொத்தனார் - கதை இங்கே
28) குசும்பன் - கதை இங்கே
29) அரை பிளேடு - கதை இங்கே
30) Divya - கதை இங்கே
31) gils - கதை இங்கே
32) Srikanth - கதை இங்கே
33) சிறில் அலெக்ஸ் - கதை இங்கே
34) Vicky - கதை இங்கே
35) இம்சை அரசி - கதை இங்கே
36) ப்ரசன்னா (குறைகுடம்) - கதை இங்கே
37) கண்மணி - கதை இங்கே
38) வேதா - கதை இங்கே

வாக்களிக்கும்போது, உங்கள் ஈமெயில் முகவரியை வாக்குப் பெட்டியில் கொடுக்கவேண்டும்.

வாக்களித்ததும், உங்கள் ஈ.மெயில் பொட்டியில், survey@newsndeals.com என்ற முகவரியிலிருந்து ஒரு ஈமெயில் வரும். (junk/spam foldersல் மறவாமல் பார்க்கவும். 1 நிமிடத்திலிருந்து, 1 மணி நேரம்வரை ஈ.மெயில் வர நேரம் எடுக்கலாம்).
அந்த மடலை வாசித்து, அதில் உள்ள, 'APPROVE' லிங்க்கை நீங்கள் குத்த வேண்டும். குத்தினால்தான், உங்கள் வாக்கு கணக்கில் சேர்க்கப்படும்.

APPROVE செய்து முடிக்கும் வரை, உங்கள் வாக்கு "Total unapproved votes:" என்று தனியே காட்டப்படுகிறது.
ஈ.மெயில் படித்து APPROVE செய்ய மறக்காதீர்கள்.


உங்கள் ஈ.மெயில் முகவரி, உங்கள் வாக்கை ஊர்ஜீதம் செய்ய மட்டுமே பயன்படுத்தப்படும்.
எந்த ஈ.மெயிலில் இருந்து எந்த வாக்கு வந்தது என்பதெல்லாம் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

****வாக்கெடுப்பு முடிவடைந்தது! ****

தவறுகளிருந்தால் சுட்டிக்காட்டவும்.
கேள்விகள் இருந்தால் கேட்க்கவும்.
கதைகள் பிடித்திருந்தால், அந்தந்த பதிவருக்கு பின்னூட்டமிட்டு ஊக்கப் படுத்தவும்.

இந்தக் கூரில் உங்களுக்குப் பிடித்த கதையை தேர்வு செய்ய மறவாதீர்.

கதை எழுதியவர்கள், தங்கள் கதைக்கு வாக்களிக்குமாறு விளம்பரம் செய்வதை, இன்று முதல் தவிர்க்கவும். இது ரூல் இல்லை. என் அபிப்ராயம் மட்டுமே. எல்லாரும் எல்லா கதையும் படித்து வாக்களிக்க வேண்டி, இந்த வேண்டுகோள். வாக்கெடுப்புக்கு 'பொதுவான' விளம்பரம் தரலாம். ;)

அடுத்த 'கூரி'ன் வாக்கெடுப்பு கூடிய விரைவில்.

அனைவருக்கும் நன்றி!

Group C நாளை வெளிவரும்.
Group A, B, C க்கான வாக்கெடுப்பு டிசம்பர் 30, ஞாயிறு 6.00 PM PST வரை நடைபெறும்.
அதற்கு பின், முடிவுகள் அலசி ஆராய்ந்து, இறுதிக் கட்ட வாக்கெடுப்பு ஆரம்பமாகும்.


0-------0 0---------0 0----------0
கேள்வி1: எனக்கு பிடித்த நான்கு கதைகளுக்கு வாக்களிக்க நான்கு ஈமெயில் ஐடி(யா?:)) வேண்டுமா ? ஒரே ஈமெயில் ஐடி பயன்படுத்தி வாக்களிக்க முடியுமா ?
பதில்1: :) ஒருவருக்கு ஒரு வாக்குதான்.
'சிறந்த' ஒரு கதை கண்டுபிடிக்கத்தான் போட்டி. 2,3, 4 பரிசெல்லாம் கிடையாதே ;)

கேள்வி2: வாக்களிப்பதற்கு ஏதெனும் காலக் கெடு உண்டா ?
பதில்2: டிசம்பர் 31 finals வாக்கெடுப்பு நடத்த முடிவு. அதற்குள் மூன்று கூரின் வாக்கெடுப்புகளும் முடிக்கப்படும்.

கேள்வி3: சாதாரண வாக்கெடுப்புன்னா செய்யத் தோன்றும்...நீங்க 2-3 டாஸ்க் எல்லாம் அதுவும் 3 + 1 நாலு முறை செய்யச் சொல்லுறீங்க...வேலை களுதயில்லெ... இப்படியெல்லாம் பண்ண வேண்டுமென்ற அவசியம் என்ன?
பதில்3: யோசிக்க வச்சுட்டீங்க. 57 கதைகள் இருக்கரதால, ஒரே கட்டம் கட்டினா எல்லாரும் எல்லாக் கதையும் படிச்சுட்டு போட மாட்டாங்கன்னு ஒரு தோணல். அதனால, இந்த கூரு போடல். கொஞ்சம் சிரமம்தான், ஆனாலும், கொஞ்சம் முயற்சி பண்ணி வாக்களியுங்கள். சிறந்த 'நச்' வெல்லட்டும். புரிந்துணர்வுடன் கூடிய உங்கள் பேராதரவுக்கு நன்றி! :)

கேள்வி4: Group Aல் வாக்களித்த ஈ.மெயில் முகவரி கொண்டு, Group B, Group Cல் வாக்களிக்க முடியுமா?
பதில்4: முடியும். கூர் கூராக பிரித்ததே அதுக்குத்தானே :)

கேள்வி5: என் ஈ.மெயில் ஐடி.யை உபயோகித்து வேற யாராவது ஓட்டு போட்டா என்ன பண்றது?
பதில்5: ஆஹா. அற்புதமான கேள்வி. உங்களுக்கு எப்படியும் ஈ.மெயில் வரும். ஈ.மெயில் படிச்சு, உங்களுக்கு பிடிக்காத வாக்கு போட்டிருந்தா, REJECT செய்யலாம். Reject செய்தபின், உங்கள் ஐடி உபயோகித்து, உங்களுக்கு பிடிச்ச மாதிரி வாக்கு போட்டுக்கலாம்

பி.கு. வலது பக்க 'Quick Survey'ல் ஒரு வாக்கப் போட்டுடுங்க. உங்க கருத்ஸ் ரொம்ப முக்கியம் ;)
0-------0 0---------0 0----------0

பி.கு: வலது மூலையில் இருக்கும் MSV படத்தை க்ளிக்கி, பெட்டிஷனில் கையெழுத்து போடவும். நன்றி!

Tuesday, December 25, 2007

சிறந்த 'நச்' கதை - வாக்கெடுப்பு ஆரம்பம் - Group A

57 'நச்'கதைகளை மூன்று கூராக பிரித்து, கூருக்கு 19 கதைகள் வீதமாக, முதல் கட்ட வாக்கெடுப்பு, இனிதே ஆரம்பம்.

மூன்று கூருகளிலிருந்து, அதிக வாக்குகள் பெறும் இரண்டு கதைகளை எடுத்து, Finals வாக்கெடுப்பு, 6 கதைகளுடன் நடத்தப்படும்.

Finalsல் வெற்றி பெறும் கதைக்கு, $25 பரிசு வழங்கப்படும்.

அதல்லாமல், $75, வெற்றி பெறும் பதிவர் பெயரில், உதவும் கரங்களுக்கு அனுப்பப்படும். உதவும் கரங்களிடமிருந்து, பதிவருக்கு, ஒரு 'வாழ்த்துக்கள் + நன்றி' மடலும் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும்.

முதல் 19 கதைகள் இவைதாம்:
1) வினையூக்கி - கதை இங்கே
2) இராம்/Raam - கதை இங்கே
3) வாக்காளன் - கதை இங்கே
4) TBCD - கதை இங்கே
5) நிலா ரசிகன் - கதை இங்கே
6) மோகந்தாஸ் - கதை இங்கே
7) கார்த்திக் பிரபு - கதை இங்கே
8) கோவி கண்ணன் - கதை இங்கே
9) வீ.எம் - கதை இங்கே
10) பாசமலர் - கதை இங்கே
11) செல்வன் - கதை இங்கே
12) ஜெகதீசன் - கதை இங்கே
13) ramachandranusha(உஷா) - கதை இங்கே
14) இ.கா.வள்ளி - கதை இங்கே
15) கிருஷ்ணா - கதை இங்கே
16) பிரதாப் குமார் சி - கதை இங்கே
17) பெனாத்தல் சுரேஷ் - கதை இங்கே
18) நக்கீரன் - கதை இங்கே
19) ஹரன்பிரசன்னா - கதை இங்கே

தயவு செய்து, முதல் கூரில் உள்ள, அனைத்து கதைகளையும் படித்துவிட்டு, எந்த கதை உங்கள் கருத்தில், சிறந்த 'நச்' கதை என்று ஆராய்ந்து வாக்களிக்கவும்.

இம்முறை, வாக்கெடுப்பில் ஒரு புதிய யுக்தி சேர்க்கப்பட்டுள்ளது.

வாக்களிக்கும்போது, உங்கள் ஈமெயில் முகவரியை வாக்குப் பெட்டியில் கொடுக்கவேண்டும்.

வாக்களித்ததும், உங்கள் ஈ.மெயில் பொட்டியில், survey@newsndeals.com என்ற முகவரியிலிருந்து ஒரு ஈமெயில் வரும். (junk/spam foldersல் மறவாமல் பார்க்கவும். 1 நிமிடத்திலிருந்து, 1 மணி நேரம்வரை ஈ.மெயில் வர நேரம் எடுக்கலாம்).
அந்த மடலை வாசித்து, அதில் உள்ள, 'APPROVE' லிங்க்கை நீங்கள் குத்த வேண்டும். குத்தினால்தான், உங்கள் வாக்கு கணக்கில் சேர்க்கப்படும்.

APPROVE செய்து முடிக்கும் வரை, உங்கள் வாக்கு "Total unapproved votes:" என்று தனியே காட்டப்படுகிறது.
ஈ.மெயில் படித்து APPROVE செய்ய மறக்காதீர்கள்.


உங்கள் ஈ.மெயில் முகவரி, உங்கள் வாக்கை ஊர்ஜீதம் செய்ய மட்டுமே பயன்படுத்தப்படும்.
எந்த ஈ.மெயிலில் இருந்து எந்த வாக்கு வந்தது என்பதெல்லாம் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

****வாக்கெடுப்பு முடிவடைந்தது! ****

தவறுகளிருந்தால் சுட்டிக்காட்டவும்.
கேள்விகள் இருந்தால் கேட்க்கவும்.
கதைகள் பிடித்திருந்தால், அந்தந்த பதிவருக்கு பின்னூட்டமிட்டு ஊக்கப் படுத்தவும்.

கதை எழுதியவர்கள், தங்கள் கதைக்கு வாக்களிக்குமாறு விளம்பரம் செய்வதை, இன்று முதல் தவிர்க்கவும். இது ரூல் இல்லை. என் அபிப்ராயம் மட்டுமே. எல்லாரும் எல்லா கதையும் படித்து வாக்களிக்க வேண்டி, இந்த வேண்டுகோள். வாக்கெடுப்புக்கு 'பொதுவான' விளம்பரம் தரலாம். ;)

அடுத்த 'கூரி'ன் வாக்கெடுப்பு கூடிய விரைவில்.

அனைவருக்கும் நன்றி!

0-------0 0---------0 0----------0
கேள்வி1: எனக்கு பிடித்த நான்கு கதைகளுக்கு வாக்களிக்க நான்கு ஈமெயில் ஐடி(யா?:)) வேண்டுமா ? ஒரே ஈமெயில் ஐடி பயன்படுத்தி வாக்களிக்க முடியுமா ?
பதில்1: :) ஒருவருக்கு ஒரு வாக்குதான்.
'சிறந்த' ஒரு கதை கண்டுபிடிக்கத்தான் போட்டி. 2,3, 4 பரிசெல்லாம் கிடையாதே ;)

கேள்வி2: வாக்களிப்பதற்கு ஏதெனும் காலக் கெடு உண்டா ?
பதில்2: டிசம்பர் 31 finals வாக்கெடுப்பு நடத்த முடிவு. அதற்குள் மூன்று கூரின் வாக்கெடுப்புகளும் முடிக்கப்படும்.

கேள்வி3: சாதாரண வாக்கெடுப்புன்னா செய்யத் தோன்றும்...நீங்க 2-3 டாஸ்க் எல்லாம் அதுவும் 3 + 1 நாலு முறை செய்யச் சொல்லுறீங்க...வேலை களுதயில்லெ... இப்படியெல்லாம் பண்ண வேண்டுமென்ற அவசியம் என்ன?
பதில்3: யோசிக்க வச்சுட்டீங்க. 57 கதைகள் இருக்கரதால, ஒரே கட்டம் கட்டினா எல்லாரும் எல்லாக் கதையும் படிச்சுட்டு போட மாட்டாங்கன்னு ஒரு தோணல். அதனால, இந்த கூரு போடல். கொஞ்சம் சிரமம்தான், ஆனாலும், கொஞ்சம் முயற்சி பண்ணி வாக்களியுங்கள். சிறந்த 'நச்' வெல்லட்டும். புரிந்துணர்வுடன் கூடிய உங்கள் பேராதரவுக்கு நன்றி! :)

கேள்வி4: Group Aல் வாக்களித்த ஈ.மெயில் முகவரி கொண்டு, Group B, Group Cல் வாக்களிக்க முடியுமா?
பதில்4: முடியும். கூர் கூராக பிரித்ததே அதுக்குத்தானே :)

கேள்வி5: என் ஈ.மெயில் ஐடி.யை உபயோகித்து வேற யாராவது ஓட்டு போட்டா என்ன பண்றது?
பதில்5: ஆஹா. அற்புதமான கேள்வி. உங்களுக்கு எப்படியும் ஈ.மெயில் வரும். ஈ.மெயில் படிச்சு, உங்களுக்கு பிடிக்காத வாக்கு போட்டிருந்தா, REJECT செய்யலாம். Reject செய்தபின், உங்கள் ஐடி உபயோகித்து, உங்களுக்கு பிடிச்ச மாதிரி வாக்கு போட்டுக்கலாம்.

பி.கு. வலது பக்க 'Quick Survey'ல் ஒரு வாக்கப் போட்டுடுங்க. உங்க கருத்ஸ் ரொம்ப முக்கியம் ;)
0-------0 0---------0 0----------0

பி.கு: வலது மூலையில் இருக்கும் MSV படத்தை க்ளிக்கி, பெட்டிஷனில் கையெழுத்து போடவும். நன்றி!

Monday, December 24, 2007

போட்டியில் உள்ள 'நச்' கதைகள்

'நச்னு ஒரு கதை' போட்டியில் உள்ள 57 கதைகள் கீழே கட்டம் கட்டி கொடுத்துள்ளேன்.
எதிர்பார்த்ததை விட அதிகமான கதைகள் ஆட்டையில் உள்ளது.
வாக்களிப்பு அடிப்படையில், சிறந்த கதை தேர்வு செய்யப்பட உள்ளது.

வாக்காளர்கள் அனைவரும், அனைத்து கதைகளையும் படித்து, வாக்களிக்க தயாராகும் படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

'யார் எழுதிய கதை' என்பதை கவனத்தில் கொள்ளாமல், "எப்படி இருக்கிறது நச்?" என்பதை மட்டும் கவனத்தில் ஏற்றிக் கொள்ளுங்கள். :)

'நச்' மீட்டரின் தரத்தை பொறுத்து மட்டுமே வாக்களிக்குமாறு, பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

சிறந்த 'நச்' கதை வெல்லட்டும்.

58 கதைகள் ஆட்டையில் உள்ளதால், இரண்டு நாட்கள், வாக்காளர்களுக்கு படிக்க அவகாசம் தர முடிவு செய்யப்பட்டுள்ளது.

வாக்கெடுப்பு புதன்கிழமை துவங்கப்படும்.

படிக்காதவங்க படியுங்க.
படிச்சவங்க திரும்பப் படியுங்க.
எல்லாத்துக்கும் மதிப்பெண் போட்டு, உங்களுக்கு பிடித்த சிறந்த 'நச்'சை, தேர்ந்தெடுங்கள்.

பங்குபெற்ற அனைத்து, 'நச்' ஆசிரியர்களுக்கும் நன்றி!
ஆட்டையில் முதலில் இறங்கி ஆட்டையை துவக்கிய வினையூக்கிக்கு ஸ்பெஷல் நன்றீஸ்!
பல நச் கதைகள் எழுதிய, நச் மன்னர்களுக்கும் நன்றீஸ்! :)
ஆதரவு அளித்த அனைத்து பதிவர்கள் வாசகர்களுக்கும் நன்றீஸ்!
Thanks to the Sun-TV style reviews of Srikanth. :)

அடடா, இம்முறை போட்டியில் கலந்துக்க முடியாம போயிடுச்சா? அதுக்கென்ன, சும்மா எழுதி ஒண்ண ரிலீஸ் பண்ணுங்க‌. அப்படியே, நம்ம வாக்கெடுப்புக்கு ஒரு வெளம்பரம் போட்டுடுங்க ;)

இனி, கதைகள படிங்க. 'நச்'ஆசிரியர்களை ஊக்குவியுங்கள்!

வாக்கெடுப்பில் சந்திப்போம்!
தேர்தல் ஆணையர், பூத் செக் பண்ணிட்டிருக்காரு. பூத் கேப்ச்சரிங், குண்டாஸ் அட்டாக், இதெல்லாம் இல்லாமல், சுமுகமா தேர்தல் முடிய எல்லா ஏற்பாட்டையும் கவனிக்கணும் ;)

1) வினையூக்கி - கதை இங்கே
2) இராம்/Raam - கதை இங்கே
3) வாக்காளன் - கதை இங்கே
4) TBCD - கதை இங்கே
5) நிலா ரசிகன் - கதை இங்கே
6) மோகந்தாஸ் - கதை இங்கே
7) கார்த்திக் பிரபு - கதை இங்கே
8) கோவி கண்ணன் - கதை இங்கே
9) வீ.எம் - கதை இங்கே
10) பாசமலர் - கதை இங்கே
11) செல்வன் - கதை இங்கே
12) ஜெகதீசன் - கதை இங்கே
13) ramachandranusha(உஷா) - கதை இங்கே
14) இ.கா.வள்ளி - கதை இங்கே
15) கிருஷ்ணா - கதை இங்கே
16) பிரதாப் குமார் சி - கதை இங்கே
17) பெனாத்தல் சுரேஷ் - கதை இங்கே
18) நக்கீரன் - கதை இங்கே
19) ஹரன்பிரசன்னா - கதை இங்கே
20) VSK - கதை இங்கே
21) Rathnesh - கதை இங்கே
22) குட்டீஸ் கார்னர் - கதை இங்கே
23) நாடோடி இலக்கியன் - கதை இங்கே
24) Rama - கதை இங்கே
25) மங்களூர் சிவா - கதை இங்கே
26) கிருத்திகா - கதை இங்கே
27) இலவசக்கொத்தனார் - கதை இங்கே
28) குசும்பன் - கதை இங்கே
29) அரை பிளேடு - கதை இங்கே
30) Divya - கதை இங்கே
31) gils - கதை இங்கே
32) Srikanth - கதை இங்கே
33) சிறில் அலெக்ஸ் - கதை இங்கே
34) Vicky - கதை இங்கே
35) இம்சை அரசி - கதை இங்கே
36) ப்ரசன்னா (குறைகுடம்) - கதை இங்கே
37) கண்மணி - கதை இங்கே
38) வேதா - கதை இங்கே
39) சென்ஷி - கதை இங்கே
40) விட்டுது சிகப்பு - கதை இங்கே
41) ஓகை - கதை இங்கே
42) சதங்கா (Sathanga) - கதை இங்கே
43) செல்வம் - கதை இங்கே
44) அருட்பெருங்கோ - கதை இங்கே
45) drtv - கதை இங்கே
46) Sathiya - கதை இங்கே
47) நந்து f/o நிலா - கதை இங்கே
48) சிந்தாநதி - கதை இங்கே
49) .:: மை ஃபிரண்ட் ::. - கதை இங்கே
50) சரவணா - கதை இங்கே
51) indirasenthilraj - கதை இங்கே
52) தம்பி - கதை இங்கே
53) வவ்வால் - கதை இங்கே
54) சுரேகா - கதை இங்கே
55) My days(Gops) - கதை இங்கே
56) ambi - கதை இங்கே
57) Radha Sriram - கதை இங்கே

Saturday, December 22, 2007

'நச்' கதைகளுக்கு விமர்சனம் - by Srikanth

'நச்' கதைகளுக்கு விமர்சனங்கள் எழுத சொல்லி எல்லாரையும் கேட்டிருந்தேன்.

பதிவர் Srikanth டகால்னு குதிச்சு, குட்டி குட்டியா விமர்சனம் எழுத ஆரம்பிச்சிட்டாரு. அவருக்கு சர்வே கமிட்டியின் மனமார்ந்த நன்றீஸ்!

விமர்சனங்கள் இதுவரை: - by Srikanth
0 ========= 0 ========== 0 ========= 0
சன் டீவியில் கால்மேல் கால் போட்டு படங்களை கண்ணாடி டம்ப்லருக்குள் கல் போட்டு குலுக்கின குரலில் விமர்சிக்கிறாரே அவரையே குருவாக நினைத்து வணங்கி விமர்சன வேலையை செய்கிறேன்...

