recent posts...

Monday, February 20, 2012

சென்னையின் விலைவாசி ஷாக்

எல்.கே.ஜி முதல், கல்லூரிப் படிப்பு வரை படிச்சு கிழிச்சு தொயச்சு ஆறப்போட்டது சென்னையில்தான்.
ஆணி பிடுங்க ஆரம்பிச்சதும் கூட  சென்னையில் தான்.
பெரிய வசதி வாய்ப்பில்லன்னால்லும், குடும்ப கஷ்ட நஷ்டங்களெல்லாம் தெரியாம, 'சுகவாசி'யாத்தான் வாழ்ந்து பழகியிருந்தேன்.
ஆனா, 'பாக்கெட்டு' மணியெல்லாம் வைத்திருந்ததில்லை.

சைக்களில் காத்து போச்சுன்னா, அடிக்கரதுக்கு, எட்டணாவும், வெயில் காலத்துல மயக்கம் வந்தா ஜோடா வாங்கிக் குடிக்க பழைய ரெண்டு ரூபாவும் மட்டுமே கையில் இருக்கும். பஸ்ஸுக்கும் ரயிலுக்கும், மாதாந்திரப் பாஸு/டோக்கன் மட்டுமே.

தம்ஸ்-அப்பு, நாயர் கடை டீ, பட்ஸ் பாவ் பஜ்ஜி, ஸெட் தோசையெல்லாம் வாங்கிக் கொடுக்க, நட்பு வட்டாரம் பெருசா இருந்தது.
வூட்டுக்கு தெரியாம, டாட்டா சியெரா காரு வாங்கர அளவுக்கு, பசையான பயலுவ கும்பலில் இருந்தார்கள்.

ஊரில் இருந்தவரை, ஒரு ரூபாய்க்கு டீயும், ரெண்டு ரூபாய்க்கு ஸ்பெஷல் டீயும், ஏழு ரூவாய்க்கு தாம்பரம் பட்ஸில் பாவ் பஜ்ஜியும், பத்து ரூவாய்க்கு பரோட்டா சால்னாவும் கிட்டியதாய் ஞாபகம். அன்லிமிட்டட் மீல்ஸ் கூட முப்பது ரூபாய் இருந்திருக்கும்.
இது தொண்ணூறுகளின் நடுவில்.

முதல் வேலை கிட்டியதும், பயலுவளை, தாம்பரம் பட்ஸுக்கு கூட்டிக் கொண்டு போய், அன்லிமிட்டட் மீல்ஸ் வாங்கி கொடுத்து, கடமையை ஆற்றினேன்.

சிங்கப்பூரில் வேலை கிட்டியதும், அந்த வருட விடுமுறையில் வரும்போது, பக்கத்தில் இருக்கும் குட்டி நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் போய், பஃபே வாங்கிக் கொடுத்து கடமையை ஆற்றினேன். ஒரு ஆளுக்கு, நூறு ரூபா கிட்ட இருந்தது. அதுக்கு துட்டை அழும்போதே, இவ்ளோ போதான்னு ஒரு கலக்கம் வந்துடுச்சு. இருந்தாலும், கடமை முக்கியமாச்சேன்னு எடுத்து வுட்டேன்.

அமெரிக்கா வந்ததும், ஒவ்வொரு வருட விடுமுறையில் நட்பு வட்டாரத்தை இட்டுச் செல்லும் இடத்திற்கு, "நட்சத்திரம்" ஏறிக் கொண்டே போனது. 2 ஸ்டார், 3 ஸ்டார் ஆகி, 3 ஸ்டார், 4 ஸ்டார் ஆகி, ஆகி, இப்ப ஏழு ஸ்டாரில் வந்து நிக்குது. ஐநூறு ரூபாய்க்கு முடிந்த கடமை ஆற்றல், இப்பெல்லாம் சில பல ஆயிரங்கள் ஆவுது.

விடுமுறையின் போது, இருக்கும் மூணு நாலு வாரத்தில், அதிகமாய் மற்ற விஷயங்களை அலசி ஆராய நேரம் இருக்காது. விலைவாசியெல்லாம் ஏறுதுன்னு  படிப்பதோடு சரி. எங்க போனாலும், ஆட்டோக்காரனும், கால் டாக்ஸி காரனும், ஐநூறு ரூபாய் நோட்டை வாங்கிக் கிட்டு, மிச்சம் தரலாமா வேணாமான்னு யோசிக்கர அளவுக்கு, பெட்ரோல் விலை ஏற்றம் ஆனது தெரிந்திருந்தது.

ஆனா, சிங்கிள் டீ, இன்னும் ஒரு ரூபாயாத்தான் இருக்கும், பஸ்ஸுக்கு குறைஞ்ச கட்டணம் இன்னும் எட்டணாவாத்தான் இருக்கும், உள்ளூர் மெட்ரோ ரயிலில் ரெண்டு ரூபாய்க்கு டிக்கெட் கிடைக்கும்னு உள்ளுக்குள்ள ஒரு நம்பிக்கை இருந்தது. அதுவும் ஏறிடுச்சுன்னு தெரிஞ்சுக்க, வாய்ப்பு பெருசா அமைந்ததில்லை. வேற யாராவது உடன் இருப்பார்கள். கொடுக்கல் வாங்கலை அவங்க பாத்துப்பாங்க என்பதால் அப்படி.

சென்ற விடுமுறையின் போது, குடும்பத்தோட சொந்த ஊருக்கு போயிட்டு, நான் தங்க்ஸ் மட்டும் தனியா சென்னைக்கு வர, மத்தவங்களெல்லாம் வேறு சில ஊர்களுக்கு விசிட் முடிச்சிட்டு சென்னைக்கு வரதா ப்ளான்.
வீட்டுக்கு வந்ததும் அகோரப் பசி. சமையல் எல்லாம் பண்ண நேரம் பத்தாது, பக்கத்துல தான் செட்டிநாடு உணவகம் ஒண்ணு இருக்கு, போயி எத்தையாவது வாங்கிட்டு வந்துடுன்னு தங்க்ஸ் சொன்னதைக் கேட்டதும், பைக்கை உதைத்து ஸ்டார்ட்டி விட்டு, உணவகம் வந்தடைந்தேன்.
ரெண்டு பேருக்கு, இரு நூறு ரூபாய் போதும்னு, கையில ரெண்டு நூறை எடுத்டு ஜோபீல போட்டுட்டு இந்தப் புறப்பாடு.

செட்டிநாட்டாரிடம் மெனுவை வாங்கி ஆர்டர் பண்ணலாம்னு பாத்தேன். நல்ல ஒரு பெப்பர் சிக்கனும், ஒரு பிரியாணியும், சால்னாவும், நாலு பரோட்டாவும் வாங்கிக்கிட்டா திவ்யமா கொண்டு போயி சாப்பிட்டா பிரமாதமா இருக்குமேன்னு மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டே, மெனுவை மேஞ்சு, ஆர்டன் பண்ணேன். நாணூத்தி சொச்சம் கொடுங்க சாருன்னு சொன்னான்.

திடுக்னு ஆயிருச்சு. 'பட்ஸ்' கணக்கு போட்டா, கிட்டத்தட்ட 120க்குள்ள வரும்னு நெனச்சிருந்த எனக்கு, நாணூறைக் கேட்டதும், தூக்கி வாரிப் போட்டுருச்சு.
மெனுவை வாங்கி விலையைப் பாத்தா, ஒரு பிரியாணி 160ரூ, ஒரு பரோட்டா 18ரூ, ஒரு பெப்பர் சிக்கன் 140ரூன்னு போட்டிருந்தான்.

18ரூ கொடுத்து ஒரு பரோட்டாவோ, 140 ரூ கொடுத்து தம்தூண்டு பெப்பர் சிக்கனோ வாங்க மனசும் வரலை, கையில் காசும் பத்தலை.

"ஓ, யூ நோ வாட். வெஜிடேரியன் டிஷ்ஷு என்னா இருக்கு?"ன்னு கேட்டு, காஞ்சுப் போன இடியாப்பத்தையும், தயிர் சாதத்தையும் வாங்கிக் கொண்டு போய் அன்றைய தினத்தை ஓட்டினேன்.
வழி நெடுக்க ஒரு திக் பிரமைதான். ஊருல என்ன நடக்குது? மிஞ்சி மிஞ்சி போனா, அஞ்சு ரூவாய் இருக்க வேண்டிய பரோட்டா, தாறு மாறா விலை ஏறிப் போயிருக்கே. எப்படி எல்லாருக்கும் கட்டுப்படி ஆகுது? அம்புட்டு விலை ஏற, அதுவும் ஏழு ஸ்டாரெல்லாம் இல்லை, சாதாரண உணவு விடுதிதான்.

நமக்குத்தான் பயக்கம் இல்லாததால கிலி ஆயிடுச்சா?
உள்ளூர் காரனெல்லாம், லெஃப்ட்டு கை கொடுக்கரதை, ரைட்டு கைக்கு தெரியாத அளவுக்கு விசுக் விசுக்னு எடுத்து தண்ணியா செலவு பண்றானாமே? ஐநூறு ரூவா நோட்டுக்கெல்லாம், ப்த்து ரூபா மாதிரிதான் மரியாதையாமே?
எங்கே செல்லும் இந்தப் பாதை..?


இஸ் இட்? ஹ்ம்!

21 comments:

SurveySan said...

இரண்டு வருஷத்துக்கு முன்னாடி எழுத ஆரம்பிச்சது. இன்னிக்குத்தான் கண்ணுல பட்டு, முடிக்க முடிஞ்சுது. ஆனா, மேட்டர் இன்னும் ரெலவண்ட்டுதானே? :)

துளசி கோபால் said...

ரெண்டு வருசமாயிருச்சா.......

இப்பெல்லாம் ஆயிரம்தான் சில்லறை:(

சாந்தி மாரியப்பன் said...

இனிமேயெல்லாம் எது பிடிக்கும்ன்னு பார்த்து ஆர்டர் செய்யறதை விட எது விலை குறைச்சலாயிருக்கும்ன்னு பார்த்துட்டுத்த்தான் ஆர்டர் செய்யணும் போலிருக்கு. விலை குறைச்சலா தண்ணிதான் கிடைக்கும்ன்னும் சொல்ல முடியலை. ஒரு பாட்டில் தண்ணீரை விட ஒரு கப் பால்,டீ விலை குறைச்சலாக்கும் :-)

ramalingam said...

இதுதான் பிக்பாங்க் (big bang) தியரி. விலைவாசி விரிவடைந்து கொண்டுதான் போகும்.

வவ்வால் said...

சர்வே,

இதனால தான் வெளிநாட்டு ஆசாமிகளுக்கு உள்நாட்டு நிலவரம் தெரிவதில்லைனு சொல்றது.

நீங்க சொன்ன குட்டி நட்சத்திர ஓட்டல் பட்ஸ் ஹென்கலா தானே. அங்கே ஒரு பெக் எம்சி லார்ஜ் 60 ரூ வித்தான் அப்போ 1/4 யே அறுபது தான், அதுக்குஅப்பரம் அங்கே போறதே இல்லை.

இப்போவும் 5 ரூ பரோட்டா இருக்கு, 2 ரூ இட்லி இருக்கு, கையேந்தி பவனில் :-)) நாம எல்லாம் கூச்சப்படாம அங்கே தான் கைய நனைக்கிறது.மேம்பாலம் அடியில் எம்.ஆர் தியேட்டர் பக்கமா நிறைய கையேந்தி பவன்ஸ் இருக்கு.

இப்போ செட்டி நாடு ஹோட்டல் என்ற பெயரில் கொள்ளை அடிக்க தாம்பரத்தில் அஞ்சப்பர்,ஆதங்குடி, காரைக்குடினு நிறைய வந்துடுச்சு.

வவ்வால் said...

சர்வே,

// உள்ளூர் மெட்ரோ ரயிலில் ரெண்டு ரூபாய்க்கு டிக்கெட் கிடைக்கும்னு உள்ளுக்குள்ள ஒரு நம்பிக்கை இருந்தது. அதுவும் ஏறிடுச்சுன்னு தெரிஞ்சுக்க, வாய்ப்பு பெருசா அமைந்ததில்லை//

மின்ரயில் கட்டணம் மட்டுமே இப்போ குறைவா இருக்கு.5 ரூக்கு தாம்பரத்தில் இருந்து டி.நகர் போகலாம்.பேருந்தில் 15 ரூ ஆகும். இரயில் கட்டணம் குறைவாக இருக்க,லாலு,மம்தா போன்ற கூட்டணி அமைச்சர்களே தொடர்ந்து இரயில்வே அமைச்சர்களால இருப்பதும் ஒரு காரணம்.காங்க்.கையில் சிக்கி இருந்தால் நாறி இருக்கும் :-))

ராமலக்ஷ்மி said...

//இதனால தான் வெளிநாட்டு ஆசாமிகளுக்கு உள்நாட்டு நிலவரம் தெரிவதில்லைனு சொல்றது.//

வழிமொழிகிறேன்:)!

/ காஞ்சுப் போன இடியாப்பத்தையும், தயிர் சாதத்தையும் /

கார்டும் கையில இல்லையா?

kumaran said...

Anna ,

ippo namma Bay area tha Cheap Orukuupona Nanbargal ellam thirumbi vathu sonnanga :-(

வல்லிசிம்ஹன் said...

ஆறு மாசம் வெளியூர் போய் வந்தாலே
ஏறுது பிபி.
காப்பி 30
இட்லி இரண்டு..நார்பது.

பழங்கள் கடையில் அம்மா ஆயிரம் ரூபாய்க்குச் சில்லறை கிடைக்குமான்னால், வண்டி சரக்கே பத்தாயிரத்துக்கு மேல். நீ என்னமோ ஆயிரத்துக்கு ஜகா வாங்கறியேனு
அவங்க அர்ச்சனை செய்யறாங்க.

கைப்புள்ள said...

Bossu! Idhaiyellam Indian Salaryle vaanguravanga nelamai ennanu konjam yosichu paarunga :(

SurveySan said...

துளசி மேடம், கஷ்டம்தான். அடுத்த வெகேஷன நெனச்சா வயித்துல கிலி. :(

SurveySan said...

அமைதிச்சாரல்,

//ஒரு பாட்டில் தண்ணீரை விட ஒரு கப் பால்,டீ விலை குறைச்சலாக்கும் :-)///

பாலை விட தண்ணி கம்மியிருந்தா, அது கெணத்துல புடிச்சு விக்கர 'போலி' வாட்டர்னு மக்கள் சொன்னாங்க :)

SurveySan said...

ramalingam,

விரிவடைவதில் தப்பில்லை. ஆனா, இது ரொம்ப ஓவரா விரியுது. வெடிச்சிடும்.

SurveySan said...

வவ்வால், ஹெங்கலாவேதான்.

இருநூறு ரூபாயுடன் பல்பு வாங்கியது ஆத்தங்குடி மாதிரி ஏதோ ஒரு பெயருடைய உணவகம்தான். சானடோரியம் கிட்ட இருக்குதே அது.

SurveySan said...

ராமலக்‌ஷ்மி,

கார்டெல்லாம் அஞ்சாறு ஸ்டார் இருக்கர கடையிலதான் குடுக்கரது. குட்டிக் கடையில கொடுத்தா, லவுட்டிடுவானுங்கன்னு ஒரு திகில்தான்.

குறிப்பா அன்னைக்கு, கேஷுவலா, இருநூறை ஜோபியில் போட்டுக்கிட்டு, ஒரு பணக்கார தொனியுடன் கடைக்குள்ல போனதா ஞாபகம் :)
இருநூறுக்கு இனி அப்பளம் கூட தரமாட்டாங்கன்னு தெரியுது. இனி, கார்டு இல்லாமல் வெளியில் போவக் கூடாது. :)

SurveySan said...

கைப்ஸ், அந்தக் கவலையும் பெரிய குழப்பமும் எனக்கும் இருக்கு. ஆனா அங்க இருக்கர பயலுவ தண்ணி மாதிரி செலவு செய்யரானுவ.

ஐ.டி.யில் இல்லாத பயலுவ நெலம ரொம்பவே கஷ்டம்தான். செட்டினாடு உணவகம் போவாம இருக்கலாம். ஆனா, வீடு வாங்குவது, காய்கறி விலை, பெட்ரோல் விலைன்னு எல்லாம் எகிரி சாமான்யனை பாடாய்ப் படுத்துது. ஆனா, யாரும் அதை வெளியில் காட்டிக்கரதா தெரியல்ல.. ஏதோ மாயம் இருக்குது.

Sakthi said...

//பாலை விட தண்ணி கம்மியிருந்தா, அது கெணத்துல புடிச்சு விக்கர 'போலி' வாட்டர்னு மக்கள் சொன்னாங்க :) //

கெணத்து தண்ணி 'போலி'ன்னு யாரு
சொன்னாங்கண்ணா ??

Sakthi said...

//பாலை விட தண்ணி கம்மியிருந்தா, அது கெணத்துல புடிச்சு விக்கர 'போலி' வாட்டர்னு மக்கள் சொன்னாங்க :) //

கெணத்து தண்ணி 'போலி'ன்னு யாரு
சொன்னாங்கண்ணா ??

SurveySan said...

sakthi,

//கெணத்து தண்ணி 'போலி'ன்னு யாரு
சொன்னாங்கண்ணா ?? //

ஃபில்டர் பாட்டிலில் விற்கப்படும் கெணத்து தண்ணி போலின்னு சொல்லவந்தேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

எங்கே செல்லும் இந்தப் பாதை.?

நம்மிடம்

chicha.in said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

www.ChiCha.in

www.ChiCha.in