தேவையில்லாம பல பேர் டென்ஷனா சுத்திக்கிட்டு இருக்காங்க.
பாவம். எத எத தலைக்குள்ள கொண்டு போகணும், எதைக் கொண்டு போகக் கூடாதுன்னு தெரியாம, வெவஸ்தை கெட்டு அலையறோம் இங்க பல பேரு.
லெஸ் டென்ஷன் மக்கள்ஸ்.
சும்மா, ஒரு 1 1/2 மணி நேரத்த செலவு பண்ணி, இந்த படத்தைப் பாருங்க.
அசந்து போயிடுவீங்க.
சூடெல்லாம் தணிஞ்சு நார்மல் ஆயிடுவீங்க.
ஹாப்பி ஃபிரைடே!
:)
recent posts...
- மெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review] - 10/6/2014
- பொன்னியின் செல்வன் - சென்னையில் - 6/13/2014
- மிஷ்கினின் கோபம் - 10/6/2013
- RTI filed - trying to understand why Roads get higher and higher - 5/26/2013
- Point Returnல் ஒரு நாள் - 5/19/2013
Thursday, February 28, 2008
Wednesday, February 27, 2008
அதுதான் என்னுடைய நோபெல் - by சுஜாதா
அருமையான கட்டுரை, முழுசா படிங்க.
ஆ.வி, 'கற்றதும் பெற்றதும்'ல் சுஜாதா...
மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன். மெரீனாவில் நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் பெரும் பாலும் என்னைவிட சின்ன வயசுக்காரர்களாகத் தெரிகிறார்கள். ஒரு தாத்தா மாட்டினார். நிச்சயம் என்னைவிட மூத்தவர். சிமென்ட் பெஞ்சில், என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்.
"யு ஆர் எ ரைட்டர்! எனக்கு எத்தனை வயசு சொல்லுங்க, பார்க்கலாம்!" என்று கண் சிமிட்டலுடன் கேட்டார்.
நான் யோசித்து, ‘‘கட்டை விரலால் மூக்கைத் தொடுங்கோ" என்றேன்.
"எதுக்குப்பா?"
"தொடுங்களேன்!"
சற்று வியப்புடன் தொட்டார்.
"மத்த விரல்களை றெக்கை மாதிரி அசை யுங்கோ!" என்றேன். ‘‘இதிலிருந்து கண்டுபிடிச்சுட முடியுமா, என்ன?’Õ என்று, விரல்களைச் சொன்னபடி அசைத் தார்.
"ரெண்டு கையையும் பரப்பி, ஏரோப்ளேன் மாதிரி வெச்சுண்டு ஒரே ஒரு தடவை லேசா குதிங்கோ. பாத்து... பாத்து..."
"இது என்னப்பா ட்ரிக்கு?" என்று அப்படியே செய்தார்.
"உங்களுக்கு இந்த மே பன்னண்டு வந்தா எண்பத்தோரு வயசு!" என்றேன்.
அசந்து போய், "கை குடு. எப்படிப்பா இத்தனை கரெக்டா சொன்னே?"
"ஒரு ட்ரிக்கும் இல்லை, சார்! நேத்திக்குதான் இதே பெஞ்சில், இதே சமயம் வந்து உட்கார்ந்து, உங்க வயசு, பர்த்டே எல்லாம் சொன் னீங்க. மறந்துட் டீங்க!" என்றேன். தாத்தா மாதிரி அத்தனை மோசம் இல்லை என்றாலும், எனக்கும் சமீபத்திய ஞாபகங்கள் சற்றே பிசகுகின்றன. ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குச் சென்றால், எதற்காக வந்தோம் என்பது மறந்தே போகிறது. பெயர்கள் ஞாபகம் இருப்பதில்லை. ஆந்தைக்கு இங்கிலீஷில் என்ன என்று சட்டென நினைவு வருவதில்லை. ‘படையப்பா’வில் ரஜினிக்கு முன்னால் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாரே... அந்த நடிகை யின் பெயர் என்ன என்று ஒரு நாள் அதிகாலை கண் விழித்ததும், ஒரு மணி நேரம் யோசித்தேன், கிட்டவில்லை.
மனைவி எழக் காத்திருந்து அவளிடம் கேட்டேன். "ரம்யா கிருஷ்ணன்" என்றாள். இம்மாதிரி, நியூரான்கள் களைத்துப் போவது தெரிகிறது. ஆனால், நீண்ட நாள் ஞாபகங்கள் பத்திரமாக இருக்கின்றன. அது மூளையில் வேறு பேட்டை போலும்! கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன், சின்ன வயசில் கோயமுத்தூரில் அம்மா\அப்பாவுடன் ஜட்கா வண்டியில் "ஜகதலப்ரதாபன்" சினிமா போனது, ஒண்ணாம் கிளாஸ் டீச்சருக்கு ஆனந்த விகடனும், அமிர்தாஞ்சனும் கொண்டு போய்க் கொடுத்தது, பள்ளி மணியை அகாலமாக அடித்தது, எனக்குத் தம்பி பிறந்தது... இதெல்லாம் தெளிவாக ஞாபகம் உள்ளது. ஸ்ரீரங்கத்துக் கதைகள் அனைத்தும் என் நீண்ட நாள் ஞாபகங்களின் வடிவம்தான்!
டெல்லியில், பெட்ரோல் எழுபத்தைந்து பைசாவும், பால் ஐம்பத்தைந்து பைசாவும் கொடுத்து வாங்கி தாராளமாக வாழ்ந்தது, என் முதல் கதை, முதல் நாவல் பிரசுரமானது, எஸ்.ஏ.பி'யின் கடிதக் குறிப்பு எல்லாம் ஞாபகம் உள்ளது. ரம்யா கிருஷ்ணன் போன்ற மேட்டர்தான் சட்டென்று வழுக்கிவிடுகிறது.
மெரீனாவில், ஷார்ட்ஸ் ஸ்னீக்கரில் ஓடும் இளைஞர்களைப் பார்த்து முன்பு பொறாமைப்படுவேன். இப்போது புன்னகைக்கிறேன். பொதுவாகவே, பொறாமைப்படுவதற்கான விஷயங்களும், அதட்டிச் சொல்வதற்கான விஷயங்களும் குறைந்து வருகின்றன. ஹிந்துவின் "ஆபிச்சுவரி" பார்க்கையில், இறந்தவர் என்னைவிட சின்னவரா, பெரியவரா என்று முதலில் பார்ப்பேன். சின்னவராக இருந்தால், ‘பரவால்லை... நாம தப்பிச்சோம்!’ என்றும், பெரியவ ராக இருந்தால் கழித்துப் பார்த்து, ‘பரவால்லை... இன்னும் கொஞ்ச நாள் இருக்குÕ என்றும் எண்ணுவேன். எதிர்காலம் என்பதை இப்போதெல் லாம் வருஷக் கணக்கில் நினைத்துப் பார்ப்பது இல்லை. மாதக் கணக்கில்... ஏன், உடம்பு சரியில் லாமல் இருக்கும்போது வாரக் கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது. Today I am alright, thank God!
சயின்ஸ் அதிகம் படித்ததால், கடவுளைப் பற்றிய குழப்பங்கள் தீர்க்க முடியாமல் இருக்கின்றன. யேட்ஸ் சொன்னதுபோல், "சிலர் கடவுள் இருக்கிறார் என்கிறார்கள். பிறர் கடவுள் இல்லை என்கிறார்கள். உண்மை ஒருக்கால் இரண்டுக்கும் இடையில் எங்கோ இருக்கிறது!".
ஆனால், டி.என்.ஏ. ரகசியத்தையும், உயிரின வேறுபாடுகளையும், அண்டசராசரங்களின் அளவையும் பார்க்கும்போது, நம்மை மீறிய சக்தி புலன் உணர்வுக்கும், நம் அற்ப வார்த்தைகளுக்கும் அகப்படாத ஒரு சக்தி இருப்பதில் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. நான் நாத்திகன் அல்ல. மிஞ்சிப்போனால், ரஸ்ஸல் படித்தபோது ‘அக்னாஸ்டிக்’காக அதாவது, கடவுள் இருப்பைப் பற்றித் தெரியாதவனாக இருந்திருக்கிறேன். மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லை. பிறந்தால் இதே ஞாபகங்கள், இதே முதுகுவலியுடன் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும். தமிழில் மீண்டும் கதைகள் எழுத வேண்டும். நடக்கிற காரியமா? முற்றிலும் புதிய பிறப்பு, தேசம், பெயர், உடல் என்றால் அது மறுபிறவி அல்ல... வேறு பிறவி. மேலும், எங்கேயாவது ஸ்விஸ் நாட்டில் பிறந்து வைத்தால், பாஷை தெரியாமல் கஷ்டப்படுவேன்.
இறந்ததும் என்ன ஆகிறது என்பதைப் பற்றி நசிகேதனைப்போல யோசிக்கும் போது, சட்டென்று ஒரு திடுக்கிடல் ஏற்படும். அந்தச் சமயத்தில் மல்லிகை வாசனையையோ, ஒரு குழந்தையின் புன்சிரிப்பையோ எண்ணிப் பார்த்துக் கவனத்தைக் கலைத்துக்கொள்வேன். சொர்க்கம், நரகம் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இரண்டும் இங்கே தான் என்று எண்ணுகிறேன். அப்படி ஒருக்கால் இருந்தால், நரகத்துக்குப் போகத்தான் விரும்புகிறேன். அங்கே தான் சுவாரஸ்யமான ஆசாமிகள் இருப்பார்கள். சொர்க்கத்தில், நித்ய அகண்ட பஜனைச் சத்தம் எனக்கு ஒரு நாளைக்கு மேல் தாங்காது.
ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது, ஏரோப்ளேன் ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும், நிலவை விலை பேசவும் ஆசைப்பட்டேன். நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படி யாகத் திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப் பட்டு, எழுபது வயதில் காலை எழுந் தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன். வாழ்க்கையே இவ்வகையில் progressive compromises (படிப்படியான சமரசங்களால் ஆனது).
இன்றைய தினத்தில், என் டாப்டென் கவலைகள் அல்லது தேவைகள் என்றால்... முதலிடத்தில் உடல் நலம், மனநலம், மற்றவருக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பது, தெரிந்தோ தெரியாமலோ யார் மனதையும் புண் படுத்தாமல் இருப்பது, இன்சொல், அனுதாபம், நல்ல காபி, நகைச்சுவை உணர்வு, நான்கு பக்கமாவது படிப்பது, எழுதுவது போன்றவை பட்டியலில் உள்ளன. பணம் அதில் இல்லை. முதலிலேயே அது லிஸ்ட்டை விட்டுப் போய்விட்டது.
தி.ஜானகிராமனின் "கொட்டு மேளம்" கதையில் வரும் டாக்டருக்குப் போல, மனைவி அவ்வப்போது வர வேண்டிய பணத்தையும், ஏமாற்றிய ஜனங்களை யும் எனக்குச் சொல்லிக் காட்டுவாள். அவளும் இப்போது இதில் பயனில்லை என்று நிறுத்திவிட்டாள். பணம் பிரதானமாக இல்லாததால், இன்று எழுபது வயசில் மனச்சாட்சி உறுத்தாமல் வாழ முடிகிறது. ஜெயிலுக்குப் போன தில்லை. ஒரே ஒரு தடவை டில்லியிலும், ஒரு தடவை பெங்களூரிலும் ஒன்வேயில் ஸ்கூட்டர் ஓட்டியதால், மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்குப் போயிருக்கிறேன். வோட்டிங் மெஷினுக் காக சாட்சி சொல்ல, கேரளா ஹைகோர்ட் டில் இருந்து சுப்ரீம் கோர்ட் வரை போயிருக்கிறேன்.