வினையூக்கி: ஜெனியும் நானும் லேப்டாப்பில் பார்த்த பேய்ப்படம்
கதை ஒரு evil dead மாதிரி ஒரு கல்ட் கதை முயற்சித்து இருக்கிறார் என்று நினைக்கிறேன். கதை சுவாரசியமாக ஆரம்பித்து சட்டென்று முடிந்து விட்டது.... சுவாரஸ்யம் கெடாமல் இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம்... பரவாயில்லை... பேய்ப்படம் - பப்படம்.

TBCD: பழக்க வழக்கம் !
சிறுகதையில் ஒரு ஹைக்கூ போல :) நாலு வரி ஜோக்குக்கும் சிறுகதைக்கும் நடுவில் இருக்கிறது... நன்று.. பழக்க வழக்கம் - துணுக்கு தோரணம்.

நிலா ரசிகன் - ஒரு நடிகையின் கதை
கதை ஆர்வத்தை தூண்டி சப்பென்று முடிந்து விட்டது... நடிகையின் கதை என்றது கொஞ்சம் 'கவர்ச்சி' இருக்கும் என்று பார்த்தால் அவர் - இவர் என்று யாரோ பெரிசை சொல்வது போல் கதைஎங்கும் வருகிறது... பரவாயில்லை... - ஒரு நடிகையின் கதை - அடுத்த கதைக்கு விதை

மோகந்தாஸ் - கடவுள் என்னிடம் கரைச்சல் செய்த பொழுதொன்றில்
நிஜமாகவே நடந்தது போல் எழுதி இருக்கிறார். கதையின் முடிவும் யூகிக்க முடியாமல் நச் என்று இருந்தது. அருமை - க எ க செ பொ - ந பொ! (நல்ல பொழுதுபோக்கு)

கார்த்திக் பிரபு - அப்போ நீ தூங்கியிருப்ப !!!
கொஞ்சம் பெரிய கதை - இதை நச் சிறுகதை என்று சொல்லலாமா தெரியவில்லை... இருந்தாலும் பிரயாண அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில் நன்றாக அனுபவித்து எழுதி இருக்கிறார்... பரவாயில்லை - அப்போ நீ தூங்கியிருப்ப - அசதி

கோவி கண்ணன் - நச்சின்னு ஒரு கதை - அப்பா(வி) !
நச் என்று கதை வேண்டும் என்று சொன்னதற்காக எழுதப்பட்ட parody கதை என்று நினைக்கிறேன். பரவாயில்லை - அப்பா(வி) - அப்பப்பா(வி) :)

பாசமலர் - ஆசைக்கு ஏது வெட்கம்?
வித்தியாசமான கதை - முன்பெல்லாம் ரேடியோவில் விவிதபாரதியில் நாடகம் கேட்போம் - பதினைந்து நிமிட நாடகம் - ஏனோ அதுதான் நினைவுக்கு வந்தது.. பரவாயில்லை - ஆசைக்கு எது வெட்கம் - யாருக்கும் வெட்கமில்லை

செல்வன் - பூனைக்கு மணி கட்டியவள்
புதிய சிந்தனை - ஓரின சேர்க்கையை வித்தியாசமான கோணத்தில் அணுகியிருக்கிறார் - கதை கொஞ்சம் யோசிக்க வைக்கிறது - அருமை - பூனைக்கு மணி கட்டியவள் - ஆராய்ச்சி மணி

ஜெகதீசன் - தப்பா நினைக்க மாட்டயே?
கதை வழக்கமான கதை - வழக்கமான பாணி - ஆனால் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. பரவாயில்லை - தப்பாக நினைக்க மாட்டாயே - தயக்கம்

ramachandranusha(உஷா) - நானே நானா?
பெரிதாக எதிர்பார்த்து கனவாக முடிந்தது கதை - ஆனாலும் நச் கொஞ்சம் குறைவு தான் சொல்லிய விதம் நன்றாக இருந்தது - பரவாயில்லை - நானே நானா - ஏனோ தானோ

மற்ற கதைகளின் விமர்சனங்கள் Srikanth பக்கத்தில் பார்க்க இங்கே க்ளிக்கவும்.
நன்றி..
0 ========= 0 ========== 0 ========= 0

டிசம்பர் 23, கடைசி நாள்.
52 பேர் இதுவரை போட்டியில் உள்ளனர். கதைகளைப் படியுங்கள். ஊக்குவியுங்கள்.

கதை அனுப்பாதவங்க அனுப்புங்க. ஒண்ணுக்கு மேற்பட்ட கதை எழுதினவங்க, போட்டிக்கான கதையை சொல்லிடுங்க.

நன்றி!

;)

Wednesday, December 19, 2007

FIXMYINDIA.ORG 'தற்காலிக' புதுமனை புகுவிழா!

வேளா வேளைக்கு சாப்பிட சோறு, காலையிலிருந்து மாலைவரை ஒக்காந்துட்டுவர ஒரு ஆபீஸு, அங்க கொஞ்சமா ஆணி, பிக்கல் பிடுங்கலில்லாத குடும்பம், பாசமான நட்பு வட்டம், ஆரோக்கியமான தேகம், மொத்தத்தில் மண்ட கொடச்சலில்லா வாழ்க்கை.
இன்ஷாஹ் அல்லா, இந்த மாதிரி வாழ்க்கை இருந்துட்டா மத்த விஷயங்களுக்கு கொஞ்சம் அதிகமாவே நேரம் கெடைக்குது.
நெட்ல பொழுத கழிக்கவும், போட்டோக்கள் பிடித்துத் தள்ளவும், ஊர் சுத்தவும் அதிகப்படியா நேரம் கிடைக்கும்.

இதன் கூடவே, இன்னொரு விஷயம், சுத்தியிருக்கும் சமுதாயத்தை பத்தி யோசிக்க முடியுது.
அதில் இருக்கும் பல ப்ரச்சனைகளைப் பத்தியும் யோசிக்க முடியுது.
(டேய், அடங்கு, இன்னான்ற இப்ப?)

யோசிக்கரது மட்டும்தான் முடியுது. சமூக அவலங்களைத் திருத்த ஒண்ணும் பண்ண முடியரதில்ல.
அப்பப்ப, ஏற்படும், ஷமூக-ஷேவா அரிப்பை, சொறிஞ்சுவிட்டுக்க ஏதாவது சின்ன சின்னதா செய்ய முயற்சிப்போம். மிக்காரும், இவை, ஒரு சின்ன டொனேஷன் குடுக்கரதோட முடிஞ்சுடும்.
மத்தபடி, ஊரில் இருக்கும், civic problems, அஃதாவது, ரோடு சரியில்ல, தண்ணிப் பிரச்சனை இந்த மாதிரி மேட்டருக்கெல்லாம், விடுமுறைகளில் ஊருக்கு போகும்போது, வெறும் பொலம்பலுக்கு மேல வேற ஒண்னும் பண்ணறதில்ல.

வயசும் ஆயிட்டே போவுது. ஏதாவது உருப்படியா செய்யலாமேன்னு ஒரு நாள் யோசிச்சப் போ, நம்ம ஊரில் இருக்கும், civic problems ஐ வெளிச்சம் போட்டு காட்ட ஒரு இணைய தளம் ஆரம்பிக்கலாமேன்னு தோணிச்சு.
Deccan Chronicle பேப்பர்ல வர மாதிரி "Who is ruining my City?" பக்கம், ஏற்படுத்தும் சின்ன தாக்கத்தையாவது ஏற்படுத்தலாமேனு யோசனை வந்துது.

உங்க கிட்டயும் இந்த மாதிரி தளத்துக்கு என்ன பேர் வெக்கலாம்னு யோசனை கேட்டிருந்தேன். FixMyIndia.Org பேரு நல்லா இருந்ததால, அத உடனே வாங்கியும் போட்டாச்சு.

அப்பரம் என்ன? வழக்கம் போல, சோம்பேறித்தனத்தின் உச்சத்தில், உல்லாசமாய் பொழுத கழிச்சுட்டு, தினம் ஒரு சிக்கனை முழுங்கிட்டு, விடுமுறையெல்லாம் சுபமா முடிச்சுட்டு, fixmyindia.org கெடப்புல போட்டுட்டேன்.

ஒரு ப்ரயோஜனமான தளமா மாத்தணுங்கறதால, நெறையவே வேலை இருக்கு.
'Design' (மனசுக்குள்ளயே) முடிச்சாசு. இனி வேலைய தொடங்கணும்.

இந்த மேட்டர் பத்தி யோசிக்கும்போது தருமி சார் ஒரு விஷயம் சொன்னாரு.
நம்ம அரசாங்கமே, இந்த மாதிரி ப்ரச்சனைகளை மக்கள் பதிய, ஒரு தளம் வச்சிருக்காம்.
இன்னிக்கும் இதப் பத்தி ஒரு பதிவு போட்டிருக்காரு பாருங்க.

அவர் எழுப்பிய ஒரு ப்ரச்சனைக்கு பதில் வந்திருக்காம். கேட்க்கவே ரொம்ப சந்தோஷமா இருந்தது.

ஆனா, இதை உபயோகிப்பவர் எண்ணிக்கை ரொம்ப கொறவா இருக்காம்?

நம்ம அரசாங்கம் இந்த மாதிரி ஒரு விஷயத்தைப் பண்ணி பொதுவில் வைத்ததே பெரிய விஷயம். அதுவும், அதில் பதியும் கேள்விகளுக்கு, பதிலை வேறு தருகிறார்களாம்.
நம்மளால முடிந்தவரை இதை உபயோகித்து, மிக மிக அத்யாவசிய தேவைகளை எடுத்துச் சொல்லலாம்ல?
தயவு செய்து, தாமதிக்காமல், இந்த தளத்தை பயன்படுத்தி, உங்க சுத்து வட்டாரத்துல இருக்கர ப்ரச்சனைகளை அந்த இணையதளத்தில் ஏற்றுங்கள் நண்பர்களே!

(தயவு செய்து, உண்மையான ப்ரச்சனைகளை மற்றும் அதில் ஏற்றுங்கள்.
சும்மா, வெளையாட்டுக்கு, எதையாவது எழுதிப் போட்டு, அந்த தளத்தின் வளர்ச்சியை குறைத்து விடாதீர்கள்)

சரி, இப்ப இந்த பதிவின் தலைப்புக்கு வாரேன்.
FixMyIndia.Org முகவரியை, நம் அரசாங்கத்தின் தளத்திர்க்கு திருப்பி விட்டுள்ளேன். நம்மால முடிஞ்சது இப்போதைக்கு இதுதேன்.
(இப்படி பண்ணலாமா, என்னென்னா ப்ரச்சனைகள் வரும்னெல்லாம் இன்னும் விசாரிக்கல. தெரிஞ்சவங்க சொல்லுங்க)

ரோடு சரியில்லையா? தெருவிளக்கு ப்ரச்சனையா? அரசாங்க இயந்திரம் சரிவர இயங்கவில்லையா? மறக்காம FixMyIndia.Org போய், ஒரு புகாரை பதியுங்கள்.

