recent posts...

Sunday, December 26, 2010

இளையராஜா - பாரதிராஜா - நண்பேன்டா

இயக்குனர்களுக்கான பாராட்டு விழா ஒன்று சன்.டிவியில் ஒளிபரப்பக் கண்டேன். நல்ல நிகழ்ச்சி.
தமிழ்/தெலுகு திரைப்பட உலக ஜாம்பவான்கள் எல்லோரும் வந்திருந்ததாகத் தெரிந்தது.

கங்கை அமரன் சில சுவாரஸ்யமான பகிர்வுகள் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். அலைகள் ஓய்வதில்லை படத்தில் வரும், ஆயிரம் தாமரை மொட்டுக்கள், தன் தாயார் பாடும் கிராமியப் பாடல்னு சொல்லிக்கிட்டு இருந்தாரு. இப்படி பல கிராமியப் பாடல்கள் 'சுட்டதை' சொன்னார். அதற்குப் பிறகு வந்த வெங்கட் பிரபு, யுவனும் கூட, 'ஏதோ மோகம் ஏதோ தாகம்' என்ற கங்கை அம்ரன் பாடலில் இருந்து, 'யாரோ யாருக்குள் யாரோ' என்ற சென்னை28 பாடலை உரிவிய விதத்தைச் சொன்னார்கள்.

திடுதிப்புன்னு பாரதிராஜாவும் இளையராஜாவும் மேடை ஏறினார்கள்.ஒரு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. நண்பேன்-டான்னு மூச்சுக்கு ஒரு தடவை ரெண்டு பேரும் மாத்தி மாத்தி சொல்லிக்கிட்டாலும், இவங்களுக்கு இடையில் விழுந்திருக்கும் 'ஈகோ' விரிசல் அப்பட்டமா தெரிந்தது. குறிப்பா, ராசா, தன் 'ஞானித்'தனத்தை மைக்கில் விளம்ப, என்ன சொல்ல வராருன்னே தெரியாம சில நொடிகள் போச்சு.

சுவாரஸ்யமான விஷயம், இவங்க கிராமத்து கால வாழ்க்கையைப் பத்திப் பேசும்போது வந்தது. பாரதிராஜா இளையராஜா அரை டிராயர் வயதில் தன் கிராமத்தில் (அல்லிபுரம்)தன் அண்ணன் தம்பிகளுடன் வந்து, கம்யூனிச பாடல் அரங்கேற்றிய ஒரு நாளில் பார்த்தாராம். அதுக்கப்பரம் தன் நாடகத்துக்கு ராஜா குழுவை இசை அமைக்க வைப்பாராம்.

ஒரு நாடகத்தின் போது, பாரதிராஜா ஹார்மோனியம் வாசித்துக் கொண்டிருந்த ராசாவின் சட்டையை பிடுங்கி போட்டுக்கிட்டு நடிச்சாராம்.
பாரதிராஜா அந்த நாடகத்தில் பூட் பாலிஷ் போடும் பையனா நடிச்சாராம்.
அடுத்த நாளு இளையராஜா அதே சட்டையுடன், நாடகம் நடக்கும்போது, திடுதிப்புன்னு நடுவில் மேடையேறி எனக்கு பாலிஷ் போடு பாலிஷ் போடுன்னு, நாடகத்தில் வராத டயலாக்கை சொல்லிக்கிட்டு இருந்தாராம். ஏன் அப்படிப்பண்ணாருன்னு இப்ப விளக்கம் சொன்னாரு. அதாவது, தன் சட்டையை பாரதிராஜா பிடுங்கிக்கிட்டு நாடகத்தில் அதைப் போட்டு நடிச்சாராம். மறுநாள் அந்த சட்டையை ராசா போட்டுக்கிட்டு நடந்தா, ஏதோ பாரதிராஜாவின் சட்டையை இவரு போட்டுக்க்கிட்டு சுத்தரதா ஊர் மக்கள் நெனச்சுருவாங்களாம். அதனால, இப்படி ஒரு பப்ளிசிட்டி ஸ்டண்ட்டுக்காக தன் சட்டையை போட்டுக்கிட்டு மேடையில் தோன்றினாராம்.

அந்த வயசுலையே இன்னாம்மா யோசிச்சிருக்காரு :)

பண்ணையபுரம் , அல்லிபுரம்னு ஏதேதோ குக் கிராமங்களில் பெரிய படிப்பறிவெல்லாம் இல்லாம வளந்தவங்க, இப்படி வானளாவ உயர்ந்து பிரமிக்க வைப்பது, ஆச்சரியாமான அட்டகாசமான பிரமாண்டமான கலக்கலான பெருமைப்படவேண்டிய போற்றப்படவேண்டிய மெய்சிலிர்க்கவைக்கும் ஒரு விஷயம்.

Wednesday, December 22, 2010

இலவச டிவியை திருப்பிக் கொடுத்த விவசாயி

ஏதாவது மொக்கையா எழுதலாம்னு பொட்டியத் தொறந்தா, இந்த செய்தி கண்ணில் பட்டது.

புதுக்கோட்டையை சேர்ந்த விஜயகுமார் தனக்குக் கொடுக்கப்பட்ட கலர் டிவியை, வேணாம்னு மேடையிலேயே திருப்பிக் கொடுத்துட்டாராம். அதோடில்லாமல், ஒரு பெரிய கடிதத்தையும் எழுதிக் கொடுத்து, அந்த டிவியை முதல்வருக்கே அன்பளிப்பா தன் சார்பா கொடுக்கச் சொல்லிட்டாராம்.

விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, லஞ்சம், ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந்த டி.வி. வேண்டாம்......

விவரங்களை இங்கே க்ளிக்கி வாசிங்க.

2010 சிறந்த தமிழ் படங்கள் - சின்ன amendment

டாப் பத்து போட்டதுமில்லாம amendment வேரயான்னு தலைல அடிச்சரவங்களுக்கு வணக்கம் :)

2010 தமிழ் திரைப்படத்துறையின் அற்புத வருஷம்னு தோணுது. வெட்டியா பன்ச் டயலாக் பேசிக்கிட்டு அடிவயத்துலேருந்து எல்லா ஹீரோப் ப்யலும் ஒரே மாதிரி கத்தி டார்ச் பண்ணிக்கிட்டிருந்த காலத்துல, வித விதமான அணிவகுப்பில், நினைவில் நிற்கும் பலப் படங்கள் வந்த வருடம்.

டாப்10 படம்ஸ் டிசம்பரிலேயே போட்டதால் சிலப் பல படங்கள் கணக்கில் சேராமல் விட்டுப் போனது.
ஈசன் - சுப்ரமணியபுரம் சசிகுமாரின் இயக்கத்தில் வந்த படம். சும்மா சொல்லக் கூடாது, விறு விறு விறுன்னு போரடிக்காமல் இருந்த படம். வழக்கமான அரசியல்வியாதி, அவன் பிள்ளை, கற்பழிப்பு, பழிவாங்கல் டைப்பு கதைன்னாலும், நம்ம வயத்துல ஒரு கிலி இருந்துக்கிட்டே இருக்கு. குறிப்பா, அந்த சொட்டை மினிஸ்ட்டர் செம கலக்கல். Assistant commissionerஆக நடித்த சமுத்திரக்கனியும் அலட்டாமல் நடித்திருக்கிறார். ஈசனாக நடித்த பயல் நல்லா நடிச்சிருக்கான். நல்ல படம்.

Amendment இன்னான்னா, எனது டாப்10ல், இந்த படத்துக்கு ஆறாவது இடம் வழங்கப்படுகிறது.
பத்தாம் இடத்தில் இருக்கும் அங்காடித் தெரு, டாப்10ஐ விட்டு விலகுகிறது.
அம்புடுதேன்.



இன்னும் விடுபட்ட ஏதாவது படத்தை பார்த்துத் தொலைத்தால், மேலும் amendmentஸ் வரலாம்...
;)

Monday, December 20, 2010

Save RTI

Right to Information Act (RTI) என்ற தகவல் அறியும் சட்டம் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

அதன் குரல் வளையை நெரிக்க அரசு முயல்வதாக தெரிகிறது.
குறிப்பாக விண்ணப்பங்கள் 250 வார்த்தைகளுக்குள் இருக்கணுமாம்.

250 வார்த்தைகளில் எப்படி நாம் விரும்புவதை கொட்டித் தீத்து விவரம் கேக்கறது??

இதைத் தவிர இன்னும் பல நெருக்கடிகள் நிறைவேத்த இருக்காம். விவரங்களை இங்கே க்ளிக்கி தெரிந்து கொண்டு பெட்டிஷனில் கையெழுத்து இடவும்.

பரப்பவும்.

நன்றீஸ்.

http://www.petitiononline.com/rtisave/

Tuesday, December 14, 2010

Pick your favorite Flickr விளையாட்டு

PiT ஆர்வலர்கள் விளையாட ஒரு புதிய ஆட்டம் கார்த்திகேயனால் Flickrல் துவங்கப்பட்டுள்ளது.

நீங்க செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்:
1) அந்த தளத்துக்கு போங்க.
2) கடைசியா யாரு விளையாடி இருக்காங்கன்னு பாருங்க.
3) அந்த நபரின் Flickr படங்களை பாருங்க. அதுல உங்களுக்கு ரொம்ப பிடிச்ச படத்தை சொல்லுங்க.
4) அடுத்து வரும் நபர், உங்க படங்களில் எது அவருக்கு புடிச்சிருக்குன்னு சொல்லுவாரு.

அப்படியே ஆடிக்கிட்டே இருக்கலாம் டயர்டாகர வரைக்கும்

இன்னொருத்தர், நம்ம படத்தை பாத்து ஆஹான்னு சொல்றது ஒரு பரம சுகம்.

Friday, December 10, 2010

அதிகாலை படம்

PiTன் "அதிகாலை" போட்டிக்கு எல்லாரும் படம் அனுப்ப ஆரம்பிச்சுட்டாங்க. நாட்டாமை வேலை செய்யும் என்னிடம் ஒரு படம் கூட பத்து மணிக்கு முன்னாடி எடுத்தது இல்லை. நானெல்லாம் அதிகாலை பாத்து பல வருஷம் ஆச்சு. அதுவும் அடிக்கற குளிர்ல இழுத்து போத்தி அலாரத்தை இடது காலால் எட்டி உதைத்து எட்டரைக்கு கொறஞ்சு எழுந்துக்கறதே இல்லை.
ஒரு நாலஞ்சு நாளா ஆறு மணிக்கு அலாரம் வச்சு பிரம்மப் பிரயத்தனம் பண்ணிப் பாத்தும் முடியல்ல.
வடிகட்டின சோம்பேறியாச்சே.
ஒரு வழியா ஏழு மணிக்கு எழுந்து அவசரவசரமா என்னால முடிஞ்ச "அதிகாலை" படம் புடிச்சிருக்கேன், உங்க பார்வைக்கு.



PiTன் சக குடும்ப நண்பர்களுக்கும், போட்டியில் பங்கு கொண்டவர்களுக்கும், கொள்ளப் போகிறவர்களுக்கும், தூக்கத்தை கெடுத்ததுக்காக, ஐம் த சாரி! ;)

Sunday, December 05, 2010

தமிழ் சினிமா - 2010ன் டாப்10 படங்கள்

2010ல் நான் பார்த்த படங்களின், நினைவில் இருந்து, இந்த டாப்10 வரிசை.
நீங்க பார்த்த 2010 படங்களை தராசில் போட்டு, உங்க தரவரிசையை கொமெண்ட்டாகவோ, புதுப் பதிவாகவோ, அரங்கேத்தவும். கடைசியா எல்லார் டாப் 10ஐயும் கலந்து, ஒரு பெரிய சர்வே போட்டு, பதிவுலகின் டாப்10ஐ தேர்ந்தெடுக்கலாம். ஸ்டார்ட் மீஜிக்.

எனது டாப்10 வரிசை இதுதான்.

1) மைனா
ரொம்பவே வியக்க வைத்த படம். நந்தலாலா பார்த்த பிறகு இந்தப் படத்தை சமீபத்தில்தான் பார்த்தேன். திகட்ட திகட்ட இனிப்பை சாப்பிட்டு நாயர் கடையின் டபுள் ஸ்ட்ராங்க் ஸ்பெஷல் சாய் குடிச்சாலும், சாயா இனிப்பா தெரியாது. வெத்தா சுவைக்கும். ஆனா, நந்தலாலா என்ற ப்ரமாதமான படத்தின் காட்சிகள் நினைவில் தேங்கி நிற்கும்போதே, மைனா அதையும் தாண்டி ரொம்பவே இனித்தது. ஆரம்ப காட்சியில் இருந்து, விறு விறு விறு வென, அடுத்தடுத்த காட்சிகள் ஒவ்வொரு படி மேல் பயணித்து, உச்சத்தை அடையும் க்ளைமாக்ஸ்.

பச்சைப் பசேல் தமிழ் நாடு. தாய் தந்தையை அடிக்கும் ஹீரோ. தாயை அடிக்கும் ஹீரோயின். ஹீரோயினை வெட்ட வரும் தாய், நல்ல போலீஸ், கெட்ட போலீஸ், கொடூர மனைவி, இனிமையான இசை, மிகவும் யதார்த்தமான நடிப்பு என்று ரவுண்டு கட்டி அடித்த படம்.

புதுமுகம் அமலா ஒரு பெரிய ரவுண்டு வருவார். பார்வையாலேயே மொத்த நடிப்பையும் நடிச்சு முடிச்சுடறாங்க. அற்புதம்.

இயக்குனர், பிரபு சாலமனுக்கு பெரிய வாழ்த்துக்களும், hats offம்.

2) நந்தலாலா
ஏற்கனவே அலசித் தள்ளியாச்சு. (விமர்சனம், vs கிக்குஜீரோ, மிஷ்கினின் விளக்கம்)
Undoubtedly, a classic presentation. தமிழகத்தின் சில ஊரை மகேஷின் ஒளிப்பதிவில் காண்பதற்கே படத்தை பத்து தடவை பார்க்கலாம்.

3)விண்ணைத் தாண்டி வருவாயா
கவித்துமான திரைப்படம். அடக்கி வாசித்த சிம்பு, முதல் முறை பல புதிய ரசிகர்களை தக்க வைத்துக் கொண்ட படம். கௌதம் மேனனின் வசீகரிக்கும் மூவி மேக்கிங்கில் இன்னொரு பிரகாசமான நட்சத்திரம். ஸ்டைலான திரிஷா, வயதானாலும் தான் தான் டாப்பு என்று நிரூபித்த படம்.
ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளேன் ஐயா, நீண்ட நாளுக்குப் பிறகு தமிழில் சொன்ன படம். பாடல்கள் பலவும் 'லவுட்டப்' பட்டிருந்தாலும், ஒவ்வொன்றும் இனிமையான இசை விருந்து.
திரை அரங்கில் பலறையும் சில நேரம் தூங்க வைக்கும், இழுவைக் காட்சிகள் சில இருந்தாலும், எள வயதினருக்கு, ரம்யமான பொழுது போக்குப் படமாக அமைந்தது.

4) வம்சம்
"எப்பாடு பட்டாவது பிற்பாடு கொடாதவர்" என்று ஒரு குடும்பத்தின் பெயர். இன்னும் நினைவில் இருக்கு. மண்மணம் மிக்க அற்புதமான படங்கள் 2010ல் பலப் பல வலம் வந்தது. வம்சம், அதில் முன்னணியில். கிராமத்து ஹீரோவும், ஹீரோயினும், செல்ஃபோனில் பேசிக் கொள்ளும் காட்சிகள் குபீர் சிரிப்பு.
பகை தீர்க்க வரும் ரவுடி கோஷ்டியிடம் இருந்து தப்பி ஓடும் ஹீரோ, திருவிழாவில் பழி தீர்த்துக்க் கொள்ளும் பங்காளி பகையாளிகளின் பன்றி இறைச்சி ஃப்ரையும் காட்சிகள் என்று, பல ருசிகர காட்சிகள் நிறைந்த பொழுது போக்குப் படம். தூள்!


5) எந்திரன்
ரொம்பவே அலசித் தீத்துட்டோம் இதை.
லூஸ்ல விட்டுடறேன், இம்முறை.

6) களவாணி
"என் புள்ளைக்கு நேரம் சரியில்லை. இன்னும் கொஞ்ச மாசத்துல டாப்புல போயிறுவான் டாப்புல"ன்னு சரண்யா தன் பிள்ளைக்கு வக்காலத்து வாங்குவதும், "என்னைய கட்டிக்கறேன்னு சொல்லு"ன்னு லடாய் பண்ணும் வெட்டி ஆஃபீஸர் ஹீரோவும், ரொம்பவே அழகான ஹீரோயின் ஓவியாவும், படத்தின் பலம்.
தீராப் பகை ஹீரோயின் அண்ணனுக்கும், ஹீரோவுக்கும். ஆனா, வெட்டு குத்துன்னு களேபரம் பண்ணாம, காமெடியாக நகரும் படத்தின் அமைப்பு பிரமாதம். எம்புட்டு தடவ வேணும்னாலும் பாக்கலாம் என்கிற லைட் காமெடி. கஞ்சா கருப்புவும் நல்லாவே பண்ணியிருந்தாரு.

7) பாஸ் என்கிற பாஸ்கரன்
தமிழ் திரப்படத்தை பொரட்டிப் போடும் படமெல்லாம் இல்லை. ஆனா, கொடுத்த காசுக்கு, மனசை லேசாக்கும் சூப்பர் டைமிங் காமெடி நிறைந்த படம். வடிவேலு, விவேக்கெல்லாம் சற்றே சலிக்கத் துவங்கிய வருடத்தில், சந்தானம், பக்காவாக அந்த இடத்தை ஆக்ரமிக்க ஆரம்பித்துள்ளார். ஆர்யாவுக்கும் டைமிங் காமெடி நன்றாகவே வருகிறது.

8) அனந்தபுரத்து வீடு
திகில் படம் தமிழுலகம் பலப் பல கண்டுள்ளது. ஆனா, நல்ல பேய் இருக்கும் படம் எந்தப் பட உலகமும் கண்டிராதது. மகனைக் காக்கும், தாய் தந்தை ஆவீஸின், பாசமான திகில் காட்சிகள். படத்தில் வரும் வீடு ரொம்பவே அழகு. வீட்டுக்கு பின்னால் உள்ள குளம். அந்த மாதிரி ஒரு வீடு எங்க இருக்கும் என்ற ஏங்க வைத்த 'அழகியல்' படத்தில்.
வித்யாசமான கதை அமைப்பை அரங்கேற்றியதற்காக இது இந்த இடத்தில். ஹீரோ நந்தா நல்ல நடிகர். தமிழுலகம் அவரை நல்லா பயன்படுத்திக்கணும்.

9) மதராஸப் பட்டினம்
லகான் டோனில் ஒரு படம். அங்கிங்கு தொய்வாக நகர்ந்தாலும், புதிய முயற்சிக்காக இந்த லிஸ்ட்டில். பாடல்கள் நன்றாய் இருந்தன. ஆர்யாவின் நடிப்பு. சினிமாட்டாகிரோஃபி. அழகியல், நாசர், எல்லாம் பக்கபலம்.

10) அங்காடித் தெரு - ரங்கநாதன் தெருவின் அண்ணாச்சிகளின் கீழ் ஆட்டிப் படைக்கப்படும் இளைஞர்/இளைஞிகளின் அடிமை வாழ்க்கையை முகத்தில் அறைந்தார் போல் காட்டப் பட்ட படம். ஆனால், எல்லாரையும் அழுது மூக்கு சிந்த வைக்கணும்னு கங்கணம் கட்டி எடுக்கப்பட்டது போல், சோகம் ஓவர் டோஸாகிப் போனதுதான் சோகம். ஹீரோ, ஹீரோயின் நடிப்பு பளீரென பிரகாசித்தது. பாடல்கள் சூப்பர், குறிப்பா "அவள் அப்படி ஒன்றும் அழகில்லை"

பெஷல் மென்ஷன்: தமிழ்படம்
Spoof படங்களுக்கு ஹாலிவுட்டையே எதிர்பார்த்திருந்த நமக்கு ஒரு interesting twist இந்த தமிழ்ப்படம். ஆரம்ப முயற்சியே ஓரளவுக்கு நன்றாய் வந்திருந்தது. இனி பலப் படங்கள் வந்து குபீர் சிரிப்புக்கு உத்தரவாதம் தர புள்ளையார் சுழி போட்ட கூட்டத்துக்குத்தான் நன்றி சொல்லணும். இப்ப யோசிச்சுப் பாத்தா, படத்தின் எந்தக் காட்சியும் நினைவில் இல்லை. ஆனா, ஹீரோ சிவாவுடன் சேர்ந்து கொண்டு டகால்ஜி பண்ணும் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் வெ.மூர்த்தியும், பாஸ்கரும், மனோபாலாவும் படத்துக்கு பெரிய பலம்.

இதைத் தவிர நினைவில் நிற்கும் மற்ற நல்ல படங்கள்,
மந்திரப் புன்னகை - வித்யாசமான முயற்சி. ஹீரோவாக இயக்குனரே அறிமுகமான துரதிர்ஷ்டத்தின் தொடர்ச்சி இதிலிருந்தாலும், ஹிரோ நல்ல ஃபிட் அந்த கதாபாத்திரத்துக்கு.
கதை - இதுவும், புதுமையான கதை, தமிழுக்கு. பிரபலமான ஹீரோ இல்லாமல் புதுமுகத்தைப் போட்டதால், படரவில்லை.

ரொம்பவே எதிர்பார்த்து, பெரிதாய் பல்பு வாங்கிய படம்:
இராவணன் - நொந்து நூடுல்ஸ் ஆகச் செய்தது. தமிழகத்தை விட்டு விலகி விலகி, இந்திக்கு படம் செய்ய ஆரம்பித்ததிலிருந்து சறுக்கிக் கொண்டே இருக்கிறார் மணி. 2011 உருப்படியான பழைய மணிரத்னத்தை நமக்கு தரவேண்டும்.
ஆயிரத்தில் ஒருவன் - கதறக் கதறக் கொடுமை படுத்திய படம். சோழ வரலாற்றிலே ஒரு ஃபிக்ஷனை பிசைந்து டரியல் செய்த செல்வராகவனை எவ்ளோ குட்டினாலும் தகும். செல்வராகவன், ஒரு நல்ல படைப்பாளி என்பதில் ஐயமே இல்லை. இந்த மாதிரி புதிய முயற்சி முயல்வதும், டமில் படத்துக்கு நல்லதே. முயற்சிகள் எல்லாம் மெருகேறி மெருகேறி உன்னதப் படைப்பு வரும் வரை, டரியலை பொறுத்துக் கொண்டுதான் ஆகவேண்டும். பொறுத்துக் கொள்வோம்.

பி.கு: 2010ல் வெளிவந்த படங்களை இங்கே கட்டம் கட்டி போட்டிருக்காங்க - Tamilcinema.com (site has popups and may also have spyware. beware)

நந்தலாலா - மிஷ்கினின் விளக்கம்

நந்தலாலாவுக்கு விமர்சனமும் எழுதியாச்சு, மிஷ்கினை திட்டவும் திட்டியாச்சு.

இப்பத்தான் மிஷ்கினின் இந்த பேட்டி கண்ணில் பட்டது.

தெளிவா, கிக்குஜீரோவின் பாணியில் எடுக்கப்பட்டது என்றும், அந்தப் படத்தின் காட்சியமைப்பையும் அப்படியே இந்தப் படத்தில் வைத்திருப்பதாகவும் தெளிவாய் கூறியிருக்கிறார். மானசீகக் குருவுக்கான நன்றி நவில்தல் மாதிரி இதை செய்திருக்கிறாராம்.

பட டைட்டிலில் போடாத ஒரு குறை இருக்கத்தான் செய்கிறது. அப்படிப் போடுவது ஏதாவது சட்டச் சிக்கலை உண்டாக்குமோ என்னமோ?
ஆனாலும், அவசரப்பட்டு அவரைத் திட்டிட்ட(னோ)மோ?

கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்




ஐ ஆம் தா சாரி மிஷ்கின்.

Keep up the good work. More originality requested.

Wednesday, December 01, 2010

நந்தலாலா - மிஸ்கினுக்கான தீர்ப்பு

நந்தலாலா பாத்து அளக்கவும் அளந்தாச்சு. விமர்சனம் செய்த ஏனைய பலரும் படத்தை வெகுவாகவே புகழ்ந்திருக்கிறார்கள்.
எந்த அளவுக்கு புகழ்ந்திருக்கிறார்களோ, அதே அளவுக்கு, இந்தப் படம் ஜப்பானிய மொழிப்ப்படமான கிக்குஜீரோ'வின் காப்பி என்றும் அளந்திருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் மிஸ்கின், இது எதைப் பார்த்தும் காப்பி அடித்ததில்லை என்று அளந்திருந்ததால், படத்தை பார்த்து குற்றம் கண்டுபிடிக்கும் கூட்டத்துக்கு, இது மென்னு துப்ப நல்ல விஷயமாக மாட்டியிருந்தது.

எல்லாரும் சொல்றாங்களே, அப்படி என்னதான் அந்த கிக்குஜீரோவில் இருக்குன்னு பாக்க, அதன் டிவிடியை வாங்கி நேத்து பாத்தேன். இதிலிருந்து, மிஸ்கின் என்னவெல்லாம் லவுட்டி இருக்காருன்னு தெரிஞ்சிருக்கரதுக்காகவும், எந்த அளவுக்கு படத்தில் சொந்தச் சரக்கு இருக்குன்னும் தெரிஞ்சுக்கவும்.
என்ன இருந்தாலும், என்னை நம்பி இருக்கர உங்களுக்காக இதைக் கூடச் செய்யலன்னா, என் தார்மீகக் கடமையிலிருந்து தவறியது போலாகிடும் இல்லையா? அதனால் தான் இந்த மெனக்கெடல் ;)

முதலில் கதைக் கரு. இது 99% ஒத்து வருது. தத்துனூண்டு மாறுதல்களும், பாத்திரப் படைப்புகளும், தமிழில் கண்டிப்பா இருக்கு. கிக்குஜிரோவில், குட்டிப்பயலும், ஒரு கோமாளி ரௌடியும் தாயைத் தேடிச் செய்யும் பயணம். நந்தலாலாவில், குட்டிப் பயலும், ஒரு ம்ன நல நோயாளியும் தாயைத் தேடிச் செல்லும் பயணம்.
ஸோ, கதை கண்டிப்பா லவுட்டப் பட்டிருக்கு. மிஸ்கினுக்கு ஃபெயில் மார்க் இதுக்கு.

ஆனா, பயணத்தில் இருவரும் சந்திக்கும் பலப் பல மக்களின் குணாதிசியங்களும், அவர்களால் படத்திற்கு கிட்டும் நெகிழ்ச்சியான நிகழ்வுகளும், தமிழில் பளிச். மிஸ்கினின் கற்பனையும், படைப்புத்திறனும், இதில் நிச்சயமாய் முந்துகிறது. இதுக்கு கண்டிப்பா 100% கொடுக்கலாம் இவருக்கு.

குட்டிப்பையனின் மேனரிஸம், அப்படியே கிக்குஜிரோவின் தாக்கத்தில் இருக்கு. காட்ச்சிக்கு காட்சி, அவன் தரையைப் பார்த்து நிற்பதை அப்படியே பயன் படுத்தியிருக்கிறார் தமிழில். இதுக்கு ஃபெயில் மர்க்கு.

அங்கே கிக்குஜீரோவாக வரும் கோமாளி ரௌடி, இங்கே பாஸ்கரனாக மிஸ்கின். மிஸ்கின் பல மடங்கு மிளிர்கிறார். எல்லாரிடமும் அதட்டலாய் பேசும் மேனரிஸம், அங்கேருந்து லவுட்டப்பட்டிருக்கிறது. ஆனாலும், அருமையான நடிப்பின் மூலம், மிஸ்கினே மனதில் தங்குகிறார். மிஸ்கினுக்கு 80% கொடுக்கலாம்.

காட்சியமைப்பு/ஒளிப்பதிவு - இரண்டு படங்களிலும், ஒரே மாதிரியான டெக்னிக்கு கையாடல். அவார்டு படங்களுக்கே உரித்தான பாங்கு. ஒரு காட்சி முடிந்த பின்னும், சில விநாடிகள் அதையே காட்டிக் கொண்டிருக்கும் டெக்னிக்கு இரு படத்திலும் உண்டு. கேமரா ஏங்கிள்களிலும் ஒற்றுமை இருந்தது. ஆனா, மகேஷின் கேமராவில் ஏதோ ஒரு பயங்கரமான வசீகரம் இருந்தது. ஜப்பானின் பச்சை நம்ம ஊர் பச்சையுடன் எடுபடவில்லை. மகேஷின் ஒவ்வொரு காட்சியும் கண்ணில் நிற்கிறது. இதில் மகேஷுக்கே அதிகம் மதிப்பெண். 100% கொடுக்கலாம். கிக்குஜீரோவை மகேஷும் பார்த்திருப்பார் என்றே தோன்றுகிறது (மிஸ்கின் சொன்னதை நல்லா உள்வாங்கியும் இப்படி உருவாக்கியிருக்கலாம்).

இசை. கிக்குஜீரோ பார்க்கும்போது, அந்தப் படத்துக்கும், ராஜாவே இசை அமைச்சாராங்கர அளவுக்கு இனிமையா இருந்தது. மனதுக்கு ஒத்தடம் கொடுக்கும் இசைதான் கிக்குஜீரோவிலும். ஆனா, ஒரே வேற்றுமை, நந்தலாலாவில் 2 1/2 மணி நேரத்தில், 2:20 மணி நேரங்கள், இசை இருந்து கொண்டே இருந்தது. 10 நிமிஷம் மௌனமா இருந்திருக்கும். ஆனா, கிக்குஜீரோவில், முக்கால்வாசி, லைவ் ரெக்கார்டிங் தான். ரொம்பப் பிரதான காட்சிகளில் மட்டுமே இனிமையான இசை இசைத்தது. குறிப்பா, ஒரு தீம் இசை மாதிரி பியானோவில், படம் முழுக்க வந்து கொண்டே இருந்தது. படம் முடியும்போது, நமக்கு அந்த இசைத் துணுக்கு மனப்பாடம். ரம்யமான இசை. ராசாவும் மௌன ராகத்தில் இந்த மாதிரியெல்லாம் அநாயசமா பண்ணியிருக்காரு. ஒரு தரமான படத்துக்கு, மௌனம் பல இடங்களிலி அவசியம் என்பது என் எண்ணம். கிக்குஜீரோவில் ஒரு காட்சியில், ஒரு சைக்கிள் ஓட்டரவரு கீழ விழுந்துடுவாரு. அவரை இன்னும் ரெண்டு பேரு இழுப்பாங்க. அவங்க இழுக்கும் சத்தமும், சைக்கிளும் ஆளும் ரோட்டில் சிறாய்க்கும் சத்தமும் 'லைவ்'வாக கேட்பது போல், இசை இல்லாமல் கேட்கும். அப்பத்தான் அந்த மாதிரி காட்சிகளை நல்லா உள்வாங்க முடியும்னு நெனைக்கறேன். தமிழில், அநேகமாய் எல்லா இடத்திலும் ஏதாவது ஒரு இசை வந்துக்கிட்டே இருக்கு. குடுத்த காசுக்கு, காதுக்கு இனிமையான இசை வந்துக்கிட்டே இருந்ததால, அதுக்கும் 100% குடுத்தாக வேண்டிய தார்மீகப் பொறுப்பு இருக்கு. நியாயப்படி கிக்குஜீரோவுக்கு அதிக மதிப்பெண் போயாகணும். ஆனா, எனக்கு அப்பாலிக்கா தூக்கம் வராது, ஸோ ஜெயம் ராசாவுக்கே. 100%.

குட்டிப்பயலின் நடிப்பு, தமிழில் ஜோர். அங்கே சுமார்.
படத்தில் வரும் மற்ற பயண நட்புகளும் சகபாடிகளும், தமிழில் ஜோர். அங்கே சுமார்.
மனசுக்கு ஒத்தடம் கொடுக்கும் திரைக்கதையும் பாத்திரப் படைப்பும் தமிழில் டபுள் ஜோர். அங்கே சுமார்.

ஸோ, கதைக் கரு, காட்சியமைப்பு மட்டுமே லவுட்டப் பட்டுள்ளது.

மற்றதெல்லாம் அக்மார்க் மிஸ்கின்/ராஜா/மகேஷ் இணைந்து செய்த மாஸ்ட்டர் பீஸ்!

ஆனா, எது எப்படி இருந்தாலும், அடுத்தவர் உழைப்பை சரியான ஊதியம்/அங்கீகாரம் கொடுக்காமல், லவுட்டியது பெரும் குற்றமே.

எல்லாம் ஒரு க்ளிக் தூரத்தில் இருக்கும், இந்த இணைய உலகில், இனி யாரும் யாருக்கும் தெரியாம காப்பி அடிக்க முடியவே முடியாது.

என் பெரிய வருத்தம், இப்படி ஒரு படைப்பை, உலகச் சந்தையில் கொண்டு போய், பல அவார்டு வாங்கிக் குவிக்கமுடியுமாங்கரதுதான். 'மூலக் கதை'ன்னு 'ஜப்பானிய கிராமியக் கதை'ன்னோ 'கிக்குஜீரா'ன்னோ போட்டிருந்திருக்கலாம். அட்லீஸ்ட், டைட்டிலில், கதை மிஸ்கின்னு போடாம விட்டிருந்திருக்கலாம் :|

மிஸ்கினுக்கு தண்டனையாக, நந்தலாலா படத்தில் வருவது போலவே தலையத் தொங்கப்போட்டுக்கிட்டு சில வாரம் இருக்கணும். அப்பாலிக்கா, 'அஞ்சாதே' போல், நெத்தியில் அடிச்ச மாதிரி, ராசா இசையுடனும், மகேஷ் ஒளிப்பதிவுடனும், நச்சுன்னு ஒரு படம் உடனே கொடுக்கவும். சைலண்ட்டாகிடறோம்.

Monday, November 29, 2010

நந்தலாலா


படத்தைப் பற்றிய பகிர்தலுக்கு முன், படம் பார்த்த விதத்தை முதலில் பகிர்கிறேன். மிஷ்கினின் முதல் இரண்டு படங்களும் பார்த்ததும் மெத்தப் பிடித்திருந்தது. குறிப்பாக அஞ்சாதே ரொம்பவே அருமையாய் இருந்தது. இருந்தாலும், நந்தலாலா வந்ததும், தியேட்டரில் போய் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தது.
திறமையான இயக்குனர்கள், ஹீரோக்கள் ஆகும் துரதிர்ஷ்ட நிலை மிஷ்கினாலும் தொடரப்படுவது பிடிக்கவில்லை. அதைத் தவிர, ராசாவின் சமீபத்திய பின்னணி இசை பெரிதும் கவராத நிலையில் இருப்பதாக எனக்கு ஒரு நினைப்பு.
ஒரு சில வாரத்தில், டிவிடி வந்ததும் பாத்துக்கலாம்னு விட்டிருந்தேன்.

