ஹிஹி. வாய்ப்பு கெடச்சா விடக் கூடாதுல்ல. அதான் தொபுக்கடீர்னு குதிச்சுட்டேன்.
வலைப்பதிவர்கள் சந்திப்பு நடந்திச்சாம்.
அதுக்கு லக்கி "சாரு நிவேதிதா" என்ற எழுத்தாளரை, சாட்ல புடிச்சு, வரீங்களான்னு கேட்டாராம்.
"சாரு நிவேதிதா" அதைப் பாத்து, அங்கையே, வரமுடியாதுன்னோ வரமுடியும்னோ சொல்லாம, தனிப் பதிவா போட்டு, "இப்படியா ஒரு எழுத்தாளரை அழைப்பது", அது இதுன்னு போட்டுத் தாக்கிட்டாரு.
நான் பெரிய ஆளு, என்னை இப்படியெல்லாம் தராதரம் இல்லாம கூப்பிட்டா சரிப்படாதுன்னு எப்ப ஒரு பெரிய மனுஷன் நெனைக்கறாரோ, அப்பவே, அவர் என் பார்வையில் சிறுசா ஆயிடறாரு.
"சாரு நிவேதிதா" யார், எப்படிப்பட்ட எழுத்தாளர்னெல்லாம் எனக்குத் தெரியாது.
புத்தகங்களுக்கும் எனக்கும், அன்னிக்கும் ஒத்துவரலை, இன்னிக்கும் அப்படியேதான் இருக்கு.
எப்பவாச்சும், "for dummies" படிக்கரது உண்டு.
டாக்டரைப் பாக்கப் போனா, அவங்க வெயிட்டிங் ரூமுல இருக்கர, readers digest படிப்பேன்.
National Geography வீட்டுக்கு வருது, அதுல படம் மட்டும் பாப்பேன்.
மத்தபடி, ஆன்லைன்ல, பதிவுகள், செய்திகள், தினகரன், ஹிந்து - இத்தோட என் இலக்கிய அறிவு நின்னு போயிடுது ;)
ஸோ, மொத்தத்தில் நான் ஞானசூன்யம்!
லக்கிக்கு சாரு நிவேதிதா என்பவர்,
எனக்கு, என் CEO மாதிரின்னு வச்சுக்கலாமா?
என் CEO இலக்கியவாதியெல்லாம் கிடையாது. ஆனா, பெரிய அறிவாளி. பல பில்லியன் டாலர்களுக்கு சொந்தக்காரர். உலகத்துக்குத் தேவையான பல விஷயங்களை உருவாக்கியவர். பல குடும்பங்கள் இவரின் நிர்வாகத் திறமையால் வளமாய் வாழ்கிறார்கள். ரொம்ப நல்லவர். வல்லவர். etc... etc...
நல்ல ஒப்புமைதானே இது?
இப்போ, சப்போஸ், இந்த வீக் எண்டுக்கு, நானும், என் நண்பர்கள் அஞ்சு பேரும் சேந்து, இங்க பக்கத்துல இருக்கர காட்டுக்கு கோழி பிடிக்கப் போறோம்னு வச்சுப்போம்.
CEO சாட்ல வராரு. நானும், ஏதேச்சையா பாக்கறேன்.
சரி, சாரும் வராரான்னு சும்மா கேட்டுப் பாக்கலாமே, வந்தா, நான் கூப்பிட்டுதான் அவரு வந்தாருன்னு ஒரு கெத்தா இருக்கலாமே. அதைத் தவிர என் ஆதர்ஷ புருஷராச்சே அவரு, அவருகூட சில நிமிஷங்கள் கோழி பிடிச்சாலும், வாழ்நாள்ள மறக்க முடியாத அனுபவமா இருக்குமேன்னெல்லாம் மின்னல் மாதிரி தோணுது. சரின்னு, சாட்டரேன் அவரு கிட்ட, "hey John, if you are free over the weekend, could you join us for கோழி புடிக்க?"ன்னு கேட்டு வைக்கறேன்.
அப்படி கேட்டா, John என் கொம்பேனியின் மொத்த தொழிலாளிகளுக்கும், ஒரு பெரிய மடல் அனுப்பிச்சு, "How dare this guy surveysan invites me for கோழி புடிக்க on a chat?"ன்னு கண்டிப்பா செஞ்சிருக்க மாட்டாரு. சாட்லயே, என் கிட்ட, "No dude. you carry on. I have already committed for ஆடு புடிக்க. Bring me the catch, deep fried"ன்னு வேணா சொல்லியிருப்பாரு.
சாரு நிவேதிதா, அந்தப் பதிவைப் போட பல காரணம் இருக்கலாம். ஆனா, என் மனசுக்கு அது சரியாப் படலை.
சரியாப் படலன்னா, ஏன்யா பதிவப் போட்டு உயிர வாங்கறேங்கறீங்களா?
விஷயம் இல்லாம செய்வேனா?
நீங்க என்ன நெனைக்கறீங்க. சொலிட்டுப் போங்க! :)
btw, சாருவின் நல்ல கதைகளைப் பரிந்துரை செய்யுங்கள், பின்னூட்டத்தில்.
1) பொடியன் Sanjai பரிந்துரை - http://www.charuonline.com/sep08/KuttiKathaigal108(47).html (Adults only?)
2)
3)
4)
5)
6)
7)
8)
9)
10)
பி.கு: லக்கியின் லேட்டஸ்ட் 'பம்மல்' -
'அழைப்பின் நோக்கம் ஒன்றாக இருக்கலாம். அழைக்கப்படுபவரின் வயது, தகுதிக்கேற்ப அழைப்பின் தன்மை மாறுபடும். ஸ்ரீகாந்த் குறுஞ்செய்தி அனுப்பி கனகசுப்புவை திருமணத்துக்கு அழைத்திருந்தால் அது பச்சை அயோக்கியத்தனம் :-)' - அழைப்பு, படிக்கத் தவறாதீர்கள் ;)