FixMyIndia.Org now, points to http://darpg-grievance.nic.in

உங்க பதிவில் வலது மூலையில், அனைவர் கண்ணில் படும்படி, இந்த தளத்திர்க்கு ஒரு லிங்க் போடுங்க. நன்றி!

இதுதான் நம்ம லோகோ. எப்படி இருக்கு? பெட்டரா ஐடியா இருக்கரவங்க, வரையத் தெரிஞ்சவங்க, வரஞ்சு அனுப்புங்களேன் ;)



நன்றி! நன்றி! நன்றி!

Tuesday, December 18, 2007

நச்: விமர்சகர்கள் தேவை, உடனடியாக!

வணக்கம் நண்பர்களே!

'நச்'னு ஒரு கதை போட்டியில், மிக ஆர்வமுடன், பல பதிவர்கள் பங்கு பெற்றுள்ளார்கள்.
'நச்' 'நச்'னு ஏகப்பட்ட கதைகள் வந்தவண்ணம் உள்ளன.

இதுவரை 49 பதிவர்கள் களத்தில் உள்ளனர்.
4 பதிவர்கள் மட்டும், இன்னும் கதையை அனுப்பவில்லை.

பதிவர்களில் சிலர், ஒன்றுக்கு மேற்பட்ட கதையை எழுதி திக்கு முக்காட வைத்துள்ளனர்.
அவர்களின், கற்பனா வளம் இன்னும் தீர்ந்ததாய் தெரியவில்லை. நச் நச் நச் என்று நாளொரு திருப்பமாக, புதுப் புது கதைகள் வந்து கொண்டே இருக்கின்றன. கலக்கல்ஸ்!

("எங்கய்யா வேல செய்யறீங்க நீங்கெல்லாம்? உங்களுக்கு சம்பளம் கொடுக்கர புண்ணியவான் யாரு? உங்க கூட குடும்பம் நடத்தர பொருமைசாலி யாரு? உங்களுக்கு சமச்சு கொட்டிக்கிட்டு லூஸ்ல விடர ரூம்-மேட்ஸ் யாரு?"ன்னு யாராவது கேட்டு, உங்க முயற்சிய திசை திருப்ப பாப்பாங்க. அவங்களையெல்லாம் துச்சமா மதிச்சு, நீங்க கதைகள தொடர்ந்து அவுத்து வுடுங்க :) ஹி ஹி ஹி.
Seriously, உங்க ஆர்வமும் திறமையும் வியப்பைத் தருது. உங்களின் ஆதரவுக்கும், இந்த ஆட்டையை மிக சுவாரஸ்யமாக மாற்றிய 'நச் நச்'சர்களுக்கும் நன்றீஸ் பல!)

போட்டிக்கான கதைகள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி டிசம்பர் 23 2007 11:59 PM PST.

ஒன்றுக்கு மேற்பட்ட கதைகளை எழுதிய கதாசிரியர்கள், தங்களின் நச்களில் எந்த 'நச்'சை ஆட்டையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்ல மறவாதீர்கள்.
போட்டிக்கான 'நச்'சை சொல்ல வேண்டிய கடைசி தேதியும் டிசம்பர் 23.

இதுவரை பெயர் கொடுக்காதவர்களும், புதிய கதையோட பெயர் கொடுக்கலாம்.

இதுவரை போட்டியில் உள்ள நண்பர்களின் கதைகளைப் படிக்க, இங்கே செல்லவும்.
திருத்தங்கள், புதிய கதைகள், எல்லாத்தையும் அங்க பின்னூட்டிச் சொல்லுங்க. நன்றி!

பரிசுப் பணம்: $25 வெற்றி பெரும் 'நச்'கதாசிரியருக்கும்; $75 உதவும் கரங்களுக்கும்;

நீங்கள் நல்ல விமர்சகரா? அப்படீன்னா, தயவு செய்து, இங்கே சென்று, ஆட்டையில் உள்ள கதைகளைப் படித்து 'நச்'னு ஒரு விமர்சனம் எழுதுங்களேன்?
உங்க பதிவுலயே, விமர்சனம் போடலாம். கட்டம் கட்டி, சும்மா 'நச்'னு விமர்சனம் எழுதுங்க.

வாங்க, எல்லாருமா சேந்து, 'நச்'னு 2007ஐ முடிப்போம்!

நன்றி!

பி.கு: ஒரு நிமிஷம் மக்கள்ஸ், இதோ இந்த பதிவை படிக்காம போகாதீங்க. படிச்சுட்டு பின்னூட்டம் போடாம போகவே போகாதீங்க. நன்றி!

மீண்டும் நன்றி!

Monday, December 17, 2007

கல்லூரி - திரை விமர்சனம்

'காதல்' படம் தந்த பாலாஜி சக்திவேலின் படமென்பதால் ஒரு பெரிய எதிர்பார்ப்புடன் தான் படம் பார்க்க துவங்கினேன்.

கல்லூரின்னா, நமக்கு தெரிஞ்சதெல்லாம், 'பங்க்' முடியுடன் வரும் இளவட்டங்களின் கெட்டாட்டங்கள்தான்.

பாலாஜி சக்திவேலின் கல்லூரியில், மண்மணம் மாறாத, கிராமத்து முகங்கள்தான் மாணவர்கள்.
பள்ளிப் பருவத்திலேருந்தே ஒண்ணா படிக்கும் கும்பல் ஒண்ணு, ஒரே கல்லூரியில், ஒரே வகுப்பில் சேர்ந்து படிப்பை தொடர்கின்றனர்.
கும்பலில் ஆண்களும், பெண்களும் உண்டு. எல்லோரும் மிகவும் ஏழ்மையில் வாடுபவர்கள். செருப்பு தைக்கும் தந்தை, கல்லுடைக்கும் ஒரு தந்தை, ஆட்டோ ஓட்டுனர் ஒருவர், இப்படிப்பட்ட குடும்ப சூழல்.

சின்ன வயசிலேருந்தே இவங்கள்ளாம் நண்பர்கள் என்பதும், இவங்களுக்குள் ரொம்ப இருக்கமான நட்பு இருக்கு என்பதும், இதுக்குள்ள காதல் கீதல் எல்லாம் பத்திக்காது என்பதும், படம் ஆரம்பித்த 10 நிமிஷத்துலயே அழகா புரிய வைக்கறாரு டைரக்டர்.

இவங்ளுக்குள்ள இருக்கர ஆழமான நட்ப பாக்கும்போது, பெரிய ஏக்கம், நம்ம மனசுக்குள்ள உருவாகுது. நம்மளும் படிச்சோம், நண்பர்கள் எல்லாம் இருந்தாங்க, ஆனா இந்த மாதிரி 'உயிர்' தோழமை இல்லன்னே நெனைக்கறேன்.

எல்லாம் புதுமுக இளசுகள். என்னமா நடிச்சிருக்காங்க.

அதுவும், 'கயல்' என்ற பெயரில் வரும் அந்த பெண், அப்படியே வாழ்ந்திருக்காங்க.

மதுரை 'ஸ்லாங்' பேசும், காமெடியினும் (ரமேஷ்), நல்லா கலக்கியிருக்காரு. ஆனா, அவரு அப்படி வேணும்னே பேசர மாதிரி ஒரு நெருடல். நல்ல எதிர்காலம் இருக்கு இவருக்கு.

ஹீரோ-முத்து. நல்ல யதார்த்த நடிப்பு. ஓட்டப்பந்தைய வீரரா வராரு.

இந்த கிராமத்து நண்பர்களின் இடையில், வெள்ளை-வெளேர் பெங்களூரு பைங்கிளி(ஷோபனா) ஒண்ணும் புதுசா சேராங்க. ஆரம்பத்தில் தனியா இருந்தாலும், இவர்களின் நட்பு வளையத்துக்குள் அந்த பொண்ணும் ஐக்கியமாகும்.
சும்மா சொல்லக் கூடாது. சில முகங்கள் பார்த்தவுடன் நமக்கு ரொம்பவே பிடிச்சுப் போகும். அந்த வகை முகம் நம்ம ஹீரோயினுக்கு. விரசமில்லா அழகு முகம்.

அப்பரம் என்ன, ஹீரோக்கும் இந்த பொண்ண புடிக்கும். பொண்ணுக்கும் ஹீரோவ பிடிக்கும். ஆனா, நண்பர்களுக்கு தெரிஞ்சா என்ன நெனைப்பாங்கன்னு ரெண்டு பேரும் குழப்பத்தில் இருப்பாங்க.

இடையில், ஹீரோயின், ஹீரோவ பாக்க, கல் குவாரி இருக்கும் ஒரு எடத்துக்கு போற மாதிரி சீன்.
அந்த எடம் பாக்கும்போதும், அங்க வேலை செய்யர மக்கள பாக்கும்போதும், ஒரு நிமிஷம், நம்ம மனசு கனமாயிடுது. எப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கு, ஒரு வேள சாப்பாட்டுக்கு?

ஹீரோவோட தங்கச்சியா வர பொண்ணு, ரெண்டு நிமிஷம்தான் வராங்க. அடேங்கப்பா, என்ன யதார்த்தமா பேசராங்க.
"நானும் படிச்சேன். ஆனா, அண்ணன படிக்க வெக்கணும்னு என்ன நிறுத்திட்டாரு எங்கப்பா".
"லாரியில போக சொல்லோ கீழ வீந்து எங்கம்மா செத்து போச்சு"ன்னு சொல்லும்.
படத்தோட ரொம்ப ஒன்றிப்போயிட்டீங்கன்னா, மனச அறுத்துடும் காட்சியமைப்பு.

எந்த காட்சியும் ஒரு தொய்வில்லாமல் அழகா நகருது.

பாடல்கள்? இசை ஜோஷ்வா ஸ்ரீதர். காதல் அளவுக்கு பாடல்களில் பெரிய தாக்கம் ஏற்படவில்லை.
ஜூலைப் பாட்டு முணுமுணுக்க வைத்தது.

ஹீரோ ஹீரோயின் காதல், வெளியில் தெரியும் தருணம், ஆஹா அழகா முடியப் போகுதுடா படம்னு, ஜாலியானா, ஒரு நினைச்சே பாக்காத திருப்பத்த உள்ள கொண்டுவராரு கதையில.

அதுக்கப்பரம் என்ன?