ஆனா, தொடர்ந்து வந்த பாஆஆஆஆஆசிட்டிவ் விமர்சனங்கள், உசுப்பேத்தி விட்டன. சரின்னு, ஞாயிறு மதியம் கெளம்பி மத்தியான ஆட்டம் பாக்க இன்னொரு நண்பருடன் புறப்பட்டுப் போனோம்.
இங்கே San Jose என்ற நகரில், அம்பானியின் திரையரங்கமான Big Cinemasல் திரையிட்டிருந்தார்கள். தலா $10 கொடுத்து, நாலு பேருக்கு டிக்கெட் வாங்கி, தியேட்டருக்கு உள்ளே போனா, வேற யாருமே இல்லை. நாங்க நாலே பேருதான். ட்ரெயிலர் எல்லாம் முடிஞ்சு பேர் போடும்போது இன்னும் நாலு பேரு வந்து சேந்தாங்க.

பெரிய ஹீரோ இல்லாததால், இந்த நிலை போலருக்குன்னு சாந்தப்படுத்திக்கிட்டு, படம் பாக்க ஒக்கோந்தோம்.

அன்னிக்கின்னு பாத்து, தியேட்டரில் ஹீட்டர் வேலை செய்யலை. சமீப தினங்களில், குளிர் பின்னி எடுக்குது. என்னதான் சுவெட்டர் எல்லாம் போட்டிருந்தாலும் தியேட்டருக்குள்ள குளிர் நடுக்கித் தள்ளியது. அம்பானி ஆளுங்களும், இருக்கும் எட்டு பேருக்கு குட்டி குட்டி பர்சனல் ஹீட்டர் ஃபேன் கொடுத்து அட்ஜஸ்ட் பண்ணிக்கோன்னு சொன்னாங்க. அதுவும், சில நேரத்தில் வேலை செய்யலை. போய் என்னய்யா கொடுமை இதுன்னு கேட்டா, சாரி மெக்கானிக் வரலை, அட்ஜெஸ்ட் பண்ணிக்கங்க, தியேட்டரில் இருக்கும் மொத்த கும்பலுக்கும் (எட்டு பேரு) இலவசமா சூடான டீ/காபி தரோம்னு அல்வா கொடுத்தாங்க.

நடுங்கும் குளிரில் விரைத்தபடி படம் பார்க்கத் துவங்கினோம்.

தெளிந்த நீரோட்டம், அகலமான வெள்ளித் திரையில், மெதுவாய் ஓடும் காட்சி. அதற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் இல்லாமல் படத்தின் பெயரும், மற்ற பெருந்தகைகள் பெயரும் (இளையராஜா, Cinematographer Mahesh, அழகியல்(?Art direction?) Trotsky, மிஷ்கின்) போட்டார்கள்.

முதல் காட்சியில், பள்ளியின் வாசலில் இருக்கும் அகி(அகிலேஷ்) என்ற சிறுவன் நிற்கும் காட்சி. சில விநாடிகள் அவனை க்ளோஸ்-அப்பில் காட்டும் போது, இசை இல்லாத அமைதி. என்னடா ராசாவை காணுமேன்னு யோசிக்கரதுக்குள்ள, ராஜா அள்ளி வீசராறு இசைப் ப்ரவாகத்தை.
இருக்கையில் அப்படியே ஒய்யாரமா ஒக்காந்து, எதிர் சீட்டில் கால் போட்டு, இளையராஜாவின் இசை மழையில், மிச்சம் 2 1/2 மணி நேரமும் மிகவும் இனிமையாக அமைந்தது.
ஒவ்வொரு சீனுக்கும், வித விதமான இசை அமைப்பு. ஒரு பெரிய concertக்கு போயிட்டு வந்த ஒரு ஃபீல்.

படத்தின் கருன்னு பாத்தா, சிம்ப்பிள்தான். சிறுவன் அகி தன்னை சிறு வயதில் பாட்டியிடம் தனியாய் விட்டுவிட்டுப் போன தன் தாயை, அவள் இருக்கும் ஊருக்கு தேடிச் சென்று பார்க்க ஆசைப் படுகிறான். பல வருடங்களாகக் காணாத தாயை, பார்த்து கட்டி அணைத்து முத்தம் கொடுக்க வேண்டும் என்று எண்ணம்.
இன்னொரு பக்கம், பாஸ்கி (மிஷ்கின்). இவர் மனநலம் இல்லாதவர். இவர் மன நலக் காப்பகத்திலிருந்து தப்பி ஓடி விடுகிறார். இவருக்கும், சிறு வயதில் தன்னை மனநலக் காப்பகத்தில் விட்டு விட்டு அதற்குப் பின் தன் பக்கமே திரும்பிப் பார்க்காத தாயை சந்திக்க வேண்டும் என்ற எண்ணம். இப்படி அநாதையாய் விட்டு விட்டாயே என்று அவள் கன்னத்தில் அறைய வேண்டும் என்றும் எண்ணம்.

அகியும், பாஸ்கியும் சந்தித்துக் கொண்டு, இருவரும் சேர்ந்தே பயணப்படுகிறார்கள், தாயைத் தேடி. இவர்கள் வழி நெடுகும், சந்திக்கும் மற்ற மனிதர்களும், அனுபவங்களும் தான் படம்.

இந்தப் பயணத்தில், சில நல்ல மனிதர்களும், அவர்களால் நடக்கும் நெகிழ்வான தருணங்களுக்கும், ராஜாவிடம் இருந்து வரும் இசை, மயிலிறகால் வருடும் ஒரு சுகம்.

முதல் பாதி, மிக மெதுவாக நகரும் திரைக் கதை. அகியும் பாஸ்கியும், பயணித்துக் கொண்டே, ஒவ்வொரு இடமாக நகர்வது, கொஞ்சம் அயற்சியையே தந்தாலும், Maheshன் காட்சியமைப்பு, இரண்டு கண்களையும் அகலத் திறந்து, ஆவென்று ஒவ்வொரு ஃப்ரேமையும் உச்சு கொட்டி ரசித்து ரசித்து பார்க்கவைக்கிறது.

தமிழ்நாட்டில் இந்த மாதிரி சாலைகளும், பசுமை நிறந்த வெளிகளும், இருப்பதை, இதுவரை வேறு படத்தில் பார்த்ததாய் நினைவில் இல்லை. சாலையெல்லாம், புத்தம் புதிதாய் பளிச்னு இருக்க, அதன் இருபுறமும் பசுமை விரிந்து கிடக்க, மொத்த திரையில் ஒரு இன்ச்சையும் வீணாக்காமல் அதை அப்படியே படம் பிடித்து நம் கண் முன் விரித்திருக்க, அதற்கு ராஜா குழைந்து குழைந்து பின்னணி இசை சேர்க்க, ரொம்ப அருமையாக நகர்ந்தது நிமிடங்கள்.

தியேட்டருக்கு வந்திருந்த எட்டு பேரில், நாலு பேரு (தங்க்ஸ்) ஒரே மொனகல். அவங்களுக்கு இப்படி மெதுவாய் கவித்துவமாய் நகரும் படம் பிடிக்காத போலருக்கு.

மிஷ்கினின் நடிப்பு நன்றாகவே இருந்தது. எல்லாரையும் மிரட்டும் தொனியில் பேசுவதும், பின்னர் இவரை அடிக்கும்போது பம்முவதும், கிளாஸிக் நடிப்பு. குறிப்பாய், அகி தன்னை mental என்று அழைத்ததும், வரும் கோபமும், அவனை அடிக்க ஓடி, அடிக்க முடியாமல் தவித்து நிற்கும் காட்சி கண்ணில் நிற்கிறது.

சிறுவனின் நடிப்பும் பிரமாதம். அங்கிள், மாமா என்று எல்லாரையும் அழைத்து, அவன் கொடுக்கும் டயலாக் டெலிவரி ரசிக்கும்படி இருந்தது.

பயணத்தில் இடம் பெறும் மனிதர்களில், சபலத் தாத்தாவும், ஊனமுள்ளவர் ஒருவரும், புல்லட்டில் வரும் மொட்டையும் அவர் மகனும், போலீஸ் இன்ஸ்பெக்டரும், லாரி ட்ரைவரும், பாலியல் தொழிலாளியும், அவரவர் வேலைகளைக் கச்சிதமா செஞ்சிருக்காங்க. நாசர் எதுக்கு ஒரு குட்டி சீனுக்குன்னு புரியல்ல.

படத்தில் நெருடல்னு பார்த்தா ஒரு சில இடங்கள்தான் தோணுது.
ட்ராக்டர் ஓட்டி வரும் பள்ளி மாணவியின் காட்சி;
மிஷ்கினின் தாய் ரோகிணியின் ஆரம்ப மேக்கப் ஒரு ஆணைப் போல் காட்டியது அவரை;
அழகியல்(Art Direction)Trotsky கிராமத்தில் எல்லா கட்டிடத்துக்கும் வெள்ளை வெளேர்னு புதுச் சுண்ணாம்பு அடித்து வைத்திருந்தது;
என்னதான் ராசா இசை அமுதை திகட்டத் திகட்ட தந்திருந்தாலும், இந்த மாதிரி படங்களுக்கு பலமே, மௌனமான காட்சியமைப்புத் தான். அது பல இடங்களில் மிஸ்ஸிங். படம் முழுக்க எதையாவது (அருமையா) வாசிக்குக்கிட்டே இருக்காரு ராஜா; அந்த வாசிப்பு இல்லைன்னா, முழுப் படத்தையும் தூங்காம பாத்திருப்பேனான்னு கேட்டா, விடை தெரியல்ல.
அருமையான பாடல்கள், யேசுதாஸ், ராஜா பாடியிருந்தாலும், அதை படத்தில் சேர்த்தது;

கடைசியாய், Wikiயிலும் மற்ற ஏனைய இடங்களிலும், ஏற்கனவே கிழித்துத் தொயச்சு காயப் போட்ட விஷயம். இது, 1999ல் வெளி வந்த Kikujiro என்ற ஜப்பானிய மொழிப் படத்தின் அச்சு அசல் காப்பி என்பது.
இந்த மாதிரி ஒரு output தமிழ் திரைப்படத்துக்கு கிட்டும்னா, யாரு என்ன காப்பி அடிச்சாலும், சாலச் சிறந்ததே. ஆனா, டைட்டில் கார்டில் (inspired by Kikujiroன்ன்) போடுவது இயக்குனர்களின் தார்மீகக் கடமையாகும். அப்படிச் செய்யாமல், தன் சொந்தச் சரக்கு சூப்பர் சரக்கு என்ற நிலையில் தன் அதீத புத்திசாலித்தனத்தை காட்டுவதுதான் சகிக்கவில்லை.
யாருக்கும் தெரியாது என்ற எண்ணமா இவங்களுக்கு எல்லாம்? இந்த நிலை மாறணும். ஆனா, மிஷ்கினை கேள்வி கேக்கவும் ஒரு தகுதி வேணும். இணையத்தில் ஓசியில் Mp3க்களை உருவி எடுக்கும் எவருக்கும், இந்த கேள்வி கேட்கும் தகுதி இல்லை.
(kikujiro டிவிடி நாளைக்கு கையில் கிட்டும், பாத்துட்டு, இன்னொரு விமர்சனமும் வரலாம் ;)

மொத்தத்தில், 2 1/2 மணி நேரம் ஒய்யாரமாய், கண்ணுக்கும், காதுக்கும், மனதுக்கும் ஒத்தடம் கொடுக்கணும்னா, கண்டிப்பா நந்தலாலா பாக்கலாம். பாருங்க.

Tuesday, November 23, 2010

நீதிமன்றத்தில் நான், மீண்டும்

இந்த ஊர் நீதிமன்றங்கள் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே என் புதிய வழக்கு விசித்திரமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஜீவன்தான்.

தங்கியிருந்த அப்பார்ட்மெண்ட்டை காலி செய்தபின், டெப்பாஸிட்டை திரும்பித்தராத மேனேஜ்மெண்ட்டை எதிர்த்து வாதாடியிருக்கிறேன். அதில் வெற்றியும் பெற்றிருந்திருக்கிறேன்.
ஆனால், சில மாதங்களுக்கு முன்னால், மீண்டும் ஒரு சட்டப் பிரச்சனை.

காரில் பக்கத்து சிட்டியில் உலாத்தும்போது, ஒரு ட்ராஃபிக் சிக்னலில் சிவப்பு எரிந்து கொண்டிருந்தது. எனக்கு, அந்த இடத்தில் வலது பக்கம் திரும்ப வேண்டும். சாதாரணமாக, சிவப்பு எரிந்தால், அக்கம் பக்கம் பாத்துட்டு யாரும் இல்லைன்னா, மெதுவா வலது போயிடலாம். நேராப் போகணும்னா, பச்சை வரும் வரை நிக்கணும்.
ஆனா, சட்டப்படி, இந்த வலப்பக்கம் திரும்பரதுக்கு முன்னாடி, மூணு விநாடி, முழுசா நின்னுட்டு , அப்பரமாத்தான் திரும்பணும். ஆனா, யாரும், அப்படிச் செய்வதில்லை.
இந்தப் பக்கத்து சிட்டிக்காரன், அந்த மூலையில் ஒரு கேமராவை வச்சிக்கிட்டு, மூணு செக்கண்ட் நிக்காம போரவங்களை, படம் புடிச்சு, வீட்டுக்கு ட்ராஃபிக் வயலேஷன் டிக்கெட் அனுப்பி வைக்கறான்.
அந்த சுபயோக சுபதினத்தில், அடியேன் திரும்பும்போது, டச்சாக் டச்சாக் டச்சாக்னு நாலா பக்கத்திலிருந்தும், என்னையும் என் காரையும் படம் புடிச்சு, வீட்டுக்கு, "ராசா $500 மொய்ப் பணம் கட்டு"ன்னு ஒரு கோர்ட் நோட்டீஸ் வந்துச்சு.

அதப் பாத்ததும் எனக்கு செம கடுப்பு. ரெட்லைட்டை கிராஸ் பண்றது தப்புதான். ஆனாலும், எல்லாரும் சகஜமா செய்யும் செயலுக்கு, இந்த மாதிரி கேமரா போட்டு பிடிச்சா, ஒரு $25 மொய் கேக்கலாம். இல்ல்ன்னா, முதல் தடவை வார்னிங்காவது கொடுத்து விடலாம். கலிஃபோர்னியா கல்லால துட்டு இல்லன்னா, இதை காரணமா வச்சு என் கிட்ட ஏன் இந்த பகல் கொள்ளை செய்யணும்னு ஒரே கடுப்பாயிடுச்சு. இதை இப்படியே விடக் கூடாதுன்னு முடிவு பண்ணி, என்ன பண்ணலாம்னு அலச ஆரம்பிச்சேன்.

உனக்கேன் இவ்வளவு ப்ரச்சனை, உலகத்தில் யாருக்கும் இல்லாத ப்ரச்சனை, என்று கேட்பீர்கள். இம்முறை நானே 'தவறு' செய்தேன். அதிலிருந்து மீண்டும் வந்தேன். அதை சொல்லவே இப்பதிவு. சுயதம்பட்டம் என்பீர்கள். என் சுயதம்பட்டத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது. இதைப் பாத்து, ரெட் லைட் வயலேட்டும் சக கண்மணிகள் சுதாரித்துக் கொள்ளலாம்ல.

அங்க இங்க தேடி, ஒரு வழி கண்டு பிடிச்சேன். இந்த மாதிரி டிக்கெட் கையாள மூணு வழி இருக்கு,
1) கேட்ட மொய் பணத்தை கொடுத்து, அடுத்த வேலையை பாக்கலாம் (முக்கால் வாசி பேரு இதைத் தான் செய்யறாங்க)
2) கோர்ட்டுக்கு போயி, ஜட்ஜ் கிட்ட, 'கனம் கோர்ட்டார் அவர்களே, எனக்கு அந்த நேரத்துல அவசர வேலை இருந்திச்சு, அதான் நிக்காம திரும்பிட்டேன். மன்னிச்சுடுங்க'ன்னு கேக்கலாம். ஆனா, இது மிக்காறும், நீங்க குற்றவாளின்னுதான் முடியும்.
3) வீட்ல இருந்தபடியே, ஒரு ஃபார்ம் ('written declaration') பூர்த்தி பண்ணி, சில பல ஞாயமான காரணங்களை சொல்லி, 'என்ன வுட்டுடுங்க சாமி'ன்னு எழுதிப் போடலாம்.

என்னைக் குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நிடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும். பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில், படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன. தென்றலைத் தீண்டியதில்லை நான். ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன். கேளுங்கள் என் கதையை! நீதிபதி அவர்களே! தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்.

இப்படி யோசிச்சு, நான் தேர்ந்தெடுத்த ஸ்டெப்பு மூணாவது - written declaration.

