recent posts...

Showing posts with label pallavaram scenery wastage dumpyard. Show all posts
Showing posts with label pallavaram scenery wastage dumpyard. Show all posts

Thursday, November 19, 2009

பல்லாவரம் ஸீனரியும் ஒரு பெருமூச்சும்...

பல்லாவரத்திலிருந்து வேளச்சேரிக்கு செல்ல ஒரு 200அடிப் பாதை உருவாகிவருகிறது.
GSTயிலிருந்து, இந்த பாதைக்கு இணப்புத் தரவேண்டிய மேம்பால வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. கொஞ்சம் ஸ்லோதான், ஆனா வேலை நடக்குது.

சாலையின் இருபுறமும் பச்சைப் பசேல்னு இருக்கும். மழை பெஞ்சா, தண்ணி நெரஞ்சு, பல்லாவர மலையின் பிம்பம் தெரிந்து, பாக்கவே ரம்யமா இருக்கும்.

சமீபத்தில் க்ளிக்கிய படம் இங்கே:


புதுக் கொடுமை என்னன்னா, சாலையின் அடுத்த பக்கம், இதே போல் ரம்யமாக இருந்து வந்த இடம், இப்போ குப்பைக் கொட்டும் இடமாக மாறிவிட்டிருப்பது.

கொக்கும் நாரைகளும் காகைகளும் கூடிக் குலாவிய இடம், இப்போ, ப்ளாஸ்டிக் குப்பைகளின் இருப்பிடமாகிப் போனது.

டூ-வீலரில் போனா, 'ஹோ என்னுயிரே, ஓஹோஹோ என்னுயிரே'ன்னு மாதவன் கணக்கா ஓட்டிக்கினு போன காலம் போயி, இப்ப, ஒரு கையில் மூக்கை பிடித்துக் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஹ்ம்!



இந்த மாதிரி தாழ்வான பகுதிகள், மழை நீரை தக்க வைத்துக் கொள்ளும் இடமாக பராமரிக்காமல், இப்படி குப்பை போட்டு நாசம் செய்யப் படுவது, மிக வேதனையாக உள்ளது.
தொலைநோக்குப் பார்வை கொண்ட அதிகாரிகள் யாராவது, இதை கரெக்ட் செய்ய வேண்டும்

சுதாரிப்பார்களா அதிகாரிகள், இல்லை பல்லாவரத்தை நாரடித்துத்தான் அடங்குவார்களா?

பொறுத்திருந்து பார்ப்போம்.