அம்பலம் இணைய (www.ambalam.com) இதழில் ஒரு வாசகர் கேள்வி கேட்டிருந்தார்... "நாற்பது வருஷ மாக உங்களைத் தொடர்ந்து படித்து வருகிறேனே... என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர் கள்?" என்று.
நீண்ட யோசனைக்குப் பிறகு பதில் அளித்தேன்... "நாற்பது வருஷம் உங்களைத் தொடர்ந்து படிக்க வைத்திருக்கிறேனே, என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதேதான்!" என்று. என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வைத்திருக்கிறது. பிரைவேட் ஜெட்டி லிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை யுச்சி மாளிகை வரை அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள் நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக் கிறார்கள். மனைவிமார்கள் அழுதிருக்கிறார்கள். கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன், கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள். ‘ரோஜா’ வெளிவந்த சமயத்தில், பெங்களூருக் குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை ஜலஹள்ளியில், ‘அரவிந்த சாமியுடன் என்னை மண முடி!’ என்று கதவைத் தட்டி யிருக்கிறாள். "ஆ" கதையைப் படித்துவிட்டு, "என் மகளை மணம் செய்துகொள்ள வேண் டும்" என்று திருநெல்வேலில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், ‘பாலம்’ கதையைப் படித்து விட்டு என்னைக் கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என் வாசகர்கள்தான். வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில் இருந்து முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள். மிகச் சிறந்த நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன். அதுதான் என்னுடைய நோபெல்!
நன்றி: தேசிகன் (அங்கயிருந்து தான் காப்பி/பேஸ்ட்)
ஆ.வி, 'கற்றதும் பெற்றதும்'ல் சுஜாதா...
மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன். மெரீனாவில் நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் பெரும் பாலும் என்னைவிட சின்ன வயசுக்காரர்களாகத் தெரிகிறார்கள். ஒரு தாத்தா மாட்டினார். நிச்சயம் என்னைவிட மூத்தவர். சிமென்ட் பெஞ்சில், என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்.
"யு ஆர் எ ரைட்டர்! எனக்கு எத்தனை வயசு சொல்லுங்க, பார்க்கலாம்!" என்று கண் சிமிட்டலுடன் கேட்டார்.
நான் யோசித்து, ‘‘கட்டை விரலால் மூக்கைத் தொடுங்கோ" என்றேன்.
"எதுக்குப்பா?"
"தொடுங்களேன்!"
சற்று வியப்புடன் தொட்டார்.
"மத்த விரல்களை றெக்கை மாதிரி அசை யுங்கோ!" என்றேன். ‘‘இதிலிருந்து கண்டுபிடிச்சுட முடியுமா, என்ன?’Õ என்று, விரல்களைச் சொன்னபடி அசைத் தார்.
"ரெண்டு கையையும் பரப்பி, ஏரோப்ளேன் மாதிரி வெச்சுண்டு ஒரே ஒரு தடவை லேசா குதிங்கோ. பாத்து... பாத்து..."
"இது என்னப்பா ட்ரிக்கு?" என்று அப்படியே செய்தார்.
"உங்களுக்கு இந்த மே பன்னண்டு வந்தா எண்பத்தோரு வயசு!" என்றேன்.
அசந்து போய், "கை குடு. எப்படிப்பா இத்தனை கரெக்டா சொன்னே?"
"ஒரு ட்ரிக்கும் இல்லை, சார்! நேத்திக்குதான் இதே பெஞ்சில், இதே சமயம் வந்து உட்கார்ந்து, உங்க வயசு, பர்த்டே எல்லாம் சொன் னீங்க. மறந்துட் டீங்க!" என்றேன். தாத்தா மாதிரி அத்தனை மோசம் இல்லை என்றாலும், எனக்கும் சமீபத்திய ஞாபகங்கள் சற்றே பிசகுகின்றன. ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குச் சென்றால், எதற்காக வந்தோம் என்பது மறந்தே போகிறது. பெயர்கள் ஞாபகம் இருப்பதில்லை. ஆந்தைக்கு இங்கிலீஷில் என்ன என்று சட்டென நினைவு வருவதில்லை. ‘படையப்பா’வில் ரஜினிக்கு முன்னால் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாரே... அந்த நடிகை யின் பெயர் என்ன என்று ஒரு நாள் அதிகாலை கண் விழித்ததும், ஒரு மணி நேரம் யோசித்தேன், கிட்டவில்லை.
மனைவி எழக் காத்திருந்து அவளிடம் கேட்டேன். "ரம்யா கிருஷ்ணன்" என்றாள். இம்மாதிரி, நியூரான்கள் களைத்துப் போவது தெரிகிறது. ஆனால், நீண்ட நாள் ஞாபகங்கள் பத்திரமாக இருக்கின்றன. அது மூளையில் வேறு பேட்டை போலும்! கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன், சின்ன வயசில் கோயமுத்தூரில் அம்மா\அப்பாவுடன் ஜட்கா வண்டியில் "ஜகதலப்ரதாபன்" சினிமா போனது, ஒண்ணாம் கிளாஸ் டீச்சருக்கு ஆனந்த விகடனும், அமிர்தாஞ்சனும் கொண்டு போய்க் கொடுத்தது, பள்ளி மணியை அகாலமாக அடித்தது, எனக்குத் தம்பி பிறந்தது... இதெல்லாம் தெளிவாக ஞாபகம் உள்ளது. ஸ்ரீரங்கத்துக் கதைகள் அனைத்தும் என் நீண்ட நாள் ஞாபகங்களின் வடிவம்தான்!
டெல்லியில், பெட்ரோல் எழுபத்தைந்து பைசாவும், பால் ஐம்பத்தைந்து பைசாவும் கொடுத்து வாங்கி தாராளமாக வாழ்ந்தது, என் முதல் கதை, முதல் நாவல் பிரசுரமானது, எஸ்.ஏ.பி'யின் கடிதக் குறிப்பு எல்லாம் ஞாபகம் உள்ளது. ரம்யா கிருஷ்ணன் போன்ற மேட்டர்தான் சட்டென்று வழுக்கிவிடுகிறது.
மெரீனாவில், ஷார்ட்ஸ் ஸ்னீக்கரில் ஓடும் இளைஞர்களைப் பார்த்து முன்பு பொறாமைப்படுவேன். இப்போது புன்னகைக்கிறேன். பொதுவாகவே, பொறாமைப்படுவதற்கான விஷயங்களும், அதட்டிச் சொல்வதற்கான விஷயங்களும் குறைந்து வருகின்றன. ஹிந்துவின் "ஆபிச்சுவரி" பார்க்கையில், இறந்தவர் என்னைவிட சின்னவரா, பெரியவரா என்று முதலில் பார்ப்பேன். சின்னவராக இருந்தால், ‘பரவால்லை... நாம தப்பிச்சோம்!’ என்றும், பெரியவ ராக இருந்தால் கழித்துப் பார்த்து, ‘பரவால்லை... இன்னும் கொஞ்ச நாள் இருக்குÕ என்றும் எண்ணுவேன். எதிர்காலம் என்பதை இப்போதெல் லாம் வருஷக் கணக்கில் நினைத்துப் பார்ப்பது இல்லை. மாதக் கணக்கில்... ஏன், உடம்பு சரியில் லாமல் இருக்கும்போது வாரக் கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது. Today I am alright, thank God!
சயின்ஸ் அதிகம் படித்ததால், கடவுளைப் பற்றிய குழப்பங்கள் தீர்க்க முடியாமல் இருக்கின்றன. யேட்ஸ் சொன்னதுபோல், "சிலர் கடவுள் இருக்கிறார் என்கிறார்கள். பிறர் கடவுள் இல்லை என்கிறார்கள். உண்மை ஒருக்கால் இரண்டுக்கும் இடையில் எங்கோ இருக்கிறது!".
ஆனால், டி.என்.ஏ. ரகசியத்தையும், உயிரின வேறுபாடுகளையும், அண்டசராசரங்களின் அளவையும் பார்க்கும்போது, நம்மை மீறிய சக்தி புலன் உணர்வுக்கும், நம் அற்ப வார்த்தைகளுக்கும் அகப்படாத ஒரு சக்தி இருப்பதில் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. நான் நாத்திகன் அல்ல. மிஞ்சிப்போனால், ரஸ்ஸல் படித்தபோது ‘அக்னாஸ்டிக்’காக அதாவது, கடவுள் இருப்பைப் பற்றித் தெரியாதவனாக இருந்திருக்கிறேன். மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லை. பிறந்தால் இதே ஞாபகங்கள், இதே முதுகுவலியுடன் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும். தமிழில் மீண்டும் கதைகள் எழுத வேண்டும். நடக்கிற காரியமா? முற்றிலும் புதிய பிறப்பு, தேசம், பெயர், உடல் என்றால் அது மறுபிறவி அல்ல... வேறு பிறவி. மேலும், எங்கேயாவது ஸ்விஸ் நாட்டில் பிறந்து வைத்தால், பாஷை தெரியாமல் கஷ்டப்படுவேன்.
இறந்ததும் என்ன ஆகிறது என்பதைப் பற்றி நசிகேதனைப்போல யோசிக்கும் போது, சட்டென்று ஒரு திடுக்கிடல் ஏற்படும். அந்தச் சமயத்தில் மல்லிகை வாசனையையோ, ஒரு குழந்தையின் புன்சிரிப்பையோ எண்ணிப் பார்த்துக் கவனத்தைக் கலைத்துக்கொள்வேன். சொர்க்கம், நரகம் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இரண்டும் இங்கே தான் என்று எண்ணுகிறேன். அப்படி ஒருக்கால் இருந்தால், நரகத்துக்குப் போகத்தான் விரும்புகிறேன். அங்கே தான் சுவாரஸ்யமான ஆசாமிகள் இருப்பார்கள். சொர்க்கத்தில், நித்ய அகண்ட பஜனைச் சத்தம் எனக்கு ஒரு நாளைக்கு மேல் தாங்காது.
ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது, ஏரோப்ளேன் ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும், நிலவை விலை பேசவும் ஆசைப்பட்டேன். நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படி யாகத் திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப் பட்டு, எழுபது வயதில் காலை எழுந் தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன். வாழ்க்கையே இவ்வகையில் progressive compromises (படிப்படியான சமரசங்களால் ஆனது).
இன்றைய தினத்தில், என் டாப்டென் கவலைகள் அல்லது தேவைகள் என்றால்... முதலிடத்தில் உடல் நலம், மனநலம், மற்றவருக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பது, தெரிந்தோ தெரியாமலோ யார் மனதையும் புண் படுத்தாமல் இருப்பது, இன்சொல், அனுதாபம், நல்ல காபி, நகைச்சுவை உணர்வு, நான்கு பக்கமாவது படிப்பது, எழுதுவது போன்றவை பட்டியலில் உள்ளன. பணம் அதில் இல்லை. முதலிலேயே அது லிஸ்ட்டை விட்டுப் போய்விட்டது.
தி.ஜானகிராமனின் "கொட்டு மேளம்" கதையில் வரும் டாக்டருக்குப் போல, மனைவி அவ்வப்போது வர வேண்டிய பணத்தையும், ஏமாற்றிய ஜனங்களை யும் எனக்குச் சொல்லிக் காட்டுவாள். அவளும் இப்போது இதில் பயனில்லை என்று நிறுத்திவிட்டாள். பணம் பிரதானமாக இல்லாததால், இன்று எழுபது வயசில் மனச்சாட்சி உறுத்தாமல் வாழ முடிகிறது. ஜெயிலுக்குப் போன தில்லை. ஒரே ஒரு தடவை டில்லியிலும், ஒரு தடவை பெங்களூரிலும் ஒன்வேயில் ஸ்கூட்டர் ஓட்டியதால், மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்குப் போயிருக்கிறேன். வோட்டிங் மெஷினுக் காக சாட்சி சொல்ல, கேரளா ஹைகோர்ட் டில் இருந்து சுப்ரீம் கோர்ட் வரை போயிருக்கிறேன்.