இதில் நம்மள ஏன் மன்னிச்சு விடணும்னு நம்ம பக்க ஞாயத்தை எடுத்துச் சொல்லணும்.
நான் இணையத்தில் ஆராய்ந்த போது கிட்டிய சில 'உத்திகளை' கையாண்டு, கீழ் உள்ள மேட்டர்களை கலந்து ஃபார்ம் பூர்த்தி செய்து அனுப்பினேன்.
1) இந்த மாதிரி கேமரா இருக்கும் சிக்னல்களில் 'photo enforced' என்று கீழே போட்டிருக்க வேண்டும், சட்டப்படி. அது அந்த மூலையில் இல்லைன்னு ஒரு வரி எழுதினேன். (அதற்கான ஃபோட்டோ சாட்சி, அவனுங்க அனுப்புன ஃபோட்டைவையே திருப்பி அனுப்பினேன்)
2) கணம் கோர்ட்டார் அவர்களே, நான் நிக்கலாம்னு நெனச்சேன், நான் மெதுவாக்கி நிக்கரதுக்குள்ள, பளிச் பளிச்னு ஏதோ வெளிச்சம் அடிச்சது (கேமரா ஃபிளாஷ்), நான் பயந்து, ஏதோ ஏம்புலன்ஸ்தான் என் பின்னால வருதோன்னு நெனச்சு, அதுக்கு வழிவிட வலது பக்கமா நிக்காம திரும்பிட்டேன். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
3) தமிழ்நாட்டிலே இத்திருவிடத்திலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு. தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? கலிஃபோர்னியா! அது உயிரை வளர்த்தது. என்னை உயர்ந்தவன் ஆக்கியது. ஆனால், இதுவரை எந்த தவறும் செய்யாத ஒரு நல்ல ட்ரைவரை, நீதிமன்றம் ஏன் இப்படி $500 ஃபைனெல்லாம் போட்டு டார்ச்சர் செய்கிறது? என்ன கொடுமை ஜட்ஜ் சார் இது? ப்ளீஸ் ஏன்ஸர் மை ப்ரேயர்! Refund my $500 (எங்கூரா இருந்தா, $5 டாலர் மாமாக்கு குடுத்திருந்தா, இவ்ளோ இழுத்தடிச்சிருக்கவே வேண்டியதில்லை).

இப்படி எழுதி முடிச்சு, ஃபார்முடன், $500 செக்கும் அனுப்பினேன்.
சில நாட்களில், செக் வங்கிக் கணக்கிலிருந்து உருவப்பட்டது.

'அச்சச்சோ கோவிந்தாவா'ன்னு நெனச்சிருந்தேன்.

ஆனா, முந்தாநேத்து, ஒரு கோர்ட் ஆர்டர் வந்திருந்தது, 'உங்க கடுதாசி ஜட்ஜ் பரீசிலித்தத்தில், நீங்கள் நிரபராதி என்று இந்த கோர்ட் தீர்ப்பளிக்கிறது. உங்க $500 சீக்கிரம் ரீஃபண்ட் செய்யபடும்'னு. ;)))

உபரி செய்திகள்:
$500ல் , கிட்டத்தட்ட $300 டாலர்கள் அந்த கேமரா வைத்து இயக்கும் தனியாருக்கு கமிஷனாம்;
சிக்னலில் நிற்காமல் வலதில் திரும்புவதற்கும், சின்ன ஃபைன் தான் இருந்ததாம், ஆனா, அதை சட்டமாக்க அடித்த படிவத்தில், தப்பாக தட்டச்சி, $50 என்பது $500 ஆயிடுச்சாம். கவர்மெண்ட்டும், வர துட்டை வேணாம்னு சொல்லாம, இப்படியே ஆட்டையப் போட்டுக்கிட்டிருக்காம்;
இந்த தனியார் கேமரா காண்ட்ராக்ட்டிலெல்லாம், எக்கச்சக்க ஊழல்/கமிஷன் இருக்காம்.
மேல் விவரங்களுக்கு இங்கே பார்க்கலாம்.

கொசுறு செய்தி: GoodNewsIndia.com/PointReturn.Org volunteersஐ நாம் interview எடுத்தது, ஆங்கிலத்தில் இங்கே வலையேற்றப் பட்டிருக்கிறது.



நன்றி: மு.க for the பராசக்தி டயலாக்ஸ் ;)

Sunday, November 21, 2010

பிழை திருத்தம் - Boy scouts சகாக்கள் மன்னிக்க

பத்திரிகைகளில் பிரசுமாகும் செய்திகளில் ஏதாவது பிழை இருந்தால், அடுத்த எடிஷனில், அதை குட்டி டப்பாவில் தெரிவித்து மன்னிப்பு கேப்பாங்களே, அப்படிப்பட்ட பிழை திருத்தல் பதிவு இது.

போன மாசம், சில பள்ளி மாணவர்கள் Boys Scouts பெயரைச் சொல்லி என்னிடம் ஏதோ வசூலுக்கு, பிஸ்கோத்து வாங்கிக்கன்னு சொல்லி $20 ஆட்டையப் போட்டு, பிஸ்கோத்து குடுக்காம தலைமறைவாகிட்டாங்கன்னு ஒரு பதிவைப் போட்டு புலம்பியிருந்தது நினைவில் இருக்கலாம்.

இந்தப் பதிவால், உங்களுக்குத் தெரிவிக்க விரும்பவதென்னவென்றால், அந்த பிஸ்கோத்து பாக்கிட்டு, நேற்று மதியம், அதே வாண்டுகளால், என் வீட்டின் கதவைத் தட்டி டெலிவரி செய்யப்பட்டது.
"யோவ், எம்புட்டு தடவ வந்து கதவ தட்ரது? வூட்ல இருக்கரதே இல்லியா நீ? பிஸாத்து $20க்காக நாங்க மாங்கு மாங்குன்னு ஸ்கூல் விட்டதும், நாலஞ்சு தபா வந்து போயிட்டோம். புடி, நீயும் உன் பிஸ்கோத்தும். இனி எவனாவது வசூலுக்கு வந்தா, ஒழுங்கு மரியாதையா ஒண்ணும் இல்லன்னு சொல்லிட்டு அனுப்பிடு. இவரு $20 குடுப்பாராம், நாங்க இவரு வாங்கன பிஸ்கோத்தை இவரு கிட்ட கொடுக்க, $50 டாலர் செலவு பண்ணி வண்டிக்கு செலவு பண்ணி அலையோ அலைன்னு அலைவோமாம். வந்துட்டானுங்க சாவுகிராக்கிங்க.." இப்படி வெளிப்படையா சொல்லலன்னாலும், அந்த குட்டிப் பய, கண்ணாலேயே அதை சொல்லிக் காட்டிட்டான். அவ்வ்வ்வ்வ்!

உலகமெங்கும் இருக்கும் Boys Scouts மக்கள் அனைவரும் எம்மை மன்னிக்க. அவசரப்பட்டு புகார் பதிவு எழுதிட்டேன்.

டெலிவரி செய்யப்பட்ட பிஸ்கோத்து (சாக்லேட்டு பாப்கார்ன்) ரொம்பவே அருமை.


இந்த சிச்சுவேஷனுக்கு எந்த திருக்குறள் பொருந்தும்?

Monday, November 15, 2010

FaceBookல் துட்டு சம்பாதிக்க வழி

வலைப்பதிவு எழுதி பணம் பண்ணுவது எப்படி? முன்னம் எழுதிய பதிவை படிச்சிருப்பீங்க.

அந்தப் பதிவில் சொன்ன மாதிரி செய்யரது, நல்ல சுவாரஸ்யமான விஷயங்களை அடிக்கடி எழுதி, சில ஆயிரம் வாசகர்களை ஈர்க்கும் பிரபல பதிவர்களுக்கு சாலப் பொறுந்தும்.
அதிகமான வாசகர்கள் வந்தால்தான், பதிவில் இருக்கும் விளம்பரங்களை ஒரு சிலராவது க்ளிக்கி, சில்லறை பேர வழி பிறக்கும்.

ஆனா, FaceBookல் சில்லறை ஈட்டக் கூடிய வழி அப்படி அல்ல. இது எல்லாரும் செய்யலாம். பெரிய கற்பனா வளமும் வேண்டாம், வாசகர் வட்டமும் வேண்டாம்.
கொஞ்சூண்டு செலவு பண்ணா, மத்ததை FaceBook கொம்பேனியார் பாத்துப்பாங்க.

செய்யவேண்டிய விஷயங்கள் இம்புட்டுதான்:
1) FaceBookல் கணக்கு தொடங்குங்க (இது பலரும் ஏற்கனவே வச்சிருப்பீங்க)

2) பிரபலமான ஒரு சில தளங்களில், Affiliateஆக சேறுங்க (உம். associates.amazon.com)
(Affiliateனா என்னான்னா, நீங்க அவங்க ப்ரோக்கர் மாதிரி, Amazon விற்கும் ஏதாவது பொருளை நீங்க விக்க உதவினா, உங்களுக்கு 4% கமிஷன் கிட்டும்)

3) Amazonல் மேய்ந்து, ஏதாவது ஒரு பிரபலமான பொருளை தேர்ந்தெடுத்து அதன் உரலை associates.amazon.comல் உருவாக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
உ.ம். நீங்க TV வித்து கமிஷன் பண்ணலாம்னு முடிவு பண்ணினா, அந்த டிவியின் பக்கத்தின் உரலை எடுத்துக்கோங்க. (உ.ம்., http://amazon.com/sonytv/whatever.html )
அந்த உரலை எடுத்து associates பக்கத்தில், அவங்க சொல்லித்தர மாதிரி, அதில் உங்களின் பெயரை இணைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
உ.ம் (http://amazon.com/sonytv/page=whatever.html&referer=surveysan)

மேலே உள்ளது மாதிரி உரலை உருவாக்கியதும், அந்த உரலை க்ளிக்கி வேர யாராவது போயி, டிவி வாங்கினா, amazon காரனுக்கு, அந்த டிவி வாங்கினவங்க, உங்க மூலமா வந்து வாங்கினாங்கன்னு தெரிஞ்சு, உங்களுக்கு 4% கமிஷன் குடுத்துடுவான்.

எல்லாம் சரி, இந்த உரலை எப்படி பிரபலப் படுத்தறது? உங்க ப்ளாகில் போட்டா, அஞ்சு பத்து பேரு பாப்பாங்க. பாக்கரவங்கள்ள எவ்ளோ பேரு டிவி வாங்கப் போறாங்க?
அதுக்குத்தான் அடுத்த ஸ்டெப்பு. முக்கியமான ஸ்டெப்பு.

4) FaceBookக்கு போங்க. வலது மூலையில், 'Create an Ad'னு ஒரு link இருக்கும். அதை க்ளிக்குங்க. அங்க போனீங்கன்னா, மேலே உள்ள டிவி உரலை, நீங்க FaceBookல் விளம்பரப்படுத்த வழி இருக்கும்.
விளம்பரம் இலவசம் இல்லை. கொஞ்சம் செலவு பண்ணித்தான் ஆகணும்.
விளம்பரத்தை யாராவது க்ளிக்கினா, நீங்க FaceBookக்கு $0.10 லிருந்து, சில பல டாலர்கள் வரை கொடுக்க வேண்டி வரும். (நீங்கள் உபயொகிக்கும் விளம்பர வாக்கியத்தை பொறுத்து)
ஆரம்பத்தில், ஒரு நாளைக்கு $2 பட்ஜெட் வச்சுக்கங்க; எப்படி போவுதுன்னு பாத்து கொஞ்சம் கொஞ்சம் முன்னேத்திப் பாக்கலாம்.

முக்கியமா, அதிகபட்சமா எவ்வளவு செலவு செய்யலாம்னு முடிவு பண்ணி, அதை upper limitஆ போட்டுடுங்க, இல்லன்னா, உங்க கிரெடிட் கார்டை ஆட்டையப் போட்டுட வாய்ப்புண்டு.

விளம்பரம் இந்த மாதிரி இருக்கும்:


5) விளம்பரப்படுத்தும்போது, FaceBookல் மட்டுமே உள்ள பெரிய பலம், உங்க விளம்பரத்துக்கான, பார்வையாளனை நீங்க தேர்ந்தெடுக்கலாம். அதாவது, 30 வயசுக்கு மேல், டிவி , திரைப்படம் பிடிக்கும்னு சொன்னவனுக்கு மட்டும் இந்த விளம்பரத்தைக் காட்டு, இந்த இந்த நகரத்தில் வாழரவனுக்கு மட்டும் காட்டு, இப்படின்னி target ஆடியன்ஸை சுலபமா அடையலாம்.
$2 ஒரு நாளைக்கு செலவு பண்ணீங்கன்னா, விளம்பரத்தை எப்படியும் ஒரு 50,000 பேர் 'பாப்பாங்க' அதில், ஒரு பத்து இருபது பேரு க்ளிக்குவாங்க.
$60 ஒரு மாசத்துக்கு செலவு; கிட்டத்தட்ட 600 பேர் க்ளிக்குவாங்க. அதுல ரெண்டு மூணு பேரு பொருளை வாங்கி வச்சாங்கன்னா, உங்களுக்கு கமிஷன் தானாய் வரும்.

இதே மேட்டரை Google Adwordsலும் பண்ணலாம். ஒரே வித்யாசம், அங்க FaceBook மாதிரி Target Audience கிடையாது.

நான் எம்புட்டு சம்பாதிச்சேன்னெல்லாம் கேக்கப்டாது. யாராவது முயற்சி பண்ணி வேலை செஞ்சா சொல்லுங்க. குரு தட்சணை எங்குட்டு அனுப்பணும்னு சொல்லித் தாரேன் ;)

Wednesday, October 27, 2010

பொடிப் பயலுவ

நான் எவ்ளோ உஷாரான ஆளுன்னு உங்கள் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். ஒரு தொடப்பம் வாங்கணும்னா கூட ரெண்டு கடை ஏறி எறங்கி, இங்கைக்கு அங்க ஒரு ரூபாய் வெலை கம்மியான்னு பாத்து வாங்கும் நல்ல பழக்கம் கொண்டவன்.

எங்கூர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க. என்னதான் ஒடம்பு முழுசா எண்ணை தேச்சு பீச்சு மணலுல விழுந்து பொரண்டாலும், ஒட்டரதுதான் ஒட்டும்.
அது ரொம்பவே சரி. பலருக்கும் அந்த அனுபவமும் இருந்திருக்கும்.

டாக்ஸி செலவு மிச்சப்படுத்தலாம்னு, சொந்தக் காரை ஏர்போர்ட்ல பார்க் பண்ணிட்டுப் போனா, திரும்ப வரதுக்குள்ள அதன் டயர் பன்ச்சராயி ரெட்டை செலவாக்கியிடும். இந்த மாதிரி, ஒட்டரதுதான் ஒட்டும்னு அடிக்கடி அசரீரி நிகழ்வுகள் நடந்தாலும், எண்ணை தேச்சுக்கிட்டு மண்ணுல பொடரும் படலம் தொடர்ந்துகிட்டே தான் இருக்கும்.

அடிமேல அடி அடிச்சா, அம்மிக்கல்லும் நகரும் என்ற இன்னொரு பழமொழி மேல் பாரத்தைப் போட்டு, நாம விகரமாதித்தன் கணக்கா, என்னிக்காவது ஒட்டாதான்னு காலத்தை ஓட்டறேன்.

போன வாரம் ஒரு நாள், விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் பாத்துக்கிட்டிருக்கும்போது, கதவை டொக் டொக் டொக்னு யாரோ தட்டினாங்க. இந்த ஊருல ஃபோன் பண்ணாம நமக்கு ஹ்டெரிஞ்சவங்க யாரும், திடுதிப்னு இப்படி வந்து கதவை தட்ட மாட்டாங்க. ரெம்ப நல்லவங்க.

இப்படி தட்டரது, முக்கால் வாசி, "மாரியம்மனுக்கு கூழு ஊத்தணும்"னு வசூல் நோட்டுடன் டரியல் பண்ணும், பேர்வழிகள்தான். மாரியம்மனுக்கு பதிலா, இங்க, Red Cross, Missing Kids, FireMen Association, அது இதுன்னு எதையாவது ஒரு கொம்பேனி பேரை சொல்லிக்கிட்டு வருவாங்க. இதில் முக்கால் வாசி டுபாங்கூர் என்பது நம்மூர் மக்களின் பரவலான நம்பிக்கை. நானும், வசதியாப் போச்சேன்னு, மனசை கல்லாக்கிக்கிட்டு, "வூட்டம்மா வூட்ல இல்லீங்க. நாளைக்கு வாங்க"ன்னு சொல்லிட்டு கதவை சாத்தி, சூப்பர் சிங்கரை கவனிப்பேன்.
ஆனா, சென்றவார சுபயோக சுபதினத்தில், இப்படி கதவைத் தட்டியதும், எழுந்து போயி கதவை தொறந்து "வூட்டம்மா.."ன்னு சொல்றதுக்கு பாத்தா, கதவைத் தட்டியது மூணு பொடிப் பயலுவ. ஆறேழு வயசு இருக்கும். ரெண்டு பேரு, தொரைப் பயலுவ. ஒரு பொண்ணு. கண்ணாடியெல்லாம் போட்டுக்கிட்டு ஒரு படிச்ச கள இருந்தது பயலுவளுக்கு.

"ஹாய், நாங்க School Boy Scouts"லேருந்து வரோம். ஸ்கூல்ல ஒரு மேட்டருக்காக நிதி வசூல் பண்றோம். நீங்க செய்ய வேண்டியதெல்லாம், இந்த பிஸ்கோத்துல ஏதாச்சும் ஒண்ண வாங்க வேண்டியது மட்டுமே"ன்னு ஒரு துண்டு பேப்பரில் பலப் பல பிஸ்கெட் படம் போட்டிருந்ததை காட்டி, கெக்க பக்கேன்னு டயலாக் விட்டாங்க.

