recent posts...

Showing posts with label anghor wat worlds biggest vishnu temple. Show all posts
Showing posts with label anghor wat worlds biggest vishnu temple. Show all posts

Tuesday, May 27, 2008

கம்போடியாவில் கலக்கிய சோழனும் பல்லவனும்

அரசல் புரசலா கேள்விப்பட்டிருந்த விஷயம் தான் இது.

கி.பி இரண்டாம் நூற்றாண்டின் (2nd century A.D) போது, பல்லவர்கள் தமிழகம் மட்டும் அல்லாது கடல் கடந்து தெற்காசியாவில் பல ஊர்களையும் கைப்பற்றி இருந்தனராம்.
கி.பி. பத்தோ பனிரெண்டோ நூற்றாண்டில் சோழர்கள் பர்மா, மலேஷியா, சுமத்ரா, கம்போடியாவிலெல்லாம் கோலோச்சினார்களாம்.

கம்போடியாவில் உள்ள ஆங்கோர் வத் (Anghor Wat) என்ற ஊரில்தான் உலகின் மிகப் பெரிய விஷ்ணு கோயில் உள்ளதாம். கி.பி. பனிரெண்டாம் நூற்றாண்டில் தமிழர்களால் கட்டப்பட்டதாம். சமீபத்தில் இந்த கோயிலைப் பற்றிய டாக்குமெண்டரி ஹிஸ்டரி சேனலில் வந்ததைக் கண்டு ரசித்தேன்.

அந்த கோயிலின் பிரமாண்டம் வியக்க வைத்தது. குறிப்பா அதைக் கட்டிய விதம்.
முழுக் கோயிலையும் கல்லால் கட்டி முடித்தபின், ஒவ்வொரு சிலையையும் செதுக்கினார்களாம்.

பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் கடல் கடந்து சென்று இப்படி கலக்கியிருக்காங்க நம்மாளுங்க.

நம்மளும், ஆணி புடுங்க, கடல் கடந்து தான் போறோம், ஆனா, சோழனும் பல்லவனும் கலக்கின அளவுக்கு கடந்த ஆயிரம் ஆண்டில் எந்த இந்தியனும் கலக்கின மாதிரி தெரியலை.

யாம் பெற்ற இன்பம், பெறுக நீங்களும். பொறுமையா பாருங்க.
( செம பிரமாண்டமா இருக்கு அந்த இடம். யாராவது ஒரு க்ரூப் டூருக்கு ஏற்பாடு பண்ணீங்கன்னா வந்து கலந்துக்குவேன் ;) )

கம்போடியாவின் தேசியக் கொடியில் பெருசா இந்தக் கோயில்தான் இருக்குது. ஆனா, கவனிக்க ஆளில்லாம இன்னிக்கு இந்துக் கோயில் கொஞ்சம் கொஞ்சமா பாழடஞ்சுகிட்டே வருதாம். யாராவது கொஞ்சம் கவனிங்கய்யா. லேசுல, அழிய விடக் கூடாது இதையெல்லாம்.











புல்லரிக்கல?


பி.கு: இன்னிக்கு என்னடான்னா ஒரு ஏர்போர்ட் கூட நம்மளால டக்குனு கட்ட முடியல;
ஒரு ப்ரிட்ஜு கட்ட ஏழு வருஷம் ஆகுது;
கடல்ல தூர் வாரி வழி பண்ண ஆயிரத்தெட்டு முட்டுக்கட்டை;
குடிக்கர தண்ணிக்கு ஏற்பாடு பண்ண இழுத்துத் தள்ளுது;
ஒரு சின்ன ரோடு கூட ஒழுங்கா போட மாட்ராங்க்ய;

எப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டோம்?

ஹ்ம் :(