recent posts...

Friday, November 30, 2007

எங்கள் குஷ்பாத்தாவுக்காக...

அடுத்த ஆட்டைய ஆரம்பிச்சிட்டானுங்க கெரகம் புடிச்சவனுங்க.
வேற வேலயே இல்ல போலயிருக்கு இ.முன்னணி கூடாரத்துல?

குஷ்பு ஏதோ ஃபங்க்ஷன்ல சாமி சிலைக்கு பக்கத்துல செருப்பு போட்டு ஒக்காந்துட்டாங்களாம், அதுவும், கால் மேல கால போட்டுக்கிட்டு ஒக்காந்துட்டாங்களாம்.
இப்படி ஒக்காந்ததனால, இந்து மத மக்கள் எல்லாரும் பெரிய அளவில் மன உளைச்சலுக்கு ஆளாயிட்டாங்களாமாம்.
வரிஞ்சு கட்டிக்கிட்டு குஷ்பாத்தா மேல அவமதிப்பு வழக்கு போட்டிருக்காராம் இ.முன்னணி கு.மூர்த்தி.

நானும் இந்து மதத்தைச் சேந்தவந்தான். ஏதோ ஓரளவுக்கு சாமி பக்தியும் இருக்கு.
என் மனசு ஒண்ணும் உளச்சலே அடையிலயே.

ஒரு சப்ப மேட்டரு இது. கண்டிப்பா தெனாவட்டுல பண்ணியிருக்கமாட்டாங்க குஷ்பூ. மேடைல போய் ஏன்யா சாமி செலைய வச்சீங்க? வேற எடம் கெடைக்கலியா?

தெரு ஓரத்துல இருக்கர பல கோயில்களுக்கு முன்னால் சாக்கடை தேங்கிக் கெடக்கு. அத கழுவி வுடுங்க டைம் இருந்தா. அத்த வுட்டுப்போட்டு, என்னத்துக்கு இந்த சவுடால் எல்லாம்?

சும்மா, பேப்பர்ல பேர் வரதுக்கு செய்யர வேலையா இது?

அப்படின்னா, இத வுட வேற எவ்ளவோ சப்ப மேட்டர் பண்ணலாமே? ஏன் குஷ்பாத்தாவ வம்புப்பு இழுக்கோணும்? மீசைய பெருசா வளங்க, நகத்த வளங்க, கூவத்துல உள் நீச்சல் அடிங்க, இப்படி எவ்ளவோ பண்ணலாமேய்யா?

ஏன்ய்யா? ஏன்?

(ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...அப்பாடா. இதுல ஒரே நன்மை, நமக்கு சர்வே போட மேட்டர் கெடச்சுது :) )

நீங்க என்ன நெனைக்கறீங்க இந்த மேட்டர் பத்தி? மன உளைச்சலெல்லாம் வருதா? யோசிச்சு குத்துங்க ;)

5 comments:

Anonymous said...

வேற வேலயே இல்ல போலயிருக்கு ?

SurveySan said...

வேல இருக்கு, எழுததான் மேட்டர் இல்ல ;)

நாஞ்சில் பிரதாப் said...

சிலைக்கு முன்னால செருப்பு போட்டுக்கொண்டு இருந்தது பிரச்சினை இல்லை...அத குஷ்பக்கா போட்டுகிட்டு இருந்ததுதான் பிரச்சினை...வேற யாராவது இருந்தா கண்டுக்கவே மாட்டானுக

SurveySan said...

அட, பரவால்லியே, இதுவரை 4 பேர் மன உளைச்சல் அடஞ்சிருக்காங்க.

எல்லாரும் ஒரே மாதிரி இருக்க முடியாதுங்கரது புரியுது.
இந்த மேட்டருக்கு ஏனுங்க உளைச்சல். கொஞ்சம் விளக்கம் சொல்லிட்டுப் போங்களேன். நன்றி!

SurveySan said...

5 பேருக்கு ஒளச்சலு இதுவரை;

முடிவ அறிவிச்சிடலாமா?