இந்த நட்பு வளையத்தில் பின்னிப் பிணைந்து, பயணமாகும் நாம், இந்த திடீர் திருப்பத்தால் திக்குமுக்காடி போய், படம் முடிந்தும் எழுந்து வெளியில் நகர முடியாமல், பெயர் போட்டு முடியும் வரை அமைதியா ஒக்காந்து ஸ்க்ரீனையே பாத்துக்கிட்டு இருக்கோம்.

கல்லூரி - அருமையான படம். குடும்பத்துடன் அனைவரும் அமர்ந்து ஒரு நெளிவு சுளிவில்லாமல் பார்க்கக்கூடிய அற்புதப் படம்.

'காதல்' அளவுக்கு இருக்கா?
அது வேறு கதைக் களம், இது வேறு கதைக் களம்.
அது அருமை. இதுவும் அருமை!

கண்டிப்பா பாருங்க!

பாலாஜி ஷக்திவேல், இதே மாதிரி, மனதைத் தொடும் படங்களைத் தொடர்ந்து கொடுங்கள்.
செலவும் கம்மி, உங்க பேரும் நெலச்சு நிக்கும்.



:)

Thursday, December 13, 2007

தமிழ்நாட்டுக்கெல்லாம் பொற்கோயில் தேவையா?

நண்பர் ப்ரேம்குமார் சண்முகமணி, வேலூரில் புதிதாய் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ மகாலட்சுமி ஆலயம் பத்தி ஒரு பதிவு போட்டிருக்காரு.
பதிவ படிக்காதவங்க படிச்சுட்டு வாங்க.

அவர் பதிவில், ரொம்ப நியாயமான கேள்விகள் கேட்டிருக்காரு.

அதாவது, "ஒரு வேளை உணவுக்கே வழியில்லாமல், பல கோடி குடும்பங்கள் தினந்தோறும் அவதிப்படும் நம்மூரில், இப்படி கோடிகளைக் கொட்டி, தங்கத்தில் கோயில் கட்டுவது மிக அவசியமா?"ன்னு கேட்டிருக்காரு.

இப்படிச் செலவு செய்யும் கோடிகளை வேறு மாதிரி செலவு செய்து, ஏழைகளுக்கு உதவலாமே என்பது நியாயமான கேள்வி.

யோசிச்சுப் பாத்தீங்கன்னா, நம் ஒவ்வொருவரும் கூட, நம் அன்றாட, மிக அவசியமான, தேவைக்கு மட்டும் செலவு செய்து கொண்டு, மீதம் உள்ள சம்பாத்யத்தை, பொதுவுக்கு செலவு செய்தால், ஊரே சுபிட்சமாதான் இருக்கும்.
ஆனா செய்வோமா? நம்ம வருங்காலத்துக்கு சேத்து வைக்கணும், பேரன் பேத்திக்கு சேத்து வைக்கணும், அவசர ஆத்தரத்துக்கு சேத்து வைக்கணும்ணு, ஒவ்வொருவருக்கும், ஈயாமல் இருக்க, ஒவ்வொரு காரணங்கள் இருக்கும்.

தப்புன்னு சொல்ல வரல. இதுதான் வாழ்க்கை. வேற வழியில்ல இப்படிதான் இருக்க முடியும்.
'Survival of the fittest' - இதுதான இயற்கை நியதி?

நலிந்தவர்களைக் காப்பாத்தத்தான், ஒரு சமூக ஏற்பாடா, அரசாங்கத்த உருவாக்கி வச்சிருக்கோம்.

ஏழைகள் கஷ்டப் படுவதும், கீழ் மட்டத்தில் அவதிப்படுபவர்களின் நிலை சகிக்க முடியா அளவில் கீழே கீழே போய் கொண்டிருப்பது, ரொம்ப ரொம்ப ரொம்ப வேதனையான விஷயம்.

ஆனா, அவங்க நிலை சரியாக, ஊரில் தனியாரால் செய்யப்படும், மற்ற செலவுகளை கொறச்சா போதுமா? அதெப்படி, கஷ்டப் படறவங்களுக்கு நன்மை செய்யும்?

சிங்கப்பூர்ல பாத்தீங்கன்னா, பொருளாதாரம், சோர்வடையும்போது, புதுசா ரெண்டு ரயில் நிலையம் கட்டுவாங்க, பல புதிய கட்டிடங்கள கட்டுவாங்க, புதுசா ரோடு போடுவாங்க. இப்படி ஏதாவது, ஒரு புதிய வேலைய உருவாக்கி, பொருளாதார வளர்ச்சிக்கு புத்தியிர் குடுப்பாங்க. (தெரிஞ்சவங்க, விளக்கமா சொல்லுங்கய்யா)

அதே போல், நம்மூரில், பணத்தை முடக்கி வைக்காமல், எதையாவது, கட்டிக்கொண்டே இருத்தல் நலம்னுதான் எனக்குத் தோணுது.
சாமி இருக்கோ இல்லியோ, கணக்கில் வராத கருப்பு பணமெல்லாம், கோயிலா மாறி சில ஆயிரம் பேருக்கு, வேலை வாய்ப்பும், கோயிலை சுற்றியுள்ள சில ஆயிரம் பேருக்கு வாழ்வாதாரமாவும் இருந்தா நல்லதுதானே?

திருப்பதி மலைக்கு மேல அந்த கோயில் இல்லாம இருந்திருந்தா அந்த ஊரில் இவ்ளோ வளர்ச்சி வந்திருக்குமா?
எனக்கு தெரிஞ்சு வேலூர் இன்னும் கொஞ்ச வருஷத்துல, தமிழக வரை படத்தில் முக்கிய ஊராகப் போகுது, இந்த பொற்கோயிலினால்.

நீங்க என்ன நெனைக்கறீங்க.


பின்னூட்ட கருத்தும், விளக்கமா சொல்லுங்க.
அப்பதான், மத்தவங்களும், விவாதிக்க வசதியா இருக்கும்.

நன்றி!

பி.கு1: 'நச்'னு ஒரு கதைப் போட்டியில், 32 பேர் ஆட்டையில் இதுவரை. நீங்களும் கதை எழுதலாமே? முயற்சி பண்ணுங்க (நல்ல வேள, $25னு ஒரு உயர்-எல்லைய சொல்லியிருந்தேன், இல்லன்னா :) ) கதைகள் படிக்கவும், கலந்துக்கவும், இங்க க்ளிக்குங்கஅமுக்குங்க.

பி.கு2: ஒன்றுக்கு மேற்பட்ட கதையை இதுவரை எழுதியுள்ளவர்கள், எந்தக் கதை போட்டிக் கதை என்பதை, போட்டி கடைசி நாளான, டிசம்பர் 23க்குள் சொல்லிவிடவும். ஒரு பின்னூட்டமாக சொல்லலாம் அல்லது, கதைக்கு 'சர்வேசன் நச் போட்டிக் கதை'ன்னு 'tag' வச்சிடுங்க.

Wednesday, December 12, 2007

என் பூக்கள் சில...

'தமிழில் புகைப்படக் கலை'யின் டிசம்பர் மாதப் புகைப்பட போட்டியின் தலைப்பு 'பூக்கள்'.
அறிவிப்பும், இதுவரை வந்துள்ள படங்களும் இங்க பாருங்க. இதுவரை படங்களை அனுப்பாதவங்க அனுப்புங்க.
மக்கள்ஸ்,வழக்கம் போல கலக்கியிருக்காங்க!

இதுக்காக, நானும் சில பூக்கள 'சுடலாம்னு' (போட்டிக்கல்ல) வெளியில பொட்டியும் கையுமா அலஞ்சா, ஒரு பூவையும் சுத்துவட்டாரத்துல காணும். எல்லா மரமும், மொட்டையா போச்சு. இலையுதிர்காலத்தின் முழு வீச்சு நேத்துதான் இருந்தது. கொஞ்ச நஞ்சம் இருந்த இலைகளும் கொட்டி மொட்டையாயிடுச்சு.

சரி, ஆத்திர அவசரத்துக்கு பாவமில்லன்னு, கைவசம் இருக்கும் சில படங்களை, படையலாக்குகிறேன் :)


இது என்ன பூன்னு எனக்கு தெரியல. உங்களுக்கு தெரியுமா?

இதுவும் என்ன பூன்னு தெரியல. சிம்பிளா இருந்தாலும், எனக்கு ரொம்பவே பிடிச்சது இது. நேர்லயும் அழகு, படத்துலயும் அந்த பச்சை எடுப்பா அழகு சேக்குதுன்னு நெனைக்கறேன்.

இது தெரியும். சூரியகாந்தி. தேனீ நெஜம். ஒட்டினது இல்ல ;)


இது கொஞ்சம் காயர நெலமைல இருந்தது. தண்ணி தெளிச்சிருந்தா நல்லா இருந்திருக்குமோ?

அழகிகள்

இது சத்தியமா காஞ்ச மொளகா இல்ல!


படங்கள் நல்லாருக்கா?
குறை நிறைகளை சொல்லிட்டுப் போங்க நண்பர்களே!
நன்றி!

:)

பி.கு1: (வெற்றியின் வேண்டுகோளுக்கிணங்க, தங்கிலீஷில்லாம, சுத்த தமிழில் ஒரு பதிவு! ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா, கை நடுங்குதுங்கோ சாமிகளா! :) ஆமா, டிசம்பர் தமிழ்ல எப்படி அடிக்கரது? மார்கழியா? :) )

பி.கு2: 'நச்'னு ஒரு கதைப் போட்டியில், 30 பேர் ஆட்டையில் இதுவரை. நீங்களும் கதை எழுதலாமே? முயற்சி பண்ணுங்க (நல்ல வேள, $25னு ஒரு உயர்-எல்லைய சொல்லியிருந்தேன், இல்லன்னா :) ) கதைகள் படிக்கவும், கலந்துக்கவும், இங்க க்ளிக்குங்கஅமுக்குங்க.

பி.கு3: ஒன்றுக்கு மேற்பட்ட கதையை இதுவரை எழுதியுள்ளவர்கள், எந்தக் கதை போட்டிக் கதை என்பதை, போட்டி கடைசி நாளான, டிசம்பர் 23க்குள் சொல்லிவிடவும். ஒரு பின்னூட்டமாக சொல்லலாம் அல்லது, கதைக்கு 'சர்வேசன் நச் போட்டிக் கதை'ன்னு 'tag' வச்சிடுங்க.

அனைவருக்கும் நன்றி!

Tuesday, December 11, 2007

ஆல்-இன்-ஆல் அழகுராஜா - ஸோக்கு

எவ்ளோ பேரு வந்தாலும், நம்ம கவுண்டமணி மாதிரி கலக்கல் யாருமில்ல.
கவுண்டருக்கு இணை கவுண்டரேதான்.