ஹ்ம். குறைந்தது $20 ஒரு பிஸ்கோத்து பாக்கெட்டுக்கு. சரி, வெத்தா $20 கொடுக்காம, பிஸ்கோத்தாவது கிடைக்குதேன்னு தோணிச்சு.

அதைத் தவிர, எப்பவும் உஷாரா இருக்கும் நம்ம அல்ப மனசு, வந்திருந்த வாண்டுகள், 'வெள்ளக் காரத் தொரப்' பசங்களப் பாத்ததும், இவனுங்க கண்டிப்பா நெம்ப நல்லவங்களாத்தான் இருப்பாங்க. இந்த வயசுலையே எம்மாம் பெரிய தொண்டு உள்ளம் வரவைக்கறாங்க, தொரை தொரைதான்னு உள்ளூர புகழ்ந்துட்டு, உள்ள போய், $20 எடுத்து வந்து பயலுவ கிட்ட கொடுத்து, அவங்க நோட்டுல பேரு ஊரெல்லாம் எழுதிக் கொடுத்தேன். பிஸ்கோத்து எப்பத் தருவீங்கன்னு கேட்டேன். இதோ இன்னும் ரெண்டு வீட்டை முடிச்சுட்டு, பிஸ்கோத்து பாக்கெட் கொண்டு வந்து தருவோம்னாங்க.

நானும் கதவைத் தொறந்து வச்சுட்டு, சூப்பர் சிங்கரை கண்டுக்க ஆரம்பிச்சேன். சூப்பர் சிங்கர் முடிஞ்சு, உள்ளூர் செய்திகள் முடிஞ்சு, Seinfeld முடிஞ்சு, தூக்கமே வந்தாச்சு. ஆனா, பயலுவளைக் காணும். வெளீல எட்டிப் பாத்தா, பசங்க இருக்கர சுவடே சுத்து வட்டாரத்துல காணும்.
ஒரு வேளை, லேட்டாயிருச்சுன்னு, மறுநாள் குடுத்துக்கலாம்னு விட்டிருப்பாங்களோன்னு நெனைச்சேன். ஒரு நாள் ஆச்சு, ரெண்டு நாள் ஆச்சு, ஒரு வாரமும் ஆயிடுச்சு.

பொடிப் பயலுவ $20 ஆட்டையப் போட்டுட்டானுவ. ஒட்டிய மண்ணில் கொஞ்சம் மண் உதிர்ந்து போயிடுச்சு.
திரும்ப பொரளுவோம்ல.. விட்டது பிடிச்சுடுவோம்.

அடுத்த பதிவில், இன்னும் நிறைய மணல் நம்ம Terminator Arnoldஆல் உதிர்ந்ததைச் சொல்றேன். ஹ்ம்!

Tuesday, October 26, 2010

கற்பகம், ஸ்ரீராம், DV ஸ்ரீதரனின் பதில்கள்

கேட்ட கேள்விகளுக்கு, பதில் அனுப்பியிருக்காங்க, GoodNewsIndia.com, PointReturn.Orgஐச் சேர்ந்த கற்பகமும், ஸ்ரீராமும், DV ஸ்ரீதரனும்.

பொறுமையாக படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.



1)பிரதிபலன் எதுவும் பெருசா எதிர்பாக்காம சொந்தச் செலவுல GoodNewsIndia வழியாக சேவைகள், இப்ப PointReturn.orgனு பண்ணிக்கிட்டு இருக்கீங்க.
GoodNewsIndia தளம் இப்போது இயங்காத நிலையில் உள்ளது. இயங்கிய நாட்களில், மகத்தான சேவை செய்து வந்தது. ஒரு நல்ல முயற்சியை முடங்க விட்டதில் சங்கடங்கள் இல்லையா? அதை மீண்டும் இயக்க, தன்னார்வலர்கள் மூலமாக முயன்று பார்க்க ஏதேனும் எண்னம் உண்டா?
Sridharan: gni has been suspended, not abandoned. when it does resume however, i would focus exclusively on good work related to caring for the earth.
i believe pR could not have arisen had i not gone looking for and
expecting to find 'good work' in abundance. and, discovering there was
too little, and their texture not very satisfying; a texture woven of
foreign funded ngos, philanthropic tokenism of indians and the mealy
mouthed 'corporate social responsibility'. i have written at length on
this here: http://goodnewsindia.com/pointreturn/online/why-is-goodnewsindia-not-being-updated/


2) கற்பகம், ஸ்ரீராமுக்கு:
நல்லா டீப்பா திங்க் பண்ணிதான், வசதி வாழ்வை ஓரம் கட்டிட்டு, இப்படி பொட்டல் காட்டுல சில பல வருஷங்களை கழிக்கலாம்னு முடிவு பண்ணிருப்பீங்க. "தேவையான" சொத்து சேத்துட்டோம்னு வந்த தைரியத்தில் ஏற்பட்ட முடிவா இது?
The main reason for the shift was disorientation towards life (corporate work, compensation, job satisfaction, exploitation of anything anyone if given a chance, insensitive pace of growth of the city, mad push to buy and consume unnecessary things to fuel useless growth in the name of GDP race with the rest of the world, total disregard for manual work, use and throw mentality, current generations forgetting the link between the food and the farm etc. - i could go on but think you get the drift). This disorientation originated from our sensitivity towards nature.
We have couple of friends who moved rural to do dryland agriculture. we got the opportunity to visit them to get a feel of life on the other side. This life made sense to us. So we would not classify our shift as 'giving up' comforts and that sounds like a self denial. But we feel that the life in the rural area is more comfortable for us than the city corporate life. We place more importance to clean air, peaceful quiet surroundings, meaningful work as factors of comfort rather than say going to a movie or watching TV. Therefore we have actually moved into a better lifestyle in our point of view. It may not have TV or AC or some other material things but we have everything we "need" for a satisfying life. We will build / accumulate material things at our own pace and requirements.

On the financial front, we do not have any liabilities. we have a rental income as our only input. that is adequate as we have defined. when we made the shifting decision, we removed the fear of financial insecurity just by the sheer belief that we have the skills and strength to survive a simple life with limited means.
the removal of this fear is what helps in making the shift, not trying to define 'adequate'.


3) கற்பகம், ஸ்ரீராம், ஸ்ரீதருக்கு:
அஞ்சு ஆறு தன்னார்வலர்கள் சேந்து, உங்க சொந்த வாழ்வில் சில வருஷங்களை தியாகம் செய்து, 17 ஏக்கரில் மரம் வச்சு, குளம் வெட்டி, விவசாயம் பண்ணிச் சாப்பிட்டா, சமுதாயத்துக்கு என்ன பெரிய தாக்கம் வரும்னு எதிர்பாக்கறீங்க? அதை விட பெரிய தாக்கம், உங்க நேரத்தை, under privileged பசங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தோ, மத்த சேவைகள் செஞ்சோ ஏற்படுத்த முடியாதா?
Sriram: my post on 'impact' should cover this question. the impact on the environment through our work is truly immeasurable :-)
i have worked in an education NGO in bombay for 6+ years and realise that giving them the 'education' as it is currently designed will only create more confused surveysans ;-)
Teaching underprivileged children our eduction will make them lose all their skills and make them dependent on mindless work in the city. They will lose control of their freedom and start servicing the rich. We want children to study in their mother tongue and learn some skill that is relevant and will help them stay in their homes and contribute in the rural area. We do not agree with moving to the city as true "development". If that is a happy development we will not have so many people who, inspite of working and earning well in the city , feel that they would also like to "get out" of it. So we will have to redefine who is privileged and who is underprivileged. It is not only determined through money. We will have to teach ourselves to feel confident and have self respect in our own language and culture and not feel inadequate if we did not know english. Please do read gram swaraj and nai talim concepts of Gandhiji. We believe in a different type of economy and different world order. we believe the world has to slow down in production and reproduction :-). we have too many machines to serve humans and humans now are losing the ability to work with their hands in a simple way and fulfill simple needs. Agriculture is the most central aspect to our life, existence and creativity and the more we distance ourselves the more we are likely to feel purposeless and empty in our lives.

DV Sridharan: let's take a material impact already measurable because pR came into
being: we have created rain water harvesting bodies totaling
2.5million litres. in the 2 monsoon spells we have, one may assume
them to fill up 1.5 times. so we recharge about 4m.L into the earth
and draw far less than that for ourselves and our plants. the water
charged into the ground knows no proprietor and flows wherever it
would
speaking in non-numbers, beneficial impact on the earth due to steady
increase in soil formation, soil animal activity, soil hydration,
diversity of birds and trees are already considerable.
i personally assign a very low rank and very small space for humans in
the web of life. man's welfare, privileges are of little and
incidental consequence to me. i can conceive a happy planet without
man in it but not the earthworm.
finally, the type of man in dire need of attention is the privileged
and over-privileged ones whose consumptive ways are destroying the web
of life. he is the one in need of re-education not the so called
under-privileged, who has a tiny eco-footprint.

4) ஸ்ரீராமுக்கு:
ஒரு பதிவில், நம் நாட்டின் முக்கியத் தேவை, பலப் பல புதியவர்கள் விவசாயிகளாக மாறணும்னு சொலியிருந்தீங்க. வெறும் மாடு வச்சு உழுது organic முறை விவசாயம் எல்லாம் பண்ணினா மட்டும், நம்ம உணவுத் தேவைகள் பூர்த்தியாகுமா? இயற்கை உறம் புரியுது. ஆனா, இயந்திரங்கள் இல்லாமல் விவசாயம் பண்ணா, நம்ம உற்பத்தித் திறன் எப்படிப் பெருகும்?

we are not anti-technology. we trust gandhi's views on technology. it is possible to be productive to feed the world using simple technology and natural farming. the way you put it, this productivity is super-critical as a very few are growing for the rest. this is an imbalance which is why i said that more people should be in farming.

5) கற்பகம், ஸ்ரீராம், ஸ்ரீதருக்கு:
பொதுநலவாதியாக என்ன பண்னனும்? "எவ்வளவு சம்பாதிச்சா நமக்கும் நம் சுற்றத்துக்கும் போதும்?" :)
Sriram: public spirited is a unreal concept. we all will be self-minded first and last. We are neither "podunalavadhi" nor "suyanalavathi" we are just "vadhis" if there is such a word. we want to live an life that is not very exploitative towards nature and that will necessarily be frugal and so we will consume fewer resources so that more is available for others as well. the key point is understanding our role with careful identification of our responsibilities and our rights.

6) ஸ்ரீதருக்கு:
PointReturnக்குப் பிறகு, ஏதாவது திட்டம் மனதளவில் இருக்கா? எதையாவது செய்யணும்னு நெனச்சு, நேரப் பற்றாக்குறையால், பண்ண முடியாம போச்சேன்னு நெனச்சதுண்டா?
i look forward to steady withdrawal and total detachment from pR and
hope to see it function as a promising, sustained, sustaining centre.
i hope it silently conveys all i tried to through my stories in gni,
as to what amounts to good work in life.
and contradicting myself, i hope to travel again and write.

7) கற்பகம், ஸ்ரீராமுக்கு:
எனக்கெல்லாம் job satisfaction 365நாள் வேலைக்குப் போனா, அஞ்சு பத்து நாள், எப்பவாவது வரும். போங்கடா நீங்களும் உங்க வேலையும்னு தூக்கிப் போட்டுட்டு போயிடலாம்னு நிறைய நாள் தோணிருக்கு.
நீங்க வேலை செய்த நாட்களில் எப்படி? அங்க ஏற்பட்ட விரக்தியால், இப்படி வந்துட்டீங்களா? வேறு காரணங்கள்? :)

Sriram: Yes have partly answered in 2 above. we had "salary satisfaction" not job satisfaction. More than job dissatisfaction we had a problem with the very purpose of these corporates in the world. So we thought hard on why we are earning this salary and then realised that its more fun to live a content life the way we want it without working for some shareholders.

8) கற்பகத்துக்கு:
ராமர் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தின்னு, ஸ்ரீராம் பின்னாடி, வேற வழியில்லாம, பல்லக் கடிச்சுக்கிட்டு வந்தீங்களா? In a scale of 1-to-100%, how committed are you for this cause? PointReturnக்கு அப்பால் வேறு என்ன செய்ய எண்ணம் உள்ளது? :)
Karpagam: I have also wanted to move away from the city. we had this common interest before we met and then we agreed on the move even before we got married. we moved to pointReturn 2 years after we married. So yes I am also committed independently to this life not because of sriram. But I may not have been able to do it had I not met sriram.

9) கற்பகம்,ஸ்ரீராம்,ஸ்ரீதருக்கு:
நம்ம ஊர் (தமிழ்நாடு, சென்னை,..) சமீப வருஷங்களில் நல்லா வளந்துக்கிட்டு இருக்கு. ஆனா, தனி மனுஷ ஒழுக்கம் சுத்தமா முன்னேறலை. தெருக்களில் குப்பை; சாலை விதி மீறல்; போராட்ட மனநிலை இல்லா சோதா வாழ்க்கை வாழ்தல் etc.. எங்க தட்டினா மாற்றம் வரும்? மனுஷங்க மத்தியில் மாற்றம் வர ஏதாவது செய்யும் திட்டமிருக்கா?

Sriram: mad rush towards growth and development has made everyone insensitive to their surroundings. this is true for western world too however their governments have a manageable number in terms of population which makes it possible for them to keep their cities clean. weather and rain in the temperates helps keep the dust low. However we do not see the filth that big a problem. Inequality is the bigger problem. so is deforestation, migration from rural to cities etc.
the collective of individual action is what we believe in. thattina maarathu, vazhnthu kaatinaal maatram varalaam.

DV Sridharan: on bringing about change in others:
as gandhi has conclusively said - [and which has alas become a cliche
for being bandied without internalising], "As human beings, our
greatness lies not so much in being able to remake the world - that is
the myth of the atomic age - as in being able to remake ourselves.”
so how do i prevent littering? i stop littering. that's about all i need to do

10) கற்பகம்,ஸ்ரீராம்,ஸ்ரீதருக்கு:
மரம், செடி, கொடி, இணையம், புத்தகங்கள், இதை விட்டா வேறென்ன பொழுதுபோக்கு விஷயங்கள் பிடிக்கும்?
Sriram, Karpagam: we like music - carnatic and old tamil and hindi film songs, we also like movies - again not commercial but offbeat. We are big fans of Kamal hasan and his films so we are just normal people in our likes. Sriram likes sports.

DV Sridharan: on other passions:
i enjoy thinking up simple problem-solving devises and gear, exploring
design possibilities, keeping track of technology that would have
positive impact on earth.
i adore the internet as the greatest republic ever created

11) Was there a moment where they regretted / or questioned their decision after joining PointReturn?
NO

12) What was the incident or event which made you took this decision? Many of us have these thoughts but there must be some strong driving reason for it.
No one incident in particular.

13) Is there anything that you learned which can benefit a poor farmer. If so, are there any plans to educate them.
we are learning and have a long way to go. as an immediate observation we feel farmers should grow multi grain crops and vegetables also for home consumption rather than growing only a couple of crops like rice/groundnut for the market and then buy their daily needs from the market. They should think about consuming their produce.



பொறுமையாக படித்த அனைவருக்கும் மிக்க நன்றி. மேல் விளக்கங்கள் தேவைன்னா தயங்காம கேளுங்க. நன்றீஸ்!

கேள்விகளுக்கு பொறுமையாக பதில் அளித்த கற்பகம், ஸ்ரீராம், ஸ்ரீதரனுக்கும் நன்றிகள் பல.

சென்னைவாசிகள், இவர்கள் மூவரை தொடர்பு கொண்டு, PointReturnக்கு தங்களால் இயன்ற நேரத்தை ஒதுக்க முயற்சிக்கலாம்.

Wednesday, October 20, 2010

உள்ளத்தில் நல்ல யமுனை - தங்கமணி ரங்கமணி சிங்க்ஸ்

பொழுது போல ரெண்டு பேருக்கும், அடுத்த ஆல்பம் ரிலீஸ் வேலையில் எறங்கிட்டோம்.

என் தெய்வீகக் குரலில், உள்ளத்தில் நல்ல உள்ளம், கர்ணன் படத்திலிருந்து
Get this widget | Track details | eSnips Social DNA


தங்க்ஸின் குரலில், யமுனை ஆற்றிலே, தளபதியிலிருந்து
Get this widget | Track details | eSnips Social DNA


பாடலை கேட்ட பிறகு, மூர்சை அடையாமல் முழிச்சுக்கினு இருந்தால், கொமெண்ட்டவும். நன்றீஸ்.

Thursday, October 07, 2010

ரஜினி ஜோக்ஸ்



எந்திரன் விமர்சனம் எக்குத்தப்பா எழுதி, பல பேரு பதிவை விட்டு வெளி நடப்பு செஞ்சுட்டாக. அல்லாரையும் குளிர்விக்க, தலீவரின் புகழைப் பரப்பும் சில ஜோக்கு.
ஆங்கிலத்தில் வந்ததை, டமிலில் மொழி பெயர்த்து, என்னால் ஆன சேவையை வழங்குகிறேன் :)

சும்மா டமாசுக்கு... நோ ஆட்டோஸ் ப்ளீஸ். :)

1. When Rajinikanth does push-ups, he isn't lifting himself up. He is pushing the earth down.
தலீவரு புஷ்-அப்ஸ் (தண்டால் or பஸ்கி?) எடுப்பது, தன் கையால பூமியை கீழே தள்ளும் செயல்.

2. There is no such thing as evolution, it's just a list of creatures that Rajinikanth allowed to live.
ஒலகம் எப்படி உருவாச்சு, கோடானு கோடி உயிரனங்களெல்லாம் எங்கேருந்து எப்படி உருவாச்சி, அப்டீ இப்டீன்னெல்லாம் மண்டைய போட்டு ஒடச்சுக்காதீங்க. ஒலகம் ஒலகமா இருக்க ஒரே காரணம், தலீவரு, எல்லா உயிரனங்களையும் பொழச்சுப் போன்னு விட்டு வச்சிருக்காரு.

3. Rajinikanth gave Mona Lisa that smile.
தலீவரு சிரிக்கச் சொல்லித்தான மோனாலிஸாவே சிரிக்க ஆரம்பிச்சா.

4. Rajinikanth can drown a fish.
தலீவரு நெனச்சா, மீனை கூட மூழ்கடிச்சு கொல்லுவாரு.

5. Rajinikanth can delete the Recycle Bin.
யம்மாடியோவ். தலீவரு நெனச்சா, மீள் சுழற்சி அண்டாவையே காணாம பண்ணிடுவாரு.

6. Rajinikanth once kicked a horse in the chin. Its descendants are today called giraffes.
கழுத்து நீட்டிக்கினு ஜிராஃபி எங்கேருந்து வந்துது தெரியுமா? தலீவரு சில பல வருஷத்துக்கு முன்னாடி ஒரு குதிரையை தாடையிலேயே குத்து விட்டதிலிருந்து இப்படி ஒரு இனம் உருவாயிடுச்சு.

7. Rajinikanth once ordered a plate of idli in McDonald's, and got it.
தலைவரு கேட்டா, Mc.Donalds காரன், இட்லியை கூட செஞ்சு குடுப்பான்.

8. Rajinikanth can strangle you with a cordless phone.
cordless phoneஆலேயே கழுத்டு நெறிப்பாரு தலைவரு.

9. Rajinikanth has counted to infinity, twice.
தலைவரு infinity வரைக்கும் இதுவரைக்கும் ரெண்டு தபா எண்ணி முடிச்சுட்டாரு.

10. Rajinikanth kills Harry Potter in the eighth book.
ஹாரி பாட்டர் என்ன ஆட்டம் போட்டாலும் சரி, எட்டாவது பதிப்பில், தலைவர் கையாலதான் அவன் முடிவு இருக்கு.


இப்படியெல்லாம் ரூம் போட்டு யோசிக்கும் நல்ல உள்ளங்கள் வாழ்க.

ஹாப்பி வெள்ளி!

Monday, October 04, 2010

என் கிட்டார் அரங்கேற்றம்..



என்றாவது ஓர் நாள் பீத்தோவனின் Fur Elliseவை கிட்டாரில் வாசித்து மூவலகையும் இன்பக் கடலில் ஆழ்த்த வேண்டும்னு உதார் விட்டு ரெண்டு வருஷத்துக்கு மேல ஆச்சு.

ஏக்சுவலி, கிட்டார் கத்துக்கவேண்டும் என்ற அவா ஒரு அஞ்சாறு வருஷத்துக்கு முன்னமே வந்த ஒன்று. தங்க்ஸ் ஊருக்குச் சென்று, ஒரு மாதம் விடுதலை கிட்டியிருந்த பொற்காலம் அது. இதே போல் விடுதலை வாழ்க்கை வாழ்ந்த இன்னொரு சகா எங்க வீட்டுக்கு வந்து டேரா போட்ட மகிழ்ச்சியான தருணங்கள். டைமை யூஸ் பண்ணிக்கணும் மச்சி, என்ற பேரவாவில், அங்க இங்க பொரட்டிப் பாத்து, வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு community collegeல் Beginners Guitar வகுப்பு இருப்பதை பார்த்து அதில் சேரலாம் என்று முடிவு செய்தோம்.

Guitar வாங்கலாம்னு கடைக்கு போனால், குறைந்தது $50 ஆகும்னு தெரிஞ்சது. கடையில் காட்சிக்கு வைத்திருந்த கிட்டாரை எடுத்து வாசிச்சுப் பாத்தா கஷ்டமா இருப்பது போலவும் தெரிந்தது. கிட்டார் நமக்கு ஒத்துவருமான்னு தெரியாத ஒரு குழப்பத்தில், சீப்பா ஒரு கிட்டாரை முதலில் வாங்கிப்போம், அப்பாலிக்கா, சுருதி சேந்து பட்டையக் கிளப்ப ஆரம்பிச்சா, காஸ்ட்லியா இன்னொண்ணு வாங்கிக்கலாம்னு முடிவு செஞ்சோம்.

பயங்கரமா தேடி, eBayல் $5க்கு கிட்டார் இருந்ததைக் கண்டு பேருவகை அடைந்தோம். Shippingக்கு ஆனா $10. ரெண்டு கிட்டார், நல்ல அழகான கறுப்பு நிறத்தில் வாங்கினோம்.
சுபயோக சுபதினத்தில், கிட்டாரையும் தூக்கிக்கிட்டு, வகுப்புக்கு போனா, வகுப்பில் 30 பேர் இருந்தாங்க. எல்லார் கிட்டேயும், பள பளான்னு நல்ல கிட்டாரு. அவங்க கிட்டாரெல்லாம் மீட்டினா, டங்கு டிங்குன்னு அருமையான சத்தம். நம்ம கறுப்பு கிட்டாரிலும் சத்தம் வந்தது, ஆனா, ரம்யம் கம்மியா இருந்துச்சு. அதை ஊர்ஜீதம் செய்வது போல், வகுப்பு ஆசிரியர் வந்ததும் ஒரு நிகழ்வு நடந்தது.

வந்தவர், ஒவ்வொருத்தர் கிட்டையும் போயிட்டு, கிட்டாரை வாங்கி, அதை ட்யூன் செய்ய ஆரம்பிச்சாரு (ட்யூன்னா என்னாங்கர விவரமெல்லாம் தெரியாதவங்க சொல்லுங்க, சொல்லித்தாரேன்). மத்தவங்க கிட்டாரெல்லாம் நாலைந்து விநாடியில் ட்யூனியவரு, என் கிட்டாருக்கு வந்ததும், அதன் கம்பியை முறுக்கி முறுக்கி ட்யூன் பண்ணி மாஞ்சு போயிட்டாரு. "எங்கய்யா வாங்கின இதை"ன்னு கேட்டதும், "eBay"ன்னேன். "ஹ்ம் அதான் இப்படி"ன்னு சொல்லாம சொல்லி, இந்தாப் புடின்னு திருப்பிக் கொடுத்துட்டாரு.

வகுப்பு நடந்த ஒரு மாதமும், செம டார்ச்சர். கம்பியை அமுக்கி அமுக்கி கையெல்லாம் ரணகளம். வகுப்பின் சக மாணவர்களும், நல்லா ப்ராக்ட்டிஸ் பண்ணிட்டு, அடுத்த கிளாஸுக்கு வந்து நல்லா வாசிப்பாங்க. நானும்,சகாவும், டொங்க் டொங்க் டொங்க்னு ஒரு கோர்வையும் இல்லாம எத்தையோ தட்டி, மொத்த வகுப்பின் சுருதியையும் சொட்டையாக்குவோம்.

எப்படா இவனுங்க ஒழிவாங்கன்னு எதிர்பார்த்திருந்த ஆசிரியருக்கும் மாணவருக்கும் விடுதலை கொடுத்து, கிட்டாரை தலை முழுகினோம்.

சில பல வருஷங்களுக்குப் பின், மீண்டும் கிட்டார் மோகம் தலை தூக்கியது. இம்முறை நான் மட்டும் (bad influence சகா கூட இல்லை பாருங்க :) ). நல்ல கிட்டார் இருந்தா, என்னிக்கோ Jimmy Hendrix ஆக வேண்டிய ஆளு நான்னு, நானே முடிவு பண்ணி, $100 கொடுத்து ஒரு Ibanez வாங்கி வைத்தேன். வேறொரு community collegeல் அதே beginers guitar சேர்ந்து வைத்தேன்.

துளியூண்டு முன்னேற்றம் இருந்தது, கடந்த வகுப்பைக் காட்டிலும். ஆனா, கொடுமை என்னன்னா, சக மாணவர்கள் இங்க, பதினாலு, பதினைஞ்சு வயசு பொடிசுகள். சின்னப் பசங்களெல்லாம், சொன்னதை சட்டுனு புரிஞ்சுக்கிட்டு, ரொம்ப ஈஸியா வாசிச்சுட்டுப் போயிடறாங்க. அவங்களுக்கு ஈடு கொடுத்து, நான் பிராக்ட்டிஸ் பண்ணி வாசிக்கரதுக்குள்ள மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிடுச்சு.

ஒரு வழியா அந்த வகுப்பும் முடிஞ்சுது. ஆனா, பெரிய முன்னேற்றம் இல்லை. Jingle bells, twinkle twinkle little star மட்டுமே லாவகமாக வந்த பாடல்கள். மத்ததெல்லாம் சுத்தம்.
அதுவும், நண்பர் ஒருவரின் எட்டு வயது பொடிசுக்கு twinkle twinkle வாசிச்சுக் காமிச்சா, "Uncle, you are missing a few notes"னு காறித் துப்பாத குறையா சொன்னதுல, திரும்ப சோக மாகிட்டேன்.

இன்னும் ஒரு படி மேலப் போகணும்னா, $200 கிட்டார் இருந்தாத்தான் முடியும்னு முடிவு பண்ணி, Ibanezஐ விற்று ஒரு Yamahaவை வாங்கி வைத்தேன். அருமையான சத்தம் இதில். இனி, பொடிசுகளெல்லாம் போகும் community college நம்ம வயசுக்கு மருவாதையா இருக்காதுன்னு, அருகாமையில் இருக்கும் ஒரு கிட்டாரிஸ்ட்டிடம் private lessons எடுத்துக் கொள்ளச் சேர்ந்தேன். ஒரு 30நிமிட வகுப்புக்கு $25 அழணும். நான் படிக்கர ஸ்பீடுக்கு ஒரு வகுப்புக்கும் அடுத்த வகுப்புக்கும் பெரிய முன்னேற்றம் இல்லாமல், abcdefg டெய்லி போயி, அந்த ஆளுக்கு வாசிச்சுக் காமிக்க $25 கொடுப்பது, பெருத்த மன உளைச்சலைத் தந்தது. ஆனா, வாங்கர காசுக்கு அந்தாளும், "ஆஹா, சூப்பர். என்னமா வாசிக்கர நீயீ. ரம்யமா வாசிக்கர. எங்கையோ போயிடுவ நீ"ன்னு உசுப்பு ஏத்தி விட்டுக்கிட்டு இருந்தாரு.

நம்ம வேகத்துக்கு, நாமளே சுய முயற்சியில் கத்துக்கிட்டாத்தான் உண்டு, இல்லன்னா, பாங்க்கு பேலன்ஸு, பொத்தலாயிடும்னு தெரிஞ்சிருச்சு. "John, work is so tight lately. i will take a short break and come back"னு அந்தாளுக்கு அல்வா கொடுத்துட்டு, கொஞ்சம் கொஞ்சமா நானே சொந்த முயற்சியில், இணையம் தந்த அளவில்லா வகுப்புகளை மேய்ந்து பயில ஆரம்பித்திருந்தேன்.

அதிலும் கூட, நேர்வழியில், guitar chords, strumming, chords change மாதிரி வகையராக்கள் செய்வது, +2வில் Chemistry வகுப்பில் இருப்பதைப் போன்ற கசப்பான ட்ரைய்யான அனுபவமாய் இருந்தது. Instant gratification கிட்ட என்ன செய்யலாம்னு மேய்ந்ததில், YouTubeல் தமிழ் சினிமாப் பாடல்கள் பலதையும் அழகாய் சொல்லித் தரும் இளைஞர் படை கண்ணில் பட்டது. சிறுகச் சிறுக இதைக் கற்று, ஓரளவுக்கு விரல்கள் வளைந்து கொடுக்க ஆரம்பித்தது.

அதை வைத்து, ஒப்பேத்திய பாடல், உங்கள் செவிகளுக்கு விருந்தாக்குகிறேன்.
Get this widget | Track details | eSnips Social DNA


உங்க காது டங்குவாரு கிழிஞ்சிருக்கலாம். அதற்கு கொம்பேனியார் பொறுப்பில்லை. இன்னா பாட்டு இதுன்னு யாராவது கேட்டீங்கன்னா, அழுதுடுவேன்.

இந்தப் பாடல், கிட்டாரில் இசைத்தால், எப்படி ரம்யமாய் இருக்கும் என்று தெரிய, கீழே ஏதோ ஒரு புண்ணியவான் வாசித்ததை கேட்டுப் பரவசமடையுங்கள். நான் இந்த லெவலுக்கு வரணும்னா, $500 கிட்டாரும், இன்னும் அஞ்சு வருஷமும் செலவாகும். ஹ்ம்!


கிட்டார் கற்றுக் கொள்ள விரும்வும் அன்பர்கள், கண்ணே கலைமானே பாடலை எப்படி வாசிப்பது என்று, ஆர்வம் பீரிட்டு கேட்டால், தனிப் பதிவில், அதை கற்றுத்தருவேன். யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்!

என் வாசிப்பை கேட்டு உங்களுக்கு என்ன ஆகியிருந்தாலும், பேசித் தீத்துக்கலாம், கொமெண்ட்டிட்டு போங்க. டாங்க்ஸு.

Sunday, October 03, 2010

சந்திரபோஸ்

எண்பதுகளில் ராஜாதி ராஜன் இசை அரசன் இளையராஜா கோலோச்சி ஆட்சி செய்தது அனைவருக்கும் தெரியும். அப்பெல்லாம் எந்த நல்ல பாட்டு ரேடியோவில் கேட்டாலும் அது கண்டிப்பா ராசா பாட்டுத்தான்னு எல்லாரும் மனசுல ஏத்திக்கிட்ட காலம்.
ராஜாவைத் தவிர வேறு எந்த இசைஅமைப்பாளர்கள் அந்த காலக்கட்டத்தில் இருந்தாங்கங்கரது கூட மங்கலாத்தான் நினைவில் இருக்கு.
அந்த மங்கலான நினைவில், பளிச்னு முதல் வரிசையில் இருப்பவர்கள், சங்கர் கணேஷ், சந்திரபோஸ், போன்றவர்கள்.

SPBயும் யேசுதாஸும் பாடிய "என் காதலி யார் சொல்ல்வா?" பாட்டு சங்கர் கணேஷ் போட்டது, ராசாவோடது இல்லைங்கரது சில வருஷத்துக்கு முன்னாடிதான் எனக்கே தெரிஞ்சது.

ஒரு காலத்தில், ரேடியோ ஆன் பண்ணினாலே, 24 மணி நேரமும் இடம்பெற்ற பாடல், 'மாம்பூவே சிறு மைனாவே" பாடல். பலப் பலவருஷமா இதுவும் ராசா பாட்டுத்தான்னு நெனைச்சிருந்தேன். ஆனா, இது சந்திரபோஸின் இசையில் வந்த பாடல்னு சமீபத்தில்தான் தெரிஞ்சது.

சந்திரபோஸ் எவ்வளவோ ஹிட்டு பாட்டு கொடுத்திருக்காருன்னு, உ.தமிழனின் பதிவிலும், கானா பிரபாவின் ரேடியோஸ்பதியிலும் தான் தெரியக் கிட்டியது.

சந்திரபோஸ், நல்ல திறமையான கலைஞன். ராஜாவின் பிரகாசத்துக்கு இடையே, தனக்குன்னு ஒரு தனி இடத்தை உருவாக்கிக்கிட்டதிலிருந்தே அது புரியுது.

அவரின் பாடல்களில் சில கீழே:
மாம்பூவே சிறு மைனாவே - பல வருஷமா ராசாப் பாட்டுன்னு எண்ணியிருந்தது இது. இன்னிக்கும் இந்தப் பாட்டை கேட்டா, பழைய murphy radioவும், இலங்கை வானொலியின் அறிவிப்பாளரும், ரேடியோவை சுற்றி அமர்ந்திருக்கும் சுற்றமும் நட்பும் நினைவில் வருது.


பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் - இந்த நிமிஷம் அரைக்கும் இது சந்திரபோஸின் இசைன்னு தெரியாது. அருமையான பக்திப் பாடல். உருகவைக்கும்.


Raj TV நிகழ்ச்சியில், சந்திரபோஸ், உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது கர்ணன் பாடலை, ரொம்பவே அனுபவிச்சு அற்புதமா பாடும் காட்சி.


சந்திரபோஸ் மறைந்துவிட்டார் என்பதில் வருத்தம்.

Saturday, October 02, 2010

எந்திரன்


நானும் ரஜினி ரசிகனாக மாறியது, பாட்ஷா படத்தில் வரும் "எனக்கு இன்னோர் பேரும் இருக்கு"ன்னு கல்லூரி முதல்வரிடம் ரஜினி சொன்னதும், அப்படியே கேமரா பின்னால் நகர்ந்து, கண்ணாடி ரூமுக்குள் இருவரும் பேசிக் கொள்வதைக் காட்டும் காட்சி. பின்னணி இசையில், 'பாட்ஷா பாட்ஷா'ன்னு தேவா பின்னியிருப்பாரு.

எனக்கே புல்லரிச்சுது அந்த காட்சியின் போதுன்னா, ரஜினி தீவிர ரசிகர்களுக்கு எப்படி இருந்திருக்கும்னு புரிஞ்சுது.

என் பார்வையில், ரஜினி நல்ல நடிகரெல்லாம் கிடையாது. யதார்த்தமான நடிப்பெல்லாம் நடிச்சுப் பாத்ததா ஞாபகமே இல்லை. டைரக்டர் சொல்வதை செயற்கைத்தனமா நடிச்சுக் காண்பிப்பதைப் போல்தான் தெரியும். (சந்திரமுகியில் ரொம்பவே அப்பட்டமாய்).

ஆனா, ரஜினி என்ற பிரமாண்டத்தின் முன், எல்லா நெளிவு சுளிவுகளும் காணாமல் போய், ஒரு ஜாலியான ரசிப்புத்தன்மை தானா வந்திடும். ஒரு ஈர்ப்பு இருக்கும்.
அவரு பத்து பேரை அடிச்சு, 'கண்ணாஆஆ'ன்னு பன்ச் டயலாக் பேசி, வெறுப்பேற்றும் வில்லனை அடிச்சு ஒதச்சு, நாட்டுக்கு ஏதாவது பெருசா நல்லது செய்யரமாதிரி படம் வந்தாதான், அது ரஜினி படத்துக்கு உண்டான தன்மையுடன் இருக்கும். நமக்கும், நாம் எதிர்பார்க்கும் ரஜினி போதை கிட்டும்.

எந்திரனுக்கு கொடுக்கப்பட்ட பில்ட்-அப்புகள், ட்ரெயிலர், ரஹ்மானின் பாட்டு, இதையெல்லாம் பார்க்கும்போதே, இது ரஜினி படமாக இருக்காது என்று புரிந்தது.

படமும், அப்படியே அமைந்து போனது.

ஒரு விநாடி ரஜினியை மறந்துட்டு, எந்திரன் படத்தை மட்டும் பாத்தீங்கன்னா, படம் மொத்த குடும்பத்துக்கான ஒரு நல்ல sci-fi பொழுதுபோக்கு சித்திரம்.
பிரமாண்டமான கிராஃபிக்ஸ். கடைசி 20 நிமிடங்கள் அதகளம்.

ஆனா, "இந்தியாவிலேயே இதுவரை யாரும் செய்திராத" போன்ற பில்ட் அப்பெல்லாம் ஒத்துக்க முடியாதது. ஏன்னா, படம் முடிஞ்சு பெயர் போட ஆரம்பிச்சாங்க. அதுல இந்தியப் பெயர்கள் வருவதை விரல் விட்டு எண்ணிடலாம் போலருக்கு. 165கோடி செலவு செஞ்சிருக்காங்களாம். அது எல்லாம் ஏதோ ஒரு ஹாலிவுட் கிராஃபிக்ஸ் கொம்பேனிக்குத்தான் மொய் எழுதியிருக்காங்க போலருக்கு.

ஷங்கர் & teamன் கற்பனைத்திறனுக்கு ஒரு சபாஷ் சொல்லலாம். ரோபோக்களை வைத்து மிரட்டி இருக்கிறார்கள். குறிப்பாக, உள்ளூர் ரவுடிகள் சுற்றி நிற்கும்போது அவர்களின் கத்தி கபடா எல்லாம் ரோபோ ரஜினியின் மேல் ஒட்டி, அவர் ஒரு மாரியம்மன் லுக்குக்கு மாறுவார். பிரமாதமான சீன். ரோபோக்கள் பாம்பாக உருவெடுத்து கபளீகரம் செய்ததும், உருண்டையாக மாறி உலுக்குவதும் கலக்கல். ரோபோ நடை பயில்வதும், டான்ஸ், சண்டை எல்லாம் பண்ணிக் காட்டும் காட்சியும், ஒரு பெருமிதத்தை தந்தது. 'சாதிச்சுட்டாங்கய்யா'ன்னு ஒரு ஃபீல் வந்தது. ஆனா, அதுவும், 'புஸ்ஸாயிடுச்சு' மேலே சொன்ன காரணத்தினால்.

ஆனால், ஷங்கரின் சில கற்பனை சலிப்பைத் தந்தது, 'காதல் ரத்து' செய்யும் ரஜினியையும் ஐஸ்வர்யாவையும் பாத்து. ஸ்ஸ்ஸ். அல்பமா இருந்தது. அதுவும், படத்தின் ஆரம்பத்திலேயே இந்த சீன் வந்ததும், ஐயையோ குடுத்த $20 முதலாகாம போயிடுமோன்னு ஒரு நிமிஷம் பயந்துட்டேன். ஆனா, அப்பாலிக்கா, இந்த மாத்ரி அல்ப்பத்தனங்கள் படத்தில் இல்லாம பாத்துக்கிட்டாரு.
நடூல ஒரு கொசு கிராஃபிக்ஸும் கொஞ்சம் இம்சை. ஆனால், அதன் மூலம் ஏதோ 'மெசேஜ்' சொல்ல ஆரம்பிச்சாரு, ஆனா, அதுவும் இம்ப்ரெஸ்ஸிவ்வா இல்லை.

இரண்டு கெட்டப்பில் ரஜினி. ரோபோட்டிக் ப்ரொஃபஸர் ஒருத்தரு. வயசு நல்லாவே தெரிய ஆரம்பிச்சிடுது இந்த கெட்டப்பில். மெச்சும்படியாக ஒன்னியும் சொல்வதற்கில்லை.

ரோபோ ரஜினி அமக்களப்படுத்தியிருக்காரு. ஆனா, இது அவருதானா? டூப்புக்கு மாஸ்க் போட்டு எடுத்திருக்காங்களான்னு, பல சீன்களில் 'கேள்வி' எழுகிறது. சண்டையில் கண்டிப்பா டூப் போட்டிருப்பாங்க. மத்த காட்சிகளிலும் கூட, ரோபோ ரஜினியின் முகத்தில் வியர்வை எப்பவும் இருக்கர மாதிரி எடுத்திருக்காங்க? ஏன் வேர்த்துக்கிட்டே இருக்குது ரோபோவுக்கு? ரோபோவுக்கு வேற்க்குமா ஷங்கர் ஜி?

வில்லனாக மாறும் ரோபோ ரஜினி மட்டுமே கண்ணில் நிற்கிறார். பழைய வில்லன் ரஜினியின் குதூகலம் இருந்தது அந்த காட்சிகளைப் பார்க்கும்போது. நல்லா பண்ணியிருக்காரு.

ஐஷ்வர்யா வயசு தெரிஞ்சாலும் அழகா இருக்காங்க. ஆனா, ரொம்ப 'gap' விட்டுத்தான் ஹீரோவோட நடிச்சிருக்காங்க. பாடல்களில் ஆட்டமெல்லாம் ரொம்பவே அழகு. ஐஸ் ஐஸ்தான்.
படத்தில் இவர்களைத் தவிர, சந்தானம், கருணாஸ், டானி டென்ஸோங்கப்பா மட்டுமே. ரஜினி படத்தில் வரும் பெரிய பட்டாளம் இதில் மிஸ்ஸிங்க். இவங்க நாலு பேரை வச்சே படத்தை முடிச்சிடராங்க. ஆனா, ரோபோக்கள் நிறைந்திருப்பதால், அது பெரிய மைனஸ்ஸா தெரியலை.

பாடல்களும், பின்னணி இசையும் நல்லாவே அமைஞ்சிருக்கு.
ரெசூல் பூக்குட்டி, (பழசிராஜா போல் இதிலும்) டங்குவாரு கிழியர அளவுக்கு வால்யூம் கூட்டிவிட்டுட்டாரு, கடைசி 20 நிமிட டிஷூம் டிஷூம் காட்சிகளில்.

செட்டும், கிராஃபிக்ஸும், உடை அலங்காரமும், ரிச்சாக இருந்தது.

கண்டிப்பாய் ஒரு தபா பார்க்க வேண்டிய படம்தான்.
premium $s குடுத்து பாக்கணுமான்னு கேட்டீங்கன்னா, பிரீமியம் கொடுத்து முதல் சில நாட்களில் பார்த்தால், ரசிகர் பட்டாளமுடன் உற்சாகமாய் காணும் ஃபீலிங்க் கிட்டும். அது அவசியம் இல்லன்னா, ரெண்டு மூணு வாரம் வெயிட்டீஸ்.

ஆனா, இது ஒரு 'மைல்'கல்னு, இன்னும் பலரும், இந்த மைல் கல்லை கடக்க நினைத்தால், நமக்கு அது பெரிய துரதிர்ஷ்டம். sci-fi படங்கள் எல்லாம் இங்கிலிபீஷ்ல வருஷத்துக்கு பத்து வருது. தமிழில், இம்மாம் பெரிய பட்ஜெட் போட்டு படங்கள் எடுக்க முடியும்னா, வேற நல்ல சப்ஜெக்ட்டா, காலத்துக்கும் மனசுல நிக்கர மாதிரி ஏதாவது யோசிச்சு எடுத்தா பெட்டர். இல்ல, இப்படித்தான் எடுக்கணும்னா, டெக்னாலிஜியை உள்ளூரில் உருவாக்கி, அதை உபயோகித்து எடுக்க முயலலாம். outsourcing வேண்டாம்.

படத்தை பார்க்கும் அனுபவம், படத்தை விட அருமையாய் இருந்தது. தியேட்டரில் 'தலைவா' குரல்களும், ஆட்டமும் , பாட்டமும், அட்டகாசம்.

எந்திரன் - very successfully implemented outsourced project.

எங்க ஊர் தியேட்டரில் நடந்த எந்திரன் திருவிழா: (டான்ஸு, கவுஜைன்னு அமக்களப்படுத்தியிருக்காங்க)

Tuesday, September 28, 2010

ஹிந்தி நஹீ மாலூம் ஹேய்...

பள்ளிக் காலங்களில், ஆங்கில வழிக் கல்வி கற்பித்த மெட்ரிக்குலேஷன் பள்ளியில் தான் அடியேனின் அறிவு தாகத்தை த்ணித்துக் கொள்ளும் பெரும்பணி நடந்தது.

ஐந்தாம் வகுப்பு வரை ஒரு 'சாதா' பள்ளியில் பயின்று வந்தேன். சுத்தி இருக்கும் பத்து என்ற பத்மநாபன், அண்ட்டு என்ற அனந்தசயனன், டில்லி என்ற டில்லிபாபு, குட்டி என்ற (அவன் நெஜப்பேரே மறந்து போச்சு) நண்பர் படையுடன், டயர் ஓட்டி, கில்லி கோலி ஆடி டரியல் பண்ணிய காலம் அது. மழைக்காலங்களில், தூண்டிலில் மண்புழு சொருகி, ஏரியில் வீசி கெண்டையும், குறவையும், கெலுத்தியும் பிடித்த காலம் அது.
எல்லாத்தையும் பொறுத்துக் கொண்ட நைனா, மீன் பிடிக்கும் படலம் ஆரம்பித்ததும், அப்துல் கலாம் ஆகவேண்டிய அருமைப் புத்திரன், இந்த அஜாடி கும்பலுடன் சேந்து வீணாப் போயிடுவானோன்னு பயந்துட்டாரு.
(அஜாடி கும்பலை அஜாடி வேலைக்கு இஸ்துக்கினு போறதே நாந்தான்னு அவருக்கு அப்பத் தெரியாத காலம் அது.)

நான் உருப்படணும்னா, மெட்ரிகுலேஷன் சேந்து மெத்தப் படிக்கும் மாணாக்கர்களுடன் சேந்தாதான் முடியும்னு முடிவு பண்ணி, 'நல்ல' ஸ்கூல்ல சேத்துவிட்டாரு.

அங்க படிச்சு, பெரிய லெவல்ல அறிவை வளத்துக்கிட்டு உலகமே மெச்சும்படி உயர்ந்ததெல்லாம் ஹிஸ்ட்டரி. இங்க வேணாம் அந்த டீட்டெயிலெல்லாம்.

ஆறாம் வகுப்பு முதல் நாளன்று, வகுப்பு ஆசிரியை வந்து, "children, you have the option to choose your second language. you can choose tamil or hindi. how many of you know hindi?"ன்னு கேட்டாங்க. என் பக்கத்து சீட்டு விஜய் ஆனந்த் (பெயர் மாற்றவில்லை. மச்சி, உன் பேரை நாரடிக்கறேன்னு அன்னிக்கு சொன்னதை இன்னிக்கு நிறைவேத்தறேன்) அதைக் கேட்டதும். "I No miss"னு கையத் தூக்கிட்டான்.
பாவம் பய, அவனும் நம்மள மாதிரி 'சாதா' ஸ்கூல்ல படிச்சு மீனெல்லாம் புடிச்சுட்டு, அவங்க அப்பா புண்ணியத்தில், 'நல்ல' ஸ்கூலுக்கு மாறிய கேட்டகிரி தான்.

இந்தி தெரியாதுங்கரத, 'I no miss, I no miss'னு கூப்பாடு போட்டதில் இருக்கும் சோகம் புரியாமல், ஆசிரியையும், 'I know'ன்னு கைதூக்கிய இதர ஸேட்டு பிள்ளைகளுடன், விஜய் ஆனந்தையும், "come children"ன்னு கடா வெட்ட கூட்டிக்கிட்டு போற மாதிரி, இந்தி வகுப்புக்கு கூட்டிக்கிட்டு போயி விட்டாங்க.
அதுவரை, Doordarshanல் 1:30 மணி செய்தியில் மட்டுமே இந்தி பரவலாய் பார்த்த விஜய் ஆனந்தும், முட்டி மோதி ஒரு வழியா இந்தி படிச்சு பாஸ் மார்க் வாங்கிட்டான். ஆனா, அவனுக்கு, இன்னி வரைக்கும், தன்னை மட்டும் ஏன் ஸேட்டு பசங்களோட விட்டுட்டு, மத்தவங்களையெல்லாம் டமில் படிக்க விட்டுட்டாங்கன்னு தெரியாமையே அப்பாவியா வளந்துட்டான்.

நானும் முட்டி மோதி, டமில் படிச்சு, திருக்குறள் கஷ்டப்பட்டு மக் அடிச்சு, குறுந்தொகை பெருந்தொகை, அகநானூறு, புறநானூறெல்லாம் பிட் அடிச்சு, டமிலை கரைச்சு குடிச்சு கரையேறிட்டேன்.
எனக்குத் தெரிஞ்ச இந்தியெல்லாம், சூப்பர் ஹிட் முக்காப்லா பாத்து வந்ததுதான். விஜய் ஆனந்த், "ஏக் தோ தீன்"னு கத்தி மனப்பாடம் செய்யும்போதும் அரசல் புரசலாய் என் காதில் விழும்.
அதைத் தவிர, கேய்ஸி ஹேய், அச்சா ஹேய், கியா ஹுவா, நஹி, பஹுத், நாம் கியாஹே, இந்த மாதிரி தோடா தோடாதான் தெரியும்.

அந்த தோடா தோடா வச்சுக்கிட்டே, பம்பாயில் ஒரு மாசமும், டில்லியில் ஒரு மாசமும், சமாளிச்சு மூச்சுத் திணறியதெல்லாம் நடந்தது.

அப்பேர்பட்ட எனக்கு, அமெரிக்கா வந்ததும், இந்தித் தொல்லை அதிகமாகியது. அப்பெல்லாம், பொட்டிய தூக்கிக்கிட்டு வாராவாரம் ஊரு விட்டு ஊரு போகும் வேலை. அலுவலகங்களும், பணத்தை தண்ணியா வாரி இறைச்ச காலம் (2001ன் ஆரம்பம்). NewYorkலும் மற்ற அநேகம் நகரங்களிலும், டாக்ஸி ஓட்டரது முக்கால்வாசி சர்தார் சிங்க்கும், பாக்கிஸ்தான் காரனுமாத்தான் இருப்பான். ஏர்போர்ட்டிலிருந்து வெளியில் வந்ததும், வரிசையில் நிற்கும் taxiல் ஏறி அமர்ந்ததும், "क्या बाथा हे साब. केसी हो? सामान निक्कालो?"னு சர சர சரன்னு இந்தியில் எதையாவது வாய்ல வந்ததை பேச ஆரம்பிச்சுடுவான். நான் அரை தூக்கத்துல, "ஹம் ஹிந்தி நஹீ மாலூம்"னு சொன்னதும், கொசுவைப் பாக்கர மாதிரி பாத்துக்கிட்டு, "தும் மத்ராஸி?"ன்னு கேட்டுட்டு ஒரு கேவல லுக் விட்டுட்டு, கப் சிப்னு ஆயிடுவான்.
99.99% taxi பிடிக்கும்போது, இந்த கொசுப்படலம் தொடரும்.

