recent posts...

Wednesday, November 04, 2009

புவனேஷ்வரி மாமி ( நச் போட்டிக்கல்லாத கதை )

"டாக்டர், எல்லாம் நார்மலா இருக்குல்ல?" என்று ராமச்சந்திரன் டாக்டர் சகுந்தலாவை கேட்டுக் கொண்டிருந்தார். அருகில், அவர் மகள் சுந்தரி நிறை மாத கர்பத்துடன் நின்று கொண்டிருந்தாள்.

"எல்லாம் சரியாயிருக்கு. டோண்ட் வொரி மாமா", இது டாக்டர்.

"திரும்ப திரும்ப கேக்கறேன்னு தப்பா எடுத்துக்காதேள். இப்பெல்லாம் எந்த ஹாஸ்பிட்டல்லையும் நார்மல் டெலிவரியே பண்றதில்லையாமே? காசுக்காக ஸிஸேரியன் பண்ணிடறாளாமே. அப்படியெல்லாம் இங்க ஆயிடக்கூடாதுன்னு தெனமும் கடந்து அடிச்சுக்குது", ராமச்சந்திரனின் குரலில் பெரிய கவலை தெரிந்தது.

"மாமா, கவலையே படாதேள். எந்த டாக்டரும் அப்படி வேணும்னு பண்ண மாட்டா. வேற வழியே இல்லன்னாதான், ஸிஸேரியன் ஆப்பரேஷன் எல்லாம் பண்ணுவா. சுந்தரிக்கு எல்லாம் நன்னாருக்கு, நார்மல் டெலிவரிக்கு நான் கியாரண்டி" சகுந்தல்லா டாக்டர் அமைதியாக ராமச்சந்திரனுக்கு ஆறுதல் கூறினார்.

"ஏன்னா, டாக்டர்தான் நார்மல் நார்மல்னு சொல்றாளே, ஏன் திரும்ப திரும்ப நச்சரிச்சுண்டே இருக்கேள்? எல்லாம் அம்பாள் அனுக்கிரஹத்துல நன்னா நடக்கும்", சுந்தரியின் அருகில் இருந்த புவனேஷ்வரி மாமி ராமச்சந்திரனை அதட்டும் குரலில் கூறினார்.

முப்பது வருட தாம்பத்யத்தில் அடங்கிப் போயே பழக்கப்பட்ட ராமச்சந்திரன், அதற்கு மேல் வாய் திறக்க முடியாமல் அமைதியானார்.

*** *** **** **** ****

மே பதினைந்தாம் தேதிக்கு அருகாமையில் டெலிவரி ஆகலாம் என்று டாக்டர் சொல்லியிருந்தார். நாள் நெருங்க நெருங்க அனைவருக்கும் பதட்டம் அதிகமாகியிருந்தது.
வருவோர் போவோரெல்லாம், "கண்டிப்பா ஸிஸேரியன் தான் பண்ணுவா. நார்மல்னா பத்தாயிரம். ஸிஸேரியன்னா ஒரு லட்சம் வரை கறக்கலாமே. விட்ருவாளா லேசுல?" என்று திகிலுக்கு திகிலூட்டுக் கொண்டிருந்தார்கள்.

சுந்தரியின் கணவன், சுகுமாரன். ஒரு பெரிய அலுவலகத்தில் நல்ல பொறுப்பில் இருப்பவன். வேலை விஷயமாக சிங்கப்பூரில் ஒரு மாதம் தங்க வேண்டியிருந்ததால், சுந்தரியின் அருகில் இல்லாமல் போவது பெரிய கவலை அவனுக்கு. தினம் தினம், ராமச்சந்திரனை போனில் அழைத்து, "மாமா, எல்லாம் நார்மல்தானே? என் ஃப்ரெண்ட்ஸெல்லாம் ஆஸ்பத்திரிகாரன் ஸிஸேரியன் பண்ணி வச்சுடுவான்னு சொல்லிண்டுருக்கா. நீங்க டாக்டர் கிட்ட தீர்மானமா சொல்லிடுங்கோ. பணம் வேணும்னாலும் அதிகமா கொடுத்திடலாம், ஆனா நார்மல் டெலிவரிதான் பண்ணனும்னு. வேணும்னா எங்கப்பாவ கூட கூட்டிண்டு போங்கோ. அவர் அதட்டினா டாக்டர் கேப்பா" என்று தினம் தினம் ராமச்சந்திரனை தொய்த்தெடுத்தான்.

