நந்தலாலாவுக்கு விமர்சனமும் எழுதியாச்சு, மிஷ்கினை திட்டவும் திட்டியாச்சு.
இப்பத்தான் மிஷ்கினின் இந்த பேட்டி கண்ணில் பட்டது.
தெளிவா, கிக்குஜீரோவின் பாணியில் எடுக்கப்பட்டது என்றும், அந்தப் படத்தின் காட்சியமைப்பையும் அப்படியே இந்தப் படத்தில் வைத்திருப்பதாகவும் தெளிவாய் கூறியிருக்கிறார். மானசீகக் குருவுக்கான நன்றி நவில்தல் மாதிரி இதை செய்திருக்கிறாராம்.
பட டைட்டிலில் போடாத ஒரு குறை இருக்கத்தான் செய்கிறது. அப்படிப் போடுவது ஏதாவது சட்டச் சிக்கலை உண்டாக்குமோ என்னமோ?
ஆனாலும், அவசரப்பட்டு அவரைத் திட்டிட்ட(னோ)மோ?
கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்
ஐ ஆம் தா சாரி மிஷ்கின்.
Keep up the good work. More originality requested.