recent posts...

Tuesday, September 29, 2009

சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டி

அப்படி இப்படின்னு நம்ம எழுத்துப்பணி ஆரம்பிச்சு மூணு வருஷம் முடியப் போவுது.

இது ஐநூறாவது பதிவு.
ஐநூற்றில் நாணூத்தி எண்பதுக்கும் மேல், மொக்கை என்றாலும், எதையாவது கிறுக்குவதும், அதை சிலர் படிப்பதும், ஒரு வித்யாசமான மகிழ்ச்சி தரும் விஷயம்தான்.

'சாதா' ப்ரஜையான நானு, சபையில் அடக்கி வாசிக்கும் டைப்பு. இந்த 'அனானி' எழுது தளம், என்னுள் குமுறிக் கொண்டிருந்த சிந்தனையாளனுக்கு ஒரு நல்ல வடிகால். (அடங்கு அடங்கு! அடங்கறேன் அடங்கறேன்! :) ). இதுகாலம் வரையில் பாத்ரூம் சிங்கராக மட்டுமிருந்த நான், பாட்டுக்கு பாட்டின் மூலம் பாடல் அரங்கேற்றமும் செய்து முடித்திருக்கிறேன்.

இப்படி எமது பல பரிமாணங்களை எடுத்து வியம்ப வைக்க ஆதாரமாக இருந்த தமிழ் வலையுலகுக்கு நன்றீஸ்!

எமது எழுத்துப் பணியின், இந்த மைல் கல்லைக் கொண்டாடும் விதமாக, சென்ற ஆண்டின் தொடக்கத்தில் நடத்திய 'நச்' கதைப் போட்டி, நச்2007 போலவே, இந்த ஆண்டும் நச்2009 நடத்தி மகிழலாம் என்று அவா.

சென்ற முறை 57 கதைகள் போட்டியில் இறங்கி களை கட்ட வைத்தது. கதைகளுக்கு Srikanth விமர்சனங்கள் எல்லாம் எழுதி சிறப்பித்திருந்தார்.

மக்கள் வாக்கெடுப்பின் மூலம், சிறந்த 8 கதைகளை தேர்ந்தெடுத்து, அதை நடுவர் குழுவை வைத்து (CVR, தரூமி, ஆசீஃப் மீரான், வெட்டிப்பயல், பாஸ்டன் பாலா) மதிப்பெண் எல்லாம் போட வைத்து, சிறந்த நச் கதையாக அருட்பெருங்கோவின் கதை தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.

சென்ற ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் 'நச்'ன்னு போட்டிக் கதைகள் வந்தா நல்லாருக்கும்.

இனி, 'நச்! 2009' போட்டியின், விதிமுறைகள் பாக்கலாம்:

1) கதை, எதைப் பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். 'சிறு'கதையா இருக்கணும். மிக முக்கியமா, கதை முடிகையில் 'நச்'னு ஒரு திடீர் திருப்பம் இருக்கணும். (O-Henry turn என்ற திடீர்-திருப்பம் கதையில் முக்கியம்.)

2) கதையை உங்கள் ப்ளாகில் எழுதி இங்கே பின்னூட்டணும். தலைப்பிலோ, லேபிளிலோ, 'சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009' என்று வைத்தல் நலம்.

3) கதை, இதற்கு முன் எந்த ப்ளாகிலும், பத்திரிகையிலும், சினிமாவிலும், சீரியலிலும்,..., வந்திருக்கக் கூடாது.

4) கதையை அனுப்ப வேண்டிய கடைசி தேதி நவம்பர் 15 2009 11:59 pm IST.

5) நடுவர்கள்: எம்புட்டு கதைகள் போட்டிக்கு வருதுன்னு பாத்துட்டு முடிவு செய்யப்படும். நடந்து முடிந்த எல்லா போட்டிகளைப் போலவும், சீரான/பொறுப்பான முறையில் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

6) பரிசு: $20 முதல் பரிசு. $10 இரண்டாம் பரிசு.
முதல் பரிசு வென்றவரின் பெயரில் $70 "உதவும் கரங்களுக்கு" நன்கொடையும் வழங்கப்படும்.

7) ஒருவர் ஒரு கதையை மட்டுமே அனுப்பலாம். நிறைய கற்பனா வளம் உள்ளவர்கள் ரெண்டு மூணு கதைய உங்க பதிவுல எழுதி, எது நல்ல பின்னூட்டங்களை பெறுதோ, அதை இங்கே அனுப்பலாம். :)

போட்டி பற்றிய விவரங்களைப் பரப்பவும்.

நன்றீஸ்! :)


இதுவரை வந்த 'நச்' கதைகள்:
1. நெல்லி மரம் - சதங்கா (Sathanga)
2. அசைன்மென்ட் - கிஷோர்
3. கடைசி இரவு - ராம்குமார் அமுதன்
4. உதவி - ஷைலஜா
5. உயிரின் உயிரே - R. Gopi
6. தொழில் - ராமலக்ஷ்மி
7. recession ஐயா recession - ramachandranusha(உஷா)
8. வைதேகி காத்திருப்பாள் - T.V.Radhakrishnan
9. நெஞ்சு பொறுக்குதில்லையே - ஷைலஜா
10. திருப்பம் - சின்ன அம்மிணி
11. கண்ணால் காண்பதும் - பெயர் சொல்ல விருப்பமில்லை
12. அப்பா சொன்ன நரிக்கதை - நிலா ரசிகன்
13. ஆவணி பௌர்ணமி - நானானி
14. நொடிப் பொழுதில் - Pappu
15. ஆல்ப்ஸ் கொ(ம)லைக் காற்று வந்து - முகிலன்
16. ஜாக்கிரதை மழை பெய்கிறது - Vidhoosh
17. சதிராடும் மேகங்கள் - அரவிந்தன்
18. ஆதவன் - நான் ஆதவன்
19. இக்கணம் இக்கதை - Nundhaa
20. யாரோ ஒருத்தி - குகன்
21. செவப்புத் தோல் - ஈ.ரா
22. படுக்கை - பினாத்தல் சுரேஷ்
23. அன்னா மரியா குமாரசாமி - செந்தழல் ரவி
24. ரெட் லைன் - வண்டிக்காரன்
25. பச்சை நிற பக்கெட் - Thirumalai Kandasami
26. கடைசியில் ஒரு திருப்பம் - மணிகண்டன்
27. விடை கொடு எங்கள் நாடே - சங்கர்
28. மில்லியன் காலத்துப் பயிர் - சத்யராஜ்குமார்
29. டிஸ்லெக்சியா - Vinitha
30. அவரு..அவரு..ஒரு - வருண்
31. வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் - கெக்கேபிக்குணி
32. ஜனனி - படுக்காளி
33. எக்ஸ்பிரஸ் இளமதி - SUREஷ் (பழனியிலிருந்து)
34. ஒரு கிராமத்தின் காலைப் பொழுது - சயந்தன்
35. புகை - kalyanaraman raghavan
36. வசவும் திட்டும் சாம்பலும் - கே.ரவிஷங்கர்
37. 72877629 - கே.பி.ஜனார்த்தனன்
38. ஜாதி கேடயம் - இரும்பித்திரை அரவிந்த்
39. காமம் கொல் - Cable Sankar
40. அந்த இரண்டு ரூபாய் - வி.நா.வெங்கட்ராமன்
41. டிஷ்யூங் - கார்த்திகைப் பாண்டியன்
42. சாப்ட்வேர் - ப்ரசன்ன குமார்
43. போகமாட்டேன் - புதுவை சந்திரஹரி
44. நறுமண தேவதை - எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன்
45. கறுப்பு ஞாபகம் - ஆதிமூலகிருஷ்ணன்
46. சன்யாசம் கூறாமல் கொள் - சாம்ராஜ்ய ப்ரியன்
47. காமம் வழிந்தோடும் உடல் - graham
48. லாரி விபத்து - MSV Muthu
49. மாத்தி யோசி - நாஞ்சில் பிரதாப்
50. பாராட்டு - ஸ்வர்ணரேக்கா
51. நானே நானா - சுப.தமிழினியன்
52. அடுத்த வீட்டுப் பெண் - Mohan Kumar
53. சட்டை - முரளிகண்ணன்
54. ஐ லவ் யூ - சுவாசிகா
55. வெள்ளை உருவத்தில் வில்லன் - பின்னோக்கி
56. அபரஞ்சிதா - அடலேறு
57. முதல் காதல் - chelladhurai
58. நெப்போலியன் மேல சத்தியம் - நசரேயன்
59. இயந்திரம் - காவேரிக்கரையோன் MJV
60. இந்தியா எப்படி உருப்படும்??? தொழில் - அன்புடன் அருணா
61. நடிகையின் கதை - சாணக்கியன்
62. Blackhole - இரா.வசந்த குமார்
63. பள்ளிக்குப் போக மாட்டேன் - ஷக்திப்பிரபா
64. ஒரு கிளி உருகுது.. உரிமையில் பழகுது.. - தமிழ்ப்பறவை
65. திருடன் - Parameswerey Namebley
66. நசிந்தப் பூக்கள் - நீச்சல்காரன்
67. திடீர் பாசம் - உண்மைத் தமிழன்
68. ஹோம் வொர்க் - ஸ்ரீதேவி
69. நிபுணன் - யோசிப்பவர்
70. நிமித்தகாரன் (அ) கனவுகளின் காதலி - Sridhar Narayanan


பி.கு0: இது என்னுது - புவனேஷ்வரி மாமி - (போட்டிக்கல்ல)

பி.கு1: போட்டியில் பங்கு பெறலாம் என்று நினைப்பவர்கள், கீழ ஒரு attendance சொல்லிட்டுப் போயிடுங்க. கணக்கெடுக்க வசதியா இருக்கும். மத்தவங்களை ஊக்குவிக்கவும் இது உதவும் :)

பி.கு2:
இந்த பக்கத்துக்கு உங்க கதையிலோ, பதிவிலோ லிங்க் தர, கீழே உள்ள நிரலை வெட்டி ஒட்டவும்.

187 comments:

SurveySan said...

போட்டியில் பங்கு பெறலாம் என்று எண்ணுபவர்கள், ஒரு 'உள்ளேன் ஐயா' சொல்லிட்டுப் போயிடுங்க. ஒரு கணக்கு தெரியும் அப்பதான். நன்னி :)

சென்ஷி said...

:-)

போட்டி சிறப்புற வாழ்த்துக்கள்!

ராமலக்ஷ்மி said...

ஆஆஆ... ஐநூறாவது பதிவு!
முதலில் அதற்குப் பிடியுங்கள் வாழ்த்துக்களை?

கதைப் போட்டி பிரமாதம். கலந்து கொண்டு போட்டியைக் களைகட்ட வைக்கப போகிற எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!

‘நச்’சுன்னு ஏதாவது கரு கிடைத்தால் நானும் இருப்பேன் ரேஸில்:)!

Athisha said...

500க்கு வாழ்த்துக்கள் !

நச்னு ஒரு கதைப்போட்டிக்கும்!

pudugaithendral said...

எனக்கு கதையெல்லாம் எழுத வராது.

உங்க பதிவுக்கு லிங்க் மட்டும் என்னோட வலைப்பூவுல கொடுத்திட்டேன்.

பங்கேற்க போகும் நண்பர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

500க்கு உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.(இன்னும் 14 போஸ்ட் பாக்கி நானும் 500 அடித்து விடுவேன்) :))

Truth said...

500க்கு வாழ்த்துக்கள் சர்வேசன்.
நானும் ப்ரெஸெண்ட். முடிந்த வரையில் யோசித்து எழுதறேன் :-)

Prabhu said...

'சிறு'கதையா இருக்கணும். /////

எவ்வளவு சிறுசா இருக்கனும்? நாங்க 10 பக்கத்துக்கு எழுதுற சாதி!

ஒரு கதைதான் சமர்ப்பிக்க இயலுமா?

ராமலக்ஷ்மி said...

நானும் என்னுடைய வலைப்பக்கத்தில் லிங்க் கொடுத்தாயிற்று.

அன்புடன் அருணா said...

பூங்கொத்துக்களுடன் வாழ்த்துக்கள் 500-க்கு.
அப்புறம் நானும் யோசிக்க ஆரம்பிச்சாச்சு!

SurveySan said...

danks everyone!

kalakkiruvom ;)

pappu, read #7 :)
'siru' must be siru enough for folks read in a few minutes instead of testing their patience :)

வினையூக்கி said...

நன்றி

Venkatesh Kumaravel said...

வாழ்த்துகள் சார்!
நானும் கலந்துக்கப் பார்க்குறேன்!

Sridhar V said...

யெஸ்ஸு சார்!

ARV Loshan said...

வாழ்த்துகள் அண்ணே.. ஐந்நூரா? அம்மாடி..

கதை எல்லாம் நமக்கு வராது. எல்லாருமெழுதின பிறகு வந்து வாசிக்கிறேன்..

ரெஜோ said...

// முதல் பரிசு வென்றவரின் பெயரில் $70 "உதவும் கரங்களுக்கு" நன்கொடையும் வழங்கப்படும். //

:-) நல்ல மனது சர்வேசரே .. 500 பதிவா ???!!! வாழ்த்துகள் :-)

கண்டிப்பாக எழுதுறேன் :-)

SurveySan said...

புதுகை தென்றல், ராமலக்ஷ்மி,

ஸ்பெஷல் டாங்க்ஸ்!!! :)

சென்ஷி, அதிஷா, Truth, Pappu, அருணா, வினையூக்கி, வெங்கிராஜா, Sridhar, Loshan, ரெஜோ,

நன்னி! கலக்கிடுவோம் :)

நானானி said...

நா கலந்துக்கிட்டா ஒருத்தரும் ஏமாந்துடமாட்டாங்கன்ற நெனப்புல...நானும் கலந்துக்கிறேன்.
என் கற்பனை குதிரை என் தலையில் 'நச்'ன்னு ஒர் உதைவிட்டால் தேவலை.

ஹாங்...! ஐநூறுக்கு வாழ்த்துக்கள்!!!

SurveySan said...

நானானி, எழுதுங்க எழுதுங்க.

நன்னி. கலக்கிறுவோம்.

சதங்கா (Sathanga) said...

500க்கு வாழ்த்துக்கள் !

இதோ போட்டியில் குதித்தாயிற்று.

http://vazhakkampol.blogspot.com/2009/10/blog-post.html

ஊர்சுற்றி said...

500க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நானும் ஏதோ முயற்சி பண்றேன்.

SurveySan said...

சதங்கா, அருமையான 'நச்' கொடுத்துட்டீங்க. :)

ஊர்சுற்றி, கலக்குங்க.

சதங்கா (Sathanga) said...

thanks for visiting my page and the greetings.

ithu follow-up kkaaga ...

SurveySan said...

pappu, படிச்சுட்டேன், உங்க பதிவுலையே கமெண்ட்டும் போட்டுட்டேன். good stuff :)

Prabhu said...

என்னோடது வரல? :(

கிஷோர் said...

ஐநூறுக்கு வாழ்த்துக்கள் :)

நானும் ஒரு கதை எழுதி இருக்கேன்.

http://blog.kishoresays.com/?p=159

Prabhu said...

அப்ப வெயிட் பண்ணுங்க சார்... பத்து நாள் கழிச்சு பண்ணிக்கிறேன்.... தாங்க்ஸ் ஃபார் தி வார்னிங்...

Prabhu said...

அப்படி, இப்படின்னு குழப்பி கஷ்டம் குடுத்திட்டேனோ... சாரி சர்வேசன்....

SurveySan said...

pappu,

//pappu said...
அப்படி, இப்படின்னு குழப்பி கஷ்டம் குடுத்திட்டேனோ... சாரி //

டமில்ல எனக்கு பிடிக்காத வார்த்தை இது. நானும் கேக்கரதுல்ல, அடுத்தவங்களும் கேக்கணும் எதிர்பாக்கரதில்ல. கூல் :)

ராம்குமார் - அமுதன் said...

நானும் என்னால முடிஞ்ச ஏதாவது ஒரு கதை எழுத முயற்சிக்கிறேன்... 500க்கு வாழ்த்துக்கள்... மேலும் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்...

goma said...

நச் கதை போட்டியில் நானும் நுழைகிறேன் .
போட்டியின் அறிவிப்பு லின்க் என் தளத்தில் மாட்டியிருக்கிறேன்

SurveySan said...

Danks Ramkumar, Goma. :)

VSK said...

'நச்'சுங்கப்பா எல்லாரும்! ரசிக்கிறேன்!

VSK said...

'விடல்' பற்றி எழுதாமைக்கு மன்னிக்கவும். விரைவில் வருகிறேன்.

SurveySan said...

///'விடல்' பற்றி எழுதாமைக்கு மன்னிக்கவும். விரைவில் வருகிறேன்.///

no worries VSK சாரே. take your time ;)

T.V.ராதாகிருஷ்ணன் said...

500க்கு வாழ்த்துக்கள் !

ராம்குமார் - அமுதன் said...

http://nellainanban.blogspot.com/2009/10/blog-post.html

படிக்கிறவங்க படிச்சுட்டு ஒரு கருத்து சொல்லுங்க... கத சுமாரா இல்ல ரொம்ப மோசமான்னு... சொன்னீங்கன்னா இன்னும் கொஞ்சம் நல்லா ஏதாவது எழுத முயற்சிக்கிறேன்...

Beski said...

வாழ்த்துக்கள்.

விரைவில் எனது கதையை அனுப்பி வைக்கிறேன்.

நிலாரசிகன் said...

500க்கு வாழ்த்துகள்.

விரைவில் என் கதையை அனுப்புகிறேன்.

நன்றி.

நானானி said...

’நச்’சுனு நச்சிட்டேன். படித்துப் பாத்து
’நச்’சுனு ஒரு கருத்து சொல்லுங்கோ..!

ஷைலஜா said...

சர்வேஸ் உங்க 500க்கு வாழ்த்துகள்...ஸ்பெஷல் பாட்டுக்குப்பாட்டு இதுக்காக்கவே பாடிட்லாமே! இத்துடன் எனது நச் இடுகைப்பதிவு வருகிறது.நன்றி.

http://shylajan.blogspot.com/2009/10/500-2009.html

R.Gopi said...

முதலில் 500க்கு வாழ்த்துக்கள்...

உள்ளேன் ஐயா...

கலந்து கொள்ள முடிவு செய்திருக்கிறேன்... கோதாவில் இறங்கி பார்த்து விடலாம் என்றிருக்கிறேன்...

நன்றி...

R.Gopi said...

இதோ போட்டிக்கான என் கதை "உயிரின் உயிரே, உயிரின் உயிரே" மற்றும் அதற்கான லிங்க்....

உயிரின் உயிரே...உயிரின் உயிரே
http://jokkiri.blogspot.com/2009/10/blog-post_19.html

லேபிளில் "சர்வேசன்500 - 'நச்'னு ஒரு கதை 2009 - போட்டி" என்று குறிப்பிட்டு இருக்கிறேன்...

தோழமைகள் படித்து விட்டு கருத்து சொல்லவும்...

பெசொவி said...

நானும் இந்த போட்டியில் பங்கு பெறலாம் என்று விரும்புகிறேன்.

http://ulagamahauthamar.blogspot.com/2009/10/blog-post_17.html இந்த பதிவில் உள்ள (குறுங்)கதையை பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

நிலாரசிகன் said...

அன்புள்ள சர்வேசன்,

நானும் ஒரு "சிறு"கதையை என் வலைப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறேன்.

இதுதான் Final கதையா என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. முடிவானவுடன் சுட்டி தருகிறேன்.

உங்களது விமர்சனம் தேவை :)

shortfilmindia.com said...

என்ன இப்படி சொல்லிட்டீங்க.. ப்ளாக்ல போட்ட கதைய போடக்கூடாதா..? ஏதாவது ரிலாக்ஸேஷன் இருக்குதா.. என்னுடய் கதைகளில் பெரும்பாலும் நீங்கள் எதிர்பார்க்கும் திடீர் திருப்பங்களுடந்தான் இருக்கிறது அதான் கேட்டேன்
கேபிள்சங்கர்

. said...

சர்வேசா !!!! என்னைக் காப்பாத்து...

நான் கூப்பிட்டது நிஜ சர்வேசனை. கதைப் போட்டி எல்லாம் நடத்துர வலைஞர் இல்லை.

சரி இப்போ உங்கள கூப்பிடுரேன்.... நானும் கதை எழுதி இந்த மாசம் 31 குள்ள கொடுத்திடுரேன்.

நன்றி

படுக்காளி

http://padukali.blogspot.com/

ramachandranusha(உஷா) said...
This comment has been removed by the author.
ராமலக்ஷ்மி said...

சொன்னபடியே 'டக்சிக் டக்சிக்'னு குதிரை ஏறிட்டேன்ல ரேஸில கலந்துக்க:)! இதோ சுட்டி:http://tamilamudam.blogspot.com/2009/10/500-2009.html

பெசொவி said...

ஐயா, திரு R. கோபி மற்றும் என்னுடைய கதைகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதா என்பதை தயவு செய்து குறிப்பிடவும்.

SurveySan said...

Danks everyone for jumping in :)

will add the URLs to the post tonight.

உண்மைத்தமிழன் said...

தலைப்புல கொட்டேஷன் கொடுக்காதீங்க சர்வேசன்..

பாருங்க வெறும் நம்பர்தான் தமிழ்மணத்துல தெரியுது..!

இதுனாலேயே நிறைய பேர் இதை பார்க்காம போயிருப்பாங்கன்னு நினைக்கிறேன்..!

ramachandranusha(உஷா) said...

பிரச்சனை அதுவா உண்மை தமிழன்? தலையால தண்ணி குடிச்சி மூணாவது முறையாய் கதையை
தமிழ்மணத்தில் ஏற்றியிருக்கிறேன்.

http://nunippul.blogspot.com/2009/10/blog-post.html

kanagu said...

naan ipo than itha paakuren.. yosichu ezhuthuren..

500-vathu padhivukku vaazthukkal :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

போட்டியில் குதித்தாயிற்று.
http://tvrk.blogspot.com/2009/10/500-2009.html

ராமலக்ஷ்மி said...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

// தலைப்புல கொட்டேஷன் கொடுக்காதீங்க சர்வேசன்..

பாருங்க வெறும் நம்பர்தான் தமிழ்மணத்துல தெரியுது..!

இதுனாலேயே நிறைய பேர் இதை பார்க்காம போயிருப்பாங்கன்னு நினைக்கிறேன்..!//

உஷாவைப் போலவே எனக்கும் தமிழ்மணத்தில் பதிவை ஏற்ற முடியவில்லை. தகவலுக்கு நன்றி உண்மைத் தமிழன்.

ராமலக்ஷ்மி said...

//பதிவை ஏற்ற முடியவில்லை.//

ஆகையாலே...சீக்கிரம் எங்க கதைகளுக்கு பதிவில் லிங்க் கொடுங்க சர்வேசன்:)! இங்கிருந்து வருவாங்க எல்லோரும்:)!

ஷைலஜா said...

http://shylajan.blogspot.com/2009/10/5002009.html

இதுல நச் இருக்கான்னு பின்னூட்டம் பார்த்து தீர்மானிச்சி முடிவா போட்டிக்கு இதை அனுப்பறேன் சர்வ்ஸ் நன்றி

Anonymous said...

இது போட்டிக்கு என்னோட கதை. நச்சுனு ஒரு திருப்பம் இருக்குன்னு நினைக்கறேன்.

http://chinnaammini.blogspot.com/2009/10/2009.html

Vidhoosh said...

உள்ளேன் ஐயா

"பேங்க பேங்க முழிக்கறேன்" :)) ஆகாககாகா, யோசிக்க வச்சுட்டீங்க


-வித்யா

R.Gopi said...

அடடா...

இடமே களை கட்டிடுச்சே...

பெரிய "தலை"கள் எல்லாம் தெரியுதே (ராமலக்ஷ்மி, ஷைலஜா, சின்ன அம்மிணி, உஷா, சதங்கா, டி.வி.ராதாகிருஷ்ணன், பெயர் சொல்ல விருபமில்லை, விதூஷ்(!!))... இது இல்லாம, நம்ம கேபிளார் கூட ஆட்டத்துக்கு வரவான்னு கேக்கறாரு...

யப்ப்பா.... இப்போவே "கண்ண கட்டுதே"...... முடியலலலலல.....

கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

SurveySan said...

கேபிள் சங்கர்,

///என்னுடய் கதைகளில் பெரும்பாலும் நீங்கள் எதிர்பார்க்கும் திடீர் திருப்பங்களுடந்தான் இருக்கிறது அதான் கேட்டேன்///

புச்சுதான் போட்டிக்கு அனுப்பணும். சாரி.
:)

SurveySan said...

link சரியா இருக்கான்னு எல்லாரும் சரிபார்க்கவும். நன்னி.

யாராவது, கதையை மாத்தி புது கதை எழுதினா தெரியப் படுத்தவும்.

நிலாரசிகன் said...

என் கதை இங்கே:

http://www.nilaraseeganonline.com/2009/10/blog-post_20.html

ttpian said...

i have not yet made my short story:even than i am confident:
i will be the winner of 2009!

பெசொவி said...
This comment has been removed by the author.
Radhakrishnan said...

உங்க பதிவே 'நச்'னு ஒரு திருப்பமாகத்தான் இருக்கிறது.

இதோ உங்கள் போட்டியில் கலந்து கொள்ள சிறுகதை ஒன்று தயாராகிறது. ;)

பெசொவி said...

இதுல என் கதை இருக்கு, அது போட்டியிலே இருக்குதா இல்லையா, சொல்லுங்க தல.....

http://ulagamahauthamar.blogspot.com/2009/10/blog-post_17.html?showComment=1256197792930#c2722420257095518943

SurveySan said...

please check.

பெசொவி said...

என்னுடைய கதையும் போட்டியில் சேர்க்கப் பட்டது என்பதை அறிந்தேன். மிக்க நன்றி.

கதையைப் படித்து பின்னூட்டம் எழுதுமாறு அனைத்து பதிவர்களையும் அழைக்கிறேன்

Prabhu said...

'நொடிப் பொழுதில்...' கதைய லாக் பண்ணிடுங்க. பைனல். எக்ஸாம்ஸ் வருது. இதுக்குமேல கதை எழுத டைம் இருக்கும்னு தோணல...

http://pappu-prabhu.blogspot.com/2009/09/blog-post_30.html

என்னை வாழ்த்துங்க குருவே!

ramachandranusha(உஷா) said...

சர், கதையின் தலைப்பு- recession ஐயா recession- ப்ளீஸ் மாத்திடுங்க

ராம்குமார் - அமுதன் said...

// http://nellainanban.blogspot.com/2009/10/blog-post.html

படிக்கிறவங்க படிச்சுட்டு ஒரு கருத்து சொல்லுங்க... கத சுமாரா இல்ல ரொம்ப மோசமான்னு... சொன்னீங்கன்னா இன்னும் கொஞ்சம் நல்லா ஏதாவது எழுத முயற்சிக்கிறேன்... //

சர்வேசரே... நான் இப்படிதான சொல்லிருந்தேன்... அதுக்குள்ள லாக் பண்ணீட்டீங்களே.... அத லாக் பண்ணாதீங்க... நான் இன்னோரு கதை கூட எழுதிருக்கேன்.... தயவு செய்து கொஞ்சம் மாத்திருங்க.... நான் கொஞ்ச நாள் கழிச்சு லாக் பண்ணிக் கொள்கிறேன்....

இரண்டாம் கதை இங்கே : :

http://nellainanban.blogspot.com/2009/10/ii.html

படிக்கிறவங்க படிச்சுட்டு ஒரு கருத்து சொல்லிட்டு போங்க...

பெசொவி said...

//பெரிய "தலை"கள் எல்லாம் தெரியுதே (ராமலக்ஷ்மி, ஷைலஜா, சின்ன அம்மிணி, உஷா, சதங்கா, டி.வி.ராதாகிருஷ்ணன், பெயர் சொல்ல விருபமில்லை, விதூஷ்(!!))... இது இல்லாம, நம்ம கேபிளார் கூட ஆட்டத்துக்கு வரவான்னு கேக்கறாரு...
//

பெரிய "தலை"கள் லிஸ்ட்ல என்னையும் சேர்த்ததற்கு மிக்க நன்றி, கோபி அவர்களே.

Unknown said...

தல, நானும் மூணு கதை எழுதியிருக்கேன். இதைப் பாருங்க..

http://pithatralkal.blogspot.com/2009/10/blog-post_14.html

http://pithatralkal.blogspot.com/2009/10/blog-post_04.html

ராம்குமார் - அமுதன் said...

//SurveySan said...

link சரியா இருக்கான்னு எல்லாரும் சரிபார்க்கவும். நன்னி.

யாராவது, கதையை மாத்தி புது கதை எழுதினா தெரியப் படுத்தவும்.
//

I am the Sorry !!!

நானானி said...

சர்வேசன்!
என் கதையை இன்னும் படிக்கலை போல? ஏன் தாமதம்?

கதை இங்கிருக்கு
http://9-west.blogspot.com

Vidhoosh said...

ஜில்லுனு ஒரு காதல் - சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டி
http://vidhoosh.blogspot.com/2009/10/500-2009.html

எழுதிட்டேன் சர்வேசா.

-வித்யா

SurveySan said...

அனைவருக்கும் நன்னி.

இன்னும் நான் கதைகளை படிக்க ஆரம்பிக்கலை. ஆணீணீணீணீணீ அதிகமாயிடுச்சு ;) பொறுத்தருள்க.

ஈ ரா said...

உள்ளேன் ஐயா,, நானும் ஒரு முயற்சி செய்கிறேன்..

கிரகம் said...

என்னுடைய சிறுகதையும் இந்த போட்டியில் பங்கு பெறும்.

அவனி அரவிந்தன் said...

நானும் பங்கு பெறலாம்னு இருக்கேன் !

அவனி அரவிந்தன் said...

என் கதை 'சதிராடும் மேகங்கள்' -
http://vennilapakkangal.blogspot.com/2009/10/500-2009.html

SurveySan said...

அனைவரும் அனைவரது கதைகளையும் படித்து மகிழுமாறு கேட்டுக்கறேனுங்கோ.

ஜமாய்ங்கோ. கலந்துக்காதவங்க கலந்துக்கோங்க.

ரவி said...

எஸ் ஸார்.

☀நான் ஆதவன்☀ said...

நாங்களும் ரவுடி தானுங்கோ

http://nanaadhavan.blogspot.com/2009/10/500-2009.html

நந்தாகுமாரன் said...

போட்டிக்கான என் கதை இங்கே:

http://nundhaa.blogspot.com/2009/10/blog-post_26.html

குகன் said...

போட்டிக்கான என் கதை இங்கே:

http://guhankatturai.blogspot.com/2009/10/blog-post_26.html

நன்றி,
குகன்

ஈ ரா said...

நண்பர்களே,

போட்டிக்காக நான் எழுதிய சிறுகதையை இங்கே காணலாம்..


http://padikkathavan.blogspot.com/2009/10/500-2009.html

SurveySan said...

நன்றி. புதிய கதைகள் ஆட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன்.

சரிபார்க்கவும்.

டிஸ்கி. நான் இன்னும் படிக்க ஆரம்பிக்கலை. கூடிய விரைவில் வாரேன் ;)

பினாத்தல் சுரேஷ் said...

கொஞ்சம் லேட்டுதான்.

ஆனாலும் உள்ளேன் ஐயா.

லின்க் நாளை காலை தருகிறேன்.

பினாத்தல் சுரேஷ் said...

http://penathal.blogspot.com/2009/10/blog-post.html

போட்டுட்டோமில்ல!

SurveySan said...

பினாத்தல், நன்னி.

கட்டத்துல சேத்தாச்சு.

மெதுவா வந்து படிக்கறேன் ;)

ரவி said...

http://tvpravi.blogspot.com/2009/10/blog-post_29.html

இது தான் கதையின் சுட்டி. சீக்கிரம் பரிசு குடுங்க. ஸ்கைப் க்ரடிட் வாங்கனும்.

வண்டிக்காரன் said...

நாங்களும் போட்டியில குதிசிருக்கோம் கணக்குல எடுத்துங்கோங்க ..

http://vandikkaran.blogspot.com/2009/10/500-2009.html

Thirumalai Kandasami said...

முதல் சிறுகதையுடன்- களத்தில்.
http://enathupayanangal.blogspot.com/2009/10/blog-post.html

பச்சை நிற பக்கெட் - ஒரு உண்மையின் தழுவல் - சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009

SurveySan said...

நன்றீஸ்.

கட்டத்தில் ஏத்தியாச்சு. சரிபார்க்கவும்.

கிஷோர் said...

குழப்பத்துக்கு மன்னிக்கவும். கதையில் எதிர்பார்த்த நச் ஃபேக்டர் வராததால், முடிவை லேசாக மாற்றி இருக்கிறேன்.

அசைன்மென்ட் - கிஷோர்

Thirumalai Kandasami said...

என் கதையை சேர்த்ததிற்கு நன்றி.இது என் முதல் சிறு கதை.

வண்டிக்காரன் said...

ரொம்ப நன்றிங்க ..

மணிகண்டன் said...

500 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

என்னுடைய வின்னிங் ஸ்டோரி.

http://thodar.blogspot.com/2009/10/500-2009.html

நன்றி செந்தமிழ் ரவி.

மணிகண்டன் said...

me was the 100 !

சங்கர் said...

முதல்ல 500க்கு வாழ்த்துக்கள்,

அண்ணா என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்குங்க

http://nee-kelen.blogspot.com/2009/10/blog-post_30.html

SurveySan said...

புதிய கதைகளை சேத்தாச்சு.

சத்யராஜ்குமார் said...

போட்டிக்காக எழுதிய என்னுடைய கதை:
http://inru.wordpress.com/2009/10/30/million/

பூங்கோதை said...

போட்டிக்காக எழுதாத என் கதை.

http://madras-talkies.blogspot.com/2009/10/blog-post.html

Vinitha said...

போட்டிக்காக என் கதை.

டிஸ்லெக்சியா

காலையிலே இந்த இணைப்பு போட மறந்துட்டேன்!

--
வினிதா

வருண் said...

Mr.Surveysan,

Here is my story for the competition!

http://timeforsomelove.blogspot.com/2009/10/500.html

Thanks for the opportunity!

-varuN

Unknown said...

நானும் ஜோதியில. பல நாளா எழுதி கடைசியா பப்ளிஷும் செய்தாச்சு. இன்னும் நிறைய பேரு எழுதியிருக்காங்க போலிருக்கு. அதெல்லாமும் படிக்கணும்.... அவங்களுக்கும் வாழ்த்துகள்.

'அடேங்கப்பா',
'ஆகாககாகா, யோசிக்க வச்சுட்டீங்க',
'ஆஹா! என்னா சிந்தனை. பிறந்த பயனை அடைந்தேன்!'

. said...

மெய்யாலுமே!!! சிறுகதை எழுதுவது ஈசியில்ல.
கஷ்டம்னு இப்பத்தான் தெரியுது.

தெரிய வைச்ச சர்வேசனுக்கு நன்றி.

குருவுக்கு தெரியாமல் அவரையே குருவாய் கொள்ளுவது ஏகலைவன் டைப்.
வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி என்பது எக்கச்சக்கமான கஷ்டக் கேசு
எங்களை எல்லாம் சிறுகடை(கதை) தொறக்கச் சொன்ன சர்வேசன் இது புது ஸ்டைல்.

தேங்க்ஸ்சுங்கோ !!!!

எனது படைப்பு இதோ....

செய்தித்தாள் சொல்லாத கதை – ஜனனி

லிங்க் இதோ....

http://padukali.blogspot.com/2009/10/blog-post_29.html

SurveySan said...

Danks everyone for the stories.

i am pudunging Aaaaaani 24 X 7. I will plug the new stories sometime soon ;)

i am thrilled to see the great participation. :)

SurveySan said...

சேத்தாச்சு. சரிபார்க்கவும்.

பூங்கோத, சேக்கலை. சரியா சொல்லவும்? :)

SurveySan said...

பூங்கோதை,

//போட்டிக்காக எழுதாத என் கதை.//

Y? :)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

எக்ஸ்பிரஸ் இளமதி

நானும் போட்டியில் குதித்துவிட்டேன்

கே. பி. ஜனா... said...

நல்ல போட்டி. நானும்உள்ளேன் ஐயா! -- கே. பி. ஜனா

Rekha raghavan said...

நானும் உள்ளேன் ஐயா.

ரேகா ராகவன்.

சயந்தன் said...

நானும்போட்டியில் குதித்து விட்டேன். சிறுகதையும்போட்டுவிட்டேன.

சயந்தன் said...

http://nathivazhi.blogspot.com/2009/11/blog-post_03.html

Rekha raghavan said...

போட்டிக்கான என்னுடைய கதை இங்கே :

http://anbesivam2009.blogspot.com/2009/11/blog-post_02.html

படிக்கிறவங்க கருத்து சொல்லிட்டு போங்க...

ரேகா ராகவன்

SurveySan said...

சேத்தாச்சு. சரிபார்க்கவும்.

நன்றீஸ்.

Unknown said...

சர்வேசன் அவர்களே,

நானும் ஒரு கதை எழுதியுள்ளேன்.
உங்கள் லிஸ்டில்சேர்த்துக்கொள்ளவும்.

என் முகவரி:
http://raviaditya.blogspot.com/2009/11/blog-post_04.html

தலைப்பு:வசவும் திட்டும் சாம்பலும்

கே. பி. ஜனா... said...

போட்டிக்கான என் கதை இங்கே...

http://kbjana.blogspot.com/2009/11/72877629.html

- கே.பி.ஜனார்த்தனன்

SurveySan said...

added. pls verify.

சதங்கா (Sathanga) said...

கதாசிரியர்களின் ஆர்வத்தைப் பார்க்கும்போது, நிறைய எழுதத் தோன்றுகிறது. எல்லோரையும் எழுதத்தூண்டிய உங்களுக்கு இந்தக் "கட்டழகி..." சமர்ப்பணம், 'நச்' வடிவில்.

இரும்புத்திரை said...

போட்டிக்கான கதை
ஜாதி கேடயம்

Cable சங்கர் said...

இதோ போட்டிக்கான என் கதை....http://cablesankar.blogspot.com/2009/11/13.html- காமம் கொல்

வெங்கட் நாகராஜ் said...

போட்டிக்கான என்னுடைய கதை இங்கே :

http://venkatnagaraj.blogspot.com/2009/11/blog-post_06.html

படிக்கிறவங்க கருத்து சொல்லிட்டு போங்க...

வெங்கட், புது தில்லி

ராம்குமார் - அமுதன் said...

அன்பின் சர்வேசன்... நா எழுதுன மூணுல இதயே லாக் பண்ணிக்கோங்க. இதுதான் போட்டிக்கான என்னுடைய கதை....

கடைசி இரவு - சர்வேசனின் நச்னு ஒரு கதை போட்டிக்காக III...

http://nellainanban.blogspot.com/2009/11/blog-post.html

3. ராஸ்கல்ல் - ராம்குமார் அமுதன்

இத மாத்தி இந்த லிங்க் கொடுத்துருங்க....

நன்றிகளுடன், ராம்குமார் அமுதன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

அண்ணே.. இது என்னோட கதைண்ணே.. வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்ததுக்கு நன்றி..:-))))

http://ponniyinselvan-mkp.blogspot.com/2009/11/500-2009.html

Prasanna said...

இதோ என் பங்களிப்பு -

http://tamilkothu.blogspot.com/2009/10/blog-post_20.html

செலக்ட் ஆகுதோ இல்லையோ.. பங்கேற்பு தானே முக்கியம் (எப்டி சமாளிச்சேன் பாத்தீங்களா)

புதுவை சந்திரஹரி said...

போட்டிக்கான என்னுடைய கதை இங்கே :

http://haridhass.blogspot.com/2009/11/blog-post_8591.html

படிக்கிறவங்க கருத்து சொல்லிட்டு போங்க...

புதுவை சந்திரஹரி

புதுவை சந்திரஹரி said...

போட்டிக்கான என்னுடைய கதை இங்கே :

http://haridhass.blogspot.com/2009/11/blog-post_8591.html

படிக்கிறவங்க கருத்து சொல்லிட்டு போங்க...

புதுவை சந்திரஹரி

ஜெட்லி... said...

உள்ளேன்
அய்யா...

SurveySan said...

அனைவருக்கும் நன்றீஸ்.

சேத்தாச்சு, சரிபார்க்கவும்.

சேராதவங்க, சேரவும்.

Vidhoosh said...

http://vidhoosh.blogspot.com/2009/11/500-2009.html

இந்தாங்க இன்னொரு கதையும் சேர்த்துக்கோங்க...

--வித்யா

ராம்குமார் - அமுதன் said...
This comment has been removed by the author.
ராம்குமார் - அமுதன் said...

அன்பின் சர்வேசன்... என்னோட கதைக்கான லிங் வொர்க் ஆகல... மேலும் அந்த ராஸ்கல்ன்ற தலைப்ப "கடைசி இரவு"ன்னு புது கதையோட தலைப்ப மாத்தி குடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்.... இல்லேன்னா இத கடசீல சேத்துக்கிட்டீங்கன்னாலும் பரவா இல்ல... ஆனா இந்த கதைய லாக் பண்ணிக்குங்க.... லிங்க்ல கடசீல உள்ள என்ட் டாக் Bற தூக்கிடுங்க....

http://nellainanban.blogspot.com/2009/11/blog-post.html

கடைசி இரவு - சர்வேசனின் நச்னு ஒரு கதை போட்டிக்காக III...

Beski said...

இறுதி கதை இன்னும் முடிவு செய்யவில்லை...

முயற்சி 1
நறுமண தேவதை - சிறுகதை

முயற்சி 2
ஒரு நல்லவனின் பிரார்த்தனை - சிறுகதை

Thamira said...

20$ செக்கை ரெடிபண்ணிக்கொண்டு என் வலையிலிருக்கும் கதையை படிக்க வரவும்.. ஹிஹி..

நானும் களத்தில் குதிக்கிறேன்.

'கறுப்பு ஞாபகம்' என்ற என் கதை இதோ..

http://www.aathi-thamira.com/2009/11/blog-post_09.html

போட்டி இனிதே நிகழ்ந்தேற நல்வாழ்த்துகள்.!

வேதாளன் said...
This comment has been removed by the author.
வேதாளன் said...

போட்டிக்காக... சன்யாசம் கூறாமல் கொள்

கிரகம் said...

போட்டிக்கான என்னுடைய சிறுகதையை பார்க்க இங்கே சொடுக்கவும்

http://graham-vigneshbabu.blogspot.com/2009/11/blog-post.html

Prathap Kumar S. said...

சர்வேசரே...2007 ல் கலந்துகிட்டு வெறும் சட்டியை கொடுத்து அனுப்பிட்டீங்க... இந்த வருஷமாவது ஏதாச்சும் கிடைக்குமா??? கதையை அனுப்புறேன்...விரைவில்...

MSV Muthu said...

என்னுடைய‌ க‌தையையும் போட்டிக்குச் சேத்துக்கோங்க‌ப்பா:
லாரி விபத்து:
http://www.kuralvalai.com/2009/11/blog-post_08.html

Prathap Kumar S. said...

இந்தாருங்கள் என் கதை...
எங்கே என்பரிசு...எங்கே என் பரிசு...

http://vimarsagan1.blogspot.com/2009/11/500.html

SurveySan said...

சேத்தாச்சு, சரிபார்க்கவும்.

ரெண்டு கதை எழுதினவங்க, ஒரு கதையை மட்டும் நவம்பர் 15க்குள் லாக் செய்யவும்.

Vidhoosh said...

i lock ஜாக்கிரதை.. மழை பெய்கிறது - சர்வேசன்500

-vidhya

ஸ்வர்ணரேக்கா said...

இதோ.. என் பங்கிற்கு நானும் ஒரு கதையை போட்டுருக்கேன்...

http://swarnarekha-thegoldenline.blogspot.com/2009/11/500-2009.html

தமிழினியன் said...

நானும் போட்டிக்கு ஒரு கதையை போட்டுட்டேன்.

கதையோட link
http://ennaatkuripugal.blogspot.com/2009/11/blog-post_11.html

SurveySan said...

51 ஆச்சு. நன்றீஸ்.

சேத்தாச்சு. சரிபார்கவும்.

CS. Mohan Kumar said...

அன்புள்ள சர்வேசன்,

என் பெயர் மோகன் குமார்; சென்னையில் ஒரு நிறுவனத்தில் Legal Head & Company Secretary ஆக உள்ளேன்.

சர்வேசன் கதை போட்டிக்காக ஒரு சிறு கதையை எழுதி எனது blog-ல் வெளியிட்டுள்ளேன். லிங்க்: http://veeduthirumbal.blogspot.com/

தாங்கள் கூறிய படி title-ல் "சர்வேசன் கதை போட்டிக்காக" என குறிப்பிட்டுளேன். வேறு விதமாக லிங்க் தர வேண்டுமெனில் தயவு செய்து கூறவும்.

தங்களின் இப்பணி சிறப்பானது. தங்கள் blogகுறித்து தனியே பிறகு பின்னூட்டம் இடுகிறேன்.

நன்றி
நேசமுடன்

மோகன் குமார்
http://veeduthirumbal.blogspot.com/

முரளிகண்ணன் said...

என்னுடைய கதை - சட்டை

http://muralikkannan.blogspot.com/2009/11/blog-post_11.html

நன்றி.

Swami said...

அன்புள்ள சர்வேசன்னுக்கு,

என்னுடைய கதை - ஐ லவ் யூ

போட்டியில் சேர்த்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்

அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me

பின்னோக்கி said...

500 வதுக்கு வாழ்த்துக்கள்.

இதோ என் கதை

http://pinnokki.blogspot.com/2009/11/blog-post_11.html

இப்பவே மத்தவங்க இந்த கதைய படிச்சுட்டு அவங்க கதைய வாபஸ் வாங்குனா நான் பொறுப்பில்லை :)

SurveySan said...

55 ஆயிருக்கு. அடேங்கப்பா.

எல்லாத்தையும் சேத்தாச்சு. சரிபார்க்கவும்.

பல ரவுடிகள் களத்தில் கீராங்க. கண்ணக் கட்டுது. :)

Anonymous said...

வணக்கம் சர்வேசன்,

என்னுடைய போட்டிக்கான சிறுகதை தொடுப்பை இணைத்துளேன்

http://adaleru.wordpress.com/2009/11/12/aparanjitha/

cdhurai said...

Dear sir,

i became a new story writer by means of ur competition. its my first first story named " Muthal Kadhal( First Love) " in Tamil only... kindly view and consider my story...Muthal Kadhal link:

http://idhayame.blogspot.com/2009/11/blog-post_12.html

thanks and regards
C.Chelladurai

பெசொவி said...

//Surveysan said....
ரெண்டு கதை எழுதினவங்க, ஒரு கதையை மட்டும் நவம்பர் 15க்குள் லாக் செய்யவும்//


I Lock கண்ணால் காண்பதும்........
http://ulagamahauthamar.blogspot.com/2009/11/blog-post_07.html
நன்றி.
(தொந்தரவுக்கு மன்னிக்கவும்)

நசரேயன் said...

ஐயா நானும் ஒன்னு எழுதி இருக்கேன், இங்கே இருக்கு

http://yesuvadian.blogspot.com/2009/11
/blog-post_11.html

SurveySan said...

எல்லாத்தையும் சேத்தாச்சு. சரிபார்க்கவும் :)

SurveySan said...

அனுப்பாதவங்க அனுப்புங்கப்பூ. கல்லாவ மூடப் போறேன், ஞாயித்திக் கெழம :)

MJV said...

முதலில் 500 பதிவுக்கு என் வாழ்த்துக்கள். கொஞ்சம் தாமதமாக தான் தெரிந்து கொண்டேன் இந்த போட்டி பற்றி. அதற்கான என் பங்களிப்பு இந்த முகவரியில் உள்ளது. என்னையும் ஆட்டத்தில் சேத்துகோங்க!!!

இயந்திரம்...
http://mjvs.blogspot.com/2009/11/blog-post_13.html

அன்புடன் அருணா said...

நானும் வந்துட்டேன்....!லேட்டாயிரல்லியே
?????என் கதை இங்கே!

http://naanirakkappokiraen-aruna.blogspot.com/2009/10/blog-post_21.html

Swami said...

கதை #54 ஐ லவ் யூ - Swami

இதில் என் பெயர் Swami பதிலாக சுவாசிகா என்று மாற்றும்படி கேட்டுக் கொள்கிறேன்

அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me

சாணக்கியன் said...

நான் போட்டிக்கு சமர்பிக்கும் கதை

http://vurathasindanai.blogspot.com/2009/11/blog-post_14.html

தலைப்பு: நடிகையின் கதை - ’A' சிறுகதை

SurveySan said...

சேத்தாச்சு, சரிபார்க்கவும்.

இன்னும் சில மணி நேரங்களில், கடை அடைக்கப்படும்.
புதிய கதைகள் சேர்த்துக்கொள்ளப் படமாட்டா :)

அனுப்பாதவங்க உடனே அனுப்புங்க. கதைய மாத்த நெனைக்கறவங்க, உடனே சொல்லுங்க.

யோசிப்பவர் said...

இன்னும் பதினொரு மணி நேரம் இருக்கா. எனது வலைப்பதிவுகளில் எழுதும் ஸ்ரீதேவி ஒரு கதை எழுதியிருக்கிறார். நானும் ஒன்று எழுதலாம் என்றிருக்கிறேன். இரண்டு கதைகளையும் ஒரே ப்ளாக்கில் வெளியிடலாமா?

இரா. வசந்த குமார். said...

அன்பு சர்வேசன்,

இந்தக் கதையையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Blackhole

Shakthiprabha (Prabha Sridhar) said...

என்னையும் ஆட்டத்துல சேத்துக்கோங்க. போட்டிக்கு என்னுடைய கதை இங்கே.

பள்ளிக்கு போவ மாட்டேன்

நன்றி.

அன்புடன்,
ஷக்திப்ரபா

தமிழினியன் said...

என்னுடைய கதையின் உரல் மாறிவிட்டது (வலைப்பதிவின் முகவரியை மாற்றியதால்) தயவு செய்து என்னுடைய கதையின் முகவரியை மாற்றிக்கொள்ளவும். சிரமத்திற்கு மண்ணிக்கவும்.

என்னுடைய கதையை 51வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.
கதையின் தலைப்பு : நானே நானா

கதையின்தற்போதைய முகவரி: http://supathamiziniyan.blogspot.com/2009/11/blog-post_11.html

thamizhparavai said...

நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்....
என்னுடைய பங்குக் கதை இதோ....
http://thamizhparavai.blogspot.com/2009/11/blog-post_15.html

parameswary namebley said...

என்னால் முடிந்த ஒரு கற்பனைகுதிரை..


http://parameswarin.blogspot.com/2009/11/500-2009.html

நீச்சல்காரன் said...

புதிய கதாசிரியர்களை உருவாக்கும் இந்த நல்லமுயற்சிக்கு வாழ்த்துக்கள்
எனது பங்களிப்பாகவும் போட்டிக்காகவும் எனது கதை நசிந்தப் பூக்கள்
கலந்துகொள்கிற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

உண்மைத்தமிழன் said...

அண்ணே..

இதோ என்னோட கதை..

http://truetamilans.blogspot.com/2009/11/blog-post_15.html

SurveySan said...

யோசிப்பவர், ஓ.கே. அனுப்புங்க.

15 மணி நேரம் இருக்கு.

SurveySan said...

சேத்தாச்சு சரிபார்க்கவும், நன்னி.

யோசிப்பவர் said...

//15 மணி நேரம் இருக்கு.//
15 மணி நேரமா? சாமி, IST தானே சொன்னீங்க?! அப்ப இன்னும் ஒன்றரை மணி நேரம்தானே இருக்கு?! ஆனா உங்க ப்ளாக் டைம் படி இன்னும் 15 மணி நேரம் இருக்கு. எது சரியான டைம். கொஞ்சம் தெளிவுபடுத்துங்க சாமியோவ்!!

யோசிப்பவர் said...

ஸ்ரீதேவி எழுதிய சிறுகதை - ஹோம் வொர்க்

யோசிப்பவர் said...

என்னுடைய பங்களிப்பு - நிபுணன்

- யோசிப்பவர்.

Sridhar V said...

நம்ம படைப்பையும் போட்டியில் சேத்துக்க முடியுமா பாருங்க தலைவரே.

http://www.sridharblogs.com/2009/11/blog-post.html

போட்டி சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.

SurveySan said...

யோசிப்பவர், சேத்தாச்சு.

ஸ்ரீதர், உங்களுதும்.

IST சொன்னது மறந்துடுத்து. யாதும் ஊரே யாவரும் கேளிர். ஸோ, இப்போதைக்கு PST வச்சுக்கலாம்.
இன்னும் 1 மணி நேரத்தில், கடையை மூடிடலாம் ;)

lailmu மாறவர்மன் said...

வாழ்த்துகள்!

ஒரு நாள் லேட்டா பாத்துட்டேன் இல்லென்ன நானும் பங்கெடுத்திருப்பேன்

lailmu மாறவர்மன் said...

வாழ்த்துகள்!

ஒரு நாள் லேட்டா பாத்துட்டேன் இல்லேன்னா நானும் பங்கெடுத்திருப்பேன்...

இப்போதான் கதை-ன்னு எழுத ஆரம்பித்திருக்கிறேன்.

இது என் முதல் படைப்பு

http://ahappramam.wordpress.com/2009/11/02/eqh-story-by-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d/"

படிச்சுட்டு ஒரு கருத்து சொன்னீங்கன்னா இன்னும் கொஞ்சம் நல்லா எழுத முயற்சிக்கிறேன்...

SurveySan said...

30 கதைகள் படிச்சாச்சு. விரைவில் மற்றவையை முடித்த பின், அடுத்த கட்ட நடவடிக்கைகள் வெளியிடப்படும் :)

SurveySan said...

40 read so far. 30 more to go.

will announce the next activities on Monday :)

SurveySan said...

read all stories. next announcement wiill be posted monday AM.

jscjohny said...

santhosham! Thangal muyarchi thodarattum!

jscjohny said...

kathai pottithane itho oru super dooper katahi solren

oru oorla oru samiyar iruntharam!

ayyayyo theriyama sollitten!
appurama parkalam!
kathai solrathu romba kashtamappa!