recent posts...

Thursday, February 25, 2010

எடுத்த சபதம் முடிப்பேன்

என்னோட ராசி பயங்கரமான ராசி. பங்குச் சந்தைல பூந்து வெளையாட நெனச்சு, ஒரு பங்கை வாங்கினா, நான் வாங்கின அடுத்த நிமிஷம் அந்த கொம்பேனி திவாலாயிடுச்சுன்னு சேதி வரும்.

நான் அடிக்கடி வாங்கர பங்கு, இந்த் மருந்து கொம்பேனிக்களின் பங்குகள்.
கான்சருக்கு மருந்து கண்டுபிடிக்கப் போறோம்னு பீதிய கெளப்பி விட்டுடுவாங்க. சர்ர்ர்னு மேலப் போக ஆரம்பிக்கும். ஆஹா, ஜாக்பாக்ட்தான்னு வாங்கி வைப்பேன்.
அடுத்த நாளே, எங்க மருந்துல அது சரியில்ல இது சரியில்லன்னு அரசாங்கம் சொல்லிடுச்சு, இன்னும் பத்து வருஷம் கழிச்சுதான் அதை சரிசெஞ்சு ரிலீஸ் செய்யமுடியும்னு சொல்லிடுவாங்க.
$100 இருக்கும் பங்கு $0.01 ஆயிடும்.

ஒரு புது டிவியோ காமெராவோ பாத்து பாத்து நெரைய துட்டு போட்டு வாங்கினா, ஒரே மாசத்துல, அந்த மாடலை ஸ்டாப் பண்ணிட்டோம்னு சொல்லிடுவாய்ங்க, நான் வாங்கிய விலையை விட பாதிக்கு வந்துடும்.

சமீபத்தில், சென்னைக்குப் போயிருந்த போது, கார் ஓட்ட முடியாதது பெரிய உபாதையைத் தந்தது. இங்க கியர் இல்லாத, ஆட்டோ-கியர் வண்டி ஓட்டி ஓட்டி, அங்கிருக்கும், கியர் வண்டி ஓட்ட முடியாமல் திணறல். இருக்கர ஒரு மாசத்துல, அத்த கத்துக்கிட்டு, அலப்பர பண்ண முடியாது என்ற யதார்த்த நிலை.

ஒரு நாள், எலெக்ட்ரிக் மீட்டர் செக் பண்ண ஒருத்தர் வந்தாரு. "தம்பி, காரை கொஞ்சம் பின்னாடி எடுத்து வைங்க, மீட்டர் பாக்கணும்"னாரு.
எங்க நைனாவுக்கும் ஓட்ட தெரியாது, எனக்கும் ஓட்டத் தெரியாது.
நம்ம தான் பெரிய NRIஆச்சே, ஓட்டத் தெரியாதுன்னு சொன்னா மானம் போயிருமே. ஜபுர்தஸ்தா சாவிய எடுத்து உள்ள ஒக்காந்து, ரிவர்ஸ்ல கியர போட்டேன்.

இந்த கெரகம் புடிச்ச டீலருங்க, கார் வாங்கினா, ஃப்ரீயா தர ஒரே விஷயம், ரிவர்ஸ் கியர் போட்டா வர, 'பாட்டு ட்யூன்'. முக்கால் வாசி கார், பீதோவனை வாசிக்கும். எங்க நைனா, தேசப்பற்று முத்திப் போனதால், 'வந்தே மாதரம்' போடச் சொல்லியிருந்தாரு. ரிவர்ஸ் கியர் போட்டதும், 'டொ ட டாண் டாண் ட டாண்'ணு வந்தே மாதரம் கத்த ஆரம்பிச்சுடுச்சு.

க்ளெட்ச்ல இருந்து மெதுவா கால் எடுத்ததும், டபக்னு வண்டி நின்னுடுச்சு.

திரும்ப ஸ்டார்ட் பண்ணினா, கியர்ல இருக்கர வண்டி ஒரு அதிரு அதிர்ந்து ஸ்டாப் ஆயிடுச்சு.