இன்னிக்கும், சிரிப்பை வரவழைக்கு நகைச்சுவை காட்சி இது :)



பி.கு: 27 பதிவர்களின் 'நச்' கதைகள படிச்சீங்களா? நீங்க கதை எழுத முயற்சி பண்ணலியா? ட்ரைமுயற்சி பண்ணுங்க. $25 பரிசு பணம் உங்களுக்கும், உங்கள் பெயரில் $75 உதவும் கரங்களுக்கும் செல்ல வாய்ப்புண்டு. சும்மா, ஜாலியா கோதால எறங்குங்க! சேந்து கலக்குவோம்!

Monday, December 10, 2007

உனக்கும் எனக்கும் ஆனந்தம் - கலக்கும் சௌம்யா!

11 வயது சௌம்யாவின் ஒரு வீடியோ தற்செயலா கண்ணுல பட்டுது.

பரதநாட்டியம் உடை போட்டுக்கிட்டு, ஒரு fusion டான்ஸ் ஆடறாங்க.

அமக்களப் படுத்திட்டாங்க!!!

இந்த பாட்டு என்ன படம்? (உனக்கும் எனக்கும் ஆனந்தம்... ஜானகி பாடறாங்களோ?)



பி.கு: 25 பேர் ஆட்டையில் இதுவரை. யார் பேராவது விட்டுப் போச்சுன்னா சொல்லுங்க. சேராதவங்க சேருங்க. எழுதாதவங்க எழுதுங்க, 'நச்'னு ஒரு கதையை.

என் 'நச்' கதைய படிச்சீங்களா?

;)

Sunday, December 09, 2007

'நச்'னு பல கதைகளும், என் 'நச்'னு ஒரு கதையும்.

'நச்'னு ஒரு கதை போட்டி அறிவித்ததில் இருந்து, இதுவரை 20 பேர், நச்சு நச்சுன்னு கதைய பின்னியிருக்காங்க.
ஆட்டையில் பெயர் கொடுக்காமலும், சில பேர் பின்னிட்டு இருக்காங்க. போட்டி முடிவு தேதிக்குள் எந்த கதை, 'நச்சோ நச்'னு கண்டுபிடிச்சு, அந்த கதைய போட்டிக்கு அனுப்புவாங்களாம்.

நீங்க முயற்சி பண்ணலியா?

பரிசு பணம், எவ்ளோ பேர் பங்கு பெறுகிறார்களோ, அந்த அளவு உயரும்னு சொல்லியிருந்தேன் (இப்போதைக்கு, $20ல நிக்குது. $25 வரை போக வாய்ப்பு உள்ளது. $100 பட்ஜெட். மீதமுள்ள $75, உதவும் கரங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்).

போட்டிக்கு பெயர் கொடுத்து, கதையை அனுப்ப வேண்டிய கடைசி தேதி - டிசம்பர் 23 2007 11:59 pm.
மற்ற விவரங்கள் இங்கே. இதுவரை வந்துள்ள கதைகளை படித்து விட்டு, கருத்த அள்ளி வீசுங்க. கதாசிரியர்களை உற்சாகப் படுத்துங்கோ.
நன்றி!

சரி, இப்ப, என் 'நச்' கதைக்கு வருவோம். இதுக்கு முன்னாடியே கேட்ட கதைன்னா, அடிக்க வராதீங்க. (இது போட்டிக்கல்ல ;) ).

சென்னைல பைலட் தியேட்டர் ஒரு காலத்துல ரொம்ப ப்ரபலம்.
அட்டகாசமான ஆங்கிலப் படங்கள் எல்லாம் வரிசையா போடுவாங்க.
Sound-effectsக்காகவே அங்க போய் எல்லாரும் படம் பாப்பாங்க.

Exorcistனு ஒரு பேய் படம் வந்தப்போ, தியேட்டர் நிர்வாகம் ஒரு போட்டி வச்சாங்களாம்.
யார் வந்து, தனியா தியேட்டருக்குள்ள ஒக்காந்து, இந்த படத்தை முழுசா பாத்துட்டு வெளீல வராங்களோ, அவங்களுக்கு 10,000 பரிசுன்னாங்களாம்.

விஷயத்த கேள்விப்பட்ட பலரும், தியேட்டருக்கு வந்து, படம் பாக்க முயற்சி பண்ணாங்களாம்.
பாதி படம் தாண்டரதுக்கு முன்னாலேயே, பயத்துல அலரி அடிச்சுக்கிட்டு ஓடி வந்துட்டாங்களாம்.

படம் பயங்கரமான திகில் படம். கும்பலா பாக்கவே வயத்தக் கலக்கும். தனியா பாக்க யாரால முடியும்?

பத்து நாள் இப்படியே போச்சாம்.
பதினோராவது நாள் பாஸ்கர்னு ஒருத்தர் வந்தாராம்.
'ஐயா நான் தனியா பாக்கறேங்க'ன்னு உள்ள போனாராம்.

அட, இவரு எங்க முழுசா பாக்கப் போறாரு, மத்தவங்க மாதிரியே ஓடி வரப் போறாருன்னு எல்லாரும் நெனச்சாங்களாம்.

ஆனா, 10 நிமிஷம் ஆச்சு, அரை மணி நேரமாச்சு, ஒரு மணி நேரமாச்சு, பாஸ்கர் மத்தவங்க மாதிரி அலரி அடிச்சுட்டு ஓடி வரல.

படம் முடிஞ்சாச்சு.
வெற்றிகரமா பாஸ்கர் பாத்த விஷயம் கேள்விப்பட்டு ஏகப்பட்ட கூட்டம்.
எல்லாரும் கைதட்டி விசிலடிக்க, பாஸ்கர் தியேட்டருக்கு வெளீல வரார்.

முகம், வெளுத்துப் போய், ப்ரமை பிடிச்ச மாதிரி இருக்காரு.
நெத்தியில் வியர்வை கொட்டுது.
மூச்சு இழுத்து இழுத்து விடறாரு.
வெறிச்சு பாத்த மாதிரி தியேட்டர விட்டு வெளீல வராரு.

தியேட்டர் முதலாளியும், பாஸ்கர் "நீ ஜெயிச்சிட்டப்பா"ன்னு அவர் கையில 10,000 ரூபாயை திணிக்கறாரு.

பாஸ்கர் இவங்க பேசிக்கரது எதையும் காதுல போட்டுக்காம நடந்து போயிக்கிட்டே இருக்காரு.

படத்தின் பாதிப்பு இன்னும் அவரை விட்டுப் போகல. ஒரு வித பயமும் கலக்கமும் அவர் கண்ணுல தெரியுது.

நடந்து பஸ்-ஸ்டேண்டுக்கு போயிட்டாரு. யாருகிட்டையும் பேசல.

அந்த நேரம் பாத்து கரெண்ட்டு கட்டாயிடுச்சு.

கும்மிருட்டு.

பஸ்ஸும் வரல.

கொஞ்சம் தூரத்துல பாத்தா ஒரு பஸ்ஸு நிக்கரது தெரியுது.

ஆள் நடமாட்டம் இல்ல, கரெண்ட்டு இல்லாம, இருட்டு சூழ்ந்து இடமே பயங்கரமா இருந்தது.
பாஸ்கருக்கு பயம் ஜாஸ்தியாயிடுச்சு.

பஸ்ஸை நோக்கி ஓடறாரு. பஸ்ஸுக்குள்ள ஏறி ஒக்காந்துட்டாரு.

பஸ்ல, ட்ரைவரையும், கண்டெக்டரையும் காணும்.
வேற ஆளுங்களையும் காணும். காலியா இருந்தது.

சரி, இன்னும் நேரம் ஆகல போலயிருக்கு, வந்துடுவாங்கன்னு, பாஸ்கர் பயத்தோடயே ஒக்காந்துட்டு இருந்தாரு.

பயத்தில், கை கால் உதரல் மட்டும் நிக்கல.

சில்லுனு வெளியில் காத்து.

திடீர்னு பஸ், தானா நகர ஆரம்பித்தது.

பாஸ்கர் பயத்தில் உரைந்தே போனாரு. என்னடா நடக்குது, ட்ரைவரே இல்ல பஸ்ஸு வேர தானா நகருதேன்னு பயத்தின் உச்சத்துல, கை உதற ஆரம்பிச்சது. வேர்த்து கொட்டி, சட்டையெல்லாம் நனஞ்சுடுச்சு.

எழுந்து ஓடிடலாம்னு எழுந்துக்கப் பாத்தாரு.

சில்னு ஒரு கை, தோள் மேல விழுந்தது.

திடுக்கிட்டுப் போய் திரும்பிப் பார்த்தார்.

வெள்ளை சட்டையும், அடர்த்தியா மீசையும், குங்குமப் பொட்டும், தோளில் ஜோல்னா பையும் வச்சுக்கிட்டு ஒருத்தர் பயங்கரமா நின்னுக்கிட்டு இருந்தார்.

"யோவ் சோமாரி. பஸ்ஸு ப்ரேக்டௌன் ஆயிடுச்சுன்னு, நானும் ட்ரைவரும் சேந்துகிட்டு கஷ்டப்பட்டு தள்ளிக்கினு இருக்கோம். நீ சொகுசா வந்து குந்திக்கின. எழுந்து கீழ வந்து தள்ளுய்யா. வந்துட்டானுங்க. சாவு கிராக்கிங்க" என்று மட மட என்று திட்டினார் கண்டெக்டர்!

---- ----- ---- ----

ஹி ஹி!

'நச்'-னு ஒரு கதை எப்படி?
:)

பி.கு1: 'என்' 'நச்'னு ஒரு கதைன்னு போட்டிருக்கக் கூடாது. ஏன்னா இது, 'சபைல' கேட்ட கதை/ஜோக்கு ;)

பி.கு2: அட, நான் 'எழுத்துப்பணி' தொடங்கி ஒரு வருஷம் ஓடிப் போயிடுச்சு. அடேங்கப்பா. வயசாவுது! :)

Saturday, December 08, 2007

சுவாரஸ்யமான ஒரு பதிவு - இங்க் பேனா

சில பேரெல்லாம் எழுதரத பாத்தா ஒரு ஏக்கப் பெருமூச்சுதான் வரும்.
இன்னாமா எழுதராங்க.

இதெல்லாம் அதா வரதுதான் போல?

இங்க பாருங்க தேசிகன்னு ஒருத்தரு, 'இங்க் பேனா' பத்தி விலாவாரியா எழுதியிருக்காரு.

சும்மா நச்னு இருக்கு.

இங்க் பேனா பத்தி எழுதணும்னெல்லாம் எப்படிங்க தோணுது?
அருமை அருமை!

பழைய ஞாபகம் எல்லாம் ஜிவ்வ்வுனு தட்டி விட்டுட்டாரு.

படிச்சு பாருங்க!

;)

பி.கு:
'நச்'னு ஒரு கதை போட்டிக் கதைகள் படிச்சீங்களா? போட்டியில் கலந்துக்காதவங்க உடனே சேருங்க. 'நச்'னு ஒரு கதை எழுதி பதியுங்க. பரிசுப் பணமெல்லாம் உண்டு. கலக்குங்க!