*** *** **** **** ****

"மாப்ள, சுந்தரிக்கு குழந்தை பொறந்துடுத்து. செக்கச் செவேல்னு உங்கள மாதிரியே கொழு கொழுன்னு அழகா இருக்கான். சுந்தரியும் சௌக்யமா இருக்கா. நீங்க எப்ப வரேள்?" என்று புவனேஷ்வரி, சுகுமாரனுக்கு தகவல் சொல்லிக் கொண்டிருந்தாள். அருகில் ராமச்சந்திரன், மகிழ்ச்சியும், கலக்கமும் கலந்த சவரம் செய்யாத முகத்துடன் நின்று கொண்டு புவனேஷ்வரியையே பார்த்துக் கொண்டிருந்தார்.

"ரொம்ப சந்தோஷமா இருக்கு அத்தை. நார்மல் டெலிவரிதானே? நான் இன்னும் ரெண்டு மாசமாகும் வர" என்று மகிழ்ச்சி கலந்த குரலில் சுகுமாரன் கேட்டான்.

"இல்ல மாப்ள, ஸிஸேரியந்தான் பண்ணா. குழந்தை பொஸிஷன் சரியில்லையாம். லேட் பண்ணா காம்ப்ளிகேட் ஆயிடும்னு, சகுந்தலா அப்படி பண்ணிட்டா. அது பரவால்ல மாப்ள, குழந்தையும் சுந்தரியும் நன்னாருக்கா. நீங்க கவல்ப்படாதேள்." என்று புவனேஷ்வரி எடுத்துக் கூறினாள்.

"என்னது? ஸிஸேரியனா? நேத்து கூட எல்லாம் நார்மல்னு சொல்லிட்டிருந்தேளே? ஏன் ஸிஸேரியனுக்கு சம்மதிச்சேள்? நான் வந்து அவா மேல கேஸ் போட்டு என்ன பண்றேன் பாருங்கோ?" என்று அலர ஆரம்பித்தான் சுகுமாரன்.

"அதெல்லாம் எதுக்கு மாப்ள? நன்னாதாயிருந்தா. இன்னும் அஞ்சு நாள் இருக்கு டெலிவரிக்குன்னு நேத்து சொன்னா. ஆனா, இன்னிக்கு செக்கப்புக்கு வந்தா இப்படி ஆயிடுத்து. ஆண்டவன் புண்ணியத்துல சௌக்யாமா இருக்காளே மாப்ள. அதப் பாருங்கோ" என்று புவனேஷ்வரி ஆறுதல் கூறினாள்.

"அதெல்லாம் அப்படி விட முடியாது அத்தை. நான் வந்து என்ன பண்றேன் பாருங்கோ" என்று கோபக்கார சுகுமாரன் அலறிக் கொண்டே இருந்தான்.
*** *** **** **** ****

"பா..ட்..டி" சொல்லுடா தங்கம் என்று புவனேஷ்வரி இரண்டு மாத பேரக் குழந்தையை மடியில் போட்டு சொல்லிக் கொண்டிருந்தார்.

"சுந்தரி, என்னமா சிரிக்கிறான் பாருடி. அரசாளப் போறான் பாரு. அன்னிக்கு மட்டும் நான் சகுந்தலாகிட்ட அப்படி சொல்லன்னா, உன் பையன் ஃப்யூச்சரே நாசமா போயிருக்கும்டி" என்று நமுட்டுச் சிரிப்பு சிரித்தபடியே புவனேஷ்வரி சொல்லிக் கொண்டிருந்தார்.

"நாலு நாள் கழிச்சு நார்மல் டெலிவரி ஆயிடும்னு, சகுந்தலா சொன்னபோது எனக்கு தூக்கி வாரிப் போட்டுதுடி. ஸ்வாதி நட்சத்தரத்துல பொறந்துதான், நம்ம எதுத்தாத்து ரகு உருப்படாம போயிட்டான். விட்ருவேனா? சகுந்தலாவ தனியா கூட்டிண்டு போயி, இன்னிக்கே ஸிஸேரியன் பண்ணி எடுத்துடும்மா. நல்ல நாளும் கெழமையும் நட்சத்திரம் நெரஞ்ச நாள் இதுன்னு, அவள கன்வின்ஸ் பண்றதுக்குள்ள என்னமா பாடுபட்டுட்டேன். உங்கப்பாவ கூட சமாளிச்சுட்டேன், மாப்ளைக்கு தெரியாம பாத்துக்கணும்டீ" என்று நீட்டி முழக்கி பெரிய சாதனை செய்த தொனியில் புவனேஷ்வரி மாமி சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தாள்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டே உள்ளே வந்த சுகுமாரன், வாயடைத்து வாசலிலேயே நின்று கொண்டிருந்தான்.

*** *** **** **** ****

பி.கு: நாள், நட்சத்திரம், கெழமை, சாச்திரம், சம்பிரதாயம் எல்லாம் 'ஓவரா' யூஸ் பண்ணாதேள்.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு! :)

இது போட்டிக்கல்ல, சும்மா ஸாம்பிள் 'நச்'சுக்கு.

இனியும் வரலாம் ;)

20 comments:

SurveySan said...

நச்சு கம்மியா?
போட்டிக்கு வந்த கதை எல்லாம் படிச்சீங்களா? படிக்காதவங்க படிங்க.
http://surveysan.blogspot.com/2009/09/500-2009.html

SurveySan said...

கதை புடிச்சிருந்தா, கீழ தமிழ்மண பாரில் 'குத்து குத்துங்கோ'

ராமலக்ஷ்மி said...

//இது போட்டிக்கல்ல, சும்மா ஸாம்பிள் 'நச்'சுக்கு. //

அட, அப்படியே PiT ஸ்டைல்:)!

//ஸ்வாதி நட்சத்தரத்துல பொறந்துதான்//

கதைக்கே ஆனாலும் என் கடும் கண்டனம்:-O!
ஏன்னா நான் ஸ்வாதி நட்ச்த்திரம்:)!

//நச்சு கம்மியா? //

ம்ம்ம், போனாப் போவுதுன்னு கொடுக்கலாம் ஒரு தொன்னூறு:)!

ராமலக்ஷ்மி said...

//கதை புடிச்சிருந்தா, கீழ தமிழ்மண பாரில் //

Done:)!

Unknown said...

கதை நன்றாக இருக்கிறது.

மாடல மறையோன் said...

இரண்டு மாதக்குழந்தை ‘பா ட் டி..’என்று பேசுமா?

SurveySan said...

ராமலக்ஷ்மி,ரவிஷங்கர், ஜோ,

நன்றீஸ்!:)

SurveySan said...

ஜோ,

/////"பா..ட்..டி" சொல்லுடா தங்கம் என்று புவனேஷ்வரி இரண்டு மாத பேரக் குழந்தையை மடியில் போட்டு சொல்லிக் கொண்டிருந்தார். //////


ரெண்டு மாச கொழந்த பேசாதுங்க. ஆனா கொழன்ந்த கிட்ட எல்லாரும் பேசுவாங்க ;)

I rest my case your honor :)

SurveySan said...

கயம்ஸ்

Jawahar said...

கதை சொல்கிற நீதி நல்லா இருக்கு. ஆனா சுவாதி நட்சத்திரம் ரொம்ப உசத்தி என்று பெயர்!

http://kgjawarlal.wordpress.com

மாடல மறையோன் said...

என்ன சொல்லவருகிறார் கதையாசிரியர்?

மக்கள் நம்பிக்கை இப்படியெல்லாம் குறுக்குவழியைத் தேடுகிறது என்பது மட்டும்தானா?

பெண்கள்தான் அதைச் செய்கிறார்கள். செய்து வீட்டு ஆண்களிடமிருந்து மறைக்கிறார்கள் எனப் பெண்கள் மேல் பழி போடுவதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது!

அப்படியா?

நாள், நட்சத்திரம், கிழமை, சாத்திரங்கள், ஆருடம், என்றெல்லாம் எழுதி வைத்து பெண்ணிடம் கொடுத்து, இதைக்காப்பாற்றவேண்டி தலைமுறை தலைமுறையாகக் கொண்டு சேர்ப்பது உன்கடமை எனச்சொன்னது யார் கதையாசிரியரே?

ஒருபுறம் மூடநம்பிக்கைகள், அல்லது நம்பிக்கைகள்,
மறுபுறம் அவை செய்யும் பயமுறுத்தல்கள்.

விளைவு?

கணவனுக்கு ஏதாவது ஆகிவிடுமோ? பெற்றோருக்கு ஏதாவது ஆகிவிடுமோ? குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடுமோ? என அல்லாடுகிறார்கள் நம் பெண்கள்.

அதன் ஒரு சின்ன வெளிப்பாடே இக்குறுக்குவழி.

இக்கதை ‘சுகுமாரன்’ ஏதோ ரொம்ப மாடர்ன் மாதிரி சித்தரித்த்து, தன் ஆணாதிக்க சிந்தனையையும், பெண்ணை - a development between man and child - போன்ற நீர்த்துப்போன அல்லது சூழ்ச்சிக்காக இன்னும் வைத்துபோற்றுகின்ற, பொல்லாக்கொள்கையும்தான் இக்கதை காட்டுகிறது.

மேலும், பார்ப்பன கதாபாத்திரங்களைக் காட்டி அங்குதான் இவை அதிகம் எனவும் சொல்ல முயற்சி!

உண்மை என்னவெனில், பார்ப்பன பெண்கள் மனதிடம் மிக்கவர்கள். இப்படி வீட்டு ஆண்களுக்கு தெரியாமல் செய்யமாட்டார்கள் எதையும்.

”எதுக்கு பயப்படனும்? அவன் மட்டும்தானா பெத்தான்? நானும் சேர்ந்துதானே பெத்தேன்?”

சுதந்திர மனப்பான்மை பிற பெண்களுக்கு கற்றுக்கொடுத்து வருபவர்கள்.

புறக்கணிக்கப்படவேண்டிய கதை!

SurveySan said...

ராமலக்ஷ்மி, ஜவஹர்,

சுவாதி மட்டுமில்லை எனக்கு எந்த நட்சத்திரம் பத்தியும் தெரியாது.
மே மாசத்துல எது வருதுன்னு பாத்தேன், இதுதான் ஆப்டுது ;)

SurveySan said...

ஜோ, உங்க விமர்சனம், வெகுவாய் ரசித்தேன்.

பதிவர் ஜமால்னு ஒருத்தர் இருக்காரு. இந்த மாதிரி, அமக்களமா படங்களுக்கு விமர்சனம் போடும்போது கொத்டிஹ் நூடூல்ஸ் போடுவாரு.

நல்லா புடிக்கறீங்க மேட்டரை ;)

என் கதையிலிருந்தே இவ்வளவு மேட்டர் உருவ முடியுதுங்கரதை எண்ணி புளகாங்கிதம் அடைகிறேன். நன்றீஸ் :)

parameswary namebley said...

இது ஒரு உண்மை கதைனும் போட மறந்துட்டீங்களா?
என் வாழ் நாளில் நான் இம்மாதிரியான ஸிஸேரியன்" கதைகளை நான் பார்த்திருக்கிறேன்
அதுமட்டுமல்லாமல் , நார்மல் டெலிவரி மிகவும் வலிக்கும் என ஸிஸேரியன் கூட இப்பொழுது செய்கிறார்கள்..

SurveySan said...

parameswary,

///இது ஒரு உண்மை கதைனும் போட மறந்துட்டீங்களா///

not that i know of :)

Prasanna said...
This comment has been removed by the author.
Prasanna said...

இப்படி செய்யற ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.. மாமிக்கு என் கண்டனங்கள்...

//அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு!//

மாமிக்கு அமிர்தம்னு பேர் வச்சி இருந்தா பொருத்தமா இருந்து இருக்கும் :))

TCTV said...

ரொம்ப திராபையா இருக்கு

SurveySan said...

ப்ரசன்ன குமார், நன்றி :)

SurveySan said...

sornavalli, நன்றீஸ். மனம் திறந்த உங்க கருத்ஸுக்கு :)