recent posts...

Friday, June 27, 2008

Bill Gates, my man!

as you know, today is billG's last day at work.
needless to say, Bill Gates has helped shape many of our lives.

IT would have taken a different route without the inspiring works of billG.

click image to view videos on billG from microsoft.com



It's interesting to see Google bringing out, mostly, negative articles when you search for bill gates :)

> This article has interesting tit bits.
> more interesting stuff about the early days of Gates
> this has some funny stuff about his 'richest man' flavour.
> billG's farewell speech

------- ------- ------- ------- -------
in 1975,
Ballmer said he almost quit soon after joining Microsoft because his parents didn't want him to drop out of Stanford.
Gates said to him: ``You don't get it. You don't get it. You don't get it. We're going to put a computer on every desk, in every home,'' Ballmer said.
------- ------- ------- ------- -------
coincidentally, PC count, reached the 1 billion mark, sometime this year.

anyway, Long live the mighty Bill Gates and salutes to all his past and future innovations!

Share other interesting articles, about Gates, if you see them. thanks.

funny video on billGs' post-microsoft life. :)

Thursday, June 26, 2008

பதிவர்களின் விறுவிறுப்பான திருப்புமுனைகள்!


ஆகாககாகா. உங்க வாழ்க்கைல நடந்த பெரீரீரீய திருப்புமுனையைப் பத்தி யோசிச்சு சுவாரஸ்யமா எழுதுங்கன்னு கேட்டிருந்தேன்.

பதிவர்கள் தங்கள் ஃப்ளாஷ் பாக்கை, தத்ரூபமா சொல்லி, பதிவுகள் போட ஆரம்பிச்சிட்டாங்க.
வெரி டச்சிங்!

வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர்களுக்கு, நன்றி சொல்லும் விதமாய் இந்தப் பதிவுகள் அமையட்டும்னு சொல்லியிருந்தேன்.

சிலருக்கு, இந்த திருப்புமுனைகள், நெகட்டிவ்வா அமஞ்சிருந்தாலும், அதையே பாஸிட்டிவ்வா எடுத்துக்கிட்டு, சாதிச்சு காட்டியிருப்பாங்க.

இதுவரை, 'பெரீரீரீய திருப்புமுனை' பதிந்தவர்கள்:

1) குமரன் - M.E சேர்ந்த கதையும், தான் தொடங்கிய காலேஜ் பஜனை கோஷ்டியும் அலசியிருக்காரு.
2) புதுகைத் தென்றல் - பூரியால் நிகழ்ந்த சோகத்தை சொல்லியிருக்காங்க.
3) நெல்லை சிவா - நல்ல வாத்தியாரால் அடைந்த நன்மைகளை டச்சிங்கா சொல்லியிருக்காரு. 'கற்றது தமிழினால்' நிகழ்ந்த ஆரம்பகால இடையூறும், அதைத் தாண்டி முன்னேறிய விதமும் நெகிழ்ச்சி.
4) சரவணகுமரன் - ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
5) ?
..
..
..
X) சர்வேசன் - வாழ்க்கையை மாற்றிய 'அந்த நாள்' பற்றி அலசப் போறாரு.

அப்ப நீங்க? எல்லாரும் எழுதுங்க. open invitation to all.

உங்கள் வாழ்வின் மிக மிக மிகப் பெரீரீரீய திருப்புமுனை எதுன்னு சொல்லுங்க. அதுக்கு காரணமானவங்க யாருன்னு சொல்லுங்க. திருப்புமுனைல, வேற பக்கம் திரும்பியிருந்தா என்ன ஆகியிருக்கலாம்னும் சொல்லுங்க. சுவாரஸ்யமா சொல்லுங்க. உண்மையே சொல்லுங்க.

பி.கு1: உங்கள் அபிமான பதிவர்களை, "பெரீரீரீய திருப்புமுனை" எழுதச் சொல்லி கேட்டுக் கொ-ல்-ல-வும். :) ( இதோ, பின்னூட்டத் தொல்லைக்கு நான் கெளம்பிட்டேன் ).

பி.கு2: சிறிலின் அறிவியல் சிறுகதைப் போட்டி.

Wednesday, June 25, 2008

பதிவெழுத ஒரு ஜூப்பர் ஐடியா! வாங்க வாங்க!

என்னடா எழுதலாம்னு மண்டை கொடஞ்சு போகும்போதெல்லாம் Canonம், யூ-ட்யூபும் கை கொடுக்கும்.

சர்வே எடுக்கவும் இப்பெல்லாம் பெரிய மேட்டர் சிக்கரதில்லை.
தசாவதாரம் சர்வே (வலப்பக்கம் பாருங்க), இன்னும் கொஞ்ச நாளுக்கு ஓடும்.

இப்படி ரொம்ப நொந்துபோய் கெடக்கும்போதுதான், தலைக்கு மேல பல்பு எரிஞ்சுது.
ஆணி புடுங்கல், வாழ்க்கை புடுங்கல் போன்ற பல தொல்லைகள் எப்பவும் கூடவே இருந்தாலும், எங்கயோ பொறந்து, எப்படியோ வளந்து, இன்னிக்கு ஓரளவுக்கு சொகமாவே இருக்கரத நெனச்சா மலைப்பாவே இருக்கு.

நான் ஆணிபுடுங்க கத்துக்கிட்ட நிறுவனத்தின் 'We change lives' என்னும் சூளுரை (motto) இன்னிக்கு என்னைப் பொறுத்த வரை உண்மையாவே இருக்கு.

எவரெஸ்ட் சிகரத்தை தொடல, என் குடும்பத்தைத் தவிர வேற யாருக்கும் பெருசா ப்ரயோஜனமா இருந்ததில்லைன்னாலும், என்னளவில் பாத்தா, அந்த நாள் முதல், இந்த நாள் வரை கூட்டிக் கழிச்சு பாத்தா, ஒரு நல்ல முன்னேற்றம் அடைந்த மாதிரிதான் இருக்கு.

நல்லா படிச்ச சேஷாத்ரியும், படிக்கவே கொடுத்து வைக்காத அமலனும் இன்னும் அடிமட்டத்தில் இருக்கும்போது, என் முன்னேற்றம் கொஞ்சம் மலைப்பே.

இந்த 'ஓரளவு' முன்னேற்றத்துக்கு காரணமானவங்க பலர் இருந்தாலும், வாழ்க்கையில் நடக்கும் சில மிகப் பெரிய திருப்புமுனைகள்தான், நம் எதிர்காலத்தை தீர்மானித்து, நமது நாட்களை வேறு மாதிரி அமைய காரணிகளாகும்.

என்னைப் பொறுத்தவரை என் நண்பன் ஒருவனை சந்தித்த 'அந்த நாள்' ஒரு பெரிய திருப்புமுனையை அமைத்துத் தந்தது. (அதைப் பத்தி ஒரு பதிவு கூடிய விரைவில் வரும்).

