recent posts...

Friday, January 23, 2009

schmap.comல் என் படம்

நல்ல விதமாய் படம் பிடித்து flickrல் போட்டால் துட்டு தேத்தலாம்னு நான் முன்னம் ஒரு பதிவு போட்டிருந்தேன்.
பல கொம்பேனியர், flickrல் பார்த்து அவர்களுக்குத் தேவையான டேஸ்டுக்கு உங்கள் படங்கள் இருந்தால், உங்கள் அனுமதியுடன் அதை உபயோகித்துக் கொள்வர்.
சில சமயம், உங்கள் படத்துக்கு பணமும் கிட்ட வாய்ப்புண்டு.

அப்படி ஓர் நிகழ்வு என் படம் ஒன்றுக்கி நடந்தேறியது.

துட்டு ஒண்ணும் பேரலை. ஆனா, schmap.comல், berkeley பற்றிய city guideக்கு என் berkeley படம் ஒன்று உபயோகப் படுத்திக்கிட்டாங்க.

ஒரு படம் பிடிச்சு பதிவுலகில் அரங்கேற்றினால், அதை விமர்சித்து வரூம் கமேண்ட்டு ஒவ்வொண்ணும் ஒரு பெரிய பரிசுத் தொகை மாதிரிதான்.

schmap.com மாதிரி யாராவது இப்படி உபயோகப்படுத்திக் கொள்ளும்போது, சந்தோஷம் பன்மடங்காகுது.

schmapக்கு நன்றி. இந்த லிங்ங்கை கிளிக்கினா, berkeley guide iPhoneல் எப்படி தெரியும் என்பதன் 'மாதிரி' பாக்கலாம்.

என் berkeley படம் இதுதான்.


வாழ்க வளர்க!

பி.கு: Berekeley சென்று வந்ததைப் பற்றி முன்னர் இட்ட பதிவு இங்கே.

Thursday, January 22, 2009

கூகிள் துட்டு தர ஆரம்பிச்சாச்சு?

***************
latest update: Ads stopped working, probably due to the budget limits of the sponsors who subscribe to Tamil/Indie keywords ;)
welcome back, charity ads ;)
***************
ப்ளாக் எழுதர நம்மில் பலருக்கு, பொழுது போக்குடன், கொஞ்சம் சில்லரையும் தேறினால், வருஷத்துக்கு ஏதாவது ஒரு போட்டி வச்சு, வரும் $ஐ மத்தவங்களுக்கு பகிர்ந்து கொடுக்க முடியும்.

சில்லரை நோட்டா மாறினா, புது பீமர் வாங்க தோதுவாவும் இருக்கும். ஜஸ்ட் 95 லட்சம் ரூவாய் தான் லேடீஸ் & ஜெண்டில்மென் :)

வளர்ந்து வரும் எழுத்தாளர்களாகிய நாம், பின்னாளில், புகழேணியில் ஏறி கரன்ஸி மழையில் நனையப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

உங்க நெலம எப்படீன்னு தெரீல, எனக்கு மாசத்து 18 காசு தேறிட்டு வருது. இதே ரேஞ்சுல போனா, 2020க்குள்ள எப்படியும், மாசத்துக்கு ரெண்டு ரூவா வர அளவுக்கு உயர்ந்துடுவேன்.

பெரிய அளவில் சில்லரை தேறாததர்க்கு காரணம், தமிழ் பதிவில் விளம்பரங்கள் போட சுலபமான வழி இருந்ததில்லை.

கூகிள் மாதிரி விளம்பர விநியோகிகள், டமில் பதிவில், அவர்களின் நிரலை போட்டால், அடித்து ஓய்ந்து முடித்த காட்ரீனா புயலால் ஏற்பட்ட வெள்ள நிவாரணத்துக்கு இன்னும் துட்டு கேட்டு வரும் சாரிட்டி விளம்பரங்கள் மட்டுமே காட்டிக்கிட்டு, சில்லரை தேறும் விளம்பரங்களை போடாம ஓர வஞ்சனை செஞ்சுட்டு வந்தாங்க.

இதுக்கு முக்கிய காரணம், டமில் கீ-வேர்டுகளை, எந்த நிறுவனமும் பணம் கொடுத்து வாங்காததால் கூட இருக்கலாம்.

ஆனா, சமீபத்தில், டமில் விளம்பரங்களை, கூகிள் நிரல் தர ஆரம்பித்துள்ளது.

என் பதிவில் பாத்தீங்கன்னா, பதிவின் தலைப்புக்கு மேலே ஒண்ணு, நடூல ஒண்ணு, கீழே ஒண்ணுன்னு , மொத்தம் மூணு வெளம்பரம் போட்டிருக்கேன்.
அப்பன் மகரன்நெடுங்குழைநாதன், அருளிருந்தா, இந்நேரம் உங்களுக்கு, அந்த மூன்றிலும், நம்மூர் சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு விளம்பரம் தெரிய வாய்ப்பிருக்கிறது.

மகரநெடுங்குழைநாதனும், கூகிளும் சதி செய்யும் பட்சத்தில், உலகில் ஏதோ ஒரு மூலையில் அடித்து ஓய்ந்த புயலோ வெள்ள நிவாரணத்துக்கோ துட்டு சேகரிக்கும், கூகிளின் ஓசி விளம்பரம் தான் தெரியும்.

நீங்க டமில் பதிவரா? நீங்களும் கூகிள் adsenseஐ முயன்று பாருங்கள்.
நிரலை, adsense தளத்திலேயே உருவாக்கிக் கொள்ள முடியும்.
ஆனா, ஒரு சில layout மட்டுமே வேலை செய்யுது டமில் பதிவுகளில்.
கீழே உள்ள 480_60 எனக்கு வேலை செய்யுது.

உங்களின் கூகிள் ஐடியை XXXXXXக்கு பதிலா போட்டு உபயோகிச்சுப் பாருங்க.

மச்சமிருந்தா, துட்டு தேறும்.

தேறும் துட்டில் ஒரு 25%ஐ உதவும் கரங்கள் மாதிரி ஆளுகளுக்கு அர்ப்பணம் பண்ணுங்க, உங்க உண்டியில் ஃபாஸ்டா நிறைய எல்லாம் வல்ல ம.நெ அருள்புரிவார் ;)

Tuesday, January 20, 2009

திருமா போல வருமா?

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் உண்ணா-நிலை (உண்ணாவிரதம்) பற்றி அறிந்திருப்பீர்கள்.
சாகும்-வரை உண்ணாநிலை இருக்கப் போகிறேன் என்று அறிவித்தவர், நாலு நாட்கள் முடிந்ததும், தனது சகாக்களின் தீவிர வேண்டுதலின் காரணத்தினாலும், ராமதாசின் அறிவுரைப் படியும், தனது உண்ணா நிலையை முடித்துக் கொண்டாராம்.
மேல் விவரங்கள் இங்கே.

உண்ணாவிரதம் ஒன்றும் நமக்குப் புதிதல்ல.

காந்தியின் முக்கிய ஆயுதத்தில் உண்ணாவிரதமும் ஒன்றாக இருந்தது. பதினேழு முறை உண்ணாவிரதம் இருந்திருக்கிறாராம்.
மூன்று நாட்கள் முதல் மூன்று வாரம் வரை நீண்டிருக்கிறதாம் இவரின் உண்ணா நிலை நாட்கள்.

வெற்றிகரமாக, இவர் நினைத்தது நடக்கும் வரை தன் உண்ணாவிரதத்தை விடாமல் கடைபிடிப்பாராம். முக்கியமாக, இனவெறியாட்டம் தலையெடுத்தப் போது, இவரின் உண்ணாவிரதம் பெரூம் தாக்கத்தை ஏற்படுத்தி, பல உயிர் அழிவை தடுக்க உதவியது.

காந்திக்குப் பிறகு, நமது ஊர் அரசியல்வாதிகள், பலரும் பல ஆயிரம் முறை உண்ணாவிரதம் என்ற ஸ்டண்ட்டை அடித்து அரங்கேற்றியுள்ளார்கள்.
சொல்லி வைத்த மாதிரி, இவங்க வற்புறுத்தினாங்க, அவங்க வற்புறுத்தினாங்கன்னு, ஆட்டத்தை ரெண்டு மூணு நாளுல கலச்சிருவாங்க.

இப்படி கலைக்கிரது ஒண்ணும் தப்பில்லை.
அவங்க, கருத்தை ஊர் கேக்க, உண்ணாநிலை நல்ல ஒரு விளம்பரத் தளமா இருந்து உதவுது.

ஆனா, இப்படி அடிக்கடி ஆளாளுக்கு உ.நி செஞ்சு செஞ்சு, நம்ம பொதுசனத்துக்கு, உ.நி மேல் ஒரு பெரிய அனுதாபம் எல்லாம் மலையேறி பல காலமாயிடுச்சு.
க்ளைமாக்ஸ்ல என்னா நடக்கும்னு ஈஸியா புரிஞ்சிடர விஜய் படம் மாதிரி, இப்ப வரும், உ.நி'க்கள் மேல் சுவாரஸ்யமும் பெரிய நாட்டமும் இல்லாமல் தான் மக்கள் இருக்கிறார்கள்.
அங்கே நிமிஷத்துக்கு ஒரு குண்டு வெடிச்சு, குழந்தைகளும் பெண்களும் பதுங்கி பதுங்கி ஓடிக்கொண்டிருக்க, இங்கே வில்லு, படிக்காதவன் பாத்து பொழுது கழிக்கரவங்கதான் எல்லாரும்.

அந்த காலத்துல காந்தி உ.நி இருக்கும்போது, ஊர் மக்கள் எல்லாருமே, பங்கு கொள்ளும் விதமாக, அவரை சுத்தி ஒக்காருவாங்க. நேர்ல வர முடியாதவங்க, வீட்ல வெளக்கை எரிச்சு வெப்பாங்களாம், ராத்திரி முழுக்க.

இலங்கைத் தமிழர்கள் ப்ரச்சனைக்கும், ஏதாவது தீர்வு வரணும்னா, உலகளாவிய லெவலில், தமிழர்கள், தங்கள் கலக்கத்தை வெளிக்காட்டணும்.
மௌன ஊர்வலங்கள் மூலமும், லோக்கல் ஊடகங்கள் மூலவும் ஆதரவு திரட்டணும்.

அமெரிக்க வாழ் டமிலர்கள், ஒபாமா பதவியேற்புக்கு செல்லும் வழியில், பெரிய பேனரை, பிடித்து அவருக்கு தெரிவிக்கலாம்.

அத்த விட்டுட்டு, நமக்கெல்லாம், புளிச்சுப் போன, உ.நி செய்வதால், யாதொரு ப்ரயோஜனமும் இல்லை.
அதுவும் இல்லாம, இந்த உ.நியைத் தொடர்ந்து, சில விஷ ஜந்துக்கள் செய்யும், பஸ் எரித்தல், கடை உடைத்தல் எல்லாம், சாமான்யனுக்கு எரிச்சலை கிளப்பும் செய்கைகள்.

