சொந்த செலவுல பண்றது எப்படீன்னு புரீது. ஒரு மரத்துக்கு 100ரூவாயிலிருந்து, 300ரூவரை ஆவுது. கூண்டுக்கு 300ரூவாயாம்.
நூறு மரம் வைக்கணும்னா, செலவு ஜாஸ்தியாவுமே.
இதுக்கெல்லாம், அரசாங்கம்/லோக்கல் NGO யாரும் உதவுவதில்லையா?
குரோம்பேட்டையில் இருக்கும் ஒரு தெருவில் துவங்க அவா.
விவரம் அறிந்தவர்கள் சொல்லவும்.
என்ன பண்ணனும், யாரை அணுகணும்?
கூகிளில் தேடும்போது, Greenways என்ற இயக்கத்தின் விவரம் கண்ணில் பட்டது. மாதவன் சுப்ரமணியன் என்ற இருவர் மந்தவெளியில், தன்னந்ததனியாக பல ஆயிரம் மரங்களை நட்டு கலக்கியிருக்காங்க. அவர்களை தொடர்பு கொண்டு பார்த்தேன். அவங்களுக்கு இப்ப ரொம்பவே வயசாயிடுச்சு. மரக்கன்று வேணும்னா வளத்து தரோங்கறாரு.
வேறு மார்கம் உண்டா?
ஹெல்ப் ப்ளீஸ்!
குரோம்பேட்டை பதிவர்கள்/வாசகர்கள் யாராவது இப்படி ஏதாச்சும் செஞ்சிருக்கீங்களா? ஹெல்ப்!
பிற்சேற்க்கை:
Dr.மாதவன் மற்றும் திரு.சுப்ரமணியம் என்ற இருவர், மந்தைவெளி அருகே, இருபது வருடங்களுக்கு மேலாக மரக்கன்றுகள் நட்டு வருகின்றனராம். இதுவரை 15000க்கும் மேற்பட்ட மரங்களை நட்டுள்ளனர். Project Greenways என்று பெயரிட்டு இவர்கள் இதை செய்து வருகின்றார்கள். Chennai Social Service என்று ஒரு தொண்டு நிறுவனம். மிக்காறும் Orkut இணைய தளத்தின் மூலம், ஆட்கள் சேர்ந்து உருவான இளைஞர்களாலான தொண்டு நிறுவனம். இவர்களுக்கு, மரக்கன்றுகள் தேவை என்று SMS செய்தால், மேல் விவரங்கள் பெற்று, நம் இருப்பிடத்துக்கே, தன்னார்வலர்கள் குழு வந்து, மரங்களை நட்டுத் தருவார்களாம். நிழல் என்றொரு தொண்டு நிறுவனமும், இதே போல் நோக்கத்துடன் செயல் பட்டு வருகிறார்கள்.
* Project Greenways சுப்ரமணியன்/மாதவன் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது, ஒரு பெண்மணிதான் பேசினார். இந்த இருவரும் 70வயதைக் கடந்து விட்டதால், முன்னர் செய்தது போல், 'ஏக்டிவ்வாக' இருக்க முடிவதில்லையாம். நமக்கு எவ்வளவு மரக்கன்றுகள் வேண்டும் என்று சொன்னால், அதை தயார் செய்து தருவார்களாம். வண்டியில் எடுத்துச் சென்று நட்டுக் கொள்ள வேண்டியுது நம் வேலை.
* chennai social serviceக்கும், நிழலுக்கும், மின்னஞ்சல்/SMS அனுப்பி வைத்திருக்கிறேன். மேல் விவரங்கள் இல்லை.