நம்ம குமரனுக்கு, அவர் M.E படிக்கக் காரணமான நிகழ்வுகள், அவர் வாழ்வின் திருப்புமுனையை தந்ததாம்.

உங்களுக்கு எப்படி?

உங்கள் வாழ்வின் மிக மிக மிகப் பெரீரீரீய திருப்புமுனை எதுன்னு சொல்லுங்க. அதுக்கு காரணமானவங்க யாருன்னு சொல்லுங்க. திருப்புமுனைல, வேற பக்கம் திரும்பியிருந்தா என்ன ஆகியிருக்கலாம்னும் சொல்லுங்க. சுவாரஸ்யமா சொல்லுங்க. உண்மையே சொல்லுங்க.

பதிவெழுத ஜூப்பர் ஐடியா இதுதான்.

எல்லாருக்கும், இதைப் பத்தி எழுத, ஓப்பன் இன்விடேஷன்!

மனம் விட்டு எழுதுங்க.

உங்கள் திருப்புமுனையை அமைத்துத் தந்த அந்த சம்பவம்/நபர்களுக்கு, நீங்கள் மனமுவந்து நன்றி சொல்லும் விதமாக பதிவு இருக்கட்டும்.
அதைப் படிப்பவர்களுக்கு, "ஆஹா, நாமும் இந்த மாதிரி யார் வாழ்க்கையாவது திருப்பி விடணும்"னு தோணட்டும்.


பதிவின் தலைப்பு: "பெரீரீரீய திருப்புமுனை" என்று வைத்து, labelல் "திருப்புமுனை" வைத்தால், தன்யனாவேன்.

எழுதி முடித்ததும் உரலை இங்கு பின்னூட்டினால், எல்லாத்தையும் கோத்து, "பதிவர்களின் பெரீரீரீரீரீ...ய்ய்ய திருப்புமுனைகள்"னு ஒரு பதிவப் போட்டு வரலாற்றில் இடம்பிடிப்பேன் :)

பி.கு1: ஒருத்தர்கூட இந்த ஜோதீல ஐக்கியமாவலன்னா, என் பதிவுலக வாழ்க்கையில் இது பெரீரீரீய திருப்புமுனையாயிடும் சொல்லிப்புட்டேன்! :)

பி.கு2: "சர்வேசன், எப்படிய்யா இப்படியெல்லாம் ஐடியா வருது. ஜூப்பருப்பா" என்னும் பின்னூட்டங்களைத் தவிர்க்கவும். ப்ளீஸ் ஆல்ஸோ அவாய்ட், ஆனந்தக் கண்ணீர்ஸ்.

பி.கு3: இதைப் படிக்கும் வாசகர்கள், உங்கள் அபிமான பதிவர்களிடம், "You gotta do this"னு இந்த உரலை தெரியப் படுத்துங்கள்! :)

பி.கு4: சிறிலின் அறிவியல் சிறுகதைப் போட்டி - பங்கு பெற மறவாதீர். பரிசெல்லாம் தருவாரு. :)

Tuesday, June 24, 2008

மெடிடேஷன் செய்வது எப்படி?

ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் நிம்மதி இல்லன்னா சரிவருமா?

அமைதியும், நிம்மதியும், தெளிவும் பிறக்க, ஆழ்ந்த தியானம் உதவுமாம்.

நான் இன்னும் ட்ரை பண்ணல, ட்ரை பண்ணி விஷயம் தெரிஞ்சவங்க இருந்தா ஏதாவது சூட்சமம் சொல்லிட்டுப் போங்க.

கீழே, சிம்பிளா, இந்த மேட்டரை துவங்குவது எப்படின்னு படம் காட்டியிருக்காங்க.

நம்பர மாதிரிதான் இருக்கு. முயலவும்.

-ஷ்ரீ ஷ்ரீ ஷ்ரீ ஷ்ரீ ஷ்ரீ சர்வேசன்!

Wednesday, June 18, 2008

ரோஜா with bodyguards

மிகுந்த சிரமப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது.

புதர்களின் நடுவே புகுந்து மேலேயிருந்து எடுத்தது.

வெயில் அதிகமாய் வரண்டு போயிருந்ததால், ரோஜா மேல், தண்ணீர் தெளிக்கப்பட்டு எடுத்தது.

சுத்தியிருக்கும் பாடிகார்ட்ஸ் இன்னும் மூன்று நாட்களில் வளர்ந்து ஆளாகி விட்டால், அவர்களையும் க்ளிக்கி அரங்கேற்றுவேன் என்று சூளுரைக்கிறேன்.

படத்தை க்ளிக்கினால் என் ஃபிளிக்கர் பக்கத்தில் பெரிதாய் பாக்கலாம்.


பி.கு: பதிவர் விஜய் எனக்கு ரொம்ப மரியாதை கொடுத்து, ஐயான்னெல்லாம் சொல்லி கருத்து கேட்டிருக்காரு. நீங்களும் போய் படிச்சு கருத்து சொல்லி, அவரை ஒரு பாப்புலர் பதிவராக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
--------------------
Vijay said...
ஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.

"கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்
போராளியின் வெற்றிப்பேரிகை"

http://pugaippezhai.blogspot.com/2008/06/blog-post_3130.html

அன்புடன்,
விஜய்
கோவை

-------------------

Tuesday, June 17, 2008

புஷ்ஷாவதாரம் - couldn't resist :)

அருமையான டயலாக்ஸ்.கவனிச்சுக் கேளுங்க.


இது கலக்கல். ரியல் புஷ் பக்கத்துல, அவதார புஷ். கலக்கியிருக்காரு.


Will Farrelன் கிண்டல் இது.


இது ரியல் அவதாரம், கொஞ்சம் எடிட்டட். சூப்பரா பண்ணியிருக்காங்க.


ரியல் புஷ் - நல்ல காமெடி.


இதில் புஷ், தன்னைப் பற்றி வரும் கிண்டல்கள் பரவாயில்லை, தான் ஒண்ணும் அதை பெருசா எடுத்துக்கலைன்னு சொல்றாரு. தொடர்ந்து வரும்,கிண்டல்கள்ள, முக்கியமா, 3:40 நிமிடத்தில் நடக்கரதைப் பாருங்க. ஜூப்பர் காமெடி.


புஷ் கலக்கல்தான்! சும்மா லூஸ் மாதிரி எல்லாரும் சித்தரித்தாலும், இவ்வளவு பெரிய பதவியில் ரெண்டு தடவை ஜெயிச்சு வந்து, பல பேரை ஆட்டிப் படைக்குரதெல்லாம் லேசுபட்ட விஷயம் இல்லை.

ஆனால், இவ்வளவு வலிமை வாய்ந்த ஜனாதிபதியையே கிண்டலடிப்பதெல்லாம் அமெரிக்கால மட்டும்தான் பாஸிபிள்!! வாழ்க இவர்களின் ஃப்ரீடம் ஆப் *.*!