இப்ப, அடுத்ததாக, டோட்டல் தமிழகமே ஸ்தம்பிக்கும் விதத்தில் ஒரு பந்த் நடத்தணும்னு பேசிக்கிட்டு இருக்காங்களாம்.

ஆட்சியில் இருப்பவர்களே, இப்படி போராட்ட வழியில் தான் தங்கள் எதிர்பை தெரிவிக்கணும்னா, என்னாங்க ஊரு இது?

பொதுமக்களாகிய நாம், இதில் ஒரு மாற்றம் கொண்டு வரணும்னு நெனச்சா, நூதனமா ஏதாவது செஞ்சாதான் உண்டு.

உதாரணத்துக்கு:
டமிலர்கள் அனைவரும், ஒரு மாசத்துக்கு,

அ. டி.வி பெட்டியை மொத்தமாக ஆஃப் செய்து விடுதல்.
ஆ. எந்த ஒரு புதிய பொருளையும் வாங்காது இருத்தல்
இ. சொந்த வாகனங்களை பூட்டி வைத்து, பெட்ரோல் உபயோகிக்காமல் இருத்தல்
ஈ. நேஷனலைஸ்ட் வங்கியிலிருந்து, பணத்தை மொத்தமும் உருவி, வேறு மாநில வங்கிகளுக்கு மாற்றுதல்

இன்னும் ஐடியாஸ் அள்ளி வீசுங்க.

என்னமோ போங்க.

ஆமாங்ங்ங்ங், திருமாவின் உ.நி பத்தி நீங்க என்னா நெனைக்கறீங்க?

Friday, January 16, 2009

Hail Mary - ஒரு குட்டிப் பதிவு

குட்டியூண்டு பதிவு எழுதி ரொம்ப நாளாச்சு. இப்பெல்லாம், பதிவு எழுத ஒக்காந்தா வார்த்தைகள் அதிகமா சொரக்குது.
என் பழைய பதிவுகளின், ஒரே ஒரு நல்ல தன்மையே, குட்டியா சட்டுனு படிக்க முடியரதுதான்னு யாரோ ஒருத்தர் முன்ன ஒரு நாள் சொன்ன ஞாபகம்.
என்ன பண்றது, நானும் எழுத்தாளனா வளந்துதானே ஆகவேண்டி இருக்கு ;)

'குட்டி' மேட்டருக்கு வரேன்.
பல வருஷங்களா இந்த சாமியார்களின் தொல்லை தாங்க முடியரதில்லை.
'அம்மா பகவான்' ஒரு வயசான ஜோடீஸ், தினம் தினம் பேப்பர்ல, பெரிய பெரிய விளம்பரம் தராங்க. ஒவ்வொரு சிட்டியிலும் 'ப்ரார்த்தனைகளுக்கு'ன்னு ஒரு செல் பேசி எண். அப்பரம், ஒவ்வொரு ப்ரர்த்தனைக்கும், ஒவ்வொரு 'தரிசனத்துக்க்கும்' ஒவ்வொரு கூலியாம். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.
இவ்ளோ ஈஸியா எஸ்டாப்லிஷ் பண்ணி, எப்படிதான் கூட்டம் கூட்டறாங்களோப்பா. சூப்பர்!

அப்பரம், 'அம்மா' அமிர்தானந்தமயி விளம்பரங்கள் அதிகமா வருது. 'அம்மா வருகிறார்' ரீதி விளம்பரங்கள். அதைவிட பெருசா, அவங்க இஞ்சினியரிங் காலேஜுக்கு, அப்ளிகேஷன் மட்டும் 1000ரூவாயாம்.
இவ்ளோ ஈஸியா எஸ்டாப்லிஷ் பண்ணி, எப்படிதான் கூட்டம் கூட்டறாங்களோப்பா. சூப்பர்!

அப்பாலிக்கா, கேபிள் டிவியில் வரும் 'காட்'டிவி வகையராக்கள். கண்ணை மூடிக்கினே அவங்க நமக்காக ப்ரார்த்தனை பண்றாங்க. 1000 பேருக்கு ஆசி/miracle வழங்க ப்ரார்த்தனை செய்ய்யப் போறேன். யாரந்த 1000 அதிர்ஷ்டசாலிகள், உடனே அழைச்சு, 1000ரூவாய கொடுத்து உங்க பேரை பதிவு செய்யுங்கள். இடம் சீக்கிரம் காலியாகுது. உடனே அழையுங்கள். ப்ளா ப்ளா ப்ளா.
இவ்ளோ ஈஸியா எஸ்டாப்லிஷ் பண்ணி, எப்படிதான் கூட்டம் கூட்டறாங்களோப்பா. சூப்பர்!

இப்ப USAirways விமானம், பறவையால் தாக்கப்பட்டு பழுதடைந்தவுடன், அதன் 40 வருட அனுபவம் வாய்ந்த பைலட்டால், லாவகமா ஹட்ஸன் நதியில் இறக்கப்பட்டு, எல்லாரும் தப்பிக்க வச்சிருக்கு. சினிமால வர மாதிரியான நிகழ்வுகள், அசால்ட்டா செஞ்சு காமிச்சிருக்காரு அந்த பைலட்டு.
ஆனா, அந்த தில்லாலங்கடி பண்ரதுக்கு முன்னாடி, பயணிகளிடம் பேசிய பைலட், விளக்கவுரை கொடுத்ததும், "Hail Mary"ன்னு நம்ம ஊர், 'முருகா!' ஸ்டைல்ல சொல்லிட்டுத்தான் ப்ளேனை எறக்கியிருக்காரு.
உடனே, எல்லா பேப்பரிலும், இதை, 'miracle'னு முத்திரை குத்திட்டாங்க.

