recent posts...

Sunday, October 06, 2013

மிஷ்கினின் கோபம்




ஒநாயும் ஆட்டுக்குட்டியும், ஒரு உன்னதமான படம் என்பதில் ஐயம் இல்லை. முதல் நாள் முதல் ஷோவில், ஐம்பது பேர் மட்டுமே கொண்ட தியேட்டரில் ஜம்மென்று அமர்ந்து, அமைதியாய் அனுபவித்து பார்த்தது இன்னும் நினைவில் பளிச்சென்று இருக்கிறது.

வித்யாசமான முயற்சியாக, விரு விரு திரைக்கதையில், தேவையில்லா மசாலாக்கள் புகுத்தாமல், ஒரு 'கொரிய' மொழியின் வீரியம் படம் முழுவதும் நிரம்பி இருந்தது.

அசத்தலான படைப்பு. அதைத் தந்த மிஷ்கின், போற்றப்படவேண்டிய கலைஞன். அதிலும், தன் சொந்தப் பணத்தில் இப்படிப்பட்ட காம்ப்ரமைஸ் இல்லாத படைப்பை தந்ததர்க்கு அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

ஆனால், இந்த மாதிரி படங்கள், டிஸ்ட்ரிப்யூட்டர்களை வெகுவாய் கவராமல், தியேட்டர்கள் கிட்டாமல், போட்ட பணத்தை எடுக்கவே பிரம்மப் பிரயத்தனம் பண்ண வேண்டிய நிலையில் இருப்பது நம் துரதிர்ஷ்டமே.

ஒரு பக்கம், 'மாஸ்' படங்களும், சீப் காமெடி படங்களும், தடபுடலாய் ஓடிக்கொண்டிருக்க, கொண்டாடப் பட வேண்டிய படங்கள், புரம் தள்ளப்படுவது பெரிய சோகம் தான்.

மிஷ்கினுக்கு பாராட்டு விழாவாக, இன்று சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. எழுத்துலகிலிருந்தும், 'ப்ளாகர்களும், திரைப்படத் துறையை சார்ந்தவர்களும், படத்தை அலசி ஆராய்ந்து அருமையாய் பேசினார்கள்.

மிஷ்கின் கொஞ்சம் அதிகப்படியான கோபத்துடன் பேசினார். "படத்துல லாஜிக் இல்ல, மேஜிக் இல்லன்னெல்லாம் விமர்சனம் பண்ணாதீங்கய்யா. இவ்ளோ மாசம் கஷ்டப்பட்டு யோசிச்சு யோசிச்சு படம் எடுக்கறோம், உங்களுக்கு (விமர்சகர்களுக்கு) தோணர லாஜிக் ஓட்டையெல்லாம் யோசிக்கமாயா எடுப்போம். நீங்க மட்டும்தான் அறிவாளியா எங்களுக்கு அறிவில்லையா" என்ற ரீதியில் போனது பேச்சு.
அவரின் வேதனை, படத்தை பார்ப்வர்கள், நெகடிவ் பப்ளிசிட்டி கொடுத்து ஓரளவுக்கு வரும் ரசிகர்களையும் வராமல் செய்துவிடும் விபரீதம் பற்றியது.


ஆனா, மிஷ்கின் சார், 150 ரூபாய் கொடுத்து சரக்கை வாங்கரவன், அவன் கருத்தை (நல்ல கருத்தோ, முட்டாள் தனமான கருத்தோ), சொல்றதுக்கு அவனுக்கு முழு உரிமை இருக்கு.  அவனப் போயி நீங்க, லாஜிக் கேக்காத, மசாலா கேக்காதன்னு சொன்னா எப்படி?

ஒரு இராம நாராயணன் படத்துக்கு போறவன், பாம்பு டைப் அடிக்கரதையும், முயலு முக்காப்லா பாடரதையும் பாத்துட்டு, லாஜிக் எங்கன்னு கேக்க மாட்டான். ஏன்னா, இராம நாராயணனுக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு, அதற்குண்டான எதிர்பார்ப்புடன் போரவன், எதிர் கேள்வி கேக்க மாட்டான். அவனுக்கு தேவையானது கொடுத்துட்டா, கொடுத்த காசுக்கு திருப்தி பட்டுட்டு போயிருவான்.

உங்க படத்துக்கு வரவங்க லாஜிக் ஓட்டை இருந்தாலோ, படத்தில் காட்சிகள் புரியலன்னாலோ சொல்லத்தான் சொல்லுவான்.

உங்க கதையின் கரு, "14 பேரை ஈஸியா சுட்டுக் கொன்னவனுக்கு,  3 பேரை காப்பாத்த முடியாம போயிருச்சே"ன்னு இன்னிக்கு அழகா சொன்னீங்க.

கரு அப்படி இருக்கும்போது, முதல் பத்து நிமிஷம், நீங்க அம்மணமாயி, ஒடம்புல பாதியை கத்தியால் கிழிச்சு தொறந்து, பார்ட் எல்லாம் வெளியில எடுத்து, திரும்ப நூல் போட்டு தச்சு முடிச்சதும், நீங்க பெரிய ஏர் பில்லோ வச்சுக்கிட்டு, ஓடர ரயிலில் இருந்து குதிக்கரதை எப்படி சார் லாஜிக்கல்லா ஏத்துக்கச் சொல்றீங்க?
குண்டடி பட்டா, சின்ன ப்ளேடால கீரிட்டு, ப்ராண்டியை மேல ஊத்தி ஒரு பேண்ட்-எய்ட் போட்டுக்கிட்டு தப்பிச்சு ஓடியிருந்தீங்கன்னா, எவன் உங்கள கேள்வி கேட்டிருப்பான்?

தேவையில்லாத அம்மண காட்சியும், வயிறு கிழிக்கும் காட்சியும் கொடுத்துட்டு, அடுத்த காட்சியிலேயே ஓடத் துவங்குவதால், கொஞ்ச நேரத்துக்கு பேந்த பேந்த முழிச்சுக்கிட்டு, படத்துடன் ஒட்ட முடியாமல் தவித்த தவிப்பு எங்களுக்குத்தான் தெரியும்.

இருந்தும், சுதாரித்துக்கொண்டு, மிஷ்கின் செஞ்சா சரியாத்தான் இருக்கும், கடைசியில் ஏதாவது செஞ்சா இதுக்கொரு விளக்கம் கொடுப்பாருன்னு சமாதானப் படுத்திக்கிட்டு மீதிப் படத்தை பார்த்தேன். இந்த ஒரு விஷயத்தைத் தவிர மற்றபடி எனக்கு எதுவும் குறையாத் தெரியவில்லை. அத்தனையும் நிறையே.

இன்றைய நிகழ்ச்சியில் இயக்குநன் ராம், அருமையாய் ஒரு விளக்கம் சொன்னார். ஓநாய் ஏன் ஆட்டுக்குட்டியை திரும்ப தன்னை பார்க்க வருமாறு சொல்கிறது என்பதை படத்தில் விளக்கவேயில்லை என்று ஒரு குற்றச்சாட்டாம். அதற்கு அவர், எல்லாத்தையும் ஏன் வெளக்கணும்னு எதிர்பாக்கறீங்க? நீங்களே அதற்கான ஒரு காரணத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். படம் என்பது, இயக்குநர் பாதி, பார்வையாளன் மீதி, என்று அழகாய்ச் சொன்னாரு.

எல்லாத்துக்கும் வெளக்கம் சொல்றது, டிஸ்கவரி சானல் டாக்குமெண்ட்ரியா படங்கள்?

படத்தில் இருக்கும் குறியீடுகள் பற்றி சிலர் பேசினர். எப்படித்தான் இப்படி யோசிச்சு சில காட்சிகளுக்கு இப்படி அர்த்தங்கள் கண்டுபிடிக்கறாங்களோ. சூப்பர்.

ஆட்டுக்குட்டி ஓநாயை முதுகில் சுமப்பது, சிலுவையை சுமப்பது போல் உருவகப் படுத்தப்பட்ட காட்சியாம். மிஷ்கின் சொன்னது.

கார்த்தி என்ற குட்டிப் (கண் தெரியாத) பெண், பாரதியிடம் (திருநங்கை), ஒரு  கதை சொல்லும்படி கேட்பார். கதை சொல்வதற்க்குள், குண்டடிபட்டு இறந்து போனார். இதன் குறியீடாக ஒரு எழுத்தாளர் சொன்னது, திருநங்கைகளின் சோகக்கதை யாருக்கும் தெரியாது. இதிலும், கதை சொல்வதர்க்குள், அவரின் உயிர் போய்விடுகிறது என்று சொன்னார். ஜூப்பர் அனாலஸிஸ்.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பாக்காதவங்க, தீயேட்டரில் சென்று பார்த்து ரசியுங்கள். மிஷ்கினுக்காக இல்லாவிட்டாலும், இளையராஜாவுக்காகவும், ஒரு புதிய முயற்சிக்காகவும், நல்ல படைப்புக்காகவும், நன்றாய் பார்க்கலாம்.
பாத்துட்டு, லாஜிக்குல ஓட்டை ஒட்டடை எல்லாம் சொல்லுங்க. ஆனா, நல்ல விஷயங்களை எல்லாம் சொல்லிட்டு, ஓட்டையை சொல்லுங்க.

நன்றீஸ்.

இந்த நிகழ்வு பற்றி, நோட்டீஸ் ஒட்டிய லக்கிக்கு நன்றி. க்ளாட் டு மீட் யூ லக்கி, & இயக்குநர் ராம். ஹாப்பி.

140 charactersல், பல மனிதர்களின் உழைப்பில் மண்ணை அள்ளிப் போடாதீர்கள். Constructive Criticism is most welcome. OR better yet, write your heart out,  a month after the release. அவங்க போட்ட பணத்தையாவது எடுக்கட்டும்.

ஆனா, அது சரியா தப்பா? தான் பட்ட துன்பம் மத்தவங்க படக்கூடாதுன்னும், தான் பட்ட இன்பம் மத்தவங்களுக்கும் கிட்டணும் என்ற உன்னத குணம் அல்லவா நம்மளது? அது நியாயமானதும் கூடத் தானே?

பல மில்லியன் டாலர் ஆராய்ச்சியில் உருவாக்கப்படும் படைப்புகளையே, ஒரு குட்டி FaceBook Twitter Statusல், ஏத்தி எறக்கறவாங்களாச்சே நாம? அதைச் செய்யாதீங்கன்னா எப்படி?

எனிவே, மிஷ்கின், Thanks for a great movie watching experience, once again.

-சர்வேசன்