recent posts...

Monday, April 18, 2011

சீனு - சிறுகதை

தூங்கிக் கொண்டிருந்த சீனுவை முகத்தில் தட்டி எழுப்பினாள் ஜானகி. சீனுவுக்கு ஏழு வயது.

மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன். தூக்கம் முழுதும் கலையாது, அரை மயக்கத்தில் நடப்பது போல் நடந்து சென்றான்.

"சீக்கிரம், நேத்து மாதிரி லேட் பண்ணாம, மட மடன்னு கெளம்பு. ஸ்கூல் பஸ் போயிடுச்சுன்னா, நான் கொண்டு போய் விட முடியாது. எனக்கும் ஆபீஸுக்கு நேரமாவுது" - அலறினாள் ஜானகி அத்தை.

நேற்று ஜானகி, கோபத்தில் காதைத் திருகியது இன்னும் வலித்தது சீனுவுக்கு.

"அம்மாகிட்ட ஜானகி அத்தைய மாட்டி விடணும்" என்று மனதில் நினைத்துக் கொண்டே பள்ளிக்குக் கிளம்பினான் சீனு.

கசங்கிய சட்டை, பெரிய புத்தகப் பை, மதிய உணவுக்கு ஜானகி கட்டித் தந்த ப்ரெட், இவற்றுடன் ஸ்கூல் பஸ்ஸில் ஏறி அமர்ந்தான் சீனு.

பஸ்ஸில் சீனுவை அனைவரும் திரும்பிப் பார்த்து முணு முணுத்தார்கள். எப்பொழுதும் சிடுசிடுவென இருக்கும் பஸ் ட்ரைவர், இன்று, "பை குடுப்பா. இங்க வந்து ஒக்காரு" என்று வாஞ்சயாக சீனுவின் கைபிடித்து அமர்த்திவிட்டார்.

பக்கத்து இருக்கையில் இருந்த ஐந்தாம் வகுப்பு கோமதி, "இந்தா சாப்பிடு" என்று தன்னிடமிரூந்த சாக்லேட் ஒன்றை நீட்டினாள். சீனு, மனதுக்குள் சிரித்தப்படி சந்தோஷமாய் சாக்லெட்டை வாங்கித் தின்றான்.

போன வாரம்தான், சீனுவின் வெள்ளை சட்டையில் ink அடித்து அவனை அழ வைத்தாள் இந்த கோமதி. அம்மாவிடம் கோமதியை மாட்டி விட்டது ஞாபகம் வந்தது சீனுவுக்கு.

கோமதி நீட்டிய சாக்லெட் வாங்கும்போது "கோமதி, good girl. அம்மாகிட்ட சொல்லணும்" என்று மனதுக்குள் சிரித்தான் சீனு.

லலிதா மிஸ், ரொம்ப strict. எல்லோரையும் ஓரு மிருகத்தை படமாக வரைந்து, அந்த மிருகத்தைப் பற்றி ஒரு வாக்கியம் சொல்ல வேண்டும் என்றும் home-work கொடுத்திருந்தார்.

நாய் என்று தலைப்பிட்டு ஏதோ கிறுக்கிக் கொடுத்தான் சீனு. லலிதா மிஸ் சீனுவை பார்த்து, "குட். சீனு. நாய் பத்தி ஏதாவது சொல்லு" என்று சீனுவிடம் கேட்க்க, சீனுவும், "நாய் லொள்னு குரைக்கும். நாய் பூனையை துரத்தும்" என்று சொன்னான்.

லலிதா மிஸ்ஸும் "வெரி குட் சீனு. Children clap your hands for சீனு" என்று சொல்ல எல்லா குழந்தைகளும், கை தட்டியது. சீனுவுக்கு பெருமை தாங்கவில்லை.

லலிதா மிஸ் good சொன்னார்கள் என்ற விஷயம் டாடி கிட்ட இன்னிக்கு சொன்னா, ரொம்ப நாளா கேட்க்கும் சைக்கிள் கட்டாயம் வாங்கிக் கொடுத்திடுவாங்க என்று மனதுக்குள் நினைத்து சிரித்தான்.