விமானிக்கு, Hail Maryயால், நன்மையா. Maryக்கு விமானியால் நன்மையா?

எது எப்படியோ, இந்த நிகழ்ச்சியை வைத்து, இன்னும் பல சுவிசேஷ கூட்டங்களில், வசூல் மழை நடத்தப்படும் என்பதில் யாருக்கும் ஐயம் வேண்டாம்! :)

Hail Mary!

சபரிமலை ஐயப்ப ஜோதி, 'miracle தெய்வ ஜோதி' அல்ல, சில ஆதிவாசிகள் ஏற்றி அணைக்கும் விளக்குன்னு இவ்ளோ வருஷத்துக்கு அப்பரம், இப்பதான் ஒத்துக்கிட்டது ஞாபகத்துக்கு வருது.
இவ்ளோ ஈஸியா எஸ்டாப்லிஷ் பண்ணி, எப்படிதான் கூட்டம் கூட்டறாங்களோப்பா. சூப்பர்!

சுவாமியே சரணம்!

Monday, January 12, 2009

ஏன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு golden globe கிடைத்தது?

ARRன் Slumdog Millionaire படத்துக்கு கோல்டன் க்ளோப் விருது கிடைத்தது அனைவருக்கும் தெரிந்ததே.
இனி நமது ரஹ்மானின் புகழ் மேன்மேலும் பெருகும்.
அவரின் திறமைக்கும், நற் குணத்துக்கும் இந்த பரிசெல்லாம் பத்தாது. இதற்கு மேலும் கிட்டினாலும் பத்தாது.

Slumdog Millionaire படத்தை பொறுத்தவரை, என் தனிப்பட்ட கருத்தாக, ARRehmanன் இசை, noisyயாக இருந்ததாக என் திரைப் பார்வை பதிவில், குறிப்பிட்டிருந்தேன்.
உன்ன யாருடா கேட்டது? வந்துட்டாரு சொல்றதுக்குன்னு நீங்க கத்தரது கேக்குது.
ஆனாலும், நெனச்சத நெனச்ச மாதிரி சொல்லலன்னா எனக்கு சரிபட்டு வராது :)

திரும்பவும் சொல்றேன், slumdog படத்தை பொறுத்தவரை, முதல் முறை படத்தை பாக்கும்போது, படத்தின் இசை எனக்கு இறைச்சலாய் தான் கேட்டது.

ஆனா, இப்போ, கோல்டன் க்ளோபெல்லாம் கொடுத்துட்டாங்க. விஷயம் இல்லாம கொடுக்க மாட்டாங்க.

background score நான் பயங்கரமாக ரசித்த பல படங்களில் (இந்தி கஜினி உட்பட), அந்த இசைக் கோர்வையால், படத்தின் காட்சி, பல மடங்கு மேலே கொண்டு செல்லப்பட்டிருக்கும்.

(இளையராஜாவின் பல படங்களை இதற்கு உதாரணமாக சொல்ல முடியும்)

slumdogல், இசையை விட, படத்தின் விஷுவலுக்கு சக்தி பன்மடங்கு அதிகமாய் இருந்ததாலோ என்னவோ, அதன் இசை என் மனதில் பதியவே இல்லை.

குட்டி வயசு ஜமாலும், சலீமும் போலீஸை டபாய்ச்சுட்டு கும்பலா, மும்பை ஸ்லம்மில் ஓடுவாங்க. போர வழியெல்லாம், ஏழ்மையின் கோரதாண்டவம் ஒரு பக்கமும், இன்னொரு பக்கம், இவ்வளவு கலீஜுக்கு மத்தியிலும், சிறுவர்களின் ஆனந்த ஓட்டமும் செம சூப்பரா படம் பிடிக்கப்பட்டிருக்கும்.
அந்த காட்சிகளுக்கு, ரஹ்மான் "ஆ"ன்னு அழகா இசை சேர்த்திருப்பாரு.
ஆனா, எனக்கு அந்த இடம் ரொம்ப ஏமாற்றமா இருந்தது.
அந்த விஷுவலுக்கும், அது காட்டிய அழுத்தமான காட்சிகளுக்கும், அந்த 'ஆ' ஆலாபனை என்னைப் பொறுத்தவரை பத்தலை.

* பசங்க ஓடராங்க, கேமரா பின்தொடருது
* கேமரா சாக்கடையில குப்பை அள்ர ஒரு ஆள காட்டுது
* திரும்ப பசங்க ஓடராங்க போலீஸ்காரர் விரட்டராரு
* கன்னா பின்னான்னு கொட்டிக் கிடக்கும் குப்பைக் கூளங்களை காட்ராங்க
* etc.. etc..

பசங்க ஓடும்போது, ரயில் ஓடும் பீட்டும், ரஹ்மானின் 'ஆ' பாட்டுக்கு பதிலாய், குட்டிப் பசங்கள விட்டு ஏதாவது ஒரு ஜாலியான ஹம்மிங் பண்ண விட்டிருக்கலாம்.
சாக்கடை யதார்த்தத்தை காட்டும் ஒரு விநாடிக்கு, 'திக்'னு ஏதாவது ஒரு அழுத்தமான இசையை அங்கங்க சொறுகியிருக்கலாம்.
ஜாலியும், 'திக்'கும் மாறி மாறி கலங்கியிருந்தா, என்னைப் பொறுத்த மட்டிலும், 'பன்ச்' பல மடங்கு ஏறியிருக்கும்.

ஆனா, நான் ஒரு ஞான சூன்யம் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

இங்கே suresh kumarனு ஒருத்தர், அந்த படத்தின் பின்னணி இசையை புட்டு புட்டு வச்சு வெளக்கி சொல்றாரு. நான் இன்னும் முழுசா பாக்கலை. யூ.ட்யூபில் போடாமல், பெரிய ஃபைலை தரவிரக்கம் பண்ணி பாக்கணும்னு, user-unfriendlyயா பதிவை போட்டு வச்சிருக்காரு (பிற்சேர்க்கை: பதிவில் யூ.ட்யூப் வீடியோ ஏற்றப்பட்டு விட்டது). நேரம் இருந்தா கேட்டுப் பாருங்க.

படத்தை இரண்டாம் முறை பாத்துட்டு, இசையின் மேல் கவனம் செலுத்தி, திரும்ப வந்து சொல்றேன். என்னை ஈர்த்ததா இல்லியான்னு ;)

எது எப்படியோ,

Rahman சாரே, SALUTES to you. You made us all really really really proud. You are awesome!

slumdog millionaireல் வரும் கடைசி பாட்டு ஜெய் ஹோ இங்கே.

பி.கு1: இத படிச்சுட்ட், 'அட ஆமாம்'னு, ஏ.ஆர்.ஆருக்கு தோணி, "கூப்பிடுங்க சர்வேனை, தட் மான் ஹாஸ் குட் மீஜிக் ஸென்ஸ்"னு சொன்னார்னா, சர்வேசன்2005 அட்டு யாஹு.காமுக்கு தொடர்பு கொள்ளவும் ;)

பி.கு2: கானா பிரபா எங்கிருந்தாலும் மேடைக்கு வந்து, s.mன் பின்னணி இசையை அலசி ஆராஞ்சு, பிரிச்சு மேஞ்சு ஒரு பதிவை போடுமாறு கன்னா பின்னான்னூ கேட்டுக்கறேன் ;)
இந்த படத்தை பாத்த வெவரம் தெரிஞ்சவங்க எல்லாரும் அப்படியே செஞ்சா, தெரியாத பல விஷயங்கள் தெரிஞ்சுக்கவும், இனி வரும் படங்களில், இன்னும் அதீத தீவிரமா இசையை கவனிக்கவும் அந்த மாதிரி பதிவுகள் உதவும். பதிவு எழுத முடியாதவங்க பின்னூட்டமா சொல்லிட்டுப் போங்க.

Saturday, January 10, 2009

தமிழ்மணத்துக்கே வெற்றி, but..

வலப்பக்க வாக்குப்பெட்டியில் சங்கதி இருக்கு. :)

இதுவரை வந்த வாக்குகளின்படி தமிழ்மணமே முன்னிலையில். ஆனா, டமிலிஷ், very closely following.



நாராயண! நாராயண!

;)

Wednesday, January 07, 2009

சற்றுமுன்.com - க்யா ஹுவா?



"சற்றுமுன் - சுடச் சுடச் செய்தி"ன்னு பட்டைய கெளப்பிக்கிட்டு இருந்தாங்க.

இன்னிக்கு எதேச்சையா போய் எட்டி பாத்தா, டிசம்பர் 20 2008க்கு அப்பரம் அப்டேட்டே காணும்?

லீவ்ல போயிட்டீங்களா எல்லாரும்? OR other priorities?

நல்ல முயற்சி அது. ஆரப் போட வேண்டாம் என்பது அடியேன் எண்ணம்.

சூடு ஆருவதற்கு முன், தூசு தட்டி, ஸ்டார்ட் மீஜிக்! ;)

பி.கு: சற்றுமுன்னுக்காக முன்னொரு நாளில் போட்ட சர்வே முடிவுகள் இங்கே.

Tuesday, January 06, 2009

என் புதிய HDR

இங்கே வீட்டின் அருகே உள்ள Mt. Hamilton என்ற மலை உச்சிக்கு சென்ற வாரம் சென்றிருந்தோம்.

BayAreaவின் உயரமான மலை இதுதான். இதன் உச்சியில்தான் ஒரு பெரிய டெலஸ்கோப் வச்சு நட்சத்திரம் கோள்களை எல்லாம் ஆராயராங்க.
இந்த இடத்தை பத்திய மேல் விவரங்கள் இங்கே படிச்சுக்கலாம்.

நாங்க இருக்கர வ.கலிஃபோர்னியாவில் Snow பாக்கணும்னா, இந்த மாதிரி ஏதாவது மலை உச்சிக்கு போனாதான் உண்டு.
மேலே போக 25 மைல் ஓட்டணும். கொஞ்ச திகிலான ரூட்டு. சாலை ஓரத்தில் அதள பாதாளம் பல இடங்களில், ஓரச்சுவர் இல்லாமல் இருக்கும்.

திரில்லிங்கா இருக்கும்.

நாங்க மேலே போகும்போது, மலை முழுவதும், பனி மூட்டமும், மேகக் கூட்டங்களும். ஒண்ணுமே கண்ணுக்குத் தெரியாம இருந்தது.
என்னடா கொடுமை இது, உயிரை பணயம் வச்சுக்கிட்டு இவ்ளோ தூரம் ஒட்டிக்கிட்டு வந்தா, இப்படி அல்வா ஆயிடுச்சேன்னு நெனச்சுக்கிட்டே அன்னிக்கு weather என்னான்னு கைத்தொலைப்பேசியில் பாத்தா, இன்னும் ஒரு மணி நேரத்தில் சூர்யன் வந்துடுவான்னு போட்டிருந்தது. சரி வந்ததுதான் வந்துட்டோம், வெயிட் பண்ணிப் பாப்போம்னு வெயிட்டினா, சரியா ஒரு மணி நேரத்தில், சூரியன் மெதுவா வந்து, பனி மூட்டத்தை துடைச்சுப் போட்டுது.

