recent posts...

Tuesday, March 30, 2010

வசந்த காலம்

வீட்டின் அருகில் உள்ள ஒரு குட்டிப் பூங்காவில் எடுத்தது.

வழக்கம் போல் க்ளிக் க்ளிக்னு ஒரு இரு நூறு படம் அடிச்சுத் தள்ளி, வீட்ல வந்து எல்லாத்தையும் சலவை செஞ்சு, பிற்சேர்க்கை எல்லாம் பண்ணி, ஏதாவது தேறுதான்னு பாத்தா, 200ல் ஒரு அஞ்சு தேறிச்சு.
இது, பளிச்னு முன்னாடி நின்னுச்சு.
சந்தோஷமாகி, ஃபிளிக்கரிலும் அப்லோடிட்டு அக்காடான்னு ஒக்காந்தப்பரம்தான் தெரிஞ்சுது, இந்தப் படம், 'No Trespassing' boardஐ பாத்துட்டு, அவசரமா எஸ்கேப்பும்போது, தங்க்ஸ் அவசரமா எடுத்தது.

என் பேர்ல அப்லோடு பண்ணியாச்சு, இனி காப்பிரைட்டுக்கு பிராது கொடுக்காம இருந்தா சரி.

6 comments:

ராமலக்ஷ்மி said...

உங்களை விட அழகாய் எடுக்கிறாங்களே. அதற்காகவே போட்டிருக்கிறேன் ஓட்டு.

//என் பேர்ல அப்லோடு பண்ணியாச்சு, இனி காப்பிரைட்டுக்கு பிராது கொடுக்காம இருந்தா சரி.//

எப்படிக் கொடுப்பாங்க?

//Thangs hates blogs,so i am the escape ;) //

இப்படி நிலைமை இருக்கையில்:)))!!

Ananya Mahadevan said...

ஃபோட்டோன்னா இது ஃபோட்டோ.. தங்கமணியின் கைப்புண்ணியம் அருமையே அருமை. கொஞ்சம் கத்துக்கோங்க இனிமேலாச்சும் ஒளுங்கா போட்டோ பிடியுங்க. தெர்தா?

SurveySan said...

///இப்படி நிலைமை இருக்கையில்:)))!!///

ராமலக்ஷ்மி, இன்னும் எத்தனை நாளைக்கு எஸ்கேப் ஆக முடியும்னு தெரியலை. எல்லாரும், ஷெர்லாக் ஹோம்ஸ் கணக்கா தேடிக்கிட்டு இருக்காங்க.
பத்த வைக்க :)

SurveySan said...

அநன்யா,

இந்தப் படம் எடுக்கரதுக்கு முன்னாடி, 199 படம் நான் க்ளிக்கினது. கேமரா, அழ்கா எடுத்தே பழக்கப்பட்டுடுடுச்ச், அதான், யார் க்ளிக்கினாலும், அழகா வருது ;) ஹி ஹி ஹி.

Unknown said...

Awesome ...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

Very nice picture.. I love Spring time too.. Can't wait for my Tulips to come out.. Best wishes.. :)