அவங்கள சொல்லியும் குத்தமில்லை, இந்த மாதிரி பரபர ஐட்டம் வந்தாத்தானே, ஊர்ல பாதி பேரு, பேப்பரை வாங்கறான், செய்திகளை தெரிஞ்சுக்க பறக்கறான்.
பட்ஜெட் அறிவிச்சதை எம்புட்டு பேரு, வெவரமா படிச்சுத் தெரிஞ்சுக்கிட்டாங்கன்னு தெரியாது, ஆனா, ஹுசைனு எவ்ளோ கிறுக்கு கிறுக்கினாரு, நித்தி சம்பந்தப்பட்ட வீடியோ எத்தினி யூட்யூபில் வந்திருக்குன்னு ஃபிங்கர் டிப்புல வச்சிருக்கோம்.
நம்மையெல்லாம் ஒரு 'மயக்க' நிலையிலேயேதான் இந்த பேப்பர் காரனுங்களும், டிவிக்காரனுங்களும் வச்சிருக்காங்க. அவங்க சொல்றதுதான் செய்தி. ஒருத்தன ஒரே நாளுள தூக்கி மேலையும் வெக்க முடியுது, அதே ஆளை அடுத்த நாளே மூஞ்சீல கரியப் பூசி கவுத்து மூடிடவும் முடியுது. ரொம்பவே சக்திவாய்ந்த மீடியம் இது. குறிப்பா, நம்மூரில் அநேகம் பேரின் பொழுதுபொக்கும், இந்த முட்டாள் பொட்டியை சுத்தியே ஓடுது.
சமீபத்திய பரபர, காவி போர்த்திய நித்யாநந்தனும், ஓவியத் தாத்தா ஹுசைனும்.
- "ரஞ்சி, கடவுளக்கூட எங்கயிருக்காருன்னு ஈசியா கண்டுபிடிச்சிடலாம் போலருக்கு, ஆனா, இந்த கெரகம் புடிச்ச, கேமராவை எங்க ஒளிச்சு வெக்கறானுங்கன்னு கண்டே புடிக்க முடியலியே? டெக்னாலஜி இம்ப்ரூவ்ட் ஸோ மச்சு".
நித்யானந்தனின் முகம் ரொம்பவே பரிச்சயமானது. பல பத்திரிகைகளில், பல் இளிச்சுக்கிட்டு 'ஆன்மீகத்துக்கு எங்க கிட்ட வாங்க' ரக விளம்பரங்கள் நிறைய பாத்திருக்கேன். மெடிட்டேஷன் சொல்லித் தருவாங்களாம். சில பல டாலர்கள் ஃபீஸாம். இவரின் 'சீடர்கள்' யாரும், எனக்கு நேரிடையா பழக்கம் இல்லை. ஆனா, இதே வகை Art of Living ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ ரவிஷங்கரின், வகுப்பில் கலந்துகொண்டவர்கள் சிலரைத் தெரியும்.
அவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் செலவு செய்யும் பணம், ப்ரயோஜனமா இருக்காம். தியானம் செய்யச் சொல்லித் தராங்களாம். தினசரி பழகுனா, ரிலாக்ஸ்டா ஃபீல் பண்றாங்களாம். இருந்துட்டுப் போகட்டும். அதை ஆராஞ்சு கேள்வி கேக்கறதுக்கு முன்னாடி, சில பல டாலர்களை செலவு செஞ்சு அந்த கிளாஸுக்குப் போயிட்டு, எப்படி இருக்குன்னு அனுபவிச்சுட்டு, அப்பாலிக்கா நொட்டை நொடிகள் சொல்லலாம்.
அதுக்கு முன்னாடி, அதை பத்தி குறை சொல்வது சரியில்லை.
அதே அளவுகோல், நித்தியின் க்ளாஸுக்கும் கொடுப்பதில் தவறொன்றுமில்லை. எதையோ சொல்லிக் கொடுக்கறாங்க. பணம் இருக்கரவங்க கொடுக்கறாங்க. கத்துக்கறாங்க. எப்படியோ ஒழிஞ்சு போவட்டும். அது ஃப்ராடு சொல்றதுக்கு முன்னாடி, அந்த கிளாஸுக்குப் போயி படிச்சுட்டு வந்திருக்கணும். அந்த கிளாஸ் பைசாக்கு ப்ரயோஜனம் இல்லன்னாகூட, வாத்தியாரை கண்டமேனிக்கு திட்டப்ப்டாது.
சிலருக்கு நிம்மதி ஆசிரமங்களில் சொல்லித்தரும் தியானங்களில் வரலாம்;
சிலருக்கு நிம்மதி சரக்கடித்தால் வரலாம்;
சிலருக்கு நிம்மதி இயற்கை எழில் சுழ்ந்த இடத்தில் பயணம் செய்தால் வரலாம்;
சிலருக்கு நிம்மதி வயிறு நிறைய சாப்பிட்டு போடும் குட்டித் தூக்கத்தில் வரலாம்;
அவரவருக்கு அவரவர் வழி.
நித்தியின் திருட்டு வீடியோவுக்கு வருவோம். பொதுவாழ்க்கையில் பாப்புலரான ஒரே காரணத்தால், இவரின் அந்தரங்கத்தை இப்படி வெட்டவெளியில் போட்டு உடைப்பது எந்த வகையில் ஞாயம்? தனக்கு பிடிக்காத ஒவ்வொருத்தரையும் இப்படி திருட்டு வீடியோ எடுத்து யூ.ட்யூபுக்கு கொண்டு வந்தா, யூ.ட்யூபு தாங்குமா?
யோசிச்சுப் பாருங்க. நித்தியை திட்டுபவர்களில் எம்புட்டு பேரு யோக்கியமானவர்கள்? உங்க வாழ்க்கையில் கடந்த ஒரு வருஷத்தின் ஒவ்வொரு நிமிஷத்தையும், யாராவது திருட்டு வீடியோ எடுத்து வச்சிருந்து யூ.ட்யூபில் போட்டா, controversial questionable ஐட்டம் எதுவும் அதில் வராதா?
பிறரைக் கல்லெறியும் முன்....
நித்தியும், இன்ன பிற பொதுநல வித்தகர்களும் கவனத்தில் கொள்ள. எப்படியோ பாப்புலர் ஆகிட்டீங்க. அதை கடைசி வரை தக்க வச்சுக்கணும்னா, நீங்க சொல்லிக் கொடுக்கரதை நீங்களும் பின்பற்றப் பாருங்க. பொதுவாழ்வில் இருக்கரவங்களுக்கு, பொதுவாவே யாரும் மரியாதை கொடுக்கமாட்டாங்க. எம்.ஜி.ஆரையே 'அவன்/இவன்'னு ஏக வசனத்தில் கூப்பிட்டுப் பழக்கப் பட்ட கூட்டம் எங்குளுது.
ஏதோ, எங்க தயவாலதான், நீங்களெல்லாம் பாப்புலர் ஆகியிருக்கீங்கங்கர உளவியல் ரீதியான காரணமாம் அது. நல்லா ஏத்தி விடுவோம். ஆனா, நீங்க சறுக்கினா, நடு மண்டையில நச்சுன்னு குட்டுவோம்.
ஈசியா, மேல கொண்டு போய் விட்டவங்க, ஒரு நிமிஷத்துல, கால வாரி சாக்கடைல முக்கி எடுத்துடுவாய்ங்க.
திருட்டுச் சாமியார் யாராச்சும், கடைசி வரை சக்ஸஸ்ஃபுல்லா இருந்திருக்காங்களான்னு யோசிச்சுப் பாருங்க. கொஞ்சமாவது உத்தமமா இருந்தீங்கன்னா, 'சாமி' ரேஞ்சுக்கு எங்க மக்கள்ஸ் வச்சுக்கராங்களே, அதை கெடுத்துக்காதீங்க. அப்பரம், கும்மி அடிச்சுடுவாய்ங்க.
ஆயில் மசாஜுக்கு முன்னாடி ஒரு தபா நல்லா யோசிச்சுப் பார்க்க வேண்டிய விஷயம் இது. அப்பாலிக்கா குத்துதே கொடையுதேன்னா, கொம்பேனியார் பொறுப்பில்லை.
மக்கள்ஸ் கவனித்தில் கொள்ள. பிறரைப் பார்த்து கல்லெரியும் முன்....
யோசிச்சுப் பாருங்க, நம்மில் பலர் 9 டு 5 வேலை செய்யும் சராசரியாத்தான் இருப்போம். நித்தி வகையராக்களுக்கு இருக்கும் 'நல்ல' திறமைகளில் 1%வது நம்ம கிட்ட இருக்குமா? நித்தியை எடுத்துக்கிட்டா, 200 புத்தகங்களும், பல ஆயிரம் கட்டுரைகளும், பல நூறு சொற்பொழிவுகளும் நடத்தியிருக்காராம். எப்பேர்பட்ட தப்புகள் செய்திருந்தாலும், அவங்க கொஞ்சமாவது நல்லது செய்யாமலும் இல்லை. பல கோடிகளை 'திரட்டி', சில கோடிகளை அன்னதானங்களுக்கும், கல்விக்கும், இயற்கை சீற்றங்களின் போதுமெல்லாம், எடுத்து விடாமலில்லை. அதையும் மனசுல வச்சுக்கணும். அரசாங்கங்கள் செய்யாத பல விஷயங்களை, இந்த மாதிரி சிலர் செஞ்சுக்கிட்டு வராங்க என்பதை மறுக்க முடியாது. ஸோ, மாத்தி யோசிங்க.
இந்த மாதிரி ப்ரச்சனை வந்தா, குண்டு கட்டையை தூக்கிக்கிட்டு போய், ஸ்பாட்ல ஆஜராகி, கண்ணாடியை ஒடைக்கரவங்கெல்லாம் யாருங்க? கண்ணாடி ஒடைக்கரது அவ்ளோ குஷியான மேட்டரா? ஸ்ஸ்ஸ்.
ஹுசைனு. இந்த தாத்தா தொல்லை தாங்க முடியல்ல. ஓவியங்கள் பிடிக்கும் எனக்கு. பாரீஸில் லூவ்ரு ம்யூசியத்தில் இருப்பவை ஓவியங்கள். திருவனந்தபுரத்தில் ரவிவர்மாவின் அரண்மனையில் இருப்பவை ஓவியங்கள். தெரு ஓரங்களில், சாக்பீஸில் அழகாய் வரையப்படுவதும் ஓவியங்கள். ஆனா, இந்த தாத்தா வரையரது, மாடர்ன் ஆர்ட்டாவும் இல்லாம, அழகாவும் இல்லாம ஏதோ ஒரு கிறுக்கல் வகை. வருஷத்துக்கு ஒரு தபா யாரையாவது அம்மணமா வரஞ்சு, பரபரப்பை ஏற்படுத்துவாரு. அட்லீஸ்ட், அந்த ஓவியங்களாவது, அழகா இருந்திருந்தா மன்னிச்சு விட்டுரலாம். ஏதோ பென்சிலில் குழந்தை கிறுக்கர மாதிரி கிறுக்கிட்டு, இம்மாம்பெரிய ஆளாயிட்டாரு. மெடிட்டேஷன் கிளாஸ் மாதிரிதான் இதுவும். முழு விஷயமும் தெரியாம, ரொம்ப நொட்டை சொல்ல முடியாது இவரை.
இவர் சரஸ்வதியை அம்மணமா கிறுக்கிட்டாருன்னு எல்லாரும் குய்யோ முய்யோன்னு கத்தராங்க.
கத்தரவங்களே, நீங்க இப்படி கத்தி ஆர்பாட்டம் பண்ணனும்னு நெனச்சுத்தான் தாத்தா இப்படி controversialஆ கிறுக்கறாரு. வயசான காலத்துல, ஊரே அவர் பேரைச் சொல்லும்போது குஷி ஆவராரு. ஏன் இப்படி ஏத்தி விடறீங்க? ரெண்டு ரூவா A4 பேப்பர்ல, அஞ்சு நிமிஷம் செலவு பண்ணி பென்சில்ல எத்தையோ கிறுக்கினா, அவருக்கு ஏன் இம்புட்டு வெளம்பரம் கொடுக்கறீங்க?
ஹுசைனுக்கு பதிலா ஒரு ராமானுஜம் இதை கிறுக்கியிருந்தா இவ்ளோ பெருசாகியிருக்காது. நம்ம கோயில்களில் இல்லாத அம்மண சிலைகளா?
ஹுசைன் ஒரு விளம்பரப் பிரியர். கடைசி காலத்தில், இயன்ற அளவு கவனம் பெர, இப்படி எத்தையாவது கிறுக்கிக்கிட்டேதான் இருப்பாரு.
துர்கா, லட்சுமி, சரஸ்வதின்னு வரிசையா கிறுக்கிட்டாரு. அடுத்த வருஷம் கண்டிப்பா யாரையாவது ஸ்கெட்சு போடுவாரு. அது, கிட்டத்தட்ட இந்த மாதிரிதான் இருக்கும், ஸோ, உங்க நேரத்தை விரையம் பண்ணாதீங்க.

கருத்ஸ் சொல்லிட்டுப் போங்க. வீடியோ பாத்தீங்களா? உங்க கண்ணுக்கு தப்பா தெரீதா? சரஸ் பாத்தீங்களா? கோவம் வருதா?