அடேங்கப்பா! அதுக்கப்பரம் பார்த்த காட்சிகள் தான், க்ளிக்கி கீழே போட்டிருக்கேன்.

நான் நின்றிருந்த இடத்துக்குக் கீழே மட்டும் மேகக் கூட்டம். Heavenly scenery!

அதை HDR ஆகவும் க்ளிக்கினேன். சாதா மோடிலும் க்ளிக்கினேன்.

சில படங்கள் பார்வைக்கு. ( 2008ல் சிறந்த படங்களைப் பாத்தீங்களா? )

(click to view in flickr)

1) HDR


2)

Monday, January 05, 2009

Slumdog Millionaire - திரைப் பார்வை


விகாஸ் ஸ்வரூப்பின் Q&A என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட 'ஹிந்தி-லீஷ்' படம், Slumdog Millionaire. இங்க அமெரிக்கால, நல்லா ஓடுது படம்.
8 மணி ஆட்டத்துக்கு டிக்கெட் கிடைக்காம, 11 மணிக்கு போனேன்னா பாத்துக்கங்க.

'கோன் பனேகா க்ரோர்பதி'ன்னு டி.வியில் அமிதாப் நடத்துவாரே ஒரு க்விஸ் போட்டி, அதை கருக்களமா கொண்டது படம்.

மும்பையில் ஒரு சேரியில் பிறந்து வளர்ந்த ஜமால் எப்ப்படி இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டு, முதல் பரிசை வெல்லராரா இல்லியான்னு சொல்லும் விதமாய் அமைந்த படம்.

கரு ரொம்ப சிம்பிளா இருக்குல்ல? ஆனா, திரைக்கதை அமைத்த விதமும், சில காட்சி அமைப்புகளும், படத்தை அட்டகாசமா ஒவ்வொரு நிமிடமும் முன்னேத்துது.

மும்பையின் நடுவில் இருக்கும் ஒரு செம கலீஜான சேரியில் வளர்கிறார்கள் ஜமாலும் அவன் அண்ணன் சலீமும். சின்ன வயது ஜமால் செம க்யூட்டா இருக்கான். ஆனா, மும்பையின் 'சேரி' வாழ்க்கையின் யதார்தத்தை காட்டுகிறேன் என்று, நம் இந்திய இமேஜை டோட்டல் டாமேஜ் பண்ணியிருக்காங்க.

முன்னரெல்லாம், இந்த மாதிரி படங்களிலோ டாக்குமெண்ட்ரிக்களிலோ, இந்தியாவின் அழுக்கை அப்பட்டமா வெளிச்சம் போட்டு காட்டுவதை பாக்கும்போது, செம கடுப்பு வரும். ஏண்டா இந்த மாதிரி நெகடிவ் பப்ளிசிட்டி தரீங்க. வேர நல்ல விஷயமே கண்ணுல படலையா உங்களுக்குன்ன்னு எரிச்சல் வரும். நம்ம சாக்கடைகளை வெளியில் காட்டி இவனுங்க பணம் சம்பாதிச்சுக்கராங்களேன்னு கடுப்பும் வரும்.
ஆனா பாருங்க, இதுதான் உண்மை. இந்தியாவில் 70% இன்னும் இப்படித்தான் இருக்கு.

தலைக்கு மேல் கூரைன்னு சொல்லிக்க ஒரு இத்துப் போன ஓலை குடிசை. குடிசையை ஒட்டியமாதிரி தேங்கி நிற்கும் நாற்றம் நிறைந்த சாக்கடை. குப்பைக் கூளங்களையும் மற்றவர்களின் எச்சில்களையும் குத்திக் கிளறி அதிலிருந்து கிடைக்கும் ப்ளாஸ்டிக் பொருட்களை விற்று சம்பாதிக்கும் கேவலமான வேலை. அதுவும் இல்லை என்றால், பிச்சை எடுத்துப் பிழைக்க வேண்டிய கட்டாயம். 70% மக்கள் அடிப்படை வசதி கூட இல்லாம இன்னும் இப்படித்தான இருக்காங்க?
உண்மையை வெளியில் காட்டினா ஏன் கசக்கணும்?

atleast, இந்த அவலங்களை யாராச்சும் வெளியூர் காரன் பாத்து, ஐயோ பாவம், இவங்களுக்கு ஒதவணும்னு களத்தில் எறங்கினான்னா நமக்கு நல்லதுதான். ஏன்னா, உள்ளூர் காரன் ஒருத்தனும் ஒரு மண்ணாங்கட்டியும் பண்ண மாட்டான்.

மும்பை slumல் ஒவ்வொரு கலீஜ் காட்சியை காட்டும்போதும், பக்கத்து சீட்டு வெள்ளைக்கார அம்மா, முகம் சுளிப்பதும், yikesனு தலையை குனிந்து கண்களை மூடிக் கொள்ளும்போதும், எனக்கும் உள்ளூர கூசியது.

Slumல் காலைக் கடனைக் கழிக்க அடிப்படை வசதி கூட இருக்காது. பாத்ரூம் என்ற பெயரில் ஒரு குட்டி அறை. அறைக்குக் கீழே இருக்கும் பெரிய பள்ளம்தான கழிவறை.
ஹ்ம். இதெல்லாம் வார்த்தைகளில் சொல்ல முடியாது. அம்புட்டு கலீஜ்.
பாக்கரதுக்கும் சொல்ரதுக்குமே இப்படி கூசுது, தினம் தினம் இதையே வாழ்க்கையா வாழரவங்கள நெனச்ச்சா நெஞ்சு கனக்குது.

அம்பானிகளும், பச்சன்களும் ஒரு புரம் 40 மாடி வீடுகள் கட்டிக் கொண்டிருக்க, இந்த மாதிரி அவலங்களும் அவங்களுக்கு ரொம்ப பக்கத்துலையே நடக்குது. இது யார் தப்புன்னுதான் புரியல்ல.
உழைப்பால் உயர்ந்த அம்பானியும், பச்சனையும் குறை சொல்ல முடியாதுன்னே தோணுது.

sorry, i digress.

இப்படியாக, இளம் வயது ஜமால், இவ்ளோ 'கலீஜ்'லையும், நண்பர்கள் புடை சூழ ஜாலியாவே வளற்றான். ஆனா, அதுலையும் ஆப்பு வச்சிடறாங்க. மும்பையில் நடந்த மதக் கலவரங்களில், தாயை பறி கொடுக்கிறான்.
அப்பரம், அவனும் அவன் அண்ணன் சலீமும், இன்னொரு குட்டி பொண்ணும் ஊரை விட்டுத் தப்பி ஓடறாங்க.

படத்தின் மையமான, கோன் பனேகா க்ரோர்பதியில் கேட்கப்படும் கேள்விக்கும், ஜமாலின் வாழ்க்கையில் நடந்து முடிந்த விஷயங்களுக்கும், அதிர்ஷ்டவசமா தொடர்பு இருப்பதால் ஜமால் கேள்விகளுக்கு பதிலை சரியா அளிக்க முடியுதுங்கர மாதிரி காட்ட, ஒவ்வொரு கேள்விக்கும், ஃப்ளாஷ்பாக் காட்சிகள் அருமையா சொருகியிருக்காங்க.

சேரி நிகழ்வுகளுக்குப் பிறகு, அடுத்த குபீர் அதிர்வை தந்தது, ஜமால் மற்ற இருவருடன் ஒரு அநாதை விடுதியில் சேர்த்துக் கொள்ளப்பட்டதும் அங்கு நடக்கும் மற்ற நிகழ்வுகள்.
சிறுவர் சிறுமியரை ஊர் ஊராக சுற்றித் திரிந்து 'சேகரிக்கும்' ஒரு வில்லன், அவர்களை பிச்சை எடுக்க பயன்படுத்தறான்.
அதிலும், சிறுவர்களுக்கு ஓரளவுக்கு பாடத் தெரிந்தால், அவர்களின் கண்ணை குருடாக்கும் விதமும், அவர்களை பாட வைத்துப் பிச்சை எடுக்க வைக்கும் கோரமும் போட்டு உலுக்கி எடுத்திடுச்சு.

நம்ம ஊரு ரயில்களிலும், தெரு ஓரங்களிலும் பிச்சை எடுக்கும், கண் பார்வை இழந்த குழந்தைகளை நினைத்துப் பார்த்தால், திகிலாய் இருக்கிறது.
யப்பா, இப்படியெல்லாம் கூடவா ஆளுங்க இருப்பானுங்க? சின்னப் பசங்களோட, கண்ணை நோண்டி எடுக்கும் அளவுக்கு ஒரு மனுஷனின் மனசு பாராங்கல்லா இருக்குமா?
இதுவரைக்கு செய்தியில் எங்கையும், 'குழந்தைகளின் கண்ணை நோண்டி பிச்சை எடுக்க அனுப்பியவன் பிடிபட்டான்'னு படிச்சதா ஞாபகமே இல்லியே?
அப்ப, யாரும், இதைப் பத்தி புகார் கொடுக்கலியா? இல்ல, எல்லாரும் தெரிஞ்சுக்கிட்டே தெரியாத மாதிரி கேடிகளை 'மால்' வாங்கிக்கிட்டு லூஸ்ல விட்டுட்டாங்களா?
என்ன கொடுமைங்க இதெல்லாம்?

இனி யாராவது பிச்சை எடுக்கும் சிறுவனையோ சிறுமியையோ பாத்தா, ஒரு வார்த்தை அவங்ககிட்ட பேசி அவங்க நிஜக் கதையை விசாரிங்க.
ரொம்ப கொடுமைங்க இதெல்லாம்.

சிறுவர்களுக்கு இந்த நெலமைன்னா, சிறுமிகள் வளர்க்கப்பட்டு என்னத்துக்கு விற்கப்படுவாங்கன்னு உங்களுக்கே தெரியும்.

தலை சுத்துது எனக்கு.

இந்த மாதிரி கழுதைகளை எல்லாம் எப்படி திருத்த முடியும்? அரசு போலீசெல்லாம் என்னா பண்ணறாங்க? நாம என்ன பண்ணறோம்?

எவ்ளோ கோடி குழந்தைகள் இப்படி தினம் தினம் கேட்பார் இல்லாமல் அல்லோலப் படறாங்க?

என்னமோ போங்க.
again, sorry, I digress.