அப்பாலிக்கா, நியூட்ரல் போட்டு, ஸ்டார்ட் பண்ணி, ரிவர்ஸ் கியர் போட்டு, கெளெட்ச்சை எடுத்தா, வந்தே மாதரம் பாட ஆரம்பிச்சு, திரும்ப ஆஃப் ஆயிடுச்சு.

ஒரு பத்து தபா குலுங்கி குலுங்கி வண்டி ஆஃப் ஆயிடுச்சு. ஒரு இன்ச் கூட பின்னாடி நகரலை.

மீட்டர் பாக்க வந்தவரு, ஒரு ஏளணமான லுக்கு விட்டாரு. தெருவுல, ரெண்டு மூணு பேரு வேர கூடிட்டாங்க. எதிர் வீட்டு பொடிப் பய, "அண்ணா நான் எடுக்கட்டுமா'ங்கரான்.

நைனா, எப்பவுமே "மவனே, உன்னால் முடியும்"டான்னு சொல்லி ஊக்குவிச்சதே இல்லை. பத்து தபா ஆஃப் ஆக விட்டதே பெருசு. சாதாரண நாட்களில், ரெண்டு தபா ஆஃப் ஆனதும், என்னை எறங்க சொல்லியிருப்பாரு. இன்னிக்கு, மீட்டர் காரன் முன்னால், மானம் போவ வேணாம்னு அவரும் விட்டுப் பிடிச்சாரு போல.

பத்து தபா ஆனதும், நைனாக்கு பொறுக்கலை. ட்ராஃபிக் கான்ஸ்டபில் மாதிரி பின்னாடி நின்னு ரெண்டு கையையும் விரிச்சு என்னை நிறுத்த சொல்லிட்டாரு.

"மவனே, நியூட்ரல்ல போடு,நான் தள்ளறேன்"ன்னுட்டாரு.

'நானும் தள்ளறேன் சார்'னு மீட்டர் காரனும், 'நானும்'னு எதிர் வீட்டு பொடியும், வர, துகிலுரியப்பட்ட திரௌபதி கணக்கா, மானம் காற்றில் பறக்க, ந்யூட்ரலில் போட்டு, வந்தே மாதரம் கேட்டு, ஸ்லோ மோஷனில் காரை பின்னால் கொண்டு போய் நிறுத்தினோம்.

விவரிக்க முடியா அவமானம். கார் நின்னதும், சாவியை ஏளனமாய் பார்த்த நைனா கிட்ட கொடுத்துட்டு, 'மம்மி'ன்னு அலறிக்கிட்டே மாடிக்கு ஓடிட்டேன்.

ச, ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும், கியர் மாத்தி கார் ஓட்ட முடியலன்னா என்ன ப்ரயோஜனம்? அப்ப முடிவு பண்ணேன், அடுத்த் வருஷம் சென்னைக்குப் போறதுக்குள்ள, ஆறு கியர் இருக்கர மாதிரி ஒரு காரை வாங்கி, 1-2-3-4-5-1-ரிவர்ஸ்னு மாத்தி மாத்தி ஓட்டி, நைனாவை திகிலடையச் செய்யணும்னு.
நெக்குலாய் பார்த்த மீட்டர் காரன் மேல், சர்ர்ர்ர்னு ஓட்டி தண்ணியை வாரி இறைக்கணும்னும் ஒரு குட்டி சபதம்.

இந்த சபதத்தை தீர்க்க, சமீபத்தில், ஒரு பழைய கியர் வண்டியை, மலிவு விலையில் வாங்கவும் வாங்கியாச்சு.
இது கத்துக்க ஒரு வண்டிய வாங்கணுமா, இல்ல வாடகைக்கு பிடிச்சா போதுமான்னு யோசிச்சேன். வாங்கி விக்கரதும், வாடகைக்கு செலவு பண்றதும் ஒண்ணுதான்னு பட்சி சொல்லிச்சு.

ஆனா பாருங்க, நான் வாங்கின நேரம், டொயோட்டா கொம்பேனி காரன், பலப் பலப் பிரச்சனைய லைனா சொல்லிக்கிட்டே இருக்கான்.
இந்த ரேஞ்சுல போனா, நான் வாங்குன காரை விக்கரச்ச, சந்தைல ஒரு பயலும், டயோட்டா வாங்க மாட்டான் போலருக்கே...

ஆனா, வண்டி நல்லாத்தேன் ஓடுது. ரெண்டு முணு நாள், அங்கங்க சிக்னல்ல நின்னுடும். திகிலாயிடும். ஆனா, சட்டுனு, ஆன் பண்ணி எஸ்கேப் ஆகிடுவேன். நம்ம ஊரு மாதிரி, "சாவு கிராக்கி நடூ ரோட்ல நிக்கறான் பாரு'ன்னு காது பட திட்ட மாட்டாங்க்ய. மிஞ்சி மிஞ்சி போனா, ஹாரன் அடிச்சு இவிக 'திட்டுவாங்க', நான் காதுல வாங்கிக்கரதுல்லை.
சமீபத்த்தி, ஆஃப் ஆகரதும் கொரஞ்சுடுச்சு, சர்ர்ர்னு ஓட்ட ஆரம்பிச்சுட்டேன்.

அடுத்த சென்னை ட்ரிப்பில், எடுத்த சபதம் முடிப்பேன்.
பி.கு: யப்பாடி, ஒரு கார் ஃபோட்டோ போட, எம்மாம் பெரிய பதிவு எழுத வேண்டியதாயிடுச்சு ;)

கீழ, நம்ம வண்டி. புச்சு, ஆனா பழசு.

Friday, February 12, 2010

உறவுகள் மேம்பட... தத்துவம்பா...

ஈ.மெயில் ஃபார்வர்டாய் வந்தது. எல்லாமே எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்.
வெள்ளிக்கிழமை அதுவுமா, மொக்கை போடலன்னா எப்படி?
அதான், கடையை விரிச்சிட்டுட்டேன்.
படிச்சு, ஜென்மசாபல்யம் அடையுங்கள்.

#12ம் 13ம் நான் அடிக்கடி செய்யும் தவறுகள். திருந்தணும்.


குடும்பத்திலும் சரி அலுவலகத்திலும் சரி மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்க

1. நானே பெரியவன் நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.


2. அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.


3. எந்த விஷயத்தையும் பிரச்சனையையும் நாசுக்காக கையாளுங்கள், விட்டுக்கொடுங்கள்.


4. சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத் தான் ஆகவேண்டும் என்று உணருங்கள்.


5. நீங்கள் சொன்னதே சரி செய்ததே சரி என்று வாதாடாதீர்கள். குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.


6. உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.


7. மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள்.


8. அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்.


9. எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.


10. கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள்.


11. அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள்.


12. உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.


13. மற்றவர் கருத்துக்களில் செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்துக் கொள்ளாதீர்கள்.


14. மற்றவர்களுக்குரிய மரியாதை காட்டவும், இனிய இதமான சொற்களைப் பயன் படுத்தவும் தவறாதீர்கள்.

15. புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்துக் கொள்ளாதீர்கள்.

16. பேச்சிலும் நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும் தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.

17. அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.

18. பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத்துவக்க முன் வாருங்கள்.


- தத்துவஞானி

Monday, February 08, 2010

சிக்கு புக்கு வண்டி

berekeleyல் உள்ள டில்டன் பூங்காவில் உள்ள குட்டி ரயிலில் பயணித்த போது எடுத்தது.

குட்டிப் பாப்பாவின் நைனா, டமில் படிக்க மாட்டார் என்ற ஒரே மன தைரியத்தில் பதிவேற்றப்படுகிறது. யாரும் போட்டுக் கொடுத்துடாதீங்கப்பு.



வண்டிப்படம் தேடினா இதுதான் ஆப்டுது. புச்சா ஏதாவது எடுக்கணும்.

Sunday, February 07, 2010

Motorcycle Diaries



சே குவாரா, அர்ஜேண்டினாவில் பிறந்தவர். பிறப்பெடுத்ததே, புரட்சி செய்வதற்காகத்தான் என்று உணர்த்துவது போல் வாழ்நாள் முழுவதும், ஊர் ஊராகச் சென்று புரட்சி செய்து ரணகளப் படுத்தியவர்.
க்யூபாவின் சுதந்திரத்துக்காக ஃபிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து போரிட்டார். அங்கு வேலை முடிந்ததும், பொலீவியாவுக்குப் போய் அங்கிருந்த அரசுக்கு எதிராகப் போரிட்டார். அமெரிக்க உளவாளிகள் உதவியுடன் பொலீவியா, சே குவாராவை மடக்கி, மரண தண்டனை அளித்து, போட்டுத் தள்ளியது.

பாக்கரதுக்கு ஒரு வசீகரமான வீரத்தனம் இருக்கும் அவர் புகைப்படங்களுக்கு. அவர் நல்லவரா கெட்டவரா என்றெல்லாம் ஆராய்ந்து அறிந்ததில்லை. மேலோட்டமா தேடினா, இருவாரியான கருத்ஸும் இணையத்தில் உலவுகின்றன. அதையெல்லாம், நீங்களே பொறுமையா தேடிப் படிச்சு வரலாறு தெரிஞ்சுக்கோங்க.

போன வாரம், எங்க ஊரு லைப்ரரியில், வழக்கம் போல், ஓ.சி டிவிடிக்களைப் பொறுக்குகையில் (இப்ப ப்ளூ-ரேவும் தராங்க), ஸ்பானிஷ் மொழிப் படமான 'Motorcycle diaries' கண்ணில் பட்டது. டிவிடி கவரில் ரெண்டு பரட்டையர்கள், பழைய மோட்டார் சைக்கிளில் போகும் படம். சுவாரஸ்யமா இருக்கும்னு பட்சி சொன்னதால், எடுத்தாச்சு.

படத்தை பாத்தப்பரம் தான் தெரிஞ்சது, இது, சே குவாராவின், டைரிக் குறிப்பிலிருந்தும், அவரின் பால்ய நண்பர் ஆல்பர்ட்டோவின் புத்தகங்களிலிருந்தும், கிடைத்த நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்னு.

23 வயது எர்னஸ்ட்டோ-சே-குவாரா, டாக்டர் படிப்பு முடித்ததும், தெற்கு அமெரிக்காவின் நீள அகலத்தை, தன் நண்பன் ஆல்பர்ட்டோவுடன் ஒரு மோட்டார் பைக்கில் பயணம் செய்து பார்க்க ஆசைப் படுகிறார். இருவரும், ப்ளான் பண்ணி, பொட்டியை கட்டிக்கிட்டு ஓட்டை பைக்கில் பயணம் செய்கிறார்கள். சென்ற வழியெல்லாம், அவர்களுக்குக் கிட்டும் அனுபவம்தான் படம்.

சுவாரஸ்யமான திரைக்கதை. ஜாலியான் காட்சியமைப்பு.
வழி நெடுகிலும், ஏழைத் தொழிலாளிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் இவரின் மனதில் பாதிப்பை ஏற்படுத்துது.

பயணத்தின் இறுதியில், 'பெரு'வில் உள்ள ஒரு தொழுநோய் காப்பகத்தில் தங்கி சேவை செய்கிறார்கள் நண்பர் இருவரும். ஆச்சரியமான அதிர்ச்சி என்னவென்றால், இதில் நடித்திருக்கும் தொழுநோயாளிகள் நிஜமாகவே தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள். அமேசான் நதியின் அக்கரையில் இருக்கும் இந்த 'லெப்பர்ஸ் காலனியில்' நிஜ சேகுவாராவால், சிகிச்சை அளிக்கப்பட்டவர்களாம்.

படத்தின் கடைசி அரை அணி நேரம், இந்த லெப்பர் காலனியில் தான் நிகழ்கிறது. நானெல்லாம், நமது ரயில் நிலையங்களில் இருக்கும், தொழுநோயாளிகளுக்குப் பிச்சை கூட அளிக்க மனமில்லாமல், முகம் சுளித்து எட்டடி தள்ளி நடந்து பழக்கப்பட்டவன். பிச்சைக் காரர்களுக்குப் பிச்சை அளிக்கக் கூடாது என்ற 'சுலபவழி' திட்டத்தால், அவர்களைப் பற்றி ஒரு செக்கண்ட் கூட யோசிச்சது கிடையாது.

தெரேசா, காந்தியெல்லாம் தொழுநோயாளிகளுக்கு எந்தளவுக்கு உதவியிருக்காங்க, தொழுநோய் காற்றில் பரவாது, தொட்டால் பரவாது போன்ற விஷயங்களெல்லாம், பள்ளியிலேயே சொல்லித் தரப்பட்டிருந்தாலும், ஒரு பயம் கலந்த அறுவருப்பில், இயன்றவரை, அவர்கள் இருக்கும் சுத்துவட்டாரத்தையே தவிர்த்துப் பழக்கப்பட்டுவிட்டோம்.

படத்தில் ஹீரோ, இந்த நிஜ தொழுநோயாளிகளிடம், மிகவும் பிரியமாக நடந்து கொள்வார். சே குவாரா எப்படி வாழ்ந்திருப்பாரோ, அதற்கு ஒரு படி மேலேயே நடிச்சுக் காமிச்சுட்டாரு. நோயாளிகளுடன் கைகுலுக்குவதிலிருந்து, அவர்களுக்கு சிகிச்சை அளித்தல், அவர்களுடன் விளையாடுதல்னு, அநாயாசமா எந்த வித முகச் சுளிவும் இல்லாமல், அருமையா நடிச்சிருக்காரு.

அமேசான் நதியின், அந்தப் பக்கம் தொழுநோயாளிகள் காப்பிடமும், இந்தக் கரையில், டாக்டர் நர்சுகளுக்கான விடுதியும் இருக்கும். இவரின் பிறந்த நாள் கொண்டாட்டம் விடுதியில் நடக்கும். அப்போ, என் பிறந்த நாள் நோயாளிகளுடந்தான் கொண்டாடணும்னு முடிவு பண்ணி, நடு ராத்திரீல, அமெசான் ஆத்துல குதிச்சு நீந்தி அக்கரை போவாரு. அந்த காட்சி நிஜமாவே அமேசான் நதியில், ஹீரோவை நீந்த வச்சு மூணு நாள் எடுத்தாங்களாம்.

ஹீரோவுக்கு, ஆஸ்மா நோய் வேறு இருக்கும். மூச்சுத் திணர திணர அவர் அக்கரைக்கு நீந்திச் செல்லும்போது, லெப்பர் காலனியில் உள்ளவர்கள், அவரை ஆரவாரத்துடன் வரவேற்கும் காட்சி இன்னும் கண்ணில் நிக்குது.

ஆல்பர்ட்டோவுடனான இந்த மோட்டார் சைக்கிள் பயணம் தான், சே குவாராவின் வித்யாசமான வாழ்க்கைப் பயணத்திற்கு அடிக்கல் நாட்டியது.

நல்ல படம். ஒரு தபா பாக்கலாம்.

சே குவாரா சிஷ்யர்கள், டிவிடியை வாங்கி வைத்துக் கொண்டு அடிக்கடி பார்க்கலாம்.

Ernesto Che Guavara. பெருந்தலைவர் போலருக்கு.



பி.கு: அடுத்து ஒரு பெரிய பயணம் ப்ளான் செய்தால், அது அமேசான் நதிக்கரைக்குத்தான் இருக்கும். அருமையா இருக்கு இடங்கள். பாக்கணும் ;)