மதியம், காஞ்ச ப்ரெட்டை, சாப்பிடாமல் தூக்கிப் போட்டான்.

பள்ளி முடிந்து, மீண்டும் ஸ்கூல் பஸ். கைபிடித்து ஏற்றி விட்ட ட்ரைவர், இன்னொரு சாக்லெட்டுடன் கோமதி, கல கலவென சிரித்தபடி மற்ற பிள்ளைகளுடன் சீனுவும், இன்று நடந்த பள்ளி நிகழ்ச்சிகளை அம்மாவிடம் எப்படி சொல்ல வேண்டும் என்று அசை போட்டபடி வந்தான்.

அவன் இறங்கும் இடம் வந்ததும் குதித்திறங்கி கோமதிக்கு டாடா காட்டினான் சீனு.

தன் இல்லம் நோக்கி ஓடினான். டுர்ர்ர்ர்ர்ர் என்று கார் ஓட்டியபடி வீட்டை அடைந்தான்.

வழக்கமாக கேட்டின் அருகில் நின்று வரவேற்க்கும் அம்மாவை அங்கு காணவில்லை. முகம் சுருங்கியது சீனுவுக்கு. பள்ளீயில் இருந்து வந்ததும் அம்மாவை ஓடிச்சென்று கட்டி அணைத்து அன்று ந்டந்ததெல்லாம் ஒப்பிக்க வேண்டும் சீனுவுக்கு. அம்மாவும் ஆசையாக எல்லா கதையும் கேட்டுக் கொண்டே அவனுக்கு உடை மாற்றி, உணவு ஊட்டுவாள்.

"எங்க போனாங்க இந்த அம்மா" என்று யோசித்தபடி "அம்மா அம்மா" என்று கேட்டுக்கு வெளியில் இருந்து கத்தினான்.

வழக்கத்துக்கு மாறாக கேட் பூட்டியிருந்தது. முற்றம் குப்பையாக இரூந்தது.

இவன் அலறுவதைக் கேட்டு பக்கத்து வீட்டில் வேலை செய்யும் ஜமுனா பாட்டி வந்தாள்.

"டேய் சீனு, இங்க என்னடா பண்ற. போ உங்க அத்த தேடப் போறாங்க. லேட்டா போய் அடிவாங்காத. இனிமே நீ அங்க தான் போகணும். உங்க அம்மாவும், அப்பாவும் சாமி கிட்ட போயிட்டாங்க. சீக்கிரம் அத்த வீட்டுக்கு போ" என்றாள் ஜமுனா பாட்டி.

சீனுவுக்கு அழூகை வந்தது. போன வாரம், அம்மாவும், அப்பாவும் கடைக்கு போய் விட்டு வரும்போது லாரி மோதிவிட்டதால், மாலை போட்டு இருவரையும் முற்றத்தில் படுக்க வைத்திரூந்தது சீனுவுக்கு நினைவுக்கு வந்தது. அம்மாவையும் அப்பாவையும், வெளியே எடுத்துப் போனதும், சீனுவை இவன் மாமாவும் ஜானகி அத்தையும் அவர்கள் வீட்டுக்குக் கூட்டீச் சென்றார்கள். அம்மா எங்க என்போதெல்லாம் நாளைக்கு வருவாங்க என்று சொல்லியிருந்தார் மாமா.

ஜமுனா பாட்டி இனி அம்மா வரமாட்டாங்க என்றதும், அழூகையாய் வந்தது சீனுவுக்கு.

அழூதுகொண்டே பக்கத்துத் தெருவில் இருக்கும் ஜானகி அத்தை வீட்டுக்கு ஓடினான்.

"அத்த அம்மா எப்ப வருவாங்க" என்று அழுது கொண்டே கேட்டான்.

"பெரிய ரோதனடா உன்கிட்ட. இனி வரமாட்டாங்க போ. சாமி கிட்ட போயிட்டாங்க. நீ போய் home work எழூதி முடிச்சுட்டு தொட்டியில இருக்கர செடிக்கு தண்ணி ஊத்து போடா" என்றாள் ஜானகி.

அழுது கொண்டே homework முடித்து, செடிக்கு தண்ணி ஊற்றி, உறங்கப் போனான் சீனு.

