recent posts...

Saturday, April 09, 2011

சென்னையில் ஒரு கேடுகாலம்...

கடந்த வாரம், அன்னா ஹசாரே, நாட்டின் எதிர்காலத்துக்கு வேண்டிய மிக முக்கியமான ஒரு விஷயத்துக்காக, சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து, இதுவரை நாம் காணாத ஒரு எழுச்சியை அறிமுகப் படுத்தியிருந்தார்.

இதற்கு முன் நாம் கண்ட பெருந்திரளான கூட்டங்கள், ஒன்று அரசியல் கூட்டத்தில், பிரியாணிக்கும், இருபது ரூவாய்க்கும் ஆசைப்பட்டு வரும் சாமான்யனின் கூட்டம். அல்லது, திருவிழாவுக்கு கூடும் பக்த கோடிகளின் கூட்டமாய் இருந்திருக்கும்.

முதல் முறையாக, மொத்த இளைய சமுதாயத்துக்குள்ளும், ஒரு தீப்பொறியை சிதறவிட்டு, தன் பால் இழுத்த பெருமை 72 வயதான இந்த ஹசாரேக்குத் தான் உண்டு.

RTI என்ற தகவல் அறியும் சட்டத்துக்கு வடிவம் தந்ததிலும், இவரின் பங்கு பெரிய பங்கு. அதை மாற்றி அமைத்து பிசுபிசுக்க வைக்கும் அநேகம் அரசு முயற்சிகளுக்கும் எதிராக நின்று அதை தாங்கிப் பிடிப்பதிலும் இவரின் பங்கு பெரியதாம்.

அன்னா ஹசாரே, இந்த 2G ஸ்பெக்ட்ராம் ஊழல் காலக்கட்டத்தில், எடுத்திருக்கும் விஷயம் 'ஜன் லோக்பால்' என்ற சில சட்டத் திறுத்தங்களாம். இதன் விவரங்கள் எல்லாம் இணையத்தில் பரவிக் கிடக்கு. தெரியாதவங்க படிச்சு தெரிஞ்சுக்கோங்க. மிக முக்கியமான விஷயம், நம் புலனாய்வு (CBI) நிறுவனங்க்ளுக்கு சுதந்திரமாய் (autonomy) செயல் பட வழிவகை செய்து கொடுப்பது. அப்பத்தான், கூச்சமே இல்லாமல் தவறு செய்யும் அரசியல் வியாதிகளும் மற்ற பல அரசு அதிகாரிகளையும், தயவு தாட்சண்யம் இல்லாமல், விசாரித்து, அவர்களுக்கு உரிய தண்டனையை உடனுக்குட்ன் வழங்க முடியும்.

போஃபோர்ஸில் துவங்கி, இன்றை 2G Spectrum வரை, இந்த சுதந்திரம் இல்லாத் தன்மையால் தான், யாரும் கம்பி எண்ணாமல் தப்பிக்க முடியும் வாய்ப்பு பிரகாசமாய் இருக்கிறது.

உண்ணாவிரதம் இருந்து, இந்த சட்டத்தை இயற்ற வேண்டும் என்ப்தை வலியுறுத்தி, ஓரளவுக்கு வெறறியும் கண்டுள்ளார் அன்னா ஹசாரே.
தேர்தல் நேரத்தில், ஹசாரேக்காஅ எழுந்துள்ள இளைஞர் எழுச்சி நல்லதல்ல என்று நினைத்தோ என்னமோ சிங்கார், உடனே நிபந்தனைகளுக்கு படிந்துள்ளார். வரும் மாதங்களில் ஜன் லோக் பல், சட்டமாய் இயற்றப்படும் என்றும் கூறியிருக்கிறார்.

போகப் போகத்தான் தெரியும், எந்தளவுக்கு அதில் உண்மை உள்ளதென்று.
ஆனால், ஒரு விஷயம், நிச்சயமாய் தெரியும். இனி, எளிதில், இளிச்சவாயர்கள் ஆகி விடமாட்டோம். அன்னா ஹசாரேவும், அவரின் கூட்டமும், அவர்களை, ட்விட்டரிலும், ஃபேஸ் புக்கிலும் தொடரும் இளைஞர் படையும், விழித்துக் கொண்டு அனைத்தையும் பார்த்துக் கொண்டே இருக்கும், என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த குட்டி வெற்றியை, உலகத்தில் உள்ள பல மூலைகளில் வாழும் இந்தியர்களும் பெருவாரியாக திரண்டு, கொண்டாடிக் குதூகலித்தனர். வெறும் கொண்டாட்டமாய் மட்டும் இல்லாமல், இவர்கள், இதன் அடுத்த கட்டத்தை, நாங்கள் கவனிக்கிறோம் என்ற திடமான செய்தியையும் இதன் மூலம் உலகத்துக்கும் நம் நாட்டாளும் அதிகாரிகளுக்கும் தெரியப் படுத்தினர்.