Thursday, December 06, 2007

லஞ்சப் பெருச்சாளிகள் - முடிவுரை!

தஞ்சம் பொழைக்க ஊரு விட்டு ஊரு வந்து பல வருஷம் ஆச்சு.
ஆனாலும், ஒவ்வொரு வருஷமும், விடுமுறையை சென்னையில் கழிப்பது வாடிக்கை. ஒரு வருஷமும் 'மிஸ்' பண்ணதில்லை.

வெளிநாடுகளில் இருக்கும் வசதி வாய்ப்புகள், 'ஈஸி' லைஃப் ஸ்டைல் எல்லாம் பழகப் பழக, நம்மூரில் இருக்கும் பல ப்ரச்சனைகள், பூதாகரமாகத் தோன்றும்.
விடுமுறையில் வரும்போது, நம்மால வீட்ல இருக்கரவங்களுக்கும் 'ஸெம' டார்ச்சர் இருக்கும்.
'இதுல ஏன் இவ்ளோ தூசியா இருக்கு'
'ஏன் குப்பைய வெளீல போடறீங்க'
'எல்லாத்தையும் அடுக்கி நீட்டா வைங்க'
'ஏன் இவ்ளோ எண்ணை சேக்கறீங்க சமையல்ல'
'ட்ரைவர், laneல ஓட்டுங்க சார். ஏன் அலைபாயறீங்க'
'ரெட்ல நில்லுங்க. மத்தவங்க நிக்கலன்னா பரவால்ல. நீங்க நில்லுங்க'
இப்படி கசா முசான்னு எல்லாத்துக்கும் கேள்வி கேட்டு, நம்ம அடைந்த நன்மை, வையகம் பெறட்டும்னு, எல்லாருக்கும், சகட்டு மேனிக்கு, அட்வைஸு அள்ளித் தெளிப்பேன்.
இதனால், எரிச்சல் அடஞ்சவங்க பல பேரு. (தொர வந்துட்டார்யா வந்துட்டார்யா).

ஆனா, இம்முறை வந்த போது, சென்னை ரொம்பவே பிடிச்சு போச்சு.
முக்கிய காரணம், வெயிலே இல்லாத குளு-குளு நாட்கள் அதிகமானதால் இருக்கலாம்.

இதைத்தவிர, ஏகப்பட்ட மாற்றங்கள் ஒரே வருடத்தில்.
சகட்டு மேனிக்கு கட்டப்பட்டுள்ள ஐ.டி.பார்க் என்ன, தெருக்கு தெரு இருக்கும் ஸ்பென்ஸர்ஸ், சுபிக்ஷா, ரிலையன்ஸ் கடைகள் என்ன, வீட்டுக்கு 10 ஸெல் ஃபோன்ஸ் என்ன, 10 நிமிஷத்துக்கு ஒருமுறை வரும் ஃப்ளை-ஓவர்ஸ் என்ன, சிட்டி செண்டர் மாதிரி ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் என்ன, அடேங்கப்பா.

எல்லா பயலும் பி.ஸியா இருக்கான். என்னமா செலவு பண்றாங்க்ய.

$க்கு 39ரூ மாத்திட்டு அலையர நமக்கே முழி பிதுங்குது. ஆனா, லோக்கல் ஆசாமிகள், 100ரூ கொடுத்து, அஸால்ட்டா 'அழு(not ழ)கிய தமிழ் மகன்' பாக்கறான். வாழ்க வளர்க! :)

சரி, இனி 'தலைப்பு' விஷயத்துக்கு வருவோம்.

இந்த முறை சென்னையில் சப்-ரெஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் ஒரு வேலை ஆகவேண்டியிருந்தது. அதை பற்றிய முந்தைய கிருக்கல் இங்கே.

முந்தைய பதிவில் சொன்னதைப் போல, அந்த 'வேலையை' செய்து முடிக்க, லீகலா, ரூ100 fees கட்டி, form பூர்த்தி செய்து கொடுத்தால், 1 மணி நேரத்தில் நமது கைக்குக் கிட்ட வேண்டும்.

ஆனா, எல்லாருக்கும் தெரிஞ்ச மாதிரி, நம்மூரு சப்-ரெஜிஸ்ட்ரார் அலுவலகங்கள் பல, லஞ்சப் பெருச்சாளிகளின் கூடாரம்.
கைநாட்டு வாங்கும் ப்யூன் முதல், சப்-ரெஜிஸ்ட்ரார் வரை, 'மாமூல்' வாங்காமல் மூச்சு கூட விடமாட்டார்கள்.

அப்பப்ப, எவனாவது, விஜிலன்ஸ்ல போட்டுக் கொடுப்பான். விஜிலென்ஸும் திடீர் விசிட் அடிச்சு, ஒருத்தர அரெஸ்ட் பண்ணிட்டுப் போகும், அவரும் அடுத்த நாளே பெயிலில் வந்துடுவாரு. வாடிக்கையா நடக்கரது இந்த கூத்தெல்லாம்.

இப்ப இருக்கர, ரியல் எஸ்டேட் சூட்டில், எல்லாரின் வருமானமும் கொழிக்கிறது.
ஒவ்வொரு வேலைக்கும் ஒரு 'நிர்ணயிக்கப்பட்ட' amountஐ, மொய்ப் பணமாக தானாகவே தந்து விடுகிறார்கள் அனைவரும்.
இதனால், 'கேட்க்கும்' வேலையும் மிச்சம் நம்ம பெருச்சாளிகளுக்கு.

லஞ்சம் வாங்குபவர்களை விட, லஞ்சம் கொடுப்பவர்கள் பெரிய குற்றவாளிகள் என்பது என் எண்ணம். வேல ஈஸியா முடியணும்னு, நம்மளும் கொடுத்து கொடுத்து பழக்கப்படுத்திட்டோம்.
அப்பப்போ, ஏதோ ஒரு நல்லவரு, விஜிலென்ஸு போய், ஒரு ஃப்ரிக்ஷன் கொடுக்கறாரு.
எல்லாரும் விஜிலன்ஸுக்கு போனா, இந்த லஞ்சப் ப்ரச்சனை எப்பவோ முடிந்திருக்கும்.

என் தேவைக்காக நான் சப்-ரெஜிஸ்ட்ரார் அலுவலகம் போகும்போது, தீர்மானமாக, லஞ்சம் கொடுப்பதில்லை என்று முடிவு செய்துவிட்டேன்.

கட்ட வேண்டிய fees மட்டும் கட்டி ஃபார்ம் கொடுத்தா, நெனச்ச மாதிரியே போட்டு அலக்கழிச்சாங்க.
"நாளைக்கு வாங்க ரெடி ஆயிடும்"
"நாளன்னைக்கு வாங்க. ப்ரிண்டர்ல இங்க் இல்ல"
"ப்ரிண்டர் மெக்கானிக் வரல. ரெண்டு நாளு ஆகும்"
"ரெஜிஸ்ட்ரார் ஹெட்.ஆபீஸ் போயிட்டாரு. 4 மணிக்கா வாங்க"
"லா எல்லாம் பேசாதீங்க சார். ப்ரிண்டர் சரியானா கொடுத்துடப் போறோம். போய்ட்டு நாளைக்கு வாங்க"

மூணு நாளு, வீட்டுக்கும் ரெஜிஸ்ட்ரார் ஆபீஸுக்கும், வண்டிக்கு பெட்ரோல் ஊத்தி லோல் பட்டதுக்கு, 'லஞ்சமே' கொடுத்திருக்கலாம்னு, தோணும் அளவுக்கு ஒரு எரிச்சல் உண்டாக்கினாங்க.

விஜிலன்ஸு போற அளவுக்கெல்லாம், மன தைரியமும் இல்ல, நேரமும் இல்ல. விரக்தியின் உச்சத்துக்கே போயிட்டேன். நாலாவது நாள், வழக்கமான பெருச்சாளிகள் சீட்டில் இல்லாத நேரம்.

அலுவலகத்தில் தட்டச்சு செய்யும் இருவரிடம் பேச்சுக் கொடுத்து விஷயத்தைச் சொன்னேன்.
"அடப்பாவமே, இதுக்கா இப்படி இழுத்தடிக்கறாங்க" என்று உண்மையான வருத்தத்துடன் பேசினார்கள்.
"நீ பேசாம அந்த ஃபார்ம் மாதிரியே வெளீல ப்ரிண்ட் பண்ணிட்டு வந்துடு சார்" என்று ஐடியா கொடுத்தார்கள்.
ஆனால், வெளியில் இருந்த ஹெட்-க்ளார்க், அதை உடனே மறுத்துவிட்டார், "அதெல்லாம் செல்லாது, அப்படி பண்ணா" என்றார். (அவரும், மொய்ப்பணம் வராத கடுப்பில் இருப்பது, அவரின் பார்வையிலேயே தெரிந்தது).

மற்ற கீழ்-நிலை அலுவலர்கள், எல்லோரும் விஷயம் அறிந்து, ஆளுக்கொரு அட்வைஸ் கொடுக்க ஆரம்பித்தார்கள்.
"இதே பொழப்பு சார் இவங்களுக்கு. எதையும் சுலுவா முடிக்க வுடமாட்டாங்க. கெட்டு போன ப்ரிண்டர சரி பண்ணாம 10 நாளாச்சு. மெக்கானிக்க கூப்டாதான வருவான். அவசரமா தேவங்கறவங்க, அவங்களே ப்ரிண்டர கொண்டாந்து எடுத்துனு போறாங்க. பேசாம, நீயும் ஒரு ப்ரிண்டர கொண்டாந்துரு " என்ற ரீதியில் ஐடியாக்களும் அங்கலாய்ப்புகளும்.

நானும், மேலே கீழே அலைந்ததில், ப்ரிண்டர் எல்லாம் ஒண்ணும் தேத்த முடியல.

ஒரு வயதான 'தட்டச்சும்' பெண்மணி ஒருவர் வந்து ஒரு பழைய ஃபார்ம் கொடுத்தார். "சார், இதுல இருக்கர மத்த விஷயத்த white-ink போட்டு அழிச்சு, ஒரு xerox எடுத்துட்டு வாங்க. நான் உங்க வெவரத்தை டைப் பண்ணித் தரேன். அத எடுத்துக்கிட்டு போய் கையெழுத்து வாங்கிடலாம். ப்ரிண்டர் வேல செய்யலன்னா, இந்த மாதிரி பண்ணிக் குடுக்கலாம் தப்பில்லல" என்று நம்பிக்கை ஊட்டினார்.

'Customer Service'ன் எல்லைக்கே இட்டுச் சென்றார் அந்தப் பெண்மணி. அவர் அந்த சப்-ரெஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் இருந்து கொண்டு, மொய்ப் பணம் இல்லாமல், இப்படி உதவியது தான் வியப்பிலும் வியப்பு.