அழுத களைப்பில் உடனே உறங்கிப் போனான்.

விழியில் இருந்து மட்டும் நீர் வழிந்து கொண்டே இருந்தது.

ps: totally inspired & lifted from Kewlian Sio's "Lets go home". ஒரிஜினல், ரொம்பவே அருமையான கதை. ஆறாம் வகுப்பில் படித்தது.
மீள்பதிவு: http://neyarviruppam.blogspot.com/2007/03/blog-post_12.html

Saturday, April 09, 2011

சென்னையில் ஒரு கேடுகாலம்...

கடந்த வாரம், அன்னா ஹசாரே, நாட்டின் எதிர்காலத்துக்கு வேண்டிய மிக முக்கியமான ஒரு விஷயத்துக்காக, சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து, இதுவரை நாம் காணாத ஒரு எழுச்சியை அறிமுகப் படுத்தியிருந்தார்.

இதற்கு முன் நாம் கண்ட பெருந்திரளான கூட்டங்கள், ஒன்று அரசியல் கூட்டத்தில், பிரியாணிக்கும், இருபது ரூவாய்க்கும் ஆசைப்பட்டு வரும் சாமான்யனின் கூட்டம். அல்லது, திருவிழாவுக்கு கூடும் பக்த கோடிகளின் கூட்டமாய் இருந்திருக்கும்.

முதல் முறையாக, மொத்த இளைய சமுதாயத்துக்குள்ளும், ஒரு தீப்பொறியை சிதறவிட்டு, தன் பால் இழுத்த பெருமை 72 வயதான இந்த ஹசாரேக்குத் தான் உண்டு.

RTI என்ற தகவல் அறியும் சட்டத்துக்கு வடிவம் தந்ததிலும், இவரின் பங்கு பெரிய பங்கு. அதை மாற்றி அமைத்து பிசுபிசுக்க வைக்கும் அநேகம் அரசு முயற்சிகளுக்கும் எதிராக நின்று அதை தாங்கிப் பிடிப்பதிலும் இவரின் பங்கு பெரியதாம்.

அன்னா ஹசாரே, இந்த 2G ஸ்பெக்ட்ராம் ஊழல் காலக்கட்டத்தில், எடுத்திருக்கும் விஷயம் 'ஜன் லோக்பால்' என்ற சில சட்டத் திறுத்தங்களாம். இதன் விவரங்கள் எல்லாம் இணையத்தில் பரவிக் கிடக்கு. தெரியாதவங்க படிச்சு தெரிஞ்சுக்கோங்க. மிக முக்கியமான விஷயம், நம் புலனாய்வு (CBI) நிறுவனங்க்ளுக்கு சுதந்திரமாய் (autonomy) செயல் பட வழிவகை செய்து கொடுப்பது. அப்பத்தான், கூச்சமே இல்லாமல் தவறு செய்யும் அரசியல் வியாதிகளும் மற்ற பல அரசு அதிகாரிகளையும், தயவு தாட்சண்யம் இல்லாமல், விசாரித்து, அவர்களுக்கு உரிய தண்டனையை உடனுக்குட்ன் வழங்க முடியும்.

போஃபோர்ஸில் துவங்கி, இன்றை 2G Spectrum வரை, இந்த சுதந்திரம் இல்லாத் தன்மையால் தான், யாரும் கம்பி எண்ணாமல் தப்பிக்க முடியும் வாய்ப்பு பிரகாசமாய் இருக்கிறது.

உண்ணாவிரதம் இருந்து, இந்த சட்டத்தை இயற்ற வேண்டும் என்ப்தை வலியுறுத்தி, ஓரளவுக்கு வெறறியும் கண்டுள்ளார் அன்னா ஹசாரே.
தேர்தல் நேரத்தில், ஹசாரேக்காஅ எழுந்துள்ள இளைஞர் எழுச்சி நல்லதல்ல என்று நினைத்தோ என்னமோ சிங்கார், உடனே நிபந்தனைகளுக்கு படிந்துள்ளார். வரும் மாதங்களில் ஜன் லோக் பல், சட்டமாய் இயற்றப்படும் என்றும் கூறியிருக்கிறார்.