சிலிக்கான் வாலியில் கூட, ஒரு IndiaAgainstCorruption.Org என்ற குழுமமும், ஏனைய மற்ற இயக்கங்களும், ஒன்று கூடி இன்று குட்டி வெற்றிக் கூட்டத்தைக் கூட்டியிருந்தார்கள்.

நான், இதுநாள் வரை எந்த ஒரு பொது நல விஷயத்துக்கும் சென்று என் நேரத்தை செலுத்தியதில்லை. அதிகபட்சம், சில $களை டொனேஷன் கொடுப்பதும், ரெண்டு மூன்று மரக்கன்றுகளை நட்டதோடு மட்டுமே என் பொது நல வாழ்க்கை நிற்கிறது.
இணையத்தில் கண்ட இந்த எழுச்சி என்னைப் போன்ற சாமான்யர்கள், கிட்டத்தட்ட 500 பேரை இன்று ஒரே நேரத்தில், கலிஃபோர்னியாவில் உள்ள சிலிக்கான் வாலியில பெருந்திரளாய் கூட வைத்தது.
500 பேரும், குட்டி ஊர்வலம், அதைத் தொடர்ந்த ஆரவாரம், பாடல், வருங்காலத் திட்டம் என உபயோகமான மூன்று மணி நேரத்தை செலவிட்டோம்.

இவ்வளவு தூரத்தில் இருக்கும், எங்கூரில் 500 பேரும், டில்லியில் லட்சக் கணக்கிலும், மற்ற நகரஙக்ளில் ஆயிரக் கணக்கிலும் மக்கள் ஒன்று கூடி அவர்களுக்குள் இருக்கும் தீவிரத்தை காட்டிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், 2G Spectrum என்ற வரலாறு காணாத ஊழலின, பிரப்பிடமான சென்னையில், விரல் விட்டும் எண்ணும் அளவுக்கு மட்டுமே சிலர் மெரீனா பீச்சில் காணப்பட்டார்கள்.
NDTVல் செய்தியாளர் சென்னை வாசிகளைக் காட்டும்போது, தாம்பரம் பஸ்ஸ்டாண்டில் நிற்கும் கூட்டம் அளவுக்குக் கூட ஆட்கள் வந்திருக்கவில்லை.
நம் சென்னை வாசிகள், சினிமா மயக்கத்திலும், IPL மயக்கத்திலும், கட்டுண்டு கிடக்கிறார்கள் போலும்.

எந்த அரசியல்வியாதியும், தானாய்த் திருந்தப் போவதில்லை. இந்த மாதிரி நாம் ஒன்று பட்டு, உள்ளேன் ஐயா சொன்னால்தான், கொஞ்சமாவது யோசிப்பாங்க்ய.

இன்னா சென்னை இப்படிப் பண்ணிட்ட? வெளங்குமா?

எங்கூரிலிருந்து, சில எழுச்சிப் படங்கள்:








6 comments:

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு. உலகெங்கிலும் உள்ள இந்தியரிடையே பரவியிருக்கும் இந்த ஆதரவு அலை மகிழ்ச்சி தருவதாக உள்ளது.

maduraibabaraj said...

a very inspiring message and a holy struggle launched by anna.
it is a pity that tamilnadu was sleeping like kumbakarna.so called revolutionary poets and fire brand speakers took shelter in their dens.celluloid world leading actors were mere spectators.reel heroes never bother about real heroes!all the perfumes of arabia cannot sweeten this corrupt india hands!will all the neptune's water will wash this stain?never.

your participation deserves appreciation.

s.p.babaraj
chennai

வல்லிசிம்ஹன் said...

நல்லதொரு விழிப்புணர்ச்சியைக் காட்டி இருக்கிறீர்கள் நீங்கள் எல்லோரும்.
மனம் நிறைந்த வாழ்த்துகள்.

SurveySan said...

ராமலக்‌ஷ்மி, நன்றி.

மதுரை பாபாராஜ், thank you sir.

வல்லி மேடம், நன்றீஸ்.

அமைதி அப்பா said...

//நம் சென்னை வாசிகள், சினிமா மயக்கத்திலும், IPL மயக்கத்திலும், கட்டுண்டு கிடக்கிறார்கள் போலும்.//

நான், வேற என்னத்த சொல்றது?!

சசி ராஜா said...

உண்மை!

தமிழ்மனம்
தட்டிக் கொடுக்கும் மனம்!
தட்டிக் கேட்கும் மனமல்ல!
அக்கினிக் குஞ்சுகள்தான்
தணல் மூட்ட
வேண்டும்!