recent posts...

Saturday, June 09, 2007

Brahminical - Final Take!

It is Brahminical arrogance உண்மையான ஆதங்கத்தில் போடப் பட்ட பதிவு.

நண்பனின் திருமணத்துக்கு கும்பலாக குருவாயூர் சென்றிருந்தோம். திருமணம் முடிந்ததும் நண்பன் புடைசூழ அம்பலத்துக்குள் புது மனைவியுடன் ஆசி பெறச் சென்றான்.
நண்பர்கள் குழுவில் இருந்த சில christian நண்பர்கள், கோயிலின் வாசலில் இருந்த "இந்துக்கள் மட்டும்" என்ற சிகப்பு போர்டை பார்த்து வாசலிலேயே நின்று விட்டார்கள். "போயிட்டு வாங்க மச்சி, நாங்க கடையெல்லாம் சுத்தி பாத்துட்டு வரோம்னு" போயிட்டாங்க.
நண்பர்கள் எல்லாருக்கும், ஒரு கசப்பான அனுபவம் அது.
என்னடா இது 21ஆம் நூற்றாண்டில் கூட இந்த பிறப்பை வைத்து செய்யப்படும் 'ஒதுக்குதலுக்கு' என்ன பெரிய புடலங்காய் காரணம் இருக்க முடியும் என்ற பெரிய கேள்வி எழுந்தது.

வயலார் ரவி இதை மீண்டும் இப்பொழுது கேட்டபோது பழைய ஞாபகங்கள் கிளரப்பட்டு, அதனால் வந்த பதிவுதான் அது. இதன் பின்னணியில் politics இருந்துவிட்டுப் போகட்டும்.
ஒரு மனிதனின், பிறப்பை வைத்துக் கொண்டு, செயல்படும் இந்த மாதிரி "கோட்ப்பாடுகள்" யாருக்கு என்ன பலனைத் தருகிறது?

பல நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது இந்த குருவாயூர்/இராமேஸ்வரம் கோயில்கள். ( there is a myth that Guruvayoor main temple was built some 5000 years ago by a divine architect - Wiki).
பாபரும், East India companyஉம் வருவதர்க்கு முன்னாலேயே இந்த கோட்பாடுகள் போடப் பட்டிருக்கிறது. யாரை கோயிலுக்கு வரவிடாமல் தடுக்க இந்த கோட்பாடுகள்?

யாருக்கு என்ன நன்மை இதனால்? தவறான கோட்பாடுகள் என்று இன்று உணரும் பட்சத்தில் இவற்றை ஏன் தூக்கி எறியக் கூடாது?

இந்த 'Brahminical' கோட்பாட்டினைப் பற்றிய சரியான understanding கிடைக்க போடப்படும் கடைசி பதிவு இது. விவரம் தெரிஞ்சவங்க நச்சுன்னு சொல்லுங்க (யாரும் இதுவரை, இந்த கோட்பாட்டினால் என்ன நன்மைன்னு சொல்லல).

நோ ஜல்லீஸ்/கும்மீஸ். strictly no to கேடீஸ்வரன்ஸ் ப்ளீஸ். நல்ல வாதங்கள் வெல்க்கம்!

நமக்குத் தெரியாத சில நல்ல காரணங்களால், இந்த கோட்பாடு ஞாயமானதாகக் கூட இருக்கலாம். அந்த நியாயமான காரணங்கள் எவை? இந்த கோட்பாட்டை ஒரு இந்துவாகிய நான் இன்னும் ஏன் தாங்கிப் பிடிக்க வேண்டும்?

Help please!

1) இது தொடர்பான விளக்கங்கள் சில இங்கே.
2) மேலும் சில கேள்விகள் இங்கே
3) ???

நன்றீஸ்!!!

116 comments:

SurveySan said...

no final take'rs?

கோவி.கண்ணன் said...

//
பாபரும், East India companyஉம் வருவதர்க்கு முன்னாலேயே இந்த கோட்பாடுகள் போடப் பட்டிருக்கிறது. யாரை கோயிலுக்கு வரவிடாமல் தடுக்க இந்த கோட்பாடுகள்?
//

இந்துமதம் என்று இன்று ஒருங்கிணைக்கப்பட்ட இந்திய சமயங்கள் மற்ற மதங்கள் தோன்றுவதற்கு முன்பே உருவானது. எனவே வேற்று மதத்தினரை கோவிலுக்குள் அனுமதிக்க மாட்டோம் என்பதெல்லாம் பின்னால் தான் ஏற்பட்டு இருக்க வேண்டும்.

இதற்கு காரணம் என்னவென்று சற்று கூர்ந்து பார்த்தால் உண்மை விளங்கும். அதாவது மாற்று மதத்திற்கு மாறியவர்களில் 90 விழுக்காட்டினர் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்களே. அவர்கள் மதம் மாறி இருந்தாலும் அவர்களை தாழ்த்தப்பட்டவர்களாகவே பார்த்ததால் இவ்வாறு எழுதி வைத்து இருக்கக் கூடும்.

பிற மதத்தினரில் எவர் தாழ்த்தப்பட்டவர் என்று கண்டுபிடிப்பது சிரமம். அதற்காக ஒட்டு மொத்தமாக மாற்று மதத்தினருக்கு அனுமதி மறுத்திருக்க முடியும் அல்லது

தாழ்த்தப்பட்டவர்களை சேர்த்துக் கொண்ட மதம் என்பதால் பிற மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அனுமதி இல்லை.

ஆகமம் விதி எல்லாம் பொய். பகவத் கீதைப்படி "மதங்கள் எல்லாம் என் கழுத்து மணி போன்றவை" என்று கீதை உபதேசத்தைப் படித்தவர்களாக குருவாயூர் கண்ணன் கோவிலை நிர்வகிப்பர்கள் அறிந்திருந்தால் இந்த இழி செயலை செய்திருக்க மாட்டார்கள்.

( Out of பதிவு: தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்களாக பின்னால் தான் அவர்களின் அனுமதி இல்லாமலேயே இணைக்கப்பட்டனர். அவர்களை இந்துக்களாகவே வைத்திருக்கத்தான் இந்து தலித்துக்களுக்கு மட்டுமே SC/ST களுக்கான சலுகைகளும் கிடைக்கிறது.)

SurveySan said...

கோவி, அருமையாச் சொல்லியிருக்கீங்க.
எனக்கும் இந்த மாதிரிதான் ஒரு காரணம் இருப்பதா தோணுது.

பாப்போம், வேற யாராவது இந்த கோட்பாட்டை ஞாயப்படுத்தர மாதிரி நல்ல விளக்கங்கள் சொல்றாங்களான்னு.

லிஸ்ட் போட்டு கூப்பிட்டும், நிறையப் பேர் கருத்த சொல்லல. ஈ.மடல் அனுப்பிக் கேக்கணுமா? :)

நன்றி!

Anonymous said...

உண்மையில் எந்த ஒரு வழிபாட்டு தலத்துக்கும் யாரும் (எந்த மதத்தை அல்லது சாதியை சார்ந்தவராக இருப்பினும்) பக்தி அப்பாற்பட்டு போவதில்லை. பக்தி கொஞ்சமேனும் இருந்தால் தான் உள்ளே நுழைவார்கள். நம்பிக்கை அடிப்படையில் எந்த ஒரு மனிதனுக்கும் எந்த ஒரு வழிபாட்டுத்தலங்களுக்குப் போக உரிமை உண்டு. இந்த குருவாயூர் விசயத்தில் அது மறுக்கப்படுவது வருத்தமான விசயம். உலகத்தின் அனைத்து மதத்தின் தத்துவங்களையும் உள்ளடக்கிய வாழும் நெறி என இந்து மதத்தை அடையாளங்காட்டுபவர்கள் இந்த விசயத்தில், "மற்ற மதத்தினர்" என கூறுவது ஒரு முரண் நகை.

மாசிலா said...

//சில christian நண்பர்கள், கோயிலின் வாசலில் இருந்த "இந்துக்கள் மட்டும்" என்ற சிகப்பு போர்டை பார்த்து வாசலிலேயே நின்று விட்டார்கள்//
மனதை மிகவும் நோகடித்த வரிகள். மனிதர்களின் தனிப்பட்ட நட்பு மற்றும் உறவுகளில் கூட மதங்கள் புகுந்து பிரிவினை வாத்தையே உருவாக்குகின்றன. இது மிகவும் கண்டிக்கத் தக்கதே.

VSK said...

//நண்பர்கள் குழுவில் இருந்த சில christian நண்பர்கள், கோயிலின் வாசலில் இருந்த "இந்துக்கள் மட்டும்" என்ற சிகப்பு போர்டை பார்த்து வாசலிலேயே நின்று விட்டார்கள். "போயிட்டு வாங்க மச்சி, நாங்க கடையெல்லாம் சுத்தி பாத்துட்டு வரோம்னு" போயிட்டாங்க. //

இதுலியே உங்க கேள்விக்கான பதில் இருக்குன்னு நினைக்கிறேன்.

அவங்களுக்கு இருக்கும் புரிதல் கூட நம்மவர்க்கு இல்லாதது வருந்தத் தக்கதே.

அனுமதித்திருந்தால் உள்ளே போயிருப்பார்கள்.
பக்தியினால் அல்ல.
ஒரு ஆர்வத்தினால் மட்டுமே.
இல்லையெனத் தெரிந்ததும், மற்ற வேலை பார்க்கச் சென்று விட்டார்கள்.

மற்ற இடங்களைப் பற்றி இங்கு விவாதம் இல்லை.

கோவில் என்பது ஒரு மத சம்பந்தப்பட்ட இடம்.
அங்கு செல்ல நம்பிக்கையும், பக்தியும் மட்டுமே வேண்டும்.

சுற்றுலாத்தலம் போல அல்ல.

இதை மாற்ற விரும்புவோர், பக்கத்தில் ஒரு புதுக் கோடு போடவேண்டுமே தவிர, இருக்கும் கோட்டை அழிக்க முற்படலாகாது.

இது என் கருத்து.
நன்றி.

SurveySan said...

VSK,

/////இதுலியே உங்க கேள்விக்கான பதில் இருக்குன்னு நினைக்கிறேன்.
அவங்களுக்கு இருக்கும் புரிதல் கூட நம்மவர்க்கு இல்லாதது வருந்தத் தக்கதே.
அனுமதித்திருந்தால் உள்ளே போயிருப்பார்கள்.
பக்தியினால் அல்ல.
ஒரு ஆர்வத்தினால் மட்டுமே.
இல்லையெனத் தெரிந்ததும், மற்ற வேலை பார்க்கச் சென்று விட்டார்கள்.
////

படிக்கர காலத்துல, வீட்டுக்கு பக்கத்துல இருக்கர ஒரு மலைக்கோயிலுக்கு அடிக்கடி போவேன். பக்தி பீரிட்டு போறதெல்லாம் இல்லை. அந்த ரம்யமான இடத்தில் கிடைக்கும் ஒரு வித அமைதி பிடிப்பதால் போவோம். மேலே சொன்ன நண்பர்களில் பலரும் உடன் வருவர். அவங்களுக்கும் அந்த அமைதி பிடிக்கும். குறிப்பா அந்த கும்பலில் உள்ள ஒரு கிருத்துவ நண்பனுக்கு, கோயிலுக்குள் நடக்கும் ஆரத்திகள், மேளம், கற்பூர வாசம் இதெல்லாம் ரொம்பவே பிடிக்கும்.
முருகன் கோயில்தான் அது. அந்த நண்பனுக்கு, எனக்கு இருப்பதை விட ஈடுபாடு அதிகமாகவே இருந்தது. இன்றும் ஊருக்குச் செல்லும்போது உடன் வருவான்.

குருவாயூருக்கு, நண்பனின் திருமணத்துக்கு செல்லலாம் என்றதும், முதல் ஆளா ரெடியானவனும் அவந்தான்.
எங்களுக்கு, இந்த, 'மதக் கோட்பாடுகள்' பற்றி எல்லாம் தெரியாது அப்பொழுது.
கூட்டத்தில் ஒரு நாஸரும் இருந்தான்.

குருவாயூர், கோயிலுக்குள் நடக்கும் செண்டை மேளம் + மத்த விஷயங்கள் அட்டகாசமா இருக்கு. கோயிலின் வாசலில் இருந்த போர்டை பார்த்து, நண்பர்களில் ஒருவன், "நீங்க போயிட்டு வாங்க மச்சி. நாங்க கடைய சுத்தி பாத்துட்டு சத்திரத்துக்கு வந்திடறோம்"னு சொன்னான்.
அந்த கிருஸ்தவ நண்பனும் மறுப்பேதும் சொல்லாமல் அவர்களுடன் சென்று விட்டான். ஆனால், அவன் முகம் சென்ற விதமும், மற்றவர்கள் மனதில் ஏற்பட்ட கசப்பும், ஆயிரம் கேள்விகளும் எளிதில் மறப்பவை அல்ல.

அத்த வுடுங்க. அவங்க வேணா 'சுற்றுலாவுக்கு' வந்தவங்க, உள்ளே விட அவசியம் இல்லன்னு சொனீங்கன்னா - I agree, no objection/arguments.

/////கோவில் என்பது ஒரு மத சம்பந்தப்பட்ட இடம்.
அங்கு செல்ல நம்பிக்கையும், பக்தியும் மட்டுமே வேண்டும்.////

உண்மையான பக்தியுடன் வரவங்கள ஏன் விடக்கூடாது?
ஏன் இந்த வீம்புக் கோட்பாடுகள்? யாரை சந்தோஷப் படுத்த போடப் பட்டவை இவை எல்லாம்?

மனித நேயத்தை வளர்க்க தடையாக இருக்கும் எந்த கோட்பாடும் தேவை இல்லை என்பது என் கருத்து.

குருவாயூரப்பன், ஒருவன் இந்துவா,கிருஸ்துவா,இஸ்லாமியனா என்று பகுந்து பார்த்து தன் அருளை பாலிக்க மாட்டார் என்று நினைக்கிறேன். இல்லாத ஒரு பாகுபாட்டை, ஏன் மனிதன் உருவாக்க வேண்டும்? அந்த முதல் கோடு ஏன் போடப்பட்டது?

Thanks for your sensible thoughts!

VSK said...

நான் சொல்ல வந்ததெல்லாம்,
எல்லா மதங்களிலும் இது போன்ற கட்டுப்பாடுகள்[இது கோட்பாடல்ல] இருப்பதை அறிந்தைருப்பதால், மற்ர மதத்தினர் இதனை உணர்ந்து மதிப்பார்கள்.... ஏனெனில், அவர்களுக்கும் இறை நம்பிக்கை இருப்பதால்... என்பதையே!

அமைதியை ரசிக்கும் மலைக்கோவில் சூழ்நிலையும், குருவாயூருமொன்றாகாது.

மேலும், கேரளத்திற்கும், தமிழகத்திற்கும் வழிபாடு முறைகளில் பல வேறுபாடுகள் உண்டு.

அதனை மதிப்பதே அமைதிக்கும், இறைக்கும் நாம் செய்யக்கூடிய ஒன்று.

குருவாயூரப்பன் மேல் முழு நம்பிக்கை வைத்து, தன் நம்பிக்கையைத் துறந்து வர உங்கள் நண்பர் ஒப்ப்பமாட்டார் என நம்புகிறேன்.

வழிபாட்டுத்தலங்கள், சுற்றுலாத்தலங்கள் போலல்லாது, அவரவர் நம்பிக்கைக்கு மட்டுமே உட்பட்டிருப்பதே , அதனை மதித்து நடப்பதே, மத நல்லிணக்கம் என நான் கருதுகிறேன்.
நன்றி.

SurveySan said...

VSK, ரொம்பவே convincingஆ சொல்லியிருக்கீங்க.

நீங்க சொல்றது புரியுது.

அந்த சிகப்பு போர்டை 'பக்தி இல்லாதவர்கள் உள்ளே வரவேண்டாம்'னு மாத்திட்டா யாருக்கும் ஒரு ப்ரச்சனையும் இல்லாம இருந்திருக்கும்.

பிறப்பின் அடிப்படையில், இந்த கட்டுப்பாடு இருப்பது சொதப்பலாவே தெரியுது.
கலப்பு மணங்கள் செய்து கொள்ளும் பலருக்கு இது ஒரு கசப்பான அனுபவத்தை ஒரு நாள் தரக்கூடும்.

"ஏன்" என்று ஏதாவது ஒரு குருவிடமோ, ஸ்வாமிஜியிடமோ கேட்டு விளக்கங்கள் யாராவது சொன்னா நல்லாயிருக்கும்.
உண்மையான் காரணங்கள் behind the rules.

thanks again,

வஜ்ரா said...

Although there is no reason for Guruvayoor temple to prohibit non-hindus entering, just for a second i realize that a believer in christianity or Islam or any form of Judaism cannot beleive in Idol worship. And hence have no business inside a "pagan", False Gods' temple.

The same guruvayoor temple which prohibits 'non-hindus' allows Buddhists, sikhs, and even Jains. Srilankan president Rajapakse (a buddhist) visited the temple and donated huge sum of money.

Do you call Buddhists, Jains and Sikhs as Non-hindus ?

People who do not beleive in Idol worship should not be allowed inside. Thats it. (A brahminical final take, if you say so!)

Barring a few temples in kerala and in Tamil nadu, there are no hindu temples all around India that specifically prohibit Non-hindu's. Then why raise such a hue and cry, particularly, when mosques (even the Ka'aba at mecca) openly prohibit people of other faiths from entering ?


Recently, AP government has promulgated an ordnance prohibiting practice, preaching or propagation of any faith other than hinduism in and around 'Divyakshethrams'. One of which is Tirumala thirupathi. Whats your take on that.

ஓகை said...

சென்ற பதிவில் ஆப்பிளோடு ஆரஞ்சை ஒப்பிடக்கூடாது என்று குறிப்பிட்டுவிட்டு பிறகு //ஒரு மதத்தாரின் சொத்து, அடுத்த மதக்காரன உள்ளே விடாதது நியாயம்னு வச்சுக்கிட்டா,
அப்பரம், அடுத்த மாநிலத்தின் (தேசியமயமாக்கப்படாத) நதிநீர் எனக்கும் வேண்டும்னு கேட்ப்பதும் நியாயம் இல்லியோ?// என்று கூறியிருக்கிறீர்கள். இந்த உவமை ஆப்பிளோடு அகத்தியை ஒப்பிடுவது போலத்தான் என்று எனக்குத் தொன்றுகிறது.

நதி சுயம்பு,
மதம் செயற்கை.
நதி நிலத்திற்கு ஆண்டவனின் கொடை.
மதம் ஆண்டவனுக்கு மனிதனின் கொடை.
நதி பாயும் நிலத்திற்கு தன்மைகளைத் தருகிறது
மதம் பிறந்த நிலத்திற்கான தன்மைகளைப் பெறுகிறது.
நதி அதை நம்பி வாழும் மக்களுக்காக.
மதம் அதை உருவக்கிய பக்தர்களுக்காக.
நதிக்கு மக்களே தேவையில்ல
மதத்திற்கு அதைப் பின்பற்றுபவர்கள் தேவை.
நதி என்றைக்கும் தேவை
மதம் இன்றைக்கே தேவையில்லாதது.
(எல்லா மதங்களும்)

மற்ற மதத்தாரை என் மதக் கோயில்களில் விடுவதற்கும் என் நிலத்தில் ஓடும் நதிநீரை நான் கேட்பதற்கும் உள்ள ஒப்பீடு, ஆப்பிளுக்கும் அகத்திக்கும் உள்ளதுதான்.

ஓகை said...

உங்கள் பதிவின் சாரமும் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இரண்டு சுட்டிகளும் மாற்று மதத்தினரை அனுமதிக்காதது தீண்டாமைக்கு ஒப்பானது என்ற கருத்தை உருவாக்கும் நோக்கில் இருக்கின்றன.

என் கருத்துகள்:

இந்து மதம் மற்ற மதங்களை தூற்றுவதில்லை.
மற்ற மதப் பிரச்சாரங்கள் அப்படி இல்லை.
மற்ற மதக் கடவுள்களும் கடவுள்கள்தாம் என்ற எண்ணம் ஏராளமான இந்துக்களுக்கு இருக்கிறது.
உருவ வழிபாடும் வைதீகச் சடங்குகளும் உடைய இந்து மதத்தை பற்றி வெகு சில மாற்று மதத்தினரே நல்ல கருத்து வைத்திருக்கின்றனர்.
மாறாக இந்து மதம் நேரடியாகவும் மறைமுகமாகவும் மற்ற மதப் பிரச்சாரகர்களால் தூற்றப்படுவது சாதாரணமாக நட்ந்துகொண்டிருக்கிறது.
மதமாற்றம் செய்வதில் இந்துக்கள் தீவிரமாக இல்லை. ஆனால் மற்ற மதங்களோ தம் மதத்துக்கு மாற்றுவதையே மதத்தின் தீவிர கொள்கையாக வைத்திருக்கிறார்கள்.