அம்பலம் இணைய (www.ambalam.com) இதழில் ஒரு வாசகர் கேள்வி கேட்டிருந்தார்... "நாற்பது வருஷ மாக உங்களைத் தொடர்ந்து படித்து வருகிறேனே... என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர் கள்?" என்று.
நீண்ட யோசனைக்குப் பிறகு பதில் அளித்தேன்... "நாற்பது வருஷம் உங்களைத் தொடர்ந்து படிக்க வைத்திருக்கிறேனே, என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதேதான்!" என்று. என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வைத்திருக்கிறது. பிரைவேட் ஜெட்டி லிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை யுச்சி மாளிகை வரை அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள் நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக் கிறார்கள். மனைவிமார்கள் அழுதிருக்கிறார்கள். கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன், கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள். ‘ரோஜா’ வெளிவந்த சமயத்தில், பெங்களூருக் குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை ஜலஹள்ளியில், ‘அரவிந்த சாமியுடன் என்னை மண முடி!’ என்று கதவைத் தட்டி யிருக்கிறாள். "ஆ" கதையைப் படித்துவிட்டு, "என் மகளை மணம் செய்துகொள்ள வேண் டும்" என்று திருநெல்வேலில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், ‘பாலம்’ கதையைப் படித்து விட்டு என்னைக் கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என் வாசகர்கள்தான். வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில் இருந்து முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள். மிகச் சிறந்த நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன். அதுதான் என்னுடைய நோபெல்!
நன்றி: தேசிகன் (அங்கயிருந்து தான் காப்பி/பேஸ்ட்)
SSshhh... ஆடர் ஆடர்...மூன்று முக்கிய கேஸ்களின் தீர்ப்ஸ்..
ஆடர் ஆடர் ஆடர்... ஷ்ஷ்!
~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~~~~~
கேஸ்1: போடோவின் அட்டூழியங்களும் அதைத் தொடர்ந்த அமைதி கெடுக்கும் சூழல்களும்.
டவாலி: வாதிப் ப்ரதிவாதிகள் எல்லாம் சாட்சிக் கூண்டுல நில்லுங்க.
டவாலி: போடோ, போடோ, போடோ
டவாலி: 'போடோ'வ தனியா நிக்க வுடுங்க. யாரும் கிட்டப் போகாதீங்க. மத்தவங்களெல்லாம் எதிர்த்த கூண்ட்ல போய் நில்லுங்க.
ஜட்ஜு: இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது. கேடுகெட்ட பல மனிதர்களையும் கண்டிருக்கிறது. இந்த வழக்கு விசித்திரமானதல்ல. மிகக் கேவலமானது. குற்றவாளிக் கூண்டில் நிற்கும் போ.டோ, வாழ்க்கைப் பாதையில் சர்வ சாதாரணமாக தென்படும் மனிதர்களைப் போன்றவன் அல்ல. மனம் பிழன்றவன். பல இடங்களில் குழப்பம் விளைவித்தவன். என்ன செய்கிறோம் என்று தெரிந்தே இன்னல்கள் பல புரிந்தவன். படித்தவன், ஆனால் புத்தியைப் பிரயோகிக்காமல், ஈன-புத்தியை ப்ரயோகித்தவன். இங்கு சாட்சி கூண்டில் இருக்கும் பலரின் சாட்சிகளின் படியும், பலரின் வாக்குமூலத்தின் படியும், இன்ன பிற சாட்சிகளின் அடிப்படையிலும், இவன் செய்த குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. போடோ, உங்கள் தரப்பில் யாரும் வாதிட வராத நிலலயில், நீங்கள் ஏதாவது சொல்ல விருப்பப்படுகிறீர்களா?
போடோ: இதையெல்லாம் நான் மறுப்பேன் என்று எதிர்பார்ப்பீர்கள். இல்லை நிச்சயமாக இல்லை. தமிழில் உள்ள கெட்ட வார்த்தைகள் அனைத்தும் ப்ரயோகித்து பலரை அர்ச்சனை செய்தேன். ஏன்? பதிவுலகம் நல்லவர்கள் கூடாரம் ஆகிவிடக் கூடாது என்பதற்காக. டோவைக் கேடுகெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்தேன். ஏன்? அது ஏன்னு எனக்கே தெரீல. உனக்கேன் இவ்வளவு அக்கறை உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள். நானே பாதிக்கபட்டேன், நேரடியாக பாதிக்கப்பட்டேன். சமீபத்தில் சமீபத்தில் என்று தினமொரு டார்ச்சர் தரும் பதிவுகள். ஜிவ்வென்று சூடு தலைக்கேறும் எரிச்சலூட்டும் வசனங்கள். பொதுநலமா என்பீர்கள் இதிலே சுயநலம் தான் இருக்கிறது. இப்படிச் செய்வதால் எனக்குள்ளே ஏதோ ஒரு இன்பம் கிட்டியது. ஆகாரத்துக்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்த படுத்துகிறதே மீன், அது போலல்லாமல், நல்ல ஆகாரம் சாப்பிட்டுவிட்டு, பொழுது போகாத நேரங்களில் பதிவுலகில் அழுக்கேற்றுவதே பிழைப்பாய் வைத்திருந்தேன்.
ஜட்ஜ்: செய்த குற்றத்தை முழுவதுமாய் ஒத்துக் கொள்கிறீர்கள் என்று தெரிகிறது. அப்படித்தானே?
போடோ: @#$@#$@#$!!!$#!$!$!$#@$ !$@#$#@$@#$#@
ஜட்ஜ்: ஸ்ஸ்ஸ்ஸ்ஸ். அவன் வாய்ல ஒரு ப்ளாஸ்திரிய போடுங்க. எப்படித்தான் இவ்ளோ நாள் தாக்குப் பிடித்தார்களோ பாவம். ஆடர் ஆடர். எங்க வுட்டேன்? ஹாங். குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டதால், போடோ அடுத்த ஒரு வருடத்துக்கு, தினம் ஆயிரம் முறை, 'இனி நான் கெட்ட வார்த்தைகள் எழுதவோ, பேசவோ, நினைக்கவோ மாட்டேன்' என்று ஜெர்மனில் எழுதி டோவுக்கு அனுப்ப வேண்டும்.
பார்வையாளர்கள்: நல்ல தீர்ப்பு. ப்ரென்சுல எழுத சொல்லிருக்கணும். ப்ளா ப்ளா ப்ளா.. ஜட்ஜய்யா, இதுல சம்பந்தப்பட்ட மத்தவங்களுக்கு என்ன தண்டன?
ஜட்ஜ்: ஆடர் ஆடர் ஆடர். வாதிப் பிரதிவாதிகள் சிலரும், போடோவின் நல விறும்பிகள் சிலரும் போடோவுடன் நட்பு பாராட்டியிருப்பது இந்த வழக்கு விசாரணையின் போது தெரிய வந்துள்ளது. ஆனால், கெட்ட வார்த்தை விநியோகத்தில் யாருக்கும் பங்கு இருந்ததாய் திட்ட வட்டமாய் தெரியாத காரணத்தால், இன்னார் தான் அன்னார், அன்னார் தான் இன்னார், என்ற சப்பைக் கட்டு வாதங்களை இந்த நீதிமன்றம் ஏற்க மறுக்கிறது. ஆகையால், போடோக்கு நடந்ததை நினைவில் கொண்டு, கெடுவான் கேடு நினைப்பான் என்ற தர்மத்தின் உண்மையை புரிந்து கொண்டு, அனனவரையும், பழதை மறந்து, புதிய உற்சாக பாணம், ச, உற்சாக வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள வேண்டுமாய் இந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
உலகில்,
நூறில் நாலு பேர் பிறந்தவுடன் இறக்கின்றனர்,
நூறில் எட்டு பேர் ஊனமாய் பிறக்கின்றனர்,
நூறில் இருபத்தி ரெண்டு பேர் ஒருவேளை உணவும் இல்லாமல் திண்டாடுகின்றனர்,
நூறில் பதினாலு பேர் மனநிலை சரியில்லாமல் இருக்கின்றனர்,
நூறில் நாற்பத்திரெண்டு பேர் நல்ல ஆரோக்யத்துடன் தேவையானதைப் பெற்று ஓரளவுக்கு நிம்மதியாய் வாழ்கின்றனர்.
நாற்பத்திரெண்டில் ஒருவராய் நீங்கள் இருந்தால், ஒழுக்கமாய் வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.
(stats எல்லாம் உடான்ஸு).
~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~~~~~
கேஸ்2: சிலரின் so-called 'கலீஜ் உவ்வே' பதிவுகளை நீக்கக் கோறிக்கை.
டவாலி: வாதிப் ப்ரதிவாதிகள் எல்லாம் சாட்சிக் கூண்டுல நில்லுங்க.
ஜட்ஜ்: ஆடர் ஆடர் ஆடர். அனைவரின் கருத்து சுதந்திரமும், வாசிப்புச் சுதந்திரமும் ரொம்ப முக்கியம். குற்றவாளிக் கூண்டில் நிற்பவரின் பதிவுகளைப் பார்த்தேன். நூறில், நாலஞ்சு பதிவுகள், நல்ல கருத்துடன் தேருது. ஆனா, அந்த மூணு நாலும் கூட, கருத்து சுதந்திரத்தினை கேலி செய்யும் விதத்தில் கலீஜ்-உவ்வே தலைப்புடன் வெளிவருது. குறிப்பா ஆப்ரிக்கா காட்டுப் பழங்குடியனரின் ஒரு கெட்ட பழக்கவழக்கத்தை பறைசாற்றும் பதிவு பார்த்தேன். நல்ல கருத்துக்கள் அதில். ஆனா, அதுக்கு, கலீஜ்-உவ்வே தலைப்பு அநாவசியமானது.
பார்வையாளர்: ஆப்ரிக்கா காரனுக்கு தமில் தெரியுமா? நம்ம ஊருக்கு எதுக்கு அந்த பதிவு? டோக்கு ஆப்ரிக்க மொழி தெரிஞ்சா மொழி பெயர்து அனுப்புனா நல்லாருக்கும். கச முசா. ப்ளா ப்ளா ப்ளா.
ஜட்ஜ்: ஆர்டர் ஆர்டர். சம்பந்தப்பட்ட பதிவர், ட்ரமாட்டிக்கா எழுதும் கலீஜ்-உவ்வே தலைப்பை தவிர்க்க வேண்டும் என்று இந்த நீதிமன்றம் கேட்டுக் கொள்கிறது. டவாலி, அவரின் பதிவுகளை அடுத்த ஒரு வாரத்துக்கு கண்காணித்து, இந்த நீதிமன்றத்துக்கு தெரியப் படுத்துவார். கலீஜ்-உவ்வேக்கள் தொடர்ந்தால், அவரின் பதிவுகள் நீக்க உத்தரவிடப்படும். அதைத் தவிர, 'இனி கலீஜ்-உவ்வே தலைப்பு வவக்கமாட்டேன்' என்று ஆயிரம் முறை ப்ரென்சில் எழுதி, கசக்கி கிழித்து ஒரு கோணிப்பைக்குள் போட்டு, அது நிறம்பும் வரை தொடர்ந்து எழுத வேண்டி வரும். எச்சரிக்கையுடன் அவரை விடுவிக்கிறோம்.
உலகில்,
நூறில் நாலு பேர் பிறந்தவுடன் இறக்கின்றனர்,
நூறில் எட்டு பேர் ஊனமாய் பிறக்கின்றனர்,
நூறில் இருபத்தி ரெண்டு பேர் ஒருவேளை உணவும் இல்லாமல் திண்டாடுகின்றனர்,
நூறில் பதினாலு பேர் மனநிலை சரியில்லாமல் இருக்கின்றனர்,
நூறில் நாற்பத்திரெண்டு பேர் நல்ல ஆரோக்யத்துடன் தேவையானதைப் பெற்று ஓரளவுக்கு நிம்மதியாய் வாழ்கின்றனர்.
நாற்பத்திரெண்டில் ஒருவராய் நீங்கள் இருந்தால், உபயோகமாய் எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்.
(stats எல்லாம் உடான்ஸு).
~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~~~~~
கேஸ்3: மறைந்த எழுத்தாளர் சுஜாதாவைப் பற்றி.
ஜட்ஜ்: எழுத்தாளர் சுஜாதா ஒரு மகத்தான கலைஞர் என்பது யாரும் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. அவரின் எழுத்துலக வெற்றியே இதை பறைசாற்றும். இந்த நதீமன்றம், சுஜாதாவை, எலோரும், ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து எழுதிக் கிழிக்க வேண்டும் என்று வற்புறுத்தவில்லை.
ஆனால், மறைந்த ஒருவரைப் பற்றி ஏளனமாக எழுதுவதை இந்த நீதிமன்றம் அனுமதிக்காது.
ஓ.சியில் எழுத ப்ளாக் இருக்கிறது, கேள்விகள் கேட்காமல் தெரட்டிகள் தெரட்டுகிறது என்ற காரணத்தால், எல்லோரும் நக்கீரன் ஆகி விட முயற்சிக்க வேண்டாம் என்று இந்த நீதிமன்றம் கேட்டுக் கொள்கிறது. மறைந்த கலைஞனை ஏளனம் செய்வது தூற்றுவதும், மகாக்-கேவலம், கேஸ்2வை விட, இது உவ்வே ஜாஸ்தி.
"VCR மாதிரி lifeலயும் ஒரு rewind button இருந்தா எவ்ளோ நல்லாயிருக்கும்"
- சுஜாதா
உலகில்,
நூறில் நாலு பேர் பிறந்தவுடன் இறக்கின்றனர்,
நூறில் எட்டு பேர் ஊனமாய் பிறக்கின்றனர்,
நூறில் இருபத்தி ரெண்டு பேர் ஒருவேளை உணவும் இல்லாமல் திண்டாடுகின்றனர்,
நூறில் பதினாலு பேர் மனநிலை சரியில்லாமல் இருக்கின்றனர்,
நூறில் நாற்பத்திரெண்டு பேர் நல்ல ஆரோக்யத்துடன் தேவையானதைப் பெற்று ஓரளவுக்கு நிம்மதியாய் வாழ்கின்றனர்.
நாற்பத்திரெண்டில் ஒருவராய் நீங்கள் இருந்தால், உருப்படியாய் எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்.
(stats எல்லாம் உடான்ஸு).
நல்லா இருங்க!
~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~~~~~
கேஸ்1: போடோவின் அட்டூழியங்களும் அதைத் தொடர்ந்த அமைதி கெடுக்கும் சூழல்களும்.
டவாலி: வாதிப் ப்ரதிவாதிகள் எல்லாம் சாட்சிக் கூண்டுல நில்லுங்க.
டவாலி: போடோ, போடோ, போடோ
டவாலி: 'போடோ'வ தனியா நிக்க வுடுங்க. யாரும் கிட்டப் போகாதீங்க. மத்தவங்களெல்லாம் எதிர்த்த கூண்ட்ல போய் நில்லுங்க.
ஜட்ஜு: இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது. கேடுகெட்ட பல மனிதர்களையும் கண்டிருக்கிறது. இந்த வழக்கு விசித்திரமானதல்ல. மிகக் கேவலமானது. குற்றவாளிக் கூண்டில் நிற்கும் போ.டோ, வாழ்க்கைப் பாதையில் சர்வ சாதாரணமாக தென்படும் மனிதர்களைப் போன்றவன் அல்ல. மனம் பிழன்றவன். பல இடங்களில் குழப்பம் விளைவித்தவன். என்ன செய்கிறோம் என்று தெரிந்தே இன்னல்கள் பல புரிந்தவன். படித்தவன், ஆனால் புத்தியைப் பிரயோகிக்காமல், ஈன-புத்தியை ப்ரயோகித்தவன். இங்கு சாட்சி கூண்டில் இருக்கும் பலரின் சாட்சிகளின் படியும், பலரின் வாக்குமூலத்தின் படியும், இன்ன பிற சாட்சிகளின் அடிப்படையிலும், இவன் செய்த குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. போடோ, உங்கள் தரப்பில் யாரும் வாதிட வராத நிலலயில், நீங்கள் ஏதாவது சொல்ல விருப்பப்படுகிறீர்களா?
போடோ: இதையெல்லாம் நான் மறுப்பேன் என்று எதிர்பார்ப்பீர்கள். இல்லை நிச்சயமாக இல்லை. தமிழில் உள்ள கெட்ட வார்த்தைகள் அனைத்தும் ப்ரயோகித்து பலரை அர்ச்சனை செய்தேன். ஏன்? பதிவுலகம் நல்லவர்கள் கூடாரம் ஆகிவிடக் கூடாது என்பதற்காக. டோவைக் கேடுகெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்தேன். ஏன்? அது ஏன்னு எனக்கே தெரீல. உனக்கேன் இவ்வளவு அக்கறை உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள். நானே பாதிக்கபட்டேன், நேரடியாக பாதிக்கப்பட்டேன். சமீபத்தில் சமீபத்தில் என்று தினமொரு டார்ச்சர் தரும் பதிவுகள். ஜிவ்வென்று சூடு தலைக்கேறும் எரிச்சலூட்டும் வசனங்கள். பொதுநலமா என்பீர்கள் இதிலே சுயநலம் தான் இருக்கிறது. இப்படிச் செய்வதால் எனக்குள்ளே ஏதோ ஒரு இன்பம் கிட்டியது. ஆகாரத்துக்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்த படுத்துகிறதே மீன், அது போலல்லாமல், நல்ல ஆகாரம் சாப்பிட்டுவிட்டு, பொழுது போகாத நேரங்களில் பதிவுலகில் அழுக்கேற்றுவதே பிழைப்பாய் வைத்திருந்தேன்.
ஜட்ஜ்: செய்த குற்றத்தை முழுவதுமாய் ஒத்துக் கொள்கிறீர்கள் என்று தெரிகிறது. அப்படித்தானே?
போடோ: @#$@#$@#$!!!$#!$!$!$#@$ !$@#$#@$@#$#@
ஜட்ஜ்: ஸ்ஸ்ஸ்ஸ்ஸ். அவன் வாய்ல ஒரு ப்ளாஸ்திரிய போடுங்க. எப்படித்தான் இவ்ளோ நாள் தாக்குப் பிடித்தார்களோ பாவம். ஆடர் ஆடர். எங்க வுட்டேன்? ஹாங். குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டதால், போடோ அடுத்த ஒரு வருடத்துக்கு, தினம் ஆயிரம் முறை, 'இனி நான் கெட்ட வார்த்தைகள் எழுதவோ, பேசவோ, நினைக்கவோ மாட்டேன்' என்று ஜெர்மனில் எழுதி டோவுக்கு அனுப்ப வேண்டும்.
பார்வையாளர்கள்: நல்ல தீர்ப்பு. ப்ரென்சுல எழுத சொல்லிருக்கணும். ப்ளா ப்ளா ப்ளா.. ஜட்ஜய்யா, இதுல சம்பந்தப்பட்ட மத்தவங்களுக்கு என்ன தண்டன?
ஜட்ஜ்: ஆடர் ஆடர் ஆடர். வாதிப் பிரதிவாதிகள் சிலரும், போடோவின் நல விறும்பிகள் சிலரும் போடோவுடன் நட்பு பாராட்டியிருப்பது இந்த வழக்கு விசாரணையின் போது தெரிய வந்துள்ளது. ஆனால், கெட்ட வார்த்தை விநியோகத்தில் யாருக்கும் பங்கு இருந்ததாய் திட்ட வட்டமாய் தெரியாத காரணத்தால், இன்னார் தான் அன்னார், அன்னார் தான் இன்னார், என்ற சப்பைக் கட்டு வாதங்களை இந்த நீதிமன்றம் ஏற்க மறுக்கிறது. ஆகையால், போடோக்கு நடந்ததை நினைவில் கொண்டு, கெடுவான் கேடு நினைப்பான் என்ற தர்மத்தின் உண்மையை புரிந்து கொண்டு, அனனவரையும், பழதை மறந்து, புதிய உற்சாக பாணம், ச, உற்சாக வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள வேண்டுமாய் இந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
உலகில்,
நூறில் நாலு பேர் பிறந்தவுடன் இறக்கின்றனர்,
நூறில் எட்டு பேர் ஊனமாய் பிறக்கின்றனர்,
நூறில் இருபத்தி ரெண்டு பேர் ஒருவேளை உணவும் இல்லாமல் திண்டாடுகின்றனர்,
நூறில் பதினாலு பேர் மனநிலை சரியில்லாமல் இருக்கின்றனர்,
நூறில் நாற்பத்திரெண்டு பேர் நல்ல ஆரோக்யத்துடன் தேவையானதைப் பெற்று ஓரளவுக்கு நிம்மதியாய் வாழ்கின்றனர்.
நாற்பத்திரெண்டில் ஒருவராய் நீங்கள் இருந்தால், ஒழுக்கமாய் வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.
(stats எல்லாம் உடான்ஸு).
~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~~~~~
கேஸ்2: சிலரின் so-called 'கலீஜ் உவ்வே' பதிவுகளை நீக்கக் கோறிக்கை.
டவாலி: வாதிப் ப்ரதிவாதிகள் எல்லாம் சாட்சிக் கூண்டுல நில்லுங்க.
ஜட்ஜ்: ஆடர் ஆடர் ஆடர். அனைவரின் கருத்து சுதந்திரமும், வாசிப்புச் சுதந்திரமும் ரொம்ப முக்கியம். குற்றவாளிக் கூண்டில் நிற்பவரின் பதிவுகளைப் பார்த்தேன். நூறில், நாலஞ்சு பதிவுகள், நல்ல கருத்துடன் தேருது. ஆனா, அந்த மூணு நாலும் கூட, கருத்து சுதந்திரத்தினை கேலி செய்யும் விதத்தில் கலீஜ்-உவ்வே தலைப்புடன் வெளிவருது. குறிப்பா ஆப்ரிக்கா காட்டுப் பழங்குடியனரின் ஒரு கெட்ட பழக்கவழக்கத்தை பறைசாற்றும் பதிவு பார்த்தேன். நல்ல கருத்துக்கள் அதில். ஆனா, அதுக்கு, கலீஜ்-உவ்வே தலைப்பு அநாவசியமானது.
பார்வையாளர்: ஆப்ரிக்கா காரனுக்கு தமில் தெரியுமா? நம்ம ஊருக்கு எதுக்கு அந்த பதிவு? டோக்கு ஆப்ரிக்க மொழி தெரிஞ்சா மொழி பெயர்து அனுப்புனா நல்லாருக்கும். கச முசா. ப்ளா ப்ளா ப்ளா.
ஜட்ஜ்: ஆர்டர் ஆர்டர். சம்பந்தப்பட்ட பதிவர், ட்ரமாட்டிக்கா எழுதும் கலீஜ்-உவ்வே தலைப்பை தவிர்க்க வேண்டும் என்று இந்த நீதிமன்றம் கேட்டுக் கொள்கிறது. டவாலி, அவரின் பதிவுகளை அடுத்த ஒரு வாரத்துக்கு கண்காணித்து, இந்த நீதிமன்றத்துக்கு தெரியப் படுத்துவார். கலீஜ்-உவ்வேக்கள் தொடர்ந்தால், அவரின் பதிவுகள் நீக்க உத்தரவிடப்படும். அதைத் தவிர, 'இனி கலீஜ்-உவ்வே தலைப்பு வவக்கமாட்டேன்' என்று ஆயிரம் முறை ப்ரென்சில் எழுதி, கசக்கி கிழித்து ஒரு கோணிப்பைக்குள் போட்டு, அது நிறம்பும் வரை தொடர்ந்து எழுத வேண்டி வரும். எச்சரிக்கையுடன் அவரை விடுவிக்கிறோம்.
உலகில்,
நூறில் நாலு பேர் பிறந்தவுடன் இறக்கின்றனர்,
நூறில் எட்டு பேர் ஊனமாய் பிறக்கின்றனர்,
நூறில் இருபத்தி ரெண்டு பேர் ஒருவேளை உணவும் இல்லாமல் திண்டாடுகின்றனர்,
நூறில் பதினாலு பேர் மனநிலை சரியில்லாமல் இருக்கின்றனர்,
நூறில் நாற்பத்திரெண்டு பேர் நல்ல ஆரோக்யத்துடன் தேவையானதைப் பெற்று ஓரளவுக்கு நிம்மதியாய் வாழ்கின்றனர்.
நாற்பத்திரெண்டில் ஒருவராய் நீங்கள் இருந்தால், உபயோகமாய் எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்.
(stats எல்லாம் உடான்ஸு).
~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~~~~~
கேஸ்3: மறைந்த எழுத்தாளர் சுஜாதாவைப் பற்றி.
ஜட்ஜ்: எழுத்தாளர் சுஜாதா ஒரு மகத்தான கலைஞர் என்பது யாரும் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. அவரின் எழுத்துலக வெற்றியே இதை பறைசாற்றும். இந்த நதீமன்றம், சுஜாதாவை, எலோரும், ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து எழுதிக் கிழிக்க வேண்டும் என்று வற்புறுத்தவில்லை.
ஆனால், மறைந்த ஒருவரைப் பற்றி ஏளனமாக எழுதுவதை இந்த நீதிமன்றம் அனுமதிக்காது.
ஓ.சியில் எழுத ப்ளாக் இருக்கிறது, கேள்விகள் கேட்காமல் தெரட்டிகள் தெரட்டுகிறது என்ற காரணத்தால், எல்லோரும் நக்கீரன் ஆகி விட முயற்சிக்க வேண்டாம் என்று இந்த நீதிமன்றம் கேட்டுக் கொள்கிறது. மறைந்த கலைஞனை ஏளனம் செய்வது தூற்றுவதும், மகாக்-கேவலம், கேஸ்2வை விட, இது உவ்வே ஜாஸ்தி.
"VCR மாதிரி lifeலயும் ஒரு rewind button இருந்தா எவ்ளோ நல்லாயிருக்கும்"
- சுஜாதா
உலகில்,
நூறில் நாலு பேர் பிறந்தவுடன் இறக்கின்றனர்,
நூறில் எட்டு பேர் ஊனமாய் பிறக்கின்றனர்,
நூறில் இருபத்தி ரெண்டு பேர் ஒருவேளை உணவும் இல்லாமல் திண்டாடுகின்றனர்,
நூறில் பதினாலு பேர் மனநிலை சரியில்லாமல் இருக்கின்றனர்,
நூறில் நாற்பத்திரெண்டு பேர் நல்ல ஆரோக்யத்துடன் தேவையானதைப் பெற்று ஓரளவுக்கு நிம்மதியாய் வாழ்கின்றனர்.
நாற்பத்திரெண்டில் ஒருவராய் நீங்கள் இருந்தால், உருப்படியாய் எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்.
(stats எல்லாம் உடான்ஸு).
நல்லா இருங்க!
Tuesday, February 26, 2008
யாரைத்தான் நம்புவுதோ... ஓ..ஓ..ஓ..ஓ..ஓ..ஓ....

இதைப் பாட்டா கேட்டா, வரிகளை கவனிக்காம வுட்டுடுவோம்.
கவிதையா வாசிச்சா, கண்ணதாசனின் எளிமை வியக்க வைக்கும்.
என்ஸாய்!
~~~~ ~~~~ ~~~~
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
அம்மம்மா, பூமியிலே யாவும் வஞ்சம்
உறவெல்லாம் முள்ளாகும், உயிரெல்லாம் கல்லாகும்
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
அம்மம்மா, பூமியிலே யாவும் வஞ்சம்
உறவெல்லாம் முள்ளாகும், உயிரெல்லாம் கல்லாகும்
வேட்டை ஆடும் மானானேன்
வித்தை காட்டும் பொருளானேன்
காட்டில் வாழும் கிளியாகாமல்
நாட்டில் வாழும் பெண்ணானேன்
ஆணை பெற்றாள் பெண் என்று
அதனால்தானே துயர் இன்று
கண்ணைத் தந்த தெய்வங்களே
கருணை தந்தால் ஆகாதோ
ஓ..ஓ
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
அம்மம்மா, பூமியிலே யாவும் வஞ்சம்
உறவெல்லாம் முள்ளாகும், உயிரெல்லாம் கல்லாகும்
அழகாய்க் காட்டும் கண்ணாடி
மனதைக் காட்டக் கூடாதோ
பழகும்பொதே நன்மை தீமை
பார்த்து சொல்லக் கூடாதோ
வாழ்த்தும் கையில் வாளுண்டு
போற்றும் மொழியில் விஷமுண்டு
வஞ்சம் சிந்தும் புன்னகையில்லா
மனிதர் இங்கே எவருண்டு?
ஆ...ஆ..
~~~~ ~~~~ ~~~~
;)
Sunday, February 24, 2008
AsiaNetல் இளையராஜா பாட்டும், அதன் அலசலும்
சலங்கை ஒலி, கமலின் திரைப்பட வரலாறில் ஒரு சகாப்தம்.
அதில் இடம்பெற்ற பாடல்கள் எல்லாமே பல காலம் நிலைத்து நிற்கும் ரகம்.
'வேதம் அணுவிலும் ஒரு நாதம்' என்னும் பாடல், செம வெரைட்டி.
சின்ன வயசுல அவ்ளவா ரசிச்சுக் கேட்டதில்லை. அந்த காலத்துல, தகிட தஜிமி தந்தானா பாட்டு தான் பிடிச்சது :)
இப்ப கேட்டா, இந்த பாட்டு, சும்மா ஜிவ்னு இருக்கு.
'வேதம் அணுவிலும் ஒரு நாதம்' பாட்டை, AsiaNet ப்ரோக்ராம்ல ஒரு பொண்ணு பாட, அத ரசிச்சு சிலாகிச்சு கமெண்டு அடிக்கும் நடுவர்கள் கீழே (குறிப்பா அந்த 1st ஜட்ஜு கமெண்ட்ட பாருங்க. நம்ம ராசா பாட்ட, என்னமா மனப்பாடமா வச்சிருக்காரு) :
பாடல்:
ஜட்ஜஸ் Comments
ஒரிஜனல் பாடல் இங்கே.
அதில் இடம்பெற்ற பாடல்கள் எல்லாமே பல காலம் நிலைத்து நிற்கும் ரகம்.
'வேதம் அணுவிலும் ஒரு நாதம்' என்னும் பாடல், செம வெரைட்டி.
சின்ன வயசுல அவ்ளவா ரசிச்சுக் கேட்டதில்லை. அந்த காலத்துல, தகிட தஜிமி தந்தானா பாட்டு தான் பிடிச்சது :)
இப்ப கேட்டா, இந்த பாட்டு, சும்மா ஜிவ்னு இருக்கு.
'வேதம் அணுவிலும் ஒரு நாதம்' பாட்டை, AsiaNet ப்ரோக்ராம்ல ஒரு பொண்ணு பாட, அத ரசிச்சு சிலாகிச்சு கமெண்டு அடிக்கும் நடுவர்கள் கீழே (குறிப்பா அந்த 1st ஜட்ஜு கமெண்ட்ட பாருங்க. நம்ம ராசா பாட்ட, என்னமா மனப்பாடமா வச்சிருக்காரு) :
பாடல்:
ஜட்ஜஸ் Comments
ஒரிஜனல் பாடல் இங்கே.
Thursday, February 21, 2008
சிம்ரனுக்கா இந்த நெலமை?
அடப்பாவமே, சிம்ரனுக்கே இந்த நெலமையா?
ஹ்ம்ம்!
மார்ச் 3 முதல், ஜெயாடிவியில், திங்கள் முதல் வெள்ளி வரை, சிம்ரன் சின்னத்திரை, இரவு 8.30க்கு ஒளிபரப்பாகும்.

ஹாப்பி வெள்ளி!
;)
பி.கு1: செல்வராஜின், ராசா வேஷம் கலஞ்சு போச்சு படிச்சீங்களா? ஜூப்பர்!
பி.கு2:
சங்கமம் சிறந்த பதிவர்கள் வாக்கெடுப்பு நடத்தறாங்க. கண்டுக்கோங்க. வாக்காதவங்க வாக்குங்க. தேர்தல்1
தேர்தல்2
தேர்தல்3
;)
ஹ்ம்ம்!
மார்ச் 3 முதல், ஜெயாடிவியில், திங்கள் முதல் வெள்ளி வரை, சிம்ரன் சின்னத்திரை, இரவு 8.30க்கு ஒளிபரப்பாகும்.

ஹாப்பி வெள்ளி!
;)
பி.கு1: செல்வராஜின், ராசா வேஷம் கலஞ்சு போச்சு படிச்சீங்களா? ஜூப்பர்!
பி.கு2:
சங்கமம் சிறந்த பதிவர்கள் வாக்கெடுப்பு நடத்தறாங்க. கண்டுக்கோங்க. வாக்காதவங்க வாக்குங்க. தேர்தல்1
தேர்தல்2
தேர்தல்3
;)
Wednesday, February 20, 2008
நல்லா தூங்குங்கய்யா, எல்லாம் வெளங்கிடும்!

ரொம்ப முக்கிய வேலை இருந்தா மட்டும், ஒரு ஆறு ஆறரைக்கு எழுந்துக்கரது.
இல்லன்னா, ஏழு, எட்டு மணிதான்.
சனி ஞாயிறுகள்ள, பக்கத்து வீட்டுலேருந்து சத்தமோ, வெளியில புல்லு வெட்டர சத்தமோ, வயிறு கப கபன்னு பசிச்சாலோதான் முழிப்பு வரும்.
இந்த மாதிரி ஒரு pattern இல்லாம தூங்கரது நல்லதில்லை.
சரியான நேரத்துல தூங்கி, தேவையான அளவு ஆழ்ந்த உறக்கம் கிட்டினால், அந்த நாள் முழுவதுமே ஃப்ரெஷ்ஷா இருக்கும்னு கேள்விப் பட்டிருக்கேன் (முயன்றதில்லை :) ).
பதிவர் அனுராதா, தூக்கத்தை பற்றிய அருமையான கருத்துக்களை அனுப்பினாங்க. ( ஏற்கனவே இவங்க cancer பத்தி அனுப்பின பதிவு படிச்சிருப்பீங்க. )
உங்க பார்வைக்கு, தூக்கத்தின் நன்மைகள் கீழே, தொகுக்கப்பட்டுள்ளன. நன்றி டு அனுராதா.
இதன் ஆங்கில வடிவம் இங்கே.
இனி தொடர்வது, அனுராதா. படிச்சு முடிச்சுட்டு, உங்களுக்குப் பிடிச்ச தாலாட்டுப் பாட்ட சொல்லிட்டுப் போங்க. எனக்குப் பிடிச்சது, 'லாலி, லாலி.. வரம் தந்த சாமிக்கு...'.
