recent posts...

Tuesday, February 01, 2011

விழித்திடு தமிழா உறக்கம் ஏன்?



வங்கக் கடல் மீது
தங்கத் தமிழ் மகனை
சிங்களத்து வெறிநாய்
வேட்டையாடி சங்கறுத்து
சுட்டுக்கொல்கிறது
தமிழா! விழித்திடு

வலை வீசி மீன்பிடிக்க
அலை கடல் மீது சென்றவனின்
தலை மீது குண்டுவீசும்
கோழை செயலும் நடக்கிறது
தமிழா! விழித்திடு

நாவாய் படைநடத்தி
காற்றாற்றுதலை அறிந்து
நாடுகளை வென்ற இனம்
நாள்தோறும் அகதிகளாய்
நாடிழந்து வருகிறது
தமிழா! விழித்திடு

ஆடையை இவ்வுலகிற்கு
அறிமுகம் செய்தவனை
ஆடையவிழ்த்து அம்மணமாய்
அடித்து சுட்டுக் கொல்லும்
கொடும் பாவச்செயலும் நடந்தது
தமிழா! விழித்திடு

குட்டித்தீவினில் ராக்ஷசன் ராஜபக்ஷே
அரக்க இராஜ்ஜியம் செய்து
கைத்தட்டி சிரிக்க
சிங்களத்து வெறிநாய்
அலைகடல் மீதினிலே தோட்டாக்களால்
தமிழனின் உயிர் குடிக்க
மத்திய அரசு அலட்ச்சியமாய் உறங்க
மாநில அரசு கூட்டணி வலைப்பின்னி
தொகுதி மீன் திமிங்கலதையும்,
வாக்காளர்களின் தேர்தல்
வோட்டான வெற்றிமீன் பிடித்து
அரசியல் செய்கிறது
தமிழா! விழித்திடு உறக்கம் ஏன்?

-பிரபாகர் (நண்பேன்)

இவ்ளோ அட்டூழியங்கள் செய்தவர்களை ஒண்ணுமே பண்ணாம விட்டது அட்டூழியம். பேடித்தனம்.

தமிழக மீனவரை காக்கக் கோரி ஆன்லைன் பெட்டிஷன் ஒன்று இயற்றப் பெற்றிருக்கிறது. கையெழுத்து இடாதவர்கள் இடவும்.

No comments: