எல்லா வருஷம் போலவும் இந்துக்களும் நமது இஸ்லாமிய நண்பர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்து விட்டோம்.
எல்லா வருஷம் போலவும் இஸ்லாமியர்களும் நமக்கு விநாயக சதுர்த்தி வாழ்த்துக்களை மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்து விட்டார்கள்.
எல்லா வருஷம் போலவும் 'சில' விஷமிகள் விநாயக சதுர்த்தி கொண்டாடப் படுவதை கிண்டல் அடித்து அகமகிழ்ந்து கொண்டார்கள்.
இல்ல தெரியாமத் தான் கேக்கறேன், வருஷா வருஷம் தொடர்ந்து வரும் இந்த நெக்குல் நையாண்டி எல்லாம் ஏன்? இதிலிருந்து உங்களுக்கு என்னா கெடைக்குது?
இஷ்ட தெய்வத்துக்கு பொறந்த நாள் கொண்டாடரதுல உங்களுக்கு எங்க குத்துது?
இஷ்ட தலைவர்களுக்கு நீங்க பொறந்த நாள் கொண்டாடரதுல்லையா?
இஷ்ட நண்பர்கள்/வீட்டவர்களுக்கு பொறந்த நாள் கொண்டாட மாட்டீங்களா?
வாழ்க்கைல சாப்பிடரத தவர மத்ததெல்லாம் வேஸ்ட்டுன்னு நெனைக்கறவங்களா நீங்க?
இந்த நெக்குல் நையாண்டி எல்லாம் வெறும் புள்ளையாரை மட்டும் குறிவைக்கும் biased நிலை ஏன்?
ரம்ஜான் முடிந்ததும் உங்கள் இஸ்லாமிய நண்பர்களின் வீட்டில், தயங்காமல் பிரியாணி தின்னச் செல்லும் நீங்கள், விநாயக சதுர்த்திக்கு சுண்டல் தின்பதை ஏன் கிண்டல் பண்றீங்க?
இந்த சொறிதல் எதுக்காக?
என்னாத்த சாதிக்கறீங்க இதனால?
எல்லாரின் உணர்வுக்கும் மரியாதை கொடுக்கப் பழகுங்கள். மனிதம் தழைக்க உதவுங்கள்!
மதத்தின் பெயரால் ஏற்றத்தாழ்வு பல இடங்களில் உண்டுன்னு எனக்கும் தெரியும்.
அதர்க்கு தீர்வு, இந்த குத்தல் நையாண்டிகள் கிடையாது என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.
Bridge the Gap, dont blast it - Write Responsibly!
ஸ்ஸ்ஸ். ஹாப்பி வெள்ளி. :)
கருத்த சொல்லுங்க்க, சர்வெலயும் ஒரு வாக்கு வாக்குங்க!