இந்த வெள்ளிக் கிழமைய (September 24) நெனச்சாலே வயத்துல லேசா புளியக் கரைக்கர மாதிரி இருக்கே.
எங்க பாத்தாலும், அயோத்தி தீர்ப்பை பத்தியே பீதியா பேசிக்கிட்டு அலையரானுவ.
எல்லா பெருந்தகைகளும் சேந்து, அடுத்த கட்ட, கொடூரத்தை துகிலுரிக்க திட்டம் போடர மாதிரி தெரியுது.
திரைக்கு வர இருந்த பல படங்கள் ஸைலண்ட்டா ஒரு வாரம் தள்ளி வச்சிருக்காங்க, லாபத்தில் சொட்டை விழுந்துருங்கரதுக்காக.
என்ன என்ன அட்டூழியங்கள் நடக்கப் போவுதோ.
Lucknowல் போலீசாரும், மிலிட்டரியும் குவிக்கப்படுதாம்.
எல்லாரும் லீவு போட்டுட்டு, "Working" from home செய்வது சாலச் சிறந்தது.
அதை விடச் சிறந்தது, எக்கேடுகெட்ட தீர்ப்பு வழங்கப்பட்டாலும், இரு தரப்பும், ஒன்னியுமே நடக்காத மாதிரி, நார்மல் வாழ்க்கையை நடத்தி, அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் குள்ள நரிகளின் முகத்தில் கரியை பூசுதல்.
எல்லாம் நன்மைக்கே!