===== ---- ==== ---- ====
நமக்கெல்லாம் முக்கியமான விஷயம், வேறென்ன? தூக்கம்தான்
ராத்திரி 9 டூ 11 : ரொம்ப முக்கியமான நேரம். அழுவாச்சி சீரியல் பாக்கறதுக்கு இல்லைங்க. நம்ம உடம்புல இருக்கற தேவையில்லாத கெமிக்கல்ஸ் எல்லாம் வெளியே போற நேரம். அதுனால ரிலாக்ஸ்டா ஒரு இடத்துல உக்காருங்க இல்லை ஏதாவது ம்யூஸிக் கேளுங்க. அதை விட்டுட்டு சமைக்கிறேன்,குழந்தைகளை கவனிக்கறேன் முக்கியமா சீரியல் பாக்க உக்காந்தீங்க யாருக்கு நஷ்டம்? வேற யாருக்கு? உங்களுக்குதான்
ராத்திரி 11 மணி டூ 1 மணி : நச்சுப்பொருள் வெளியேற்றம் இப்ப நம்ம நுரையீரல்ல, அது நம்மோட ஆழ்ந்த தூக்கத்துல நடக்கணும். ஆபீஸ்ல தூங்கறதெல்லாம் கணக்கில சேராதுங்க. அதுனால இந்த நேரத்துல கண்டிப்பா துங்குங்க.
விடிகாலை 1மணி டூ 3மணி : இப்ப அந்த நச்சுபொருள் ப்ராசஸ் குடல்ல நடக்கும். அதுனால இப்பவும் நல்லா இழுத்து போத்தி தூங்குங்க. சொல்லியா தரணும்
விடிகாலை 3மணி டூ 5மணி : இப்ப நம்ம ப்ராசஸ் சுவாசப்பைல நடந்துட்டிருக்கும். அதுனால பல நேரங்கள்ல இருமல் இருக்கும் பரவால்லன்னு ரெண்டு தடவை இருமிட்டு விட்டுடுங்க. மருந்தெல்லாம் ஒண்ணும் வேண்டாங்க.. அது பாட்டுக்கு அந்த ப்ராசஸ் நடந்துட்டிருக்கு அதை ஏன் தொல்லை பண்றீங்க.
காலை 5மணி டூ 7மணி : விடிஞ்சிருச்சுங்க. எழுந்துக்கோங்க. இன்னும் நம்ம ப்ராசஸ் முடியலை. அது இப்ப நம்ம பெருங்குடல்ல நடந்துட்டிருக்கு. வேறென்ன. அதேதான். காலைக் கடன்கள் முடிக்கணுமே. வயித்தை சுத்தப்படுத்தணும் அது ரொம்ப முக்கியம்
காலை 7மணி டூ 9மணி : இப்ப நம்ம சிறுகுடல் நம்ம உடம்புக்கு தேவையான விஷயங்களை வாங்கறதுக்கு ரெடியா இருக்கு. அதுனால ஒண்ணும் யோசிக்காதீங்க சாப்பிட ஆரம்பிச்சுடுங்க. உடம்பு சரியில்லாம இருக்கறவங்க காலையில 6.30க்கு முன்னால கூட சாப்பிடலாம். (உடம்பு சரியில்லாம இருக்கறவங்க மட்டும். எல்லா நேரமும் சாப்பிட்டுட்டே இருக்கறவங்கள பத்தி நோ கமெண்ட்ஸ்..
உடம்ப கரெக்ட்டா வச்சுக்கணும்னு நினைக்கறவங்க காலையில 7.30க்கு முன்னால சாப்பிடறது பெட்டர். சிம்பு படம் வெற்றிகரமா ஓடற அதிசயம் (தியேட்டருக்கு வெளிய இல்லைங்க தியேட்டர் உள்ளே) நடந்தாலும் காலையில சாப்பிடறத மிஸ் பண்ணாதீங்க.
நம்ம தூங்கறதுனால (ராத்திரில) இவ்வளவு நல்லது இருக்கும்போது அதை ஏன் விடணும். நல்லா தூங்குங்க. இதுல இன்னொரு விஷயம் என்னன்னா நடுராத்திரில இருந்து காலையில் 4 மணி வரைக்கும் நம்ம எலும்பு மஜ்ஜை ரத்தத்தை உற்பத்தி பண்ணும். நாம முழிச்சிருந்து உருப்படியா ஒண்ணும் பண்ணப்போறதில்லை அட தூங்கறதையாவது சரியா பண்ணுவோமே. என்ன சொல்றீங்க.
அதுனால சீக்கிரம் துங்குங்க, சீக்கிரம் எழுந்துக்கோங்க. அம்புட்டுதான்ய்ய்ய்
===== ---- ==== ---- ====
நன்றி அனுராதா.
பி.கு1:
கேள்வி: இந்த மாதிரி நல்ல விஷயங்கள் அவங்களே பதிவா போடாமா, என் கிட்ட ஏன் போடச் சொல்றாங்க?
பதில்: ஒண்ணுத்துக்கும் ஒதவாத பதிவுகள வருஷம் பூரா போடறேனே, இந்த மாதிரி எப்பயாச்சும், ப்ரயோஜனம் இருக்கரா மாதிரி போட்டுப் பொழச்சுக்கோன்னு நெனைக்கறாங்களோ என்னமோ :)
பி.கு2:
சங்கமம் சிறந்த பதிவர்கள் வாக்கெடுப்பு நடத்தறாங்க. கண்டுக்கோங்க. வாக்காதவங்க வாக்குங்க. வாக்கப் பிடிக்கலன்னா, கருத்தையாவது அங்க சொல்லிட்டுப் போங்க. கடைய விரிச்சு ஒக்காந்திருக்காங்கல்லா.
தேர்தல்1
தேர்தல்2
தேர்தல்3
;)
Flickr'ல் sleep என்று தேடியபோது மாட்டிய அழகான Sleeping Beauty.

மேலும் தூங்குமூஞ்சி படங்கள் இங்கே
Monday, February 18, 2008
இராமேஸ்வரம் - திரை விமர்சனம்

எதிர்பார்ப்புக்கு ஏத்த அளவு படம் இருந்துதா?
இல்லியே. சப்புன்னு முடிஞ்சுடுச்சு.
ஈழப் ப்ரச்சனைதான படம்?
இல்லீங்க, வழக்கமான இன்னொரு காதல் கதைக் களம். ஸ்ஸ்ஸ். வேற யோசிக்கவே மாட்றானுங்களேய்யா.
ஹீரோ ஜீவா, ஈழத்துக்காரர். ஈழத்தில் இருக்கும் ப்ரச்சனைகளால், சொந்த ஊரை விட்டு, இராமேஸ்வரம் வந்துடறாரு. இவங்களுக்கு தங்க இடம் கொடுக்கரவரு ஊர் பெரியவர் லால். லாலின் மகள் பாவனா. அப்பரம் என்ன? வழக்கம் போல், பாவனா, புல் மேக்கப்ல, ஹீரோவ சுத்தி சுத்தி காதலிப்பாங்க. ஹீரோ கன்ப்யூஸ் ஆகி என்ன பண்றாருங்கரதுதான் கதை.
நல்லாதான இருக்கு கதை. என்ன கொறை கண்டீக?
நல்லாதான் இருக்கு. ஒரே ஆறுதல் ஜீவாவின், யதார்த்த நடிப்பு. புதுசா தேடித் தேடி கதைக்களம் அமச்சு நடிக்கறாரு. குட்!
படத்தின் குறை, எதை சொல்லணும்னு தெரியாம, ரொம்ப கொழப்பமா கொண்டு போன டைரக்டர்.
ஈழப் ப்ரச்சனையை பெருசா படம் போட்டுக் காட்டர மாதிரி, படத்துக்கு ஒரு பேரு. அதோட நிக்காம, 'யாழ்ப்பாணத்திலிருந்து 36 மைல்'னு ஒரு எக்ஸ்ட்ரா எபெக்டு வேர.
இத செஞ்சவரு, கொஞ்சமாவது நெஜ ப்ரச்சனையை மனசில பதிக்க வேண்டாமா?
கொஞ்சம் ப்ளாஷ் பேக் போயி, ஒரு 1/2 மணி நேரத்துக்கு, ப்ரச்சனைகளின் தீவிரத்தைக் காட்டியிருந்தால், ஜீவாவின் மேலும், அவரின் சுற்றம் மேலும், அவர்களின் துயரத்தின் மேலும் ஒரு பிடிப்பு வந்திருக்கும்.
ஹிட்லர் பல ஆயிரம் மக்களை கொண்ணவன்னு எல்லாருக்கும் தெரியும். ஆனாலும், ஹிட்லர் கதையம்சம் கொண்ட படங்கள் எடுக்கும்போது, அவனின் கொடுமைகள் சிலவற்றை காட்சிப்படுத்தினால்தான், பார்வையாளனுக்கு, அந்தப் படத்தின் மீது ஒரூ தாக்கம் வரும்.
அதை விட்டுட்டு, முதல் சீன்லயே, எல்லோரும் அழுதுகிட்டு, முகாமுக்குள்ள போற மாதிரி காட்சிகள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலை.
'அகதி' என்ற வார்த்தையின் வலி, நமக்கு வலையுலகில் புழங்குவதால், நமது ஈழத்து நண்பர்களின் பதிவுகளின் மூலம் தெரியும். ஆனால், சாதாரண ஒரு ரசிகன், படத்தைப் பார்க்கும்போது, ஒரு தெரிவும் கிட்டாது அவனுக்கு.
படத்தின் இசை?
முதல் பாடலும், முதல் அரை மணி நேர பின்னணி இசையும், படத்தோடு சேரவே இல்லை. 'ஏத்திப் போக கப்பல் வருமா' பாடல் அருமை. மத்த பாட்டெல்லாம் சுமார்.
'யதார்த்த' நடிப்பில் நுங்கு எடுத்துக் கொண்டிருந்த ஜீவா, வழக்கம் போல கனவுப் பாட்டுக்கு மாடர்ன் ட்ரஸ் மாத்தினது கொடுமை. ஒட்டவே இல்லை.
மத்த விஷயங்கள்?
போட்டோகிராபி அருமையா இருந்தது.
பாவனாவின் மாமாவாக வரும், 'மெட்டி ஒலி போஸ்'ன் நடிப்பும் நல்லாயிருந்தது.
பாவனா நல்லா நடிச்சிருந்தாங்க. ஆனா, ஒட்டல.
மணிவண்ணன் நல்ல நடிப்பு. ஆனா, நமக்குதான் அவர் மேல ஒரு பிடிப்பு வரல.
லால், நல்ல அமைதியான நடிப்பு.
மற்ற பாத்திர படைப்பெல்லாம் யதார்த்தம்.
பாக்கலாமா? வேண்டாமா?
பாத்தே ஆகணும்னு சொல்ற அளவுக்கெல்லாம் படமில்லை.
படம், வழக்கமான பிசுபிசுப்புடன் கூடிய, கொஞ்சம் போர் அடிக்கும் ரகம்.
நீங்க பாத்தாச்சா?
பி.கு:
கீத்துக் கொட்டாயின் விமர்சனம்.
கோவி கண்ணனின் விமர்சனம்
Sunday, February 17, 2008
சிந்தாநதியும் சொர்கவாசலும் சில படைப்பாளிகளின் உள்ளக் குமுறலும்...
நம்ம சிந்தாநதி 'கணினி ஓவியப் போட்டி'ன்னு ஒண்ணு வச்சாரு.
வரையத் தெரியுமோ இல்லியோ, நானும் தடால்னு கோதால குதிச்சு ஒரு படம் வரஞ்சு அனுப்பிணேன்.
ஜூலை 2007ல வச்ச போட்டி, ரிஜல்ட்ட சொல்ல சொன்னா, ஒவ்வொரு மாசமா டபாய்ச்சுனே இருந்தாரு. இப்ப போட்டி வச்சு 8 மாசம் ஆயிடுச்சு. இன்னும் ரிஜல்ட்ட காணும்.
பிஸியா இருந்தா ஒரு வாரம் தள்ளலாம், ரெண்டு வாரம் தள்ளலாம், ஏன், ஒரு மாசமே தள்ளலாம். 8 மாசம் தள்ளினா என்னங்க அர்த்தம்?
கேக்கரதுக்கு ஆளில்லன்னு நெனச்சிட்டாரா?
ஒரு படைப்பாளியின் வேதனை அவருக்குப் புரியலியா?
எவ்ளோ கஷ்டப்பட்டு, இப்படி ஒரு படம் வரஞ்சிருப்போம். பரிசெல்லாம் வேணாங்க, யாரு கெலிச்சான்னு சொல்லுங்க போதும்.
என் படையல் இங்கே. படையலைக் கண்டு உணர்சிவசப்படாமல், பரவசமடையுங்கள்!
மற்றவர்களின் படையல்கள் இங்கே.
சொர்கவாசல்:

சும்மா டமாஸு :)
வரையத் தெரியுமோ இல்லியோ, நானும் தடால்னு கோதால குதிச்சு ஒரு படம் வரஞ்சு அனுப்பிணேன்.
ஜூலை 2007ல வச்ச போட்டி, ரிஜல்ட்ட சொல்ல சொன்னா, ஒவ்வொரு மாசமா டபாய்ச்சுனே இருந்தாரு. இப்ப போட்டி வச்சு 8 மாசம் ஆயிடுச்சு. இன்னும் ரிஜல்ட்ட காணும்.
பிஸியா இருந்தா ஒரு வாரம் தள்ளலாம், ரெண்டு வாரம் தள்ளலாம், ஏன், ஒரு மாசமே தள்ளலாம். 8 மாசம் தள்ளினா என்னங்க அர்த்தம்?
கேக்கரதுக்கு ஆளில்லன்னு நெனச்சிட்டாரா?
ஒரு படைப்பாளியின் வேதனை அவருக்குப் புரியலியா?
எவ்ளோ கஷ்டப்பட்டு, இப்படி ஒரு படம் வரஞ்சிருப்போம். பரிசெல்லாம் வேணாங்க, யாரு கெலிச்சான்னு சொல்லுங்க போதும்.
என் படையல் இங்கே. படையலைக் கண்டு உணர்சிவசப்படாமல், பரவசமடையுங்கள்!
மற்றவர்களின் படையல்கள் இங்கே.
சொர்கவாசல்:

சும்மா டமாஸு :)
Thursday, February 14, 2008
திருவொற்றியூர் மேட்டரும், அப்பாவிக்கு ஒரு நன்றியும்.
வணக்கமுங்க. ரெண்டு மேட்டரு சொல்லப்போறேன்.
கொஞ்ச நாளைக்கு முன்னாடி, நம்ம ஊர் ப்ரச்சனை ஒண்ண இங்க எழுதியிருந்தேன்.
சென்னையில் ரோடு போடும் அதிகாரிகளின் பொறுப்பற்ற வேலையை சுட்டிக் காட்டும் பதிவு அது.
அதாவது, சில வருஷங்களுக்கு ஒரு முறை ரோடு போடும்போது, ஏற்கனவே இருக்கும் தார்/கற்களை அப்புறப் படுத்தாமல், அதுக்கு மேலயே புது ரோடு போடறாங்க, இதனால என்னாவுதுன்னா, அக்கம் பக்க வீடெல்லாம் ரோடு லெவலுக்கு கீழ போயி, மழைல வீட்டுக்குள்ள்ள தண்ணி வர அளவுக்கு ஆகிடுச்சு.
எங்க தெருவுல இந்த ப்ரச்சன வந்தப்பரம் தான் எனக்கு ஒரச்சது.
திருவொற்றியூர் மாதிரி எடங்கள்ள, வீட்டுல பாதி, ரோடுக்கு கீழதான் இருக்கு.
அந்த பக்கம் இருக்கர யாராச்சும், நான் சொல்ற மேட்டரு நல்லா வெளங்கரமாதிரி, ஒரு புகைப்படம் எடுத்து அனுப்பினீங்கன்னா, உபயோகமா இருக்கும்.
செய்வீங்களா? அட்வான்ஸ்ட் நன்றீஸ் :)
இந்த மாதிரி ஊர் ப்ரச்சனைய எடுத்துச் சொல்ல, ஒரு கூட்டுப் பதிவு ஆரம்ப்பிச்சிருக்கோம்னு உங்களுக்கு ஏற்கனவே தெரியும். இதுவரைக்கும் Anandha Loganathan, தருமி, நக்கீரன், தஞ்சாவூரன், நானு கோதால இருக்கோம்.
என்ன பெருசா செய்யமுடியும்னு இதுவரைக்கும் தெரியல. ஆனா, ஏதாவது, சின்ன சின்ன மாற்றமாவது அமைய முயற்சி செய்லாம்னு ஏற்பாடு.
FixMyIndia.blogspot.com என்ற அந்த கூட்டு முயற்சிக்கு, நம்ம அப்பாவி, ஒரு லோகோ பண்ணிக் கொடுத்திருக்காரு. அவருக்கு எங்கள் நன்றி. இங்க க்ளிக்கி லோகோ பாருங்க.
இந்த தளத்தில், உறுப்பினராக யார் வேணும்னாலும் சேரலாம். ஊரை சீரழிக்கும் சின்ன சின்ன ப்ரச்சனை முதல் (தெரு விளக்கு, ரோடு, சாக்கடை, etc..) , பெரிய பெரிய (லஞ்சம், சுகாதாரம்,...) விடைதெரியா ப்ரச்சனைகளைப் பற்றியும் அங்கு அலசலாம்.
அலசுவதோடு மட்டுமில்லாமல், நமது புகார்களை, மேலதிகாரிகளிடம் எடுத்துச் செல்லவும் முயற்சிகள் செய்யலாம்.
நீங்களும் உறுப்பினராக, அந்தப் பதிவில் பின்னூட்டமிடுங்கள். நன்றி!
ஊர்கூடி தேர் இழுப்போம்!
கொஞ்ச நாளைக்கு முன்னாடி, நம்ம ஊர் ப்ரச்சனை ஒண்ண இங்க எழுதியிருந்தேன்.
சென்னையில் ரோடு போடும் அதிகாரிகளின் பொறுப்பற்ற வேலையை சுட்டிக் காட்டும் பதிவு அது.
அதாவது, சில வருஷங்களுக்கு ஒரு முறை ரோடு போடும்போது, ஏற்கனவே இருக்கும் தார்/கற்களை அப்புறப் படுத்தாமல், அதுக்கு மேலயே புது ரோடு போடறாங்க, இதனால என்னாவுதுன்னா, அக்கம் பக்க வீடெல்லாம் ரோடு லெவலுக்கு கீழ போயி, மழைல வீட்டுக்குள்ள்ள தண்ணி வர அளவுக்கு ஆகிடுச்சு.
எங்க தெருவுல இந்த ப்ரச்சன வந்தப்பரம் தான் எனக்கு ஒரச்சது.
திருவொற்றியூர் மாதிரி எடங்கள்ள, வீட்டுல பாதி, ரோடுக்கு கீழதான் இருக்கு.
அந்த பக்கம் இருக்கர யாராச்சும், நான் சொல்ற மேட்டரு நல்லா வெளங்கரமாதிரி, ஒரு புகைப்படம் எடுத்து அனுப்பினீங்கன்னா, உபயோகமா இருக்கும்.
செய்வீங்களா? அட்வான்ஸ்ட் நன்றீஸ் :)
இந்த மாதிரி ஊர் ப்ரச்சனைய எடுத்துச் சொல்ல, ஒரு கூட்டுப் பதிவு ஆரம்ப்பிச்சிருக்கோம்னு உங்களுக்கு ஏற்கனவே தெரியும். இதுவரைக்கும் Anandha Loganathan, தருமி, நக்கீரன், தஞ்சாவூரன், நானு கோதால இருக்கோம்.
என்ன பெருசா செய்யமுடியும்னு இதுவரைக்கும் தெரியல. ஆனா, ஏதாவது, சின்ன சின்ன மாற்றமாவது அமைய முயற்சி செய்லாம்னு ஏற்பாடு.
FixMyIndia.blogspot.com என்ற அந்த கூட்டு முயற்சிக்கு, நம்ம அப்பாவி, ஒரு லோகோ பண்ணிக் கொடுத்திருக்காரு. அவருக்கு எங்கள் நன்றி. இங்க க்ளிக்கி லோகோ பாருங்க.
இந்த தளத்தில், உறுப்பினராக யார் வேணும்னாலும் சேரலாம். ஊரை சீரழிக்கும் சின்ன சின்ன ப்ரச்சனை முதல் (தெரு விளக்கு, ரோடு, சாக்கடை, etc..) , பெரிய பெரிய (லஞ்சம், சுகாதாரம்,...) விடைதெரியா ப்ரச்சனைகளைப் பற்றியும் அங்கு அலசலாம்.
அலசுவதோடு மட்டுமில்லாமல், நமது புகார்களை, மேலதிகாரிகளிடம் எடுத்துச் செல்லவும் முயற்சிகள் செய்யலாம்.
நீங்களும் உறுப்பினராக, அந்தப் பதிவில் பின்னூட்டமிடுங்கள். நன்றி!
ஊர்கூடி தேர் இழுப்போம்!
Wednesday, February 13, 2008
உன்னை காதலிப்பதை என்னால் நிறுத்த முடியாது... எம்.ஜே!
எங்கள் தல எம்.ஜே'ன் பாடலை இந்த காதலர் தினமன்று உங்களுடன் பகிர்வதில் பேரானந்தம் அடைகிறோம். :)
கண்டு களியுங்கள்.
வீடியோக்கு கீழே, பாடலின் வரிகள் உள்ளது. பாடி மகிழுங்கள்!
கண்டு களியுங்கள்.
வீடியோக்கு கீழே, பாடலின் வரிகள் உள்ளது. பாடி மகிழுங்கள்!
Thursday, February 07, 2008
Tuesday, February 05, 2008
Lay Off - சரியா தப்பா?
Lay Off என்பது அமெரிக்க வாழ்வில் ரொம்ப சாதாரணமான விஷயமாயிடுச்சு.
2001ன் சரிவிக்குப் பிறகு, வருஷா வருஷம், பல நிறுவனங்களில் நடக்கர விஷயம் தான் இது.
UKயில் அப்படியில்ல போலருக்கு. ஒரு ஆள, வீட்டுக்கு அனுப்பணும்னா, மூணோ நாலு மாசம் அட்வான்ஸா சொல்லணும்னு ஏதோ சட்டம் இருக்காம். (தொர லேசுபட்ட ஆளா? :) )
lay offனா என்னான்னு புருவத்த ஒசத்துரவங்களுக்கு இதோ layoffன் அர்த்தம் (from wiki):
Layoff is the termination of employment of an employee or (more commonly) a group of employees for business reasons, such as the decision that certain positions are no longer necessary
அதாகப்பட்டது, ஒருவரோ, ஒன்றிற்கு மேற்பட்டவரோ, இனி நமக்கு தேவையில்லை என்று ஒரு நிறுவனம் முடிவு செய்து, அந்த நபர்களை வேலையை விட்டு நிறுத்தும் முறை layoff.
இந்த மாதிரி layoffகள், cost-cutting என்று சொல்லப்படும், செலவைக் குறைக்கவே அதிகமா செய்வாங்க.
இது ஒரு அலுவலகத்தில் இருக்கும் ப்யூன் முதல், CEOவரை யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம்.
ஆனா, நிறுவனத்தின் சரிவு தொடங்கும் போது, மிக்காரும், இது கீழ் நிலை வேலையாட்களை முதலில் பாதித்து, படிப்படியாகத்தான், மேல் மட்ட அதிகாரிகளை பாதிக்கும்.
இப்போ, இது, இந்தியாவில் உள்ள ஐ.டி நிறுவனங்களில் துவங்கியுள்ளது.
IBM, TCS இந்த layoffகளுக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்காங்களாம்.
ஆனா, கொடுமை என்னன்னா, இவங்க, தெருத் தெருவா, காலேஜ் காலேஜா ஓடிப் போய், சரியான தேர்வுமுறை எல்லாம் இல்லாமல், கைல கெடச்ச எல்லா பசங்களையும் வேலை தரேன் வேலை தரேன்னு வளச்சு போட்டுக்கிட்டு, இப்ப, சின்னதா தங்களின் லாபம் குறையும் என்று தெரிந்ததும், தயவு தாட்சண்யம் இல்லாம, "நீ எனக்கு இப்போதைக்கு தேவையில்லை, கெளம்பு" என்பது கொஞ்சம் கசப்பாதான் இருக்கு கேக்க.
இன்னொரு பக்கம் யோசிச்சா, ஒரு நிறுவனத்தை நடத்தரவங்க, லாபம் ஈட்டுதலை குறிக்கோளா வச்சுக்கிட்டு காயை நகத்தரது எப்படி தப்பாகும்னும் தோணுது.
உதாரணத்துக்கு, நீங்களே, உங்க சொந்த பணம், ஒரு லட்சத்தை போட்டு ஒரு ஐஸ்-க்ரீம் கடை ஆரம்பிக்கறீங்க.
ஆரம்பத்துல, நல்ல வாடிக்கையாளர்கள் வராங்க.
மாசத்துக்கு 10,000 லாபம் கெடைக்குது.
சரின்னு, ரெண்டு பசங்கள வேலைக்கு வெக்கறீங்க.
ஆளுக்கு 1000 சம்பளம்.
ஒரு வருஷம் ஆச்சு. நல்லா போகுது கடை.
இதுவரை, ஒரு வருஷத்துல, 1,00,000 லாபம் கெடச்சுடுச்சு.
குளிர் காலம் ஆரம்பிச்சு, வாடிக்கையாளர்கள் வரவு கொறையுது.
உங்க லாபம் 10,000 லேருந்து கொறஞ்சு கொறஞ்சு 2,000 ஆவுது. இப்ப ரெண்டு பேருக்கு சம்பளம் மத்த செலவெல்லாம் போவ, ஒரு 1,000 நஷ்டம் ஆவுது.
ரெண்டு பேருக்கு சம்பளம் கொடுத்து, இந்த கடைய நடத்தரது கட்டுப்படி ஆவாதுன்னு தெரியுது.
என்ன பண்ணுவீங்க? ரெண்டு விஷயம் பண்ணலாம்.
1) இப்படியே போனா சரிவராது. ரெண்டு பேர்ல ஒருத்தர வீட்டுக்கு அனுப்பிடலாம். கடைய, தொடர்ந்து நஷ்டமில்லாம நடத்தலாம்.
2) மொத வருஷத்துல தான் 1,00,000 லாபம் பண்ணியாச்சே. இந்த காசு கரையர வரைக்கும், ரெண்டு பேரையும் வேலைல வச்சுக்கிட்டு, நிறுவனத்தை நஷ்டத்துக்கே நடத்தலாம்.
நீங்க என்ன பண்ணுவீங்க?
யோசிச்சு, உங்களுக்குத் தெரிஞ்ச காரணங்கள சொல்லுங்க. அப்படியே ஒரு வாக்கும் வாக்குங்க! :)
2001ன் சரிவிக்குப் பிறகு, வருஷா வருஷம், பல நிறுவனங்களில் நடக்கர விஷயம் தான் இது.
UKயில் அப்படியில்ல போலருக்கு. ஒரு ஆள, வீட்டுக்கு அனுப்பணும்னா, மூணோ நாலு மாசம் அட்வான்ஸா சொல்லணும்னு ஏதோ சட்டம் இருக்காம். (தொர லேசுபட்ட ஆளா? :) )
lay offனா என்னான்னு புருவத்த ஒசத்துரவங்களுக்கு இதோ layoffன் அர்த்தம் (from wiki):
Layoff is the termination of employment of an employee or (more commonly) a group of employees for business reasons, such as the decision that certain positions are no longer necessary
அதாகப்பட்டது, ஒருவரோ, ஒன்றிற்கு மேற்பட்டவரோ, இனி நமக்கு தேவையில்லை என்று ஒரு நிறுவனம் முடிவு செய்து, அந்த நபர்களை வேலையை விட்டு நிறுத்தும் முறை layoff.
இந்த மாதிரி layoffகள், cost-cutting என்று சொல்லப்படும், செலவைக் குறைக்கவே அதிகமா செய்வாங்க.
இது ஒரு அலுவலகத்தில் இருக்கும் ப்யூன் முதல், CEOவரை யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம்.
ஆனா, நிறுவனத்தின் சரிவு தொடங்கும் போது, மிக்காரும், இது கீழ் நிலை வேலையாட்களை முதலில் பாதித்து, படிப்படியாகத்தான், மேல் மட்ட அதிகாரிகளை பாதிக்கும்.
இப்போ, இது, இந்தியாவில் உள்ள ஐ.டி நிறுவனங்களில் துவங்கியுள்ளது.
IBM, TCS இந்த layoffகளுக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்காங்களாம்.
ஆனா, கொடுமை என்னன்னா, இவங்க, தெருத் தெருவா, காலேஜ் காலேஜா ஓடிப் போய், சரியான தேர்வுமுறை எல்லாம் இல்லாமல், கைல கெடச்ச எல்லா பசங்களையும் வேலை தரேன் வேலை தரேன்னு வளச்சு போட்டுக்கிட்டு, இப்ப, சின்னதா தங்களின் லாபம் குறையும் என்று தெரிந்ததும், தயவு தாட்சண்யம் இல்லாம, "நீ எனக்கு இப்போதைக்கு தேவையில்லை, கெளம்பு" என்பது கொஞ்சம் கசப்பாதான் இருக்கு கேக்க.
இன்னொரு பக்கம் யோசிச்சா, ஒரு நிறுவனத்தை நடத்தரவங்க, லாபம் ஈட்டுதலை குறிக்கோளா வச்சுக்கிட்டு காயை நகத்தரது எப்படி தப்பாகும்னும் தோணுது.
உதாரணத்துக்கு, நீங்களே, உங்க சொந்த பணம், ஒரு லட்சத்தை போட்டு ஒரு ஐஸ்-க்ரீம் கடை ஆரம்பிக்கறீங்க.
ஆரம்பத்துல, நல்ல வாடிக்கையாளர்கள் வராங்க.
மாசத்துக்கு 10,000 லாபம் கெடைக்குது.
சரின்னு, ரெண்டு பசங்கள வேலைக்கு வெக்கறீங்க.
ஆளுக்கு 1000 சம்பளம்.
ஒரு வருஷம் ஆச்சு. நல்லா போகுது கடை.
இதுவரை, ஒரு வருஷத்துல, 1,00,000 லாபம் கெடச்சுடுச்சு.
குளிர் காலம் ஆரம்பிச்சு, வாடிக்கையாளர்கள் வரவு கொறையுது.
உங்க லாபம் 10,000 லேருந்து கொறஞ்சு கொறஞ்சு 2,000 ஆவுது. இப்ப ரெண்டு பேருக்கு சம்பளம் மத்த செலவெல்லாம் போவ, ஒரு 1,000 நஷ்டம் ஆவுது.
ரெண்டு பேருக்கு சம்பளம் கொடுத்து, இந்த கடைய நடத்தரது கட்டுப்படி ஆவாதுன்னு தெரியுது.
என்ன பண்ணுவீங்க? ரெண்டு விஷயம் பண்ணலாம்.
1) இப்படியே போனா சரிவராது. ரெண்டு பேர்ல ஒருத்தர வீட்டுக்கு அனுப்பிடலாம். கடைய, தொடர்ந்து நஷ்டமில்லாம நடத்தலாம்.
2) மொத வருஷத்துல தான் 1,00,000 லாபம் பண்ணியாச்சே. இந்த காசு கரையர வரைக்கும், ரெண்டு பேரையும் வேலைல வச்சுக்கிட்டு, நிறுவனத்தை நஷ்டத்துக்கே நடத்தலாம்.
நீங்க என்ன பண்ணுவீங்க?
யோசிச்சு, உங்களுக்குத் தெரிஞ்ச காரணங்கள சொல்லுங்க. அப்படியே ஒரு வாக்கும் வாக்குங்க! :)
Sunday, February 03, 2008
எங்கெங்கு காணினும் வட்டமடா... அதையெல்லாம் படம் புடிக்க தாவு தீருதடா...
வணக்கமுங்க. சும்மா டமாசுக்கு வச்ச டைட்டில்.
PITன் பெப்ரவரி மாசப் போட்டித் தலைப்பு 'வட்டம்'.
மக்கள்ஸ் எல்லாரும், ரவுண்டு ரவுண்டா ரவுண்டு கட்டி அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.
எனக்கு நேரப் பற்றாக்குறை இந்த வாரம்.
வட்டத்த தேடீ ரொம்ப அலையமுடீல.
வீட்ல அங்க இங்க, இருக்கரதையே க்ளிக்கி அனுப்பறேன்.
(டிஸ்கி: என் படமெல்லாம் ஓஹோன்னு வரலை, இந்த மாதிரி நேரம் இல்ல அது இதுன்னு ஏதாவது சொல்லி சமாளிச்சாதான் உண்டு. வாத்தியாச்சே :) )
1) வெளக்கு வெப்போம்... வெளக்கு வெப்போம்... ஓ ஒ ஓ ஒ ஓ!

2) சமீபத்திய பொழுது போக்கு - கிட்டாரில் பொருள் குற்றம் இருக்கு. தெரீதா?

3)

4) எங்களுக்கும் மாடர்ன் ஆர்ட் வருமுங்க :) - (நோட் த பாயிண்ட் நளாயினி மேடம் :))

குறை நிறைகளச் சொல்லுங்க!
பி.கு: fixmyindia.blogspot.comல் சென்னையில் இருக்கும் வெவகாரமான 1/4 அடி ஏறும் ரோடு ப்ரச்சனையை புகார்பெட்டியில் போட்டாச்சு.
PITன் பெப்ரவரி மாசப் போட்டித் தலைப்பு 'வட்டம்'.
மக்கள்ஸ் எல்லாரும், ரவுண்டு ரவுண்டா ரவுண்டு கட்டி அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.
எனக்கு நேரப் பற்றாக்குறை இந்த வாரம்.
வட்டத்த தேடீ ரொம்ப அலையமுடீல.
வீட்ல அங்க இங்க, இருக்கரதையே க்ளிக்கி அனுப்பறேன்.
(டிஸ்கி: என் படமெல்லாம் ஓஹோன்னு வரலை, இந்த மாதிரி நேரம் இல்ல அது இதுன்னு ஏதாவது சொல்லி சமாளிச்சாதான் உண்டு. வாத்தியாச்சே :) )
1) வெளக்கு வெப்போம்... வெளக்கு வெப்போம்... ஓ ஒ ஓ ஒ ஓ!

2) சமீபத்திய பொழுது போக்கு - கிட்டாரில் பொருள் குற்றம் இருக்கு. தெரீதா?
3)

4) எங்களுக்கும் மாடர்ன் ஆர்ட் வருமுங்க :) - (நோட் த பாயிண்ட் நளாயினி மேடம் :))
குறை நிறைகளச் சொல்லுங்க!
பி.கு: fixmyindia.blogspot.comல் சென்னையில் இருக்கும் வெவகாரமான 1/4 அடி ஏறும் ரோடு ப்ரச்சனையை புகார்பெட்டியில் போட்டாச்சு.
Subscribe to:
Posts (Atom)