நானும், சடுதியில் அவரின் ஐடியாப் படி, white-ink அடித்து, xerox செய்து,அவரிடம் கொண்டு வந்து கொடுக்க, அவரும் ஒரு 30 நிமிடம் மெனக்கட்டு, என் விவரங்களை தட்டச்சிக் கொடுத்தார்.

முடிந்ததும், அதை ரெஜிஸ்ட்ராரிடம் கொடுத்து, கையெழுத்துக் கேட்டேன் "என்ன சார், இப்படி எல்லாம் கொடுக்கக் கூடாது சார். Laserல தான் அடிக்கணும். ப்ரிண்டர் சரியானதும் வாங்க. ரெடி பண்ணிடலாம் வாங்க, என்றார்".

ஜிவ்வ்வ்வ்னு ஏறிச்சு எனக்கு. அடக்கிக் கொண்டு, "அதெல்லாம் பரவால்ல சார். இந்த அளவுக்கு இருந்தா போதும், நான் மெனேஜ் பண்ணிக்கறேன், கையெழுத்துப் போடுங்க" என்றேன்.

வேண்டா வெறுப்பாக, கையெழுத்துப் போட, "லஞ்சப் பணம் கொடுக்காமல்" வேலை முடிந்த சந்தோஷத்தில், எஸ்கேப் ஆனேன்.

லஞ்சப் பெருச்சாளிகள் நிறைந்திருக்கும் இடத்திலும், சில பேர் இன்னும் நேர்மையாகத் தான் இருக்கிறார்கள். ஊர் இன்னும், டோட்டல்-டேமேஜ் ஆகாததுக்கு இந்த மாதிரி நல்லவர்கள் தான் காரணம்.

அதிகப் படியா நேரம் இருந்து, இந்த மாதிரி இன்னொரு காரியம் நடக்கணும்னா, அடுத்த முறை, கண்டிப்பா விஜிலென்ஸு துணையை நாடுவேண்டும் என்று தீர்மானமாக முடிவு செய்திருக்கிறேன். நம்மால் முடிந்த எரிச்சலை நாமும் அவர்களுக்குத் தருவோம்.

எல்லாரும் சேந்து குட்டோ குட்டுனு குட்டுவோம். என்னிக்காவது திருந்துவானுங்க கெரகம் புடிச்சவனுங்க!

உதவிய, அந்த 'வயதான அம்மணிக்கு' என் மனமார்ந்த நன்றிகள்.
திருந்தாத பெருச்சாளிகள், திருந்த, என் கடவுளர்கள் உதவட்டும்.

லஞ்சம் வாங்கும் ஒவ்வொரு கையும், ஏதாவது ஒரு நாள் விளங்காமல் போகட்டும்!
லஞ்சம் கொடுக்கும் ஒவ்வொரு கையும், ஏதாவது ஒரு நாள் நன்றாக வலிக்கட்டும் (ஹி ஹி) :)

விஷயம் தெரிஞ்சவங்க யாராச்சும் (விக்கிபசங்க? மக்கள் சட்டம்??), விஜிலென்ஸு பத்தியும், அங்கு புகார் கொடுக்கும் முறை பற்றியும் விலாவரியா எழுதினா ரொம்ப உபயோகமா இருக்கும். செய்வீங்களா?

நன்றி!

பி.கு: நச்சுனு ஒரு கதைஸ் படிச்சீங்களா படிச்சீங்களா? 19 பேர், இதுவரை கோதாவில். அப்ப நீங்க?

:)

Monday, December 03, 2007

'நச்சுனு ஒரு கதை' - போட்டியும், இதுவரை ஆட்டையில் உள்ள 14 பதிவர்களும்

மொதல்ல இத படிச்சுட்டு வாங்க.

மேலே உள்ள பதிவில் சொன்ன மாதிரி, 'நச்சுனு ஒரு கதை'ப் போட்டி ஒன்றை நடத்த சர்வே கமிட்டியில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

விதிமுறைகள் பெருசா ஒண்ணும் இல்ல, ஆனா கொஞ்சம் கொஞ்சம் இருக்கு:
1) கதை, எதைப் பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். 'சிறு'கதையா இருக்கணும். முக்கியமா, கதை முடிகையில் ஒரு 'நச்' திடீர் திருப்பம் இருக்கணும். (O-Henry turn என்ற திடீர்-திருப்பம் கதையில் முக்கியம். O-Henry turn பற்றிய விளக்கம் இந்த பதிவில்)

2) கதை, இதற்கு முன் எந்த ப்ளாகிலும், பத்திரிகையிலும், சினிமாவிலும், சீரியலிலும்,..., வந்திருக்கக் கூடாது.

3) கதையை உங்கள் ப்ளாகில் எழுதி இங்கே பின்னூட்டணும்.

4) அனுப்ப வேண்டிய கடைசி தேதி டிசம்பர் 23 2007 11:59 pm.

5) ஜனவரி 1 2008 அன்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

6) நடுவர்கள்: வாசகர்கள் அனைவரும். மக்கள் வாக்கின் அடிப்படையில் சிறந்த கதை தேர்ந்தெடுக்கப்படும்.

7) பரிசு: வெற்றி பெறும் கதைக்கு $1 to $25, based on number of participants. If 10 participants, winner will get $10, upto a max of $25 (vow! what a concept :) ). அதைத் தவிர, வெற்றியாளர் பெயரில் $75 (or whatever remains out of $100) "உதவும் கரங்களுக்கு" நன்கொடை வழங்கப்படும்.

7 1/2) ஒருவர் ஒரு கதையை மட்டுமே அனுப்பலாம். நிறைய கற்பனா வளம் உள்ளவர்கள் ரெண்டு மூணு கதைய உங்க பதிவுல எழுதி, எது நல்ல பின்னூட்டங்களை பெறுதோ, அதை இங்கே அனுப்பலாம். :)

** புது வருட தொடக்கத்தில் ஏதாவது ஒரு தொண்டு நிறுவனத்துக்கு, உங்களால் இயன்ற டொனேஷனை அனுப்ப மறவாதீர். வாழ்க வளமுடன்! **

(இதற்கு முந்தைய போட்டியில், பரிசுப் பணத்தை வெற்றியாளர்களுக்கு, பட்டுவாடா செய்த, உள்ளூர் நண்பருக்கு நன்றி. :) ).

போட்டியில் கலந்து கொள்வேன் என்று இதுவரை 14 பேர் சொல்லியிருக்காங்க. சிங்கங்களா, மறக்காம வந்து பேர் சொல்லுங்க. மத்தவங்களும் வாங்க. ஜமாய்ச்சுடலாம். நல்ல கதைகள் படிச்சு, ரொம்ப நாளான மாதிரி இருக்கு.

ஆட்டையில் தெகிரியமாக களம் இறங்கி உள்ளவர்கள், இதுவரை:
1) வினையூக்கி - கதை இங்கே
2) இராம்/Raam - கதை இங்கே
3) 'சிங்கம்' முரளி கண்ணன் - கதை எங்கே??????????
4) TBCD - கதை இங்கே
5) நிலா ரசிகன் - கதை இங்கே
6) மோகந்தாஸ் - கதை இங்கே
7) கார்த்திக் பிரபு - கதை இங்கே
8) கோவி கண்ணன் - கதை இங்கே
9) வீ.எம் - கதை இங்கே
10) பாசமலர் - கதை இங்கே
11) செல்வன் - கதை இங்கே
12) ஜெகதீசன் - கதை இங்கே
13) ramachandranusha(உஷா) - கதை இங்கே
14) இ.கா.வள்ளி - கதை இங்கே
15) கிருஷ்ணா - கதை இங்கே
16) பிரதாப் குமார் சி - கதை இங்கே
17) பெனாத்தல் சுரேஷ் - கதை இங்கே
18) நக்கீரன் - கதை இங்கே
19) ஹரன்பிரசன்னா - கதை இங்கே
20) VSK - கதை இங்கே
21) Rathnesh - கதை இங்கே
22) குட்டீஸ் கார்னர் - கதை இங்கே
23) நாடோடி இலக்கியன் - கதை இங்கே
24) Rama - கதை இங்கே
25) மங்களூர் சிவா - கதை இங்கே
26) கிருத்திகா - கதை இங்கே
27) இலவசக்கொத்தனார் - கதை இங்கே
28) குசும்பன் - கதை இங்கே
29) அரை பிளேடு - கதை இங்கே
30) Divya - கதை இங்கே
31) gils - கதை இங்கே
32) Srikanth - கதை இங்கே
33) சிறில் அலெக்ஸ் - கதை இங்கே
34) வெட்டிப்பயல் - கதை இங்கே
35) Vicky - கதை இங்கே
36) இம்சை அரசி - கதை இங்கே
37) ப்ரசன்னா (குறைகுடம்) - கதை இங்கே
38) கண்மணி - கதை இங்கே
39) வேதா - கதை இங்கே
40) சென்ஷி - கதை இங்கே
41) விட்டுது சிகப்பு - கதை இங்கே
42) ஓகை - கதை இங்கே
43) சதங்கா (Sathanga) - கதை இங்கே
44) செல்வம் - கதை இங்கே
45) அருட்பெருங்கோ - கதை இங்கே
46) drtv - கதை இங்கே
47) Sathiya - கதை இங்கே
48) நந்து f/o நிலா - கதை இங்கே
49) சிந்தாநதி - கதை இங்கே
50) .:: மை ஃபிரண்ட் ::. - கதை இங்கே
51) சரவணா - கதை இங்கே
52) indirasenthilraj - கதை இங்கே
53) தம்பி - கதை இங்கே
54) வவ்வால் - கதை இங்கே
55) சுரேகா - கதை இங்கே
56) My days(Gops) - கதை இங்கே
57) ambi - கதை இங்கே
58) வாக்காளன் - கதை இங்கே
59) Radha Sriram - கதை இங்கே
..
..
?) ???

கதை எழுத Inspirationக்கு செல்வனின், கதை படியுங்க. செல்வன், நீங்களும் ஆட்டையில் குதிக்க வேண்டும், with one more story with a twist :)
G.Ragavanன் கதை இங்கே (போட்டிக்கல்ல ஒரு inspirationக்காக :) )

உங்க கலைக் கண்ணைத் திறங்க. கற்பனா குதிரைய தட்டி விடுங்க. திடீர்-திருப்பத்தோட சும்மா 'நச்சுனு ஒரு கதை' எழுதி பதிவிடுங்க.

கலக்குவோம்!


பி.கு: தலைப்பில் 'நச்சுனு ஒரு கதை -' சேர்க்குமாறு சொல்லியிருந்தேன். அதை தவிர்த்தல் நலம். தலைப்பு இப்படி இருந்தா, ஏதோ ஒரு ட்விஸ்ட் இருக்குன்னு மக்கள்ஸுக்கு தெரிஞ்சு, சுவாரஸ்யம் குறையும் வாய்ப்பு இருக்கு.