போகப் போகத்தான் தெரியும், எந்தளவுக்கு அதில் உண்மை உள்ளதென்று.
ஆனால், ஒரு விஷயம், நிச்சயமாய் தெரியும். இனி, எளிதில், இளிச்சவாயர்கள் ஆகி விடமாட்டோம். அன்னா ஹசாரேவும், அவரின் கூட்டமும், அவர்களை, ட்விட்டரிலும், ஃபேஸ் புக்கிலும் தொடரும் இளைஞர் படையும், விழித்துக் கொண்டு அனைத்தையும் பார்த்துக் கொண்டே இருக்கும், என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த குட்டி வெற்றியை, உலகத்தில் உள்ள பல மூலைகளில் வாழும் இந்தியர்களும் பெருவாரியாக திரண்டு, கொண்டாடிக் குதூகலித்தனர். வெறும் கொண்டாட்டமாய் மட்டும் இல்லாமல், இவர்கள், இதன் அடுத்த கட்டத்தை, நாங்கள் கவனிக்கிறோம் என்ற திடமான செய்தியையும் இதன் மூலம் உலகத்துக்கும் நம் நாட்டாளும் அதிகாரிகளுக்கும் தெரியப் படுத்தினர்.

சிலிக்கான் வாலியில் கூட, ஒரு IndiaAgainstCorruption.Org என்ற குழுமமும், ஏனைய மற்ற இயக்கங்களும், ஒன்று கூடி இன்று குட்டி வெற்றிக் கூட்டத்தைக் கூட்டியிருந்தார்கள்.

நான், இதுநாள் வரை எந்த ஒரு பொது நல விஷயத்துக்கும் சென்று என் நேரத்தை செலுத்தியதில்லை. அதிகபட்சம், சில $களை டொனேஷன் கொடுப்பதும், ரெண்டு மூன்று மரக்கன்றுகளை நட்டதோடு மட்டுமே என் பொது நல வாழ்க்கை நிற்கிறது.
இணையத்தில் கண்ட இந்த எழுச்சி என்னைப் போன்ற சாமான்யர்கள், கிட்டத்தட்ட 500 பேரை இன்று ஒரே நேரத்தில், கலிஃபோர்னியாவில் உள்ள சிலிக்கான் வாலியில பெருந்திரளாய் கூட வைத்தது.
500 பேரும், குட்டி ஊர்வலம், அதைத் தொடர்ந்த ஆரவாரம், பாடல், வருங்காலத் திட்டம் என உபயோகமான மூன்று மணி நேரத்தை செலவிட்டோம்.

இவ்வளவு தூரத்தில் இருக்கும், எங்கூரில் 500 பேரும், டில்லியில் லட்சக் கணக்கிலும், மற்ற நகரஙக்ளில் ஆயிரக் கணக்கிலும் மக்கள் ஒன்று கூடி அவர்களுக்குள் இருக்கும் தீவிரத்தை காட்டிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், 2G Spectrum என்ற வரலாறு காணாத ஊழலின, பிரப்பிடமான சென்னையில், விரல் விட்டும் எண்ணும் அளவுக்கு மட்டுமே சிலர் மெரீனா பீச்சில் காணப்பட்டார்கள்.
NDTVல் செய்தியாளர் சென்னை வாசிகளைக் காட்டும்போது, தாம்பரம் பஸ்ஸ்டாண்டில் நிற்கும் கூட்டம் அளவுக்குக் கூட ஆட்கள் வந்திருக்கவில்லை.
நம் சென்னை வாசிகள், சினிமா மயக்கத்திலும், IPL மயக்கத்திலும், கட்டுண்டு கிடக்கிறார்கள் போலும்.

எந்த அரசியல்வியாதியும், தானாய்த் திருந்தப் போவதில்லை. இந்த மாதிரி நாம் ஒன்று பட்டு, உள்ளேன் ஐயா சொன்னால்தான், கொஞ்சமாவது யோசிப்பாங்க்ய.

இன்னா சென்னை இப்படிப் பண்ணிட்ட? வெளங்குமா?

எங்கூரிலிருந்து, சில எழுச்சிப் படங்கள்: