தகுதியானவங்க பல பேருக்கு கெடச்சிருக்கு.
மிகத்-தகுதியானவங்க சில பேருக்கு கெடைக்கல.



எல்லா வருஷம் போலவும் இந்த வருஷமும், பாரத் ரத்னா விருதுக்கு ஏகப்பட்ட போட்டி.
ஜோதிபாசு, வாஜ்பாயி, கன்ஷிராம், லல்லு, கருணாநிதி, சரண் சிங், முலாயம், போன்ற அரசியல் பெருந்தலைகள் முதல், நம்ம இளையராஜா வரைக்கும் பரிந்துரைக்கப்பட்டாங்களாம்.
வழக்கம் போல் இம்முறையும், அரசியல் வில்லங்கங்கள் தலைவிரித்து ஆடியதால், யாருக்கும் கொடுக்காம ஒதுக்கி வச்சுட்டாங்க.
லல்லுகிட்ட இந்த மேட்டர பத்தி கேட்டதுக்கு, "பரிந்துரையில் உள்ள சில பேர்கள் இந்த விருதுக்கு தகுதியில்லாதவர்கள். இவங்களுக்குக் கொடுத்திருந்தா விருதின் பேர் கெட்டுப் போயிருக்கும். நல்லதுதான் யாருக்கும் கொடுக்காததுன்"னு சொன்னாராம். யார மனசுல வச்சிட்டு சொல்ல்யிருப்பாருன்னு எல்லாருக்கும்தான் தெரியுமே. :)
பில்லியன் ஆளுங்க இருக்கர ஊருல, வருஷத்துக்கு, ஒரு நல்ல மனுஷனுக்கு சண்ட சச்சரவில்லாம விருது கொடுக்க முடியாதது கொடுமைங்க!
அட, ஏழு வருஷமா இப்படி வீணடிச்சுட்டாங்களே? பேசாம, வருஷா வருஷம் Posthumousஆ யாருக்காவது கொடுத்திடலாம். வள்ளுவருக்கு ஒண்ணு, கப்பலோட்டிய தமிழனுக்கு ஒண்ணு, பாரதியார்க்கு ஒண்ணு, வால்மீகிக்கு ஒண்ணு (ஹிஹி), கட்டபொம்மனுக்கு ஒண்ணு, வீர ஷிவாஜிக்கு ஒண்ணு, ராணி ஜான்ஸிக்கு ஒண்ணு,,.. ஆளா இல்லை? எடுத்து கொடுங்கப்பு வருஷா வரும்.
இப்படி இறந்த பிறகு பாரத ரத்னா கிடைக்கும்னு தெரிஞ்சா, வாழும்போது நல்லா வாழ முயற்சி பண்ணுவாங்க ;)
அதே சமயம், 119 பேருக்கு, பத்மXYZ விருது கொடுக்கராங்க, நம்ம MSVய யாரும் கண்டுக்கமாட்றாங்களேய்யா? சுசீலாம்மாவுக்கு கெடைச்சது சந்தோஷம்தேன், ஆனா, MSVக்கு இன்னும் கிடைக்காதது, ஏதோ அரசியல் வில்லங்கத்தால்னு தோணுது. நீங்க என்ன நினைக்கறீங்க? எனி ஹிஸ்டரி பிஹைண்ட் திஸ்?
என்ன கொடுமைங்க இது?
நம்ம கடமைய நாம் செய்வோம்! வாக்காதவங்க வாக்குங்க!