recent posts...

Sunday, November 30, 2008

மும்பை - புரியாத புதிர்கள்

first things first, மும்பையில் 60 மணி நேரத்துக்கும் மேல் அலைக்கழித்த, தீவிரவாதிகளை வெற்றி கரமாக, வீழ்த்தி, பணயக் கைதிகளை விடுவித்த எமது கமாண்டோக்களுக்கு ஒரு சபாஷும், ஒரு ராயல் சல்யூட்டும்!
இந்த ஆப்ரேஷனில் இன்னுயிரை ஈர்த்த, பொதுஜனத்துக்கும், வெளிநாட்டவருக்கும், போலீஸ், ராணுவ வீரர்களின் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

இதில் ஈடுபட்டு உயிரை இழந்த தீவிரவாத ஆசாமிகளை எண்ணினால், மனதளவில் குழப்பமே மிஞ்சுகிறது. பாக்கிஸ்தான்லேருந்து, கப்பல்ல வந்து, நடுவுல ஒரு மீன் படகை கடத்தி, அதுல இருக்கரவங்க தலைய அறுத்து, மும்பாய்க்குள் புகுந்து, ஹோட்டல், ரயில் நிலையங்களுக்கெல்லாம், குழுவாக சென்று, பலரை கொன்று, 60 மணி நேரங்கள் போராடி தானும் மடிந்து போனானே. எதுக்காக இப்படியெல்லாம் செய்யறான்?

  • மத வெறியா? இப்படியெல்லாம் செஞ்சா கடவுள் தன்னை காப்பாத்துவான்னு நெனைக்கறானா? கண்டிப்பா லேது.
    ரொம்ப சின்ன வயசுப் பசங்க. சொந்த ஊர்ல, வேலையே இல்லாதவங்களாம்.
    பிடிபட்ட, அஜ்மல எடுத்துக்கோங்க. வேலை இல்லாமல், ரொம்ப ரொம்ப ரொம்ப ஏழ்மையில் வாழும் இளைஞன். இவனை 'வசியம்' செய்த தீவிரவாத அமைப்பு என்னா பண்ணாங்க?
    இந்த ஆப்ரேஷனை, 'வெற்றி'கரமா முடிச்சா, இவன் குடும்பத்துக்கு 1 லட்சம் தரேன்னாங்களாம். அது மட்டுமில்லாது, இந்த மிஷன் முடிந்ததும், உயிருடன் திரும்பிவிடலாம்னு, பொய் சொல்லி தான், இந்த மிஷனுக்கே அனுப்பியிருக்காங்களாம்.
    இவனும், குடும்பத்துக்காக, இதை ஏற்றெடுத்து, ரெண்டு மாசம், 'ட்ரெயினிங்' எல்லாம் எடுத்துக்கிட்டு, இந்தியெல்லாம் கத்துக்கிட்டு, இந்த காட்டு மிராண்டித்தனத்துல எறங்கியிருக்கான்.
    ஒரு நிமிஷம், அஜ்மலின் பார்வையிலிருந்து, இவன் செய்ததை யோசித்துப் பாருங்கள்.
    ஏழைகள் இருக்கும்வரை, கேடுகெட்ட தீவிரவாதிகளுக்கு, ஆட்களை வேலைக்கு சேர்ப்பது ஒன்றும் பெரிய மேட்டரே கிடையாது.

  • எல்லாரும், இந்த மாதிரி ஒரு அசம்பாவிதம் நடந்ததும், உடனே, பாக்கிஸ்தானை குத்தம் சொல்ல ஆரம்பிச்சிடறாங்க. ஆனா, பாக்கிஸ்தானிலும் கூட நேத்து 28 பேர் அவுட்டு. 'ethnic violence'ஆம்.
    இந்தியாக்கும், பாக்கிஸ்தானுக்கும் இருப்பது ஒரு பொதுவான எதிரியோ?
    ரெண்டு அரசும் இணைஞ்சு வேல செஞ்சாதான், இதையெல்லாம் கொஞ்சமாவது ஒடுக்க முடியும்.
    இங்க வெடிச்சா உன் குத்தம், அங்க வெடிச்சா இவன் குத்தம்னு மாத்தி மாத்தி கை காமிச்சிக்கிட்டு இருந்தா, தீவிரவாதி, போட்லயும் வருவான், ரோட்லயும் வருவானோ?

  • 'பாக்'னு சொன்னதும் ஞாபகத்துக்கு வர்ரது, நம் பதிவர்கள் மத்தியில் இருக்கும் பிரிவுகள். இஸ்லாமியத் தீவிரவாதிகள்தான் இத்த செஞ்சதுன்னு, செய்திகளுக்கு மேல் செய்திகள், ஆதாரங்களுடன் ஊடகங்களில் அலசப்பட்டாலும், சந்துல சிந்து பாடும் சில பதிவுகள் அங்கங்க எட்டிப் பாக்குது. அதிலும், 'சீரா'ன்னு ஒரு பதிவர், அச்சு அசல், பாக் அனுதாபி மாதிரி ரொம்பவே வெளிப்படையா தன் கருத்ஸை சொல்லிக்கிட்டு வராரு. பேச்சுரிமை, பதிவுரிமை எல்லாம் தேவைதான், ஆனா, சீரா அவர்களே, இது கொஞ்சம் ஓவரா தெரீல? நீங்க மெய்யாலுமே, 'பாக்' தமிழரா, இல்ல 'இந்தியத்' தமிழரா? நல்லாருங்க! :(

  • இங்க அமெரிக்க CNNல், இந்தியாவில் இதற்கு முன் வெடித்த, குண்டுக்கெல்லாம், பெரிய நேரம் ஒதுக்கினதுல்ல. ஆனா, இம்முறை, தாஜ் ஹோட்டல், ஒபேராய்னு நல்ல எரியும் கட்டிடங்கள், 'விஷுவல்' கெடச்சதாலயோ, இல்ல, பிணைக் கைதிகள்னு ட்ராமா எல்லாம் இருந்ததால் வந்த ஈர்ப்பான்னு தெரீல, ரொம்ப நேரம் மும்பைக்கு நேரத்த செலவு பண்ணாங்க.
    CNN தொகுப்பாளினியின், கொமட்லயே குத்தலாம்னு பல தடவை தோணிச்சு. ஒரு விஷூவலில், ஒரு கமாண்டோ, ஜன்னலை பார்த்து குறி எல்லாம் பாக்காம, சும்மாக்காட்டி சுட்டுக்கினே இருந்தாரு. அவரு அப்படி சுடரதுக்கு, பல காரணம் இருந்திருக்கலாம். அதாவது, தீவிரவாதிகளின் கவனத்தை திருப்பவோ, இல்லை வேர ஏதாவது, pre-planned காரணம் கண்டிப்பா இருக்கும்.
    ஆனா, இந்த தொகுப்பாளினி, நம் கமாண்டோக்கு மேட்டரே தெரியாதுன்ர மாதிரியும், இந்த மாதிரி irresponsibleஆ சுட்டதாலதான், உள்ள இருந்த, jew பாதிரியார் செத்துட்டாரோன்ர ரீதியில் வுளரிக் கொட்டிக்கொண்டு இருந்தாள்.
    இந்த அமெரிக்க துரைகளுக்கு, இந்தியர்கள் என்றால் இன்னும் கிள்ளுகீரை, snake charmersங்கர எண்ணம்தான் அதிகமா இருக்கோ?
    இதற்கு பெரும்பான்மையான காரணம், நம்ம ஊரு 'ஆங்கில' சினிமாக்கார்களாகக் கூட இருக்கும். ஷ்யாம் பெனிகல் போன்ற ஆளுங்க, இந்தியாவ காட்டினாலே, புழுதி பறக்கும் கொல்காத்தாவும், சாக்கடையையும், பிச்சைக்காரனையும் மட்டுமே ப்ரதானப் படுத்திக் காட்டறாங்களே, அதனால் தான் இப்படியோ?

  • இவ்வளவு நடந்ததுக்கப்பரமும், மும்பை மக்கள் அமைதியா, ஒரு ஊர்வலம் போய், தங்களின், solidarityயை நிரூபித்திருப்பது பாராட்டத்தக்கது.
    மீண்டும் வென்றது, மும்பை!
    Barely a mile away, the Leopold cafe, which was sprayed with gunfire by the terrorists, reopened briefly yesterday for a few minutes, with cheers greeting its owners serving beer.
    "I want them [the attackers] to feel we have won, they have lost," its manager, Farzad Jehani, said of the symbolic opening. "We're back in action."


  • NDTV, CNN IBN எல்லாம் பொறுப்பா நடக்க வேண்டிய நேரம் இது. எந்த 'ரத்தக் கொதிப்பு' அரைவேக்காடுகளையும் பேட்டி எல்லாம் எடுத்து போடக் கூடாது. ஏதோ ஒரு நடிகை, தன் வீட்டருகே இருக்கும், இஸ்லாமியர்களை குற்றம் சுமத்தினாராம். அவங்க வீட்ல எல்லாம், பாக்கிஸ்தான் கொடி பறக்க விட்டிருக்காங்களாம்.
    அடக் கொடுமையே, இஸ்லாமியர்கள், தங்கள் வீடுகளிலும், மசூதியிலும், ஏற்றி வைத்துள்ள பச்சைக் கொடியை, பாக்கி கொடின்னு நெனச்சுக்கிட்டு, அந்த நடிகை லூஸ் மாதிரி பெனாத்துவதெல்லாம், டெலிகாஸ்ட் செய்யக் கூடாதோ?

  • அத்வானி வகையராக்கள், ஒரு மேட்டர் கிடைத்ததே என்று, வாயில் வருவதையெல்லாம் பினாத்துவதும், சகிக்கலை. பேச்சுவார்த்தை எல்லாம் பத்தாதாம். அதையும் தாண்டி ஏதாவது செய்யணுமாம். எல்லாம் ரைட்டுதான். நீங்களும் ஆட்சியில் இருந்தீங்களே சாரே, அப்பவே எல்லாத்தையும் முறி அடிச்சிருந்தீங்கன்னா இப்ப ப்ரச்சனையே இருந்திருக்காதே. தேவையில்லாம ஒரு மசூதியை இடிச்சு, ஒரு சில அல்ப ஆதாயங்களுக்காக, பல லட்சம் ப்ரச்சனைகளை, நிமிண்டி விட்ட கட்சிதான உங்களது?
    இன்னொரு பக்கம், சங் பரிவாரும், இந்துத்வா தீவிரவாதமும் வளர்ந்து வருகிறது. இதையெல்லாம் முளையிலேயே கிள்ளி எறியலன்னா, வருங்கால இந்தியா இன்னொரு ஆப்கானிஸ்தானாக முடியும் அபாயம் இருக்கு.
    அரசியல் தலைகளே, எங்க பணத்தை கொள்ளை அடிங்க. நாட்டுக்கு ஒரு மண்ணாங்கட்டி நல்லதும் பெருசா செஞ்சு தியாகிகள் எல்லாம் ஆக வேணாம். ஆனா, இந்த விஷங்களை எல்லாம், இரு தரப்பிலும் வளர விடாமல், நசுக்கி மிதித்து பொசுக்கி விடுங்கள்.
    'எதிர்கால' இந்தியா பத்தி, 'பகீர்'னு, நெஞ்சடைக்கும் பயம், அப்பப்ப வருதா உங்களுக்கும்?

    India salutes its heroes.


    பி.கு: இந்த குழப்பங்களுக்கு நடுவில், சென்னையின் அடைமழை, அதைத் தொடர்ந்த ப்ரச்சனைகள் எல்லாம் இருட்டித்து விட்டது. ஆனா, மும்பையினரின் கஷ்டத்தைப் பார்க்கும்போது, தண்ணிப் ப்ரச்சனை ஒரு மேட்டரே இல்லன்னும் தோணுது. சென்னை தெருக்களும் வீடுகளும், நீரில் மூழ்கி, கொஞ்ச நாள்ள காஞ்சுடும். நாமளும், அடுத்த மழை வரைக்கும், ப்ரச்சனையின் 'வேரை' ஆராயாமல், அடுத்த பொழப்ப பாக்க போயிடுவோம்.
  • Wednesday, November 26, 2008

    Mumbai will survive

    என்ன தான்டா வேணும் உங்களுக்குன்னு அலரணும் போல் தோணினாலும், சமீபத்தில் பார்த்த, மும்பை மேரி ஜான், ஆமிர், A wednesday, போன்ற படங்கள், இந்த குண்டு வெடிப்பை அணுகியிருந்த, மெச்சூர்ட் அப்ரோச்சினால், சத்தம் போடாம, மனசுக்குள்ளையே அந்த கேள்வியை கேட்டுக்கிட்டேன்.

    2006ன் தொடர் குண்டு வெடிப்புக்குப் பிறகு, மும்பை மக்கள் எப்படி, கொஞ்சம் கூட 'அசராமல்' தங்கள் நார்மல் வாழ்க்கையை நடத்தினார்கள்னு, மும்பை மேரி ஜான், சொல்லிச்சு.

    ஆமிர், என்ற படம், ஒரு நல்ல இஸ்லாமியன் எப்படி, சில தீவிரவாதிகளிடம் சிக்கி, ஒரு பேருந்தில் வெடிகுண்டு வைக்க பணிக்கப்படுகிறான் என்று அலசியிருந்தது. இறுதியில், மனிதம் வென்றது. ஆமிர், பேருந்தில் குண்டு வைக்காமல், மனம் மாறி, குண்டை வெளியில் போட்டு, தானும் இறக்கிறான்.

    A Wednesday, என்ற படத்தில் நஸ்ருதின் ஷா, ஒரு சாமான்யனுக்கு, நம்மைப் போல் வரும் எரிச்சலை வெளிப்படுத்துகிறார். என்ன மண்ணாங்கட்டி அரசாங்க, மிலிட்டரி, ரா, போலீஸு, லொட்டு லொசுக்கெல்லாம் இருந்து என்னாத்த கழட்டறாங்க. வேலை வாய்ப்பு, சாப்பாடு, அடிப்படை வசதி எல்லாம் செஞ்சுக் குடுக்கலன்னாலும் பரவால்ல, தலையெழுத்துன்னு விட்டுடலாம், ஆனா, குடிமகனின் உயிரை காப்பாத்த வக்கில்லாம இருந்தா என்ன பண்றது? கண்ட பரதேசியும், இந்த மாதிரி குண்டு வைத்து கொல்லவா, கனவுகளும், எதிர்பார்புகளுடனும் எல்லாரும் வளர்ராங்க? ஒவ்வொரூ நாளும், தன் பிள்ளையை பள்ளிக்கு அனுப்பும் தாய், கணவனை அலுவலகத்துக்கு அனுப்பும் மனைவி, சென்றவர் திரும்பி வருவாரா என்ற நிச்சயம் இல்லாமல் வாழ்தல் கொடுமை இல்லியா?
    சாமான்யன் எரிச்சலடைந்தால், என்னாகும்? நஸ்ருதின் ஷா, நச்னு சில விஷயங்கள் செஞ்சு அசத்துவாரு.

    மும்பை, அருமையான நகரம்.
    ஒரு மாசம் அங்க வேலை செஞ்சிருக்கேன். சில வங்கிகளில் வேலை. அருமையான ஒரு மாதம் அது. தினமும் ராத்திரி, Gateway அருகில் நடந்து, சோளமும், கடலையும் கொரித்தது, சிறுவர் முதல் பெரியவர் வரை, அங்கே ஜாகிங் வருவது, வேடிக்கை பார்த்தல், எல்லாம் ஜாலியான நாட்கள்.
    சுறுசுறுப்பானவங்க பாம்பே காரங்க.
    டிசிப்ளின் ஜாஸ்தி. மாநில பேருந்தில் பயணிக்க, எவ்ளோ கூட்டம் இருந்தாலும், க்யூல நிப்பாங்க. அதட்டி க்யூல நிக்க வைக்க போலீஸெல்லாம் இருக்க மாட்டாங்க, இவங்களே, தானா பெரிய க்யூல நிப்பாங்க. பஸ் வந்ததும், ஸ்கூல் பசங்க மாதிரி ஏறுவாங்க.
    வங்கி சீஃப் மேனேஜர் முதல், ப்யூன் வரை, ரயிலை பயன் படுத்துவார்கள்.

    மும்பையில் மீண்டும், விஷமிகளின் ஆட்டம் நடந்திருக்கிறது.
    எப்பவுமே, குண்டு வச்சுட்டு, எஸ்கேப் ஆகர வீரர்கள், இம்முறை, ஏ.கே47 எல்லாம் தூக்கிக்கிட்டு பலரை சுட்டுருக்காங்க.

    இதுக்கெல்லாம் அரசாங்கம் என்ன பண்ண முடியும்?

    சில கழிசடைகள், ஏ.கே47 எல்லாம் வச்சுக்கிட்டு, மற கழண்டு இப்படி செய்தால், இதை எல்லாம் தடுக்க முடியுமா என்ன?

    மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள், தானே புத்தி வந்து, திருந்தினாதான் உண்டு.

    ஆனா, எவ்வளவு விஷமிகள் வந்தாலும், குண்டுகளைப் போட்டாலும், மும்பை அசராது.
    அது தன் வழியில், சென்று கொண்டேதான் இருக்கும்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து, மனிதச்சங்கிளியும், மௌன ஊர்வலங்களும், அவசியம்.

    அப்பதான், வெளி உலகுக்கும், இந்த பேடிகளுக்கும், புரியும், we will surviveனு.

    ஜெய்ஹிந்த்!



    :(

    Tuesday, November 25, 2008

    முத்துக்களும் பாவக் கணக்கும்...

    அத்தனையும் முத்துக்கள்னு ஒரு பதிவப் போட்டு, சமீபத்தில் வாங்கிய முத்து மாலையை, கட்டம் கட்டி எடுத்த புகைப்படங்களைப் வலை ஏத்தியிருந்தேன். அந்தப் பதிவில், அந்த மாலையை வாங்கிய கதையை சொல்றேன்னு சொல்லியிருந்தேன்.
    முத்து வாங்கரத பத்தி எனக்கு ஒரு விஷயமும் தெரியாது. அலுவலகத்தில் உள்ள சில எக்ஸ்பேர்ட்ஸ் கிட்ட கேட்டு இந்த பக்கத்தில் வாங்கியதுதான்.

    அப்பரம் என்னாத்துக்கு, 'கதையை' சொல்றேன்னு சொன்னன்னு கேக்கறீங்களா?

    விஷயத்துக்கு வரேன்.

    எனக்கு இந்த நகை நட்டு வாங்கரதுல எல்லாம் பெரிய இன்வால்வ்மெண்ட் இல்லை. (அதெல்லாம் உனக்கு எதுக்கு? இன்வால்வ்மெண்ட் இருக்கரவங்களுக்கு வாங்கிக் கொடுக்கரதோட நம்ம வேலை முடியுதுங்கறீங்களா?)

    அதிலும், குறிப்பா, இந்த வைரம், முத்துக்கள் எல்லாம், கொஞ்சமும் பிடிக்காத விஷயம்.

    நிஜ வைரம், Blood Diamond போன்ற படங்களில் சுட்டிக் காட்டியபடி, தீவிரவாதிகளுக்கு துப்பாக்கி/குண்டுகள் வாங்கவும், சிறுவர்களையும், ஏழைகளையும் அடிமைகளாக உருவாக்கவும், மட்டுமே பெருமளவு பயன்படுகிறது.
    இந்த விஷயமெல்லாம் தெரிஞ்சதும், வைரத்துக்காக செலவு செய்ய, (அது என்னதான் நல்ல இன்வெஸ்ட்மெண்ட்டா இருந்தாலும்), மனது ஒத்துழைப்பதில்லை.

    முத்து என்ன பாவம் செஞ்சுச்சு?

    முத்து தனிக்கதை. உயிர் சம்பந்தப்பட்டது. வைரத்தை விடக் கொடுமை :)

    நிஜ முத்து எப்படி உருவாகுது?

    நீரில் வாழும் சிப்பிகள் (oysters), தன் உடம்புக்குள் புகுந்து கொள்ளும் 'ஒட்டுயிர்'களை (parasites) அழிக்க, ஒரு திரவத்தை உற்பத்தி பண்ணும். அந்த திரவம், ஒட்டுயிரை சூழ்ந்து கொண்டு கொன்று விடும். இந்த திரவம் தான் சில வருஷங்களில் கெட்டியாகி, முத்தாகிறது.
    இப்படி இயற்கையில் உருவாகும் முத்துக்களில், அழகான வட்ட வடிவம் கிடைப்பது, மிக அரிதான விஷயம்.
    அப்படி கிடைத்தா, அதன் விலை, பல ஆயிரங்கள் முதல், சில லட்சங்கள் வரைக்கும் கூட இருக்கும்.

    எல்லாருக்கும் முத்து கெடைக்க என்ன வழின்னு யோசிச்ச, ஜப்பானிய மூளை ஒண்ணு, ஒரு சிப்பிய புடிச்சு, அதன் ஓட்டை கீரி, அதனுள், ஒரு ஒட்டுயிரை, இவரே போட்டாராம்.
    அப்பரம் என்ன, அப்பாவியான சிப்பியார், ஐயையோ, நமக்கு ஜொரம் வந்துடுச்சு, ஒட்டுயிரை அழிக்கணும்னு, அந்த திரவத்தை உற்பத்தி பண்ணி, முத்தை உருவாக்கிக் கொடுத்ததாம்.

    மேட்டர் சூப்பரா வர்க்-அவுட் ஆயிடுச்சேன்னு, ஜப்பானிய தொரை, ஆடு மாடு கோழி மீன் வளக்கர மாதிரி, சிப்பிகளை வளத்து, ஒவ்வொண்ணுத்தையும் கீரி, அதுக்குள்ள ஒரு ஒட்டுயிரை ஊசி போட்டு, மூணு வருஷத்துக்கு ஒரு தரம், முத்து அறுவடை செய்ய ஆரம்பிச்சாராம். மேலும் மேட்டர்ஸ் இங்கே.

    ஸோ, ஒவ்வொரு குட்டி முத்துக்கும், ஒரு உயிர் பலியாகுது.

    உனக்கேன் இவ்வளவு அக்கரை? உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கரை? என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநலம் என்பீர்கள். என் சுயநலத்தில் பொது நலமும் கலந்திருக்கிறது......
    வூட்ல இனி யாராச்சும், முத்து வேணும்னு கேட்டா, மேலே இருப்பதைச் சொல்லி, எஸ்கேப்ப முடீதான்னு பாருங்க.

    ஆடு, மாடு, கோழி, மீனெல்லாம், மசாலா தடவி சாப்பிடும்போது, இந்த 'அக்கரை' உனக்கு வரலியேன்னு, உங்கள்ள சில பேர் என்னைக் கேட்பது புரீது.
    அது என்னமோ தெரீல, என்ன மாயமோ புரீல, சிக்கன் மட்டும் சலிக்கவே மாட்டேங்குது.

    ஏக்சுவலி, அமெரிக்கால, ஆடு,மாடு,கோழி எல்லாம் வளக்கர விதம் பத்தி விலாவாரியா நான் சொன்னேன்னா, ஒருத்தரும், முட்டை கூட சாப்பிட மாட்டீங்க.
    கூடிய விரைவில், திகிலும், பல திருப்பங்களும் நிறைந்த அந்தப் பதிவுடன் சந்திக்கிறேன்.



    ;)


    பின்னூட்டம், பரிந்துரை இதெல்லாம், பாத்து பண்ணீங்கன்னா, முத்து வாங்கின பாவம் போகும், உங்களுக்கு ;)

    Monday, November 24, 2008

    லிங்க்குகிறேன், சில பதிவுகளை...

    சமீபத்தில் படித்த சில பதிவுகளும், என் கமெண்ட்டுகளும், நன்றி நவில்தல்களும், சிண்டு முடிதல்களும்,... பாப்பமா?

    1) முதலில், 'முத்துச்சரம்' ராமலக்ஷ்மிக்கு கோடானு கோடி நன்றீஸ். தன் ப்ரொஃபைலில் என் 'முத்துச்சர'ப் புகைப்படத்தை பயன்படுத்தி என் படத்தை கௌரவப் படுத்தியதர்க்காக ;)
    இதற்கு முன் என் 'கோலங்கள்' படத்தை ப்ரொஃபைலில் சேர்த்துக் கொண்ட சேதுக்கரசிக்கும், இக்கணம், பப்ளிக்கா நன்றீஸ் சொல்லிக்கிறேன் ;)

    2) தன் மூணு மாச குழைந்துக்கு என்ன பாட்டை தாலாட்டு பாடலாம்னு, கைப்ஸ் ஐடியா கேக்கறாரு. சினிமால, இவ்ளோ சின்னக் குழந்தைக்கு பாடர மாதிரி தாலாட்டு ஏதும் இல்லியாம்.
    கைப்ஸ், மொதல்ல, நீங்க உங்களுக்குத் தெரிஞ்ச ஏதாச்சும் தாலாட்டை பாடி, எங்களுக்கு போட்டுக் காமிங்க. அதுக்கப்பரம், நீங்க ஒங்க கொழந்தைக்கு தாலாட்டு பாடி, டார்ச்சர் பண்ணலாமான்னு வேணாமான்னு நாங்க சொல்றோம்.
    (பதிவில், வடகரை வேலனின், கமெண்ட்டு ஜூப்பரு - அவரு இன்னா சொல்றாருன்னா..
    ஆனாலும் அர்ச்சனாவை இம்புட்டு சோதனைக்கு இப்பவே உள்ளாக்கனுமா. கொஞ்சம் இரக்கம் வையுங்க. பாவம்.
    இந்தக் கொடுமைக்குத் தூங்கிற மாதிரி நடிக்கலாம்னு நடிச்சிருக்கும் உங்க குழந்தை.
    )

    3) பரிசல்காரனின் அவியல் பதிவில் வரும் குட்டி குட்டி துணுக்குகள் நல்லாருக்கும். தொடர்ந்து கலக்கறாரு. சமீபத்திய அவியலில், cable sankarன் பின்னூட்டம் பாத்தேன். ஆமா, இவங்க ரெண்டு பேரும் ஏதோ குறும்பட மேட்டர்ல முட்டிக்கல? அதுக்குள்ள பழம் விட்டுட்டாங்களா? ;)
    நல்லா, எல்லாரும் சேந்து இருந்தா, சந்தோஷம்தான். சும்மா தெரிஞ்சுக்கலாம்னு கேட்டேன் ;)

    4) Rappன் வாரணம் ஆயிரம் விமர்சனம் அமக்களம். ஆனா, அவங்களுக்கு, படம் அவ்வளவா பிடிக்கலையாம். என்ன கொடுமைங்க இது?
    சமீரா ரெட்டி, 'போந்தான்' மாதிரி இருக்காங்களாம்? அது நல்லதா கெட்டதா? கெட்டதா இருந்தா, நானும் குசும்பனும், காசு கலெக்ட் பண்ணி, இனி உங்களுக்கு பின்னூட்டம் வராத மாதிரி செஞ்சுருவோம். சாக்குரத.
    நான் விமர்சனம் எழுதினா, மூணு நாலு பேர் வந்து, நலம் விசாரிச்சிட்டு போறாங்க. நீங்க எத எழுதினாலும் 200 பேர் வராங்களே. என்ன கொடுமைங்க இது?
    ஊருக்குள், பொருளாதார வீக்கத்தால், ஐ.டி காரனை எல்லாரும் திட்ற மாதிரி, பதிவுலக பின்னூட்ட வீக்கத்தால், உங்களை டரியல் பண்ண ஆள் சேரும் அபாயம் இருக்கு, சாக்குரத ;)

    5) சட்டக் கல்லூரி மேட்டரின், ஆணி வேர் மேட்டரை அலசி ஆராஞ்சு, பிரிச்சு மேஞ்சு ஒருத்தர் ஜ்யோவ்ராம் சுந்தர்'க்கு அனுப்பியிருக்காரு. மேட்டர் எல்லாம் நல்லாதான் இருந்துச்சு. ஆனா, சந்தடி சாக்குல, சம்பந்தமே இல்லாம, கௌதம் மேனனை வம்புக்கிழுத்திருப்பதை நான் கன்னா பின்னான்னு கண்டனம் செய்கிறேன்.
    நான் பின்னூட்டத்துல, அடிச்சவன் மேலையும் தப்பு, அடிவாங்கினவன் மேலயும் தப்புன்னு சொல்லி ரெண்டு பேரையும் உள்ளப் போடுங்கன்னா, prognosticனு ஒரு பதிவர் வந்து, எனக்கு வரலாறு தெரீலன்னு திட்டிட்டுப் போயட்டாரு. நல்லா இருங்கய்யா. சொன்னா தெரிஞ்சுக்குவோம்ல ;(

    6) தமிழ்மண நிர்வாகிகள், ஒரு கண்டிப்பான பேராசிரியர் தொனியில் இது நாள் வரை இருந்தவர்கள். இப்ப திடீர்னு, மொக்கை போட ஆரம்பிச்சிருப்பது, சகிக்கலை. ஒரு 'இது' கொறஞ்சிடும், 'கெத்த' மெயிண்டெயின் பண்ணுங்க, அப்பதான் நல்லது.
    'சூடான' இடுகைகள், வருது, போவுது, வருது, போவுது - என்னதான் நடக்குது? கண்டிப்பா இருக்கும்னு தெரிஞ்சா, இந்தப் பதிவுக்கு, 'ச, என்ன பதிவர்கள் இவர்களெல்லாம்?'னு ஏதாவது பில்ட்-அப் கொடுத்திருப்பேன்.

    7) நண்பன் ஷாஜியின் பதிவுகள் அருமையா இருக்கு. சமீபத்தில் மைக்கேல் ஜாக்ஸன் இஸ்லாத்தில் இணைந்ததைப் பத்தி போட்டிருக்காரு. பல பெரும் தலைகள், இஸ்லாமியர்கள் ஆனதும், நல்வழியில் சென்றதாய் உதாரணங்கள் கொடுத்திருக்காரு. தல ஜாக்ஸனும், கொஞ்சம் மாறி, மீண்டும் பழைய ஜாக்ஸனாய், புதுப் பாடல்கள் கொடுத்தால், சந்தோஷமே.
    வணக்கம் சொல்றது தப்பான்னு ஒரு பதிவு போட்டிருக்காரு. interesting.

    8) எனக்குத் தெரிஞ்சு பதிவர்கள்ளையே, ஜார்ஜ் புஷ்ஷை, நல்லவரு வல்லவருன்னு நெனைக்கர ஒரே ஆளு நம்ம VSK சார்தான். அவரின் புஷ் பற்றிய, நிலைப்பாடை பதிவா போடுவாருன்னு ரொம்ப நாள் வெயிட்டிங்க். VSK, மனசு வைங்க. :)

    இடைச்சொறுகல்:
    9) பதிவு போதை ரமேஷ் பத்தி எழுத மறந்துட்டேன். ஒரு நாளைக்கு 18 பதிவு, குட்டி குட்டியா போடறாரு. சிலது நல்லாருக்கு, பலது, சும்மா, ஐ.எம் மாதிரி இருக்கு.
    ஆனா, கவனிச்ச பெரிய மேட்டர் இன்னான்னா, இவரு கூட பாடிகார்ட்ஸ் இருக்காங்களாம், இவரு கோடிகளில்தான் பிஸினெஸ் செய்யராராம், இவருக்கு போலீஸ்ல எல்லாம் ஃப்ரெண்ட்ஸ் உண்டாம். மெய்யாலுமா?
    உஷாரு ;)


    இப்போதைக்கு அம்புடுதேன்!

    ;)

    Sunday, November 23, 2008

    அத்தனையும் முத்துக்கள்...

    சுடச்சுட இப்பதான் எடுத்தது... குறை நிறைகளைச் சொல்லுங்க.

    இத வாங்கின கதை விலாவாரியா நாளை வரும். இப்போதைக்கு படங்கள் மட்டும் ;)

    படத்தின் மேல் கிளிக்கினால் ஃப்ளிக்கர் பக்கத்தில் பெருசா பாக்கலாம்.

    1. அத்தனையும் முத்துக்கள் ( ஏழைகளின் மேக்ரோ லென்ஸ்ஸில் எடுத்தது )



    2. முத்துச்சரம்1



    3. முத்துச்சரம்2

    Tuesday, November 18, 2008

    மும்பை மேரி ஜான் - திரைப் பார்வை

    "ஒரு நல்ல படம், ஒரு நல்ல full meals திருப்தியா சாப்பிட்ட ஃபீல் தரணம்"னு, ஸ்பீல்பார்க் சொன்னார்னு, நான் ஒரு மீட்டிங்கின் போது, ரீல் விட்டிருக்கிறேன்.
    அதாவது, சாப்பிட்டு முடிச்ச சில மணி நேரங்களுக்குப் பின்னும், கைமணமும், வாயில் சுவையும் விட்டு வைக்கணும்.
    அந்த மாதிரியே, நல்ல படங்கள், நம்மை கொஞ்ச நேரமாவது யோசிக்க வைக்கணும்.

    "மும்பை மேரி ஜான்" என்ற ஹிந்திப் படம், இந்த வகையைச் சேர்ந்தது.
    மும்பையில் 2006ல் நிகழ்ந்த ரயில் குண்டு வெடிப்புகளால் சிலரின் வாழ்க்கை எப்படி பாதிக்கப்பட்டது என்ற அடிப்படையில் படம் எடுக்கப்பட்டுள்ளது.



    இதில் வசீகரித்த விஷயம், எல்லாமே யதார்த்தமாக சொல்லப்பட்ட விதம். எந்த ஹீரோவும் தீவிரவாதியை விரட்டிப் பிடிக்க எல்லாம் முயற்சிக்கலை.
    சாமான்ய மனிதன், சாமான்ய மனதுடன் இந்தப் ப்ரச்சனைகளை எப்படி கையாள்கிறான்னு மட்டும் அழகா சொல்லியிருந்தாங்க.

    இதன் அடுத்த ப்ளஸ் பாயிண்ட்டு, படத்தின் ஆறு சாமான்யர்களின், கதையும் தனித்தனியா சொல்லப்பட்டாலும், குழப்பமோ அயற்சியோ தராமல் சொல்லப்பட்ட விதம்.

    ரிட்டையர் ஆகப் போகும் ஒரு போலீஸ் ஏட்டு,
    ஏட்டுடன் பணிபுரியும் பொறுப்பான கான்ஸ்டபில்,
    ஒரு நல்ல பொறுப்பான தேசபக்தியுள்ள பணக்கார குடிமகன் (மாதவன்),
    இஸ்லாமியரை வெறுக்கும் ஒரு 'இந்துத்வா' இளைஞன்,
    சைக்கிளில் டீ விற்கும் ஒரு ஏழைத் தமிழன்,
    சென்சேஷனல் செய்திகளைத் தொகுக்கும் தொலைக்காட்சி பெண் நிருபர்,

    இவர்கள் ஒவ்வொருவரும் மும்பையில் அன்றாடம் எப்படி வலம்வருகிறார்கள்?
    2006ன் குண்டு வெடிப்பிற்குப் பிறகு இவர்கள் வாழ்க்கை எப்படி மாற்றி அமைக்கப் படுகிறது?.
    ஒட்டு மொத்த மும்பை மக்களும், குண்டு வெடிப்பை எப்படி எதிர்கொண்டு, தீவிரவாதம் தங்களை விழுங்கிவிடாமல் பார்த்துக் கொள்கிறார்கள்? இதெல்லாம் ரொம்ப சீரா சொல்லியிருக்காங்க.

    படத்தின் முடிவில், ஒரு 'ஃபீல் குட்' நெகிழ்வை நமக்குள் புகுத்தி, எவ்ளோ குண்டு வேணா வைங்கடா, நாங்க லேசுல, அதிர மாட்டோம். உங்களால சில உயிர்களையும், சில உடமைகளையும் மட்டுமே தகர்க்க முடியும். மும்பைவாசிகளின் மன திடத்தை, இம்மியளவும் அசைக்க முடியாதுங்கர மெசேஜ், நச்னு சொல்லியிருக்காங்க.

    ஆறு கதாபாத்திரங்களைக் கொண்டு, மேலும் பல, சமுதாயத்துக்குத் தேவையான குட்டி குட்டி மெசேஜும் சொல்லியிருக்காங்க.

    ரிட்டையர் ஆகப் போகும் ஏட்டு, அலுவலக கடைசி நாட்களில், 35 வருஷம், வெறும் லஞ்சம் வாங்கியே பிழைப்பை ஓட்டிட்டமே. உருப்படியா, ஒரு திருடனையோ, தீவிரவாதியையோ கூட பிடிக்கலையே, வாழ்க்கையை இப்படி வீணாக்கிட்டமேன்னு கவலைப் படறாரு.

    புதிதாய் தொழிலில் சேர்ந்த, கான்ஸ்டபில், நேர்மையா வேலை செய்ய முடியலையேன்னு வருத்தப் படறாரு. ஏட்டையாவால், கட்டாய லஞ்சம் வாங்க வைக்கப்படறாரு. கடைசியில பொங்கி எழுந்து, நல்லவரா ஆகறாரு.

    (மாதவன்) பணக்காரரா இருந்தாலும், சிம்ப்பிளான வாழ்க்கை வாழ ஆசைப்படறாரு. அமெரிக்கா செல்லும் வாய்ப்பிருந்தும், நாட்டுக்காக உழைக்கணும்னு நெனைக்கறாரு. கார் வாங்கும் வசதி இருந்தும், ரயிலில் போவதை விரும்பறாரு. சில பல நச் வசனங்கள் பேசறாரு.

    'இந்துத்வா' இளைஞன் ஆரம்பத்தில் இருந்தே எல்லா இஸ்லாமியரையும் வெறுக்கறாரு. குண்டு வெடிப்புக்குப் பின் அது இன்னும் இரட்டிப்பாகுது. ஆனா, இவர் வெறுக்கும் இஸ்லாமிய இளைஞனே இவரிடம் நட்பு பாராட்டி, ரெண்டு பேரும் ஃப்ரெண்டாகராங்க.

    மும்பை வீதிகளில் டீ விற்கும் தமிழன், வளர்ந்து வரும் பொருளாதார 'வீக்கத்தை' காட்டறாரு. மும்பை மாலில், தன் மனைவி குழந்தையுடன் சென்று, அங்கிருக்கும் பர்ஃப்யூமின் விலை 10,000ரூவாய்னு கேட்டதும் ஆதங்கப்படுவதும், சேம்பிளுக்கு வைத்திருக்கும் பர்ஃப்யூமை மனைவி குழந்தைகளுக்கு அடித்து மகிழ்வதும், செக்யூரிட்டியால் விரட்டப் படுவதும் வேதனையான காட்சிகள். ஷாப்பிங் மால் ஆட்களை பழிவாங்குவதாய் நினைத்து இவர், குண்டு வெடிப்புக்குப் பிறகு, ஒவ்வொரு மாலாக தொலைபேசி, உங்க மால்ல குண்டு வெச்சிருக்காங்கன்னு மிரட்டுவது சிரிப்பை வரவழைத்தது. கடைசியில் இவர் விடுத்த தொலைபேசி மிரட்டலால் எல்லோரும் ஓடிவரும்போது ஒரு வயதான மனிதருக்கு ஹார்ட்-அட்டேக் வருவதை பார்த்ததும், தான் செய்த தவரை உணர்ந்து திருந்துகிறார்.

    முக்கிய கதாபாத்திரமாய் வரும் தொலைக்காட்சி பெண் நிருபர், ஊரில் நடக்கும் கொலை கொள்ளைகளை, தேடித் தேடி படம் பிடித்து, டிவியில் போட்டுக் காண்பிக்கிறார். பாதிக்கப்பட்டவர்களின் வலி தெரியாததால் மற்றவரின் ப்ரைவஸியெல்லாம் பற்றி கவலைப் படாத யதார்த்த ஊடக ப்ரதிநிதி. குண்டு வெடிப்பில் தன் காதலன் இறந்ததும், தொலைக்காட்சி நிறுவனம், இவரையே, சென்சேஷனல் நியூஸுக்காக பயன்படுத்தும்போது, தவறுகள் புரியவருகிறது இவருக்கு.

    குண்டுவெடிப்பைக் காட்டிவிட்டு, அதற்கு தீர்வு என்னன்னு தேடாம, இந்த மாதிரி எவ்ளோ ப்ரச்சனை வந்தாலும், சமாளிச்சு மேலெழ, ஒட்டு மொத்த சமுதாயத்தின் ஒற்றுமைதான் முக்கியம்னு நெத்தீல அடிச்ச மாதிரி சொல்றாரு டைரக்டர்.

    ஒரு மாதம் முடிந்து, குண்டு வெடித்த நேரத்தில், மொத்த மும்பையும், தாங்கள் செய்யும் வேலையை அப்படியே போட்டுவிட்டு, இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவது, படத்தின் க்ளைமாக்ஸ்.
    நெஞ்சத் தொட்டுட்டாங்க!

    மும்பைக்கு ஒரு சல்யூட்!

    படத்தை, கண்டிப்பா பாருங்க! உங்க கருத்தும் சொல்லுங்க!

    அப்பப்ப, நாட்டுக்கு தேவையான, மெசேஜைத் தாங்கிக் கொண்டும் சில நல்ல படங்கள், இந்த மாதிரி வரணும்.

    பொழுது போக்குடன் சேர்த்து, ஒரு 'நல்ல' உணர்வை அப்பப்ப எல்லோருக்கும் ஊட்டினாலே, தீவிரவாதம் எல்லாம் சில வருஷங்களில், இந்தியாவை விட்டு, தலை தெறிக்க ஓடிவிடும்.

    Monday, November 17, 2008

    வாரணம் ஆயிரம் - திரைப் பார்வை

    விரல் விட்டு எண்ணக் கூடிய, படம் எடுக்கத் தெரிந்தவர்கள் வரிசையில், கௌதம் மேனனும் ஒருத்தரா இருக்காரு. இதுவரை வந்த இவரின் எந்த படமும் சோடை போகவில்லை, ஏமாற்றியதில்லை.
    வாரணம் ஆயிரமும், ஏமாற்றவில்லை.

    (may contain spoilers, so read, at your own risk :) )

    ஆனா என்ன ஒரே வித்யாசம்னா, கௌதம் மேனனின், மற்ற படங்களெல்லாம், டிவிடி வாங்கி வச்சுக்கிட்டு, மூணு நாலு மாசத்துக்கு ஒரு தரம், திரும்ப பாத்தாலும் போரடிக்காத வகையைச் சேர்ந்தவை.
    வாரணத்தை, அப்படியெல்லாம் திரும்ப திரும்ப பாக்கமுடியாது.



    ஒரு மகனுக்கு தந்தையிடமிருந்து கிட்டும், பாஸிடிவ் உந்துதல்களை படம் பிடித்திருக்கும் முயற்சி பாராட்டியே ஆகணும். கௌதம் தன் அப்பாவுக்கு இந்தப் படத்தை 'சமர்ப்பிக்கும்' விதமாய் எடுத்திருக்கிறார். தன் சொந்த வாழ்வின் சில நிகழ்வுகளை திரைக்கதையா அமச்சிருக்காரோ என்னமோ. அதனாலேயே, படத்தின் நீளத்தை குறைக்க முடியாமல் ரொம்பவே திண்டாடிப் போயிருக்கார் போல. நம்மையும் சில நேரங்களில் திண்டாட வச்சிடறாரு.

    காஷ்மீரில் மேஜர் சூர்யாவாக ஒரு மிஷனுக்கு தன் குழுவுடன், ஹெலிகாப்டரில் பறந்து கொண்டிருக்கும்போது, தந்தை மறைந்துவிட்டதாக தொலைபேசி வருகிறது. அப்பொழுது, தன் தந்தையின் அருமை பெருமைகள் அவர் மனதில் அசைபோடும்போது, ஃப்ளாஷ்பேக்கி, நமக்கும் கதை சொல்றாங்க.

    அப்பாவும் சூர்யா. அம்மா சிம்ரன்.
    'டாடி டாடி' என்ற பாசமான ஸ்கூல் பையனும் சூர்யா.
    ஒரு தங்கை.

    அழகான குடும்பம். ஆனா, ரொம்ப ஆங்கிலத்தனமான குடும்பம்.
    ஏதோ ஆங்கிலோ இண்டியன்ஸ் குடும்பம் மாதிரி குடும்பத்தினர் அனைவரும், ரொம்பவே பீட்டர் விடுவது செம எரிச்சல் தந்தது. நிஜத்தில் சில குடும்பங்கள் அப்படி இருந்தாலும், டமில் படத்தில் அப்படியே அதை காட்டுவது ரொம்ப ஓவர்டோஸா இருந்தது.

    அப்பா சூர்யா, அம்மா சிம்ரனின், ஃப்ளாஷ் பேக், நல்லா படம்பிடிக்கப் பட்டிருந்தது. ஆனா, சிம்ரன், காலேஜ் உடையில், சகிக்கலை. சிம்ரனுக்கும் வயசாகும் என்பது, திகிலான உண்மை.

    அப்பா சூர்யாவுக்கும், பையன் சூர்யாவுக்கும் இருக்கும் பாசப் பிணைப்பைதான் படத்தின் மையமா சொல்ல ட்ரை பண்ணியிருக்காரு கௌதம். ஆனா, அதுக்குண்டான அழுத்தமான, மனதை பிசையும் காட்சிகள்னு படத்தில் எதையும் சொருகல.

    அப்பா சூர்யா, அடிக்கடி, 'life has to go on' தத்துவத்தில், பையன் சூர்யாவுக்கு புத்திமதிகள் அள்ளிவீசுவாரு. சில நேரம் நல்லா இருந்தது. ஆனா, இதுவும் ஓவர்-டோஸ்.
    * "டாடி, என்ன அவன் அடிச்சுட்டான் டாடி"ன்னு வந்து நிக்கர பையன் கிட்ட, நீயும் ஒடம்ப வளத்து வச்சிருக்கல்ல, திருப்பி அடின்னு அட்வைஸு.
    * "டாடி, I love மேக்னா daddy"ன்னு வந்து நிக்கர பையன் கிட்ட, அவளை தேடிப் பிடிச்சு வீட்டுக்குக் கூட்டிட்டு வான்னு ஒரு அட்வைஸு.
    * "டாடி, அவ அமெரிக்கா படிக்கப் போயிட்டா. நான் அமெரிக்கா போய் அவள கூட்டிட்டு வரணும்"ன்னு வந்து நிக்கர பையன் கிட்ட, சரிடா மவனே உடனே போன்னு வாழ்த்தி அனுப்பறாரு.
    * "டாடி, அவ செத்துட்டா டாடின்னு" அழுது அலப்பரை பண்ணும் போது, 'life has to go on', திரும்ப வாடான்னு சொல்றாரு.
    * "டாடி, I want to join armed forces"னு திரும்ப வந்து நிக்கும்போதும், சரிடா மவனே, இஷ்டப்படி செய்னு திரும்பவும் அனுப்பறாரு.
    * "டாடி, I love குத்து ரம்யா"ன்னு வந்து நிக்கும்போதும், அதே ஆமோதித்தல்.
    etc.. etc..

    ஒரே ஆறுதலான விஷயம், போதைப் பழக்கத்தில் விழும் சூர்யாவுக்கு புத்தி மதிகள் சொல்லுமிடம்.

    சூர்யா - அசத்தலோ அசத்தல்!
    என்னமா உழைச்சிருக்காரு. கலக்கல் ரகம்.
    ஸ்கூல் பையனா வரும்போது, உண்மையாவே சின்னப் பையனா தெரியராரு.
    காலேஜ் பையனா கிட்டார் தூக்கிட்டு அலையும்போதும் அம்சமா இருக்காரு.
    முதல் காதலி 'மேக்னா' (சமீரா ரெட்டி) கிட்ட ரயிலில் காதலை சொல்லுமிடத்திலும் அசத்தியிருக்காரு. அதுவும், அந்த கிட்டாரில், 'என் இனிய பொன்நிலாவே'ன்னு வாசிச்சுக்கிட்டு அலப்பரை பண்ற காட்சிகளில், துள்ளல் சூர்யா.
    காதலியை தேடிக்கிட்டு அமெரிக்கா போயி, அங்கே ஆடல் பாடல் காட்சிகளிலெல்லாம் அமக்களம்.
    6-pack சூர்யாவும் மிரட்டறாரு. தாடி வச்ச சூர்யா, மேஜர் சூர்யான்னு பலப் பல பரிணாமங்களில் தன் உழைப்பை அனாயாசமா காட்டியிருக்காரு.
    அப்பா சூர்யாவும் ஓ.கே. மேக்கப் உதவியில்லாமல் நல்லாவே சமாளிச்சிருக்காரு.
    ஆங்கில டயலாக் தான் நெருடல்.

    ஹீரோயின் மேக்னா (sameera reddy) முதல் காட்சியில் பாக்கும்போது, "வேர ஹீரோயினே கிடைக்கலியா இவங்களுக்குன்னு" தோணிச்சு. ஆனா, தொடர்ந்து வரும் காட்சிகளில், ஸ்டைலிஷ்ஷா நடிச்சு அசத்திடறாங்க. நம்மளையும் வசீகரிச்சிடறாங்க. நல்ல ஸ்மைல்.
    ஆனா, சூர்யா பக்கத்தில் நிக்கும்போது மட்டும், அரேபிய குதிரை கணக்கான், கில்மாவா இருக்காங்க. இவங்க பக்கத்தில் சூர்யா, 'சோட்டாவா' தெரியறாரு.

    இரண்டாவது ஹீரோயின், 'குத்து' ரம்யா, குத்து வாங்கிய ரம்யா மாதிரி இருக்காங்க. பொல்லாதவன் படத்தில் பார்த்த, 'நச்' மிஸ்ஸிங். குறிப்பா, க்ளோஸ்-அப் காட்சிகளில், வசீகரமே இல்லாதிருந்தது. ஆனா, அலட்டிக்காம நடிச்சிருக்காங்க.

    முதல் பாதி வரை, ஸ்கூல், காலேஜ், வாழ்க்கையில் முன்னேறுதல், மேக்னா, அமெரிக்கான்னு, படம் சூப்பரா பயணிச்சுது.

    ஹாரிஸின் இசையும், ஒலிப்பதிவும், ஒளிப்பதிவும் படத்தை ஒரு லெவலுக்கு கொண்டு போயிடுச்சு.
    ஹாரிஸ் பின்னி எடுக்கறாரு.
    "அடியே கொல்லுதே", "ஓ சாந்தி சாந்தி" (SPB சரனுக்கு நிறைய பாட்டு கொடுங்கைய்யா சாமிகளா. கலக்கறாரு), "நெச்சுக்குள் பெய்திடும்", "அணல் மேலே பனித்துளி" (பாம்பே ஜெயஸ்ரிசுதா ரகுநாதன், ஹாரிஸ், தாமரை காம்பினேஷன் கன்னனபின்னான்னு வர்க்--அவுட் ஆகியிருக்கு) எல்லாமே ஏ-கிளாஸ். பாட்டின் தரத்துக்கேற்ற, ஒளிப்பதிவும் அமக்களம்.

    இந்த வரிசையில் ஒரு பெரிய 'அழுக்கு', ஒரு டண்டனக்கா குத்துப் பாட்டு.
    அமைதியாக பயணித்துக் கொண்டிருந்த தெளிந்த நீரோடையில் ஒரு கல்லப் போட்ட மாதிரி அந்த பாட்டு.
    இடைவேளை வரை தாலாட்டிய காட்சியமைப்புகள், இடைவேளைக்குப் பிறகு, இந்தக் குத்துப் பாட்டுக்கப்பரம் தடம் புரள ஆரம்பிச்சது.

    காதலியை இழந்த சூர்யா, குடிக்க ஆரம்பிக்கறாரு. அதிலிருந்து மீள, டெல்லி, காஷ்மீர்னு சுத்தறாராம். இடையில் ஒரு கிட்னாப்பு, ஆர்மீல சேறராருன்ன், செகண்ட் காதலின்னு ஜவ்வ்வா இழுத்திருக்காங்க.

    போதைப் பழக்கத்திலிருந்து மீள, ஒரு பாஸிடிவ் விஷயத்தில் நேரத்தை செலவு பண்ணனும்னு ஒரு நல்ல விஷயம் சொல்லியிருந்தாலும், அந்த நல்ல விஷயத்தை, 'நறுக்'னு முடிச்சிருக்கலாம்.

    படத்தில் ஒரு 30 நிமிஷம் ஈஸியா குறைச்ச்சிருக்கலாம். குறைச்சிருந்தா, கௌதமின், மற்ற படங்களைப் போல இத்தையும், டிவிடி வாங்கி வச்சு அடிக்கடி பாத்திருக்கலாம்.

    பட், விதி வலியது. அவரு 30 நிமிஷத்தை கட் பண்ணலை. நமக்கும் டிவிடி செலவு மிச்சம்.

    முப்பது நிமிஷத்தை எப்படி குறைச்சிருக்கலாம்? ( கௌதம் சார், அதிகப் பிரசிங்கத்தனத்தை மன்னிக்க :) )
    சீன்1: சூர்யா காஷ்மீர்ல அந்த ஆப்புரேஷன், டிஷ்ஷூம் டிஷ்ஷூம்னு, முடிக்கறாரு ( இதை படத்தின் கடைசியில் வச்சது சொதப்பல். ஜேம்ஸ்பாண்ட் பாணியில் முதலில் இப்படி தொடங்கியிருக்கலாம் ) - 15 நிமிஷம்
    சீன்2: சக்ஸஸ்ஃபுல்லா முடிச்சிட்டு வந்ததும், அப்பா சூர்யா, இறந்திட்டாருன்னு சேதி வருது. ஃப்ளைட்ல ஊருக்கு திரும்ப வராரு. அப்பா ஃப்ளாஷ்பேக் தொடங்குது - 5 நிமிஷம்
    சீன்3: அப்பா சூர்யா, அம்மா சிம்ரன் காட்சிகள், குடும்பம், பாசம், நல்ல அப்பா - 20 நிமிஷம்
    சீன்4: பையன் சூர்யா, மொதல் காதலி மேக்னா, பாடல், அட்வைஸு கேட்பது, அமெரிக்கா - 45 நிமிஷம்
    இடைவேளை
    சீன்5: சோகமான சூர்யா, போதை, அப்பா அட்வைஸு, வழிப் படுத்தல் (கிட்னாப் எல்லாம் தேவையில்லாத சொறுகல்) - 15 நிமிஷம்
    சீன்6: 'குத்து' ரம்யாவுடன் செகண்ட் இனிங்க்ஸ், கூட்டுக் குடும்பம், ஜாலிகள், அப்பா பையன் பேரன் பாசக் காட்சிகள் (இதெல்லாம் படத்துல மிஸ்ஸிங். இதனால் தான் அழுத்தம் கம்மி) - 20 நிமிஷம்
    சீன்7: அப்பா சூர்யா செத்துப் போயிடறாரு. சீன்2ல் யோசிக்கும் சூர்யா வீட்டுக்கு வந்திடறாரு. ஒரு டச்சிங் சோகப் பாட்டு. முற்றும் - 15 நிமிஷம்.


    ஸோ, மொத்தத்தில்,

    வாரணம் ஆயிரம் -- 500 சூப்பர்! 300 ஓ.கே! 100 சுமார்! 100 இழுவை!

    நீங்க பாத்தாச்சா? வாக்குங்க! (பொட்டி தெரியலன்னா இங்க க்ளிக்கி வாக்குங்க)


    கருத்த சொல்லுங்க. தமிழ்மண டூல்பார்ல, வாக்கும் போட மறக்காதிங்க, படிச்சது பிடிச்சிருந்தா ;)

    Thursday, November 13, 2008

    தமிழகத்தின் அவசர எண் 108! use it please!

    விஜய் டிவில 'குற்றம் நடந்தது என்ன?"ன்னு ஒரு புரோக்ராம்ல, உருப்படியா ஒரு விஷயம் சொன்னாங்க.
    அதாவது, ரோட்ல கார் ஓட்டிட்டுப் போறீங்க.
    தெரியாத்தனமா, ரோட்ட கிராஸ் பண்றவன இடிச்சுட்டீங்க.
    கீழ விழுந்தவன் ரத்தம் சொட்ட சொட்ட மயக்கமாயிட்டான்.

    என்ன பண்ணுவீங்க? வேறென்ன? நம்ம இந்திய மனம் எப்படி யோசிக்கும்?
    "மச்சி எஸ்கேப்!"ன்னு வண்டிய, டாப்‍கியர்ல போட்டு அந்த எடத்த விட்டு எஸ்கேப்பிடுவோம்.

    இப்ப, வேர மாதிரி யோசிச்சுப் பாப்போம்.

    நீங்க காரெல்லாம் ஓட்டல. பஸ் ஸ்டாண்டுல வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கீங்க.
    ரோட்ல போர காரு, பக்கத்துல நிக்கரவர இடிச்சுட்டு நிக்காம போயிடுச்சு.
    இப்ப என்ன பண்ணுவீங்க? வேறென்ன? அதே இந்திய மனம்தான இப்பவும் யோசிக்குது.
    கும்பலோட கும்பலா, கீழ விழுந்தவன சுத்தி நின்னு, அவன் ரத்தம் சொட்டரத வேடிக்கை பாக்கவேண்டியதுதான்.

    சரிதானே?

    இந்த இரண்டு சம்பவங்களிலும், நாம, குற்றவாளி இல்லன்னாலும், அடிபட்டு விழுந்தவனை ஆஸ்பத்திரிக்கு தூக்கிக்கிட்டு போகவோ, போலீஸை/ஆம்புலன்ஸை அழைக்கவோ நமக்கு முதலில் வருவது, பெரும் தயக்கம்.
    காரணம், பயம்.
    என்னாத்துக்கு தேவையில்லாம, ஸ்டேஷன், அப்பரம் கேஸு, ஆஸ்பத்திரின்னெல்லாம் அலையணும்.
    எவன் எப்படிப் போனா என்னன்னு தோணரதுதான் காரணம்.

    இப்படிப் பேடிகளாய் இருக்கும் நம்மை வச்சுக்கிட்டு அரசாங்கம் என்னத்த கழட்ட முடியும்?
    சரின்னு என்னா பண்ணிருக்காங்களாம், 108ன்னு ஒரு அவசர தொலைபேசி எண்ணை உருவாக்கி வச்சிருக்காங்களாம்.

    இந்த மாதிரி, அவசர உதவி தேவைப் படும் நேரங்களில், அந்த எண்ணுக்கு தொலைபேசினால், உடனே ஆம்புலன்ஸ் வந்து சேருமாம்.

    முக்கியமா, தொலைபேசும் ஆளுக்கு, எந்த போலீஸ் கெடுபிடியோ, மத்த கெடுபிடிகளோ இருக்காதாம்.

    ஸோ, தெருவுல எங்கையாவது யாராவது அடிபட்டுக் கிடந்தா, மாட்டை பாக்கர மாதிரி பாத்து ரசிக்காம, உடனே 108ஐ அழையுங்கள்!

    சென்னை சட்டக் கல்லூரியில் வூடு கட்டி ஒருத்தன அடிச்சு, ஒரு பையன் மயங்கி கெடந்தானாமே, அதுக்கெல்லாம் 108 கூப்பிட்டா ஒதவி கெடைக்குமான்னு நீங்க கேக்கலாம்?

    அந்த கருமத்துக்கெல்லாம், 100000000008 அடிச்சாலும், ஒரு ஒதவியும் கிட்டாது.

    ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!



    பி.கு: சட்டக்கல்லூரி மேட்டரின் புகைப்படம், வீடியோவெல்லாம் வெளியில் போடவேணாம்னு 'தடா' விதிச்சிருக்காங்க. தேவையில்லாம, அதைப் போட்டு பரப்பி சென்சேஷனலைஸ் செஞ்சு, இன்னும் பல பேரை பத்த வெக்க வேணாம்னு நீதிபதி சொல்லியிருக்காரு. மக்களே, உஷாரு.

    Wednesday, November 12, 2008

    Mungaru Male ~ சலனசித்ர சர்ச்சே!

    நமஸ்காரா. Baன்னி.
    எங்கிதியா? சென்னாகித்தியா?

    ஹிஹி. என் கன்னட அறிவு இத்தோட முடிஞ்சுடுது. 'சலனசித்ர சர்ச்சே'யெல்லாம் கூகிள் ஆண்டவரோட துணையில் பேத்தெடுத்தது. திரைப்பார்வையின் கன்னட ஆக்கமே அது.

    என்னடா திடீர்னு கன்னடத்துக்கு தாவிட்டேனேன்னு பாக்கறீங்களா?
    ஏற்கனவே சொன்ன, ஓசித் திரைப்பட வரிசையில், ஏகன், குசேலனைத் தொடர்ந்து நான் பார்த்த மூன்றாவது படம், முங்காரு மலே ( ழ இல்லியா கன்னடத்துல? என்ன கொடுமைங்க இது?) என்ற கன்னடிகா படம்.

    திருவாளர்.Karthick Krishnaவின் பரிந்துரையால், அப்படி என்னதான் பெரிய தாக்கத்த உண்டு பண்ணிடுச்சு இந்த படம்னு பாக்க முடிவு பண்னி தியேட்டருக்கு போனேன்.

    'முங்காரு மலே'ன்னா, monsoon rain, அதனால, படம் முழுக்க மழை கொட்டிக்கிட்டே இருக்கும். படம் எடுக்கப்பட்ட இடம், கர்நாடகாவில் உள்ள Malnad என்ற ஊராம்.
    சும்மா, நச்சுனு இருக்கு ஊரு. பச்ச பசேல்னு, நீர்வீழ்ச்சியும், ஏரிகளும், மலைகளும் நிறைந்து கண்ணுக்கு குளிற்சியா இருக்கு. பாக்க வேண்டிய இடம்.

    இந்த ஊர்லதான், ஹீரோவும் அவங்க அம்மாவும், ஹீரோ அம்மாவுடைய பழைய ஃப்ரெண்டின் பொண்ணு கல்யாணத்துக்கு வருவாங்க.
    ஹீரோ, ஹீரொயின ஏற்கனவே பாத்திருப்பாரு. அப்பவே மனசுக்குள்ள அவருக்கு ஒரு இது வந்துடும்.
    கல்யாண வீட்ல தங்கி, ஹீரோயின் மனசை மாத்தி காதலிக்க வெப்பாரு.
    ஆனா, கடைசீல, இந்தக் கல்யாணம் நடக்கரது, ஹீரோயின் குடும்பத்துக்கு ரொம்ப அவசியம்னு புரிஞ்சதும், ஜகா வாங்கிட்டு போயிடூவாரு.
    வழக்கமா நடக்கர Dilwale dulhaniya lejayenge முடிவு இல்லாமல், வித்யாசமான இந்த முடிவு பாராட்டப் பட வேண்டிய விஷயம்.

    ரொம்ப சாதாரணமான படம். ஆனா, அருமையான ஒளிப்பதிவும், ரொம்பவே ரம்யமான இசை அமைப்பும், படத்தை தூக்கி நிறுத்துது.



    ஹீரோ - கணேஷ். ஓஹோன்னெல்லாம் இல்லை. ஆனா, பரவால்லாம நடிச்சிருக்காரு. புரியாத பாஷையினாலான்னு தெரியலை. காமெடியெல்லாம் ரொம்ப சில்லியா இருக்கு. ஆனா, கன்னடர்கள், எல்லா சின்ன விஷயத்துக்கும் ரொம்பவே சிரிக்கராங்கய்யா.

    ஹீரோயின் - செம டொக்கு. எனக்கு சுத்தமா பிடிக்கலை. படத்துக்கு மட்டும், S.M.Krishnaவின் பேத்திய (பொல்லாதவன் ஹீரோயின்) ஹீரோயினா போட்டிருந்தா, இன்னும் பெரிய ரவுண்டு வந்திருக்கும்.

    ஹீரோயின் அப்பா - தெரிஞ்ச முகம். நிறைய கன்னட படத்துல பாத்திருக்கேன் இவர. பேரு, அனந்த் நாக். கச்சிதமா அடக்கமா நடிச்சிருந்தாரு.

    தலைவலி தராத படத்தில் குட்டி குட்டி சிறப்பம்சங்கள் இருக்கு.
    ஒரு வில்லன், ஹீரோயின் மேல இவருக்கும் ஒரு இது. அதனால, ஹீரோவையும், ஹீரோயினின் வருங்கால கணவனையும் அடிப்பாரு.
    ஆனா, ஹீரோ, 'வில்லா, நீ என்ன அடிச்சது, ஹீரோயின் மேல் நீ வச்சிருக்கர காதல்னாலன்னு எனக்குத் தெரியும்'னு செண்ட்டி டயலாக் பேசியதும், வில்லனும் திரூந்திடுவாரு.
    ரணகளம் இல்லாம, கதையை நம்பி எடுத்திருக்காங்க.
    ஒரு முயலும், முக்கிய வேஷத்தில் நடிக்குது.

    படத்துல, ஒரு அறுவி (jog falls) காட்டுவாங்க. யப்பா, கூடிய விரைவீல் பாக்க வேண்டிய சூப்பர் இடம் அது. கேமரா நல்லா படம் புடிச்சிருக்கு அந்த காட்சிகளை.

    மொத்தத்தில், சாதாரணமான, நல்ல படம்.

    கன்னடம் கொத்தினா, படத்தை நோடுங்க!

    பர்லா!

    Jog Falls! (Highest waterfall in India?)
    படம் உதவி: metblogs.com

    Tuesday, November 11, 2008

    ஐ.டி சிரிப்பு - 18+ only

    ஐ.டி துறையில் வேலை செய்யரவங்களுக்கு, கீழே இருக்கும் தளத்தில் உள்ள வீடியோ வயிற்றை பதம் பார்க்கும்.

    Watch it with sound and when no one is around you. contains some objectionable content, so 18+ only ;)

    TheWebSiteIsDown.com

    ensoy!

    Monday, November 10, 2008

    குசேலன் = 2 x சந்திரமுகி

    ஏகன் திரைப்பார்வைய படிச்சுட்டு, பலரும் வந்து கும்மிட்டாங்க.
    குறிப்பா, 'கமல்'னு ஒரு பதிவர், "நெஞ்சத்தொட்டு சொல்லுங்க, ஏகன், குரிவியை விட குப்பையா?"ன்னு ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டுட்டாரு. :)
    அவருக்கு சொன்னதை, இங்கையும் சொல்றேன்.
    "கமல், நெஞ்சத்தொட்டா ஒரு பேச்சு, நெஞ்சதொடலன்னா ஒரு பேச்செல்லாம் என் கிட்ட கிடையாது. எப்போமே, மனசுல தோணறது, தட்டச்சி வெளீல வுடறேன். அம்புடுதேன் ;)".

    இனி, குசேலன் பற்றிய எனது கண்ணோட்டத்தைச் சொல்றேன்.

    ஏற்கனவே சொன்ன மாதிரி, ஓசிப் பட வரிசையில், இது ரெண்டாவது படம்.

    நேத்து, "ஏகன் = 2 x குருவி"க்கு அர்த்தம், குருவியை விட ஏகன், ரெண்டு மடங்கு மட்டம்.
    இன்னிக்கு, சொல்றது, சந்திரமுகியை விட, குசேலன், இரண்டு மடங்கு பெட்டர்.

    அந்த சந்திரமுகி எப்படிதான், அப்படி ஓடுச்சோ (ஒட்னாங்களோ?) தெரீல, எனக்கு பயங்கர அறுவையா தெரிஞ்சுது அந்த படம். ரஜினியின், யதார்த்தமற்ற நடிப்பு எனக்கு பெரும் எரிச்சலை தந்தது, சந்திரமுகியில். பிரபுவும், வடிவேலுவும் பண்ண அலப்பரையும் தாங்க முடியலை அதுல.

    குசேலனை, மக்கள், தேவையில்லாம போட்டு வாட்டி எடுத்துட்டாங்கன்னு நெனைக்கறேன்.
    ஓவர், பில்டப் கொடுத்ததால் வந்த வினை இது. தேவைதான்.

    படத்தை பொறுத்தவரை, நல்ல, போரடிக்காத படம் ( மொத நாள், ஏகன் பாத்துட்டு, எத்த பாத்தாலும், அப்படித்தான் இருந்திருக்குமோ? ;) ).
    பசுபதியின் நடிப்பும், ரஜினியின் அசால்ட்டாக வந்து போகலும், நெருடாத காட்சியமைப்பு.

    எல்லாரும், ஓவரா பந்தாடின, வடிவேலுவின் காமெடி கூட, எனக்கு மட்டமா தெரியலை.
    அவரு, எல்லாரையும் திருட்டு போலிசு வச்சு, இழுத்துக்கிட்டு வந்து, மயக்க மருந்து போட்டு, மொட்டை அடிக்கும் காட்சிகள், நல்ல சிரிப்பு.

    ஒட்டாதது - மீனா. தட்டினா கீழ விழுந்துடர குடிசையில் இருக்காங்களாம். ஆனா, பளிச்னு, மேக்கப்பும், திருத்திய புருவமும், புது சாரியும், சுத்தமா ஒட்டலை.
    படம் எடுக்கும்போது, யாருக்குமே இந்த மேட்டர் எப்படி கண்ணுல படாம இருந்திருக்கு? ரொம்பக் கேவலம்!

    ரஜினி, ஆர்.சுந்தர்ராஜனுக்கு கொடுத்த பேட்டி கூட நல்லாதான் இருந்துச்சு. படத்துல சொல்லறதையெல்லாம் ஏண்டா உண்மைன்னு நம்பிட்டு, உங்க பொழப்ப கெடுத்தக்கறீங்கன்னு, தைரியமா ரஜினி சொன்னது, பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

    க்ளைமாக்ஸில் ரஜினி கலக்கியிருக்காரு. ( மம்முட்டி இதைவிட நூறு மடங்கு கலக்கியிருப்பாருங்கரது, தனிக்கதை ). ரஜினி, அழுதா நமக்கு பிடிக்கமாட்டேங்குது போல! ;)

    பசுபதி இருக்கர ஊரு அமக்களமா படம் பிடிச்சிருக்காங்க.
    என்ன ஊருங்க அது? குறிப்பா, அந்த பெரிய ஏரி? எங்க இருக்கு அது?

    கிராஃபிக்ஸ் - தேவையில்லாம சொறுகியிருக்காங்க. டால்ஃபின் அந்த ஏரியில் குதிப்பது அழகான கற்பனை. ஆனா, ஏரிக்கு மேலே பெரிய நீர்வீழ்ச்சி வரவச்சதெல்லாம் கொடுமைடா சாமி! இப்ப, எது உண்மையிலேயே இயற்கை அழகு, எது கிராஃபிக்ஸ் பூச்சுற்றல்னு கொழப்பம் வந்துடுச்சு.
    "ஓ சாரரே சாரே சாரே, போக்கிரி பையன் தாண்டா பொல்லாதவன் நீ" பாட்டுக்கு செட்டிங்கும், கிராபிக்ஸும் செம கலக்கல். சிவாஜி தோத்துது போங்க!

    மொத்தத்தில், ஒரு தடவ, நார்மல் படங்களுக்கு கொடுக்கும் கட்டணம் கொடுத்து பார்க்கக்கூடிய, நார்மலான படம்!

    குசேலன், கற்பித்த பாடங்கள்:
    * அதிகமான பில்டப், கன்னா பின்னான்னு, பேக் ஃபையர் ஆகும்.
    * மட்டமான படத்துக்கு (ஏகன்) அப்பால, சுமாரான படம் (குசே) பாத்தாலும், சூப்பர் படம் மாதிரி ஃபீல் கொடுக்கும்.
    * ரஜினி படமே ஆனாலும், சில மாசம் கழிச்சு ஒரு படத்தை தியேட்டர்ல பாத்தா, எல்லாரும் ரொம்ப நல்ல பசங்களா சமத்தா விசில் எல்லாம் அடிக்காம, அகிரா குரோசோவா படம் பாக்கர மாதிரி ரொம்பவே சீரியஸா பாக்கறாங்க. குட்!

    பி.கு: ராமலக்ஷ்மியின் அட்டகாசமான கவிதை இங்கே

    Sunday, November 09, 2008

    ஏகன் = 2 x குருவி - திரைப் பார்வை

    மொதல்லையே சொல்லிடறேன். என்னடா "2 x குருவி"ன்னு போட்டிருக்கானே, குருவிய விட ரெண்டு மடங்கு நல்லாருக்குன்றானான்னு நெனச்சுடாதீங்க.
    'குருவி' எந்த அளவுக்கு மட்டமோ, அதைவிட இரண்டு மடங்கு மட்டமான படம் ஏகன்.
    ஓசியில் கிடைத்தால், ஃபினாயிலையும் பாட்டம்ஸ்-அப் அடிக்கும் நம் பழக்கம், ஓசியில் தீயேட்டரில் படம் காட்டறாங்கன்னதும், விட மனசு வரல.
    வெள்ளி முதல் ஞாயிறு வரை, மூணு படம் பாத்தாச்சு.

    வெள்ளியன்று, 'ஏகன்' பாத்து, ஓசி திரைவிழாவுக்கு, பிள்ளையார் சுழி போட்டேன்.

    ராஜு சுந்தரம் டைரக்ஷன் கத்துக்கரதுக்கு, யாராச்சும் புது முகத்தை வச்சு, பதம் பாத்திருக்கலாம். அநியாயத்துக்கு அஜித்தை காவு வாங்கியிருக்க வேண்டாம்.

    அஜித்தும், லேசு பட்டவரில்லை. பிரபு வீட்டுக்கு கிட்ட இருக்காரான்னு சந்தேகம் வருது. பிரபு வாங்கர கடைலதான் இவரும் அரிசி வாங்கறாரு போலருக்கு.
    சாப்பிட்ட ஒவ்வொரு பருக்கையும், ஒடம்புல அப்படியே தெரியுது. மொத மொதன்னு இருக்காரு.
    என்ன கொடுமை அஜித் இது?

    'CB CID' ஆபீஸரா அறிமுகமாகறாரு, பெருத்த தாடியும், அதுக்கேத்த தொப்பையும் கூட.

    சில பல காரணங்களால், வில்லனின் அப்ரூவரை பிடிக்க, அப்ரூவரின் பொண்ணு படிக்கும், காலேஜ்ல அஜித்தும், மாறு வேஷத்தில், ஸ்டூடண்ட்டா போய் படிக்கோணுமாம்.

    சரி, ஸ்டூடண்ட் ஆகப் போறாரே, சிக்குனு எடைய கொறச்சிட்டு, நச்சுன்னு, சூர்யா மாதிரி வந்து நிப்பாருன்னு பாத்தா, தாடி மட்டும் மிஸ்ஸிங், தொப்பை இங்கையும் ப்ரசண்ட்.
    லேசான தாடியில் வெள்ளை முடி வேர. கண்றாவியா இருக்காரு அஜித், படம் முழுக்க.
    காலேஜ்ல மொத்த பசங்களும் சூப்பரா ட்ரஸ் பண்ணியிருப்பாங்க. அஜித்துக்கு மட்டும், பர்மா பஜார் ப்ளாட்ஃபாரம்ல கிடைக்கிர டைப்ல, டீ-ஷர்ட்டுகள். தொவைக்காம, இஸ்திரி பண்ணாம போட்டு, டோட்டல் வறட்சி, டோட்டல் இம்சை!

    பாடல்களும் சகிக்கலை.
    டான்ஸ் மட்டும் நல்லா ஆடறாரு.

    நயன்தாரா, அந்த காலேஜ்ல ப்ரொஃபஸராமாம்.
    மொத்த முதுகும் தெரியரமாதிரி ஒரு ஜாக்கெட்டு. வழுக்கி விழர மாதிரி ஒரு சேலை.
    அஜித் படம் முழுக்க தொப்பையோட வர மாதிரி, நயன் தாரா, படம் முழுக்க, இதே ஜாக்கெட்/ஸாரி கெட்டப்போட வராங்க.
    வர வர நயன்தாராவப் பாத்தா ஒரு கிளுகிளுப்பும் வர மாட்டேங்குது. WWF வீராங்கனை கணக்கா ஆயிட்டே போறாங்க. பயங்கர ட்ரைனஸ்.

    ஜெயராமும் வீணடிக்கப்பட்டிருக்காரு.
    வில்லனா வர சுமன், படு கேவலம். அவரும் அவரு விக்கும், அவரின் லூசுத்தனமும் சகிக்கலை.

    ஒரே ஆறுதல், சுமனின் அள்ளக்கையாக வரும் ஆள் (ஸ்ரீமன்?) பண்ணும் சின்ன சின்ன காமடி.

    ஓசியில் பாத்தே இவ்ளோ பொகைச்சலா இருக்கே, இதையெல்லாம் காசு கொடுத்து பாக்கரவங்க நெலம ரொம்பவே கொடுமையா இருக்கும்.

    ஐயோ பாவம்!

    பி.கு: இத்த mein hoon na வோட ரீ-மேக்னு சொல்றாங்க. ஷாருக்கோட, எனர்ஜியெல்லாம் அஜித்தோட கம்பேர் பண்ணா, இன்னும் நமக்கு பொகைச்சல்தான் ஏறும்.
    அஜித், தொப்பையக் கொறைங்க! ரசிகர்களை ஏமாற்றாதீர்கள்!

    Thursday, November 06, 2008

    Vijay TV - BEST கண்ணா BEST!

    ஊர்ல நடத்தப்படர TRP rating எல்லாம், சன் டிவி தான் அதிகம் பாக்கப்படுதுன்னு சொல்லுது.
    அது உண்மையாவும் இருக்கலாம்.
    ஏன்னா, அவங்க பண்ண, வியாபார தந்திரங்கள் அபாரம்.

    கேபிள் விநியோகமும் கையில் இருந்த காலத்தில், சன் நிறுவனம், சில பல இடங்களில், மற்ற சானலின், தரத்தை, குறைத்து ஒளிபரப்பியதாகவும் கேள்விப்பட்டுள்ளேன்.

    கலைஞர் டிவியும், நமிதா, குஷ்பு துணையுடன், மானாடிக்கொண்டே, ரேட்டிங்கில், தன் பங்கை, பெரிது படுத்திக் கொண்டே இருக்கிறது.

    ஊரில் நடக்கும் TRP ரேட்டிங்கில், விஜய் டி.வி, ராஜ் டிவிக்கு மேல இருந்தாலே பெரிய விஷயம்.

    விஜயில் காட்டப்படும் பல நிகழ்ச்சிகள், 'sophisticated'ஆக இருப்பதைப் போல் ஒரு தோற்றம் தருவதால், கிராமப் புறங்களில் இதுக்கு பெரிய வரவேற்பு இருக்கரதில்லையாம்.

    ஆனால், பதிவர்கள் மத்தியிலும், பதிவு வாசிப்பவர்கள் மத்தியிலும், விஜய் டிவிக்கு பயங்கர வரவேற்ப்பு இருப்பது, எமது கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

    என்ன இருந்தாலும், நாமெல்லாம், 'sophisticated' பந்தாவாசிகளாச்சே.
    எந்த காலத்துல நமக்கு சன் பிடிச்சிருக்கு? :)

    நமிதா இருந்தவரைக்கும், கலைஞர் டிவி ஓ.கே.
    இப்ப அதுவும் இல்லை.

    விஜய் டிவியின்,
    நீயா நானா? --- ஆரம்பத்தில் சூப்பரா இருந்துச்சு, இப்ப அவங்களுக்கும் தலைப்பு பஞ்சம் போல. போன வாரம், 70s vs 2000 fashion பத்தி ஒரு நிகழ்ச்சி இருந்தது. அதுல ரெண்டு ஹிப்பீஸ் வந்து, "ரீனா மீனா.." பாட்டுக்கு ஆடினது அமக்களம் ;)
    ஜோடி நெம்பர் 1 --- எவ்வளவுதான் டிராமா/அறுவையா இருந்தாலும், ஒக்காந்து ஒரு மணி நேரம் பாக்க வச்சிடறாங்க.
    கலக்கப் போவது யாரு -- அருமையான ப்ரோக்ராம்
    இப்படிக்கு ரோஸ் -- ஸ்ஸ்ஸ்ஸ். நல்ல மூஜிக் இதுல. எடுத்துக்கர ப்ரச்சனைகளும் நல்ல சுவாரஸ்யமானவை - உ.ம் கிட்னி திரூட்டு, விவாகரத்துப் ப்ரச்சனைகள், etc.. ஆனா, என்ன எழவெடுத்து தலைப்புக்கு ஆளுங்கள கூட்டிக்கிட்டு பேட்டி எடுத்தாலும், எப்படியாவது, "உங்க செக்ஸ் லைஃப் எப்படியிருக்குன்னு" கலீஜா கேக்கரத சகிக்க முடீல. ரோஸ், மாறுங்க!
    ரீல் பாதி ரியல் பாதி -- செம்ம நெக்குலு!

    இனி, வாக்கெடுப்பின் முடிவுகள் கீழே!



    ஹாப்பி வெள்ளி!

    Free Movie weekend in the bay area

    Milpitas ல புது தியேட்டர் தொறந்திருக்காங்களாம்.

    இந்த வாரம் முழுக்க எலவச திரைப்படம் காட்டறாங்களாம்.

    இந்த லிங்க்ல என்னென்ன படம் இருக்குன்னு இருக்கு. பாத்து, எந்தப் படம் நல்ல படம்னு பின்னூட்டினீங்கன்னா, எல்லாத்தையும் பாத்துடுவேன்.
    சொல்லுங்க.

    குறிப்பா, தெலுங்கு, மலையாளம், கன்னடப் படங்கள் பத்தி சொல்லுங்க!

    குசேலன் காட்டறாங்களாம் - அத நெனச்சாதான், அந்தப் பக்கம் போகவே பயமாக்கீது!

    ;)

    Tuesday, November 04, 2008

    அமெரிக்கா ரொம்ப நல்ல ஊருண்ணே...

    ஒரு வழியா எலெக்ஷன் முடிஞ்சுது. நம்ம வாசகர்கள் கணிப்பின்படியே, ஒபாமா, பெருவாரியாக வெற்றி பெற்றுவிட்டார்.
    (ஸ்ஸ்ஸ், இனி வரும் தேர்தலுக்கெல்லாம், நம்ம வாக்கெடுப்பும், பயங்கரமாக கன்னா பின்னா என்று கவனிக்கப்படும் அபாயம் இருக்கிறது)



    இது சாதாரண விஷயமில்லை. நாப்பத்தி ஏழு வயசுல, இந்த மிகப் பெரிய சாதனை. அதுவும், சிலப் பல வருஷங்களுக்கு முன்னாடி, ஓட்டுரிமை கூட இல்லாத வகுப்பைச் சேர்ந்தவர்.
    அசத்தலான வெற்றி! பலருக்கும், தன்னம்பிக்கையும், மகிழ்ச்சியையும் தந்த வெற்றி.

    எட்டு வருஷமா, சிரிச்சிக்கினே எல்லாருக்கும் குல்லா போட்ட கோமாளித் திருட்டு கும்பலிடமிருந்து விடுதலை.

    இனி வரும் மாதங்களில், கொஞ்சமாவது, சருக்கலிருந்து, அனைவரையும் மேலே கூட்டிக் கொண்டுச் செல்லுவார் இந்த ஒபாமா, என்ற நம்பிக்கை வருகிறது.

    தேர்தலில் தோல்வி அடைந்த ஜான் மெக்கெயினும், லேசு பட்டவரில்லை. எழுபத்திரெண்டு வயசுல, கில்லி மாதிரி ஊர் ஊரா சுத்தி, அமக்களப் படுத்தினாரு.
    சொத்தையான, vice president தேர்வினால்தான், இவருக்கு பெரிய சேதாரம் ஏற்பட்டது என்பது என் கணிப்பு. இனி வரும் நாட்களில், எல்லாரும், ஏன் ஏன் ஏன்னு அலசி ஆராஞ்சு, தொயச்சி காயப் போடுவாங்க. அப்ப, மற்ற காரணங்களும் தெரிய வரும்.

    ஆனால், இன்று, ஜான் மெக்கெயின், தனது தோல்வியை ஒப்புக் கொண்டு ஒரு பேச்சு பேசினாரு. ரொம்ப அருமையா இருந்தது.
    கூடியிருந்தவர்கள், ஒபாமா பேரைக் கேட்டதும், கேலி செய்ததை, தவறு என்று சுட்டிக் காட்டி, ஆனது ஆயிடுச்சு, இனி வரும் நாட்களில் எல்லாரும், ஒபாமா பின்னால் இருந்து, நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லணும்னு எல்லாருகிட்டையும் கேட்டுக்கிட்டாரு.
    புல்லரிச்சிடுச்சு. இவரே ஜெயிச்சிருந்தா நல்லா இருந்திருக்குமோன்னு உள்ளுக்குள்ள தோணிச்சு. Salutes McCain! உங்க தேசப்பற்று அபாரம். நீங்க சேந்திருக்கும் கும்பல்தான் சரியில்லை.

    தொரை தொரைதாங்க!

    எவ்வளோ, டீசண்ட்டான ஒரு தேர்தல் முறை.
    அதற்கு முத்தாய்ப்பு வைத்த மாதிரி, ஜான் மெக்கியின் மற்றும் பராக் ஒபாமாவின் பேச்சு.

    கலக்கல்!

    அமெரிக்கா நல்ல ஊருண்ணே! நடுவுல அப்பப்ப சருக்கினாலும், மக்கள் சுதாரிச்சிடறாங்க. அதனாலதான், இவ்ளோ வருஷமா, ஸ்ட்ராங்கா நிக்கறாங்க!

    நாம கத்துக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு!

    வாழ்க ஜனநாயகம்!

    பி.கு: இங்க கலிஃபோர்னியாவுல, இந்த மாதிரி தேர்தலின் போது, மாநிலத்தில் செயல் படுத்தவேண்டிய, மிகப் பெரிய திட்டப் பணிகளுக்கு, மக்கள் கிட்ட வாக்கு சேகரிக்கறாங்க.
    இதில் சிலவற்றின் முடிவுகள், personally, எனக்கு ஏற்புடையதாய் இல்லை ;)

    Proposition 1A - High-Speed Train - வடக்கு~தெற்கு கலிஃபோர்னியாவை இணைக்கும் அதிவேக ரயில் திட்டம் - 51% voted NO! :(
    Proposition 2 - Treatment of Farm Animals - ஆடு, மாடு, கோழி, பன்றி, மாமிசம்/முட்டைக்காக வளக்கும்போது, அதை சின்ன கூண்டில் போட்டு சித்தரவதை பண்ணாம, சந்தோஷமா வளத்துட்டு, அப்பரம் கசாப் பண்ணனும். - 62% voted YES! :)
    Proposition 3 - Children's Hospital Bonds - குழந்தைகள் ஆஸ்பத்திரி மேம்பாடு - 51% voted NO :(
    Proposition 4 - Minor Abortion - 18 வயது நிரம்பாத பெண்கள், அபார்ஷன் செய்து கொள்ளுமுன், பெற்றோறிடம் அறிவிக்கச் சட்டம். - 51% voted No! :)
    Proposition 7 - Renewable Energy Generation - எனர்ஜி கொம்பேனியர், பெட்ரோல் அல்லாது, சூரிய ஒளி, காற்று போன்ற, alternate எனர்ஜியை பெருவாரியாக உற்பத்தி செய்யவேண்டும் - 66% voted NO! :(((((((
    Proposition 8 - Same-Sex Marriage Ban - 54% voted Yes! :(((((
    Proposition 10 - Alternative Fuel Vehicles - எலெக்ட்ரிக் கார்கள், ஹைப்ரிட் கார்கள் உற்பத்திக்கு ஊக்கத்தொகை - 63% voted No :((

    மேலதிக விவரங்கள் இங்கே:

    Monday, November 03, 2008

    லகுடபாண்டிகள்!

    இதுக்கு ஏன் லகுடபாண்டின்னு தலைப்பு வைக்கறேன்னு எனக்கே தெரியல. ஆனா, சில பேர அப்படி சொல்லணும் போல தோணிச்சு.
    இம்சை அரசன் புலிகேசில, மந்திரியா வந்து, உருப்படாத ஐடியாஸெல்லாம் அள்ளி வீசுவாரே, அவரு பேரு லகுடபாண்டின்னு நினைவு.

    நம்ம மத்தியில், தண்ட ஐடியாஸெல்லாம், யாரும் அள்ளி வீசல. ஆனா, எல்லாத்திலையும் குத்தம் கண்டுபிடிக்கும், சிலரை, "லகுடபாண்டியாரே"ன்னு கூப்பிடணும் போல இருக்கு. :)

    சமீபத்தில் நடந்த நடிகர்களின் உண்ணாவிரதப் போராட்டம், நமது லகுடபாண்டிகளுக்கு ஒரு உதாரணம்.
    * ஈழப் ப்ரச்சனையை கண்டுக்கலன்னா குத்தம்
    * கண்டுக்கிட்டு தந்தி கிந்தி அடிக்கச் சொன்னாலும் குத்தம்
    * பதினெட்டு பட்டி கூட்டி முடிவெடுத்து ஒரு தீர்மானம் நெறைவேத்தினாலும் குத்தம்
    * தீர்மானத்திலிருந்து பல்ட்டி அடிச்சாலும் குத்தம்
    * நடிகர்கள் இத்த கண்டுக்கலன்னாலும் குத்தம்
    * கண்டுக்கினு உண்ணாவிரதம் இருந்தாலும் குத்தம்
    * உண்னாவிரதத்தோட மொய்ப்பணம் எழுதினாலும் குத்தம்
    * மொய்ப்பணம் எழுதலன்னாலும் குத்தம்
    * 10 லட்சம் கொடுத்தாலும் குத்தம், நூறு ரூவா கொடுத்தாலும் குத்தம்

    லகுடபாண்டிகளே, எதுதாங்க சரி?

    முப்பது வருஷமா ஒரு ப்ரச்சனைக்கு முடிவே இல்லாம, இழுத்திக்கிட்டு இருக்கு. இவ்ளோ வருஷம் இழுத்து பலரும் பல ஆதாயங்கள் பாத்தாச்சு. பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் அப்படியேதான் இருக்காங்க. புலிகளுக்கு ஆதரவாவோ, againstஆவோ நான் பேசலாமான்னு தெரியல. பதிவர்களுக்கு எதாச்சும் கட்டுப்பாடு இருக்கா சாரே? இருந்தாலும், நெனைக்கரத சொல்லிடறேன்.
    "Natural Borders" இல்லாம இருக்கர ஒரு நிலத்தில், இரண்டு தனித் தனி நாடு உருவாக்கினாலும், இவ்வளவு காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள், எப்படிதான் சேந்து இருக்க முடியும்? இது, லேசுல, முடியர விஷயமா? இப்படியே இது இழுத்துக்கிட்டு இருந்தா, எவ்வளவு நாள்தான் தாக்கு பிடிப்பாங்க.
    அடுத்த தலைமுறையும் இப்படித்தான் கஷ்டப் படணுமா? சுமுகமான வேர தீர்வே இல்லையா இதுக்கு?

    இந்த விஷயத்தில், இந்திய அரசு எடுத்துக் கொண்டுள்ள நிலை, ரொம்ப மட்டமானது. அமெரிக்கா மாதிரி, நாம இண்டர்நேஷனல் போலீஸாகணும்னு இல்லை, ஆனா, கொஞ்சமாவது கேள்வி கேக்கணும். நம்ம இருப்பை காட்டணும்.
    அமெரிக்கா இராக்கை போட்டுத்தாங்கும்போது, ஒரு உதவாக்கரை நாடும், கேள்வி கேட்காததால், அங்கே ஒரு லட்சம், பொது மக்கள் உயிரிழக்க நேரிட்டது.
    நாளைக்கு, இந்தியாவிலும், டபிள்யூ.எம்.டீ இருக்குன்னு எவனாவது கதை கட்டி விட்டா, நம்மளையும் போட்டுத்தாக்குவாங்க, அப்ப வேற எந்த உதவாக்கரையும் கேள்வி கேக்கலன்னா, நம்ம கதி அதோ கதி.

    பொதுமக்களாகிய நமக்கும் பொறுப்பு இருக்கு. வெறும் ஈழப் ப்ரச்சனைன்னு இல்லை, நாட்டில் நடக்கும் எந்த்த ப்ரச்சனைக்கும், நாம் நியாயம்னு நெனைக்கரது நடக்கலன்னா, கொடி பிடிக்கணும். வீதிக்கு வரணும், குரல் எழுப்பணும், கேள்வி கேக்கணும்.

    எவனுக்கோ என்னமோ ஆவுது, நமக்கென்னன்னா, நாளைக்கு, நம்ம வீட்டுல ஒரு ப்ரச்சனை வரும்போது, மத்த எல்லாரும், அக்கடான்னுதான் கெடப்பான்.

    ஈழப் ப்ரச்சனைக்கு, நடிகர்கள், வீதியில் இறங்கி, உண்ணாவிரதம் இருக்கரதெல்லாம் வரவேற்க்கப் படவேண்டியது. நாட்ல என்ன ப்ரச்சனை நடந்தாலும், போராடரதுக்கு, நடிகர்களாவது நமக்கு இருக்காங்களேன்னு சந்தோஷப் பட்டுக்க வேண்டியதுதான்.

    ஒரு டாக்டரோ, கல்லூரி மாணவனோ, வங்கி ஊழியனோ, ஆட்டோ/பஸ் ஓட்டறவனோ, பைலட்டோ, பள்ளி மாணவனோ, ஆணி புடுங்கரவனோ, இந்த மாதிரி வீதிக்கு வந்து கொடிதூக்கி கோஷம் போட்டு, ஜெயிலுக்கு போனான்னு செய்தி வருதா?
    வரணும். அப்பதான், விடிவு காலம் வரும்.

    Sickoன்னு ஒரு டாக்குமெண்டரி பாத்தேன். மைக்கேல் மூர் எடுத்த படம் இது. அமெரிக்க, மருத்துவ செலவுகளும், இங்கிருக்கும் இன்ஷூரன்ஸும், சாமான்யனுக்கு, மருத்துவ வசதிகளை எப்படி எட்டாக் கனியா ஆக்கி வச்சிருக்குன்னு விலாவாரியா எடுத்துச் சொல்லறாரு.
    அண்டை நாடான கனடாவிலும், U.Kவிலும், Franceலும், க்யூபாவிலும், எல்லோருக்கும், மருத்துவ வசதி இலவசமா கிட்டுவது போல், அவர்களின், அரசாங்கம் செஞ்சு கொடுத்திருக்கு.
    அமெரிக்காவில், எல்லா சிகிச்சையும், இன்ஷூரன்ஸ் நிறுவனம், ஒத்துக் கொண்டால்தான், சாமான்யனுக்கு செய்து கொள்ள முடியும். வெறும் கைகாசு கொண்டு, எந்த சிகிச்சையும் செய்து கொள்ள கட்டுப்படி ஆகாது.
    உதாரணத்துக்கு,
    * appendicitis ஆப்பரேஷன் சில லட்சங்கள் ஆகும்.
    * kidney stones ஆப்பரேஷன், கிட்டத்தட்ட 10 லட்சம்.
    * heart attack வந்து எமெர்ஜன்ஸி போனவருக்கு, ஒரு கோடி ரூவாய்க்கு பில் வந்தது.
    * காது கேட்காத சிறு குழந்தைக்கு, இரண்டு காதிலும் ஒரு கருவி பொறுத்தினால் சரியாகும் என்பது டாக்டரின் ஆலோசனை. ஆனால், இன்ஷூரன்ஸ் நிறுவனம், ஒரு காதில் வச்சா போதும்னு, அதுக்கு மட்டும்தான் அனுமதி கொடுக்கறாங்க.

    இப்படி, இங்கிருக்கும், பணம் பிடுங்கும், இன்ஷூரன்ஸ் பத்தி சொல்லிக்கிட்டே போகலாம்.

    ஒழுங்கா இருந்த, மருத்துவ வசதிகளை, இப்படி சீரழிஞ்சு போகவச்சதன், பின்னணியில், நிக்ஸன் என்ற ஒரு அரசியல் பெருச்சாளி இருப்பதாய் கேள்வி.

    Sorry, I digress.

    இந்த மருத்துவ வசதி அமெரிக்காவில் இப்படி சீரழிஞ்சு கிடக்க, கனடா, ஐரோப்பா, க்யூபாலையெல்லாம் மட்டும், மக்களுக்கு சாதகமான வகையில் இருக்கே எப்படி?

    மிக முக்கியமான காரணம். அந்த நாட்டின் அரசியல் தலைகளும், மற்ற visionariesம் தான்.
    க்யூபாவில், ஃபிடல் காஸ்ட்ரோவை, வில்லன் மாதிரி, ஊடகங்கள் காட்டி வச்சிருக்காங்க. ஆனா, அந்தாளு, அவர் ஊரின், மொத்த ஜனத்தொகைக்கும், இலவச மருத்துவ வசதி செஞ்சு வச்சிருக்காரு.
    அமெரிக்காவில்,$120க்கு கிடைக்கும், ஒரு ஆஸ்மா மரூந்து, க்யூபாவில், $0.05க்கு கிடைக்குதாம்.

    பெரிய அரசியல் தலைவனோ, Visionaryயோ இல்லாத நாட்டுல இது எப்படி சாத்தியம்?
    France ஒரு உதாரணம்.
    அங்க, இந்த மாதிரி நல்ல திட்டங்கள் நிறைவேற, காரணமா இருக்கரது, அங்கு இருக்கும் பொதுமக்கள் தான்.
    எந்த ப்ரச்சனையாயிருந்தாலும், இவங்க, லட்சக்கணக்குல, வீதியில தெரண்டுடுவாங்களாம்.
    கத்தர கத்துல, அரசாங்கமே அரண்டு போயிடுமாம்.
    அதனால, ஒவ்வொரு திட்டம் தீட்டி அறிவிக்கரதுக்கு முன்னாடி, தீர ஆலோசிச்சு, பொதுமக்களுக்கு நல்லதான்னு ஆராஞ்சப்பரம்தான் அறிவிப்பே வருமாம்.

    நல்ல தலைவனோ, visionaryயோ கிட்டும் வரை, இந்தியாவிலும், பொதுமக்கள் அனைவரும், கேள்விகள் கேட்கணும்.

    அப்பதான், விடிவு பிறக்கும்!!!

    ஸோ, லகுடபாண்டிகளே, கேள்வி கேளுங்க. எல்லாத்துலையும் குத்தம் கண்டுபிடிக்காதீங்க. கொடியத் தூக்குங்க!

    சரிதானே? ;)

    "I began revolution with 82 men. If I had to do it again, I do it with 10 or 15 and absolute faith. It does not matter how small you are if you have faith and plan of action" - Fidel Castro