எனக்கு இதுல எல்லாம் சுத்தமா நம்பிக்கை இல்லை.
நம் மத்தியில் 65% ஆட்களுக்கு ஜாதக நம்பிக்கை உண்டு என்பது எமது முந்தைய சர்வேயின் மூலம் தெரியவந்துள்ளதை அறிவீர்கள்.
ஸோ, எல்லாரும் கவனமா கேளுங்க.
கைரேகை பாத்த அந்தப் பொண்ணு, எல்லாம் நல்ல விஷயமாத்தான் வரிசையா சொல்லிட்டு வந்தா.
கடைசியிலதான் ஒரு பெரிய குண்டப் போட்டா.
ரெண்டக்கா தோஷமா? அது இன்னான்னு புருவத்தை உயர்த்தரவங்க மேலப் படிங்க.
நம்மில் பெரும்பான்மையானவர்களுக்கு ஒரு சுக வாழ்க்கைன்னா அதுல என்னென்னங்க இருக்கணும்?
1) நிறைய பணம்
2) மன அமைதி
3) நோயற்ற உடல்
இந்த மூணும் கண்டிப்பா வேணும்ல?
இந்த 'ரெண்டக்கா' தோஷம் இருக்கரவங்களுக்கு மேலே சொன்ன மூணுல ஏதாவது ரெண்டுதான் அமையுமாம்.
ஆனா, அந்த ரெண்டும் கண்டிப்பா அமோகமா இருக்குமாம்.
என்ன கொடுமைங்க இது? மூணுல எல்லாமே ரொம்ப முக்கியமாச்சே.
ஒண்ணு இல்லாம மீதி ரெண்டு மட்டும் இருந்தா மட்டும் பத்துமா?
யோசிச்சுப் பாத்தேன். எந்த ரெண்டு தக்க வச்சுக்க அதீக முயற்சி எடுக்கணும்னு.
ஒண்ணும் புலப்படலை.
இந்த ஜாதகம், கைரேகை, இத்யாதி இத்யாதிலயெல்லாம் நம்பிக்கை இல்லாததால், இரண்டாம் ஐட்டமான மன அமைதி, இப்பவே காணாம போயிடாம தப்பிச்சேன் :)
இப்ப கேள்வி என்னன்னா,
ஸப்போஸ், உங்க முன்னாடி யாராவது வந்து,
"மை டியர், இந்த மூணு ஐட்டம்ல, ரெண்டு மட்டும் உனக்கு இப்பவே தரேன். எந்த ரெண்டு வேணும்? நீ கேக்காத மூணாவது உனக்குக் கிடைக்காது"ன்னு சொன்னா, எந்த ரெண்டுங்க தேர்ந்தெடுப்பீங்க?
நம்பிக்கை இருக்கரவங்களும், இல்லாதவங்களும், சும்மா லுலுலுவாய்க்காகவாவது, நல்லா யோசிச்சு ஒரு ஆப்ஷனை கீழுள்ள சர்வேயில் குத்துங்க.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் ரெண்டு உங்கள் வாழ்வில் கிடைக்க என் வாழ்த்துக்கள்.
நீங்கள் தேர்ந்தெடுக்காத மூணாவதும் கிடைக்க எல்லாம் வல்லவன் அருள் புரியட்டும் ;)
நம் மத்தியில் இருக்கும் ஜோதிட நிபுணர்கள் யாராவது இந்த ரெண்டக்கா மேட்டர் பத்தி ஒரு பதிவ போட்டீங்கன்னா, நன்னாருக்கும்.
இனி குத்துங்க. ஹாப்பி வெள்ளி!
பி.கு: வ.வா.ச வின் ரெண்டாம் ஆண்டு போட்டிக்கு இத்த அனுப்பிருக்கலாமோ?
கருத்ஸ்?