பி.கு: சீரியஸா, ஏதோ கொஞ்சம் யோசிச்சு கேயானவர் பத்தி பதிவப் போட்ட யாரும் கண்டுக்க மாட்றீங்க. மொக்கையே வெல்லும் போல இருக்கு! :)

Monday, June 16, 2008

SSM ~ Same Sex Marriage ~ கேயானவர்!

California'ல ஓரினத் திருமணங்கள் சட்ட ரீதியா அனுமதிச்சிருக்காங்க. பல வருஷ போராட்டத்துக்குப்பரம், இங்க இருக்கர 'gay' மக்களுக்கு இந்த அங்கீகாரம் கெடச்சிருக்கு.

அமெரிக்கா வரும் வரைக்கும், இந்த மாதிரி ஒரு விஷயம் உலகத்தில், இருக்கரதே தெரியாமத்தான் இருந்தேன். ஆனா, திருநங்கைகள் பத்தி மட்டும் ஒரு இளக்காரமான பார்வை இருந்தது. அதுவும், இணையத்துக்கு வந்த பிறகு, அவங்க பக்க சோகங்களும், உண்மைகளும் தெரிஞ்சதும் மாறியிருந்தது.

சில வருஷங்களுக்கு முன், அமெரிக்கா வந்ததும், பசங்க கொடுத்த முதல் 'கல்ச்சர் ஷாக்', "மச்சி, அவன் கிட்ட சாக்கிரதையா இருந்துக்கோ, ஆளு gay"ங்கரதுதான்.
"அப்படீன்னா?"ன்னு அப்ராணியா கேட்ட எனக்கு, தேவைக்கு அதிகமாவே வெளக்கம் கொடுத்து, உஷார் படுத்தினாங்க.

அடடா, இப்படியெல்லாம் கூட இருக்காங்களான்னு வியப்பா இருந்தது.

உண்மைகள் தெரியாமல், சீ-சீ-இந்தப் பழம் புளிக்கும்னு பல விஷயங்கள் நாம ஒதுக்கி வைப்பதுண்டு. அந்த மாதிரி ஒரு விஷயம் தான் இந்த கேயிசம்.

நான் வேலை செய்த அலுவலகத்தில், எனக்குத் தெரிஞ்சு ரெண்டு பேரு, இந்த வகையராவா இருந்தாங்க. ஒருத்தர், பல வருஷமா, ஜோடியுடன் வாழ்பவர்; இன்னொருவர் திருமணம் ஆகி, குழைந்தையெல்லாம் பிறந்த பிறகு, தன் உண்மை நிலை அறிந்து, கேயானவர்.

இவங்க ரெண்டு பேரும், தங்கள் உண்மை நிலையை மறைச்சு வச்சதெல்லாம் இல்லை. ரொம்ப ஓப்பனாவே எல்லாருக்கும் தங்களின், கேயிசத்தை தெரிவித்து வாழ்ந்தவங்க தான்.

ஆரம்பத்தில், எனக்கென்னமோ, இதெல்லாம் இவனுங்க கொழுப்பெடுத்து இல்லாத ஒண்ணை மனதில் கற்பித்துக் கொண்டு, ஒரு பாசாங்கு வாழ்க்கை வாழர மாதிரி பட்டுது. என்ன சுத்தி இருக்கும் நண்பர்களில் பலரும் அவ்வாரே நெனைச்சுக்கிட்டு இருந்தாங்க.

ஆனால், சில வருடங்கள் இவங்களோடயெல்லாம் ஒண்ணா வேலை செஞ்சு, அவங்க பழக்க வழக்கங்களையும், அவங்க மேனரிஸம் எல்லாம் பாத்த பிறகு ஒரைச்ச ஒரு விஷயம், இந்த கேயிசம், இயற்கையின் கோளாறான விளையாட்டில் ஒன்றென்பது.

இது ஒரு பயோ-நிலை ரீதியான உடலில் ஏற்படும் மாற்றத்தினால் விளையும் நிகழ்வு என்பது, சமீபத்தில் நிரூபணமாயுள்ளதாம்.
இன்னிக்கு வந்த ஒரு செய்தி, இந்த மாதிரி இருப்பவர்களின் மூளை ஸ்கேன் செய்ததில், கே-ஆண்களின் மூளையும், நார்மல்-பெண்களின் மூளையிலும் பல ஒற்றுமைகள் இருக்காம்.
அதே மாதிரி, லெஸ்பியன்-பெண்களின் மூளையும், நார்மல்-ஆண்களின் மூளையிலும் பல ஒற்றுமைகள் இருக்காம்.
இவர்களின், செக்ஸுவல் நாட்டத்தை இந்த மூளை ஒற்றுமைகள் குறிப்பிடுதாம்.

இயற்கையின் பலகோடி கோளாறுகளில் இதுவும் ஒண்ணு போலயிருக்கு.
கோளாறுகளினால் ஆன இந்த விசித்திரங்கள் கொஞ்சம் கசப்பான விஷயம் தான்.
ஆனா, இதற்குள், வேறு வழியில்லாமல், இழுக்கப்படுபவர்களின் நிலமை ரொம்பக் கஷ்டம்.

அமெரிக்கா மாதிரி, மெத்தப் படித்த 'அதிமேதாவிகள்' வாழும் நாட்டிலும் கூட, இது ஒரு கேலியான விஷயமாகவே பாக்கறாங்க.
மற்ற நாடுகளில், இந்த நிலையில் மாட்டிக்கிட்டவங்க நெலமை ரொம்பவே கஷ்டம்.

இவங்களும், சகஜ நிலை வாழ்க்கைக்குள் வந்து, சாதாரணமாய் வாழ, சில நூறு ஆண்டுகள் ஆகலாம்.

ஆனா, அதுக்குள்ள, மாத்திரை மருந்து கண்டுபிடிச்சுடுவாங்க.
பிறப்பிலேயே, இதக் கண்டுபிடிச்சு, பெற்றோர்கள், தங்கள் சிசுக்களை, இப்படியோ, அப்படியோ மாற்றும் நிலை கூட உருவாகலாம். யாரு கண்டா?

என்னங்க சொல்றீங்க?

Sunday, June 15, 2008

தசாவதாரம் - திரை விமர்சனம் (no Spoilers, only எரிச்சல்ஸ்)

சனி இரவு 9.30 மணி ஆட்டம். வழக்கத்துக்குமாறான $15 டிக்கெட் விலை மன உளைச்சலை தந்திருந்தாலும், கஸின், தன் செலவில் டிக்கெட்டை முன்பதிவு செய்து, நான் பணம் திருப்பிக் கொடுக்கும்போது வாங்க மறுத்ததால், அந்த உபாதையில் இருந்து விடுபட்டிருந்தேன்.

நிரம்பி வழிந்த கொட்டகையில், மூன்றாம் வரிசையில் நட்ட நடூ சீட்.
ஏழாம் வரிசையில் வலது ஓர இடம் இருந்தாலும், எனக்கு நடூல ஒக்காந்து பாத்தாதான் பிடிக்கும் என்பதால், மூன்றாம் வரிசை தேர்வு செய்யப்பட்டது.
(வெறும் கேளிக்கைக்காக மட்டுமல்ல. படம் பாத்து, விமர்சனம் எல்லாம் எழுதி, நாட்டு மக்களுக்கு ஒரு நர்செய்தி சொல்லணும்ல? அதுக்கு சரியான எடத்துல ஒக்காந்து படம் பாக்கணும்ல? ஸ்ஸ்ஸ், இந்த 'பதிவர்' கடமை ரொம்பப் படுத்துதுங்க :) ).

படத்தின் 'கதையம்சம்' (அது என்னான்னு புரியாதவங்க பலர் இருப்பாங்க) நல்லாவே இருந்தது.

"நடப்பவை நன்மைக்கே / எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கு"ங்கர மாதிரியான, என் நம்பிக்கையோடு ஒத்துப் போவதால், இது பிடிச்சுதான்னு தெரியல.

படம் ஆரம்பிச்சதும், எல்லா விமர்சனத்திலையும் பல தடவை சொல்லப்பட்ட அந்த சென்னை ஏரியல் ஷாட் நல்லாயிருந்தது. ஆனா, விர் விர்னு கேமரா சுத்தி சுத்தி சுழலும்போது, படம் பல நொடிகள் blurredஆ இருக்கர மாதிரி இருந்தது. மூன்றாம் வரிசை இருக்கையினால் அப்படியாங்கரது தெரியல. ஆனா, படம் முழுக்க இந்த ஏரியல் ஷாட் டெக்னிக், பல இடங்களில் இருந்தது. சில பல இடங்களில், இம்சையாவே இருந்தது எனக்கு.

குலோத்துங்கசோழன் கால நிகழ்வுகளின் வண்ணக் கலவையும், அந்தக் கமலின் கெட்டப்பும் வெகுவாகக் கவர்ந்தன.
படகு/நதி/கடல் சவாரிக் காட்சிகள், நல்ல கிராஃபிக்ஸ். சில இடங்களில் பல்லை இளித்திருந்தாலும், அமோக முயற்சி.

பின்னணி இசை, பின்னியிருந்தாரு தேவிஸ்ரீ பிரசாத்.
பாடல்கள், சுமார். முகுந்தா முகுந்தா முணுமுணுக்க வைத்தது.

சோழர் கால சிச்சுவேஷனுக்கு, கல்லை மட்டும் கண்டால், சரிபடலை. (கொடுத்திருந்தா, ராசா கலக்கியிருப்பாரு என்பது அடியேன் எண்ணம். பின்னணி இசையும், பாடலும், அந்தப் பீரியடுக்கு கூட்டிட்டுப் போல, கேமரா/கிராபிக்ஸ் கூட்டிட்டுப் போன மாதிரி).



புதுசா ஸ்கிரீன்ல யாரப் பாத்தாலும், இது கமலா? இது கமலான்னு, பக்கத்து சீட்டு அம்மணி தொல்லை தாங்க முடியலை.
மல்லிகா ஷெராவத், அஸின், நாகேஷ், ஜெயப்ரதா, கே.ஆரைத் தவிர, மத்தவங்க யாரைப் பாத்தாலும், இது கமலா, இது கமலான்னு செம டார்ச்சர்.

இந்த பத்து அவதாரங்களெல்லாம், சும்மா ஒரு ஹைப்புக்காக செஞ்ச மாதிரிதான் தெரியுது.
ரியல்-கமல் விஞ்ஞானி, மற்றும் ஒரு மூணைத் தவிர (அம்பி, கறுப்பர், நாயுடு காரு) மத்ததெல்லாம் முதல் அறிமுகத்தில், சிரிப்பை வரவழைக்கும் கண்றாவி மேக்கப்படுன் வராங்க.
அவ்வை ஷண்முகி, இந்தியன் தாத்தா மேக்கப்பெல்லாம் எவ்வளவோ பரவால்ல.

இந்தியனில் சுகன்யாவுக்கு போட்டிருந்த கொடூர மேக்கப் மாதிரி தான், மத்த எல்லா கமல்களுக்கும்.
பாட்டி-கமல், ஆரம்பத்தில் எரிச்சலூட்டினாலும், பாக்க பாக்க பழகிட்டாங்க.

மைதாவுக்குப் பின்னால் இருக்கும் முகத்தில் என்ன நடிப்பை எதிர்பார்ப்பது?
ஆனா, கமலும், முடிஞ்சவரை, பாடி லாங்குவேஜில் மாற்றங்கள் காண்பித்து, ரொம்ப கொடூரமாக்காம காப்பாத்த முயற்சி பண்ணியிருக்காரு.
புஷ்ஷின் மேனரசிங்கள் சில, ரசிக்கும்படி இருந்தன.

ஆனா, இந்த, மைதா முக மேக்கப்புக்கு எப்படி எல்லாரும் ஒத்துக்கிட்டாங்க?
டைரக்டர் ரவிக்குமார், தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவியெல்லாம் ஒண்ணும் சொல்லலியா?
ப்ரிவ்யூ ஷோ பாத்த, பெருந்தகைகள் எல்லாம் கண்டுக்கலியான்னு ஆச்சரியமா இருக்கு?

யோசிச்சுப் பாத்தா, நம்ம மத்தியில் இருக்கும் பெரும்புள்ளி யாராவது, குண்டக்க மண்டக்க ஏதாச்சும் சொன்னாலும், சுத்தி நிக்கரவங்களெல்லாம், மண்டைய ஆட்டிட்டு, பல்லக் கடிச்சிக்கிட்டு, வாரே-வா சொல்லுவோம்ல. அதுமாதிரி, எல்லாரும், கமலுக்காக மண்டைய ஆட்டியிருக்கணும்னு தோணுது.

மைதா முகங்கள் was a big turn off for me.
நேபாளி பரத், was much much better than ஜப்பானி கமல்.

ஆனா, படத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்ல.

சரி, அப்ப ஒலகத் தரங்கறாங்களே, என் கண்ணுக்குத் தெரியலியான்னு கேக்கறீங்களா?

முதல் 15 நிமிடம், ஒலகத் தரம்.
கடைசி 15 நிமிடம், ஒலகத் தரம்.
தெலுகு நாயுடு, ஒலகத் தர ஆக்டிங் (குறிப்பா, நரசிம்மராவ்னு பெயரைக் கேட்டதும் அந்த முகபாவம், குப்பென்று சிரிப்பை வரவழைத்தது).
பாட்டியின் சில மேனரிஸம், ஒலகத் தரம் (க்ளைமாக்ஸ் ஒப்பாரியெல்லாம் நல்லாயிருந்தது)
கறுப்பர் பூவராகவனின், டயலாக் டெலிவரி ஒலகத் தரம். இவர் பேசும் வீரவசனங்களும் ரொம்ப டச்சிங்.
வாஷிங்டனில் நிகழும், சேஸிங், ஒலகத் தரம்.
'நடப்பவை நன்மைக்கே/எல்லா நிகழ்வுக்கும் ஒரு காரணம் இருக்கு'ங்கரத சொல்ல எடுத்துக்கிட்ட கருத்து, நல்ல தரம்.

பூவராகவன்: அவர் அறிமுகக் காட்சி, பளீர் வெளிச்சத்தில் திடீர்னு வந்து, சற்றும் எதிர்பாராத நேரத்தில், அடுக்கு வசனம் அள்ளி வீசுவாரு பாருங்க.
அடா அடா அடா அடா. He gave me a Jolt! புல்லரிச்சுது. Amazing delivery/performance/dialogues.
குடுத்த காசு, அங்கதான் மொதலாச்சு (என் கஸினுக்கு :) ).

அப்பறம், படம் முழுக்க வியாபித்திருக்கும், நாயுடுவின் அட்டகாசங்கள், நெஜமாவே அட்டகாசம். நல்லா அசத்தியிருக்காரு.

பூவராகவனும், நாயுடுவும் மட்டும் சேந்து, தசாவதாரம்-பார்ட்2 வந்தா, கண்டிப்பா, மொத நாள் மொத இருக்கையில் ஒக்காந்து, சொந்த செலவுல டிக்கெட் வாங்கி பாப்பேன். :)

காமெடி, பரவலா ஓ.கே. நிறைய இடத்தில் கிரேஸி டச் தெரியுது.
பாஸ்கரின், டங்கிலீஷ் டயலாக், சிரிப்பை வரவழைத்தது, பல இடத்தில்.
அசின், நல்ல பொறுத்தம்.

வேறென்ன? ஹாங், நுண்ணரசியல் விட்டுட்டனே.
அது எதுவும் என் கண்ணுக்குத் தெரியலீங்க. இதுக்கு முன்னாடி படிச்சிருந்த நுண்ணரசியல்கள், கோர்ட் கேஸ் செய்தியெல்லாம் நெனச்சப்போ, சிரிப்புதான் வருது.
வேலையத்தப் பயலுவ :)
(ஆனா, அன்பேசிவம் மாதிரி, இங்கயும், கிருத்துவர்களும், இஸ்லாமியர்களும் நல்லவங்க, இந்துக்கள் கெட்டவர்கள்னு, மேலோட்டமா காட்டறாங்களோ? - நாராயண நாராயண :) )

மொத்தத்தில், மைக்கேல் மதன காமராஜன் ஏற்படுத்திய நாலு-கமல் வியப்பு, இந்த பத்து கமல்கள் சேர்ந்தும் தர முடியவில்லை என்பது அடியேன் கருத்து.

யோசிச்சுப் பாத்தீங்கன்னா, நல்ல ஒலகத் தரப் படங்கள் எல்லாம், இவ்வளவு ஆர்பாட்டம் எல்லாம் இல்லாதவையாதான் இருக்கும்.

கமல் மாதிரி ஆளுங்க, கைல இவ்ளோ தெறமைய வச்சுக்கிட்டு, மைதா மாவு மேக்கப்பை நம்பி படம் எடுப்பதெல்லாம் ரொம்பவே அபத்தமாய் தெரிகிரது.

அந்த சோழ நாட்டு கெட்டப்பெல்லாம் வச்சு, பிசிரில்லாம, அழகா படம் எடுக்க முடியுதே, அந்த மாதிரி ஏதாவது வித்யாசமா முயற்சி பண்ணி முழுநீளப் படம் எடுக்கலாம் (ராஜராஜ சோழன்? ப்ளீஸ் ஸம்படி டேக்-இட் :)).

எனிவே, Wait for DVDன்னு சொல்லியிருப்பேன், முதல் 15 நிமிடமும், கடைசி 15 நிமிடங்களும் படத்தில் இல்லாதிருந்தால்.
அதனால, கண்டிப்பா தியேட்டர்ல பாருங்க, சில வாரங்கள் கழிச்சு.
எவ்வளவோ, பாத்துட்டோம், இத பாத்து தாங்கிக்க மாட்டமா? :)

பி.கு0: தம்பி உமாகதிர், என் மனசுல இருக்கரதை, எழுத்துப் பிழையில்லாம அழகா சொல்லியிருக்காரு பாருங்க :).

பி.கு1: படம் பாத்தவங்க, வலது பக்க வாக்குப்பெட்டியில், வாக்கு போட மறக்காதீங்க.

பி.கு2: பூவராகவன் கிட்ட, அவரோட சகபாடிகள் எல்லாம் தண்ணியடிச்சுக்கிட்டு ஜாலியா இருக்காங்கன்னு, பி.வாசு, வீடியோல காட்டிட்டு, இப்ப இதப் பாருன்னு இன்னொரு பக்கம் பாக்க சொல்லுவாரு. கமலும் திரும்புவாரு. அப்ப, அடுத்த சீன் வேற எங்கயோ போயிடும். திரும்ப பூவராகவன் சீனுக்கு வந்தா, அவர என்னத்த பாக்க சொல்றாருன்னு காட்டாமலே விட்டுட்டாங்களே. இல்ல, என் தியேட்டர்ல கத்திரி போட்டுட்டாங்களா? யாராச்சும் பாத்தவங்க சொல்லுங்கப்பா. ரொம்ப டென்ஷனா இருக்கு :)

பி.கு3 chaos theory படி, எல்லாம் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டிருக்கு. எல்லாத்துக்கு ஒரு காரணம் இருக்கு, blah blah blahன்னா, எதுவுமே தப்பில்லையோ? மணல் கொள்ளை, bio-war, உட்பட? :)

Thursday, June 12, 2008

கமலைப் பற்றி - சேரன், கிச்சா, திருமா, மதன்

ஜூடா இருக்கு. பாருங்க.
தசாவதாரத்தைப் பாக்க தூண்டுதலா அமையலாம் :)



இத ஏற்கனவே பாத்திருப்பீங்க:

தசாவதாரம் - தூளா?

ஹி.ஹி. The happening total damageனு சேதி வந்துடுச்சு. நான் தப்பிச்சேன்.

தசாவதாரம் பாத்தவங்கயெல்லாம் ஓஹோங்கறாங்க.

நம்மாளுங்கள்ள நெறைய பேரு படத்தை உடனே பாத்துடுவேன்னு சூளுரைச்சிருக்கீங்க.

பாத்தவங்க (மட்டும்), படம் எப்படின்னு சொல்லிட்டுப் போங்க... அப்பாலிக்கா, இந்த ஓட்டுப் பெட்டிய உங்க பதிவுலயும் போட்டு, வாக்கு சேகறீங்க. script கீழ கொடுத்திருக்கேன்.

நன்னி!



வெட்டி ஒட்டிக்கோங்க!




அப்படியே, சன் டி.வி. திரைவிமர்சனத்துல சொல்ற மாதிரி ஏதாவது ஒரு பன்ச் விமர்சனம் சொல்லிட்டுப் போங்க.
அதாவது இந்த மாதிரி,

தசாவதாரம், ரசிகர்களின் கவலையப் போக்கவந்த பதினோராவது கலியுக அவதாரம்.
தசாவதாரம், டோட்டல் டமாரம்.
இப்படி ஏதாச்சும்....

இதுவரை வந்த விமர்சனங்கள் கீழே:
1) theevu
2) பினாத்தல் சுரேஷ்
3) மோகன் கந்தசாமி(உடான்ஸ் விமர்சனம்)
4) வந்தியத்தேவன் - one-line vimarsanam
5) வெட்டிப்பயல்
6) நிருபர்
7) லக்கிலுக்
8) பைத்தியக்காரன்
9) G.Raghavan
10) மை ஃப்ரண்ட்
11) VSK
12) தம்பி
13) மண்வெட்டியான்
14) கானா பிரபா
15) சிந்தாநதி
16) ஓசை செல்லா
17) அபி அப்பா
18) இட்லி வடை
19) சிறில் அலெக்ஸ்
20) சர்வேசன்
21) இலவசக்கொத்தனார்

X) விமர்சனத்துக்கே - விமர்சனம் - பாரிஸ் திவா

Y) Bloggerல் தசாவதாரம்

Z) WordPressல் தசாவதாரம்


*) வேர யாருங்க எழுதியிருக்கா?

Wednesday, June 11, 2008

இந்தக் காலத்துப் பசங்க இருக்கானுவளே...

Rubik புதிரை solve செய்யரதுக்கு மூளையும் இல்ல, பொறுமையும் இல்ல எனக்கு.
படம்தான் புடிக்க முடிஞ்சது. புடிச்சு கீழ போட்டிருக்கேன்.

என் சொந்தக்காரர் ஒருத்தரோட குட்டிப் பையன் (அஞ்சாங்கிளாஸ்) எங்க வீட்டுக்கு வந்த போது, இத்த கைல கொடுத்து, எங்க இத solve பண்ணு பாக்கலாம்னு சொன்னேன்.
அவனும், ஒரு மூலைல ரொம்ப நேரமா ஒக்காந்து, அப்டீ இப்டீன்னு திருப்பிப் பாத்தான்.
நாங்க, அவனப் பத்தி மறந்து, மத்த கதையெல்லாம் பேசிட்டிருந்தோம்.
ஒரு அரை மணி நேரம் இருக்கும், என்னடா முடிச்சிட்டியான்னு கேட்டேன். ஹாங் முடிச்சிட்டேன்னான்.
ஆச்சரியமாயிடுச்சு எனக்கு, அட, சின்னப் பையன் முடிச்சிட்டான், நம்மளால முடியலையேன்னு.

வாங்கிப் பாத்தா, எல்லாம் சரியா இருந்துச்சு.

ரொம்ப, நொந்துப் போயிட்டேன்.

கொஞ்ச நேரம் போச்சு, நானும், எங்க சொந்தக்காரரும், ரொம்ப புளகாங்கிதம் அடஞ்சு, இந்தக் காலத்துப் பொடிசுங்க, சூப்பர்பான்னு பேச ஆரம்பிச்சிட்டோம்.

பயல் எங்களையே மாத்தி மாத்தி பாத்தான்.

கெக்கேபெக்கேன்னு சிரிக்க ஆரம்பிச்சான்.

ஏண்டா என்ன ஆச்சு?ன்னேன்.

நான் ஒழுங்கா fix பண்ணல, கலர் ஸ்டிக்கர பிச்சு, மாத்தி மாத்தி ஒட்டிட்டேன்னான்.

அடக் கடங்காரா, அப்பனையே மிஞ்சிட்டியேடான்னு நெனச்சுக்கிட்டென்.
இந்தக் காலத்துப் பசங்க இருக்காங்களே. என்ன கொடுமைங்க இது?


இந்த Rubiks cubeஐ, 9.56 விநாடிகளில் solve செஞ்சதுதான், இதுவரை உள்ள guinness recordஆம்.

இந்த Rubiksஐ, 10 விநாடிகளில் செஞ்சு முடிச்சேன், கண்ணைக் கட்டிக்கிட்டே செஞ்சு முடிச்சேன்னெல்லாம் பல காமெடி வீடியோக்கள் யூ.ட்யூபில் இருக்கு.
அதுல ஒண்ணு கீழ போட்டிருக்கேன். நல்ல தமாஷ்!

படங்கள் எப்படி?







பி.கு: தசாவதாரம் பதிவு படிக்காதவங்க படிக்க மறவாதீர். உங்கள் பேராதரவு மிக முக்கியம்.

தசாவதாரம் - The Happening - புறக்கணிப்பு - அவசர சர்வே

ஹ்ம். பர பர பரன்னு பரபரப்பு ஏத்தி விடறாங்க.
படம் பயங்கரமா இருக்குன்னு பாத்தவங்க எல்லாம் சொல்லிக்கிட்டு வராங்க.
முதல்வரும் சொல்லிட்டாரு, மத்தவங்களும் சொல்லிட்டாங்க.
(ஸ்பெஷல் ஷோ பாத்துட்டு வர எல்லா படத்துக்கும், இவங்க இப்படிதான் சொல்லுவாங்கங்கரது வேர விஷயம் :) ).

இந்த வாரம் இங்க ரிலீஸ் ஆவுது.
வழக்கமா இருக்கர $10க்கு பதிலா, இந்தப் படத்துக்கு $15 வேணுமாம்.

ஹ்ம். சிவாஜிக்கு $25 கேட்டாங்க. அப்ப கொதிச்சு எழுந்த நான், சிவாஜிய புறக்கணிச்சு, நீங்க என்னா பண்ணுவீங்கன்னு கேட்ட சர்வேல, 64 பேர் என் மூஞ்சீல கரிய பூசினது இன்னும் கறுப்பா அப்படியே ஞாபகம் இருக்கு.

இந்த வாரம்தான், நம்ம Sixth Sense புகழ் (Lady in the Water இகழ்) Night Shyamalan'ன் The Happeningம் வருது. அது வெறும் $8 தான்.

அதுக்கு போலாமா, இதுக்கு போணுமான்னு ஒரே கொழப்பம்.

இல்ல, வழக்கம் போல, வெயிட் & வாட்ச்சவான்னும் யோசனை வருது.

நீங்க என்னா பண்ணப் போறீங்க?



பி.கு1: படத்தின் ஆடியோவை துட்டு கொடுத்து வாங்கினவங்க யாராச்சும் இருந்தா, சொல்லிட்டுப் போங்க.

பி.கு2: Considering the seriousness of the post, an english version is posted here ஹி ஹி! :)

Tuesday, June 10, 2008

பைஸா (paisa) கோபுரம்

போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும், போகட்டும் Canonக்கே!





after selective coloring,

Sunday, June 08, 2008

A day at work - படம்ஸ்

எங்க ஊர்ல இந்த வாரம், Art & Wine festival நடக்குது.
ரெண்டு மூணு தெருவெல்லாம் வளச்சு கட்டி, சந்தை மாதிரி கடையெல்லாம் விரிச்சு நெறைய கலைப் பொருட்கள் எல்லாம் வித்தாங்க.
நடுரோட்ல மேடை கட்டி ஏதோ ஒரு band காரங்க popular music எல்லாம் பாடிக்கிட்டு இருந்தாங்க.

அம்சமா இருந்தது.

தொரை என்னமா வாழ்க்கைய வாழறான். ஹ்ம்.
அவன் ஆட்டமென்ன? பாட்டுமென்ன? கலக்கல்.
சொன்னா நம்ப மாட்டீங்க. 90 வயசிருக்கும் சில பெருசுங்களுக்கு, அவங்களும், வந்து ஆடினாங்க.

இன்னும் அசத்தல் விஷயம், ஒரு ஜோடி, புருஷன் வீல் சேர்ல ஒக்காந்திக்கிட்டு இருக்கான்.
பொண்டாட்டி அசத்தலா ஆடிக்கிட்டு இருக்கா, புருஷனும், வீல் சேர விர் விர்னு எல்லா பக்கமும் சுத்திக்கிட்டு, அவளுக்கு ஈடு கொடுத்துக்கிட்டு, வீல் சேர்லயே ஆடறான்.
அடேங்கப்பா. குறிப்பா, டக்கீலா பாட்டுக்கு ஆடினாங்க, கூட்டம் முழுக்க அவங்களேயேதான் பாத்துக்கிட்டு இருந்துச்சு.

நமக்கு ஆங்கிலப் பாட்டு ஞானம் கம்மின்னாலும், பல popular musicன், மேள தாளம் நல்லா புலப்படும். கேட்ட உடனே, ஆஹா, இந்தப் பாட்டு அந்தப் பாட்டுன்னு ஒடம்பு ஆட ஆரம்பிச்சிடும்.

அப்படிப்பட்ட பல பாடல்கள் பாடினாங்க, எல்லாரும் சேந்து ஆடினாங்க.

அங்க வாசிச்ச ட்ரம்மர பாத்தப்பரம் தான், அடடா கேமரா கைல கொண்டு போலியேங்கர கடுப்பு வந்துது. ரசிச்சு, பாடிக்கிட்டே, அடிச்சு வெளாசிட்டிருந்தாரு.
PITன், 'A day at work'க்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள், தெரு முழுதும் கொட்டிக் கிடந்தது.

கேமரா இல்லாத கொடுமையால், அத்தனையும் அம்போ.
சமீபத்தில், கையில் இருந்த கேமரா ஃபோனைவிட்டு, கேமரா இல்லா Blackberryக்கு மாறியதில், அந்த வசதியும் இல்லாமல், வெறுத்தே போனது.

ஆடி, ஆஞ்சு ஓஞ்சு, ஒரு விரக்தியுடன் வீடு வந்த சேந்தப்பரம், கைல இருக்கர படங்களில், 'a day at work'க்கு என்ன தேறும்னு பாத்ததுல, ஆப்டது இதுதேன்:

1)சென்ற ஆண்டு கேரள சுற்றுலாவின் போது க்ளிக்கியது. ( கொசுறு தகவல்: படத்தில் இருப்பவரின் பெயர் கிருஷ்ணன், வயது 60. அந்த வேஷத்தைக் (விஷ்ணு அவதாரம்) கட்டிக் கொண்டு, ஒரு நாள் முழுசா ஆடிக்கிட்டே இருந்தாரு. வயசாயிடுச்சே இந்த வருஷம் வேற யாராச்சும் செய்யட்டும்னு கோயில் காரங்க சொன்னாங்களாம். அவர் பொண்ணு கல்யாணத்துக்கு பணம் தேவைப் பட்டதால், அவரே இந்த வருஷமும் வேஷம் கட்டி ஆடினாராம். 7,000 ரூபாய் வரை ஒரு நாள் காணிக்கையாய் அவருக்குக் கிடைக்குமாம். தனிப் பதிவு மேட்டர கொசுறா போட்டு வேஸ்ட் பண்ணிட்டனோ? :) )


2) அதே கேரளா சுற்றுலாவின் போது க்ளிக்கிய தீ மிதிக்கும் நிகழ்ச்சியின் தொடக்க ஆட்டம்.



3) PITன் இந்த மாசப் போட்டிக்கு ஜட்ஜாயிருந்துக்கிட்டு, புச்சா நானே படம் புடிக்கலன்னா தெய்வ குத்தமாயிடுமேன்னு, புச்சா புடிச்சது. உள்ளது உள்ளபடி.



Wednesday, June 04, 2008

அமெரிக்கக் குப்பை நமக்கெதுக்கு?

இன்று கண்ணில் பட்ட சேய்தி புருவத்தை உயர்த்த வைத்தது.
அதாகப்பட்டது

"The Madras High Court on June 16 will decide the mode of disposing 8,79,811 kg of American garbage rotting in 35 cargo containers at Tuticorin port for years."

ஏதோ ஒரு கெரகம் புடிச்ச கம்பெனி, வேர ஏதோ எறக்குமதி பண்றோம்னு சொல்லிட்டு, அமெரிக்காலேருந்து அவங்க குப்பையை திருட்டுத்தனமா இறக்குமதி பண்ணிருக்காம்.

பணத்துக்காக என்ன வேணா செய்வானுங்க நம்மாளுங்கங்கரது தெரியும்.

திருட்டுத்தனம் செஞ்சாலும், கொஞ்சம் ரீஜண்டா ஏதாச்சும் செஞ்சா பரவால்ல.

நம்ம ஊர ஒரு குப்பைத் தொட்டியா மாத்தவா முயற்சிக்கணும்? என்ன கொடுமைங்க இது?

மேலே இன்னும் கொஞ்சம் மேஞ்சப்போ ITC மாதிரி பெரிய கம்பெனிகளும், இந்த மாதிரி 'குப்பை' இறக்குமதி செய்வது தெரிஞ்சது.

அப்ப, சிகரெட்டெல்லாம் குப்பைல கெடைக்கர பேப்பர ரீ-சைக்கிள் பண்ணிதான் சுருட்டராங்களா?

இல்ல, அமெரிக்கால குப்பையை கூட்ட எடமில்லாம, இப்ப குப்பைதொட்டியாக்க ஊர தேடறாங்களா?

நாம 'granted'ஆ எடுத்துக்கர பல விஷயங்கள்ள, இந்த குப்பைய சேக்கர மேட்டரும் ஒண்ணு. அமெரிக்காவ எடுத்துக்கிட்டா, சராசரியா, ஒவ்வொரு வீட்டில்லும், ஒரு வாரத்துக்கு, ஒரு பெரிய மூட்டை அளவுக்கு குப்பை சேரும்.
இந்த குப்பையை வெளீல போட்ருவோம்.
லாரீல வந்து அழகா குப்பைய அள்ளிட்டு ஜம்முனு போவானுங்க.
இந்தக் குப்பையெல்லாம் ஒரு எடத்துக்கு கொண்டு போய் கொட்டி, குப்பயை கிளரி, அதிலிருந்து, ப்ளாஸ்டிக் மாதிரி ஐட்டங்களையெல்லாம் பிரிச்செடுத்து, மிச்ச குப்பைகளை ஒரு பெரிய மைதானத்தில் கொட்டி, அதன் மேல் ரோட்-ரோலர் ஓட்டி, சமன் படுத்திக்கிட்டே வருவாங்க. (landfillனு சொல்லுவாங்க இந்த டெக்னிக்க).

ஒரு மைதானம், ஆரேழு வருடத்தில் ஒரு பெரிய மலையா வளந்துடும்.
அப்பாலிக்கா, அந்த 'மலையில்' புல்லு, மரமெல்லாம் நட்டு வச்சு, ஒரு பூங்காவா மாத்திடுவாங்க.
அப்பரம் என்ன? அடுத்த மைதானத்தைத் தேடி போவாங்க.
ஒவ்வொரு வீட்டுக்கும், குப்பையை அள்ளிச்செல்ல மட்டும், சராசரியா ஆயிரம் ரூபாய், மாசம் புடுங்கிடுவாங்க.

நம்ம சென்னையிலையும் கிட்டத்தட்ட இதே கதைதான். ஆனா, அங்க என்ன கொடுமைன்னா, குப்பையை எல்லாம் காலி இடத்தில் கொட்டி, அதை கொளுத்தி விட்டுடுவாங்க. குப்பையில் இருக்கும் ப்ளாஸ்டிக், மருந்துகள், கெமிக்கல் எல்லாம் சேந்து எரிஞ்சு, சுத்துவட்டாரத்துல இருக்கர வீடுகளில் வாழரவனுக்கு, பல வியாதிகளை இனாமா கொடுத்துக்கிட்டு வராங்க.

இப்படி இருக்கர நம்ம ஊருக்கு, அமெரிக்காவின் குப்பையும் சேந்து வந்தா என்னாகரது?

எனக்கு ஒன்னியும் புரியல. உங்களுக்கு?

Sunday, June 01, 2008

முதல்வர் கருணாநிதி - Happy B'Day + his schedule + a survey

வணக்கமுங்க.

முதலில், 85ஆம் பிறந்த நாள் காணும் நமது தமிழகத்தின் முதல்வர் டாக்டர். கருணாநிதி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நான் பாலிடிக்ஸ் பற்றி பெரிய அறிவில்லாதவன்.

உள்ளூர் அரசியலின் வரலாறு அவ்வளவா தெரிஞ்சுக்காதவன்.

அரசியல்ல, யார் நல்லவரு யார் கெட்டவருன்னெல்லாம் பெரிய ஆராய்ச்செயெல்லாம் பண்ணி தெரிஞ்சுக்க முயற்சிக்கல.

ஆனா, அரசியலெல்லாம் கவனிக்கணும்.
ஊர்ல என்ன நடக்குதுன்னு உன்னிப்பா கவனிக்கணும்.
இதுவரைக்கும் என்னென்ன எப்பெப்ப எங்கெங்க யார் யார்க்கு எப்படி எப்படியெல்லாம் நடந்ததுன்னும் தெரிஞ்சுக்கணும், புரிஞ்சுக்கணும், அறிஞ்சுக்கணும்.
அப்பதான், எல்லாரும் சேந்து ஒரு நல்ல சமுதயாத்தை உருவாக்க முடியும் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து.

நமது இம்சை அரசன் சொன்னது போல், "வரலாறு மிக அவசியம் அமைச்சரே!" (நன்றி லக்கி).

இப்ப விஷயத்துக்கு வாரேன்.

நமது முதல்வர். 85 வயதிலும், அயராது உழைக்கும் பெரியவர்.
இந்து நாளிதழில் கண்ணில் பட்ட, திரு.கருணாநிதியின் அன்றாட schedule'ஐப் பாருங்கள்:
Mr. Karunanidhi's day begins at 4-30 a.m. with a walk at Anna Arivalayam. After that he reads the newspapers. He writes for party organ `Murasoli' and meets visitors before heading for the Secretariat.

After being sworn in, he has made it a point to come to office in the afternoon too. He spends the evenings at the party office and goes home after 8-30 p.m. on days he does not attend meetings. He has attended office even on Sundays.

Asked why he would not rest, Mr.Karunanidhi repeated Anna's words: "I will rest only after I am gone."


கலக்கறாருல்ல? எப்படிதான் முடியுதோ?
இந்த உந்துதல் எங்கேருந்து ஒரு மனுஷனுக்கு கிடைக்கும்?

அரசியல் சார்பு நம்மில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.

என்னோட இன்றைய நிலையில், ஊரை விட்டு வெளியே சுற்ற ஆரம்பித்து சில பல வருடங்கள் ஆகி விட்டதால், எந்த கட்சியின் சார்பும் இல்லாததாய்த்தான் இருக்கிறேன்.

எனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு சொல்லி என்ன ஆகப் போகுது?

இப்ப சர்வேக்கு வாரேன்.

85ஆம் பிறந்த நாள் காணும் நமது முதல்வர், அவர் வாழ்வின் மிகப் பெரும்பான்மையை பொதுவிர்க்காகவே வாழ்ந்தவர். அதே சமயம், இவரின் தமிழார்வமும் கலையார்வமும் நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியணும்னு இல்ல.

ஸோ, கேள்வி என்னென்னா,
உங்களுக்கு 'தலைவர்' கருணாநிதியைப் ரொம்பப் பிடிக்குமா?
'கலைஞர்' கருணாநிதியைப் ரொம்பப் பிடிக்குமா?
'தலைவர்' + 'கலைஞர்' ரெண்டும் பிடிக்குமா?
ரெண்டுக் கருணாநிதியைமும் பிடிக்காதா?
நோ காமெண்ட்ஸா?

யோசிச்சுக் குத்துங்க? குத்திட்டு ஏன் அந்த ஆப்ஷனை குத்தினீங்கன்னு, ஏதாவது அவரின் வாழ்க்கையிலிருந்து மேற்கோள் சொன்னீங்கன்னா, வரலாறு தெரிஞ்சுக்கலாம், எல்லாரும். நன்றி!


again,
Happy B'Day Dr. Karunanidhi sir! Hats off!