recent posts...

Tuesday, August 31, 2010

டாக்டர் பெருச்சாளிகள்...

உமாசங்கர் IAS பற்றிய புலம்பல் பதிவில், மக்கள்ஸாகிய நம்மை மூன்று ரகமாய் பிரித்திருந்தேன்:

அ. லஞ்சம் வாங்குபவர்கள்.
ஆ. லஞ்சம் வாங்க வாய்ப்பில்லாததால் லஞ்சம் வாங்காதவர்கள்.
இ. லஞ்சம் வாங்க வாய்ப்பிருந்தும் லஞ்சம் வாங்காதவர்கள்.

இந்தப் பிரிவை நீங்களும் ஒத்துப்பீங்கன்னே நெனைக்கறேன். முதல் பிரிவில் இருக்கும் லஞ்ச/ஊழல் பெருச்சாளிகள், நம் அனைவருக்கும் ரொம்பவே பரிச்சயமானவர்கள். RTO ஆஃபீஸிலிருந்து, ரெஜிஸ்ட்ரார் அலுவலகம், போலீஸ் நிலையம், etc.. இங்கையெல்லாம் லஞ்சமா?/சம்பளமா? ங்கர வித்யாசமே மறைஞ்சு போகும் அளவுக்கு லஞ்சம் புரையோடிப் போயிடுச்சு.

தனியார் நிறுவனங்களிலும் லஞ்ச/ஊழல் கன்னாபின்னான்னு இருக்கு, கமிஷன் என்கிற பெயரில். சாமான்யனை டைரக்டா தாக்காது, ஆனா சுத்தி வளச்சு பாத்தால், லஞ்சம்/ஊழல் எந்த இடத்தில், எந்த உருவத்தில் வந்தாலும், கடைசியில சாமான்யன் எல்லாருக்கும் நாமம் தான் என்பதில் ஐயமே வேண்டாம்.

அரசாங்க/தனியார் பெருச்சாளிகள் செய்யும் லஞ்ச/ஊழல்கள் எல்லாம் எரிச்சலைத் தரக்கூடியவை.

சமீபத்தில் டாக்டர்கள் சிலர் செய்யும் கேப்மாரித்தனங்கள், சொந்த வட்டத்தில் இருந்து, காதில் விழுந்தது.

எவ்ளோ 'நார்மலா' இருந்தாலும், சிசேரியன் செஞ்சே ஆகணும்னு, கடைசி நிமிஷ டென்ஷன் ஏத்தி, துட்டு தேத்தும் gynecologists என்ற பெயரில் வலம் வரும் அற்ப பெருச்சாளி கழிசடை டாக்டர்கள், நம்மூரில் பலப் பல.

'கமிஷன்' துட்டுக்காக, அந்த மாத்திரை, இந்த மாத்திரை, இந்த டெஸ்ட்டு, அந்த டெஸ்ட்டுன்னு, பெரிய லிஸ்ட்டு கொடுத்து டவுஸரை கழட்டும் கேடி டாக்டர்களுக்கும் பஞ்சமே இல்லை.

அரசாங்க மருத்துவமனையில் வேலை செய்யும் தில்லாலங்கடி டாக்டர்கள், எல்லாருக்கும் ஒரு படிமேல். இவங்க சொந்தமா ஒரு கடையும் போட்டு வச்சிருப்பாங்க. சொந்தக் கடைக்கு வரும் கஸ்ட்டமர்ஸ்/நோயாளிகளை, சில சமயம், அரசாங்க மருத்துவமனைக்கு, வரச் சொல்லுவாங்க. அரசாங்க மருத்துவமனையில் இருக்கும் மருந்து மாத்திரை/இஞ்செக்ஷன் எல்லாம் எடுத்துப் போட்டுட்டு, காசை வாங்கி சொந்த ஜோபீல போட்டுப்பாங்க.
இந்த கேப்மாரித்தனம், 'சாதா' டாக்டர்கள் மட்டுமே செய்யும் வேலையில்லை. மெத்தப் படித்த டாக்டர்களும் இப்படித்தான்.

எனக்குத் தெரிந்த ஒருவருக்கு சமீபத்தில் ஒரு ஆப்பரேஷன் செய்ய வேண்டிய நிர்பந்தம். அங்க இங்க விசாரிச்சு எந்த டாக்டர் நல்லவரு, எந்த ஆஸ்பத்திரி நல்லதுன்னு விசாரிச்சாங்களாம்.
ரொம்பத் தெறமையான டாக்டரு ஒருத்தர் அரசாங்க ஆஸ்பத்திரில இருக்காரு. எல்லா வசதியும் அரசாங்க ஆஸ்பத்திரியலியே இருக்கு, அவருகிட்ட பண்ணிக்கோங்க, அவருக்கு வெறும் 20,000 கொடுத்தா போதும், சூப்பரா செஞ்சுக் கொடுத்துடுவாருன்னு சொன்னாங்களாம்.

படிச்சவங்களும், படிக்காதவங்களும், போன ஜெனரேஷனும், இந்த ஜெனரேஷனும், வருங்கால ஜெனரேஷனும், இப்படி ரூம் போட்டு யோசிச்சு யோசிச்சு ஊழலையும்/லஞ்சத்தையும் விடாம கடை புடிச்சுக்கிட்டே இருந்தா, உமாசங்கர்கள் எல்லாம் கூட 'adjust' செஞ்சுக்க வேண்டிய நாள் ஒரு நாள், நிச்சயமாய் வந்து தொலைக்கும்.

என் பங்குக்கு, இந்த லஞ்ச டாக்டர்கள் சிலரை பற்றி புகார் கொடுக்க முடிவு செய்திருக்கிறேன்.
அட்லீஸ்ட், ஒரு enquiry ஏதாவது செய்ய வச்சு, மண்டை கொடைச்சலாவது கொடுக்க வைக்கலாம்னு எண்ணம்.
ஒரு நிமிஷமாவது, யோசிக்க வைக்கணும் இவங்களையெல்லாம், கை நீட்டுவதற்க்கு முன்.

Wednesday, August 25, 2010

உமாசங்கர் IAS - ஹம் ஹோங்கே காம்யாப்!

லஞ்சம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். சிலருக்கு, அப்படின்னா என்னான்னே தெரியாம இருக்கவும் வாய்ப்பிருக்கு. கேட்பதர்க்கு முன்னரே கொடுத்து பழக்கப்பட்டவர்களா இருப்பாங்க அவங்க.

லஞ்சத்தை பொறுத்தவரை, உலகில் மூன்று வகையான ஆசாமிகள் இருக்கோம்.
அ. லஞ்சம் வாங்குபவர்கள்.
ஆ. லஞ்சம் வாங்க வாய்ப்பில்லாததால் லஞ்சம் வாங்காதவர்கள்.
இ. லஞ்சம் வாங்க வாய்ப்பிருந்தும் லஞ்சம் வாங்காதவர்கள்.

முதல் பிரிவு, எல்லாருக்கும் தெரிந்த கழிசடைகள், சமுதாயத்தின் சாபம், Parasites, etc.. etc.. நம்மெல்லாருக்கும் ரொம்பவே பழக்கப்பட்ட ஜந்துக்கள் இவை. லூஸ்ல விடுவோம் இப்போதைக்கு இவங்களை.

இரண்டாம் பிரிவில்தான், லஞ்சத்துக்கு எதிரா பதிவு போடும், நம்மில் பலரும் இருக்கோம் என்பது என் எண்ணம். நான் லஞ்சம் வாங்குவதில்லை, ஏன்னா, லஞ்சம் வாங்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டதில்லை. அந்த வாய்ப்பிருந்தா நான் எப்படி மாறுவேன்னு எனக்குத் தெரியாது.
லஞ்சம் வெறும் அரசாங்க வேலையில் இருப்பவர்கள் பென்ச்சுக்கு அடியில் வாங்குவதல்ல. தனியார் நிறுவனங்களில் ஒரு purchase order 'அப்ரூவ்' பண்ண வாங்கும் கமிஷன் எல்லாம் கூட லஞ்ச வகைதான்.
இரண்டாம் பிரிவில் இருக்கும் பெருவாரி ஜனங்களுக்கு நமோஷ்கார். இவிகளையும் லூஸ்ல விட்ருவோம் இப்போதைக்கு. நல்லவங்க இவங்க, சான்ஸ் கெடைக்கர வரைக்கும்.

இந்த மூணாவது பிரிவு இருக்கே, இவிகதான், அதிசயப் பிறவிகள். இவங்க மட்டும் மனசு வச்சு, பென்ச்சுக்கு கீழ கைய நீட்டிட்டா, லட்சம் லட்சமா லஞ்சப் பணம் இவர்களால் அள்ளிக் குவிக்க முடியும். ஆனா பாருங்க, இவங்க வளஞ்சு கொடுக்க மாட்டாங்க.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, நாணயம், கொள்கை, நாட்டுப் பற்று, மனிதப் பற்று, இப்படி நல்ல நல்ல விஷயங்களுக்கு கட்டுப்பட்டவர்கள். மிக முக்கியமாய், மானம், ரோஷம் உள்ளவர்கள்.
இந்த வகை மனிதர்கள், நம்ம ஊர்ல, விரலை விட்டு எண்ணிடலாங்கர அளவுக்குத் தான் இருக்காங்க.
லஞ்சம் குடுக்காம நம்மூர்ல இருக்கரது சுலபமாக சாதிக்கக் கூடிய விஷயம். ஆனா, லஞ்சம் வாங்காம, சுத்தி இருக்கும் ஆயிரமாயிரம் முதலைகளை சமாளிக்கக் கூடியது, அசாத்தியமான ஹெர்கூலியன் தவம்!
உமா சங்கர் IAS அப்படிப்பட்ட மூன்றாவது பிரிவை சேர்ந்த மனிதர் மாதிரி தெரியுது.

இவரைப் பற்றி சமீபத்திய செய்திகளில் படிச்சிருப்பீங்க.

மனுஷன், IAS ஆனதும் ஆனாரு, அரசாங்க எந்திரத்தில் இருக்கும், அழுக்கு ஒவ்வொண்ணா எதிர்த்து போராடி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி நிக்கறாரு.

லஞ்சம் வாங்குவது கூச்சமே இல்லாம, சம்பளம் வாங்கர மாதிரி வாங்க ஆரம்பிச்சிருக்காங்க நம்மூர்ல. அந்த கழிசடைகளுக்கு நடூல, இந்த மனுஷன் முட்டி மோதிக்கிட்டு இருக்காரு.
சினிமா வில்லன் கணக்கா, மொத்த அரசும் அரசாங்கமும், இவரை பழி தீர்க்க என்னென்னமோ பண்ணிக்கிட்டு இருக்காங்களாம்.

இரண்டாம் பிரிவாகிய நாம், இந்த மூன்றாம் பிரிவில் இருக்கும் உமாசங்கருக்கு, பெருசா ஒன்னியும் செய்ய முடியாது, நம்ம கையாலாகாத்தனத்தை பதிவாகவோ, ஈ.மடலாகவோ, பதிவதைத் தவிர.
பதிவோம். மேல் விவரங்கள் இங்கே

வாழ்க பாரதம்!

ஹம் ஹோங்கே காம்யாப்! ஏக்கு தின்!
உஹூ ஹூ ஹூம்!
ஓ ஹோ மன் மே ஹே விஷ்வாஸ்!
பூரா ஹே விஷ்வாஸ்!
ஹம் ஹோங்கே காம்யாப்! ஏக்கு தின்!

லஞ்சமில்லா சமுதாயம் கண்டிப்பாய் ஓர் நாள் ஏற்படும்.
எப்பன்னு தெரியல்ல.
ஆனா, கண்டிப்பா நடக்கும்.
முதல் பிரிவில் இருப்பவர்கள் லஞ்சம் கேட்கும்போது, புழுவை பாக்கர மாதிரி அவங்களப் பாக்க ஆரம்பிங்க.
அதுதான் முதல் படி.

Uma Shankar, keep fighting! we support you!

Tuesday, August 17, 2010

பள்ளி கால ஜோக்கு

சமீபத்தில், அருகாமையில் உள்ள நண்பர்கள் சிலர் ஒன்று கூடி பழைய கதை பேசிய போது, பள்ளி காலத்து நினைவுகளை அளவளாவிக் கொண்டிருந்தோம்.
அநேகமாய் எல்லோருக்கும், வாழ்வில் மிகப் பிடித்த காலம், பள்ளி பயின்ற காலமாய் தான் இருக்கும், அதுவும், எட்டாம் வகுப்பிலிருந்து +2 வரை ரொம்பவே பிடித்த காலமாய் இருந்திருக்கும்.
அளவளாவிய கும்பலில் எல்லோருக்கும் அப்படித்தான்.

அதுவும், தமிழ் வாத்தியார்களும், ஆசிரியைகளும், அனைவரின் வாழ்விலும் பசுமையான பல சுவாரஸ்ய நினைவுகளை விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

பல நினைவுகளில், பரீட்சை எழுதியது, பிட் அடித்தது, அடுத்தவனை பார்த்து காப்பி அடித்தது, புக்கை மடியில் வைத்து காப்பி அடிப்பது, ஷூவுக்குள் பிட் வைத்தது, உச்சா ரூமில் புக் வைத்து, இடையில் உச்சா போய் படித்து வருவது என, வகைதொகையாய் காப்பி அடித்திருக்கிறார்கள் எங்கள் கும்பலில் எல்லோரும். நான் கெமிஸ்ட்ரியில் வீக்கு. பெரிய லெவலில் காப்பி ஆத்தியதால்தான் ஒவ்வொரு முறையும் முன்னேறி வந்திருக்கிறேன்.

கணக்கில் ஷார்ப்பு. +2 பரீட்சையில், என் கணக்கு பேப்பரை நண்பனுக்குக் கொடுத்து, மணி அடிக்கும் வரை திரும்ப வராததால், எல்லா பதில்களையும் சரி பார்க்க முடியாமல், சில்லி மிஸ்டேக்கில், 1 மதிப்பெண் இழந்து 100%ஐ தவற விட்டது (normalக்கு பதிலா tangent வரை கொண்டு வந்து, 1/x என்று மாற்றாத சிறு பிழை), கடைசி மூச் வரை மறக்க முடியாத நிகழ்வு. ஹ்ம்!


ஆங்கில வாத்தி, ஒரு வார்த்தையைச் சொல்லி, இதற்கு அர்த்தம் சொல்லுங்கன்னு, ஒவ்வொருத்தரையா எழுப்பி நிக்க வெப்பாரு. ஒரு பயலுக்கும் தெரியாது. மொத்த கிளாஸும் நிக்க, ஒரே ஒரு வடக்கிந்தியப் பொண்ணு மட்டும் எல்லா கேள்விக்கும் டான் டான்னு பதில் சொல்லி, ஸ்டைலா ஒக்காரும்.

இங்க் அடித்து, சைக்கிளில் காத்திறக்கி, அடுத்தவன் டிபின் பாக்ஸை காலி பண்ணி, ஜாலியாய் திரிந்த காலங்கள். அருமை அருமை.

ஹ்ம். இதையெல்லாம் பேசிக்கிட்டு இருக்கரப்போ, நண்பர் ஒருவர், அவரின் வகுப்பு மாணவனைப் பத்தி சொன்னாரு.
பயல், செம ரெகள பார்ட்டியாம். பரீட்சைக்கு, பிட்டு காப்பியெல்லாம் அடிக்க மாட்டானாம்.
படிப்பறிவும் கம்மியாம். ஆனா, என்ன கேள்வியிருந்தாலும், அளந்து கட்டி கதை எழுதுவாராம்.
அதாவது, பாபர் பத்தி எழுதணும்னா, முகலாய அரசர்கள் எல்லார் பேரும் போட்டு, கவாஸ்கர், கபில்தேவ் விளையாடியதையும் சேத்து, பெருசு பெருசா எழுதுவாங்களே அந்த கோஷ்டியாம் இவரு.
ஒரு தபா பரீட்சை ஹாலில் எல்லாரும் ஒக்காந்தாங்களாம்.
கேள்வித் தாளும் எல்லாருக்கும் கொடுத்தாங்களாம்.
எல்லாரும், கேள்வித் தாளை பாத்துக்கிட்டு இருக்கரப்போ, நம்மாளு, மட மடன்னு எழுத ஆரம்பிச்சாராம்.
அப்பரம் என்ன நெனச்சாரோ தெரீல, திரும்பி, பின் பென்ச்சில் இருக்கும் என் நண்பரிடம்,
"டேய் மச்சி, க்வொஸ்ட்டியன் பேப்பர் டஃப்பா இருந்தா சிக்னல் கொடு, நான் பாட்டுக்கு, ஈஸின்னு நெனச்சு, நெறைய எழுதிக்கிட்டே இருக்கப் போறேன்"ன்னு சொன்னாராம்.

அவ்வ்வ்!

Sunday, August 15, 2010

ஏனோ தெய்வம் சதி செய்தது...

நண்பன் கிரிஷ்ணனின் சகவாசத்தைப் பற்றியும் அவன் அக்கா குடும்பத்துக்கு நேர்ந்த சோகத்தையும் சென்ற் ஆண்டு பதிவியிருந்தது மீண்டும் நினைவுக்கு வருகிறது.

அந்தப் பதிவில், இப்படிச் சொல்லியிருந்தேன்:
வாழ்க்கையில் எல்லாருக்கும் கஷ்டம் இருக்கத்தான் செய்யும். ஆனா, அதுக்குன்னு இப்படியா ஒரு குடும்பத்தை போட்டு வாட்டி எடுக்கும்?

கிருஷ்ணனின் அக்கா கணவனுக்கு ஏற்பட்ட விபத்திற்கு பின், புத்தி சுவாதீனம் குறைந்த நிலையில், அக்கா குடும்பம், சொந்த பந்தங்களின் உதவியுடன் காலத்தை நகர்த்திக் கொண்டிருந்தது. வீட்டை விற்று, மருத்தவத்துக்கும், தினசரி செலவுக்கும் உபயோகித்து வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தார்கள்.
தொழிலதிபராய் இருந்தவர், சொந்தக் காரில் ஜம்மென்று வலம் வந்தவர், இப்படி முடங்கிப் போனது, அவருக்கு பெரிய கஷ்டமாய் இல்லை. ஏன் என்றால், அதை உணரும் நிலையில் அவரின் மனது இல்லை. பாதிக்கப்பட்டது, கண்டிப்பாய் கிருஷ்ணனின் அக்கா. ஆனால், பெரிதும் பாதிக்கப்பட்டது, அக்காவின் இரண்டு குழந்தைகள். விபத்து நடந்த பொழுது, இருவருக்கும் பள்ளி செல்லும் பருவம்.
அடிக்கடி புது சட்டை, வேண்டிய பொம்மைகள், சுற்றுலா, உல்லாசம் என்று சந்தோஷமாய் கழிந்தவர்கள், இந்த திடீர் திருப்பத்தால், ரொம்பவும் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

வருடங்கள் சில கழிந்தன. மாற்றம் பெரிதாய் இல்லையென்றாலும், சகஜ நிலைக்கு வந்திருந்தனர் அந்த குடும்பத்தினர். இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் பெண்ணுக்கு திருமணம் முடிந்திருந்தது.
கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்தி வேலைக்கு சென்று கொண்டிருந்த மகனும், ஓரளவுக்கு வருமானம் ஈட்டிக் கொண்டிருந்தான். சென்ற வருடம் அவர்களைப் பார்க்கும்போது, அவர்கள், 'சகஜ'த்துக்கு திரும்பிக் கொண்டிருந்தது காண சற்றே ஆறுதலாய் இருந்தது.
அக்கா கணவனின் நிலை மாறவேயில்லை. புத்தி சுவாதீனம் இன்றி, குழந்தை போல்தான் பேசிக்கொண்டிருந்தார்.
இதையெல்லாம், 'accept' பண்ணிக் கொண்டு விட்டு, வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
சென்ற வருடம் அவர்களைப் பார்க்கும்போதும், நல்லாத்தான் சிரிச்சு பேசிக்கிட்டு இருந்தாரு. என்றாவது ஒரு நாள், மூளையில் ஏதாவது ஒரு நரம்பு, உயிர் பெற்று நார்மலாகிடுவாரு என்ற நம்பிக்கையில், அக்காவும், கலர் கலரா இன்னும் மாத்திரைகளை கொடுத்துக்கிட்டுத்தான் வராங்க.

பையன் கிட்ட, "டேய் குமாரு, எப்படியாவது கரெஸ்பாண்டன்ஸ்ல சேந்தாவது ஒரு டிக்ரீ முடிச்சுடுடா"ன்னு சொன்னதுக்கு, "சரிண்ணா"ன்னு தலையாட்டினான்.
நல்ல ஸ்மார்ட்டா இருப்பான் பையன். சின்ன வயசுல, அவனும், அவன் வயதை ஒத்த இன்னும் சில குட்டீஸ்களும், சதா சர்வ காலமும், தெருவில் ஓடி ஆடிக்கிட்டு இருப்பாங்க.
திடீர் மாற்றங்களால், சின்ன வயசுலையே வேலைக்கெல்லாம் போகவேண்டி வந்திருந்தாலும், எல்லாத்தையும், ஒரு 'திட' மனசோட செஞ்சுக்கிட்டிருந்தான்.

ஒரு பெருமையா இருக்கும், அவனை பாக்கும்போது. நம்ம படர சின்ன சின்ன கஷ்டமெல்லாம், அவன் பார்த்த துயரத்துக்கு ஈடாகாது.

நேத்து வீட்டிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. எங்க அப்பாதான் பேசினாரு. ஒரு பெரிய கஷ்டமான விஷயம் நடந்துடுச்சுன்னு சொன்னாரு. "நம்ம குமார் வேலை முடிச்சுட்டு வீட்டுக்கு பைக்கில் வரும்போது வழியில் லாரி மோதி இறந்துட்டான்"னு சொன்னாரு.

வாழ்க்கையில் எல்லாருக்கும் கஷ்டம் இருக்கத்தான் செய்யும். ஆனா, அதுக்குன்னு இப்படியா ஒரு குடும்பத்தை போட்டு வாட்டி எடுக்கும்?

அந்த அக்கா அனுபவித்துக் கொண்டிருக்கும் வேதனையை நினைத்தால், மனசு என்னமோ பண்ணுது. இதெல்லாம் part of a bigger planஆ?
என்ன வெங்காயமோ!


Thursday, August 12, 2010

பதிவுலகில் நானு - Q & A

புதுகைத் தென்றல் கேட்டுக் கொண்டதற்கிணங்கி, இங்கே என் ஆட்டோ பயோகிராஃபியை பதிகிறேன்.

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
சர்வேசன் - Surveysan.

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா?
இல்லீங்கோ. புனைப் பெயர் இது.

3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
ஏதோ ஒரு படத்தின் விமர்சனம் தேடப் போயி, எதேச்சையாக, நெல்லை சிவா என்ற பதிவரின் டமில் பதிவு கண்ணில் பட்டது; அப்பாலிக்கா, தேன்கூடு, தமிழ்மணம், ஈ.கலப்பை, சாகரன், போட்டிக் கதைகள், அசுரன், லக்கி, வெட்டி,பாலா, செந்தழல் ரவி, செல்லா, அவிக இவிகன்னு, எல்லாம் ஒவ்வொன்றாய் பரிச்சயமாகி, நாமும் எத்தையாவது எழுதித் தொலச்சா என்னான்னு தொடங்கியது என் பதிவு.
எனக்கு பொது அறிவு கம்மி, எலக்கிய அறிவு ரொம்பவே கம்மி.
மத்த விஷயங்களிலெல்லாம் கூட அரைவேக்காடு தான்.
அலுவலகத்தில் ஆணி அதிகமாய் இல்லாதிருந்த கால கட்டம் அது. ரொம்ப ரூம் போட்டு யோசிச்சு, 'சர்வே' எடுத்து மக்களின் பல்ஸை அறிந்து, உலகுக்கு பொது சேவை செய்யலாம்னு முடிவு பண்ணி சர்வேசன் ஆரம்பிக்கப்பட்டது.


4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
பிரபலமடைய வைக்கணும்னு ப்ளான் பண்ணி ஒண்ணும் பண்ணலை. ஆனா, சர்வேசன் ஆரம்பிச்சதும், நேச்சுரலா அமைஞ்ச விஷயம், '2006ன் சிறந்த பதிவர்' தேர்ந்தெடுக்க தொடங்கப்பட்ட சர்வே.
அது, பரவலாய் பேசப்பட்டு, ப்ரபல்யம் கிட்டச் செய்தது என்று சொல்லலாம்.
அப்பாலிக்கா, ப்ளான் பண்ணி,ரெண்டு மூணு தபா நச் கதைப் போட்டிகள், தக்காளி.வெங்காயம்.உருளை புகைப்படப் போட்டி என்று நூதன முறையில் பல போட்டிகள் அரங்கேற்றப்பட்டது.
இடதுபுற, hall of fame'ல் இருப்பவர்கள் எமது போட்டிகளின், வெற்றியாளர்கள்.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

சில பல சொந்த விஷயங்கள், உலக மக்களுக்கு எடுத்து விளம்பியிருக்கிறேன்.
வாழ்வில் நடந்த எட்டு விஷயங்களை எழுதச் சொன்னப்போ, எடுத்து வுட்டேன்;
என் 'கஞ்சத்'தனம் பத்தி சொல்லியிருக்கேன்.
நீதிமன்றம் ஏறி இறங்கியதை அளந்திருக்கேன், Stick shift ஓட்டக் கத்துக்கறதை பத்தி சொல்லியிருக்கேன், நண்பர்கள் பற்றி சொல்லியிருக்கேன்,
ரொம்ப முக்கியமா, தங்கமணி பத்தியெல்லாம் கூட பதிவெழுதிர்யிருக்கேன்.
எல்லாம் கூட்டிக் கழிச்சு பாத்தா, நான் முகமூடி போட்டுக்கிட்டு எழுதரதே வேஸ்ட்டுன்னு நெனைக்கறேன் ;)
இப்படி சொந்த விஷயம் எழுதினதால் ப்ரச்சனைகள் தான் அதிகம். குறிப்பா தங்கமணி பத்தி பொதுவில் எழுதியதால், ரெண்டு வாரத்துக்கு நல்ல சாப்பாடு கிடைக்கல்ல ;)


6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

பதிவின் மூலம், சம்பாதிச்சது, சில்லறைகள் தான் (கூகிள் ஆட்ஸ்). இதுவரை செலவானது, சில பல நூறு டாலர்கள். போட்டியில் வென்றவர்களுக்கான பண முடிப்புக்காக. ஆனா, பெரும்பான்மையான தொகை, நன்கொடைகளாகப் போயிருக்கு என்பது சந்தோஷமான விஷயம்.
எழுத ஆரம்பிச்சது, பொழுது போக்காகத்தான்.
எப்பயாச்சும் சமூக நலனுக்காகவும், சுய சொறிதலுக்காகவும், கிறுக்கறது உண்டு.
எத்தையாவது பண்ணனும்னு இன்னும் ஒரு நெனப்பு இருக்கு. ஆனா, எத்தையாவது பண்ணி முடிக்கரதுக்குள, இந்த ஜென்மம் முடிஞ்சுரும் போலருக்கு. அடிப்படையில் நான் ஒரு சோம்பேரி.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

குட்.கொஸ்ட்டியன். ஆனா, இதுக்கு முழுசா பதில் சொல்ல முடியாது.
இதுவே முகமூடி, இதுக்கு முன்னாலும் சில பல முகமூடிகள் இருந்திருக்கு. அதெல்லாம், சாய்ஸ்ல விட்டுக்க வேண்டியதுதான் ;)
சர்வேசன் - surveysan.blogspot.com
நேயர் விருப்பம் - http://neyarviruppam.blogspot.com/, பாடல்கள் அரங்கேற்ற இடம்.
சர்வேசன், ஆங்கிலத்தில் - http://justsurveys.blogspot.com/

அப்பாலிக்கா, கூட்டுப் பதிவுகள் சில:
தமிழில் புகைப்படக் கலை - http://photography-in-tamil.blogspot.com/
FixMyIndia ( இது தூங்குது ) http://fixmyindia.blogspot.com/


8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

வார்த்தை வன்முறை செய்யும் சில பதிவர்களின் எழுத்துக்கள் எரிச்சலைத் தரும். ஆனா, அவங்களில் பலரும், அடங்கிட்டாங்க.
பொறாமையெல்லாம் வந்ததில்லை. ஒரு பெருமூச் வரும், சில பதிவுகளைப் படிக்கும்போது. இம்புட்டு விஷயம் தெரிஞ்சு வச்சிருக்காங்களேன்னு.
உ.ம் சொல்லணும்னா, டக்குனு தோணறது, தமிழ் சசி. எதை எழுதினாலும் கட்டம் கட்டி, அழகா தொகுக்கும் பா.பாலா (ஆளு, மிஸ்ஸிங் இன் ஏக்ஷன். ட்விட்டரில் பிஸி ஆயிட்டாரு), KRSன் பதிவுகள், ராமலக்ஷ்மிக்கு அசால்ட்டா வரும் கவிதைகள், அபி அப்பாவின் ஹாஸ்யம், etc.. etc..


9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

Srishiv எமது முதல் பின்னூட்டக்காரர். அம்மாடி, நாலு வருஷம் ஆகப் போவுது. இன்னும், இந்த கொமெண்ட்டு வருதாங்கர எதிர்பார்ப்பு அடங்கலை.
இதுவரைக்கும், யாரும், ஆகாககாகான்னு பாராட்டியதா ஞாபகம் இல்லை. ஆனா, என்னையும் மதிச்சு சொச்சம் பேரு ஃபாலோயர்ஸா இருக்காங்களே, அத நெனச்சா, ஆனந்தக் கண்ணீரு வருது. :)
புதுகைத் தென்றல் போனா போவுதுன்னு கொடுத்த 'King' பதக்கம் ஞாபகத்துக்கு வருது. அம்புடுதேன்.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

நான் ஒரு சாதாரணன். என்னைப் பத்தி தெரிஞ்சு யாருக்கும் ஒன்னியும் ப்ரயோஜனம் இல்லை. குறிக்கோளின்றிக் கெடுகிறவன்;
என்னைப் பத்தி தெரிஞ்சு நேரம் வீணாக்குவதை விட, வேர நல்லவங்களைப் பத்தியெல்லாம் எடுத்து வுட்டுருக்கேன், அதை எல்லாம் படிச்சு, பாஸிட்டிவ் திங்கிக் வளத்துக்கோங்க;
வாழ்க்கை வாழ்வதர்க்கே. அற்ப விஷயங்களுக்காக, நிம்மதியை தொலைக்காமல், ஒவ்வொரு நிமிடத்தையும், சந்தோஷமாய் செலவிடப் பழகுங்கள்!

என்றும் எங்கும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வோம்...

Monday, August 09, 2010

HollywoodBalaவை புறக்கணிப்போம்

Hollywood Bala என்ற பதிவரை அநேகம் பேருக்கும் தெரிந்திருக்கும். திரைப்படங்களுக்கு அருமையான விமர்சனங்களை முன்வைப்பதோடில்லாமல், பல திரைப்பட தொழில்நுட்ப விஷயங்களை பிரித்து மேய்பவர்.

எங்க வூட்டுக்காரரும் வேலைக்குப் போகறாருங்கர ரீதியா பலரும் திரை விமர்சனங்கள் எழுதிக்கிட்டு வரோம். அதில், தனித்தன்மையுடன் பளீர்னு எழுதரவரு இந்த பாலா.

இன்செப்ஷன் படத்துக்கு சினிமா ஆர்வலர்கள் எல்லாரும் விமர்சனம் எழுதி முடிச்சாச்சு. இன்னும் எழுதாதது, சினிமா பார்க்கும் பழக்கம் இல்லாத ஜெயின் துறவிகள் மட்டுமே.
ஆனா பாருங்க, இந்த ஹா.பாலா இன்னும் இந்தப் படத்தைப் பத்தி ஒண்ணுமே எழுதலை.

இந்த படம் ஒரு கொழப்பமான படம். பலருக்கும் பல புரிதல்களை குடுத்திருக்கு. எல்லாரும் தப்பு தப்பா பல விஷயங்களை கவனிச்சிருக்காங்க, சாரு உட்பட.

இந்த மாதிரி க்ரூஷியல் தருணத்திலே, படத்துக்கு ஒரு விமர்சனம் எழுதி குழப்பத்தை தீர்க்காம, காதல் கவுஜ எல்லாம் எழுதிக்கிட்டு டயத்தை வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்காரு மனுஷன்.

புறக்கணிப்போம், இன்னும் 24மணி நேரத்தில், விமர்சனம் வந்து சேரலைன்னா.

;)

பி.கு: அலுவலக நேரத்தில் பதிவு எழுதும் திரில்லே திரில்லுதான் ;)

Friday, August 06, 2010

ரூ.16 ஆ‌யிர‌ம் ல‌ஞ்ச‌‌ம் வா‌‌ங்‌கிய ப‌‌த்‌‌திர‌ப் ப‌திவு எழு‌த்தர் ‌சி‌க்‌கினா‌ர்

ப‌த்‌திர‌‌ம் ப‌திவு செ‌ய்ய ரூ.16 ஆ‌யிர‌ம் ல‌‌ஞ்ச‌ம் வா‌ங்‌கிய தலைமை எழு‌த்த‌ர் ரா‌ஜ்குமா‌ர் கையு‌ம் களவுமாக ‌பிடிப‌ட்டா‌ர்.

வாழ்க வளர்க!

பல.நாள்.திருடன்.ஒரு.நாள்.அகப்படுவான்.

Tuesday, August 03, 2010

ஜக்குபாய்ஸ் - குறும்படம்

ரசிக்கத் தக்கவகையில் ஒரு ஜாலியான குறும்படம்.

'ஜக்கு'பாய்ஸ். அரையாண்டு முடிந்து, போனஸ் எதிர்பார்க்கும் தொழிலாளிகள் அனைவருக்கும் சமர்ப்பணம் ;)

பாகம்1:


பாகம்2:


பாகம்3:


ensoy maadi!