நாத்திகர்கள் என்று கூறிக் கொள்ளும் பலர் மற்ற மதங்களுக்கு ஆதரவாகவும் இந்து மதத்துக்கு மட்டுமே எதிரானவராகவும் இருக்கிறார்கள். இந்து மதத்தை இழிவு செய்வதற்கு மற்றெல்லா மதத்தினரையும் விட இவர்கள் படு மும்முரமாக இருக்கிறார்கள்.

இப்போது மட்டுமல்ல வரலாற்றில் எப்போதுமே இந்துமதம் எதிர்ப்புகளைக் கொண்டிருக்கும் மதமாக இருக்கிறது. இப்போது சாதுவாக இருக்கும் புத்த சமன மதங்கள் ஏழாம் நூற்றாண்டு வரை மிகப் பலம் பொருந்தியதாகவும் மதச்சச்சரவுகளில் ஈடுபடுபவையாகவும் இருந்திருக்கிறன. இந்து மதத்தினரை மற்ற மதத்தினரிடமிருந்து காப்பதற்காகவே சீக்கிய மதம் உருவாக்கப் பட்டது.
உத்திராட்சத்திற்கு நஞ்சு கலந்த உணவைக் கண்டறியும் சக்தி இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனாலேயே சிவனடியார்கள் உண்ணுவதற்கு முன் உணவுக்கு நேராக உத்திராட்சத்தைக் காட்டி சிவார்ப்பனம் என்று சொல்லும் வழக்கம் பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது. அந்த அளவுக்கு அவர்கலுக்கு ஆபது இருந்திருக்கிறது. பத்தாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்த காலகட்டங்களில் காபாலிகர்கள் என்னும் சைவமதப் பிரிவு மாற்று மதத்தாருக்கு சிம்மசொப்பனமாக விளங்கிற்று. (முகமதியரின் இந்திய வருகை பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்)

ஓகை said...

இந்து மதத்தின் கோயில்கள் மட்டும் எல்லா மதத்தினருக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்ற கருத்து இங்கே வலியுறுத்தப் படுகிறது.

ஏன் இந்து மதத்தில் அவ்வாறு இருக்க வேண்டும்?

மற்ற மதங்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். நான் என் மதத்தைப் பற்றி மட்டுமே இந்த கேள்வியை எழுப்புகிறேன்.

மற்றமத்தினர் ஏன் இந்து கோயில்களுக்கு வரவேண்டும்?

கோயில்கள் வழிபடும் நோக்கத்திற்கானவை மட்டுமே. ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்களுக்கான வழிபாட்டு இடங்கள் இருக்கின்றன. அவரவர்கள் வழி அவரவர்களுக்கு. மற்ற மதத்தினரை இந்துவாக மதமாற்றம் செய்யும் நோக்கு இல்லாதபோது ஏன் அவர்களை நம் கோவில்களுக்குள் அழைக்க வேண்டும்? அனுமதிக்க வேண்டும்?

அவர்களை தூற்றாமல், அவர்களை மதமாற்ற முயலாமல், அவர்களின் சடங்குகளையும் வழிபாட்டு முறைகளையும் எள்ளாமல் இழிவு செய்யாமல் இருப்பது இதுமதத்தினருக்கு இயல்பாகவே அமைந்திருப்பதாகவே நான் எண்ணுகிறேன். இதுவே மத நல்லிணக்கம் பெற சரியான வழியாக இருக்க முடியும்.

VSK said...

சொதப்பல் எங்கில்லை சர்வேசரே!

எல்லா இடங்களிலும், மதங்களிலும் இருக்கிறது.

ஆனால், அவரவர்களைப் பொருத்த மட்டில், இதில் சொதப்பல் என எதுவுமில்லை.

என் வீட்டில் நீ நுழைய விரும்பினால், வரவேற்பறை வரை வரலாம்.

அதையும் தாண்டி வரவிரும்பினால், நீ என்னவனா[ளா]க இருக்க வேண்டும்.

அப்போதும் கூட, சமையலறைக்குள், படுக்கை அறைக்குள் வர உனக்கென சில தகுதிகள் இருக்க வேண்டும் என்பது பொது விதிதானே!

இதில் குழப்பம் ஒன்றும் இல்லையெனவே நான் கருதுகிறேன்.

இதற்குமேல், இதில் பொருள் கொள்ள விரும்பினால், நான் சொல்ல இனி ஒன்றுமில்லை.
நன்றி.

Anonymous said...

//இந்து மதம் மற்ற மதங்களை தூற்றுவதில்லை.//

ஆமா, பிற மதங்களைத் தூற்றுவதில்லை மட்டுமில்லை, தன் மதத்தவனுக்குக் கூட கோயிலுக்குள் அனுமதி மறுப்பதைப் பற்றித்தானே இந்தப் பதிவு? வயலார் ரவி பேரனுக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது? அதுக்கு பதில் சொல்ரீங்களா முதல்ல? அதை ஆதரிக்கிரீங்களா இல்லயா?

//நாத்திகர்கள் என்று கூறிக் கொள்ளும் பலர் மற்ற மதங்களுக்கு ஆதரவாகவும் இந்து மதத்துக்கு மட்டுமே எதிரானவராகவும் இருக்கிறார்கள். இந்து மதத்தை இழிவு செய்வதற்கு மற்றெல்லா மதத்தினரையும் விட இவர்கள் படு மும்முரமாக இருக்கிறார்கள்.//

லண்டன் நாத்திகன் கிரித்டுவத்துக்கு எதிராத்தான் இருப்பான், இந்திய நாத்திகன் இந்துமதத்துக்கு எதிராகத்தான் இருப்பான். மெஜாரிட்டி மதத்துக்கு எதிராகப் பேசுரது வெளியே வரும், சிருபான்மையினருக்கு எதிராகப் பேசுவது வெளியே வராது. எந்த ஊரிலும் இதே கதைதான். பிரிட்டனில் கிரிஸ்துவனாகப் பிரந்த நாத்திகர்கள் இந்துமதத்தைத் தாக்கினால் விட்டுவிடுவீர்களா? எண்ணிக்கையில் குரைஞ்ச இந்துக்களை நாத்திக வெரியர்கள் தாகுராங்கன்னு சொல்ல மாட்டிங்க. ஏதோ உலக நாத்திகர்கள் எல்லாரும் இந்துமதத்தை எதிர்க்கர்து மாதிரி ஏன் இப்படி கதை விடணும். நாத்திகன் தலையிட்டு ஆத்திகர்கள் கோயிலுகுள்ள் போக அனுமதி கிடைக்கும் கேவலமான நிலைமை எங்கே இருக்கிரது யோசித்துப் பாருங்கள்.

SurveySan said...

Vajra,

/////Although there is no reason for Guruvayoor temple to prohibit non-hindus entering, just for a second i realize that a believer in christianity or Islam or any form of Judaism cannot beleive in Idol worship. And hence have no business inside a "pagan", False Gods' temple.
////

Let the man decide for himself what he believes and what he dis-believes.
I can pray Jesus and also pray Krishna.
If a christian is fascinated by hinduism and wants to have a glimpse of the lord,why stop him?

I understand, we want to stop people who make mockery of our belief system -- but, why stop everyone with a blanket rule which is not relevant today?

///////Recently, AP government has promulgated an ordnance prohibiting practice, preaching or propagation of any faith other than hinduism in and around 'Divyakshethrams'. One of which is Tirumala thirupathi. Whats your take on that./////

I have seen people ridiculing other religions, in the name of preaching. I am totally against preaching & converting anyone from one religion to another.

My question is about people who are voluntarily approaching Guruvayoor like temples with genuine reasons. why stop them? what are we truly concerned about?

SurveySan said...

ஓகை,

/////கோயில்கள் வழிபடும் நோக்கத்திற்கானவை மட்டுமே. ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்களுக்கான வழிபாட்டு இடங்கள் இருக்கின்றன. அவரவர்கள் வழி அவரவர்களுக்கு. மற்ற மதத்தினரை இந்துவாக மதமாற்றம் செய்யும் நோக்கு இல்லாதபோது ஏன் அவர்களை நம் கோவில்களுக்குள் அழைக்க வேண்டும்? அனுமதிக்க வேண்டும்?//////

(ஜேசுதாஸ், வயலார் ரவி போன்ற)வேற்று மதத்வர் நம் கோயில்களுக்குள் வர நினைப்பது, நம் கடவுளை தொழ வேண்டும் என்ற உண்மையான எண்ணத்துடந்தான்.
இப்படி, பல ஜேசுதாஸ்கள் இருப்பார்கள். இவர்களை அனுமதித்தால் என்ன கேடு வரும்னு கேக்கறேன்.

யாரும் இதற்க்கு தெளிவான விளக்கம் தர மாட்றீங்க.

அந்தந்த மதத்துக்கு ஒரு கட்டுப்பாடு எல்லாம் இருந்து விட்டுப் போகட்டும். ஆனா, ஒரு மனிதனை உள்ளே அனுமதிக்காத கட்டுப்பாடு ஏன்?

பி.கு: "தங்கச்சிய நாய் கடிச்சுடுச்சுப்பான்னு" திரும்ப திரும்ப சுத்தி சுத்தி அதே கேள்விய கேக்கர மாதிரி இருக்கு, நான் கேக்கரது.
என்ன பண்றது, தெளிவா ஒரு பதில் கிடைக்கலியே, இதுவரை.
நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, யாராவது ஒரு பெரிய மஹானிடம் கேட்க்க வேண்டிய கேள்வியோ இது? அவர் கிட்டயாவது தெளிவான பதில் இருக்குமா?
any suggetions?

Anonymous said...

//இந்து மதம் மற்ற மதங்களை தூற்றுவதில்லை.
//

ஓதை சார், அப்போ எழில் என்பவர் செய்வதெல்லாம் என்னவாம்? நாலு சமஸ்கிருத வார்த்தை படிச்சுட்டா பத்தர் எல்லாம் பாப்பானாக முடியுமா என்ன?

SurveySan said...

VSK,

/////என் வீட்டில் நீ நுழைய விரும்பினால், வரவேற்பறை வரை வரலாம்.
அதையும் தாண்டி வரவிரும்பினால், நீ என்னவனா[ளா]க இருக்க வேண்டும்.
அப்போதும் கூட, சமையலறைக்குள், படுக்கை அறைக்குள் வர உனக்கென சில தகுதிகள் இருக்க வேண்டும் என்பது பொது விதிதானே!
இதில் குழப்பம் ஒன்றும் இல்லையெனவே நான் கருதுகிறேன்.//////

உங்கள் வீட்டுச் சமையலறை உங்கள் தனிப்பட்ட சொத்து.
இந்து மதம், அதன் கடவுள், அதற்க்காக பொது மக்கள் பணத்தில் கட்டிய கோயில், இதெல்லாம் பொதுவுடமை. யாரும், உரிமை கொண்டாட முடியாது.
தீவிர இஸ்லாமிய கொள்கை கொண்ட சில நாடுகளில் கூட, மற்ற மதக் கோயில்கள் கட்ட அனுமதி இருக்கு.
அப்படி இருக்கும்போது, நம் நாட்டிலே ஏன் இந்த filtering?

idol worship நம்பாத நாடுகளிலும் கூட நம் கோயிலை கட்ட விட்டிருக்காங்க. அந்த பெருந்தன்மை நமக்கும் வேண்டாமா?

நாம் ஆரம்பித்து வைத்தால், நாளை மெக்காவிலும் மற்ற மதத்தவரை விடும் நிலை வரலாம். It has to start somewhere!

நான் இந்தப் பதிவை இடும்பொழுது, பல தடவை யோசித்துப் பார்த்த பின் தான் போட்டேன். தேவையில்லாம இத ஊதி பெருசு பண்ணணுமான்னு.
ஆனா, என் சொந்த அனுபவத்தில் குருவாயூரில் நடந்த விஷயம் லேசா நெருடிச்சு. பாதிக்கப்பட்டவர்களுக்கு, இது சின்ன விஷயமா தெரியாது என்ற எண்ணத்தில் போட்ட பதிவு இது.

நான் மேலே ஓகைக்கு இட்ட பின்னூட்டத்தில் சொன்ன மாதிரி, இந்த கோட்பாடுகளின் காரணங்கள் இன்னும் தெளிவா யாரும் சொல்லவில்லை. தெளிவான காரணம் கிடைத்தால், எல்லாரும் புரிந்து கொண்டு ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.

நம் மதத்தின் 'கோட்பாடு' எல்லாத்தையும் கண்ணை மூடிக் கொண்டு follow பண்ணனுமா என்ன?

Sati இருந்த காலத்தில் கூட, இது ஒரு கோட்பாடு என்று எண்ணித் தான் பலர் மாண்டு போயிருப்பார்கள் இல்லையா? Raja Ram Mohan Roy மாதிரி பெரியவர்கள் வந்து இந்த கோட்பாடு மடத்தனம் என்று புரியவைத்தது சரிதானே?

காலத்திற்க்கேற்றார் போல், சில விஷயங்கள் மாற வேண்டும் என்பது என் கருத்து.

கோவி.கண்ணன் said...

//அப்போதும் கூட, சமையலறைக்குள், படுக்கை அறைக்குள் வர உனக்கென சில தகுதிகள் இருக்க வேண்டும் என்பது பொது விதிதானே!

இதில் குழப்பம் ஒன்றும் இல்லையெனவே நான் கருதுகிறேன்.

இதற்குமேல், இதில் பொருள் கொள்ள விரும்பினால், நான் சொல்ல இனி ஒன்றுமில்லை.
நன்றி.//

விஎஸ்கே ஐயா,

வாசல் பக்கமே நிற்க அனுமதி கிடைக்காத தலித்துகள் இப்பொழுதுதான் ஹால் வரைக்கும் வந்திருக்காங்க, கோவில் சிலைகெளெல்லாம் தீட்டு பட்டுவிட்டது என்று எழுந்து ஓடிவிட்டதா ?

மாற்று மதத்தினரை அனுமதிக்காததற்கு நான் மேலே சொன்ன காரணம் அன்றி வேறு ஒரு புண்ணாக்கும் இருக்க முடியாது என கருதுகிறேன்.

சப்பைக் கட்டுகள் பழமை வாதத்தை தாங்கி நிற்கவே பயனளிக்கும்.

கோவிலுக்கு உள்ளே சென்று பார்க்க முடியாத சாமி சிலைகள், பல்லக்கில் ஏறினால் பெரும்பாலும் தலித்துகள் தான் தோளில் தூக்கிச் செல்கின்றனர்.
அப்படி தூக்கிச் செல்பவரில் ஒருவர் கூட சாமி சிலைகளுக்கு ஆரத்தி எடுப்பவர் அல்ல. இடத்துக்கு தகுந்த மாதிரி நியமம், ஆகமம் எல்லாம் லாபநோக்கம் அன்றி வேறு என்னவாக இருக்க முடியும் ?

SurveySan said...

பாட்டி காலத்தில், (இந்து மதத்தைச் சேர்ந்த) 'கீழ்' ஜாதிக்காரனுக்கு ஏதாவது கொடுக்கணும்னா, வீட்டில் இருக்கும் பாத்திரத்தில் ஒண்ணும் கொடுக்க மாட்டாங்க.
அதுக்கே ஸ்பெஷலா, இலையில் செய்த 'தொண்ணை' போன்ற பாத்திரம் தான்.

அவர்கள் பார்வையில் அது தவறாகத் தெரிந்திருக்காது. அவங்க பாட்டி அப்படிச் செஞ்சிருப்பாங்க, அதை அவங்க தொடர்ந்தாங்க.
இப்ப அதெல்லாம் மாறிடுச்சு.
'தொண்ணை' ட்ரீட்மெண்ட் ஆரம்பிச்ச அதே காலகட்டத்தில் தான் இந்த 'உள்ளே வராதே' ஆரம்பிச்சிருக்கும்.

இரண்டுக்கும் கண்டிப்பா தொடர்பு இருந்திருக்கும் என்பது தான் என் எண்ணம்.

மொத்தத்துல, இந்தப் பதிவினால், நான் எதிர்பார்த்த 'புரிதல்' கெடைக்கல.

அந்தந்த மதத்துக்கு ஒரு கோட்பாடு இருக்கு. கேள்வி கேக்காம அத follow பண்ணுங்கறாங்க எல்லாரும். இது சரியில்லை என்பதே என் 'final take'.

VSK said...

வீடு போலவே, மதமும் அதை பின்பற்றுவோரின் தனிச்சொத்துதான்.

இதை நீங்கள் 'புரியவில்லை' எனச் சொல்வது எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது.

மதச் சகிப்புத் தன்மை என்ற ஒரு கோட்பாடைக் கொண்டிருப்பதாலேயே, எல்லாவற்றையும் சகிக்க வேண்டும் என்ற கருத்தை எம்மதத்தினரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

முடிந்தால் மற்ற மதத்தினரிடமும் இது பற்றி கருத்து கேட்டுவிட்டுச் சொல்லுங்கள்.

அடுத்தது, கோட்பாடு வேறு; கட்டுப்பாடு வேறு.

இதை எனது முதல் பின்னூட்டத்திலேயே தெளிவாகச் சொல்லி இருக்கிறேன்.

கோட்பாடுகள், அந்தந்த மதத்தில் இருப்பவர் பின்பற்றப்பட வேண்டிய ஒன்று.

கட்டுப்பாடு என்பது எல்லோரையும் கட்டுப்படுத்துவது.

இரண்டையும் குழப்பிக் கொள்ள வேண்டாம்.

மதக் கோயில்கள் கட்டிக் கொள்ள அனுமதித்ததாலேயே, அவர்களும் இக்கோயிலுக்குப் போக தம் மதத்தினரை ஊக்குவிக்கிறார்களா, அனுமதிக்கிறார்களா, போகிறார்களா எனச் சற்று விசாரித்துச் சொல்லுங்க்கள்.

அவர்கள் செய்வது தப்பு என நான் சொல்லவில்லை.
சரியென்றே சொல்லுகிறேன்.

பலமுறை யோசித்துப் பார்த்த பின்னரே போட்டேன் என்ச் சொல்லுகிறீர்கள்.

ஆனால், கோட்பாடுக்கும், கட்டுப்பாடுக்கும் வித்தியாசம் புரியாமல் செய்திருக்கிறீர்கள்.

மேலே சொன்னதை மீண்டும் ஒருமுறை படியுங்கள்.

சதி[Sathi] என்பது ஒரு கோட்பாடு.
அதனை ஒருவர் உள்ளிருந்தே அகற்றினார்.... தன் மதம் மேம்பட.

கட்டுப்பாடு.... அப்படியா?

நீங்கள் மெக்கா யாத்திரை முறைப்படி மேற்கொள்ள முடியுமா?[நீங்கள் ஒரு முஸ்லிம் இல்லையென நம்புகிறேன்!]

கப்பா[Gabbaa] அருகிலாவது செல்ல இயலுமா?

அது கூடவும் கூடாது.
நன் செல்ல முயல மாட்டேன்.

அதை மிகவும் மதிப்பதால்......
என்னால் அதன் புனிதம் கெட்டுவிடக் கூடாதே என்னும் உணர்வால்.

இங்கிருந்தே அதன் திசை நோக்கி வணங்க நான் எப்பவும் தயார்.

இதற்கும் ஏதாவது சொல்ல வேண்டாம்.

புரியவில்லை என்றால், விட்டு விடவும்.

வாய்ப்பளித்தமைக்கு நன்றி.

கோவி.கண்ணன் said...

//சதி[Sathi] என்பது ஒரு கோட்பாடு.
அதனை ஒருவர் உள்ளிருந்தே அகற்றினார்.... தன் மதம் மேம்பட.//

இங்கேயும் உள்ளிருப்பர்கள் தான் கட்டுப்பாடுகள் கட்டுப்பட்டித்தனமானது என்று சொல்கிறார்கள். இங்கு கிறித்திவரோ, இஸ்லாமியரோ யாரும் வந்து எதுவும் சொல்லவில்லை.

நம்ம வீட்டில் பக்கத்துவீட்டுக் காரனை அனுமதிக்காதத்துக்கு காரணம் அவன் கோடிவீட்டுகாரனின் சொந்தக்காரனாக இருப்பதால் என்பது போல் சொல்வது சப்பை காரணம்.

அனைத்து மதங்களையும் அடக்கிய 'ஹிந்து' மதம் எப்படி மாற்று மதத்தினரின் பணத்துக்கு கதவிதிறந்து மனத்துக்கு கதவை அடைக்கும் ?

VSK said...

கோட்பாடு, கட்டுப்பாடு வேறுபாடைச் சொன்ன பின்னரும், கோவியார் இப்படிச் சொல்வது எனக்கு வியப்பாயில்லை!

கோவி.கண்ணன் said...

//VSK said...
கோட்பாடு, கட்டுப்பாடு வேறுபாடைச் சொன்ன பின்னரும், கோவியார் இப்படிச் சொல்வது எனக்கு வியப்பாயில்லை!
//

குருவாயூர் கோவில் இருப்பது கட்டுப்பாடா ? அல்லது கோட்பாடான்னு விஎஸ்கே ஐயாவுக்கு மட்டும் விளங்கியதில் எனக்கும் வியப்பில்லை.

எனக்கெல்லாம் அசரீரீ கேட்காது.
:))))))))

ஜோ/Joe said...

//(ஜேசுதாஸ், வயலார் ரவி போன்ற)வேற்று மதத்வர் //
ஜேசுதாஸ் கிறிஸ்தவர் ..சரி..வயலார் ரவியுமா ? அவர் மனைவி தானே கிறிஸ்தவர் என நினைத்தேன்.

வயலார் ரவி கிறிஸ்தவராக இருந்தால் ,மதியாதார் வாசல் மிதித்து விட்டு நியாயம் கேட்பது சரியல்ல.

SurveySan said...

வயலார் ரவி இந்துதான். அவர் மனைவி க்ருஸ்டியன்.
அவர் மகன் தான் 'வேற்று மததவன்' போல் நடத்தப்பட்டுள்ளான்.

SurveySan said...

VSK,

//நீங்கள் மெக்கா யாத்திரை முறைப்படி மேற்கொள்ள முடியுமா?[நீங்கள் ஒரு முஸ்லிம் இல்லையென நம்புகிறேன்!]
கப்பா[Gabbaa] அருகிலாவது செல்ல இயலுமா?
அது கூடவும் கூடாது.
நன் செல்ல முயல மாட்டேன்.
அதை மிகவும் மதிப்பதால்......
என்னால் அதன் புனிதம் கெட்டுவிடக் கூடாதே என்னும் உணர்வால்.
////

மெக்கா செல்ல எனக்கு உண்மையான விருப்பமும் இஸ்லாத்தில் நம்பிக்கையும் இருந்தால் என்னால் போக முடிய வேண்டும். நான் சென்றால் அதன் புனிதத் தன்மை ஏன் கெடவேண்டும்.
மெக்காவின், கோட்பாடும், உடைய வேண்டும் என்பதே என் ஆசை. அந்த மாதிரி கோட்பாடுகளை எதற்க்காக இன்னும் தாங்கிப் பிடிக்க வேண்டும் என்பதே என் கேள்வி.

AR ரஹ்மான் சமீபத்தில் தன் தாயுடன் மெக்கா போய் வந்தாராமே? ஏதாவது cleansing செய்யப்பட்டதா என்ன அங்கு? அவர், பிறப்பின் படி இந்துவாமே? (not to divert, but, does this incident show that Islam is more accomodating and humane than Hinduism?? )

மெத்தப் படித்த, VSKவும் மற்றும் பலரும், கோட்பாடு/கட்டுப்பாடு என்று திரும்ப திரும்ப சொல்கிறீர்களே தவிர, இந்த 'கோட்/கட்டுப்'பாடுகள் ஏன் ஆரம்பித்தன என்ற தெளிவாக காரணம் கூறாதது, மன வருத்தம் தருகிறது.

ஜோ/Joe said...

ஓ! அதாவது ஒருவன் இந்துவாக மாறினாலும் ,அவன் இந்து அல்லாத ஒரு தாய்க்கு மகனாக பிறந்திருந்தால் ,அவன் முழு இந்து ஆகி விட முடியாது .பிறப்பிலேயே தாய் வழியில் அவன் இந்துவாக இருக்க வேண்டும் .நல்லா புரிஞ்சது.

வஜ்ரா said...

//
My question is about people who are voluntarily approaching Guruvayoor like temples with genuine reasons. why stop them? what are we truly concerned about?
//

There are atleast a million temples, that too hindu temples that allow those people to go and pray. If they believe they can go there. Why guruvayoor ?

Same as, if you want to go to mecca, you cannot. But if you believe you can go to a near by mosque that allows you and pray.


//
AR ரஹ்மான் சமீபத்தில் தன் தாயுடன் மெக்கா போய் வந்தாராமே? ஏதாவது cleansing செய்யப்பட்டதா என்ன அங்கு? அவர், பிறப்பின் படி இந்துவாமே? (not to divert, but, does this incident show that Islam is more accomodating and humane than Hinduism?? )
//

 அவர் பிறப்பால் இந்துவாக இருந்திருக்கலாம். ஆனால் அவர் மதம் மாறியவர். அவர் இந்து என்று சொல்லிக் கொள்ளவில்லை. தன் பெயரைக் கூட அரபி மொழிப் பெயராக மாற்றிக் கொண்டவர். (ரமேஷ்குமார் தான் அவரது இயற்பெயர் என்று நினைக்கிறென்).

அவர் தன் இந்து வேர்களை அறுத்தெரிந்துவிட்டு சென்றதனால் தான் அவரை மக்காவில் அனுமதித்தனர். அதே போல் குருவாயூருக்கு வரும் கிறுத்தவர்கள் தங்கள் கிறுத்தவ வேர்களை அறுத்தெரிந்துவிட்டு (AR rehman செய்தது போல்), தங்கள் பெயர்களை இந்துப் பெயர்களாக மாற்றிக் கொண்டு, குடும்ப சமேஜிதமாக வந்து தரிசித்துவிட்டுச் செல்லலாம். ஆரிய சமாஜம் மாற்று மதத்தினரை இந்துவாக மாற்றி சான்றிதழ் வழங்குகிறது.

//
not to divert, but, does this incident show that Islam is more accomodating and humane than Hinduism?? )
//

You must be joking. From when on Guruvayoor temple started deciding what "hinduism" stands for ?

If guruvayoor temple is the ONE temple that is be all and end all of Hindu dharma then what you are saying is true.

ஓகை said...

சர்வேசன், என் தரப்பு கருத்துகளைச் சொல்ல வாய்ப்பளித்தமைக்கு மிகவும் நன்றி.

SurveySan said...

Vajra,

////There are atleast a million temples, that too hindu temples that allow those people to go and pray. If they believe they can go there. Why guruvayoor ?////

Why NOT guruvayoor?
Who is trying to achieve What, by stopping non-Hindus from entering the temple?

//////அவர் தன் இந்து வேர்களை அறுத்தெரிந்துவிட்டு சென்றதனால் தான் அவரை மக்காவில் அனுமதித்தனர். அதே போல் குருவாயூருக்கு வரும் கிறுத்தவர்கள் தங்கள் கிறுத்தவ வேர்களை அறுத்தெரிந்துவிட்டு (AR rehman செய்தது போல்), தங்கள் பெயர்களை இந்துப் பெயர்களாக மாற்றிக் கொண்டு, குடும்ப சமேஜிதமாக வந்து தரிசித்துவிட்டுச் செல்லலாம்//////

Vayalar Ravi is a Hindu. His son is also a Hindu, legally ( I think ). (his wife is christian).

btw, I remember Sonia was denied entry but Rajiv was allowed in - Rajiv's dad being a Parsi. I am not sure who customized the rule then.
Guruvayoorappan must have insisted the priests very strongly to enforce this rule :)

SurveySan said...

Ogai,

Thanks much for taking your time and giving us your thoughts.

Though I dont fully agree with your comments, I thank you for writing it in a decent and convincing way.

We will wait and see how others 'final take' shapes up.

I wonder why most bloggers avoid these topics. Some, do write, but anonymously :)))

SurveySan said...

Ogai,

Thanks much for taking your time and giving us your thoughts.

Though I dont fully agree with your comments, I thank you for writing it in a decent and convincing way.

We will wait and see how others 'final take' shapes up.

I wonder why most bloggers avoid these topics. Some, do write, but anonymously :)))

rv said...

இந்த பெகுலியர் ரவி விஷயத்தின் பின்னணி என்னவென்று எனக்குப் தெரியாவிடினும், கேஸ் பை கேஸாக இதை அணுகாமல், ஒட்டுமொத்தமாக சாயம் அடிக்கும் முயற்சியாகவே இப்பதிவு தெரிவதால் இந்தப் பின்னூட்டம்.

இந்தியர்களைப் பொறுத்தவரை பெரும்பாலும் பார்த்தால் எந்த மதம் என்று அடையாளம் கானமுடியாதவாறுதான் இருக்கிறோம்.

மற்ற மதச் சின்னங்களையோ அடையாளங்களையோ தாங்கியவர்கள் எங்கள் கோயிலுக்கு எடுத்துவருவது தவறு என்று எந்தக்கடவுளும் சொல்லப்போவதில்லை. ஆனால் கோயிலை நிர்வகிக்கும் மனிதர்கள் சொல்லத்தான் செய்வார்கள்.

மற்ற மதத்தைச் சேர்ந்த சாமானியர்கள் எவ்வித பிரச்சனையுமின்றி சென்றுவர முடியும். சிலுவையை வெளியில் போட்டுக்கொண்டோ குல்லாவை வைத்துக்கொண்டோ நான் சும்மா வேடிக்கை பார்க்கவந்தேன் என்று டூரிஸ்டி அலப்பரை செய்தால கண்டிப்பாக உள்ளே விட மாட்டார்கள். ஆனால் சத்தமில்லாமல் உள்ளே சென்றுவிட்டு தாராளமாக வரலாம். உங்கள் நண்பர்கள் தாமாக வரமாட்டோம் என்று சொன்னார்கள் என்றாலும் இதே நிலைதான்.

இங்கே அனுமதியில்லை என்று சில புனிதத்தலங்களில் சொல்வது ஒட்டுமொத்த இந்துக்களும் அவர்களின் மதமும் அடுத்தவரை மதியாதோர் என்றும் கற்காலத்தவையென்றும் அர்த்தம் கற்பித்துக்கொள்வது அறிவீனம் மட்டுமில்லை, அயோக்கியத்தனம்.

வந்தது வந்தோம்.. எட்டிப்பார்த்துவிட்டுத்தான் செல்வோமே என்று எந்த அர்த்தத்திலும் எந்த சிச்சுவேஷனிலும் வருகின்ற க்யூரியாஸிடி அரிப்புகளுக்கெல்லாம் தீனி போடவேண்டிய இடங்கள் கோயில்களா? அப்படி ரொம்ப பார்க்க ஆசையாயின் டிஸ்கவரியில் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.

கோயில்களில் இந்துக்களுக்கும் பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன். உதாரணம், லுங்கி கட்டி வரக்கூடாது, போட்டோ எடுக்கக்கூடாது எனப்பல. ஏன்? உப்பை இங்கே கொட்டவும், படிகளில் கற்பூரத்தை ஏற்றாதீர்கள் என்று அறிவுறுத்தப்பட்ட பின்னேதான் பின்பற்றும் அறிவாளிகள் நாம். நான் உப்பை எங்கே வேணா கொட்டுவேன் என்று வீம்புக்கு அடம்பிடிக்கவவம் தனியே வேறு ஒரு கோஷ்டி 'மற்றவர்களை' கூட்டிக்கொண்டு வேறு வரும்.

வீஎஸ்கே சொன்ன லிவிங் ரூம், பெட் ரூம் உவமானம் சாலப்பொருத்தம். ஆனால் கோயில் என்னவோ அரசாங்கப்பணத்தில் கட்டப்பட்டது, அதனால் காட்சிப்பொருளாய் ம்யூசியம் போல வருகிறவர்களை உபசரிக்கவேண்டும் என்ற தொனியில், prejudiced ஆக இவ்விசயத்தை அணுகுவதில் எந்தப்பயனும் இல்லை.

ஆகமொத்தம் ஸூடோ ஜெகுலரிஸ்ட்களிடம் பட்டம் பெற வேண்டிய துர்பாக்கிய நிலைமைக்கு இந்துமதம் வந்ததுதான் காலத்தின் கொடுமை... இது கட்டாயமா என்று நிர்ணயிக்கும் பொறுப்பையும் அவர்களே வைத்திருப்பது tragic comedy!

வெட்டிப்பயல் said...

சர்வேசன்,
இதுக்கு சம்பந்தமான பதிவின் சுட்டி

Unknown said...

Why NOT guruvayoor?
Who is trying to achieve What, by stopping non-Hindus from entering the temple?//

சர்வேசன்

"எல்லா இந்து கோயிலும் எல்லா மதத்தாருக்கும் பொது" என்று விதியை ஏற்படுத்த முடியாது. "சில இந்துகோயில்கள் இந்துக்களுக்கு மட்டும். பல இந்துகோயில்கள் அனைவருக்கும்" என்கிற விதிதான் இப்போது இருக்கிறது.

அப்படி இந்துக்களுக்கு மட்டும் இருக்கும் கோயில் குருவாயூர். மற்ற மதத்தவருக்கும் சேர்த்து இருக்கும் கோயில் இஸ்கான் கோயில். "ஏன் குருவாயூர்" "ஏன் இஸ்கான் கோயில்" என்பதெல்லாம் எந்த கோயிலையும் பார்த்து கேட்கலாம். எப்படியும் தனியாக ஒரு கோயிலும் பொதுவாக ஒரு கோயிலும் இருக்கவேண்டும். அப்படி தனியாக இருக்கும் கோயில் குருவாயூர், பொதுவாக இருக்கும் கோயில் இஸ்கான் என்பது தான் பதில்.

மாற்றுமதத்தினரை குருவாயூரில் அனுமதித்தால் என்ன என்று கேட்டால் தனியாக ஒரு கோயில் வேண்டும் என விரும்புகிறவர்களின் பிரைவசியை மதிப்பதுதான் மாற்று மதத்தினரை *அந்த கோயிலுக்குள் மட்டும் * அனுமதிக்காததன் காரணம். பெண்களுக்கு மட்டும் தனியாக இருக்கும் கோயில்களுக்கும் அதுதான் காரணம்.

SurveySan said...

இராமநாதன்,

////இங்கே அனுமதியில்லை என்று சில புனிதத்தலங்களில் சொல்வது ஒட்டுமொத்த இந்துக்களும் அவர்களின் மதமும் அடுத்தவரை மதியாதோர் என்றும் கற்காலத்தவையென்றும் அர்த்தம் கற்பித்துக்கொள்வது அறிவீனம் மட்டுமில்லை, அயோக்கியத்தனம்.////

ஒட்டுமொத்த இந்துக்கள் செய்யும் அயோக்கியத்தனம் இல்லை இது. சில 'உயர்சாதி' மனப்பான்மை கொண்டவர்கள் அரங்கேற்றிய கட்டுப்பாடுகளாகவே எனக்குத் தோன்றுகிறது.
and i have valid reasons to assume that is the case. பல வருடங்களுக்கு முன்னால் பாட்டி வீட்டில் நடந்த 'தீண்டாமை' பற்றி சொல்லியிருக்கேனே. அதுவும், மத கோட்பாடுகளாக நம் முன்னோர்களாக உருவாக்கப்பட்டவைதானே?

கோயிலில் இப்படி ஒரு சிகப்பு போர்டு போட வேண்டும் என்று கீதையிலோ, வேதத்திலோ, இல்ல வேற ஏதாவது புத்தகத்திலோ இருந்தா மேற்கோள் காட்டவும். நன்றி!
இஸ்லாமைப் பொறுத்தவரை, நபி சொல்லியிருப்பதை அவர்கள் பின்பற்றுவதாக தெரிகிறது.

யார் சொல்வதை நான் பின்பற்றுகிறேன்? some XYZ with some XYZ intentions?

SurveySan said...

வெட்டி, அந்த லிங்க் ஏற்கனவே போட்டிருக்கேனே பதிவுல.

சரி, உங்க கருத்து என்ன? :)

SurveySan said...

செல்வன்,

////"எல்லா இந்து கோயிலும் எல்லா மதத்தாருக்கும் பொது" என்று விதியை ஏற்படுத்த முடியாது. "சில இந்துகோயில்கள் இந்துக்களுக்கு மட்டும். பல இந்துகோயில்கள் அனைவருக்கும்" என்கிற விதிதான் இப்போது இருக்கிறது.////

நல்லா இருக்கே இந்த விதி. யார் போட்ட விதி இது? லார்டு கிச்சாவா? :)))

வெட்டிப்பயல் said...

//SurveySan said...

வெட்டி, அந்த லிங்க் ஏற்கனவே போட்டிருக்கேனே பதிவுல.

சரி, உங்க கருத்து என்ன? :) //

உங்களுக்கு ஏற்பட்ட நிலைமை எனக்கு ஏற்பட்டா அந்த நண்பனை நீ பயப்படாதடா மச்சி. இங்க எவன் கண்டுபிடிக்க போறானு கூப்பிட்டு போயிருப்பேன்...

SurveySan said...

////உங்களுக்கு ஏற்பட்ட நிலைமை எனக்கு ஏற்பட்டா அந்த நண்பனை நீ பயப்படாதடா மச்சி. இங்க எவன் கண்டுபிடிக்க போறானு கூப்பிட்டு போயிருப்பேன்... ////

சாதாரண ட்ரிப்பாயிருந்தா, நானும் அதுதான் பண்ணியிருப்பேன்.
திருமணத்துக்கு போயிட்டு, அங்க ஏதும் ப்ரச்சன வரக்கூடாதேன்னு தான் ஜகா வாங்கிட்டோம்.
அன்னிக்கு ராத்திரி தூங்க முடியல, ஒரு வித அசிங்கம், நம் மதத்தின் மீது ஒட்டியிருப்பது போல் ஒரு பீலிங்!

Unknown said...

//நல்லா இருக்கே இந்த விதி. யார் போட்ட விதி இது? லார்டு கிச்சாவா? :)))//

அந்தந்த கோயிலின் பக்தர்கள் தமது வழிபாட்டுக்கு உதவ ஏற்படுத்திய விதிகள்தான் இவை.

Unknown said...

//கோயிலில் இப்படி ஒரு சிகப்பு போர்டு போட வேண்டும் என்று கீதையிலோ, வேதத்திலோ, இல்ல வேற ஏதாவது புத்தகத்திலோ இருந்தா மேற்கோள் காட்டவும். நன்றி!//

கோயிலில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனி வரிசை, பிரசாதம் ஸ்டால், கோயில் யானை, பெருமாள் கோயிலில் சுண்டல் பிரசாதம் , கோயிலில் சீரியல் லைட் அலங்காரங்கள் - இதெல்லாமும் தான் வேதத்திலும் கீதையிலும் இல்லை. அதனால் பின்பற்றாமல் விடுகிறோமா என்ன?:-)

SurveySan said...

செல்வன்,

////கோயிலில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனி வரிசை, பிரசாதம் ஸ்டால், கோயில் யானை, பெருமாள் கோயிலில் சுண்டல் பிரசாதம் , கோயிலில் சீரியல் லைட் அலங்காரங்கள் - இதெல்லாமும் தான் வேதத்திலும் கீதையிலும் இல்லை. அதனால் பின்பற்றாமல் விடுகிறோமா என்ன?:-)
//////

நல்ல விஷயங்கள் (சுண்டல், பிரசாதம்,....) பின்பற்றினால் ப்ரச்சனையே இல்லையே.
சில 'ஒதுக்குதல்' தானே வேண்டாங்கறேன் :)

பக்தர்கள் முடிவு பண்ணதா இந்த கோட்/கட்டுப்பாடெல்லாம்? நான் ஒரு பக்தன், நான் வேண்டாங்கறேன். ஒரு முஸ்லிம் நண்பன் என் கூட கோயிலுக்குள்ள வரது பெருமையா நெனைக்கறேன். எதுக்கு அத தடயணுங்கறேன்.
நீங்க ஏன் தடயணும் என்பதர்க்கு ஒரு அழுத்தமான காரணம் சொல்லாதது சரியில்லை. சுற்றுலா, சிலை உடைப்பு (டோண்டு), இந்த மாதிரி காரணம் எல்லாம் அவ்ளோ ஸ்ட்ராங்கா இல்லை :)

Unknown said...

//நல்ல விஷயங்கள் (சுண்டல், பிரசாதம்,....) பின்பற்றினால் ப்ரச்சனையே இல்லையே.
சில 'ஒதுக்குதல்' தானே வேண்டாங்கறேன் :)

பக்தர்கள் முடிவு பண்ணதா இந்த கோட்/கட்டுப்பாடெல்லாம்? நான் ஒரு பக்தன், நான் வேண்டாங்கறேன். ஒரு முஸ்லிம் நண்பன் என் கூட கோயிலுக்குள்ள வரது பெருமையா நெனைக்கறேன். எதுக்கு அத தடயணுங்கறேன்.
நீங்க ஏன் தடயணும் என்பதர்க்கு ஒரு அழுத்தமான காரணம் சொல்லாதது சரியில்லை. சுற்றுலா, சிலை உடைப்பு (டோண்டு), இந்த மாதிரி காரணம் எல்லாம் அவ்ளோ ஸ்ட்ராங்கா இல்லை :)//

சர்வேசன்,

இதில் ஒதுக்குதல் தீண்டாமை ஆகிய எதுவுமே இல்லை. ஒத்த நம்பிக்கை உடையவர்களுடன் மட்டுமே சேர்ந்து வழிபட விரும்பும் பக்தர்களுக்கான கோயில் இது.அனைவருடனும் சேர்ந்து வழிபட விரும்புவோருக்கு வேறு கோயில்கள் உள்ளன. இதை தவிர வேறு என்ன ஸ்ட்ராங்கான காரணம் வேண்டும் என தெரியவில்லை.

தனி கோயிலும், பொது கோயிலும் ஒருங்கே இருப்பது நமது மதத்தின் சிறப்பு.பொது கோயிலை தனி கோயிலாக்க யாரும் கோரவில்லை. அதே போல் தனி கோயிலை பொது கோயிலாக்க்கவும் வேண்டாமே?

நீங்கள் ஒரு பக்தர் என்பதும் நீங்கள் தனிகோயிலை பொது கோயிலாக்க விரும்புகிறீர்கள் என்பதும் சரி. ஆனால் கோயில்கள் பெரும்பான்மை மக்களின் ஓட்டெடுப்பில் நடத்தப்படுவதில்லை. கோயில் விதிகளை முடிவு செய்ய வேண்டியது சித்தர்கள் , முனிவர்கள், ஆச்சாரியார்கள், ஆதினங்கள் போன்றவர்கள் தான்.அவர்களும் அதை சுய விருப்பு விறுப்பின் அடிப்படையில் செய்வதில்லை. அதற்கென ஆகமங்களும், நூல்களும், விதிமுறைகளும், மரபும், சம்பிரதாயங்களும் உள்ளன.

சட்டவிரோதமாகவும் நியாயத்துக்கு விரோதமாகவும் இருக்கும் ஆகம விதிகளையும் மரபுகளையும் மற்றுவதில் தவறே இல்லை.ஆனால் இதில் அப்படி எதுவும் இல்லை.இந்த திருக்கோயில் மரபில் சட்ட விரோதமாகவோ, நியாய விரோதமாகவோ எதுவுமே இல்லை. யாருடைய உரிமையும் இதில் பறிக்கப்படவில்லை. ஆக இதை மாற்ற எந்த காரணமும் தெரியவில்லை.அப்படி உறுதியாக எந்த காரணமும் இல்லாதபோது இருக்கும் மரபுகளை காப்பதுதான் நியாயம் என தோன்றுகிறது.

வெட்டிப்பயல் said...

http://valavu.blogspot.com/2007/03/blog-post_30.html

இதையும் படிங்க...

அடுத்து மதனோட வந்தார்கள் வென்றார்கள் புக் வாங்கி படிங்க. அதுல சோமர்நாத் கோவில்னு ஒரு கோவிலை பற்றி சொல்லியிருப்பார்.. அதையும் படிங்க...

அப்பறம் கொஞ்சம் யோசிங்க... காரணம் புரியலாம்.

SurveySan said...

செல்வன்,

I think I am repeating the same questions and you are repating the same answer differently.
கீழே சொல்லியிருக்கீங்க. சரிதான். இதற்க்கு எங்கே proof இருக்குன்னு கோடிட்டு காட்டினீங்கன்னா, படிச்சிட்டு, கம்முனு இருந்துடுவேன் :))

நான் ஒரு வீம்புக்காக போட்ட பதிவில்லை இது. இதுநாள் வரை, இந்த சிகப்பு போர்டு மேட்டர் ஒரு கொழுப்பு எடுத்த செயலாதான் என் மனதுக்குப் பட்டு வருகிறது.

இது உண்மையிலேயே நல்ல விஷயம்தான்னு படித்துணர்ந்தால், என்னைவிட சந்தோஷப் படுபவர் யாராகவும் இருக்க முடியாது. எனக்கு தெரிஞ்ச ஒரு 20 பேர் இது எதுக்குன்னு தெரிஞ்சா சந்தோஷப் பட்டு, அனுசரிப்பர்.

குருவாயூர் கூட பரவால்ல, சிகப்பு போர்டு, ஒட்டு மொத்த non-hindus வரவேணாம்னு சொல்லுது. லாஜிக் இடிச்சாலும், ஓரளவு சமாதானம் அடையலாம்.
இராமேஸ்வர போர்டு, 'ப்ராமணர்களுக்கு மட்டும்னு' இருக்கு.
அதுவும் உங்க பார்வையில் சரிதான்னு சொல்ல வரீங்களா? எந்த ஆதீனம்,சித்தர்,முனி போட்ட கட்டுப்பாடு இது?

நான் ப்ராமணன் இல்லை.

இராமேஸ்வரத்துக்கு நான் என் பெற்றோர், மற்றும் குடும்பத்தாருடன் போயிருந்தேன். (2005ல)
மொத்தம் எட்டோ ஒம்பதோ தீர்த்தக் கெணறு இருந்ததா ஞாபகம். ஏதோ ஒரு கிணறில் இருக்கும், தண்ணீரை என் தலையில் ஊற்றிக் கொள்ள நான் ப்ராமணனா இருந்தாதான் முடியுமாம்.

உடல் கூசிச்சு அந்த போர்ட படிக்கும்போது, மனசுல சொல்லொணா கோபம் வந்தது உண்மை.

ஞாயமான போர்டா அதுவும்? ஏழு கெணறு பொதுவா வெக்கரதும், எட்டாவது கெணறு ப்ராமணர்களுக்கு மட்டும் இருப்பதும் மத கட்டுப்பாட்டின் அவசியமா?

////ஆனால் கோயில்கள் பெரும்பான்மை மக்களின் ஓட்டெடுப்பில் நடத்தப்படுவதில்லை. கோயில் விதிகளை முடிவு செய்ய வேண்டியது சித்தர்கள் , முனிவர்கள், ஆச்சாரியார்கள், ஆதினங்கள் போன்றவர்கள் தான்.அவர்களும் அதை சுய விருப்பு விறுப்பின் அடிப்படையில் செய்வதில்லை. அதற்கென ஆகமங்களும், நூல்களும், விதிமுறைகளும், மரபும், சம்பிரதாயங்களும் உள்ளன.
/////

:(((((

SurveySan said...

வெட்டிப்பயல்,

Thanks for sending the link. It looks bigggg. I will certainly read and think!!!

btw, நான் ஒரு வீம்புக்காக போட்ட பதிவு இல்லை இது. பலமுறை சிந்தித்து, தேவையா என்று யோசித்தே போட்டேன்.

மேலே உள்ள பின்னூட்டம் படிங்க.
உங்க தனிப்பட்ட கருத்தையும் சொல்லுங்க.

SurveySan said...

வெட்டிப்பயல்,

Thanks for sending the link. It looks bigggg. I will certainly read and think!!!

btw, நான் ஒரு வீம்புக்காக போட்ட பதிவு இல்லை இது. பலமுறை சிந்தித்து, தேவையா என்று யோசித்தே போட்டேன்.

மேலே உள்ள பின்னூட்டம் படிங்க.
உங்க தனிப்பட்ட கருத்தையும் சொல்லுங்க.

கோவி.கண்ணன் said...

ஆகமம் பெயரில் காரணம் சொல்வது 100% விழுக்காட்டு கயவாலித்தனம். ஆகமத்துக்கு புரம்பாயிட்டு சாமிக்கு தீட்டுபட்டுவிட்டது என்று சொல்வது ஏமாற்று வித்தை ஏனென்றால் 10 ஆண்டுகளுக்கு முன்பு கன்னட நடிகை ஐயப்பனை தொட்டதற்கு 10 பத்து ஆண்டு கழித்துதான் தெரிய வந்திருக்கு. ஐயப்பன் தீட்டு என்று உட்கார்ந்த நிலையில் இருந்து எழுந்து நின்று கோவிலை விட்டு ஓடிவிடவில்லை. இது போன்றதெல்லாம் ஆகமம் ஆகாது என்று பொய்யான பயமுறுத்தல்களில் பக்தர்களை தொடர்ந்து வைத்திருந்து காசுபறிக்க போடும் நாடகம்.

21 ஆம் நூற்றாண்டு பித்தலாட்டக்காரர்களும் அவர்களுக்கு ஆதரவளிப்போர்களும் திருந்தாதவரை எந்த மாற்றமும் ஏற்படுத்தமுடியாது, இந்த (அவ)லட்சனத்தில் மாற்று மதத்தினரை பழமை வாதிகள் என்றும், சுகவனத்துக்கு கன்னிகைகளுக்காக அழைகிறார்கள் என்று அவர்களை பார்த்து நா கூசாமால் இவர்களெல்லாம் பேசுவது வெட்கக் கேடு.

SurveySan said...

கோவிக் கண்ணன்,

////மாற்று மதத்தினரை பழமை வாதிகள் என்றும், சுகவனத்துக்கு கன்னிகைகளுக்காக அழைகிறார்கள் என்று அவர்களை பார்த்து நா கூசாமால் இவர்களெல்லாம் பேசுவது வெட்கக் கேடு.
/////

I have to totally agree with you on this one.

Unknown said...

//இராமேஸ்வரத்துக்கு நான் என் பெற்றோர், மற்றும் குடும்பத்தாருடன் போயிருந்தேன். (2005ல)
மொத்தம் எட்டோ ஒம்பதோ தீர்த்தக் கெணறு இருந்ததா ஞாபகம். ஏதோ ஒரு கிணறில் இருக்கும், தண்ணீரை என் தலையில் ஊற்றிக் கொள்ள நான் ப்ராமணனா இருந்தாதான் முடியுமாம்.

உடல் கூசிச்சு அந்த போர்ட படிக்கும்போது, மனசுல சொல்லொணா கோபம் வந்தது உண்மை.

ஞாயமான போர்டா அதுவும்? ஏழு கெணறு பொதுவா வெக்கரதும், எட்டாவது கெணறு ப்ராமணர்களுக்கு மட்டும் இருப்பதும் மத கட்டுப்பாட்டின் அவசியமா?///

ராமேஸ்வரம் விஷயத்தை நான் நியாயப்படுத்தவில்லை. அந்த போர்டை முதலில் அகற்றி அதற்கு காரணமாணவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

ஆனால் அதுவும் இதுவும் ஒன்றல்ல.தவறான மரபுகள் களையப்பட வேண்டும். நல்ல மரபுகள் பேணிக்காக்கப்படவேண்டும்.

ஆகமம், மரபு என்றதும் நீங்கள் வருத்தப்படுகிறீர்கள். கோவி கண்ணன் அதெல்லாம் தவறு என்கிறார்.

மரபுகளில் தவறும் உண்டு. நல்லவையும் உண்டு. கோயிலில் அர்ச்சனை செய்வதும், அபிஷேகம் செய்வதும் ஆகமம், மற்றும் மரபின் அடிப்படையில்தான். சனீஸ்வரன் கோயில் எங்கே இருக்க வேண்டும், நந்தியை எங்கே வைக்க வேண்டும், கோயிலை எந்த திசை பார்த்து கட்ட வேண்டும் என்பதற்கெல்லாம் சாத்திரங்களும் முறைகளும் உள்லன. மரபு ஆகமம் என்பதெல்லாம் ஏமாற்று வேலை என்றால் அப்புறம் அப்புறம் நமது வீட்டை கட்டுவது மாதிரி இஷ்டத்துக்கு கோயில் கட்டி, சிவனுக்கு பேண்ட்டும் சட்டையும் போட்டு நந்திக்கு பதில் சிக் - ஃபில் - ஏ விளம்பரத்தில் வரும் காளையை கூட வைக்கலாம்.இதில் எல்லாம் என்ன தவறு இருக்கிரது என்றால் அதற்கு பதில் கிடையாது.

பிள்லையார் சதுர்த்தி ஊர்வலத்தில் பிள்லையாருக்கு கிரிக்கட் வீரன் டிரஸ் எல்லாம் போடுகிறார்கள்.அதே கோயில் பிள்லையாருக்கு அம்மாதிரி செய்ய மாட்டார்கள்.கோயில் பிள்ளையாருக்கு வேட்டி கட்டுவதுதான் ஆகமம். ஆகமம் என்பது ஏமாற்று வேலை, கோயில் பிள்ளையாருக்கும் ஜீன்ஸ் தான் போடவேண்டும் என்றால் என்ன சொல்வது?

ஜீன்ஸ் போட்ட பிள்லையார்தான் வேண்டுமென்ரால் அப்படி ஒரு கோயில் கட்டுங்கள். எல்லோரும் வருவார்கள். அதற்காக இருக்கும் பிள்லையாரை ஏன் மாற்ற வேண்டும்?

ஆகமத்தை வெறுப்பவர்கள் ஆகமத்தின் சுவடே இன்றி அமைந்த பல கோயில்களுக்கு போகலாம்.சித்தர் முறை, கிராம தேவதை கோயில்கள் என்று பல விதமான கோயில்கள் உள்ளன.அது எதுவும் பிடிக்கவில்லை என்றால் எதாவது தியான மண்டபத்துக்கு போகலாம்.ஒழுங்காக நடக்கும் கோயில்களை ஏன் மாற்ற வேண்டும் என்பது தான் புரியவில்லை.

கோவி.கண்ணன் said...

//ஆகமத்தை வெறுப்பவர்கள் ஆகமத்தின் சுவடே இன்றி அமைந்த பல கோயில்களுக்கு போகலாம்.சித்தர் முறை, கிராம தேவதை கோயில்கள் என்று பல விதமான கோயில்கள் உள்ளன.அது எதுவும் பிடிக்கவில்லை என்றால் எதாவது தியான மண்டபத்துக்கு போகலாம்.ஒழுங்காக நடக்கும் கோயில்களை ஏன் மாற்ற வேண்டும் என்பது தான் புரியவில்லை.//

சாமி கும்பிடாதவங்க மூட நம்பிக்கையை குறித்து கேள்வி எழுப்பக் கூடாது என்ற மறு குரல் போல் இருக்கிறது. தீண்டாமை கொடுமைக்கு எதிராக குரல் கொடுப்பவரிடம் நீ வேண்டுமானால் அப்படி இருந்துக்கோ, அதில் நம்பிக்கை உள்ளவர்களை ஏன் குறை சொல்கிறாய் என்பது போல் உள்ளது.

வீட்டில் பாத்ரூம், சமையல் அறை எங்கொ இருக்கனூமோ அங்கு தான் இருக்கும் அது அவரவர் விருப்பப்படி தான். கோவில் அமைப்பைப் பற்றி யாரும் இங்கு பேசவில்லை.

கோவிலில் யாருடைய காலடி படலாம் என்பதெல்லாம் ஆகமம் ?
தலித்து கோவிலுக்க்குள் நூழைந்தால் தீட்டு என்ற ஆகமங்களெல்லாம் கூட இருக்கிறது நண்பரே.

சமய வெறியர்கள் திருந்துவதற்கு வாய்ப்பு கொடுங்க, சப்பை கட்டுகளை கொண்டு நீங்கள் கட்ட முற்படுவது சமயவெறியர்களின் கண்களைத்தான்.

Unknown said...

//சாமி கும்பிடாதவங்க மூட நம்பிக்கையை குறித்து கேள்வி எழுப்பக் கூடாது என்ற மறு குரல் போல் இருக்கிறது. தீண்டாமை கொடுமைக்கு எதிராக குரல் கொடுப்பவரிடம் நீ வேண்டுமானால் அப்படி இருந்துக்கோ, அதில் நம்பிக்கை உள்ளவர்களை ஏன் குறை சொல்கிறாய் என்பது போல் உள்ளது.//

தீண்டாமையை எதிர்த்து எல்லோரும் தன் குரல் கொடுக்கிறோம். அது மனிதனாக பிரந்த ஒவ்வொருவரின் கடமை.தனிமனிதனுக்கு அவன் விரும்பும் வகையில் வழிபாட்டு உரிமை தருவதும் அதே போல் முக்கியமான ஒரு கடமை.ஒத்த நம்பிக்கையாளருடன் சேர்ந்து வழிபட விரும்புகிரவனுக்கு இருக்கும் உரிமையில் ஏன் நாம் கை வைக்க வேண்டும் என்று சொல்லுங்கள்.

//வீட்டில் பாத்ரூம், சமையல் அறை எங்கொ இருக்கனூமோ அங்கு தான் இருக்கும் அது அவரவர் விருப்பப்படி தான். கோவில் அமைப்பைப் பற்றி யாரும் இங்கு பேசவில்லை.//

ஆகமமே ஏமாற்று வேலை என்றால் கோயில் அமைப்பும் ஆகமத்தில் சேர்ந்ததுதான் நண்பரே.

//கோவிலில் யாருடைய காலடி படலாம் என்பதெல்லாம் ஆகமம் ?
தலித்து கோவிலுக்க்குள் நூழைந்தால் தீட்டு என்ற ஆகமங்களெல்லாம் கூட இருக்கிறது நண்பரே.//

தவறான் ஆகம விதிகளை களையாவேண்டும் என்று ஏற்கனவே பலமுறை சொல்லி விட்டேன். இன்னும் அழுத்தமாக ஒரு முரை சொல்கிரேன்.

களைகள் பிடுங்கப்படவேண்டும். களைகளுடன் பயிர்கள் பிடுங்கப்படகூடாது.

//சமய வெறியர்கள் திருந்துவதற்கு வாய்ப்பு கொடுங்க, சப்பை கட்டுகளை கொண்டு நீங்கள் கட்ட முற்படுவது சமயவெறியர்களின் கண்களைத்தான்.//

மக்களுக்கு இருக்கும் வழிபாட்டு உரிமையை மறுப்பதுதான் உண்மையான சம்ய வெறி.

"இந்துக்களுக்கு தனியாக கோயில் இருக்கவே கூடாது" என்பதை ஒரு இந்துவே சொல்கிரார் என்பதால் அது நியாயமாகிவிடாது.யார் சொன்னாலும் அது நியாயமாகாது

SurveySan said...

செல்வன்,

///"இந்துக்களுக்கு தனியாக கோயில் இருக்கவே கூடாது" என்பதை ஒரு இந்துவே சொல்கிரார் என்பதால் அது நியாயமாகிவிடாது.யார் சொன்னாலும் அது நியாயமாகாது
/////

இந்துக்களுக்கு தனியான கோயில் இருக்கணும் என்பது, ஆண்டவன் சொல்லியோ, இல்லை ஒரு பொது கோட்பாடாகவோ எல்லா கோயிலிலும் பயன்படுத்தப்படுமாயின், இந்த ப்ரச்சனையே வந்திருக்காது.

ஒரு சில, ஆசாமிகள், செய்த சூழ்ச்சியின் விளைவு இது. அந்த சூழ்ச்சி ஏன் செய்தாங்க என்பது, 'இழவா' (கீழ் ஜாதி ஆட்கள்) ஹிஸ்டரில யிருந்து தெரியுது.

நம்ம இங்க கத்தி ஒண்ணும் மாறப்போறதில்லை.
ஆனா, படிச்ச நம்ம தலைமுறையிலும், இந்த 'சூழ்ச்சி' கோட்பாடுகள் சரியானவை என்று நினைப்பவர்கள் இருப்பது வியப்பே.

காலாகாலமா, அதனால்தான் இந்த கோட்பாடுள் அழியாமல், அப்படியே இன்னும் தன் நச்சு வேலையை செய்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.

இன்னொரு ராஜா ராம் மோஹன் ராய் தான் வரணும்.

வெட்டிப்பயல் said...

சர்வேசன்,
என்னுடைய கருத்து என்னனு கேட்டீங்க இல்லை. இது தான்...

ஜேசுதாஸ் எல்லாம் உள்ளவிடாத இருக்கறதுக்கு காரணம் அவர் இந்து இல்லைனு சொன்னா அதைவிட கேவலமா நான் எதையும் நினைக்கல...

அப்ப என்னத்துக்கு அவர் பாடற பாட்டை மட்டும் கோவிலை சுத்தி பாட விடறீங்க???

அந்த காலத்துல ரூல் போட்டது வேணா சரியா இருந்திருக்கலாம். (மாற்று மதத்தினருக்கு மட்டும் சொல்றேன். நான் கொடுத்த லிங் படிச்சா தெரியும். இராம.கி ஐயா அருமையா எழுதிருப்பாரு. கண்டிப்பா படிங்க). ஆனா இப்ப அது இருக்கறது சுவத்துல பூனை கட்டற கதைதான்...

செல்வன் அண்ணா,
பக்திக்கு முன்னாடி வேற எதுவுமே செல்லா காசுதான். ஜேசுதாஸை உள்ள விடாம அப்படி என்ன ஆகமத்த காப்பாத்த போறோம்.

நீங்க சொல்ற ரூல்ஸ் எல்லாம் எனக்கு புரியுது. என்ன இருந்தாலும் திருவரங்கம், திருப்பதி, குருவாயூர் கோவில்ல நாராயணனை பார்ப்பது போல் ஆகுமா? அதை உண்மையான பக்தியோடு வருபவர்களுக்கு திறந்துவிடத்தான் வேண்டும்.

கோவி.கண்ணன் said...

//காலாகாலமா, அதனால்தான் இந்த கோட்பாடுள் அழியாமல், அப்படியே இன்னும் தன் நச்சு வேலையை செய்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.

இன்னொரு ராஜா ராம் மோஹன் ராய் தான் வரணும். //

பெரியார் வரக்கூடாதா ?
:)

SurveySan said...

வெட்டிப்பயல், கருத்துக்கு நன்றி.

////அந்த காலத்துல ரூல் போட்டது வேணா சரியா இருந்திருக்கலாம். (மாற்று மதத்தினருக்கு மட்டும் சொல்றேன். நான் கொடுத்த லிங் படிச்சா தெரியும். இராம.கி ஐயா அருமையா எழுதிருப்பாரு. கண்டிப்பா படிங்க). ஆனா இப்ப அது இருக்கறது சுவத்துல பூனை கட்டற கதைதான்.../////

அதே அதே!

SurveySan said...

கோவிக் கண்ணன்,

//பெரியார் வரக்கூடாதா? :) //

எதுக்கு திசை திருப்பணும்னு, ராம் மோஹன் ராயை துணைக்கு அழைச்சுட்டேன் :)

பெரியார் தான் இராமேஸ்வரப் பிரச்சனைய கண்டுக்கல/சரிசெய்ய முடியலியே :)

Unknown said...

//செல்வன் அண்ணா,
பக்திக்கு முன்னாடி வேற எதுவுமே செல்லா காசுதான். ஜேசுதாஸை உள்ள விடாம அப்படி என்ன ஆகமத்த காப்பாத்த போறோம். //

பாலாஜி,

ஏசுதாஸ் மாதிரிதான் எல்லோரும் இருப்பார்கள் என்று நினைத்தால் அது தப்பு. ஒரு விதியை உருவாக்கும்போது அபூர்வ விதிவிலக்குகளை மனதில் வைத்து விதி அமைக்க முடியாது. என்றோ வரும் அபூர்வ விதிவிலக்கை காட்டி அந்த சட்டமே தப்பு என்றும் சொல்ல முடியாது.

பக்திக்கு மேல் எதுவும் இல்லை என்பது சரி. பக்திக்கு கடவுள் வளைந்து கொடுப்பார். மனிதன் வளைந்து கொடுக்க முடியுமா? மாணிக்கவாசகர் மாதிரி பத்ராசல ராமதாசர் மாதிரி இன்று எதாவது மந்திரி பக்தி மேலீட்டில் அரசு காசை எடுத்து கோயில் கட்டினால் நீதிமன்றத்தில் இருக்கும் நீதிபதி அவரை விட்டுவிட வேண்டுமா?

ஏசுதாசுக்கு விதியை ஒருதரம் வளைத்தால் தப்பு இல்லை என்று சொல்லி அவர் அதை மறுத்து ஸ்பெஷல் அனுமதி ஏதும் வேண்டாம் என்று சொல்லிவிட்டதாக கேள்வி.இன்று ஏசுதாசுக்கு விதியை வளைத்தால் நாளை வட்டம், மாவட்டம், மந்திரி எல்லாம் அந்த உதாரணத்தை காட்டியே உள்ளே நுழைந்துவிடுவார்கள் என்பதும் உண்மை.சிக்கலான விஷயம்தான். என்ன செய்ய?

SurveySan said...

செல்வன்,

/////ஏசுதாசுக்கு விதியை ஒருதரம் வளைத்தால் தப்பு இல்லை என்று சொல்லி அவர் அதை மறுத்து ஸ்பெஷல் அனுமதி ஏதும் வேண்டாம் என்று சொல்லிவிட்டதாக கேள்வி.இன்று ஏசுதாசுக்கு விதியை வளைத்தால் நாளை வட்டம், மாவட்டம், மந்திரி எல்லாம் அந்த உதாரணத்தை காட்டியே உள்ளே நுழைந்துவிடுவார்கள் என்பதும் உண்மை./////

ஐயகோ!! உள்ளே நுழைந்தால் என்ன ஐயா தவறு? :)
புரியவே மாட்டேங்குதே!!!!

Unknown said...

//இந்துக்களுக்கு தனியான கோயில் இருக்கணும் என்பது, ஆண்டவன் சொல்லியோ, இல்லை ஒரு பொது கோட்பாடாகவோ எல்லா கோயிலிலும் பயன்படுத்தப்படுமாயின், இந்த ப்ரச்சனையே வந்திருக்காது.//

எல்லா கோயில்களிலும் ஒரே மாதிரி விதி இருக்கவேண்டும் என்பது கோயில்களின் பன்முகத்தமையை அழிக்கும் செயல், சர்வேசன்.

ஆகம விதிப்படி அமைந்த கோயில்கள், சித்தர் விதிப்படி அமைந்த கோயில்கள், கிராம தேவதை கோயில்கள், ஆற்றங்கரை பிள்லையார் கோயில்கள், இந்துக்களுக்கு மட்டுமான கோயில்கள், எல்லொருக்குமான கோயில்கள், சீசனுக்கு திறக்கும் பத்ரிநாத், அமர்நாத் கோயில்கள், ஆண்களுக்கு கோயில்கள், பெண்களுக்கான கோயில்கள், அரவாணிகள் மட்டும் ஸ்பெஷலாக வழிபடுவது போன்ற குத்தாண்டவர் கோயில்கள் என்று விதவிதமான கோயில்கள் இருக்க வேண்டும்.

//ஒரு சில, ஆசாமிகள், செய்த சூழ்ச்சியின் விளைவு இது. அந்த சூழ்ச்சி ஏன் செய்தாங்க என்பது, 'இழவா' ஹிஸ்டரில யிருந்து தெரியுது.//

குருவாயூரில் பவுத்தர்களும், ஜைனர்களும், சீக்கியர்களும் நுழைய எந்த காலத்திலும் எந்த தடையும் இல்லை. இதிலிருந்தே நீங்கள் சொல்வது தவறு என்று தெரிகிறது.

//இன்னொரு ராஜா ராம் மோஹன் ராய் தான் வரணும்.//

மோகன் ராய் வரட்டும். ஆனா அருந்ததி ராயை எல்லாம் மோகன் ராய்ன்னு நினைச்சு ஏமாறாம இருந்தா சரி:))

Unknown said...

//ஐயகோ!! உள்ளே நுழைந்தால் என்ன ஐயா தவறு? :)
புரியவே மாட்டேங்குதே!!!!//

"டூ நாட் டிஸ்டர்ப்" என்று போர்டு மாட்டி பிரைவசியை அனுபவிக்கும் ஒருத்தனின் ஏகாந்தத்தை கெடுப்பது மாதிரியான தவறு என்று வைத்து கொள்ளுங்களேன்:))

Anonymous said...

//எட்டிப்பார்த்துவிட்டுத்தான் செல்வோமே என்று எந்த அர்த்தத்திலும் எந்த சிச்சுவேஷனிலும் வருகின்ற க்யூரியாஸிடி அரிப்புகளுக்கெல்லாம் தீனி போடவேண்டிய இடங்கள் கோயில்களா? அப்படி ரொம்ப பார்க்க ஆசையாயின் டிஸ்கவரியில் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.
//

அருப்புக்கு தீனி போடாத கோயில்களில் பாப்பான் மட்டுமே சாமிக்கு அருகே போகலாம் என்று ஏன் சொல்கின்றனர் ராமநாதன் அவர்களே?

Anonymous said...

//"டூ நாட் டிஸ்டர்ப்" என்று போர்டு மாட்டி பிரைவசியை அனுபவிக்கும் ஒருத்தனின் ஏகாந்தத்தை கெடுப்பது மாதிரியான தவறு என்று வைத்து கொள்ளுங்களேன்:)) //

பார்ப்பனர் கைபர் போலன் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் புகுந்தபோது இதே வார்த்தையை திராவிடர் சொல்லி இருந்தால் என்னாகி இருக்கும் செல்வன்?

Anonymous said...

//ஆகம விதிப்படி அமைந்த கோயில்கள், சித்தர் விதிப்படி அமைந்த கோயில்கள், கிராம தேவதை கோயில்கள், ஆற்றங்கரை பிள்லையார் கோயில்கள், இந்துக்களுக்கு மட்டுமான கோயில்கள், எல்லொருக்குமான கோயில்கள், சீசனுக்கு திறக்கும் பத்ரிநாத், அமர்நாத் கோயில்கள், ஆண்களுக்கு கோயில்கள், பெண்களுக்கான கோயில்கள், அரவாணிகள் மட்டும் ஸ்பெஷலாக வழிபடுவது போன்ற குத்தாண்டவர் கோயில்கள் என்று விதவிதமான கோயில்கள் இருக்க வேண்டும்.
//

எல்லா மதமும், எல்லா ஜாதியும், எல்லாரும் சமம் என்னும் இந்திய இறையாண்மைக்கு எதிராக இருக்கிறதே செல்வன் இது?

Anonymous said...

//ஏசுதாஸ் மாதிரிதான் எல்லோரும் இருப்பார்கள் என்று நினைத்தால் அது தப்பு. ஒரு விதியை உருவாக்கும்போது அபூர்வ விதிவிலக்குகளை மனதில் வைத்து விதி அமைக்க முடியாது. என்றோ வரும் அபூர்வ விதிவிலக்கை காட்டி அந்த சட்டமே தப்பு என்றும் சொல்ல முடியாது.
//

பறையன் சாமியை கும்பிடக் கூடாது, தேர் இழுக்கக் கூடாது, அந்தப் பக்கமே வரக்கூடாது என்று சொல்லும் மேல்வர்க்க தேவர் ஜாதி அப்படியே வெளிப்பட்டு இருக்கிறதே செல்வன்?

Anonymous said...

//இன்று ஏசுதாசுக்கு விதியை வளைத்தால் நாளை வட்டம், மாவட்டம், மந்திரி எல்லாம் அந்த உதாரணத்தை காட்டியே உள்ளே நுழைந்துவிடுவார்கள் என்பதும் உண்மை.சிக்கலான விஷயம்தான். என்ன செய்ய?
//

காஞ்சி காமகேடி ஊத்தைவாயன் சுப்பிரமணி செக்ஸ், கொலை, கொள்ளை செய்தபோது அவனுக்கு மட்டும் சிறப்பு அனுமதியாக வாழை இலையில் பேண்டு போட அனுமதி கேட்டாங்களே அது எதனால்னு சொல்ல முடியுமா?

Anonymous said...

//தவறான் ஆகம விதிகளை களையாவேண்டும் என்று ஏற்கனவே பலமுறை சொல்லி விட்டேன். இன்னும் அழுத்தமாக ஒரு முரை சொல்கிரேன்.
//

அப்போ பாப்பான் பிரம்மாவின் தலையில் இருந்து பிறக்கவில்லை என்பதையாவது ஒத்துக்கறியா செல்வன்?

Anonymous said...

Dey anaani, nee mattum enna kaale iruntu poranthennu sonna oththukiRiyaa ? inge ethukku paappaan, paakkamaattaannu pEsikittu, inge inthu, inthu illaathavan nnuthaan pEchchu.

Anonymous said...

//Dey anaani, nee mattum enna kaale iruntu poranthennu sonna oththukiRiyaa ? inge ethukku paappaan, paakkamaattaannu pEsikittu, inge inthu, inthu illaathavan nnuthaan pEchchu.//

அப்போ பாப்பான் மட்டும்தான் இந்துவா? மற்ற தாழ்ந்த ஜாதில்லாம் இந்து இல்லையா? சொல்லுடா பாப்பார வெண்ணை!

SurveySan said...

ஈ.மெயிலில் அளவளாவியது.
-------------------------

> > ??????? wrote:
> > சர்வேசன்,
> >
> > என்னுடைய கருத்து சரி என்பதே, ஏனெனில் கோவில் போன்ற இடங்கள் எல்லாம்
> > எல்லாரையும் அனுமதித்தால் அது மற்ற சுற்றுலாத்தலம் போல் ஆகிவிடும்.
> > மேலும் யாராவது ஒருவர் ஏதாவது ஏடாகூடமான கருத்தோ அல்லது கமெண்டோ
> > அடித்தால் அது நம்பிக்கை உடைய மற்றவரையும் பாதிக்கும், பொதுவா மக்களே
> > அங்க போவது நிம்மதியை தேடி, அதிலும் இந்த "அப்படி அங்க என்ன தான்"
> > இருக்குதுன்னு தெரிந்து கொள்ளலாம் அப்படின்னு போகிற கோஷ்டிகள் வாயையும்
> > அதையும் வெச்சிகிட்டு சும்மா இருக்க மாட்டாங்க. அவங்க பத்தாது என்று
> > இருக்கவே இருக்கிறார்கள் நாத்திக வாதிகள் மற்றும் இந்த விளம்பர
> > பிரியர்கள், இவங்க எல்லாம் அடுத்தவங்க உணர்வுக்கு மதிப்பு கொடுக்கவே
> > மாட்டார்கள்.தேவையில்லாத பிரச்சனைகள்.
> >
> > ஹிந்து மதத்திலும் இருக்கிறார்கள் சும்மா பொழுது போகாமல் கோவிலுக்கு
> > போகிறவர்கள் ஆனா "exceptions" என்ன செய்வது.
> >
> > கடவுள் இல்லாமலே போகட்டும் அதை நம்புகிறவன் நம்பிக்கொண்டு போகிறான்,
> > நாத்திகர்களுக்கு என்ன வந்தது, நீ நம்பவில்லை என்றால் ஏழைகளுக்கு உதவி
> > செய்து விட்டு போ இல்லை வேறு எதாவது சமுக சேவை செய். அதை விட்டு
> > நம்பிக்கை உள்ளவர்களின் மனதை ஏன் புண்படுத்த வேண்டும்.
> >
> > இது மாதிரி ஏகப்பட்ட விஷயங்களும் 7 1/2 களும் இருக்கின்றன. என்னுடைய
> > கருத்து அது சரியே. "Temple or any other religious place is not a
> > picnic spot, where you can fulfill your curiosity".
> >
> > யேசுதாஸ் போன்றவர்கள் exceptions.

-------------------
>
> On 6/13/07, Surveysan wrote:
> > பக்தி இல்லாதவர்களை பக்தி உள்ளவர்களுடன் உள்ளே விடுவது, ப்ரச்சனைகளை
> > உருவாக்கலாம் என்பது சரியான வாதம்.
> >
> > அதுக்கு, 'இந்துக்கள் மட்டும்' என்பதை 'பக்தி உடையவர்கள் மட்டும்' னு போட்டா,
> > இந்த கேள்வியே வந்திருக்காது :)))
> >

-----------------

> ??????? wrote:
> I agree, but there needs to be a valid or measurable scale illaya?
> Have you every tried to get into a Dharga? If at all he is that much
> interested na he can convert into Hindu and come inside na? Who cares.
>
> Sari one question you are working in a company, Can I get into your
> Company and come to your seat and start working(i mean browsing)? I
> may sound racist or a guy with old age thoughts :))..
>
> :))
> ???????
-----------------
> Surveysan wrote:
> :)
> I will be bummed if I am asked to become a christian to visit the churches in Rome/Paris.
> Ofcourse, when i visit churches in Europe, i will be visiting it as a tourist. To deprive me the privilege of viewing the arts and artifacts of Michaelangelo and Da-vinci will be cruel.
> I am visiting because I am fascinated by the contents of the church. the same will apply for any christian who has real interest in visiting our temples.
>
> On the other hand, Yesudoss has full devotion to Krishna and Jesus. It will be hard to ask him to convert, to give him a glimpse of Krishna.
>
> I would have understood if the rule was part of our 'hinduism commandments' and applies to all temples -- but, unfortunately, these rules are added by our ancestors, purely to keep some lower caste individuals outside the temples.
>
> as I mentioned in one of the comments, I have seen how my grand mom, has treated some 'lower' caste people. In her view, it is right, because thats how she was brought up and she was literally following. We can't follow those things anymore.
>
> The temple thing may appear to be a different issue than 'casteism' - but root cause is the same.
>
> barging into my home/office is not the same as allowing entry to a temple. :)
> If our God is a saviour only for Hindus, then may be it makes sense. i dont think Gods differentiate humans liek that :)
>
> just imagine, if you have a friend named George and if he is respectful of hinduism and he is interested in joining you for a temple visit. Do you feel threatened by him for entering our temple? I am not threated by George? so, who is threatened?
>
> சரி, விடுங்க. இந்துக்களுள் 100% agreement வரலன்னா, போர்ட மாத்தாம இருக்கலாம். தப்பில்லை.
> ஆனா, இந்த போர்டு, நம்ம பழைய சாக்கடையை நினைவில் கொள்ளவே உதவும், ஒவ்வொருமுறையும்.

-----------

கோவி.கண்ணன் said...

//நாத்திகர்களுக்கு என்ன வந்தது, நீ நம்பவில்லை என்றால் ஏழைகளுக்கு உதவி
> > செய்து விட்டு போ இல்லை வேறு எதாவது சமுக சேவை செய். அதை விட்டு
//

தொட்டால் தீட்டுப் பட்டுவிடும் என்பதை நீ நம்பவில்லை என்றால் *த்தை மூடிக்கிட்டு போ, அதை நம்புபவர்கள் தீண்டாமை என்பது புனிதமான செயல் என்றால் செய்துவிட்டுப் போகட்டமே - என்பது எவ்வளவு அபத்தமோ அதைதான் அந்த ஈமெயிலார் புரட்சிக்கருத்தாக விதைத்திருக்கிறார்.

இது போல ஆட்கள் இருக்கிறவரை எல்லோரு அதை பொத்திக்கிட்டுத்தான் போகனும் போல இருக்கு.

நல்லா இருங்க சாமிகளா !

Anonymous said...

வரலாறு எந்த சக்திகள் மூலம் உருவாக்கப்படுகிறது என்பதை பற்றி அறிவே இல்லாமல் இங்கே பலர் எழுதியிருக்கிறார்கள்.

பரிதாபப்படத்தான் முடிகிறது.
சமூக அமைப்பை உருவாக்குவது ஆதிக்க குழு. அரசு செய்யும் குழுவே, சாதியே எந்த சாதி எங்கே இருக்கவேண்டும் என்று

நிர்ணயிக்கிறது. அது எழுதும் சட்டத்துக்கு பேனா போல உபயோகப்படுத்தப்படுபவன் பார்ப்பனன். இங்கே கருவியை நொந்துகொண்டு

குத்தாட்டம் நடந்துகொண்டிருக்கிறது.

வரலாற்றின் வினோதங்களில் சிலவாக சிதம்பரம் போன்று மிகச்சிறிய அளவு கோவில்களே பார்ப்பனர்கள் கையில் உள்ளன.

அதனையும் அவர்களிடமிருந்து பிடுங்கிவிடும் ஆசையில் பல்வேறு பிரச்சாரங்களை ஒரு சில ஆதிக்க சாதிகள் பயன்படுத்துகின்றன.

இந்திய அரசு அந்த கோவிலை எடுத்துக்கொள்வது ஒன்றும் கடுமையான வேலை அல்ல. ஆனால், அதனை அப்படியே விட்டுவைத்து,

தொலைநோக்கில் அதனை தனது பார்ப்பன எதிர்ப்பு பிரச்சாரத்துக்கு பயன்படுத்துக்கொள்வது இன்றைய ஆதிக்க சாதிகளாக இருக்கும்

ஒரு சில சாதிகளுக்கு பயனுள்ளதாகவும் இருக்கிறது.

தேவர் ஆதிக்க சக்தியாக இருக்கும் நாட்டில், தேவர்கள் கோவில் கட்டி அதில் யாரை உள்ளே விடலாம் யாரை ஒதுக்கலாம் என்று

அவர்களே நிர்ணயிக்கிறார்கள். இதுவே கேரளாவிலும் அரசனுக்கு அடுத்த படியாக இருந்த நாடார்களுக்கும் நடந்தது. நாடார்கள்

ஆதிக்க சாதியிலிருந்து ஒரே ஒரு கலகத்தால் தீண்டத்தகாத சாதியாக அரசனால் அறிவிக்கப்பட்டார்கள். இதுபோல ஒரு சாதியினர்

தீண்டத்தகாதவர்களாகவும் ஒரு சாதியினர் ஆண்டைகளாகவும் ஆவது மாறி மாறி வந்துள்ளது. இதில் ஆதிக்க சாதியாக அப்போது

இருப்பவர்களுக்கு ஊதுகுழல் மட்டுமே பார்ப்பனர்கள். சொல்லப்போனால், ஆதிக்கசாதிகளின் கூலிவேலையாட்களாகவே அவர்கள்

வரலாறு முழுவதும் இருந்துவந்துள்ளனர். வெள்ளைக்காரர்கள் ஆண்டபோதும் அதே நிலைதான். பிரித்தாளுவதற்காகவும், கிரிஸ்துவ

பிரச்சாரத்துக்காகவும் அவர்களை எதிரிகளாக காண்பித்தும் அதே நேரத்தில அவர்களிடம் சில அதிகாரத்தை கொடுத்தும் கபட

நாடகம் ஆடியது பிரிட்டிஷ் அரசு. இது பல ஆய்வு நூற்களில் ஆவணப்படுத்தபட்டிருக்கிறது. பெரியாரை தாண்டி எதுவும்

படிக்கவேண்டாம் என்று நினைப்பவர்களுக்கு அவை முக்கியமற்ற நூல்கள்தான்.

ரீடிஃபில் குருவாயூர் தலைமை நம்பூதிரியின் பேட்டியை படித்துப்பாருங்கள். சட்டத்தை எழுதுவது பார்ப்பனர்கள் வேலையல்ல.

சட்டத்தை நிறைவேற்றுவதற்காகத்தான் அவர்கள் இருக்கிறார்கள். மனுதர்மம் கூட பார்ப்பனர்கள் எழுதியது அல்ல. மனுதர்மம் மனு

என்ற அரசனால் எழுதப்பட்டது. பார்ப்பனர்களே மனுவை எழுதியிருந்தால், ஏன் அவர்கள் தங்களுக்கு சொத்துரிமையை

விலக்கிவைத்து நிரந்தர பிச்சைக்காரர்களாக அவர்களை அவர்களே ஆக்கிக்கொள்ளவேண்டும்? தலித்துகளை உள்ளே விடக்கூடாது

என்று எழுதியதும் கேரள அரசர்தான். பிறகு அவரே சட்டத்தை மாற்றி அவர்களை உள்ளே விடலாம் என்று மாற்றியதும், வேறு

வார்த்தை பேசாமல் அவர்களை உள்ளே விட்டது பார்ப்பன பூசாரிகள். பார்ப்பன பூசாரிகளின் வேலை, கொடுத்திருக்கும் ஆகமத்தை

நிறைவேற்றுவது. அவ்வளவுதான். அவர் சொல்கிறார். கிறிஸ்துவர்களையும் முஸ்லீம்களையும் குருவாயூர் கோவிலுக்குள் விடலாம்

என்று சட்டத்தை கேரள அரசு மாற்றட்டும், நான் உள்ளே விடுகிறேன் என்று கூறுகிறார்.

இன்றைக்கு தலித்துகள் ஆதிக்க சாதிகள் மீது காட்டவேண்டிய கோபத்தை மிகவும் விவரமாக பார்ப்பனர்கள் மீது திசை திருப்பிவிட்டு விட்டு, தொடர்ந்து அதே அராஜகத்தை செய்துகொண்டு வரும் ஆதிக்க சாதிகள் வெட்கி தலை குனிய வேண்டும்.

ஆனால், அப்படிப்பட்ட விழிப்புணர்வு தலித்துகளுக்கு வந்துவிடக்கூடாது என்று பெரியார் பேச்சும், திராவிட மூளைச்சலவையும் வெற்றிகரமாக செய்யப்பட்டு வருகிறது.

தலித்துகளை கண்டு பரிதாபமே படமுடியும். மாயாவதி போல கொஞ்சம் முழித்துக்கொண்ட தலித்துகள் தமிழ்நாட்டில் இல்லை. முழித்துக்கொள்ள முடியாமல் அவர்கள் மீது திராவிட மாயை கவிந்துகிடக்கிறது.


வெற்றிவேல்

Anonymous said...

//இன்றைக்கு தலித்துகள் ஆதிக்க சாதிகள் மீது காட்டவேண்டிய கோபத்தை மிகவும் விவரமாக பார்ப்பனர்கள் மீது திசை திருப்பிவிட்டு விட்டு, தொடர்ந்து அதே அராஜகத்தை செய்துகொண்டு வரும் ஆதிக்க சாதிகள் வெட்கி தலை குனிய வேண்டும். //

பாப்பனெல்லாம் புள்ளைபூச்சு அவனுங்களுக்கு வெரலை வச்சா... போதுமே ஜல்லி.
:))

Anonymous said...

வெற்றிவேலின் அற்புதமான பின்னூட்டம் தனி பதிவாக வரவேண்டியது.

பல விஷயங்களை புரியவைத்தது. பின்னால் வந்த "விவரமானவரின்" பின்னூட்டம், எப்படி ஆதிக்கசாதி தொடர்ந்து பார்ப்பனன் மீது திசை திருப்புகிறது என்பதன் உதாரணமாகவும் இருக்கிறது.

SurveySan said...

Vetrivel,

very thoughtful comments. but, do u have proof that the rulings came from the 'Arasan' and not from some priests?

Anonymous said...

//Anonymous said...
வெற்றிவேலின் அற்புதமான பின்னூட்டம் தனி பதிவாக வரவேண்டியது.
//

சதுர்வேதி இருக்கார் கவலைவேண்டாம்.
:))

Anonymous said...

என்னுடைய பின்னூட்டத்திலேயே ஆதாரங்கள் கொடுத்திருக்கிறேன்.
நாடார்களை தீண்டத்தகாதவர்களாக ஆக்கியது நம்பூதிரிகள் அல்ல. கேரள அரசர். இது வரலாறு. நாடார் வரலாறு தெரிந்தவர்களிடமே கேட்டுப்பாருங்கள்.

இது இந்து அரசர்கள் மட்டும் செய்தது அல்ல. முஸ்லீம் அரசர்களும் அவர்களுக்கு எதிராக போர்புரிந்து தோற்றவர்களை பீயள்ளும் சாதியினராக ஆக்கினார்கள். (அதற்கு முன்னாள் பீ அள்ளும் சாதிகளே கிடையாது! ஏனெனில், வீட்டுக்குள் மலம் கழிப்பது இந்திய கலாச்சாரத்தில் கிடையாது. அவர்கள் வந்த பின்னால்தான் வீட்டுப்பெண்கள் வெளியே அனுப்பாதகலாச்சாரத்தால், மலம் அள்ளும் சாதிகளின் தேவை இருந்தது. முஸ்லீம் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து போர்புரிந்து தோற்ற ஜாதிகள் இவ்வாறு மலம் அள்ள பணிக்கப்பட்டனர். மலம் அள்ளுவதால் அவர்கள் தீண்டத்தகாதவர்களாக முஸ்லீம் கலாச்சாரத்தால் கருதப்பட்டனர். எல்லாம் வரலாறுதான். பாபர் நாமாவில் கூட இது இருக்கிறது. அதற்கு முந்தையை இஸ்லாமிய ஆவணங்களிலும் இது காணக்கிடைக்கிறது)

எல்லாவற்றையும் கூறுவதாக சொல்லப்படும் திருக்குறளில் தீண்டாமை பற்றி ஏன் எழுதப்படவில்லை என்று சொல்லுங்கள்! ஏனெனில் திருவள்ளுவர் காலத்தில் தீண்டாமை இல்லை!

Anonymous said...

//முஸ்லீம் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து போர்புரிந்து தோற்ற ஜாதிகள் இவ்வாறு மலம் அள்ள பணிக்கப்பட்டனர். //

முஸ்லிம் அரசரர்களை சில சாதியினர் மட்டுமே எதிர்த்து போர்புரிந்தனர். பார்பனர் மந்திரிசபையை அலங்கரித்தனர் ? என்று ஒப்புக் கொண்டதற்கு பாராட்டுக்கள் !

Anonymous said...

விவரமானவருக்கு என் விவரம் தேவையில்லை என்றாலும் ஒரு சிறு குறிப்பு.
முஸ்லீம் அரசர்கள் ஆட்சிக்கு வந்ததும் செய்யும் முதல் காரியம், பிராம்மணர்களை கொன்றுதள்ளுவதுதான். முகம்மது பின் காசிம் சிந்து மாநிலத்தின் ராஜா தாஹிர் சென் என்பவரை எதிர்த்து போரிட்டு தாஹிர் தோற்றதும் செய்த முதல் காரியம் எல்லா பௌத்த பிக்குக்களையும் எல்லா பிராம்மணர்களையும் கொன்றதுதான். சுமார் அறுபது ஆயிரம் பிராம்மணர்களை கொன்றதாக சாச்நாமா கூறுகிறது. பிராம்மணர்களை கொன்றதும் மற்றவர்கள் எல்லோரும் உடனே இஸ்லாமுக்கு மாறிவிடுவார்கள் என்று தவறாக நினைத்ததுதான் காரணம். (அந்த நினைப்பால்தான் இன்னமும் கிறிஸ்துவ பிரச்சாரர்களும் முஸ்லீம் பிரச்சாரர்களும் பார்ப்பனர்களை குறி வைத்து திட்டுவதன் காரணம்)

பார்ப்பனர்களை உபயோகப்படுத்திக்கொண்டது இந்து அரசர்கள் மட்டுமே. முஸ்லீம் அரசர்களிடமிருந்து பிராம்மணர்களும், ஆசாரிகளும், கோவில் கட்டும் ஸ்தபதிகளும் ஓடி இந்து அரசர்களிடம் தஞ்சமடைந்தார்கள். அப்படி தங்கிய சாதிகள் கட்டாயமாக முஸ்லீமாக மதம் மாற்றப்பட்டனர். வடக்கில் பெரும்பாலான சிலை வடிப்பவர்கள், ஆசாரிகள், கோவில் கட்டுபவர்கள் ஜாதிகள் இன்று முஸ்லீமாக இருப்பதன் காரணம் அதுதான்.

Anonymous said...

//முஸ்லிம் அரசரர்களை சில சாதியினர் மட்டுமே எதிர்த்து போர்புரிந்தனர். பார்பனர் மந்திரிசபையை அலங்கரித்தனர் ? என்று ஒப்புக் கொண்டதற்கு பாராட்டுக்கள் !//

விவரமானவரின் பின்னூட்டத்தை தவறாக புரிந்துகொண்டுவிட்டேன் என்று நினைக்கிறேன். மன்னிக்கவும்.

பிராம்மணர்கள் முஸ்லீம் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து போர்புரியவில்லை என்று அவர் கூறுகிறார் என்று நினைக்கிறேன். அது உண்மைதான். ஏனெனில் கோவில் பூசாரிகளான அவர்கள் போர் புரிய அனுமதிக்கப்படவில்லை. கோவில் பூசாரிகள் என்பதால் அவர்கள் முஸ்லீம் ஆக்கிரமிப்பாளர்களால்கொல்லப்பட்டனர்.

முஸ்லீம் அரசர்கள் போரில் எதிர்த்த எல்லா இந்து சாதிகளையும் மலம் அள்ள பணிக்கவில்லை. அரசனின் ஜாதி எதுவோ அதனைத்தான் அவ்வாறுபணித்தனர். மற்றவர்களை கட்டாய மதம் மாற்றம் செய்தனர். மறுத்தவர்கள் கொல்லப்பட்டனர். போர் புரியாத மற்றவர்கள் இந்துக்களாக அடிமைகளாக இருக்க அனுமதிக்கப்பட்டனர். வியாபாரிகளான வைஸ்யர்கள் போர் புரியாதவர்கள். அவர்கள் அரசனுக்கு ஜிஸியா செலுத்திவிட்டு தொடர்ந்து இந்துக்களாகவே நீடித்தனர். பிரிவினையின் போது இந்தியாவுக்கு ஓடிவந்த சிந்தி இந்துக்கள் அனைவரும் வைஸியர்கள். (அத்வானி உட்பட) இந்துக்கள் சிந்து மகாணத்திலேயே தங்கினார்கள் தலித்துகளாக. இவர்கள் முன்னாள் ஆட்சியாளர்கள். மற்ற போர்வீரர் ஜாதிகளும், கைவினையாளர்களும் முஸ்லீம்களாக மாற்றப்பட்டார்கள்.

SurveySan said...

///நாடார்களை தீண்டத்தகாதவர்களாக ஆக்கியது நம்பூதிரிகள் அல்ல. கேரள அரசர். இது வரலாறு. நாடார் வரலாறு தெரிந்தவர்களிடமே கேட்டுப்பாருங்கள்.
///

When did நாடார் goto Kerala? Typo?

Anonymous said...

No Typo.
Check the historians.

கோவி.கண்ணன் said...

இந்துமதத்தில் உள்ள பழமை வாதத்தைக் குறித்து பேசும் போது தேவையில்லாமல் இஸ்லாமியர்கள் ஆட்சியே மலம் அள்ளுவதற்கு காரணம் என்ற திசை திருப்பல் பதிவுக்கு பொருத்தமானதாக தெரியவில்லை.

மலம் அள்ளிக் கொட்டியவர்கள் இஸ்லாமியர்களுக்கு மட்டும் சென்ற நூற்றாண்டுவரை அள்ளிக் கொட்டிக் கொண்டு இருக்கவில்லை என்பதை வெற்றிவேல் அவர்கள் மறுக்க மாட்டார் எனநினைக்கிறேன்.

//முஸ்லீம் அரசர்கள் போரில் எதிர்த்த எல்லா இந்து சாதிகளையும் மலம் அள்ள பணிக்கவில்லை. அரசனின் ஜாதி எதுவோ அதனைத்தான் அவ்வாறுபணித்தனர்.
//
நாடாண்ட சாதிமக்களைத்தான் நாறடித்துக் கொண்டு இருக்கிறோமா ?

குறிப்பாக தாழ்த்தப்பட்ட சாதியனரே ஏன் அவ்வாறு பணிக்கப் பட்ட்டனர் என்று வெற்றிவேல் அவர்கள் விளக்குவாரா ?

//மற்றவர்களை கட்டாய மதம் மாற்றம் செய்தனர். மறுத்தவர்கள் கொல்லப்பட்டனர். போர் புரியாத மற்றவர்கள் இந்துக்களாக அடிமைகளாக இருக்க அனுமதிக்கப்பட்டனர். //

அதுபோல் மதம் மாறியவர்கள் எல்லோரையும் இங்கே கோழைகள் போல சித்தரித்திருப்பது கண்டனத்துக்கு உரியது.

************

இங்கே கேட்டிருப்பதே பழமை வாதம் தொடரலாமா என்பது தான். அதற்கு (ஞாயமான ?) காரணம் ஏன் என்ற கேள்வியெல்லாம் யாரும் கேட்கவில்லை.

Anonymous said...

என் சொந்தப் பெயரில் வந்தால் நானும் பிராமனர் என்று சொல்வார்கள் என்பதால் நான் வெற்றிவேலாக வந்தேன். நான் பல பெயர்களில் பதிவும் பின்னூட்டமும் எழுதுபவன். ஒருமுறை முரளிமனோஹராக எழுதி மாட்டிக் கொண்டதும் அடியேன்தான். என்னை வலையுலக டெண்டுல்கர் என்றும் அழைப்பார்கள்!

SurveySan said...

emailல் வந்தது:
---------------
????????? wrote:
சர்வேசன் (உங்க பெயர் என்னங்க?),
எனக்கு தெரிந்த வரையில் பெரும்பாலான கோவிலில் கருவரைக்குள் தான் உள்ளே வர
தடை இருக்குங்க எனவே கோயிலின் மற்ற பகுதிகளை அவர்கள் கண்டுகளிக்களாமே?

//I will be bummed if I am asked to become a christian to visit the
churches in Rome/Paris.
Ofcourse, when i visit churches in Europe, i will be visiting it as a
tourist. To deprive me the privilege of viewing the arts and artifacts
of Michaelangelo and Da-vinci will be cruel.
I am visiting because I am fascinated by the contents of the church.
the same will apply for any christian who has real interest in
visiting our temples.//

ஒவ்வொரு மதத்துக்கும் மனிதனை நல்வழிப்படுத்துதலே குறிக்கொள் என்றாலும்
அதை வெவ்வேறு வழிகளில் செய்கின்றன அவ்வுளவே. ஒவ்வொரு மதத்துக்கும்
தனித்தனி rules உண்டு. அவர்கள் செய்கிறார்களே நம்மளும் செய்யலேமே என்றால்
இது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லையே? ஒரு Churchக்குள் சென்று non
christians புனித அப்பம்(பெயர் சரி தானே?) வாங்க முடியுமா? ஒரு
தர்காவுக்குள் சென்று உங்களால் தொழுவ முடியுமா? முடியாதல்லவே அது போல
தான் இதுவும். உங்களால் அங்கே போயி வாதிட முடியுமா? நானும் மனிதன் தான்
எனக்கும் குடு என்று? ஒவ்வொரு மதத்துக்கும் ஒவ்வொரு விதிமுறை அவ்வுளவே.

//On the other hand, Yesudoss has full devotion to Krishna and Jesus.
It will be hard to ask him to convert, to give him a glimpse of
Krishna.//
that is a trade off அவ்வுளவே சொல்ல முடியும்.

//I would have understood if the rule was part of our 'hinduism
commandments' and applies to all temples -- but, unfortunately, these
rules are added by our ancestors, purely to keep some lower caste
individuals outside the temples.//
தாழ்ந்த ஜாதி மக்களும் இந்துக்கள் தானே (நான் தவறாக கூட இருக்கலாம்)?
எனவே இந்த வாதம் எப்படி சரியாக இருக்கும்? எனவே நாம் அறியாத காரணம்
ஏதாவது இருக்கலாம்.

//as I mentioned in one of the comments, I have seen how my grand mom,
has treated some 'lower' caste people. In her view, it is right,
because thats how she was brought up and she was literally following.
We can't follow those things anymore.//

நான் தாழ்ந்த ஜாதி மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இல்ல
தற்பொழுது நிகழ்ந்து கொண்டு இருக்கிற கொடுமைகள் எதையும்
நியாயப்படுத்தவில்லை அது மிகவும் கண்டனத்துக்குரியது. ஆனால் கோவிலுக்கும்
இந்துக்களை தவிர ஏனைய மத்ததினர் உள்ளே வரக்கூடாது அப்படிங்கிற இது
பொருந்தாது.

//The temple thing may appear to be a different issue than 'casteism'
- but root cause is the same.//
எனக்கு அப்படி தோன்றவில்லை. நம்முன்னோர்கள் விட்டுச்சென்ற புதிர்களுல்
இதுவும் ஒன்று.


//If our God is a saviour only for Hindus, then may be it makes sense.
i dont think Gods differentiate humans liek that :)//
நானும் அவ்வாறு நினைக்கவில்லை. ஆனால் ஒவ்வொரு மதத்துக்கும் ஒவ்வொரு
கோட்பாடு உண்டு. இப்ப அமெரிக்காவில் எடுத்துக்கொள்ளுங்கள் அவர்களின்
தேசியக்கொடியை உள்ளாடையாக போட்டுக்கொள்ளலாம். நம் தேசியக்கொடியை அவ்வாறு
போட முடியுமா? இவர்களின் தேசிய கீதம் இசைக்கப்படும் பொழுது எழுந்து
நின்று மரியாதை அளிக்க வேண்டும் என்று இல்லை நம்மூரில் அப்படியா? அதற்காக
இந்தியாவில் மனித உரிமை இல்லை என்று போராட முடியுமா?

ஏன் இவர்கள் அவர்களின் கடவுளை உள்ளாடைகளிலும், செருப்பக்களில் கூட
போட்டுக்கொள்கின்றனர். நம் கடவுள்களை அவ்வாறு போட நீங்க
ஒத்துக்கொள்வீர்களா? உங்களிடம் கடவுள் சொன்னாரா அவர் படத்தை
உள்ளாடைக்குள் போட வேண்டாம் என்று? Infact கடவுளின் இந்த உருவங்கள்
நிஜமா?

//just imagine, if you have a friend named George and if he is
respectful of hinduism and he is interested in joining you for a
temple visit. Do you feel threatened by him for entering our temple?
I am not threated by George? so, who is threatened?//
எல்லாரும் நண்பர்களாகவும் நல்லவர்களாகவும் இருந்து விட்டால் பிரச்சனையே
இல்லையே :))..

//சரி, விடுங்க. இந்துக்களுள் 100% agreement வரலன்னா, போர்ட மாத்தாம
இருக்கலாம். தப்பில்லை.
ஆனா, இந்த போர்டு, நம்ம பழைய சாக்கடையை நினைவில் கொள்ளவே உதவும்,
ஒவ்வொருமுறையும். //
எனக்கு இல்லை என்று தான் படுகிறது. சாதிய கொடுமைகளை எடுத்து சொல்ல பல கோர
சுவடுகள் உள்ளன இது இல்லை என்று நினைக்கிறேன்.

SurveySan said...

முடிந்தவரை 'சர்வேசனாவே' இருக்கலாம்னு முடிவு :)

/////பெரும்பாலான கோவிலில் கருவரைக்குள் தான் உள்ளே வர
தடை இருக்குங்க எனவே கோயிலின் மற்ற பகுதிகளை அவர்கள் கண்டுகளிக்களாமே?/////
பெரும்பான்மை கோயில்கள் அப்படித்தான். ஆனா, இந்த குருவாயூர், இராமேஸ்வரத்தில் இருக்கும் விதிவிலக்கு எதுக்கு? இந்துக் கோயில்னா எல்லாமே ஒரே மாதிரி இல்ல இருக்கணும்?

//////ஒரு Churchக்குள் சென்று non
christians புனித அப்பம்(பெயர் சரி தானே?) வாங்க முடியுமா? ஒரு
தர்காவுக்குள் சென்று உங்களால் தொழுவ முடியுமா? முடியாதல்லவே அது போல தான் இதுவும். உங்களால் அங்கே போயி வாதிட முடியுமா? நானும் மனிதன் தான் எனக்கும் குடு என்று? ஒவ்வொரு மதத்துக்கும் ஒவ்வொரு விதிமுறை அவ்வுளவே.////

நம்ம கோட்பாட்டின் பேக்ரவுண்ட் வேற. அவங்க கோட்பாடு எதனால் வந்ததுன்னு தெரியல. மொதல்ல நம்ம எடத்த சரி பண்ணுவமே?

////தாழ்ந்த ஜாதி மக்களும் இந்துக்கள் தானே (நான் தவறாக கூட இருக்கலாம்)?
/////

எல்லாரும் இந்துக்கள் தான். குருவாயூரில், ஒரு காலத்தில் 'இழவா' என்ற தாழ்ந்த ஜாதியை உள்ளே விடாமல் இருந்தார்கள். யாரோ ஒரு பெரியவர் போராடி, அவங்கள உள்ள விட வழி செய்தார். இப்ப இந்துக்கள் மட்டும் என்றாயிருக்கு. இன்னொரு பெரியவர் வந்து ஒதச்சா, இந்த போர்டும் மாறி, 'மனிதர்கள் உள்ளே வரலாம்னு' மாறலாம் :)

அமெரிக்கா இந்த விஷயத்துல எவ்ளவோ முன்னேறிதான் இருக்காங்க. சாதாரண, அபார்ட்மெண்ட்ல ஆள் எடுக்க கூட, 'இந்த சாதி, இந்த தேசத்தைச்' சேர்ந்தவர்கள் மட்டும்னு கேட்க்க முடியாது.
நம்ம ஊர், பல வருடங்கள் பின் தங்கி இருக்கு :(

Anonymous said...

//வெற்றிவேல் said...
என் சொந்தப் பெயரில் வந்தால் நானும் பிராமனர் என்று சொல்வார்கள் என்பதால் நான் வெற்றிவேலாக வந்தேன். நான் பல பெயர்களில் பதிவும் பின்னூட்டமும் எழுதுபவன். ஒருமுறை முரளிமனோஹராக எழுதி மாட்டிக் கொண்டதும் அடியேன்தான். என்னை வலையுலக டெண்டுல்கர் என்றும் அழைப்பார்கள்!

5:53 PM, June 14, 2007

//
இது நான் அல்ல.

Anonymous said...

கோவி கண்ணன்.
நீங்கள் சொல்லும் கேள்விகளுக்கு நான் எழுதியவற்றிலேயே பதில் இருக்கின்றன.

தமிழ்நாட்டின் எந்த தாழ்த்தப்பட்ட சாதியும் அவ்வாறு பணிக்கப்படவில்லை.

தமிழை தாய்மொழியாகக்கொண்ட ஒரு பீயள்ளும் ஜாதியை காட்டுங்களேன். காட்டமுடியாது. ஏனெனில் தமிழ்நாட்டில் பீயள்ள ஆந்திர கர்னாடக ஜாதியினரை கொண்டுவந்தது அங்கிருந்து வந்த நவாப்கள்.

முஸ்லீம்களை குறைகூறுவதற்காகவோ ஒரு சாராரைகோழைகள் என்று சித்தரிப்பதோ இந்த பதில்களின் நோக்கமல்ல. உண்மையை பொலிடிகலி கரெக்ட் ஸ்டேட்மண்ட்கள் மூலம் மறைத்துவிட்டு பேசுவது வரலாறு அல்ல. அதன் பெயர் பிரச்சாரம்.

SurveySan said...

வெற்றிவேல்,

//இது நான் அல்ல.//

அனானியா வந்தா இது தான் ப்ரச்சனை.

கயிறு திரிப்பவர்கள் இனி சும்மா இருக்க மாட்டாங்க :)

கோவி.கண்ணன் said...

துணிந்து போர் புறிந்த ஒரு சமூகம் தோற்றுப் போனதால் பீயள்ள ஒப்புக் கொண்டார்கள் என்பது அபத்தமானவாதம். எதற்கும் 'எச்சில்' என்ற - ஓம்பிரகாஷ் வால்மிகி நூல் கிடைத்தால் படித்துப் பாருங்கள்.

சாதியை யார் யார் பிடித்து தொங்குகின்றனர் என்பதுதான் வாதமே.
பதிவுகளில் என் சாதி உயர்ந்தது அடுத்த சாதி கீழானவர்கள், காலில் இருந்து பிறந்தார்கள் என்று மற்ற மூவர்ணத்தை சேர்ந்த எவரும் அபத்தமாக பேசுவதும் அதற்கு காரணங்களை கூறுவதும் இல்லை.

மாற்றங்கள் மனது வைத்து மாறியது என்று வரலாறுகள் காட்டுவதைவிட மாற்றவைக்கப்பட்டு இருக்கிறது(காலத்தின் கட்டாயமாக) என்பதுதான் உண்மை. குருவாயூருக்கு இன்னும் ஒரு 50 வருடம் தேவைபடுகிறது போல :)

Anonymous said...

நான் தான் சதுர்வேதி என்ற பெயரில் எழுதுகிறேன்.

-வெற்றிவேல்

SurveySan said...

////நான் தான் சதுர்வேதி என்ற பெயரில் எழுதுகிறேன்.

-வெற்றிவேல் /////

அனானி, இந்த கும்மியெல்லாம் இங்க வேணாமே. நல்ல கருத்துப் பரிமாற்றங்கள் நடந்துக்கிட்டு இருக்கு. நடுவுல எதுக்கு இந்த வில்லங்க விளையாட்டு?

SurveySan said...

கோவி.கண்ணன்,

////இங்கே கேட்டிருப்பதே பழமை வாதம் தொடரலாமா என்பது தான். அதற்கு (ஞாயமான ?) காரணம் ஏன் என்ற கேள்வியெல்லாம் யாரும் கேட்கவில்லை.///

இவ்ளோ straight-forwardஆன கேள்விக்கு ஏன், இவ்ளோ சுத்து சுத்தராங்கன்ன தெரியல :)

Anonymous said...

நான் இந்துப் பெற்றோருக்கு பிறந்தவன். பகவத்கீதை மற்றும் புத்தர், இயேசு, விவேகானந்தர் போன்றவர்களின் கருத்துக்களையும் படித்து என் ஆன்மீக வாழ்க்கையில் பின்பற்ற முயல்பவன், யோகம் பயில்பவன். கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள், பௌத்தர்கள், தலித்துக்கள் போன்றவர்களை என் சக மனிதர்களாகத்தான் பார்க்கிறேன். கிறித்தவர்களோ இஸ்லாமியர்களோ குருவாயூர் கோயிலினுள் போக முடியாது என்றால், நானும் அந்தக் கோயிலினுள் நுழைய மாட்டேன். குருவாயூரப்பன் மீது எவ்வளவு பக்தி இருந்தாலும் சரி, எல்லா மனிதர்களும் நுழையமுடியாத கோயிலினுள் நான் நுழைய விரும்பவில்லை. ஆனால் குருவாயூர் கோயில் பூசாரிகளின் நம்பிக்கைகளில் தலையிட எனக்கு எந்த உரிமையும் இல்லை.

குருவாயூர் கோயில் பூசாரிகள் (அல்லது வெற்றிவேல் சொல்வது போல் கேரள அதிகாரவர்க்கத்தினர்) ஒன்றும் இந்து மதத்தின் பரதிநிதிகள் அல்ல, குருவாயூர் கோயிலும் ஒன்றும் இந்து மதத்தின் தலைமை பீடம் அல்ல. உண்மையில் இந்து என்று ஒரு மதமே கிடையாது. இந்து மதம் என்று கூறப்படுவது சைவர்கள், வைணவர்கள், சாக்தர்கள், வேதாந்திகள், யோகிகள் போன்ற பல பிரிவுகளின் கலவை. இவர்களையெல்லாம் ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் ஸ்தாபனம் ஒன்றும் கிடையாது. எல்லா இந்துக் கோயில்களிலும் எல்லா மனிதர்களையும் உள்ளே விட வேண்டும் என்று கூறம் அதிகாரம் எவருக்கும் கிடையாது. மற்றவருடன் பல விவாதம் புரிந்தாலும், தன் வழிமுறையிலிருந்து மற்றோர் வழிமுறை எவ்வளவு முரண்பாடுடையதாய் இருந்தாலும் அதை மதிப்பதே இந்து மதம் என்று கூறப்படும் மதத்திலுள்ள பிரிவுகளின் கோட்பாடு. வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான் இந்து மதம். 'இந்து மதக் கோயில்கள் இப்படித்தான் இருக்கவேண்டும்' என்று சட்டம் போடுவது இந்து மதக் கோட்பாடுகளுக்கே எதிரானது.

இஸ்லாமியர்கள், தங்கள் மசூதிக்குள் பிற மதத்தவர் நுழையமுடியாது என்று கூறுவதை மதித்து அங்கே செல்லாத நான், குருவாயூரப்பன் மதத்தினரின் நம்பிக்கையையும் மதித்து அக்கோயிலினுள் செல்ல விரும்பவில்லை. ஆனால் இதற்கும், மற்ற இந்து மதப் பிரிவுகளின் கோயில்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் சொல்ல வருவது புரிகிறது என்று நினைக்கிறேன். இதற்கு மேல் இந்த விஷயத்தில் எந்த குழப்பமும் இல்லை.

Anonymous said...

//துணிந்து போர் புறிந்த ஒரு சமூகம் தோற்றுப் போனதால் பீயள்ள ஒப்புக் கொண்டார்கள் என்பது அபத்தமானவாதம். //

அது இன்று வாழும் உங்களுக்கு அபத்தமாக தெரிகிறது. சாச்நாமா, பாபர்நாமா போன்ற ஆவணங்களை படித்துபாருங்கள். யாரும் சுயமாக அந்த வேலையை செய்ய ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

//குருவாயூர் கோயில் பூசாரிகளின் நம்பிக்கைகளில் தலையிட எனக்கு எந்த உரிமையும் இல்லை.
//

குருவாயூர் நம்பூதிரி ரீடிபில் சொல்வதை படியுங்கள். இது அவர்கள் நம்பிக்கை இல்லை. இது அவர்களுக்கு கொடுத்திருக்கும் ஆகமம். அல்லது கோவில் சட்டம்.
இந்த கோவில் சட்டத்தை அன்று அரசர் மாற்றினார். இன்று கேரள அரசாங்கம் மாற்றவேண்டும். இதுதான் அவர் சொல்வது.

//SurveySan said...
கோவி.கண்ணன்,

////இங்கே கேட்டிருப்பதே பழமை வாதம் தொடரலாமா என்பது தான். அதற்கு (ஞாயமான ?) காரணம் ஏன் என்ற கேள்வியெல்லாம் யாரும் கேட்கவில்லை.///

இவ்ளோ straight-forwardஆன கேள்விக்கு ஏன், இவ்ளோ சுத்து சுத்தராங்கன்ன தெரியல :)

//
பதில் மீண்டும். பழைய ஆகமம் இருக்கவேண்டுமா அல்லது மாற்றவேண்டுமா என்பது அரசாங்கத்தின் வேலை. அரசாங்கத்தை தேர்தெடுக்கும் மக்களின் வேலை.

நம்பூதிரி அதனைத்தான் சொல்கிறார்.

Anonymous said...

நம்பூதிரியோ, அரசாங்கமோ, கோயிலை நிர்வகிப்பவர்கள் ஆகமத்தை மாற்றினால் அவர்களுக்கு என் பாராட்டுக்கள். நான் யாரையுமே, எந்த வர்க்கத்தினரையுமே குறை கூற விரும்பவில்லை. நான் கூற விருப்புவதெல்லாம், இஸ்லாமியர்களோ, கிறித்தவர்களோ, குருவாயூர் கோயில் நிர்வாகிகளோ, அவர்கள் நம்பிக்கைகளை அவர்களே வைத்துக்கொள்ளட்டும். அவர்களாக பார்த்து கோட்பாடுகளை மாற்றினால் மகிழ்ச்சி. அவர்கள் நம்பிக்கையில் உடன்படாதோர் அவர்களுடைய வழிபாட்டுத்தலங்களை புறக்கனித்துவிட்டுப் போகட்டும். ஏன் அவர்கள் நம்பிக்கையில் தலையிட வேண்டும்? அவர்களாகவே விரும்பி அவர்கள் அறியாமையையோ இயலாமையையோ போக்கிக் கொள்ள ஒரு வாய்ப்பு தர வேண்டாமா?

அத்துடன் ஆகமங்கள் என்பவை இந்து மதத்தில் உள்ள எல்லா பிரிவுகளுக்கும் பொதுவானது அல்ல. ஒவ்வொரு பிரிவுகளும் வெவ்வேறு ஆகமங்களை பின்பற்றுகின்றன, ஒரு சில பிரிவுகள் எந்த ஆகமத்தையும் பின்பற்றுவதில்லை. ஒரு பிரிவினரின் ஆகமம் சில பிற்போக்கான கோட்பாடுகளை வலியுறுத்தினால் அது இந்து மதத்தின் தவறல்ல. "இந்துக் கோயில்னா எல்லாமே ஒரே மாதிரி இல்ல இருக்கணும்?" என்று இங்கே ஒரு பின்னூட்டத்தில் சர்வேசான் கூறியிருந்தார். இது விரும்பத்தக்கதல்ல. பல்வேறு நம்பிக்கைகள் ஒன்றை ஒன்று மதித்து சுதந்திரத்துடன் செயல்படுவதே இந்து மதத்தின் சிறப்பு. எல்லா கோயில்களையும் ஒருபோல் கொண்டு வந்து ஒரே மாதிரியான கோட்பாடுகளை கொண்டு வருவது இந்து மத்தையும் கிறித்தவம் இஸ்லாம் போல ஒரு institutionalized religion ஆக்கிவிடும். இது இந்து மதத்தின் அடிப்படை வேரான சுதந்திரத்தையே பறிப்பது போன்றது. மேலும் அனைத்து இந்து மதப் பிரிவுகளையம் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரே மாதிரியான கோட்பாடுகளை விதிக்கும் தகுதி இன்று யாருக்கு இருக்கிறது?

கோவி.கண்ணன் said...

சொன்னதையே வேறு வேறு பெயர்களில் வேறு வேறு விதமாக ஜல்லிஸ் அடிக்கப்படுகிறது. யாராவது விவாதமாக எழுதினால் திரும்பவம் வருவேன். 'சமீப' பின்னூட்டங்கள் செம போஃர்
:(

Anonymous said...

//சொன்னதையே வேறு வேறு பெயர்களில் வேறு வேறு விதமாக ஜல்லிஸ் அடிக்கப்படுகிறது. யாராவது விவாதமாக எழுதினால் திரும்பவம் வருவேன். 'சமீப' பின்னூட்டங்கள் செம போஃர்
:(
//
என்ன செய்வது, வெற்றிவேல் சொல்வது உங்களுக்கு கசக்கிறது எனப்து தெரிகிறது. அதனை பொய் என்று நிரூபிக்கவும் முடியவில்லை. மென்று முழுங்கி இப்படி துப்பத்தான் தெரிகிறது.

வெற்றிவேலுக்கு மிக்க மிக்க நன்றி.
இந்த விவாதம் வெற்றிவேலால் ஒரு முடிவுக்கு வந்தது. இன்னமும் வெறுப்பு பிரச்சாரம் செய்துகொண்டிருப்பவர்கள் இந்த பதிவில் அவரது பின்னூட்டங்களை ஞாபகம் வைத்துக்கொண்டால் நல்லது.

VSK said...

மீண்டும் அதே வீடு உதாரணம்!

ஒரே வீட்டில் இருக்கும் பல நபர்களின் பழக்கவழக்கங்க்கள் வெவ்வேறாக இருப்பதைப் போலவே, பல்வேறு கோட்பாடுகளையும், கட்டுப்பாடுகளையும் உள்ளடக்கி, அவரவர் வழியில், பல்வேறு கடவுளர்களை வணங்கிய ஒரு இனத்தின் கூட்டுப் பெயரே இந்து!

முருகனுக்கு காவடி, அம்மனுக்கு தீ மிதி, முனிக்கு கிடா வெட்டு, க்ருஷ்ணனுக்கு துலாபாரம், சிவனுக்கு அபிஷேகம் எனப் பலவகையான நம்பிக்கைகள், சம்பிரதாயங்கள்.

வைணவக் கோயிலில் ஒரு மாதிரி, சிவன் கோவிலில் வேறொரு மாதிரி வழிபாடு முறைகள்.

ஆனால், இது அத்தனையும் இந்து என்ற ஒரு கூட்டமைப்பினர்க்குப் பொது.

அந்தந்தக் கோயில்களில் ஒருவனே சென்று அந்தந்த முறைகளை கடைபிடிக்க முடியும்.

அந்நிய மடங்கள் நம்மிடையே புகுந்த பின்னர், ஒரு தற்காப்பு நடவடிக்கையாகவே இந்த சிவப்பு போர்டு தொங்க ஆரம்பித்தது.

அந்தந்த வழிபாட்டு முறைகளுக்கான ஆகமங்கள் தெளிவாகவே வரையறுக்கப் பட்டிருக்கின்றன... தனித்தனியாக!

இந்துவல்லாதோருக்கு இது விசித்திரமாகவும்,, கோமாளித்தனமாகவும் கூட இருக்கும்.

எனவே, பொது இந்துக்கோயில் என்பது இனிமேல் புதிதாக நிர்மாணிக்கப்படும் கோயில்களில் வேண்டுமானால், ஒரு புது பொது முறையாக வரமுடியுமே தவிர, காலங்காலமாக இருந்துவரும் பண்டைக் கோயில்களில் இயலாது!

இதனைத் தெளிவாக விளக்கிய திரு. வெற்றிவேலுக்கு நன்றி.

இதற்கு மேலும் இதனைத் தொடர்வது, 'வீம்புக்காக அல்ல' என்ற கருத்தை முறியடிப்பதாகவே அமையும் என எண்ணுகிறேன்.

நன்றி.

SurveySan said...

வெற்றிவேல்,

///பழைய ஆகமம் இருக்கவேண்டுமா அல்லது மாற்றவேண்டுமா என்பது அரசாங்கத்தின் வேலை. அரசாங்கத்தை தேர்தெடுக்கும் மக்களின் வேலை.
நம்பூதிரி அதனைத்தான் சொல்கிறார்.///

அதைத்தான் நானும் சொல்றேன்.
அரசன் போட்ட சட்டம் இது.

அரசன் யாருக்கும் பயந்து இந்த போர்ட போட்டிருக்க மாட்டான்.
அரசன், சிலபேரைக் கேட்டு ஆராய்ந்து, ஒரு கூட்டத்தைக் கோயிலை விட்டு ஒதுக்க போட்ட சட்டம் இது.

இன்றைய அரசன், இந்த சட்டத்தை தூக்க வேண்டும் என்பதே என் விருப்பமும்.

இந்து மதக் கோட்பாடு இது என்ற, வெத்து விவாதங்கள் தவறு.
இது அரசன் இயற்றிய கேடு. இன்றைய அரசன் இந்த கேட்டைக் களைய வேண்டும்.

படித்தவர்களும், இந்து மதக் கோட்பாடு இது, ஒவ்வொரு கோயில் ஒவ்வொரு மாதிரி தான் இருக்கணும் என்று, அன்றைய 'racist' அரசனுக்கு தோள் கொடுப்பது வேதனை.

The King ordered this for 'whatever' reasons. This is not a commandment of hinduism. This is also not helping hinduism or its followers in anyway.

We should raise one voice, to remove the dirty red board from our temples.
The churches and mosques will follow us.
If they don't, shame on them.

If we don't, lets face it, we were advocating untouchability long ago and we are continuing to do so even today.

SurveySan said...

vsk,

/////////பொது இந்துக்கோயில் என்பது இனிமேல் புதிதாக நிர்மாணிக்கப்படும் கோயில்களில் வேண்டுமானால், ஒரு புது பொது முறையாக வரமுடியுமே தவிர, காலங்காலமாக இருந்துவரும் பண்டைக் கோயில்களில் இயலாது!//////

குருவாயூரப்பன் அருளிய ஏதாவது ஒரு கீதையிலோ, இல்ல வேற ஏதாவது இதிகாஸங்களிலோ, இந்த மாதிரி மாற்று மதக்காரனை உள்ளே அனுமதிக்க வேணாம்னு சொல்லியிருந்திருந்தா, இந்த பதிவு எழுத வேண்டிய அவசியமே இருந்திருக்காது.

இது நடுவில் வந்த ஒரு 'கோட்பாடு'. ஏதோ ஒரு அரசன், ஏதோ ஒரு காரணத்துக்காக, சிலரை கோயிலை விட்டு ஒதுக்கி வைத்திருக்கிறான்.

அதைத் திருத்த வேண்டும்.

இராமேஸ்வரக் கிணற்றில், 'பிராமணர்கள் மட்டும்' என்ற சிகப்பு போர்டும், இந்த குருவாயூர் போர்டும் என்னைப் பொறுத்தவரை ஒரே செயலை செய்யப் பயன் பட்டு வருகிறது.

இந்த போர்டை தூக்கிவிட்டால், யாருக்கும், ஒன்றும் கேடு வரப் போவதில்லை.

நம் அழுக்கான கடந்த காலத்தின் ஒரு சுவடை அழிக்க, இந்த போர்டை தூக்கலாம்.

வீம்பல்ல, உண்மையான மன வருத்தம்.

:(

VSK said...

உங்கள் நண்பர்களுக்கு ஏற்பட்ட நிகழ்வால் வருந்தி, ரொம்பவே குழம்பியிருக்கிறீர்கள், சர்வேசன்.

அரசன் செய்தான் என்கிறீர்கள். இல்லை, இல்லை... அரசன் 'சிலரைக்' கலந்தாலோசித்துச் செய்தான் என்கிறீர்கள்.

மாற்றுமதம் என்ற ஒன்றே தெரியாத, குறிப்பில்லாத கீதையிலிருந்தும், இதிகாஸங்களிலிருந்தும் குறிப்பு காட்டு என்கிறீர்கள்.

குருவாயூரில் தொடங்கி, கூட்டுக்கு ராமேஸ்வரத்தை அழைக்கிறீர்கள்.

வழிபாட்டுத்தலங்களை சுற்றுலாத்தலங்கள் போல ஆக்கச் சொல்லுகிறீர்கள்.

அன்று அரசன் செய்ததை இன்று அரசு மாற்றினால் ஏற்றுக்கொள்ளுகிறோம் என தேவஸ்வம் போர்டு சொல்லியிருப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன் என்கிறீர்கள்.

கோட்பாடு, கட்டுப்பாடு இரண்டையும் குழப்பிக் கொள்ளுகிறீர்கள்.

அண்டை மாநில வழக்கங்களிலதனை முழுதும் அறியாமலேயே ஒரு கருத்தை முன் வைக்கிறீர்கள்.

வயலார் ரவி செய்வதை விட மிக அதிகமாக தேன்கூடைக் கலைக்கிறீர்கள்.

இந்த நிலையில், தாங்கள் விரும்புவதற்கு மாற்றுக்கருத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் தாங்கள் இல்லை என நான் கருதுவதால், இனி சொல்லிப் பயன் இல்லை என விடை பெறுகிறேன்.

இறுதி எடுப்பு [Final Take] வெற்றி பெற வாழ்த்துகள்!

Anonymous said...

//வெற்றிவேலுக்கு மிக்க மிக்க நன்றி.
இந்த விவாதம் வெற்றிவேலால் ஒரு முடிவுக்கு வந்தது. இன்னமும் வெறுப்பு பிரச்சாரம் செய்துகொண்டிருப்பவர்கள் இந்த பதிவில் அவரது பின்னூட்டங்களை ஞாபகம் வைத்துக்கொண்டால் நல்லது.//

அது சரி. பின்னூட்ட யுத்தத்துல இது ஒரு கலை இல்ல. நூறு பின்னூட்டத்தையுமா எல்லாவனும் படிக்கப்போரான்? கடைசியில என்ன இருக்கோ அதத்தான் படிப்பான். அதுக்காக நின்னு நிதானமா, இவர் வெற்றி பெற்றார் அப்படின்னு ஒரு போர்டு மாட்டிர்ரது. ஆனாலும் டாப் டக்கர் உத்தில்ல இது. சர்வேசனின் Brahminical continued பதிவில் இருந்த மாதிரியான அதே சில கருத்துக்கலை சொல்லியிருக்கும் வெற்றிவேலின் கருத்துக்களை கூடிய விரைவில் நிதானமாக அலசுவமா?

Anonymous said...

வயலார் ரவி பார்பனராக இருந்து அவர் மனைவி கிறித்துவராக இருந்தால் அவர் பையனுக்கு, பேரனுக்கு தோஷம் கழித்து பூணூல் போட்டு விட்டு இருப்பானுங்க. இந்த பிரச்சனையே வந்திருக்காது. பிறமதத்தினரை திருமணம் செய்து கொண்டுள்ள பார்பான் தவிர மற்றவர்களின் சந்ததிகளுக்கு ஹிந்துக்கள் அங்கீகாரம் கிடைக்காது. ஏனென்றால் பார்பான் தான் அக்மார்க் இந்து.

பார்பனன் தவறுகளைச் சொன்னால் இஸ்லாமியர்கள் சுன்னத் செய்வதைப் பற்றி இங்கே சொல்லி போக்கு காட்டுகிறார்கள்

பன்றியை சுத்தப்படுத்தலாமா என்ற உங்கள் கேள்வி தோல்வியடைந்துவிட்டது

SurveySan said...

VSK,

/////அரசன் செய்தான் என்கிறீர்கள். இல்லை, இல்லை... அரசன் 'சிலரைக்' கலந்தாலோசித்துச் செய்தான் என்கிறீர்கள்.
மாற்றுமதம் என்ற ஒன்றே தெரியாத, குறிப்பில்லாத கீதையிலிருந்தும், இதிகாஸங்களிலிருந்தும் குறிப்பு காட்டு என்கிறீர்கள்.
////

உண்மையில் ரொம்பவே குழம்பிப் போய்தான் இருக்கிறேன்.
மாற்றுமதம் பற்றித் தெரியாத கீதையில், இதிகாஸங்களில் சொல்லாத ஒரு 'சிகப்பு போர்டை', ஏதோ ஒரு அரசன் (ஏதோ ஒரு காரணத்துக்காக, ஏதோ சிலரை கேட்டோ கேட்க்காமலோ,) கோயிலின் முன்னால் வைத்தான்.

இன்றைய கோயில் நிர்வாகத்தினர், இன்றைய அரசன் இந்த சிகப்பு போர்டை தூக்கச் சொன்னால் தூக்குகிறோம் என்கிறார்கள் (இந்த செய்தி புதிது.பதிவு எழுதும்போது இந்த விஷயம் எனக்குத் தெரியாது).

அப்படி என்றால், இது இந்து மதக் கோட்பாடு எல்லாம் கிடையாது இல்லையா?

இன்றைய அரசன், இன்றைய காலகட்டத்தில், இந்த 'சிகப்பு போர்டு' அநாவசியம் என்றுணர்ந்து, சட்டத்தை மாற்றினால், அனைவரும் சலாம் போட்டு இதை அனுமதிக்க வேண்டும்.

இன்றைய அரசன், மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவன். மக்களாகிய நாம் இந்த போர்டை தூக்கச் சொல்கிறோம் (ஏனென்றால், இந்த போர்டு லார்டு கிச்சா சொல்லிப் போடப் பட்டதல்ல).

போர்டை தூக்கச் சொல்லும் மக்களின் வரிசையில் நீங்கள் நிற்பீர்களா?

பி.கு. இராமேஸ்வரம் போர்டு, அரசன் போட்டதல்ல. சில விஷமிகள் வேலை. அந்த போர்டை நாமே தூக்கி எறிய வேண்டியதுதான் :)

SurveySan said...

I think we have some good progress, from where we started.

வெற்றிவேல் சொல்லியபடி, /////பழைய ஆகமம் இருக்கவேண்டுமா அல்லது மாற்றவேண்டுமா என்பது அரசாங்கத்தின் வேலை. அரசாங்கத்தை தேர்தெடுக்கும் மக்களின் வேலை. //////

இந்த 'சிகப்பு போர்டு' வெட்டி ஆகமம், வேண்டாம் என்று மக்களுள் ஒருவனாகிய நான் சொல்கிறேன்.
என்னைப் போன்றவர்களின் பேச்சைக் கேட்டு இன்றைய அரசன், இந்த 'ஆக்(ர)மத்தை' மாற்றினா, நீங்கள் அடிபணிவீர்களா?

இல்லை, மனதுக்குள், 'அடடா எல்லா மதத்தையும் உள்ளே விடராங்களே. தோஷமாயிடுமே' என்று மனதுக்குள் புழுங்குவீர்களா?

Anonymous said...

//வயலார் ரவி செய்வதை விட மிக அதிகமாக தேன்கூடைக் கலைக்கிறீர்கள்.//

ஏனுங்க விஎஸ்கே, இத்தாலிக்காரியெல்லாம் இந்தியாவை ஆளற நிலைமைக்கு வந்துடுச்சேன்னு அமெரிக்காவுல உக்கார்ந்துக்கிட்டு வயிறெரிஞ்ச, வருணாசிரமத்துல என்னதான் இருந்தாலும் ஏதோ அர்த்தம் இருக்கும்பாங்கிற ரேஞ்சுல கவைக்குதவாத மாதிரி பேசற ஆள் தானே நீங்க? சோனியாகாந்தி இந்தியக் குடிமகள்ங்கிறது அமெரிக்காவுல இந்துவா உக்காந்துக்கிட்டு கிறிஸ்துவ நாட்டு வெள்ளைக்காரன் சம்பளத்தை வாங்குற உங்களுக்கு உறுத்துது, இப்ப வயலார் ரவி தேன்கூட்டைக் கலைச்சாராமா? ஏன், அமெரிக்க மாகாண கவர்னர் போஸ்டு குடுத்தா அப்படியே வேணாம் வச்சிக்கோ, எனக்கு ஆத்திகக் கடமை இருக்குன்னு சொல்லிருவீங்களாக்கும்? எப்படி எப்படி, வயலார் ரவி தன் வாரிசுகளை இந்து முறைப்படி வளர்த்து இந்துக் கோயிலுக்குள்ள கூட்டிட்டுப் போகணும்னு கேக்கிறது தேன்கூட்டைக் கலைக்கிறதாமா? என்னை மதத்துல சேர்த்துக்க மாட்டீங்களான்னு வயலார் ரவிங்கிற ஒருத்தன் பிச்சை எடுக்கிற மாதிரி தெரியலை? முஸ்லிம் கிறிஸ்துவன்னா இந்நேரம் வாழை இலை வச்சு உள்ளே கூப்பிட்டிருக்கமாட்டான்?

உடனே தனிமனிதத் தாக்குதல்னு சோகப்பாட்டு டியூனை ஆரம்பிச்சிராதீங்க. முன்னாடி நீங்க சொன்னதை இப்ப அப்படியே திருப்பிச் சொல்றது தனிமனிதத் தாக்குதல் அப்படின்னா இது தனிமனிதத் தாக்குதல்னு ஒத்துக்கலாம் ;-)

Anonymous said...

நான் சொல்வது இறுதிவார்த்தை ஏதும் இல்லை. இந்த விவாதத்தை நான் முடித்தேன் என கருதுவது சரியல்ல.

//வெவரமானவன் said...
வயலார் ரவி பார்பனராக இருந்து அவர் மனைவி கிறித்துவராக இருந்தால் அவர் பையனுக்கு, பேரனுக்கு தோஷம் கழித்து பூணூல் போட்டு விட்டு இருப்பானுங்க. இந்த பிரச்சனையே வந்திருக்காது. பிறமதத்தினரை திருமணம் செய்து கொண்டுள்ள பார்பான் தவிர மற்றவர்களின் சந்ததிகளுக்கு ஹிந்துக்கள் அங்கீகாரம் கிடைக்காது. ஏனென்றால் பார்பான் தான் அக்மார்க் இந்து.

//
பார்ப்பன வெறுப்புக்கு இன்னொரு உதாரணம். நான் முன்னமே சொன்னதுபோல, அரசரும் அரசரை சார்ந்த ஆதிக்க சாதியும் செய்யும் சட்டங்களுக்கு பார்ப்பனரை கை காட்டிவிட்டு திசை திருப்பும் உத்தியின் இன்னொரு உதாரணம் இது.

பார்ப்பனரது சந்ததி என்பதால் எப்போதும் இந்துகோவில்களில் எந்த ஒரு சலுகையும் வழங்கப்பட்டதில்லை. அது பார்ப்பன நேருவின் மகள் இந்திரா காந்தி ஒரு பார்ஸியை திருமணம் செய்ததால் அவர் பூரி கோவிலுக்குள்ளே நுழைய முடியாமல் போயிற்று.

வரலாறெல்லாம் வேண்டாம் இந்த கை காட்டலுக்கு. ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்று சும்மாவா சொலவடை?

தேவர் ஜாதி ஆள் தலித் வாயில் மலம் திணிக்கிறானா? போடு பழியை பார்ப்பனன் தலையில்!

ஆதிக்க சாதியினர் தங்களது அழிவுப்போக்குக்கு அராஜகப்போக்குக்கு பொறுப்பேற்று, உணர்ந்து தங்களை திருத்திக்கொள்ளாதவரை தமிழ்நாட்டில் தலித்துகள் நிலை சீரடையாது. தாங்கள் பொறுப்பேற்காமல் ஊருக்கு இளைத்த பார்ப்பனன் தலையில் கட்டிவிட்டு தலித்துக்கு பார்ப்பனனை கையை காட்டிவிட்டு தன் அராஜகத்தை தொடர்ந்து நடத்தும் வரை இது நிற்காது.

ஆதிக்க சாதிகளை கேள்வி கேட்க மக்களை த்யார்படுத்தும் வரை இதுபோன்ற அராஜகங்களும் நிற்காது.

விஎஸ்கே சொல்லுவதில் ஒரு உண்மை இருக்கிறது. எல்லா கோவில்களும் ஒரே மாதிரி ஆனவை அல்ல. அதன் பக்தர்களும் ஒரே விஷயத்தை எதிர்ப்பார்ப்பவர்கள் அல்லர்.

சபரி கோவிலுக்குள் எல்லோரும் போகலாமா என்ற கேள்விக்கு பதில் கொடுக்கக்கூடியவர்கள் அன்று மக்கள் மனதறிந்த அரசர்கள் என்றால், இன்று மக்கள் மனதை அறிய மக்களிடமே செல்லலாம். இன்று சபரி மலைக்கு வருபவர்களிடம் எல்லோரிடமும் வாக்கெடுப்பு நடத்துங்கள். அவர்கள் ஒப்புக்கொண்டால், இளம் பெண்களுக்கு வர அனுமதியுங்கள். அதே போல, குருவாயூர் கோவிலுக்கு வருபவர்களிடம் வாக்கெடுப்பு நடத்துங்கள். அவர்கள் அனுமதித்தால், குருவாயூர் கோவிலில் நம்பிக்கை இல்லாதவர்களையும் அனுமதியுங்கள். என்ன பிரச்னை?

Anonymous said...

//பார்ப்பனரது சந்ததி என்பதால் எப்போதும் இந்துகோவில்களில் எந்த ஒரு சலுகையும் வழங்கப்பட்டதில்லை. அது பார்ப்பன நேருவின் மகள் இந்திரா காந்தி ஒரு பார்ஸியை திருமணம் செய்ததால் அவர் பூரி கோவிலுக்குள்ளே நுழைய முடியாமல் போயிற்று.
//

வெற்றிவேலின் 'சமீப' பின்னூட்டம் பாப்பாத்தி கிறித்துவரை திருமணம் செய்வதை குறித்து எழுதி இருக்கிறார். இங்கு பாப்பான் கிறித்துவரை திருமணம் செய்வதைப் பற்றி சொன்னேன். எதவாது பாப்பான் கிறித்துவரை மணந்து அவனை கோவிலுக்குள் விடாத நிலை இருந்தால் சொல்லலாம். மற்றபடி இந்து மதத்தில் பெண்கள் செயல் ஒதுக்கி வைக்கப்படுவதைத்தான் பார்த்திருகோமே. அது இந்திராகாந்தியாக இருந்தால் என்ன கோடிவீட்டு இந்தி காரியாக இருந்தால் என்ன. பாப்பான் கலப்பு மணம் காரணமாக தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறானா ?

வெற்றிவேல் சார், 'சமீபத்தில் 1954ல்' எதாவது உதாரணம் இருந்தால் சொல்லுங்க. சொந்த பெயரில் கூட சொல்லலாம். பெயர் கெட்டுவிடும் என்ற கவலை வேண்டாம். நன்றாக இருந்தால் தான் அந்த கவலை.

பாப்பாட்டி, கீரிபட்டி, இரட்டை டம்ளர், ஆதிக்க சாதி ஜல்லிகள் ஏற்கனவே பல பதிவுகளிலும், உங்கள் சொந்தபதிவிலும் அடித்ததுதான்.

:)

Anonymous said...

//தேவர் ஜாதி ஆள் தலித் வாயில் மலம் திணிக்கிறானா? போடு பழியை பார்ப்பனன் தலையில்!//

டாலர் செல்வம் கோவித்துக் கொள்ளப் போகிறார். ஏற்கனவே அசுரன் தேவருக்கு சவுக்கடி கொடுத்ததால் திடீர் இந்துத்துவா வியாதி செல்வம் அண்ணாவுக்கு பிடித்துவிட்டது. மேலே போட்ட பின்னூட்டம் அதை குணப்படுத்திடும். கண்ணுகளா பார்த்து செல்வன் அண்ணா மனசு மாறிடப்போறார். செல்வம் அண்ணாவின் சேவை பார்பனர்களுக்கும் தேவை.

பார்பனர்கள் பின்னூட்டம் போடும் போது தேவர் சாதி வெறி குறித்து எழுதாமல் இருக்கும். செல்வன் அண்ணாக்களை அது கோமாவில் இருந்து எழுப்பி விடும்.

Anonymous said...

//பார்ப்பனரது சந்ததி என்பதால் எப்போதும் இந்துகோவில்களில் எந்த ஒரு சலுகையும் வழங்கப்பட்டதில்லை. அது பார்ப்பன நேருவின் மகள் இந்திரா காந்தி ஒரு பார்ஸியை திருமணம் செய்ததால் அவர் பூரி கோவிலுக்குள்ளே நுழைய முடியாமல் போயிற்று.
//

பாப்பாத்திங்க மத்த சாதில கண்ணாலம் கட்டிக்கிட்டா அவங்க பூரி கோயிலுக்குள் நுழையக் கூடாதுன்னு சொல்றார் நம்ம டோண்டு... சாரி சாரி வெற்றிவேல் அய்யா!

என்ன ஒரு ஜாதித் திமிர் பாருங்க. இவனை எல்லாம் சுட்டுக் கொன்னால் என்ன?

Anonymous said...

//வேகாதவன் said...
//பார்ப்பனரது சந்ததி என்பதால் எப்போதும் இந்துகோவில்களில் எந்த ஒரு சலுகையும் வழங்கப்பட்டதில்லை. அது பார்ப்பன நேருவின் மகள் இந்திரா காந்தி ஒரு பார்ஸியை திருமணம் செய்ததால் அவர் பூரி கோவிலுக்குள்ளே நுழைய முடியாமல் போயிற்று.
//

பாப்பாத்திங்க மத்த சாதில கண்ணாலம் கட்டிக்கிட்டா அவங்க பூரி கோயிலுக்குள் நுழையக் கூடாதுன்னு சொல்றார் நம்ம டோண்டு... சாரி சாரி வெற்றிவேல் அய்யா!

என்ன ஒரு ஜாதித் திமிர் பாருங்க. இவனை எல்லாம் சுட்டுக் கொன்னால் என்ன?

//

:-))

என்ன செய்வது?
உளறல்கள் மூலம் வெறுப்பை நியாயப்படுத்த முயல்கிறீர்கள்.

நல்ல பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு போய் மூளை முழுவதும் வெந்துவிட்டதா என்று காட்டிவிட்டு வரவும்.

வெற்றிவேலை டோண்டு என்று சொல்வதன் மூலம் ஆதிக்க சாதிகள் பார்ப்பனரை கை காட்டிவிட்டு தொடர்ந்து செய்யும் அராஜகங்களை நியாயப்படுத்திவிட முடியுமா?

Anonymous said...

முடிவுக்க வரல்யா இது இன்னும்?