படிக்கரமோ இல்லியோ, ஒரு கெத்துக்காக, The Hindu வாங்குவது, அநேகம் வீடுகளில் வாங்குவது வழக்கம். எங்க வீட்லயும் அப்படித்தான்னு நெனைக்கறேன்.
இந்த தடவ பாத்தா, Hindu போய், ஸ்லீக்கா, Times Of India வந்து கொண்டிருந்தது.
முதல் ஸ்பரிசத்திலேயே, ஒரு வித்யாசம் தெரிந்தது. நல்ல வாசிப்பு அனுபவம் தந்தது.
இந்தப் பக்கம் அந்தப்பக்கம் சாயாமல், பேலன்ஸ்டா செய்திகள் வந்த மாதிரி தெரிந்தது.
(நுண்ணரசியல் புரியா ஜென்மம் நானு)
நிறைய பாஸிட்டிவ் செய்திகள் கண்ணில் பட்டது.
குடிமகனுக்கு தேவையான விஷயங்களும் கண்ணில் பட்டது. முக்கியமா, லஞ்சம் வாங்கி Vigilence மூலமா மாட்டறவங்க பத்தி, தினசரி ஒரு செய்தியாவது கண்ணில் பட்டது.
அதைத் தவிர Right to Information (RTI) வச்சு அவரு இத்தை செய்தார், இவரு அதை செய்தாருன்னும் செய்திகள் வருது.
நல்ல தொகுப்பு.
மிக முக்கியமாய், என்னை வெகுவாக கவர்ந்த விஷயம், ஒவ்வொரு செய்தியிலும் இடம்பெறும் புகைப்படம் ஒரு mug-shot போலல்லாமல், மிகவும் நேர்த்தியான கோணத்தில், ரசனையுடன், திறம்பட எடுக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 3ஆம் தேதி, கண்ணில் பட்ட ஒரு படம்.
'சென்னையில் மழை'யை இப்படி படம் போட்டு காமிச்சா, நல்லாத்தேன் இருக்கு. :)
I recommend, Times of India.