இந்தி தெரியலன்னா தெய்வகுத்தம் செஞ்ச மாதிரி பாக்கராங்க. எனக்கே, இப்பெல்லாம், அடடா இந்தி படிச்சிருக்கலாமேன்னு தோணும், பழைய இந்தி பாடல்களை கேட்கும்போதெல்லாம். என்னமா வரிகள் எழுதியிருக்கானுவ? அற்புதம்.

taxi காரனாவது, 'ஹிந்தி நஹி மாலூமை' மதிச்சு, பேச்சைக் கொறைச்சிடறான். ஆனா, இந்த அலுவலகத்தில் இருக்கும் சில வடநாட்டு சகாக்களின் கொடுமைதான் தாங்க முடியல்ல.
எப்பப் பாத்தாலும், இந்தியில், "सरियाना कड़ी इल्ला इन्ध मीटिंग? इन्तहा कम्पनी उरुप्पदाधू"ன்னு ஆரம்பிச்சிடுவானுவ. நானும், "ஹிஹி. i can understand a bit of hindi, but not very well"னு ஆயிரம் தபா சொல்லிட்டேன். வுடாம, இந்தியிலேயே வாட்டி எடுக்கறாங்க.
இப்பெல்லாம் "இந்தி நஹீ மாலூம்" சொல்றதை விட்டுட்டேன். அவங்க பேசும் தொனியை வச்சுக்கிட்டு, சீரியஸ் மேட்டர் சொல்றாங்களா, சிரிப்பு மேட்டரான்னு கிரஹிச்சு, அதுக்கேத்த மாதிரி, "Ya Ya"ன்னு தலைய ஆட்டி வெக்கறேன்.

இந்த இந்திக்காரனுவ தொல்லை ஒருபக்கம் இப்படி இருக்கும்போது, புதுசா, ஒரு தெலுங்குகாரன் வந்திருக்கான். அவனும் எப்பப்பாத்தாலும், காதோரம் வந்து, "ఎందోరు మగాను బావులు అన్తేరిక్కి వంథానము"ன்னு நச்சறான்.

நேக்கு, ஹிந்தி நஹி மாலூம் & தெலுகு தெல்லேதுராஆஆஆஆஆ கொலுட்டி டொங்கணக் கொடுக்கா!

Tuesday, September 21, 2010

பீதியை கிளப்பும் இந்த வெள்ளிக் கிழமை...


இந்த வெள்ளிக் கிழமைய (September 24) நெனச்சாலே வயத்துல லேசா புளியக் கரைக்கர மாதிரி இருக்கே.

எங்க பாத்தாலும், அயோத்தி தீர்ப்பை பத்தியே பீதியா பேசிக்கிட்டு அலையரானுவ.

எல்லா பெருந்தகைகளும் சேந்து, அடுத்த கட்ட, கொடூரத்தை துகிலுரிக்க திட்டம் போடர மாதிரி தெரியுது.

திரைக்கு வர இருந்த பல படங்கள் ஸைலண்ட்டா ஒரு வாரம் தள்ளி வச்சிருக்காங்க, லாபத்தில் சொட்டை விழுந்துருங்கரதுக்காக.

என்ன என்ன அட்டூழியங்கள் நடக்கப் போவுதோ.

Lucknowல் போலீசாரும், மிலிட்டரியும் குவிக்கப்படுதாம்.

எல்லாரும் லீவு போட்டுட்டு, "Working" from home செய்வது சாலச் சிறந்தது.

அதை விடச் சிறந்தது, எக்கேடுகெட்ட தீர்ப்பு வழங்கப்பட்டாலும், இரு தரப்பும், ஒன்னியுமே நடக்காத மாதிரி, நார்மல் வாழ்க்கையை நடத்தி, அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் குள்ள நரிகளின் முகத்தில் கரியை பூசுதல்.

எல்லாம் நன்மைக்கே!

Thursday, September 16, 2010

சித்தார்த் இம்முறை

"Well, young people today have the potential for bringing about change”.
“You see they begin in highly paid jobs and lead highly stressed lives. When quite young most of them brown out and look for something less stressful to do. They put away enough money and gain freedom from ‘jobbing’. I believe they will make the corrections for India.”
says, GoodNewsIndia Sridhar

மேட்டரை இங்க போயி படிச்சுக்கோங்க.

ஹாப்பி வெள்ளி!

Tuesday, September 14, 2010

கற்பகம்,ஸ்ரீராம் - reminder

இங்க போய் பதிவைப் படிங்க. கேள்விகளைக் கேளுங்க.

நன்றீஸ்.


அனானி ஆப்ஷன் தொறந்து விட்டிருக்கேன். அதனால, மாடரேஷனும்.

Monday, September 13, 2010

ஏமாற்றிய ரஹ்மான்

ரஹ்மான் வராரு ரஹ்மான் வராருன்னு, தண்டோரா போட ஆரம்பிச்சு கிட்டத்தட்ட ஆறு மாசமாச்சு. அதுவும், ஆஸ்கார் வாங்கினப்பரம் நடத்தும், 'world' tour இது.
நிகழ்ச்சி, அருகாமையில் இருக்கும் Oakland Oracle Arenaவில்னு சொல்லியிருந்தாங்க.
டிக்கெட் விலை $50லிருந்து, $300 வரை இருந்தது.

ஏற்கனவே $50 சொச்சத்துக்கு Eaglesஐ பாக்கப் போய், Eagles எல்லாம் கொசுமாதிரி தெரிந்த சம்பவம் நினைவுக்கு வந்ததால், இம்முறை பெரிய தொகை கொடுத்து, ரஹ்மானை கிட்டப் பாக்கணும்னு முடிவு பண்ணியிருந்தேன். $125 கொடுத்து, ஸ்டேடியத்தின் நல்ல பகுதியில், நேரெதிரே அமர்ந்து பார்க்கும்படி ஒரு ஆசனமும் புக் பண்ணியாச்சு.

இதோ வராரு, அதோ வராருன்னு, ஜூன் மாதமும் வந்தது. சிகாகோவில் நடந்த ஒத்திகையின் போது, ஏதோ லைட்டெல்லாம் கீழ விழுந்து ஒடஞ்சிடுச்சுன்னு, மத்த நகரங்களின் நிகழ்ச்சியெல்லாம் தள்ளி வச்சு, எங்க ஊரு நிகழ்ச்சி ஜூனிலிருந்து, செப்டம்பருக்கு தள்ளப்பட்டது. வாங்கியதும் வாங்கியாச்சு, பொறுமையா இருந்து, நிகழ்ச்சிய பாத்துத் தொலச்சிடலாம்னு காக்க ஆரம்பிச்சேன்.

சென்ற ஞாயிறன்று, அந்த சுபயோக சுபதினமும் வந்தது. நிகழ்ச்சிக்கு பயங்கர பில்ட்-அப்பும் இருந்தது, 'Jai Ho' வித்தகர், சர்க்கஸ் வகையராக்கள், புதுவிதமான அரங்க அமைப்பு, அது இதுன்னு. ஆனா, நிகழ்ச்சியன்றும் கூட, ரேடியோவில், டிக்கெட் வாங்கிக்கங்க வாங்கிக்கங்கன்னு கூவி கூவி வித்துக்கிட்டு இருந்தாங்க.
'ரஹ்மான்' ஈர்ப்புத் திறன் அம்புட்டுதான் போலருக்குன்னு நெனைச்சேன். இந்தி, தமிழ், தெலுகு, மூன்று மொழியிலும் பாடல்கள் இருக்குமே, எல்லா கும்பலையும் சேத்தாகூட, ஸ்டேடியத்தை ரொப்பியிருக்கலாமேன்னு தோணிச்சு. ஆனா, ஆளுங்க, விலை அதிகம்னு வராம இருந்திருப்பாங்கன்னு நெனைச்சேன்.

ஏழு மணிக்கு நிகழ்ச்சின்னு போட்டிருந்தது. நான், கும்பலை பாக்கலாம், ஜாலியா இருக்கும் ஆட்டமும் பாட்டமுமாய்னு நெனச்சுக்கிட்டு, ஆறு மணிக்கே போயிட்டேன்.
முதல் பல்பாக, வாசலிலே இருந்த ஜெக்கூரிட்டி, ஹலோ ப்ரதர், இம்மாம் பெரிய பை எல்லாம் உள்ள கொண்டு போவக் கூடாது, கேமரா ஸ்ட்ரிக்ட்லீ நோ நோன்னு சொல்லி, பையை வெளியிலியே வைக்கச் சொல்லிட்டாரு.
பேண்ட்டு போடாம கூட அவசரத்துல வெளீல போயிடுவேன், ஆனா, கேமரா இல்லாம எந்த எடத்துக்கும் போறதில்லை நான். இப்படி, வலுக்கட்டாயமா கேமெராவை புடுங்கி வச்சதும், கண் பார்வை போன மாதிரி, மங்கலாயிட்டேன். மெதுவா போயி $125 இருக்கையில் அமர்ந்தேன்.

நம்மூர் நிகழ்ச்சி, சொன்ன நேரத்துக்கு என்னிக்கு நடந்திருக்கு? அதை முன்னமே உணர்ந்த மக்கள்ஸ், யாரும் ஏழு மணி வரை வரவே இல்லை. ஆறு மணிக்கு 10% ஆளுங்க வந்திருப்போம். ஏழு மணிக்கு, 30% அரங்கம் ரொம்பியிருந்தது. இதோ ஆரம்பிப்பாங்க, அதோ ஆரம்பிப்பாங்கன்னு பாத்தா, பாங்க்ரா கும்பல் ஒண்ணு ஸ்டேஜில் ரஹ்மான் பாட்டை சிடியில் போட்டுவிட்டு ஆடிக்கிட்டிருந்தது. ஏழே முக்காலுக்கு, 60% அரங்க ரொம்பியதும், மெதுவா பாட்டை ஆரம்பிச்சாங்க.

Slumdogலிருந்து ஒரு பாட்டு, Swades பாட்டு, அது இதுன்னு நேரம் நகர்ந்தது.
ஆனா, ஒரு 'பன்ச்' மிஸ்ஸிங் எல்லாத்திலையும்.
இம்புட்டு காசு கொடுத்து ஒரு மைக்கேல் ஜாக்ஸன் ஷோவோ, ஷக்கீரா ஷோவோ போயிருந்தா, முதல் ரெண்டு மூணு பாட்டுலையே, மெய் சிலிர்த்து, 'ஐக்கியம்' ஆகியிருப்போம். ஆனா, இங்க, வாத்தியக்காரர்கள் எல்லாம் 'outsourced' வகையராக்கள்.
மிகவும் எதிர்பார்த்த ட்ரம்ஸ் சிவமணி மிஸ்ஸிங். பெரிய ட்ரம்ஸ் சவுண்ட் வந்தது, முக்கால் வாசி, 'சிடியிலிருந்து' ட்ராக் ஓட விட்ட மாதிரி.
மத்த வாத்தியங்களும் பெருசா இல்லை. நம்ம ஊரு கல்யாணத்துல வாசிக்கரவங்களே, இதை விட, நிறைய வாத்தியங்களை கொண்டு வருவாங்க.
'சிடி'யில் DJ போட்டு மிக்ஸ் பண்ணி கேக்கவா, இம்புட்டு கொடுத்து எல்லாரும் நிகழ்ச்சிக்கு வரோம்?

பாடகர்களும் மிஸ்ஸிங். ஹரிஹரன், விஜய் ப்ரகாஷ், ப்ளேசி, பென்னி தயால் இருந்தாங்க.
அவங்களும் நிறைய பாடலை. முக்கால் வாசி, ரஹ்மானே பாடினார்.
சில பாடல்கள், 'சிடியில்' போட்டு வாயசைக்கவும் செய்தார். (Jai ho was certainly a lip sync). ஹரிஹரன், ரெண்டோ மூணோ பாட்டு பாடினார் அம்புடுதேன்.

எந்திரன் பாட்டு ரெண்டு பாடினாங்க. நல்லா இருந்தது.

எல்லா பாடலையும், முழுசா பாடித் தொலைக்காம, மணிரத்னம் எடிட் செய்ர மாதிரி, வெட்டி வெட்டி பாடினாங்க. விண்ணைத் தாண்டி வருவாயா, தெலுங்கு பாட்டுக்கு பெரிய ஆரவாரம், அதை அடுத்த ஆரவாரம், எந்திரன் பாட்டுக்கு. இந்திப் பாட்டுக்கு பெரிய வரவேற்பெல்லாம் இல்லை. இதிலிருந்தே, வந்தவர்களின் கூட்டம் மனவாடும், டமிலர்களும்னு புரிஞ்சுக்கிட்டு, அதுக்கேத்த மாதிரி பாடல்களை பாடியிருந்திருக்கலாம். இதுவரை கேள்வியே படாத சில இந்திப் பாடல்கள் பாடினாரு. அப்படி இப்படின்னு ரெண்டு மணி நேரம் ஆனதும், நிகழ்ச்சியை வணக்கம் சொல்லி முடிச்சுட்டாரு.

சாதாரணமா, இந்த மாதிரி நிகழ்ச்சிக்கெல்லாம் போனா, குறைந்த்து மூன்றிலிருந்து நாலு மணி நேரம் வரைக்கும் நடக்கும். இடையில் ஒரு இடைவேளையெல்லாம் கூட விடுவாங்க. நிகழ்ச்சியெல்லாம் முடிச்சுட்டு வெளீல வரும்போது, லேசா ஒரு கிறக்கத்தோட வருவோம். இங்க என்னடான்னா, உள்ள போனதும் தெரீல, வெளீல வந்ததும் தெரீல. அப்படி ஒரு 'சப்'னு முடிஞ்சிருச்சு.

நேரடி நிகழ்ச்சிக்கு ரசிகன் எதுக்கு வரான்? தன் அபிமான ஸ்டாரை கிட்டத்தில் பார்க்கவும், 'சிடி'யில் பாட்டுக் கேட்டால் கிட்டாத ஒரு பரிமாணத்தை அனுபவிக்கவும். அது தெரியாதா இந்த ஆளுகளுக்கு? நிகழ்ச்சியை நடத்திச் செல்ல ஒரு Anchor இல்லை. ஒரு பாட்டு முடிஞ்சதும், அடுத்த பாட்டு ஆரம்பிக்குது, ஒளியும் ஒலியும் கணக்கா.
யாராவது, பேசி, எதையாவது பகிரிந்துக்கிட்டாதானே, ஒரு நேரடி நிகழ்ச்சி, மனசுல பதியும்?

நிகழ்ச்சி houseful ஆகாததால், cost cuttingஆ? இல்லை, தன்னை michael jackson போல் வளர்த்துக் கொள்ளும் நினைப்பில், இந்த மாதிரி ஒரு 'சுய' முயற்சியா? ஒன்னியும் புரியல்ல. குறைந்த பட்சம் ஒரு ஷ்ரெயா கோஷல், ட்ரம்ஸ் சிவமணி, கார்த்திக், சித்ரா, உதித் நாராயண்/சுக்வீந்தர் இல்லாம இனி கிளம்பி வராதிங்கப்பூ.

பிடிச்ச விஷயங்கள்னு பாத்தா:
அரங்கத்திற்குள் அடிக்கப்பட்ட ப்ரொஜெக்ஷன் லைட்டு. கலர் கலரா அழகா இருந்தது.
ஒரு பாட்டுக்கு லதா மங்கேஷ்கரின் வீடியோவை பெருசா ப்ரொஜெக்ட் பண்ணி அதுகூட டூயட் பாடினாரு.
ஏதோ ஒரு அல்லா பாட்டு, ஹார்மோனியத்துடன் பாடினாரு. ரம்யமா இருந்தது.
இரும்பிலே ஒரு இதயம் துடித்ததோ எந்திரன் பாட்டு, கலக்கலா இருந்தது, மக்களின் ஆரவாரம்.
ஸ்வர்ணலதாவுக்காக ஒரு குட்டி பியானோ பிட்டு வாசித்தது.

பிடிக்காத விஷயங்கள்:
Vintage classics பாடறேன்னு, துளிகூட ஒத்திகை பாக்காமல், எத்தையோ ஆரம்பிச்சு, 'காதல் அணுக்கள்' அது இதுன்னு பாடி திராபையாக்கியது.
இசை நிகழ்ச்சியில் சர்க்கஸ் வகையராக்கள் இன்னாத்துக்கு?
வாத்தியக்காரர்களின் வரட்சி.
lip sync/ட்ராக் போட்டு ரசிகனை ஏமாற்றும் ஜாலம்.
இரண்டு மணி நேரம் மட்டுமே நடந்த நிகழ்ச்சியின் அளவு.
கொஞ்சம் கூட ரசிகனோடு சம்பாஷனைகள் செய்யாமல், பாட்டை மட்டுமே பாடும், 'சப்பெ'ன்ற நிகழ்ச்சி வடிவம்.
அடுக்கிக்கிட்டே போவலாம்.
'இந்திய' வாசம் கொஞ்சம் கூடம் இல்லாமல், ரொம்பவே Western மயமாக்கி இயங்கும் ரஹ்மானின் ஸ்டைலு.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ். ($125 x 2 ) + $40 + $15 + 5 மணி நேரம் ஸ்வாஹா :|

ஜூலை 2007ல், SPB, யேசுதாஸ், சித்ரா $50க்கு சொர்கம் காட்டியது இன்றும் நினைவில் நிக்குது.

ரஹ்மான், புல்லரிக்க வைக்கணும் ஐயா. டீம் சேத்து நல்லா யோசிச்சு அடுத்த வாட்டியாவது கலக்குங்க. 'இசையில்' இந்தியம் வேணும் ஐயா. 'வந்தே மாதரம்' பாடினா மட்டும் போதாது. ப்ளீஸ், நம்ம நேட்டிவிட்டி பாடலிலும், நிகழ்ச்சியிலும் விட்டுத் தொலையாதீர்கள்.

ஜெய்ஹோ!

ஆறு மணிக்கு:


ஏழு மணிக்கு:


எட்டு மணிக்கு: