போன மாசம், சில பள்ளி மாணவர்கள் Boys Scouts பெயரைச் சொல்லி என்னிடம் ஏதோ வசூலுக்கு, பிஸ்கோத்து வாங்கிக்கன்னு சொல்லி $20 ஆட்டையப் போட்டு, பிஸ்கோத்து குடுக்காம தலைமறைவாகிட்டாங்கன்னு ஒரு பதிவைப் போட்டு புலம்பியிருந்தது நினைவில் இருக்கலாம்.
இந்தப் பதிவால், உங்களுக்குத் தெரிவிக்க விரும்பவதென்னவென்றால், அந்த பிஸ்கோத்து பாக்கிட்டு, நேற்று மதியம், அதே வாண்டுகளால், என் வீட்டின் கதவைத் தட்டி டெலிவரி செய்யப்பட்டது.
"யோவ், எம்புட்டு தடவ வந்து கதவ தட்ரது? வூட்ல இருக்கரதே இல்லியா நீ? பிஸாத்து $20க்காக நாங்க மாங்கு மாங்குன்னு ஸ்கூல் விட்டதும், நாலஞ்சு தபா வந்து போயிட்டோம். புடி, நீயும் உன் பிஸ்கோத்தும். இனி எவனாவது வசூலுக்கு வந்தா, ஒழுங்கு மரியாதையா ஒண்ணும் இல்லன்னு சொல்லிட்டு அனுப்பிடு. இவரு $20 குடுப்பாராம், நாங்க இவரு வாங்கன பிஸ்கோத்தை இவரு கிட்ட கொடுக்க, $50 டாலர் செலவு பண்ணி வண்டிக்கு செலவு பண்ணி அலையோ அலைன்னு அலைவோமாம். வந்துட்டானுங்க சாவுகிராக்கிங்க.." இப்படி வெளிப்படையா சொல்லலன்னாலும், அந்த குட்டிப் பய, கண்ணாலேயே அதை சொல்லிக் காட்டிட்டான். அவ்வ்வ்வ்வ்!
உலகமெங்கும் இருக்கும் Boys Scouts மக்கள் அனைவரும் எம்மை மன்னிக்க. அவசரப்பட்டு புகார் பதிவு எழுதிட்டேன்.
டெலிவரி செய்யப்பட்ட பிஸ்கோத்து (சாக்லேட்டு பாப்கார்ன்) ரொம்பவே அருமை.

இந்த சிச்சுவேஷனுக்கு எந்த திருக்குறள் பொருந்தும்?