ஜமால் எப்படியோ, கண் குருடாக்கப்படாமல் தப்பிச்சடறான். ஆனா, பின்னாளில், குருடாக்கப்பட்ட பழைய நண்பனை பார்த்துப் பேசும் காட்சி உலுக்கிடுது. அவன் சொல்வான், 'ஜமால், நீ அதிர்ஷ்டக்காரன்டா'ன்னு. :(

இப்படியாக ஜமால் வளர்ந்து முடிஞ்சு, கேக்கர கேள்வி ஒவ்வொண்ணுக்கும் தன் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளின் உதவியால் பதில் சொல்லிக்கிட்டே வாரான்.
நிகழ்ச்சிக்கான நேரம் முடிஞ்சதும், கடைசி கேள்வியை கேட்பது ஒரு நாள் தள்ளி போயிடுது.
அதுக்குள்ள, இவன் ஏதோ ஃப்ராடு பண்ணீதான் விடையை சொல்றான்னு, நிகழ்ச்சி அமைப்பாளர் அனீல் கப்பூர் இவனை போலீஸ்ல விசாரிக்க சொல்ராரு.
அவனுங்களும், ஒண்ணாம் கிளாஸ் கூட ஒழுங்கா படிக்காத ஜமாலுக்கு எப்படி இவ்ளோ பதில்கள் தெரியுதுன்னு முட்டிக்கு முட்டி தட்டி, ஷாக்கெல்லாம் கொடுத்து விசாரிக்கறாங்க.

விசாரணை முடிஞ்சு, மீண்டும் போட்டிக்கு வரானா, பரிசு வெல்றானான்னு ஓடுது கதை.
இடையில் ஒரு குட்டி லவ் ஸ்டோரியும் இருக்கு. சின்ன வயதில் சந்திக்கும் சிறுமியிடம் லவ்வாகி, அவ பின்னாலையும் சில நிமிடங்கள் பயணிக்குது படம்.

ஏ.ஆர்.ரஹ்மான் மீஜிக். கஜினி மாதிரி மிரட்டலை. ரொம்ப இரைச்சலா இருந்தது எனக்கு.

கேமரா, எடிட்டிங் அமக்களம்.
குறிப்பா, அந்த குப்பைக் கூளமும், பெரிய சாக்கடை சீனும்.

மொத்தத்தில், ஆகா ஓகோன்னு இல்லன்னாலும், நம் சேரிகளின் யதார்த்த வாழ்கை வளத்தை 70mmல் பாக்கணும்னா போயி படத்தைப் பாருங்க.

நல்லாருங்க!

ஸ்ஸ்ஸ்! ஸாரி, நானும் கொழம்பி உங்களையும் கொழப்பிட்டேன் :(

Sunday, January 04, 2009

2008ல் பிடித்ததில் பிடித்த படங்கள்

PiTன் ஜனவரி 2009 போட்டி விவரம் பாத்திருப்பீங்க.
தலைப்பை 'ஓப்பனா' விட்டுருக்கோம்.
இதுவரை நீங்க எடுத்த படத்துல எது சூப்பர்னு தோணுதோ, அதை போட்டிக்கு அனுப்பலாம்னு சொல்லியிருக்கு.
இதுவரைக்கும் எடுத்தது எதுவும் 'நச்னு' இல்லன்னா, புச்சா புடிச்சு அனுப்பலாம்னும் சொல்லியிருக்கு.

சரி, நான் எடுத்ததில் எதாவது தேறுதா பாக்கலாம்னு என் ஃபோல்டரை நோண்டிப் பார்த்தேன்.

சுமார் 4000 படங்கள் சென்ற ஆண்டு மட்டும் க்ளிக்கித் தள்ளியிருக்கேன் :)

ஹி ஹி. இதுல ஆச்சரியம் என்னன்னா, ஓரளவுக்கு சிறப்பா வந்த படங்கள், இந்த நாலாயிரத்தில், விரல் விட்டு எண்ணும் அளவுக்கு மிகவும் சொற்பமானவையா இருக்கு ;)

வரும் ஆண்டில், இந்த ஹிட்-ரேஷியோவை பல மடங்கு மேம்படுத்தணும் என்ற குறிக்கோள் இருக்கு. பாப்போம் முடியுதான்னு.
(விளம்பரம்: எல்லாராலையும் எல்லாமும் முடியும்னு நான் அள்ளி வுட்ட success formula அட்வைஸு படிகாதவங்க, இந்த நேரத்துல அத்த படிச்சுடுங்க)

உங்க ஹிட்-ரேட் நெலம எப்படி இருக்கு? எவ்ளோ ஆயிரம் புடிச்சீங்க, எவ்ளோ தேறிச்சு. சொல்லிட்டுப் போங்க.
PiT போட்டிக்கு படம் அனுப்பவதோடு நின்று விடாமல், இந்த மாதிரி ஒரு பதிவையும் போட்டீங்கன்னா interestingஆ இருக்கும் :)

சரி, இனி, ஜல்லடை போட்டு அலசியதில் ஆப்ட சில படங்கள் உங்க பார்வைக்கு.

சென்ற ஆண்டின் சிறப்பான படமாய் நான் எண்ணுவது, மேக்ரோ நுட்பத்தைக் கற்றுணர்ந்து நான் க்ளிக்கிய அரிசி படம். நீல நிற ப்ளாஸ்டிக் மூடி மேல் சில அரிசிகளைப் போட்டு, என் கேமரா லென்ஸை தலைகீழா திருப்பிப் போட்டு மேக்ரோவாக்கிய படம் இது.

இதுவே சென்ற ஆண்டின் என் 'சிறந்த படமாய்' நான் எண்ணுவது.

1. அரிசி: (click to view in flickr)


மற்ற சில கொசுறு படங்கள்:

2. இன்னொரு மேக்ரோ:


3. இது HDR:


4. இது பூ:


5. இது இன்னொரு பூ:


6. இது பிற்தயாரிப்பு:


7. இது கட்டமைப்பு: